Saturday, August 30, 2008

எதையும் செய்யவேணாம் பாஸு...பொ$$ மூடிக்கிட்டு இருந்திடலாம் பாஸு...!!!

லக்கிலூக் எதையாவது செய்யனும் பாஸு என்று பதிவு எழுதி இருக்கிறார்..பதிவர் நரசிம் உடைய தூண்டுதல் இந்த பதிவுக்கு காரணம்...

பரிசல் / வெண்பூ / வால்பையன் மாதிரி மொக்கை கோஷ்டிகள் எல்லாம் இதை படித்துவிட்டு, ஆஹா, வாங்கடா கிளம்பி உலகத்தை திருத்தலாம் என்று கிளம்பினீர்கள் என்றால் அதைவிட அட்டர் வேஸ்ட் எதுவும் இல்லை...

ஏதாவது மொக்கை போட்டோமா, நாலு நன்பர்களோடு அரட்டை அடித்தோமா, எப்பவாவது பார்க்கும்போது - டாஸ்மாக்கில் போய் மப்பை போட்டோமா என்று உருப்புடியாக இருக்கவும்..

அதை விட்டு விட்டு, வாருங்கள் குழுவாக உக்காந்து ரூம் போட்டு யோசிச்சு, சமூகத்தை திருத்தலாம் என்று தனியாளாக உங்களது நேரம் பணம் ஆகியவற்றை செலவு செய்தால் முதலுக்கு கொஞ்சம் மோசமாகும்...

இதுவரை நேரத்தை தின்று உங்கள் பிழைப்பை கெடுத்துவரும் வலைப்பூ அடிக்-ஷன் உங்கள் பாக்கெட்டிலும் வேட்டு வைக்கக்கூடும்..

எங்கிட்ட கோடிகளும் - லட்சங்களும் குவிஞ்சிருக்கு, இல்லை நான் ஏற்கனவே நாலு கம்பேனிக்கு சி.இ.ஓ என்னை எவனும் கேள்விகேட்க முடியாது அப்படீன்னா கெளம்புங்க...நரசிம் சாரோட பதிவுக்கு டைரக்ட் ஆடியன்ஸ் நீங்க தான்...ஏன்னா உங்ககிட்ட இழக்கறது ஒன்னுமில்லை...

ஆனா வாழ்க்கையில் பெருசா எதுவும் சாதிக்காத ஆளு என்று நீங்கள் நினைச்சீங்கன்னா, உங்கள் துறையில் பெரிய அளவில் சாதிச்சுட்டு அதுக்கப்புறம் இதுமாதிரி சமூகத்தை திருத்த கிளம்பலாம்...

போன வருஷம் 2006 அப்போ மகாலட்சுமி கல்விக்கு உதவுங்கள் என்று ஒரு பதிவிட்டு, இன்றைக்கு அந்த பெண் ஒரு டீச்சர். ஆனால் இதன் மூலம் நான் அடைந்ததை விட இழந்தது அதிகம்...

என்னுடைய பதவி உயர்வு
நான் விரும்பிய நாட்டில் இரண்டு மூன்று வருடங்கள் தங்கும் வாய்ப்பு
எப்போதும் வலைப்பதிவையே பார்த்துக்கொண்டிருந்து என்னுடைய சொந்த வேலைகளை கூட சரியாக செய்யாத நிலை

என்று திருப்பி எடுக்கவே முடியாத பல இழப்புகள்...

அடைந்தது...எங்கோ ஒரு கிராமத்தில் வசித்த ஒரு பெண்ணை அரசாங்க ஆசிரியை ஆக்க உதவியது...

இந்த சேட்டிஸ்பேக்சன் மட்டுமே நான் இழந்தை அனைத்துக்கும் சமம் ஆகுமா ?

நான் என்ன அவ்வளவு பெரிய தியாகியா ?

என் குடும்பம் என் மனைவி என் சொத்துக்கள் என்று சுயநலம் உடைய ஒரு மனிதன்...

திரும்பி பார்க்கும்போது தான் தெரிந்தது, இந்த வலைப்பதிவு, இதன் அரசியல்கள், இதன் நட்புகள், இதில் நான் செலவிடும் நேரம் என்னுடைய 50% பேண்ட்விட்த் ஐ தின்று இருக்கிறது..

இன்றைக்கும் - பொழப்ப பாருங்கடே என்று ஒரு பதிவு எழுத நேரத்தை தின்றுகொண்டிருக்கிறது...

ஓக்கே...

அவதார புருஷர்கள் : எதையாவது செய்யுங்க பாஸு...
சுயநலவாதிகள் : மூடிக்கிட்டு போங்க பாஸு..

Friday, August 29, 2008

கலைஞர் கருணாநிதியின் அடுத்த கவிதை அட்டாக் யாருக்கு ?

வரதராஜனை பிளந்தாச்சு...நெடுமாறனை அட்டாக் செய்தாச்சு என்று தமிழக முதல்வர் நாளொரு கவிதை செய்து யாரையாவது அட்டாக் செய்தவண்ணம் இருக்கிறார்...!!!

அவரது அடுத்த கவிதை யாருக்கு என்று புரியாமல் கதிகலங்கி நிற்கின்றனர் உடன்பிறப்புகள்...!!!

நாம் கொஞ்சம் விளையாடி, அவரது கவிதை யை கொஸ்டின் அவுட் ஆவது போல் வெளியிடலாமே என்று எண்ணியதன் விளைவு...

இந்த கவிதை...

ஒருவேளை அடுத்த கவிதை விஜயகாந்துக்காக இருக்கலாம் என்ற முன்முடிவுடன்...

டாஸ்மார்க்குக்கு வெளியே முழங்குகிறான்..
வெளி நாட்டுக்கொடி பறக்கும் கம்பத்தின் கீழ் நின்றபடி..
அணியொன்று தனியாக அமைத்திடுவேன்..
ஆட்டுக்கூட்டம் போதும் ஆரம்பத்தில்...

அத்தனையும் மொக்கைகளாய், சொத்தைகளாய்...
அதுவே பழரசக் கிண்ணத்தில் பளபளக்கும் முத்துக்களாய்!

அவை தவிர நம்மிடம் அடிமை ஆட்டுக்குட்டிகள் ஆயிரம் பணம் கொடுத்து வாங்கியது உண்டே...

பேரரசு நானே என்று அரிதாரம் பூசி...
பேய்வீடு காப்பேன் அதில் தாய்வீடு வைப்பேன் என்று முட்டுச்சந்தில் முழங்கி..

என் ரசிக கண்மணிகள் வீசினால் பெட்ரோல் குண்டுகூட குண்டாந்தடியல்ல..

ரேஷன் அரிசியை வீட்டிலே கொடுப்பேன், அதை பொங்கியும் தருவேன், பொங்கிய என் கண்களை காட்டி விருந்தும் தருவேன்..

குடும்பத்தினர் அரசியல் செய்தால் அதை ஒழிக்கவேண்டும்...
என்று என் மனைவி சொன்னதை அப்படியே ஒப்பித்தேன்...
ஆம் என் மனையாள் "அவாள்" அல்லவென்றாலும் அவள் என் குடுப்பத்தில் ஒருத்தியென் சொல்லிவிடாதீர்கள் யாரும்..\

மாமன், மைத்துனன் என்று என்று இராவில் ராவுத்தர்கள் எழுதும் வசனம் படிப்பேன்..

ஆவேச நடனம் ஆடி அடிக்கொரு நாயகியின் முகத்தில் ஆசை முத்தம் பதிப்பேன்..

இருந்தாலும்கூட; என் மீதிருந்து வரும் சோம பான சுரா பான வாசனைகள் சுகந்தம் என்பேன்..

தொண்டர் தள்ளினால் கை நீட்டி அடிப்பேன், தான் ஒரு நாயகன் என திரைக்கு வெளியிலும் நடிப்பேன்..

தனியொருவனாக நான் இங்கே வந்தது, அந்த நாற்க்காலிக்காகத்தான் என நம்பாதீர்கள். நம்பினால் நாசமாய் போங்கள்.

தேர்தல் வரும், அதில் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் ஓட்டை எனக்கு போடுங்கள் என்று சொல்லி, ஜனநாயகத்தை பணநாயகத்தில் போட்டுடைபேன்...

