Wednesday, May 31, 2006

குருவி சுடுவது எப்படி ? வேட்டைதான்...



அட படத்தில இருப்பது நான்தான்...சும்மா பில்டப்புக்காக எடுத்தத்து...இதன் பெயர் நாட்டு துப்பாக்கி ( Mussle loading Gun). நம்ம ஊர்ல ஜெர்மன் நாடோடிகள் (அட நரிக்குறவர்கள் தான் - எங்க அய்யாவோட கண்டுபிடிப்பு இது) வைத்திருக்கும் ரகம்....

லோடு செய்யவேண்டும் என்றால், முதலில் கொஞ்சம் கருப்பு மருந்து ( கந்தகம் + அடுப்பு கரி வைத்து, தண்ணீர் சேர்த்து மைய அரைக்கப்பட்டது - பிறகு காயவைக்க வேண்டும்), போடவேண்டும்...பிறகு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்..அதனை கிடிக்க சிறிய கம்பி ( ஸ்லாக் கம்பி என்று அழைக்கப்படும்) துப்பாக்கியிலேயே அட்டச்மென்ட் ஆக இருக்கும்..

பிறகு, ரவை சிறிதளவு போட்டு சிறிய தேங்காய்பஞ்சு வைத்து கிடிக்க வேண்டும்...உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை இல்லைங்க்க..பால்ரஸ்...சிறிய குண்டுகள்..சில ஆண்டுகளுக்கு முன்பு ஈயம் பயன்படுத்தப்பட்டது...ஈயத்தினை காய்ச்சி தண்ணீரில் ஊற்றினால் சிறிய ஈய குண்டுகள் கிடைக்கும்..இப்போது, சைக்கிள் மொத்த விற்ப்பனை கடைகளில் 100 கிராம் 200 கிராம் என்று வாங்கலாம்...அதாவது DEFECTIVE பால்ரஸ்..

இப்போது துப்பாக்கியை தரையில் நன்றாக தட்டி, மருந்து குதிரை பகுதியில் உள்ள பாயிண்டுக்கு வருகிறதா என்று பார்க்க வேண்டும்...அதாவது குதிரை ( Trigger) யை இழுத்தவுடன் வேகமாக சென்று அடிக்கும்...அந்த இடத்தில் கந்தகத்தினை வெடிக்கச்செய்ய தீக்குச்சி மருந்தினை சிகரெட் பேப்பரில் வைத்து பொருத்துவோம்..ஏன் என்றால் சிகரெட் உடன்வரும் மஞ்சள் நிற தாள் எளிதாக மடிக்கவும், மடிப்பு கலையாமல் இருக்கவும் எளிதில் எரிந்து கந்தகத்தினை வெடிக்க செய்யவும் பயன்படும்...

துப்பாக்கி வெடித்ததும் புஜத்தில் ( Shoulder) கும் என்று ஒரு இடி இடித்துவிட்டு நீள சிறிய குழாய் (Barell) மூலம் சிறிய குண்டுகள் பாய்ந்தோடும்...தூரம் செல்ல செல்ல பெரிய அளவில் பரவி, கடுமையாக தாக்கும்...

ஒரு சிறிய பால்ரஸ் பட்டால்கூட பறவை காலிதான்...

சட்ட சிக்கலுக்காக, முயல், மற்றும் குருவிகளை மட்டுமே சுட்டேன் என்று கூறிக்கொள்கிறேன்...மான் சுட்டதே கிடையாது..மான்கறி அருமையாக இருக்கும் என்றும் சொல்லமாட்டேன்...

நீர்பறவைகளை சுடும்போது, ( நீர்கோழி / வக்கா ) அடுத்த வினாடியே தண்ணீரில் பாயவேண்டும்..இல்லை என்றால் எங்காவது தண்ணீருக்கடியில் சென்று செட்டிலாகிவிடும்...பெரும்பாலும் ஏரிகள், வயல்வெளிகள், சிறுகாடுகள் இங்குதான் நமது வேட்டை...

விடுபட்ட விஷயங்களை பிறகு எழுதுவேன்...

அன்புடன்,
செந்தழல் ரவி..

பா.ராகவனின் நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

என் மனதுக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் இந்த பா.ரா. முதல் முதலில் தமிழினை இனையத்தில் காணச்செய்தவர் ( என்னை பொறுத்தமட்டில்). தினம் ஒரு கவிதை யாஹூ குழுமத்தில் வாசிக்கும் பழக்கமுடையவன் நான்..அங்கு தரமாக எழுதுவார்.

பா.ராகவன்

அவர் எழுதி, குமுதத்தில் வெளிவந்தது இந்த நிலமெல்லாம் ரத்தம்...அராபத் மறைவிலிருந்து ஆரம்பிக்கிறது...