வரதட்சினை வாங்காதே நீ; ஆனால் அந்த கட்டுப்பாடு உன் தலைவனுக்கும் மைத்துனனுக்குமில்லை; நீ தொண்டன்;

குடவாசல் குடமுழுக்கு குப்பத்தில் என்றோம், புள்ளியியல் அறிஞர் போல தப்புத்தாளமாக விவரம் சொன்னோம் என்று சுட்டிக்காட்டினால்...வெட்டிக்காட்டுவோம்..

இது அரசியல் அனாதைகள் ஒண்டிக்கொள்ளும் சத்திரம், என்னிடம் ஏமாந்து பூச்சூடிக்கொள்ள நீங்கள் எம்மாத்திரம்...

எம்மாத்திரம்...எம்மாத்திரம்...

என்று முடித்துள்ளார் கலைஞர்...

இதில் அரசியல் அனாதைகள் என்று அவர் கூறியுள்ளது பன்னுருட்டி ராமச்சந்திரன் தான் என்று பெரிய விவாதம் துவங்கியுள்ளது...

நீங்களும் உங்களுக்கு தெரிந்த மேட்டர்களை சொல்லிவிட்டு, இங்கே ஓட்டு குத்திவிட்டு செல்லுங்கள்...

Thursday, August 28, 2008

சாம்பார் பதிவின் நீட்சியாக எழுந்த விளைவுகள்...

என்னுடைய சாம்பார் பதிவின் தொடர்ச்சியாக...என்னுடைய நூற்றுக்கணக்கான(??) வாசகர்களின் நலனை முன்னிட்டு, இன்று இரவு என்னுடயை ரெசிப்பி படி நானே சாம்பார் வைத்து (தூயா கவனிக்க), அதை உலகத்தமிழர்ர்கள் பார்வைக்கு வைப்பது என முடிவானது...



அதன் விளைவு தான் இந்த புரட்சி திருமணம்...ச்சே சாம்பார்...முதல் படத்தில் வெங்காயம் தக்காளி தாளிக்கப்படும் காட்சி...



இரண்டாவது படத்தில் புளித்தண்ணீர், பருப்பு தண்ணீர், மஞ்சள் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு போடப்பட்டு கொதிக்கவைக்கப்படும் காட்சி...

படத்தின் மீது பெரிதாக்க படத்தை க்ளிக்கி ( இதை எல்லாம் பெரியதாக பார்த்து என்ன செய்யப்போகிறீர்...சும்மா போவும்...இது என்ன நமீதா படமா ? )

கொதிக்கும் வாசனை அடிக்கிறதா ? இப்போது நான் சொல்ல மறந்த கடைசி பஞ்ச்...இதில் மேலாக்க கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்...

முந்தைய பதிவில் பின்னூட்டம் போட்ட வெட்டிப்பயல், இதற்கு நெத்திலி வறுவல் சூப்பர் காம்பினேஷன் என்று கூறியிருந்தார்...நானும் அதை ஆமோதிக்கிறேன்...வெஜிட்டேரியன் மக்கள்ஸ், நீங்கள் உருளைக்கிழங்கு வறுவலோ அல்லது கருணைக்கிழங்கு வறுவலோடு அப்படியே ஓரங்கட்டிக்கொள்ளுங்கள்...

நெத்திலியை மசாலா தடவி பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொண்டு, அப்படியே நாம ஒதுங்கிங்கலாம்...(இந்த பதிவெல்லாம் சூடான இடுகையில வந்து என்ன செய்யப்போகுது ? ப்ளீஸ் இதை யாருக்கும் ரெபர் செய்யாதீங்க)

பதிவர் அனுராதா மீது கோபம்.

பதிவர் அனுராதா மீது கோபம்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் பார்த்தாயா நீ என்று கோபப்படவேண்டாம்...

லக்கியின் பதிவின் மூலம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடித்தவர், அந்த பிடிவாதத்தினாலேயே இவ்வுலகை விட்டு நீங்கியவர் என்று அறிந்துகொண்டேன்...

உயிருக்கு உயிரான கணவருக்காகவாவது அறுவை சிகிச்சை செய்துகொண்டு வாழ்ந்திருக்கலாம்...இன்றைக்கு அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் சென்றுவிட்டீர்கள்...ஹும்...!!!

டிப்பிக்கல் இண்டியன் உமன் மைண்ட் செட் !!

எதுவானாலும்...மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பலபேருக்கு உருவாக காரணமாய் இருந்த உங்களுக்கு நன்றி அனுராதா...சென்று வாருங்கள்...!!!

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதையும் போடவேண்டாம்...!!!

தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கு குட்டு மற்றும் சாம்பார் வைப்பது எப்படி ?

ஏதோ ஒரு டி.வியில் ஏதோ ஒரு புரோகிராம் பார்த்தபோது, அதில் பேசிய ஒருவர்...

தான் ஒரு FC (பார்வேர்டு கேஸ்ட்டு) என்று குறிப்பிட்டதை பார்த்து வெறுத்துப்போனேன்...

இந்த தமிழ் சாக்கடையின் அடி மனதில் தங்கியிருக்கும் சாதீய அழுக்கே இந்த வார்த்தைகள் என்று நினைத்தபோது...

குமட்டிக்கொண்டு வருகிறது...!!!

இந்த வார குட்டு, தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கே...

உபயோகமான குறிப்புகள் இல்லாமல் பதிவு எழுதுவதில்லை என்று கொ.மி.மி.மி அனானியிடம் செய்த சத்தியத்தின் காரணமாக...

தமிழ் வலையுலகி எழுபத்தேழாவது முறையாக சாம்பார் வைப்பது எப்படி என்ற குறிப்பை தருகிறேன்...

முதலில் கையளவு பருப்பை எடுத்துக்கொள்ளவும்...

அதை குக்கரிலோ (குக்கர் இருந்தால்) அல்லது சுடு நீரிலோ வேகவைக்கவும்...

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...

உப்பு போட்டால் வேகும் ஆனால் வேகாது என்று ஆட்டம் காட்டி கேஸையோ அல்லது மண்ணென்னையையோ தீர்த்துவிடும் இந்த பருப்பு மேக்கிங் ப்ராஸஸ்...

இதன் பிறகு பருப்பை கந்தல் துணி பிடித்து ஓரமாக இறக்கி வைத்துவிடவேண்டியது சாம்பார் வைக்கும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...

சாம்பாரில் பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை...முருங்கைக்காய் சாம்பாரில் ஆரம்பித்து முள்ளங்கி சாம்பார் வரை, குறைந்த காசில் கிடைக்கும் அத்துனை காய்கறிகள் கொண்ட சாம்பார்களும் உங்கள் வயிற்றில் ஹோட்டல்கள் மூலம் இறங்கி இருக்கும்...

ஆனால் கி.போ.சா என்ற இந்த புதுவித சாம்பாரை நீங்கள் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை...

கி.போ.சா என்றால் கிள்ளி போட்ட சாம்பார் என்று அர்த்தம்...

கிள்ளி போடுவது என்றால், வெறும் மிளகாயை கிள்ளி போட்டு, பருப்பை கண்ணில் காட்டி, சாம்பார் என்ற பெயரில் அடுப்பில் இருந்து இறக்குவது...

பொதுப்புத்தி சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், மற்ற உயர்ந்த சாதி சாம்பாரைபோல் இதில் மிளகாய்த்தூள் போடுவதில்லை...

வெறும் நாலு மிளகாயை கிள்ளி போடுவார்கள்...

சரி இப்போ மறுபடி கம்மிங் பேக் டு த பாய்ண்ட் (வசனம் உதவி மற்றும் நன்றி பொந்துமணி)

பருப்பை இறக்கிய பிறகு, வாணலை வைத்து / அல்லது குண்டானை வைத்து / அதில் கொஞ்சம்போல எண்ணையை காட்டவும் ( ஏற்கனவே எதையாவது வறுத்து / தாளித்து மீதி வைத்த எண்ணையாக இருந்தாலும் பரவாயில்லை)

எண்ணை லைட்டாக சூடானபின், இரண்டு கறிவேப்பிலை, கொஞ்சம் கடுகு, மற்றும் ஏற்கனவே சொன்னபடி நாலு மிளகாயை கிள்ளி போடவும்...

தன்னுடைய சாதி திமிரை சொல்லிய நொள்ளைக்கண்ணனை கண்டு சுரணை கெட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த ஏதோ ஒரு கவிஞரை போல சூடு இல்லாமல் தீயை கொஞ்சம் மிதமாகவே வைத்துக்கொண்டால், மிளகாய் தீய்ந்து போகாமல் காக்கலாம்...

இதன் மூலம் சாம்பார் சுவை கூடும்...

லைட்டாக கருகிய வாடை வரும் சமயம் பருப்பு தண்ணீரை / பருப்போடு சேர்த்து அதில் ஊற்றி ஒரு கலக்கு கலக்குங்கள்...

கொஞ்சம் உப்பு சேருங்கள்...கொஞ்சம் போதும்...சரியா ? சுரணை ஏதும் வந்துவிடப்போகிறது ஆமாம்...தமிழனை கருநாடகத்தவன், ஆந்திரன், கேரளன் எல்லாம் ஏமாற்றவேண்டுமல்லவா ? செஞ்சோலையில் குண்டுகள் போட்டாலும், கிளிநொச்சியில் மக்கள் மேல் குண்டு போட்டாலும் நாம் அமைதியாக இருக்கவேண்டும் அல்லவா...அதனால் உப்பை கம்மியாகவே சேருங்கள்...

இன்னும் கொஞ்சம் கலக்குங்கள்...

அப்படியே இடது புறம், வலது புறம் கிண்டுங்கள்...இடது மற்றும் வலது ரெண்டும் ஒன்று தான்...

இந்த வேளையில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து அதை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, பிசைந்து, குழைத்து, நசுக்கி, அமுக்கி அரை டம்ளர் தண்ணீர் முழுவதும் புளித்தண்ணீராக கரையும் அளவுக்கு செய்யவும்..

இதனை அப்படியே சாம்பார் குண்டானில் ஊற்றிவிடவும்..

பிறகு டி.வியை வைத்து ஹிந்து பேச்சு, சேட்ஜியின் மூச்சு என்ற புரொகிராமை ஜீ டி.வியில் பார்த்து கொஞ்சநேரம் டைம் பாஸ் செய்யுங்கள்...

இப்போது சாம்பார் லைட்டாக வாசனை வீசும்...சாம்பார் வாசனைதான்...

இன்னும் கொஞ்சம் கிண்டுங்கள்...

வெள்ளையாக நுரையுடன் சேர்ந்து சாம்பார் கொதிக்கும்...கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பார் பொடியை இதன் தலையில் தூவி, இன்னும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்குங்கள்...

மொத்த சாம்பார் மேக்கிங் ப்ராஸஸ் பத்து நிமிடத்துக்குள் முடியுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்...

நொள்ளைக்கண்ணன் ப்ரோகிராம் மாதிரி அறுக்கவேண்டாம்...

இப்படித்தான் சாம்பார் வைப்பது மற்றும் தன் உயர் சாதி பாசத்தை வெளிக்காட்டும் தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணன்களுக்கு குட்டு வைப்பது...

டேகு: தமிழ்சாக்கடை, நொள்ளைக்கண்ணன், சாம்பார்

Wednesday, August 27, 2008

முத்தமிழ் குழுமம் : ஸ்கிரைபாக உதவ விரும்பும் அன்பர்களின் விவரப்பட்டியல்

தோழர் மஞ்சூர் ராசா தெரிவித்துள்ளபடி

நண்பர்களே

என் நண்பர் ஒருவர் பார்வையிழந்தோர்க்கு அவர் பங்கேற்கும் தேர்வுகளில்

அவர்களுக்கான ஸ்கிரைபாக உதவ விரும்பும் அன்பர்களின் விவரப்பட்டியல் தயார்
செய்கிறார்

இப்படி உதவ முன் வருபவர்கள் எனக்கு தனி மடலில் சொல்லலாம்

சென்னையில் நடக்கும் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையிழந்தோர்க்கு உதவ
வேண்டியிருக்கும்.

தேர்வுகள் வார நாட்களில் தான் நடைபெறும்.

தேர்வு நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. பிற்பகல் 2 முதல்
மாலை 5 மணிவரை இருக்கும்

தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : nalamperuga@gmail.com


மஞ்சூர் ராசா
http://manjoorraja.blogspot.com/
http://muththamiz.blogspot.com/
குழுமம்:http://groups.google.com/group/muththamiz

Tuesday, August 26, 2008

கம்ப்யூட்டரில் இருந்து போஸ்ட் ஆபீசுக்கு தபால் போடுங்கள்



கணினி, செல்போன்களின் பரந்த பயன்பாட்டுக்கு பிறகு, தபால்காரர் கொண்டுவரும் கடித்ததை யாரும் எதிர்பார்ப்பதில்லை இப்போது...

(லவ் லெட்டருக்காக போஸ்ட் மேன் வழிமேல் தம் அடித்து பார்த்திருந்த நபராக இந்த பதிவை எழுதவில்லை செந்தழல் ரவி)

கிராமங்களில் கூட பரவலாக அலைபேசி...

சொல்லவேண்டிய செய்தியை குறுஞ்செய்தியாக அனுப்பிவிடக்கூடிய அறிவு தமிழனுக்கு பரந்து காணப்படுகிறது...

ஆனால் இன்னும் போன், இண்டர்நெட் எட்டிப்பார்க்காத பல கிராமங்கள் இருக்கத்தான் செய்கின்றன...

ஆனால் தபால் துறை அவர்களை இன்றும் கைவிடாமல் இருக்கிறது...ஒரு நபர் தபால் அலுவலகம், தந்தி அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் மேல் இந்தியாவில்...!!

இருந்தும் தபால் துறை ஒன்றும் நிலைப்பது போல் தோன்றவில்லை...

டெக்னாலஜி அழித்த பல விடயங்களில் தபால் தந்தியும் ஒன்று...

சமீபத்தில் அ.ராசா (தகவல் தொடர்புக்கான மத்திய அமைச்சர்), தபால் துறை வங்கித்துறையிலும் / மியூச்சுவல் பண்ட் துறையிலும் முழுவீச்சில் செயல்படும் என்று சொல்லியிருக்கிறார்...

இங்கே நான் சொல்ல வந்த விடயம் இது தான்...

உங்கள் கிராமத்தில் அலைபேசி வசதி இல்லாத நன்பருக்கு (அல்லது உங்களுக்கு எண் தெரியாமல் இருக்கலாம் :) நீங்கள் பணியாற்றும் இடத்திலிருந்து கடிதம் அல்லது வாழ்த்தை தபால் காரர் மூலம் கொண்டு போய் சேர்க்கும் வசதியை இ-போஸ்ட் என்ற சேவை மூலம் இந்திய தபால் துறை அளிக்கிறது...

எத்தனை பேர் இதனை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை, இதோ சுட்டி..

http://indiapost.nic.in/login/login.jsp?menuId=NONE

இந்த வசதி மூலம் நீங்கள் எழுதும் மின்னஞ்சலை, A4 காகிதத்தில் ப்ரிண்ட் எடுத்து, நீங்கள் சொல்லும் முகவரிக்கு, சாதாரண தபால் ஆக அனுப்பி விடுகிறார்கள்..

செலவு : ஒரு பக்கத்துக்கு 10 ரூபாய்.

ஒரே நேரத்தில் எத்தனை பக்கங்கள் வேண்டுமானானும் எழுதலாம்...(ஒரே முகவரிக்கு - ஆனால் பக்கத்துக்கு 10 ரூ என்று நினைக்கிறேன்).

நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இது தான்...இந்த இணைய தளத்தில் சென்று உங்கள் பெயர் / கடவுச்சொல் உருவாக்கவேண்டும்...

நீங்கள் வசிக்கும் நகரத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் முன்கூட்டியே பணம் செலுத்தி (Pre-Paid) ஒரு ரகசிய எண்ணை பெற்றுக்கொள்ளவேண்டும்..

அந்த ரகசிய எண்ணை உள்ளீடு செய்து உங்கள் கடித்ததை அனுப்பவேண்டியது தான்...

நீங்கள் கடிதம் அனுப்பிய பிறகு உங்களது அட்டையில் இருந்து பணத்தை கழித்துக்கொள்வார்கள்...!!!!

பஞ்ச் பாய்ண்ட்:

இந்திய தபால் துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் நலனுக்காவது,

மாபெரும் பொதுத்துறை நிறுவனமான இந்திய தபால் துறை, தன்னை முழு வீச்சில் நவீனப்படுத்திக்கொள்ளவேண்டும்...



மத்திய அமைச்சர் ராசாவின் உரையை சமீபத்தில் இணையத்தில் படித்தேன், அற்புதமான வாசிப்பாளர், ஆழ்ந்த சிந்தனையாளர் என்று தெரிந்தது...இந்த இளம் வயதில் இவ்வளவு வாசிப்பனுபவமா என்று ஆச்சர்யப்பட்டேன்...