நிலமெல்லாம் ரத்தம்

அவர் பெயர் வைத்து கூகுளில் தமிழில் தேடியபோது, யாரோ ஒரு நன்பர் ( புரொபைல் வேலைசெய்யவில்லை) முழுமையாக தொகுத்து இருப்பது தெரியவந்தது...கீழே உள்ள சுட்டியை தொடவும்.

நிலமெல்லாம் ரத்தம்..முழுமையாக

வாசித்து இன்பம் பெறுக...

அன்புடன்,
செந்தழல் ரவி

Tuesday, May 30, 2006

கொரியா நினைவுகள்..


நான் குப்பை கொட்டுவது எல்.ஜி என்று பலருக்கு தெரிந்திருக்கும்..அதனால் கொரியா பற்றி எழுதவேண்டும் என்ற ஆசை...

கொரியர்களை பற்றி சில தகவல்களை சொல்லவேண்டும்...





மேற்க்காணும் படத்தில் இருப்பவர் தோழி ஜங் லீ. பக்கத்தில் இளிப்பது நான்தான் என்று சொல்லவும் வேண்டுமா...

30 சதவீதம் புத்த மதத்தினை சார்ந்துள்ளார்கள்..40 சதவீதம் கிறித்தவம்..மீதி உள்ள 30 சதவீதம் எந்த மதத்தினையும் சாராதவர்கள். நாத்திகர்கள் என்று சொல்லலாம்...

தோழி கூறுகிறார்..அவரது தாயார் அவ்வப்போது சர்ச்சுக்கு செல்வாராம்..இவர் போவதில்லை...(அதாவது கடைசி முப்பதில் இருக்கிறார்..)



தலைநகர் சியோல் ( சோல் - soul என்று ப்ரனவுன்ஸ் செய்கிறார்கள்) மேற்க்கத்திய நாகரீகத்தில் மிதக்கிறது..

கிட்டத்தட்ட அனைவரும் புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் உள்ளவராக உள்ளனர்.




மேற்க்கானும் புகைப்படத்தில் உள்ள பாட்டில் சோஜு ( soju) கொரியாவில் உள்ள சுண்டக்கஞ்சி மது. 20 சதவீதம் ஆல்க்கஹால் உள்ளது...சூப்பரா கீதுபா..( தேவைப்படுபவர்கள் தனிமடலில் கேட்கலாம்...என்கிட்ட கொஞ்சம் இருக்கு ஹி ஹி)

போக்குவரத்துக்கு பைக் / கார் இரண்டும் பயன்படுத்துகிறார்கள்...

அபார்ட்மென்ட் வாழ்க்கைமுறை...சிறிய நாடு அல்லவா...

பெண்கள் காதல் மணம் புரிகிறார்கள்...திருமணம் 28 - 30 வயதில் செய்துகொள்கிறார்கள்...திருமணத்துக்கு முன் பலமுறை யோசிப்பார்களாம் பெண்கள்..





உணவுப்பழக்கத்தினை பொறுத்தமட்டில் அரிசி உணவு உண்டு..இறைச்சி கண்டிப்பாக உண்டு..சிறிய டேபிள்..அதனை சூழ்ந்து அமர்ந்து உண்கிறார்கள்..




மேற்க்கானும் படத்தில் உள்ளது கிம்சீ..( Kim Chi ) என்னும் உணவு..

நான் பார்த்தவரை ஆங்கிலத்தில் சற்று வீக்காக இருந்தாலும், கடுமையான உழைப்பளிகள்...பழகிவிட்டால் போதும்..மிக நட்பாக இருப்பர்..அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இவை மட்டும்தான் என்று என்று எண்ணுகிறேன்...



நம்சமீதா..( நமஸ்காரம்..)

Monday, May 29, 2006

முட்டை - பருப்பு தொக்கு...சூப்பரா இருக்குபா...



பொதுவா பருப்பையும் முட்டையையும் ஒண்ணா சேர்க்கவே மாட்டோம். இந்த டிஷ் வித்தியாசமானது. இதை பாசிப்பருப்பு பயன்படுத்தியும் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :

1 கப் துவரம் பருப்பு
3 முட்டை
1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 தக்காளி பொடியாக நறுக்கியது
3 காய்ந்த மிளகாய்
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
2 டேபிள்ஸ்பூன் நெய்

சிறிது மஞ்சள் தூள்
சிறிது கடுகு
சிறிது சீரகம்
1 கப் தேங்காய்த்துருவல்
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
தேவையான உப்பு

செய்முறை :

* துவரம் பருப்பை போதுமான நீரில் வேக வைக்கவும். முக்கால்வாசி வெந்ததும் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

* எல்லாம் நன்கு குழைந்து வெந்ததும், முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்.

* சிறிது நேரம் கொதித்ததும் நெய்யில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், தாளித்துக்கொட்டி, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

எம்.எஸ்.என் தமிழ் வலைப்பதிவு ஆரம்பித்து உள்ளனர்..

http://content.msn.co.in/Tamil/Cookery/Recipies/0605-23-2.htm

இங்கே பார்க்கவும்..

சட்டசபையில் பெண் சிங்கம் புகுந்தது !!!!



ஆங்கிலத்தில் GUT's ( கட்ஸ்) என்று சொல்லுகிறார்கள்...தமிழில் தில் ( 'தில்' தமிழா...குன்றத்திலிருப்பவரை தான் கேட்கவேண்டும்) என்று சொல்லுவார்கள்..

முன்னாள் முதல்வரை தான் சொல்லுகிறேன்...

தனது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சட்டசபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், தன்னந்தனியாக எதிர்க்கட்சியை எதிர்கொண்டார்...

இந்த தைரியம் முதல்வர் கலைஞருக்கு வரவில்லையே...அவர் எதிர்க்கட்சியில் இருந்தபோது..

ஜெயலலிதா சட்டசபையில் எடுத்து வைத்த வாதம்..

1. கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் முயற்ச்சியில் இருக்கும் அரசு( கிட்டத்தட்ட 7000 கோடி) , தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனையும் செலுத்துமா..( காரணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வட்டி விகிதம் குறைவு)

2. ஏற்க்கனவே கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளின் பணத்தினை அரசு திருப்பி தருமா ? ( Reimbose)

3. சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடனை மட்டும் அரசு திருப்பி செலுத்துமா, அல்லது அனைத்து விவசாயிகளின் கடனையும் திருப்பி செலுத்துமா ? ( இப்படி கேட்டதற்க்கு காரணம், 17 லட்சம் / 20 லட்சம் கடன் வாங்கிய விவசாயிகளிம் இருக்கிறார்கள்..)

இவ்வாறு பேசுகையில் அவை முன்னவர் அன்பழகன் அடித்த நக்கல் என்ன தெரியுமா..

அவங்க மாமன் மச்சான் கிட்ட வாங்கின கடனை எல்லாம் திருப்பி செலுத்த முடியாது..

அவையில் வெடிச்சிரிப்பு...

4. தரிசு நிலம் பற்றியது...அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 3 1/2 ஏக்கர் தான் உள்ளது..அதனை எப்படி ஒரு கோடியே எழுபது லட்சம் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு கொடுப்பீர்கள் ( மொத்தம் 85 லட்சம் விவசாய கூலி தொழிலாளர்.. தலா இரண்டு ஏக்கர் ) ?

இதற்க்கு முதல்வர் கலைஞர் பதில் என்ன தெரியுமா ? அனைவருக்கு தரிசு நிலம் கொடுக்கப்படும்..அது அரசிடம் இருந்தாலும் / தனியாரிடம் இருந்தாலும்..

அவையில் பலமான கைத்தட்டல்...( அல்லது பெஞ்சு தட்டல்)

இதற்க்கு என்ன அர்த்தம் ? மொத்தம் 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் உள்ளது என்று கரடியாக கத்திய தி.மு.க ஹீரோ ( தேர்தல் அறிக்கைங்க) பொய் என்று முதல்வரே ஒத்துக்கொண்டுள்ளாரே ??

இதில் உண்மை என்ன என்றால் - ஒரு மண்ணும் பிரயோஜனமில்லாத நிலம் ( மண் கூட) தான் தரிசு நிலம்..நானும் தரிசு நிலத்தில் கால்வைத்து நடந்து உள்ளேன்...அதுல என்ன வெளையும்..கல்லும் மண்ணும் தான்...இதுக்கு இப்படி ஒரு சண்டையா..கிராமத்துல கேட்டுப்பாருங்க தெரியும்...அதுல முப்போகம் இல்ல..ஒரு போகம் கூட விளையாது...

சட்டசபையில் யாராவது பேசும்போது யார் குறுக்கிட வேண்டும் என்று மரபு உள்ளது...முதல்வர் குறுக்கிட்டு பேசலாம்...அல்லது அவை முன்னவர் பேசலாம்...இப்போது நடப்பது என்ன தெரியுமா...

மாயி படத்தில் ஒரு கேரக்டர், ஏ ஏ மாயண்ணன் வந்திருக்காக...மாப்புள மொக்கச்சாமி வந்திருக்காக என்பது போல..அமைச்சர் துரைமுருகன் அவர்கள்..ஏ ஏ ஏ என்று எதற்க்கெடுத்தாலும் குரல் விடுவது வேடிக்கையாக உள்ளது...

கடைசியாக ஒரு விஷயம்...சட்ட சபையில் சன் டி.வி க்கு மட்டுமே அனுமதி....ஜெயா டி.விக்கு கிடையாது...ம்ம்ம்...அவங்க ஆட்சியில நம்மை அனுமதிக்கல..நம்ம ஆட்சியில அவங்களை அனுமதிக்க கூடாது என்று சின்னபுள்ளத்தனமா ( நன்றி: வடிவேல்) இருக்காம பெருந்தன்மையாக நடந்துகொள்ள வேண்டும்....