ரெட் அலர்ட்:

இந்திய தபால் துறையின் தலைவராக இருக்கும் ராசா அவர்கள், உடனடியாக தபால் துறை அழிந்துவிடாமல் காக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும்...!!!

வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?

வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரிந்த அளவில்:

1. ஓனர்கள் கேட்கும் அதிகப்படியான அட்வான்ஸ்
2. தகவல் தொழில்நுட்பத்துறையினரை மையமாக வைத்து கேட்கும் அதிகப்படியான வாடகை
3. ஒரு வருடம் வாடகைக்கு இருந்துவிட்டோம் என்றால், எங்க மாமா குடிவருகிறார், மச்சினிச்சி கல்யாணம் ஆகி குடிவருகிறான் என்று உடான்ஸ் விட்டு, வேறு ஒரு குடும்பத்தை அதிக வாடகைக்கு அமரவைப்பது
4. ஹவுஸ் ஓனர் என்றால் அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு கண்டிஷன் போடுவது...இருந்தால் இரு, இல்லைன்னா போ என்பது போல எடுத்தெறிந்து பேசுவது
5. வாடகைக்கு விட்டுவிட்டு, குழாய் ரிப்பேரில் இருந்து எலக்ட்ரிசிட்டி ப்ராப்ளம் எதுவானாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது...
6. வீட்டை காலிசெய்யும்போது, பெயிண்ட் செலவு என்று ஒரு ஐந்தாயிரம் / பத்தாயிரம் பணத்தை அட்வான்ஸில் இருந்து பிடித்தம் செய்துகொள்வது..
7. வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிகள் வந்தால் ரெட் ஐ வைத்து பார்த்து, தண்ணீர் செலவாகிறது, வெண்ணீர் செலவாகிறது என்று லொள்ளு பேசுவது.

மேலும் பல பிரச்சினைகள் பதிவுலக நன்பர்கள் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்...

பல்வேறு தொழில்களை கட்டுப்படுத்தும் / முறைப்படுத்து அரசு, இந்த ஹவுஸ் ஓனர்களையும் ஒரு குட்டு வைத்து கட்டுப்படுத்தினால் என்ன ?

வீட்டு வாடகைகள் வானளாவ உயர்ந்ததற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரும் ஒரு காரணம், அதற்கான இந்த துறையில் இருக்கும் நான் வேதனைப்படுகிறேன்...

தி.நகர் ஏரியாவில் இருக்கும் அரசு ஊழியர் தி.நகர் பகுதியில் வாழவே முடியாத அளவுக்கு வாடகைகள் உள்ளன, அவர் செங்கல்பட்டு போன்ற ஏரியாவிலிருந்து இரண்டு மணிநேரம் பயணம் செய்து வரவேண்டியுள்ளது, அவர்கள் சந்திக்கும் தொல்லைகள் சொல்லி மாளாது, குறிப்பாக பெண் ஊழியர்கள், அரசு / மற்றும் தனியார் துறையில் (தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத) உள்ளவர்கள்...!!!

அடையாறு ஏரியாவா, வீட்டு வாடகை ஆறு ஆயிரத்தை தாண்டக்கூடாது, அட்வான்ஸ் இருபதாயிரத்தை தாண்டக்கூடாது...அம்பத்தூர் ஏரியாவுக்கு இவ்வளவு தான் வாடகை...

அதிகப்படியாக கேட்கும் ஹவுஸ் ஓனர் மீது கிரிமினல் வழக்கு பதியலாம் என்பது போன்ற கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்...

மீறி தவறு செய்யும் ஹவுஸ் ஓனர்கள் வீட்டை பிடுங்கி, அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக கொடுக்கவேண்டும்...

தகவல் தொழில்நுட்பத்துறையினர் வாடகை தர தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக சாதாரன மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் இந்த ஹவுஸ் ஓனர்களுக்கு இது போன்ற ட்ரீட்மெண்ட் தான் பலன் தரும்...

இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரை குற்றம் சாட்டி பலன் இல்லை, அவர்கள் நான்கு ஐந்து பேராக தங்கி அலுவலகம் செல்வதற்கு, தலைக்கு இரண்டாயிரம் என்று போட்டு பத்தாயிரம் கூட வாடகையாக கொடுத்துவிடுகிறார்கள்...

அதிகப்படியான வேலை மற்றும் நேரம் காலம் இல்லாத துறையான தகவல் தொழில்நுட்பத்துறையினர், அலுவலகத்துக்கு அருகில் வீடு இருந்தால் நல்லது என்று அதிகப்படியான வாடகை கூட கொடுத்துவிடுகிறார்கள்..

ஆனால் பாதிக்கப்படுவது, உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தான்...

சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு வாடகை என்று சரியாக தெரியவில்லை, நன்பர்கள் பின்னூட்டத்தில் தரவும்...

அரசின் காதில் இந்த விஷயத்தை கொண்டுசெல்ல வலைப்பதியும் பத்திரிக்கையாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்..

நல்ல Resume தயாரிப்பது எப்படி?

படிக்கறது எதுக்கு.. அறிவை வளர்த்துக்கன்னு சிலபேரு சொல்வாங்க. அது உண்மைதான். அதேநேரம் படிப்புக்கு செலவழிக்கிற காசையும் திரும்ப எடுக்கனுமே..

ஒரு இண்டர்வியூவுக்கு போறதுங்கறது, நம்மளை நாமளே மார்க்கெட்டிங் பண்றதுமாதிரி. ஒருத்தர் நம்மக்கிட்ட ஒரு எலெக்ட்ரானிக் பொருளை விற்குகுறாரன்னு வைங்க. பார்த்த உடனே வாங்கிடுவோமா..? எவ்ளோ நாள் உழைக்கும், நல்லா ஓடுமா, வாரெண்டி இருக்கா, அப்படீன்னு எத்தனை கேள்வி கேப்போம் ? அது மாதிரிதான் நம்மளை வேலைக்கு எடுக்கற கம்பெனியும. நாம நல்லா வேலை செய்வோமா, கம்பெனிக்கு நம்பிக்கையா இருப்போமா அப்படின்னு பல மேட்டர்களையும் பார்த்துதான் நமக்கு வேலையும், சம்பளமும் தராங்க.



பொருளை கடைக்காரர் நம்மக்கிட்ட விற்பதற்கு முதல் படி, ஷோரூம் நல்லாருக்கனும், நல்ல ஏ.சி. இருக்கனும், கடை பார்க்க நல்ல லுக்கா இருக்கனும். அப்பதானே கடைக்குள்ள நாம போவோம். அதுமாதிரி, நம்ம ரெஸ்யூம் சும்மா 'நச்'னு இருந்தாத்தான், இந்த கேண்டிடேட்டை கூப்புடலாமான்னு யோசிப்பாங்க. மொக்கையா ஒரு ரெஸ்யூமை அனுப்பிட்டு, 'என்னடா இந்த கம்பெனிக்காரன் இன்னும் கூப்புடலையே'னுன்னு தேவுடு காக்குறதுல அர்த்தமில்லை.

மேட்டருக்கு வருவோம். எல்லா ப்ரெஷ்ஷர் ரெஸ்யூமும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியம் இல்ல. ஒரு நல்ல 'சரக்கான' ரெஸ்யூம, அது பிரெஷ்ஷர் ரெஸ்யூமா இருந்தாலும் சரி, எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தாலும் சரி, கில்லியா இருக்கும். இண்டர்வியூவுக்கு முன்னாலயே, நம்மளோட நேர்த்தியான ரெஸ்யூமால இம்ரஸ் அள்ளிடலாம்.

ஒரு நல்ல ரெஸ்யூம்ல இருக்க வேண்டிய மேட்டர்ஸ்.

1. உருப்புடியான "Objective"
2. நல்ல டேபிள்ல அழகா அலைன் செய்யப்பட்ட "Qualification" டீட்டெயில்ஸ்
3. நேரடியா என்ன தெரியும், என்ன தெரியாதுன்னு சொல்ற "Skills and Experiences"
4. ஏற்கெனவே வேலை பார்த்திருந்தா அந்த "Work History"
5. ஏதாவது நல்ல "Trainings" , அப்புறம் "Education Extra" மேட்டர்ஸ்
6. படிப்ப விட வேற எதுவும் தெரிஞ்சிருந்தா "Extra Carricular Activities", "Interesting Hobbies"
7. பர்ஸனல் டீட்டெயில்ஸ் - டாடி மம்மி பேரு, மெரிட்டல் ஸ்டேட்டஸ், பர்த் டே, பாஸ்போர்ட், போன் நம்பர்ஸ், அட்ரஸ்

அப்புறம் ரெஸ்யூமை வித்யாசப்படுத்துறேன்னு ஏதாவது மொக்கையா எழுதி வைக்காம, நீட் அண்ட் க்ளீனா இருக்கமாதிரி பார்த்துக்கோங்க.