அன்புடன்,
ரவி

Friday, May 26, 2006

தாய்லாந்து பயணம் - கொஞ்சம் நினைவுகள்

சமீபத்தில் (போன மாதம்)தாய்லாந்து நாட்டிற்க்கு போயிருந்தேன்...என்னுடைய மனதில் தாய்லாந்து பற்றி எண்ணியிருந்தது அடியோடு மாறியது...காரணம் சூப்பர் பாஸ்ட் ஹைவேக்களும் சாலையில் அதிவேகத்தில் பறக்கும் கார்களுமாக சிங்கப்பூரையும், மலேசியாவையும் நினைவுபடுத்தியது...நாடு 13 சதவீத வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று போர்ப்ஸ் பத்திரிக்கையில் படித்தது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது..




விசா ஆன் அரைவல் திட்டத்தில் நான் சென்றேன்....இதற்க்கு உங்கள் பாஸ்போர்ட், இரண்டு புகைப்படம் (வெள்ளை பேக்ரவுண்டு), மற்றும் திரும்புவதற்க்கான ரிட்டன் டிக்கெட், மற்றும் 1000 தாய் பாட் ( கிட்டத்தட்ட 1500 ரூ) கொடுத்தால் 14 நாட்கள் விசா தருகிறார்கள் ஏர்போட்டில்..அதனால் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக விளங்குகிறது...

திரும்ப வரும்போது ஏர்ப்போட் டாக்ஸ் என்று ஒரு 500 பாட் ( 750 ரூ) வாங்குகிறார்கள்...சுத்தமான ஏர்போர்ட்..கொடுக்கலாம் என்று தோன்றுகிறது...

நான் தங்கி இருந்த நகரத்தின் பெயர் சோன்புரி..தாய்லாந்தில் இருந்து 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள சிறுநகரம்..அதனால் யாருக்கும் சுட்டு போட்டாலும் ஆங்கிலம் தெரியாது...நமக்கு தெரிந்த சைகை பாஷையை வைத்து அட்ஜஸ்ட் பன்ன வேண்டியது தான்...

அதுவும் இல்லாமல் நாம் இந்தியாவிலிந்து வந்து இருக்கிறோம் என்றால் தொட்டு பார்த்து மகிழ்வர் இந்த சிறுநகரில்..காரணம் அவர்கள் தெய்வமான புத்தர் பிறந்த நாட்டிலிருந்து வருகிறோம் என்ற உணர்வு...

உணவு பழக்கத்தினை பொறுத்த வரையில் இந்தியர்களுக்கு பிரச்சினையே இல்லை...அதுவும் நான்வெஜ் அப்படின்னா சும்மா புகுந்து விளையாடலாம்..தொம்.யம்.கூங்..இது பிரபலமான நூடுல்ஸ் பெயர்..லெமன் வாசனையோடு கொஞ்சம் இறால் சேர்த்து சும்மா சூப்பரா இருக்கும்...
ரொட்டி என்ற பெயர்ல நம்ம பரோட்டாவ வித்துக்கிட்டு இருந்தான் ரோட்டு கடையில...5 தாய் பாட் (பாட் - தாய்லாந்து காசு) விலையில்...

அப்படியே நம்ம பரோட்டா..அதனை வெண்ணையில தடவி உள்ள தள்ளிக்கிட்டு இருந்தாங்க நிறைய பேர்..



மேற்கானும் படம் தாய்லாந்து தோழியொருவரின் திருமணம்



இவரும் தோழி தானுங்க....சுனாமி வந்து வாரிக்கிட்டு போன புக்கட் தீவில் எடுக்கப்பட்டது..

மொத்தத்தில் வெளிநாடு எதாவது சுற்றுலா சென்று வரலாம் என்று எண்ணுபவர்கள் தாய்லாந்தினை நிச்சயமாக கணக்கில் எடுத்து கொள்ளலாம்..

Thursday, May 25, 2006

தென்னாப்பிரிக்கா மற்றும் மொராக்கோ பயணம்

அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா ( ஜோகன்ஸ்பர்க்) மற்றும் மொராக்கோ ( காசாபிளாங்க்கா) ஆகிய நாடுகளில் உள்ள எ.ஜி அலுவலகங்களுக்கு வேலை விஷயமாக செல்கிறேன்...

உலகிலேயே அதிகபட்ச குற்ற சதவீதம் ( Crime Rate) உள்ள நகரம்ஜோகன்ஸ்பர்க்...மிக அதிகமாக வைரம் / தங்கம் கிடைக்கும் இடம் கூட என்று அறிந்தேன்...மற்ற மேற்கத்திய நகரங்களுக்கும் சிறிதும் குறைந்தது அல்ல என்பதினை கீழ்க்கானும் ஜோகன்ஸ்பர்க் படம் அறிவிக்கிறது..




ஜோகன்ஸ்பர்க் பற்றிய இணைய உரல் http://www.joburg.org.za/...

இங்கு மேயராக கறுப்பினத்தை சேர்ந்த அமோஸ் மசோண்டோ (Amos Masondo) இருக்கிறார்..

மற்ற விஷயங்களை நேரில் பார்த்து தான் எழுதவேனும்...

காசாபிளாங்கா ( casablanca ) என்று ஒரு ஷாப்பிங் மால் உண்டு பாண்டிச்சேரியில்..மொராக்கோவின் தன்னிகரற்ற தலைநகரம் என்று இனையத்தில் உள்ளது..



மேற்கானும் படத்தில் இருப்பவர் மொராக்கோ இளம்பெண்...

அப்பாடா...ஏதோ மொக்க போட்டு ஒரு பதிவு அளவுக்கு மேட்டர் தேத்தியாச்சி..
:)
பொறவு பயண கட்டுரைன்னு எதாவது எழுதிட வேண்டியது தான்...

Wednesday, May 24, 2006

தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைப்பதிவர் பெயர்: செந்தழல் ரவி

வலைப்பூ பெயர் : தனித்திரு விழித்திரு பசித்திரு

வலைமனை முகவரி : http://tvpravi.blogspot.com

ஊர்: திருக்கோவிலூர்

நாடு: தமிழ்நாடு, இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுளாண்டவர்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஏப்ரல் 17 2006

இது எத்தனையாவது பதிவு: 25

இப்பதிவின் வலைமனை முகவரி: http://tvpravi.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எல்லாருக்கும் இருக்கே, நமக்கே நமக்கு என்று ஒரு இடம்..சொந்த வீடு மாதிரி என்று என் முதல் பதிவில் கூறி உள்ளேன்

சந்தித்த அனுபவங்கள்: அரசியல், உள்குத்து, மற்றும் சாதி வெறி

பெற்ற நண்பர்கள்: பலப்பலர்

கற்றவை: அன்பும் அமைதியும் வேண்டும்..சாதியும் மதவெறியும் இல்லாத இனிய உலகம் வேண்டும்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன வேண்டுமானாலும் எழுதலாம்...இது நம் பதிவு என்ற உணர்வு..ஆனால் கொஞ்சமே கொஞ்சம் சமூக அக்கறை இருந்தால் சிறப்பு....பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம் என்ற போர்வையில் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைப்பவர்கள் நாளை அவர்களின் மகளோ மகனோ இதனை படிப்பார்கள் என்ற எண்ணம் சிறிதேனும் கொள்ள வேண்டும்..

இனி செய்ய நினைப்பவை: புதியதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்..சாதி மதம் தொடர்பான பதிவுகளிள் பின்னூட்டம் இட கூடாது...

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வயது 27. பணிபுரியும் இடம் எல்.ஜி. சுற்றிவந்த நாடுகள் 16. இப்போது இருப்பது பெங்களூர்..

Tuesday, May 23, 2006

ஒருமரத்து கள்ளு !!!!!

'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்புக்கு கெட்டது...அப்படின்னு எல்லாம்...ஆனா உண்மை என்னன்னா...கள், பச்ச புள்ள மாதிரி..அட ஆமாங்க...உண்மைதான்...

என் கல்லூரி இருந்த இடம் ஒரு கிராமம்..அங்க மிஞ்சி போனா கிடைக்கறது இந்த கள்ளு தான்...காலையில கள் இறக்கற இடம் போனா, நல்லா கொத்தும் கொலையுமா இருக்க பானைய இறக்கி, அதுல மப்புல மெதந்துக்கிட்டு இருக்க பெரிய சைஸ் வண்டுகளை எல்லாம் தூக்கி போட்டுட்டு, ப்ளாஸ்டிக் மக்குல அல்லது பெரிய சைசு பானையில ( நமக்கே நமக்கு) கொடுப்பாங்க...

பத்து ரூபா ஒரு மக்கு ( ஜக்குன்னும் சொல்லலாம்)..

அங்கனயே கிடைக்குற சின்ன சைஸ் மிக்சர் பாக்கெட்டுகளையும், ஒரு அரை பாக்கட்டு கோல்டு பில்டர் சிகரட்டும் வாங்கிக்கிட்டு ஓரமா ஒதுங்கிட வேண்டியது தான்...அப்படியே ரவுண்டு கட்டி உக்காந்துக்கிட்டு உள்ளார இறக்க வேண்டியது தான்..கொஞ்சம் புளிப்பா...ஜில்லுனு உள்ளார இறங்கும்...


மேட்டர் என்னான்னா...இந்த கள்ளு எல்லாம் ஒரே பானையில கொட்டப்படும்...அதுல இருந்து சில பல மக்குகளை வாங்கி நம்ம ஒரு பானையில ஊத்திக்கிட்டு வர்ரோம் இல்லையா...