பாஸ்போட் சைஸ் கலர் போட்டோவை ஸ்கேன் பண்ணி ரெஸ்யூமுக்கு மேலே டாப்புல ஒரு கட்டம் கட்டி வச்சீங்கன்னா நல்லா இருக்கும். ரெஸ்யூம்ல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம‌ பார்த்துக்கோங்க.

ரெஸ்யூமை பார்மேட் பண்ணும்போது இடம் விடவேண்டிய இடங்களில் ஸ்பேஸ் பாரை அழுத்தி அழுத்தி இடம் விட்டீங்கன்னா, திரும்ப ரெஸ்யூமை வேற ரெஸல்யூஷன் இருக்க கம்ப்யூட்டர்ல ஓப்பன் பண்ணி பார்த்தா ரொம்ப மொக்கையா இருக்கும். அதனால டேப் (TAB) கீயை யூஸ் பண்ணுங்க. எஜுக்கேஷனல் குவாலிபிகேஷனுக்கும், ஸ்கில்ஸுக்கும் எம்.எஸ். வேர்ட்ல இருக்க டேபிள் யூஸ் பண்ணுங்க, நல்லா இருக்கும். ஒரு சில கம்பெனிகள் எல்லா செமஸ்டர் மார்க்கும் கேப்பாங்க. அதனால செமஸ்டர் வைஸ் மார்க் டிஸ்ப்ளே பண்ணுங்க.

ஏரியல், டைம்ஸ் நீயூ ரோமன், வெர்டனா மாதிரி காமன் பாண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. உங்க ரெஸ்யூமுக்கு ஒரு பிளஸண்ட் லுக் கிடைக்கும். அதிகபட்சமா ரெண்டு பக்கம் இருந்தா போதும். அதிக பக்கம் இருக்க ரெஸ்யூமை ரிவ்யூ பண்றவங்களுக்கு / ஹெச்.ஆர் டீமுக்கு சலிப்பை வரவெச்சுரும். ஒவ்வொரு பக்கத்துலயும் பேஜ் நெம்பர் வர்ரமாதிரி பார்த்துக்கோங்க.

'ரெபரன்ஸ்' அப்படீன்னு கடைசியில ஒரு Section போட்டு, அதுல காலேஜ் ஹெச்.ஓ.டி. பேரை போடுறது, அமெரிக்காவுல இருக்க மாமா பையன் பேரை போடுறது எல்லாம் அவுட் ஆப் பேஷன். அதை எல்லாம் இப்ப போட்டு ரெஸ்யூமை கலீஜ் பண்ணாதீங்க. அப்புறம் கடைசியா கவரிங் லெட்டர் அப்படீன்ற காண்ஸெப்ட் இப்ப இல்லாம போயிருச்சு. அதனால அதெல்லாம் வேலை மெனக்கட்டு டைப்பிக்கிட்டு இருக்காதீங்க.

Your Resume is a Visiting Card for your Job Search !

சும்மா 'நச்' னு ஒரு ரெஸ்யூமை போட்டு உங்களோட கேரீயரை 'கில்லியா' ஆரம்பிங்க.

வாழ்த்துக்கள்!

மற்ற விஷயங்களையும் படிக்க இங்கே அமுக்கி யூத்புல் விகடன் செல்லவும்...

Saturday, August 23, 2008

பெங்களூரில் அதிஷா அலறல் !!!

பெங்களூரில் ஸ்கேரி ஹவுஸ் சென்ற அதிஷாவை காத்து கருப்பு அடித்துவிட்டதாக தீவிர வதந்திகள்...!!!



அறையில் இழுத்து போர்த்திக்கொண்டும், பயத்தை போக்க ரெண்டு ரவுண்டு உள்ளே தள்ளிவிட்டும் குப்புற படுத்துவிட்டார் என்றும் பேசப்படுகிறது...!!!

எனக்கு ஒன்றும் தெரியாது, அதிஷாவை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்...!!!

Thursday, August 21, 2008

மறந்துவிடாதீர்கள் + சர்ப்ரைஸ் : பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு !!!

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...

சொந்த செலவில் சூனியம் என்ற வார்த்தையை வலையுலகிற்கு அறிமுகம் செய்த தோழர் வரவணையான் செந்தில் திண்டுக்கல்லில் இருந்து வந்து இதில் கலந்துகொள்கிறார்..

பிரபல வலைப்பதிவர் லக்கிலூக் இதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து வருகிறார்...(டமாரு கொமாரை அழைத்து வருகிறாறா என்று தெரியவில்லை)

அடுத்த சர்ப்ரைஸ் நாளைக்கு !!!

Wednesday, August 20, 2008

ஏர்டெல் சூப்பர் சிங்கர் : பாப்பாத்திகளின் ராஜ்ஜியம் !!!



ஏர்டெல் சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சியை விஜய் டீவியில் மாமிகள் ஜட்சுகளாக உட்கார்ந்து செய்கிறார்கள்...!!!

மூன்று மூன்று பேராக பாடவைத்து அவர்களை செலக்ட் / ரிஜக்ட் செய்கிறார்கள் இந்த மாமிகள்...

அதில் ஸங்கதி ஸரியில்லை, எட்ஜுல நன்னா விழலை போன்ற சாமானியர்களுக்க்கு புரியாத கமெண்டுகளை பாஸ் செய்து குறிப்பாக "சட்டைக்குள்" இருக்கும் ஒரு விடயத்தை மட்டும் வைத்து செலக்ட் செய்வது போல் எனக்கு தோன்றுகிறது....

நல்ல குரல் வளத்துக்கான தேர்வு தானே ? இதற்கு கருநாடக இசை நுணுக்கங்களை வைத்து பாடுபவர்களை எடைபோடுதல் எப்படி முறையாகும் ?

எல்லா சாமானியர்களுக் கருனாடக சங்கீதத்தை முறையாக பயின்று,சங்கதி, தாளம், ராகம் என்றெல்லாம் மனனம் செய்துகொள்கிறார்களா என்ன ?

பாடவேண்டும், தன் குரல் வளத்தை வைத்து சாதிக்கவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களை இது போன்ற பார்ப்பணீயச்சிந்தனையோடு ஒழித்துக்கட்டும் இந்த பாப்பாத்திகள் தமிழிசை பாடும் இளைஞர்களுக்கு நீதி சொல்ல தகுதியில்லாதவர்கள்...

சரியாகப் பாடாதவர்கள் கூட தங்கள் பெயர்களில் கூட உள்ள பார்ப்பணீய அடையாளங்கள் மூலமாக அடுத்த கட்டத்துக்கு தேர்வாவது கேவலத்திலும் கேவலம்...

ஒரு வேளை நான் தான் இசையறிவற்ற ஞானசூனியமா ? ஒன்றும் விளங்கவில்லை சாமீ...!! யாராவது விளக்குங்களேன் !!!

அனானி நன்பருக்காக - உலகளந்தபெருமாள் photo from திருக்கோவிலூர்

உலகளந்த பெருமாள் படம் போடுமாறு கேட்ட அனானி நன்பர் மெயில் ஐ.டி எதுவும் கொடுக்கவில்லை...உங்கள் விருப்பத்துக்காக "கொளுகையை" கொஞ்சம் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டு...!! இதோ !!!



திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் படம் : படத்தை பெரிதாக்க படத்தின் மேல் க்ளிக்கவும்...

என்னுடைய பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமரா மூலம் எடுத்தபோது ஏதோ ப்ளாஷ் விழுகிறது...இருந்தாலும் அப்படியே அப்லோட் செய்கிறேன்...

மதன் அவர்கள் செய்துள்ள காமெடி !!!!

எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
அரிசிக்கு ஏன் அரிசி என்று பெயர் வந்தது?