அதை விட காலையிலே கள்ளு இறக்குற இடத்துக்கு போயி, ஒரே பானைய (புல்லா) - ( 100 ரூபா ஆகும் ) வாங்கி அதுல இருக்கற பண்ணாடைய தூக்கி எறிஞ்சிட்டு (
(பண்ணாடை என்பது சல்லடை மாதிரி இருக்கும்...கள் இறக்குறவங்களுக்கு இயற்கை தந்த வடிகட்டி....) வண்டுகளையும் தூர எறிஞ்சிட்டு...

கப்பு கப்புன்னு ஏத்துறது....சும்மா அருமையா இருக்கும்...அது அந்த கள்ள சுவைச்சவங்களுக்கு தான் தெரியும்...

இதெல்லாம் இப்ப எதுக்கு அப்படீங்கறீங்க...புரியுது...

தி.மு.க. ஆட்சியில கள் இறக்க அனுமதி வழங்க போறாங்களாம்...அதுவும் கள்ளை இண்டர்நேஷனல் லெவல்ல ( ஐரோப்பாவுக்கு) ஏற்றுமதி வேற செய்ய போறாங்களாம்...

ஊருக்கு போனா காலையில கெளம்பிற வேண்டியது தான்...பாத்ரூமுக்கு இல்லங்க...ஒருமரத்து கள்ளு அடிக்க...ஹி ஹி...

கள் உண்ண வேண்டும்...ஒருமரத்து கள் உண்ண வேண்டும்...:)

விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதன்...!!!!!


இந்தியாவிலிருந்து மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்க்கு முதல் நாள்...மன்மோகன் சிங் அமெரிக்க அதிபருக்கு தொலைபேசுகிறார்...

அய்யா பு(ஷ்)ஸ் அவர்களே...நாங்கள் முதல் முதலாக மனிதனை விண்வெளிக்கு அனுப்புகிறோம்..நீ தான் எல்லாத்துக்கும் (நான் பாத்ரூம் போவது உள்பட) உன்ன கேக்காம செய்ய கூடாதுன்னு சொல்லிட்டியே...அதான் போன் பன்னுரேன்...

புஸ் : சரி, எத்தன பேர அனுப்புறீங்க ?

மன்(ண்)மோகன்: நாங்க நூறு பேர அனுப்பறோம்..

புஸ்: சரி யார் யார அனுப்பறீங்க

மன்மோகன் : 25 - ஒ.பி.சி, 25 - எஸ்.சி, 20 - எஸ்.டி, 5 - ஊனமுற்றவங்க, 10 - விளையாட்டு வீரர்கள், 5 - காஷ்மீரிகள், 9 - சுகந்திர போராட்ட தியாகிகள், அப்புறம், அப்புறம்

புஸ் : அப்புறம் யாரு ?

மன்மோகன் : ஒரு விண்வெளி வீரர்..

:)

Thursday, May 18, 2006

காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா...

நேதாஜி பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்...

காசி என்ற பெயரில் "அருமையான பதிவு" என்று பின்னூட்டம் வந்தது...

குமரன் சுட்டி காட்டினார், காசியின் பெயரில் வந்த பின்னூட்டம் அவருடையது அல்ல என்று..புரொபைல் மூலம் வலைதளம் சென்றால் ஆபாச சங்கதிகள் உள்ளன..

பின்னூட்டத்தில் எந்த ஆபாச சங்கதியும் இல்லை என்பதால் தான் அனுமதித்தேன்..

காசிக்கே போலியா..திருப்பதிக்கே லட்டா அப்படீங்கறமாதிரி....

இந்த போலிக்கு இதயமே கிடையாது....சேவை மணப்பான்மையில் செயல்பட்டுவரும் காசி இதனை பொருட்படுத்த மாட்டார் என்று நினைக்கிறேன்..

நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தாரா ?



நேற்று நாடாளுமன்றத்தில் முகர்ஜி கமிஷன் ( தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 1999 ம் ஆண்டு அமைக்கப்பட்டது) அறிக்கையை தாக்கல் செய்த மத்திய இணை அமைச்சர் ரகுபதிக்கு கூட அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட தகவல்கள் ஆச்சர்யத்தினையும் அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி இருக்கும்...

நேதாஜி, விமான விபத்தில் உயிர் இழக்கவில்லை..அவர் தற்போது உயிருடன் இல்லை..இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டு உள்ளது அந்த அறிக்கையில்...

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மேலும் சில தகவல்கள், ஜப்பானில் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள சாம்பல் நேதஜியுடையது அல்ல..

மேலும் நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான் அரசு அறிக்கை டோக்கியோவிலும் தைவான் தலைநகர் தைபேயிலும் வெளியானது..ஒரே நேரத்தில் ஜப்பான் அரசு முத்திரையுடன் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட இந்த தகவல் முரணான விஷயங்களை கொண்டு இருந்தது எப்படி என்று முகர்ஜி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது...