பல சர்வதேச மொழிகளில் அரிசிக்கு ஒரே மாதிரி ஒலிக்கும் பெயர்தான். பிரெஞ்சு மொழியில் ரைஸ் (Riz), இத்தாலியில் ரைஸோ, ஜெர்மனியில் ரெய்ஸ், ரஷ்யாவில் ரைஸ் (Ris). ஆங்கிலத்தில் Rice. தமிழிலும் அதே ஒலியோடு அரிசி! எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம். அதில் - ரையி!

மதன் சொல்கிறார், எல்லாவற்றும் மூலம் "செத்த" மொழியான சம்ஸ்க்ருதம் என்று !!! இவருக்கு எப்படி தெரிந்தது எல்லாவற்றுக்கும் மூலம் சம்ஸ்கிருதம் என்று ? கால இயந்திரம் உருவாக்கி பயணித்து பார்த்துவிட்டு வந்தாரா ? ஒருவேளை "இந்த உண்மையை" ஆப்ரிக்காவில் ஏதாவது பழங்குடியினர் இவருக்கு "சம்ஸ்கிருதத்திலேயே" லெட்டர் போட்டு தெரிவித்திருப்பார்களோ ?

எதால் சிரிப்பது என்று தெரியாமல் புத்தகத்தை மூடிவிட்டேன் !!!!

பெங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு அழைப்பிதழ் : செந்தழல் ரவி

அன்பான வலைப்பதிவு நன்பர்களுக்கு...

பெங்களூரில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை நடத்தலாம் என்று உள்ளேன்...சில பல பிரபல பதிவர்கள், மற்றும் சில சர்ப்ரைஸ் விசிட்டர்கள் வரவிருக்கிறார்கள்...

இடம் : டொம்ளூர் புதிய நந்தினி பேலஸ் ஹோட்டல்
நாள் : சனிக்கிழமை (23 - ஆகஸ்ட் - 2008)
நேரம் : 6:00 to 8:00 மணிக்கு
விருந்து : நார்த் இண்டியன் பபே. (ஸ்பான்ஸர் : ரவி)

என்னுடைய அலைபேசி எண் : 99025 84054. தொடர்புகொள்ளவும்...வேறு சில குட்டி சர்ப்ரைஸ்களும் உண்டு..

வரேன்...!!!

Sunday, August 17, 2008

தமிழ் பதிவர்களை நினைத்தால் உங்கள் மனதில் தோன்றுவது

சில பதிவர்களை நினைத்தால் நியாபகம் வருவது இது...

உண்மைத்தமிழன் : பழனி
அபிஅப்பா : சல்மான்கான்
குசும்பன் : பப்பி டாமி
வால்பையன் : ஆம்லேட்
லக்கிலூக் : பரங்கிமலை ஜோதி
ஓசை செல்லா : கூலிங் க்ளாஸ்
வரவணையான் செந்தில் : நாட்டுக்கெளுத்தி
வெட்டிப்பயல் : கோங்கூரா சட்னி
இராம் : கைப்புள்ள வடிவேல்
இளா : சி.ஐ.டி ஷங்கர்
கானா பிரபா : தீப்பெட்டி
தேவ் : நந்தா ராஜ்கிரண்
வெண்பூ : தாமரைப்பூ
பெயரிலி : கோணார் நோட்ஸ்
பரிசல்காரன் : டவுசர் பாண்டி
லதானந்த் அங்கிள் : மேஜர் சுந்தர்ராஜன்.
ஆடுமாடு : ஆடுமாடு
ஜ்யோராம் சுந்தர் : கோலங்கள் தொல்காப்பியன்
தூயா : கேஸ் ஸ்டவ்
ஜி : ஊமை விழிகள்
சின்னக்குட்டி : திருட்டு வி.சி.டி
கூடுதுறை : ராணிமுத்து காலெண்டர்
டாக்டர் புருனோ : எனர்ஜி ட்ரீட்மெண்ட்

உங்களுக்கு என்ன நியாபகம் வருதுன்னு சொல்லிட்டு போங்க...இங்க ப்ளஸ் மைனஸ்னு மார்க் இருக்கு, அந்த கையையும் ஒரு அமுக்கு அமுக்குங்க பார்ப்போம்...

Saturday, August 16, 2008

பெ(ண்)ங்களூர்: "ஜில்ஜில்" லால்பாக் !!!!

பெங்களூர் 4 ஆவது தேசிய மலர் கண்காட்சியின் கடைதி தேதிக்கு முந்தைய தேதியில் நானும் தங்கமணியும் அங்கே ஆஜர்...டபுள் ரோட் பக்கம் போய் ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டதால் ரிச்மண்ட் சர்க்கிளையும் பாலத்தையும் நினைவு படுத்த முயற்சி செய்துகொண்டிந்தேன்...

சமீபத்தில் தேசிகன் பதிவில் பாலத்தில் கூட ட்ராபிக் கான்ஸ்டபிள் மேட்டர், மற்றும் கொஞ்ச நாளைக்கு முன் ரசிகவ் ஞானியார் பதிவில் லால்பாக்கில் அவர் கண்ட "மேட்டர்கள்" எல்லாம் நியாபகம் வந்து தொலைத்தாலும் வழி அவ்வளவாக நினைவில்லை...

காண்ட்டீரவா ஸ்டேடியம் சுற்றி ம்ல்லைய்யா ஹாஸ்பிட்டல் ரோட்டில் போனால் ரிச்மண்ட் சர்க்கிள் வந்ததாக நியாபகம்...பெட்ரோல் வேறு ப்ளிங்கிக்கொண்டிருந்தது...அந்த வழியில் ஒரு பெட்ரோல் பங்க் இருந்ததும் நியாபகம்...

சி.எம்.ஹெச் ரோடு வழியாக அப்படியே எம்.ஜி ரோடு பிடித்தேன்...மெட்ரோ ப்ராஜக்ட்டுக்காக சி.எம்.ஹெச் ரோட்டில் பாதி மரங்கள் காலி...எம்.ஜி ரோட்டில் மெட்ரோவுக்காக ரோட்டை கால்பாகம் ஆக சுருக்கிவிட்டிருந்தார்கள்...

சிவாஜி நகர் சிக்னல் திரும்பும் முன்னால் உள்ள பெட்ரோல் பங்கிலேயே நுழைந்தேன்...500 ரூபாய்க்கு போட்டுவிட்டு பார்த்தபோதும் மாணீட்டர் 300 ரூபாய்க்கு போட்டமாதிரியே காட்டியது...பெட்ரோல் பங்க் காரர்கள் எப்போது நேர்மையை பழகுவார்களோ தெரியவில்லை...

நேராக அனில் கும்ளே சர்க்கிள் போய் அதில் ஸ்ட்ரெயிட்டாக போய் விட்டல் மல்லைய்யா ரோட்டில் திரும்பியபோது என்னடா எங்கேயோ போறமாதிரி இருக்கே என்று கொஞ்சம் யோசித்தேன்...

அப்படியே அதில் ரைட் திரும்பி ஒரு கெஸ் மாதிரி நேராக போனபோது ரிச்மண்ட் பாலம் கண்ணுக்கு சிக்கியது...அதில் நேராக ஒரு அழுத்து அழுத்தி, டபுள் ரோட்டை பிடித்து அதில் ஒரு ரைட்...லால்பாக் கேட் சிக்கியது...ஆனால் அதில் லெப்ட் எடுக்காமல் ரைட் எடுத்தேன்...அப்படியே லால்பாக் சுற்றி வெஸ்ட் கேட் பிடித்து அதிலும் ஸ்ட்ரெயிட்...அப்புறம் ஒரு யூ அடித்து வெஸ்ட் கேட்டுக்கு முன்னால் உள்ள ஏதோ ஒரு சந்தில் பார்க் செய்தபோது மணி பதினொன்று...



முப்பது ரூபாய் டிக்கெட்...அறுபது கொடுத்து ரெண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போகும்போது, மெட்டர் டிடெக்டர் வைத்து சோதனை செய்து, வெடிகுண்டு சோதனை கேட் வழியாக அனுப்புகிறார்கள்...வாழ்க புஸ்போன குண்டுகள்...



ஆரம்பத்திலேயே உள்ள பேல்பூரி ஸ்டாலில் பேல்பூரி ஒன்றை தங்கமணி வாங்க, நான் வாங்கியது மாங்காய்த்துண்டு...ஆசிப் மீரான் மற்றும் மோகன் தாஸ் உடன் மாங்காய் சாப்பிட்டபோது நியாபகம் வந்து தொலைத்தது...அப்போது எங்களுக்கெதிராக வாலிபால் விளையாடிய ஜீன்ஸ் அனிந்த அழகுப்பெண்களும்...(அதாவது நாங்க உக்காந்திருந்த இடத்துக்கு எதிரில் ஹி ஹி)



க்ளாக் ஹவுஸ் வரை நடக்கவே 15 நிமிடம் ஆனது...மொத்தம் 250 ஏக்கருக்கு மேலே பெங்களூரின் இதயப்பகுதியில் ஒரு பார்க்...அது தான் இந்த லால் பாக்...உள்ளேயே காடு மலை எல்லாம் இருக்கு...இண்ட்டீரியர் கர்நாடகாவில் இருந்து பள்ளிகள் கல்லூரிகள் மொத்தமும் கிளம்பி வந்துவிட்டார்களோ என்கிறது போல எங்கெங்கு காணிணும் இளைஞர்கள் இளம் பெண்கள் கூட்டம்...



இவ்வளவு கூட்டம் இருந்தாலும் காதலர்கள் அவர்கள் வேலைகளை சரியாக பார்த்துக்கொண்டு - ஒரு பெஞ்சையும் மிச்சம் வைக்காமல் கருமமே(!!) கண்ணாக இருக்கிறார்கள் :))



மொத்தம் எழுநூறு வகையான பூக்களாம்...சுற்றிப்பார்ப்பதற்குள் தாவு தீர்ந்தது...நூறுக்கும் மேற்பட்ட நிறங்களில் வைத்திருந்த ரோஜாத்தோட்டம் - எக்ஸலண்ட்...

பூக்களில் வீணை, கிட்டார், ஹார்ட்டீன் என க்ளாஸ் ஹவுஸில் கலக்கியிருந்தார்கள்...

விதைகள், தேன் என கடை விரித்தும் ஒரு குரூப்...கொஞ்சம் பூ விதைகளும், சில காய் கணி விதைகள், தங்கமணி உத்தரவின் பேரில் மஸ்க் மிலன் விதைகளும் ( உங்க கழனியில போட்டு பழம் எடுத்துட்டு வரச்சொல்லுங்க), மேலும் துலிப், ஆர்க்கிட் விதைகள் - தமிழகத்தில் நர்சரி வைத்துள்ள வெளிநாட்டு நன்பர்களுக்காகவும் வாங்கினேன்...

கோவை சென்றபோது மூலிகைமணி.அய்யா அவர்கள் கொடுத்த சர்க்கரை வியாதி செடிக்கான தொட்டி வீடு மாற்றும் போது உடைந்துவிட்டது...ஒரு டெம்ப்பரவரி ஸ்டோரேஜில் உள்ளது...அதற்காக ஒரு தொட்டியும் வாங்கினேன்...

சர்க்கரை வியாதிக்கான அந்த செடியில் இருந்து தினம் ஒரு இலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குறைகிறது என்று கொடுத்தார்...இப்போது அதில் இருப்பது ஒரே இலை...அதையும் தின்றுவிட்டால் டோட்டல் மிஷன் டேமேஜ் ஆகிவிடும் என்பதால் கஷ்டப்பட்டு ஆறுமாதமாக அந்த செடியை வளர்த்து வருகிறேன்...

மயில் ரெக்கை கூட குட்டி போட்டுவிடும் போலிருக்கிறது, அது வளர்ந்தபாட்டைக்காணோம்... பெரிய தொட்டியில் வைத்து - இனிமேலாவது வளருகிறதா பார்ப்போம்....

மேலும் ஒரு பேல் பூரி,அண்ணாசிப்பழம் என்று இன்னும் ரெண்டு ரவுண்டு அடித்தோம்...

சுட்ட கார்ண் வாங்குகிற வெள்ளை உடை அணிந்த கன்னிகாஸ்திரிகள், தலைக்கு மேல் பறக்கிற சோப்பு முட்டையை எகிறி பிடித்து உடைக்கிற இளம் வயது ட்ராபிக் கான்ஸ்டபிள், இரண்டு வாலிபர்களுக்கு மத்தியில் கலங்கிய கண்ணோடு அமர்ந்திருக்கும் இளம்பெண், குடு குடுவென ஓடி வந்து என் மனைவி கையைப்பிடித்த சின்னக்குழந்தை, ஏதோ ஒரு துண்டு சீட்டை கொடுத்து தியானத்துக்கு வருமாறு கூப்பிட்ட அதிக மேக்கப் போட்டு இளமையாக தெரிந்த கிழவி என்று மிக்ஸ் வியூவ்ஸ்...

அப்படியே டொம்ளூர் நந்தினியில் மதியம் மூன்று மணிக்கு ரெண்டு மினிமீல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு, வீட்டுக்கு வந்து தூக்கம்...மூன்று வீடு தள்ளியிருக்கும் ட்ராவிட் வீட்டில் வெளியே நிற்பது ட்ராவிடா அவுங்க அண்ணனா ? டெஸ்ட் மேச் ஆடப்போவலியா இவரு ? சரி நெட்டை திறந்து பார்ப்போம் என்று நினைத்தபோது - இன்றைய மேட்டர்களை அப்படியே பதிவாக்கிவிடலாம் என்று தோன்றியது...

பி.கு 1 : என்னுடைய காமிரா பாட்டரி இன்றி சதி செய்தது இன்று...அதனால் நெட்டில் சுட்ட சில படங்கள்...

பி.கு 2 : நாளை (ஞாயிறு) மலர் கண்காட்சியின் கடைசிநாள்...

Friday, August 15, 2008

லக்கிலூக் மற்றும் தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் திறந்த கடிதம்

கடிதவாரத்தின் கடைசி ஒர்க்கிங் டேயில் அட்லீஸ் ஒரு கடிதமாவது, திறந்த கடிதமோ, மூடிய கடிதமோ ஒன்று எழுதிவிடுவது பிலாக் உலகத்தில் செய்யவேண்டியது....இது காலத்தின் கட்டாயம்...

நேரமின்மை காரணமாக கடித்ததை மட்டும் போடுகிறேன் (திறந்து), நீங்களே படித்துக்கொள்ளுங்கள்...!!!


ஏந்த இந்த கடிதத்துல லக்கிலூக் பேரா ? லக்கிலூக் பேரப்போட்டா 200 ஹிட்டு அதிகமா வருதாமே ? அதை டெஸ்டிங் பண்ணத்தான்...

Monday, August 11, 2008

ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகள் : சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி...!!!

கிண்டலோ நக்கலோ அல்ல...உண்மையில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளால் சிறு வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

பெங்களூர் இந்திரா நகர் வியாபாரி ஒருவர் காய்கறிகளை மொத்தமாக ரிலையன்ஸ் பிரஷ் கடையில் வாங்கி குவிப்பதை கண்டேன்...

என்னடா சோதனை..இது மதுரைக்கு வந்த சோதனை என்று அவரிடம் விசாரித்தபோது !!!!

பெங்களூர் சிட்டி மார்க்கெட் ( காய்கனி மொத்த வியாபார சந்தை - நம்ம கோயம்பேடு மாதிரி) விலையை விட, ரிலையன்ஸ் பிரஷ் கடைகளில் குறைவாக உள்ளதாலும், சிட்டி மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிவர வண்டி சத்தம் (வண்டி வாடகை) தனியாக ஒரு செலவு என்பதாலும், அருகருகே உள்ள ரிலையன்ஸ் பிரஷ் கடைகளிலேயே இப்போது வியாபாரிகள் வாங்கி விடுவதாக கூறுகிறார்...

அவர் சொன்ன அட்டவணைப்படி விலை நிலவரம்: (பெங்களூரில்)

முருங்கை சிட்டி மார்க்கெட் : ரூ 2:00 ரிலையன்ஸ் பிரஷ் ரூ 1:00
தக்காளி சிட்டி மார்க்கெட் : ரூ 5:00 ரிலையன்ஸ் பிரஷ் : ரூ 3:00
முட்டைக்கோஸ் சிட்டி மார்க்கெட் ரூ 6:00 ரிலையன்ஸ் பிரஷ்: 3:50

இதுபோல அனைத்து காய்கனிகளும் குறைவாகவே இருப்பதால் ரிலையன்ஸ் பிரஷ்ஷில் வாங்கி, அதன் பிறகு தள்ளு வண்டியில் வைத்து விற்பதை பெரும்பாலானவர்கள் பின்பற்றுவதாக குறிப்பிட்டார்.