இந்த விஷயங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு விஷயம், 1985 ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் பைசாபாத்தில் உயிரிழந்த பகவான்ஜி குன்னாபி பாபா தான் நேதாஜி என்று பல சாட்சிகள் தெரிவித்ததாக ஆணித்தரமாக தெரிவிக்கிறது...

உண்மை என்ன ? நேதாஜி உயிருடன் வாழ்ந்தது நிஜமா ? ஏன் மறைக்கப்பட்டது ? யாருக்காக ?

புகைப்படத்தினை சேர்க்கிறேன்...




பகவான்ஜி குன்னாபி பாபா இருப்பது வலது புறம்..நேதாஜி இடது புறம்..

கடந்த வாரம் இவர் உயிரிழந்தார். ஆனால் இறப்பதற்க்கு முன், தான் நேதாஜி என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அடிக்கடி மர்மமான முறையில் டெல்லிக்கு பயனம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது..அதனால் இந்த மீள்பதிவு.

Monday, May 15, 2006

சிங்கபூரில் இருந்து ஒரு இந்தி ஆதரவு பதிவு - என் பதில்

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா ?

யாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்டாயமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள்? அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா? அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.

இவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கு மட்டும்தான் அது பயனளிக்கும்



குற்றம் குற்றமே...

இது போன்ற சப்பை கட்டுகளை கட்டுபவர்கள் உண்மையில் யார்...

வாழ்க்கையில் சுகமாக செட்டில் ஆனவர்கள்...

அல்லது

அப்பா சம்பாதித்த சொத்தினை கரைப்பவர்கள்..

அல்லது அப்பா வாங்கி கொடுத்த வேலையில் ஜம் என்று அமர்ந்தவர்கள்..

வேலை தேடி தெரு தெருவாக அலைந்தவர்கள் அல்லர்...

பிற மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பாமரனும் படித்தவனும் ஒன்றா ?

ஒரு தலைமுறையை ஹிந்தி படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்தவர்களின் அடிவருடியாக செயல்படலாம் தப்பில்லை...அதற்க்காக இது போன்ற சப்பைகட்டுகளை ஒத்துக்கொள்ள முடியாது....

ஹிந்தி படித்தால் வேலை என்று கூறவில்லை...அப்படி பார்த்தால் NIIT போன்ற நிறுவனங்கள் கணிணி பயிற்ச்சி கொடுப்பதினை விடுத்து ஹிந்தி டியூஷன் ஆரம்பித்து இருக்கும்...

கட்டாயப்படுத்தவில்லை என்கிறீர்களே..ஹிந்தியின் மீது தார் பூசியது ஏன் ? ஏன் ஆங்கில பலகைகளின் மீது பூசவில்லை ?

சிங்கையில் இருந்து எழுதுவதனால் தான் உங்களுக்கு நாங்கள் சந்திக்கும் REAL TIME பிரச்சினைகள் புரியவில்லை என்று கருதுகிறேன்..

விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...


விஜயகாந்த் பற்றி ஒரு செய்தி...பத்து ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்வதற்க்காக சென்று இருந்தேன்..

அப்போது அங்கு கிட்டத்தட்ட 200 படுக்கைகளில் விஜயகாந்த் கொடுத்ததாகவும், நன்றி என்றும் எழுதி இருந்தது...

சத்தம் இல்லாமல் செய்து இருந்ததை பார்த்து வியந்தேன்..

அதுவரை பலவாறாக விஜயகாந்த்தினை கிண்டல் செய்துகொண்டு இருந்த நான் அந்த வேலையை அத்தோடு நிறுத்திக்கொண்டேன்..

அதுக்கும் இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா ? இந்த வார குமுதம் பாருங்க.. விளங்கும்...

Tuesday, May 09, 2006

கைத்தொலைபேசியை தொலைத்து இருக்கிறீர்களா ?


கைத்தொலைபேசியை தொலைப்பது போன்ற கொடுமையான விஷயம் எதுவும் இல்லையோ என்று தோன்றியது..

தனி தீவாகி விட்டது போல ஒரு உணர்வு...யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை..யாரும் என்னை தொடர்பு கொள்ள முடிய வில்லை...அனைத்து தொலைபேசி எண்கள், க்ரெடிட் கார்டு மர்ம எண்கள், அனைத்தும் காற்றோடு போயிற்று...

இந்த பதிவின் மூலம், கைத்தொலைபேசியை தொலைப்பதை தவிர்ப்பது எப்படி, அதனை மற்றவர் பயன்படுத்தாமல் தடுப்பது எப்படி, IMEI எண் என்றால் என்ன, அதனை உபயோகப்படுத்தி எப்படி உங்கள் கைத்தொலைபேசியை மற்றவர் உபயோகிகாமல் தடுப்பது என்பது பற்றி எழுதுவேன்..

மேற்கண்ட படத்தில் - அழகு பெண்கள் அறிமுகப்படுத்துவது தான் நான் தொலைத்தது...

சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்றால், கடந்த சனிக்கிழமை அன்று, நன்பர்கள் சிலர் இணைந்து ஆடு தாண்டும் காவேரி ( இங்கே பெங்களூரில் அது "மேக்கே"..மேக்கே என்றால் ஆடு - கன்னடத்தில் ) என்ற இடத்துக்கு போகலாம் என்று முடிவானது...

ஒரு கார் மற்றும் இரண்டு பைக் தயாரானது..
நான் ஒரு நாள் ஆபீசுக்கு கட் அடித்து விட்டு ( வழக்கமாக விடுமுறைதான், ராஜ்குமார் கலவர விடுமுறையை ஈடுகட்ட சனி அலுவலகம், பலருக்கு) நன்பர் வீட்டில் மற்றவருடன் இனைந்து கிளம்பினோம்..

காரில் இருந்தது நானும் முகில்வண்ணன் என்ற நன்பரும்..காவேரி நெருக்கத்தில் வர, பைக்கில் பறக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது...ஆகவே பைக்கில் வந்த கார்த்திக் இப்பொழுது காரில்..நானும் முகிலும் பைக்கில்...இந்த நேரத்தில் காரில் என்னுடைய கைபேசி...

இடத்தினை அடைந்த பிறகு காரில் தேடினேன்..பறந்துவிட்டிருந்தது....

முதல் வேலையாக அதன் தொலைபேசும் வசதியை பார் செய்தேன்..( அடுத்த நாட்டுக்கு தொலைபேசும் வசதி உண்டு அதில்..என் நிறுவனம் எனக்கு வழங்கிய வசதி அது)

இப்போது என் அலுவலகத்துக்கு வந்த உடன் (திங்கள் அன்று) நான் செய்த முதல் காரியம், நான் முன்பே சேமித்து வைத்திருந்த அந்த கைபேசியின் IMEI எண்னை ( உங்கள் தொலைபேசியில் *#06# தட்டி பார்க்கவும்) சம்மந்தப்பட்ட தொலைவசதி வழங்கு நிறுவனத்துக்கு ( Mobile Service Provider) தெரிவித்தேன்..

இதன்மூலம் அதனை யாரும் உபயோகப்படுத்தாத வகையில் தொலைவசதி வழங்கு நிறுவனத்தின் EIR ( Equipment Identity Registrar)ன் கருப்பு சேமிப்பகத்தில் ( Black Database) சேமிக்கப்படும்...

அன்புடன்
ரவி..

பின் குறிப்பு : EIR எப்படி தமிழ்படுத்தலாம் என்று மண்டை உடைகிறது...

Monday, May 08, 2006

செல்லாத ஓட்டு போடும் கலைஞர்


இந்த படத்தினை பாருங்கள்.

கலைஞர் தனது ஓட்டை பதிவு செய்கிறார். இதில் உனக்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா ? 4 முறை முதல்வராக இருந்தவர், 50 ஆண்டு அரசியல் அனுபவம் வாய்ந்தவர் என்று அடித்துகொள்பவர்கள் வெதும்பும் விதமாக அவர் செல்லாத ஓட்டை பதிவு செய்கிறார்.

சிவப்பு அம்பு குறியிடும் இடத்தில் தன் விரலை வைத்து அழுத்துவது தான் இந்த படம். ஆனால் அவர் தனது ஒட்டை பதிவு செய்யும் சாரதா வித்யாலயா மேல்நிலை பள்ளியில் இரண்டாவது சின்னம் உதய சூரியன். மூன்றாவது இடத்தில் இருந்தது தே.தி.மு.க முரசு சின்னம்.

இப்பொழுது புரிகிறதா ? இதன் பெயர் தான் செல்லாத ஓட்டு.....

Tuesday, May 02, 2006

தங்க மங்கையின் தங்க அறிவிப்பு

தலைப்பை கேட்டவுடனே, எதோ பி.டி.உஷா ஒலிம்பிக் அறிவிப்பு கொடுக்கிறார் என்று நினைக்க வேண்டாம்.

முதல்வரின் அறிவிப்பு. " திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1/2 பவுன் தங்க தாலி"

எதிர் அணி ஆடிப்போய் நிற்க்கிறது..

தி.மு.க. தரப்பில் இருந்து நான் எதிர் பார்க்கும் அடுத்த அறிவிப்பு.." திருமணம் ஆகும் ஏழை பொண்களுக்கு 1 பவுன் தங்க தாலி", காலுக்கு மெட்டி, இரண்டு ஜோடி கண்ணாடி வளையல் மற்றும் சமையலுக்கு சக்தி மசாலா பாக்கெட் இரண்டு ஆகியவை கிடைக்கும்.

ஆக மொத்தம் தமிழன் அனைத்து இலவச பொருளையும் வாங்கி வீட்டில் வைத்துவிட்டு நடு தெருவில் தான் நிற்க்கவேண்டும் போல இருக்கே ?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....