இங்கே அப்பார்ட்மெண்ட்கள் அருகாமையில் உள்ள கடைகளும் ரிலையன்ஸ் பிரஷ், மோர், சுபிக்ஷா என்று அருகில் உள்ள மால்களில் வாங்கி விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார். (இங்கே அப்பார்ட்மெண்ட்களில் அருகாமையில் அந்த குறிப்பிட்ட அப்பார்ட்மெண்ட் மக்களை குறிவைத்து கடைகள் / ப்ரொவிஷன் ஸ்டோர்ஸ் உண்டு )

என்னத்த சொல்ல !!! ரிலையன்ஸ் எதிர்ப்பு போராட்டத்தை நடத்தாமலே இருந்திருக்கலாம் தோழர்கள்...!!!

உருகுவே : தமிழர்கள் யாராவது இருக்கீங்களா ?

வலைப்பதிவு நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...

என்னுடைய நன்பர் தற்போது உருகுவேயில் தங்கியுள்ளார்...

அவருக்கு சில உதவிகள் தேவைப்படுகின்றன...

வலைப்பதிவு வாசிக்கும் நன்பர்கள் பணி நிமித்தமாக உருகுவேயில் தங்கியிருப்பவர்கள், அல்லது உருகுவே வாழ் தமிழர்கள் இருப்பீர்களானால் என்னை உடனே தொடர்புகொள்ளவும்...

மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

நன்றிகள்...!!!

Friday, August 08, 2008

எச்சரிக்கை : ரஜினியை நக்கல் செய்யும் போக்கை கைவிடுங்கள்

சமீப காலமாக ரஜினி அவர்களை குறிவைத்து எழும்பும் குரல்களில் இருக்கும் ஒருபக்க சார்பு அவரது ரசிகர்களாகிய எங்களை ஒரு புறம் எரிச்சலடைய வைத்தாலும், இவற்றை எழுப்புபவர்களின் மையம் எங்களை சற்று சந்தேகக்கண்ணோடு தான் அவர்களை பார்க்கவைக்கிறது...

தமிழ் ரசிகர்களின் கடிதம் என்று பொதுமைப்படுத்தி எழுதிய விகடனாகட்டும், கமல் ரசிகராகிய மருதநாயகம், வெற்று பரபரப்புக்காக எதையாவது எழுதும் வெட்டி கோஷ்டி ஆகியவர்கள் எழுதிய வலைப்பதிவுகளாகட்டும், எங்களுக்கு ஒன்றை மட்டும் புரியவைத்தது...



ரொம்ப எரியாதீங்க மக்கள்ஸ் !!!! உங்களுக்கு பிடிக்கும்னா நீங்க ஆழ்வார்பேட்டை பக்கம் பார்த்து கும்பிடுங்க...நாங்க போயஸ் கார்டன் பக்கமோ, உடுப்பி கார்டன் பக்கமோ ஒதுங்கிக்கறோம்...எங்கள் அன்புக்குரிய ரஜினி ஒரு ஃபீனிக்ஸ் !!! ரோபோவா மக்களை நாங்க சந்திக்கறோம்...அதுவரை இதுபற்றி நாங்க பேசறதா இல்ல !!!!

Thursday, August 07, 2008

மைக்ரோசாப்ட் : செந்தழல் ரவி ஜெயித்த மொத்த தொகை 306 கோடி

ஜிமெயில் இன்று திறந்தவுடன் இன்ப அதிர்ச்சி...

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து மின்னஞ்சல் வந்திருந்தது...



மொத்த பரிசுத்தொகையை கணக்கிட கால்குலேட்டர் ஓப்பன் செய்தேன்...தலை சுற்றுகிறது...

என்ன செய்வதென்றே தெரியவில்லை...

பார்த்துக்கொண்டிருக்கும் ஐ.டி வேலையை விட்டுவிட்டு ஊர்ப்பக்கம் போய் செட்டில் ஆகலாமா ?

பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டல் போல ஒரு ஓட்டலை டெல்லியில் கட்டலாமா ?

ரஜினிகாந்தை வைத்து ரோபோவுக்கடுத்தது "மார்ஸ்" என்று டைட்டில் வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் டைரக்ஷனில், இளையராஜா இசையில் படம் எடுக்கலாமா ? தோட்டா தரணியை வைத்து மார்ஸ் அளவு பெரிய உருண்டை செய்து அதில் தலைவர் ஏலியன்களிடம் எல்லாம் மன்னிப்பு கேட்கிறமாதிரி சீன் வைத்து காமெடி செய்யலாமா ?

ஒரு லட்ச ரூபாய்க்கு கிங்ஸ் சிகரெட் வாங்கி பீடி பிடிப்பவர்களுக்கெல்லாம் இலவசமாக கொடுக்கலாமா ?

ஜாலிமார்க் என்ற பெயரில் காளிமார்க் சோடாவை திரும்ப கொண்டுவரலாமா ?

ரிலையன்ஸ் அதிபர் கட்டுவது போல மேல் மாடியில் புட்பால் கிரவுண்ட் வைத்து வீடு கட்டலாமா ?

முன்றாவது படிக்கும் அரசு பள்ளிக்குழந்தைகள் ஆயிரம் பேருக்கு மடிக்கணினி வாங்கிதரலாமா ?

ரெண்டு ஐ.ஏ.எஸ், மூன்று நீதிபதிகளை வாங்கிடலாமா ?

டுபாக்கோ - ட்ரினிடாட் அரூகே ஒரு குட்டித்தீவை வாங்கி தமிழ் ஈழம் என்று பெயர் வைத்து பாஸ்போர்ட் எல்லாம் அடித்து பிரபாகரனை அரசராக்கலாமா ?

பிரெயின் லாராவை சம்பளம் கொடுத்து கூட்டிவந்து இண்டோர் கேம்ஸில் ஸ்பின் பந்து போட்டு அவரை போல்டாக்கலாமா ?

கபடிக்கு க.பி.எல் என்று இந்தியா முழுக்க டோர்னமெண்ட் நடத்தலாமா ? அதுக்கு லலித் மோடியை விட்டுவிட்டு நரேந்திர மோடியை தலைவராக்கலாமா ?

துக்ளக் ஆபீஸை விலை கொடுத்து வாங்கி - பத்திரிக்கையை நிறுத்துவிட்டு அதில் மாட்டுத்தொழுவம் நடத்தி சந்திரபாபு நாயூடுவின் ஹெரிடேஜ் மாதிரி சொறிடேஜ் என்று பால் வியாபாரம் செய்யலாமா ?

பின்னூட்டம் போடுற ஒவ்வொருத்தருக்கும் ஒரு மடிக்கணினி பரிசா தரலாமா?

அய்யோ ஒன்னுமே புரியலியே, எல்லோரும் பின்னூட்டம் போட்டாவது ஹெல்ப் பண்ணுங்களேன் சாமிகளே ?

Wednesday, August 06, 2008

கொரியாவில் ஒரு லஞ்ச் டைமில்...கவுண்டமணி மெத்தட் !!!

கொரியாவில் டேபிள் மேலேயே அடுப்ப்பு இருக்கும், சிங்காரவேலா படத்துல கவுண்டமணி கேக்குற மாதிரி நாமளே பொங்கி திங்கலாம்...அந்த கூத்தை பாருங்க...



டேபிள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு...



வந்துட்டான்யா, வந்துட்டான்யா...(சிக்கன் + நூடுல்ஸ்)...கொதிக்க வைக்கனும்...அடுப்பு இருக்கா....ஆங் டேபிள் கீழ இருக்கு...



அட நம்ம அயிட்டம்...போன்லஸ் சிக்கன் + வெவிச்ச கிழங்கு...இதையும் அப்படியே டேபிள்ல்யே கொதிக்க வைச்சு கிண்டுங்கப்பா



அப்படியே நாமளே லைட்டா கொதிக்கவைச்சு...ஆங் கொதிக்குது அது கொதிக்குது, டேபிளுல கொதிக்குது...

.

முடிச்சுட்டீங்களா...நல்லாத்தான போயிக்கிட்டிருந்தது....

Monday, August 04, 2008

பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் திறக்கக்கூடாத பதிவு

ஏற்கனவே நடந்துமுடிந்த ஒரு பதிவர் சந்திப்பை (ஏமாளிகளை) நினைத்தும், இனி நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பு ஒன்றை நினைத்தும் போடப்பட்ட பதிவு...



எல்லாரும் போய் கலந்துக்கங்கடே !!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....