+18 பதிவு..!!! மற்றவர்கள் ப்ளீஸ் டோண்ட் ரீட்!!!
மேலே ஒரு போட்டோ இருக்கு பாருங்க. அதில் முகத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் தூக்கலாக பூசி இருக்காங்களே ? அது தான் 9 தாரா. பக்கத்துல குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது பெயர் பிரபு தேவா.
இவர்கள் இருவரையும் பற்றி இன்னொரு சுவாரஸ்ய செய்தி, இந்த பிகர் கேரளத்து அழகி. இந்த பயல் கோங்கூரா சட்னி. அதான் கொலுட்டீன்னு சொல்லவரேன். இவங்க ரெண்டு பேரும் குப்பை கொட்டுவதோ தமிழ் கூறும் நல்லுலக பிலிம் இண்டஸ்ட்ரி கோடம்பாக்கம்...!!!
இதில் இந்த பிகரை பற்றி இன்னொரு விஷயம். ஏற்கனவே ஒரு தாடிக்கார கேரள இயக்குனர் இந்த பிகரை பிரிச்சு மேய்ந்ததாக ஒரு கிசு கிசு படித்த வேளை கூட நடித்த கரடி நடிகரின் மகன் விரல் வித்தையாருடன் உதட்டு முத்தம் கொடுத்தபடி இருந்த ப்ரைவேட் படம் இணையத்தில் உலாவ விடப்பட்டது.
கரடியின் மகனுக்கு நயன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் காதல் முறிந்தது. காதல் முறிந்ததால் கரடி நடிகரின் மகன் விரல்வித்தையாரே அந்த கிளுகிளு படங்களை ரிலீஸ் செய்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. நான் அதை நம்பவில்லை. இவர்களின் இருவரையும் படம் எடுத்த மூன்றாம் நபர் அல்லக்கை முண்டமே அதை செய்திருக்கவேண்டும். இப்ப லிட்டில் ஸ்டார், பிறகு சூப்பர் ஸ்டார் , அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் என்று கனவில் இருக்கும் விரல் வித்தை, அந்த படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு மூளையில்லாத முண்டமா என்ன ?
இது மட்டும் இல்லாமல் விரல் வித்தை வேறொரு பிகரை லைட் மப்பில் போனில் கலாய்த்ததை ரெக்கார்டு செய்து அதை இணையத்தில் உலாவ விட்டதும் நடந்தது. விரல் வித்தையின் குரல்தான் ஊருக்கே தெரியுமே ? சரி நாம் ரொம்ப ஆப் டாப்பிக் போகிறோம். லெட்ஸ் கம்மிங் பேக் டு டான்ஸ் தாடி..
இந்த டான்ஸ் தாடி, ஒரு நல்ல டாடியா என்றால் அது கிடையாது. கூட நடித்த ரம்லத் என்ற டான்ஸரை மணந்தது நன்று. மூன்று பிள்ளைகள். கல்யாணத்துக்கு பிறகோ அல்லது மூன்று பிள்ளைகளுக்கு பிறகோ கொஞ்சம் குண்டடித்து, தமிழக தாய்மார்களின் அக்மார்க் வடிவத்தில் இருந்த ரம்லத் டான்ஸ் தாடிக்கு கொஞ்சம் போரடித்துத்தான் போனார் என்பது நிஜம்.
மூன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியோடு, இன்னும் ஜீன்ஸு பேண்டும், துள்ளல் நடையுமாக வந்த டான்ஸ் தாடியையும் மேய்க்கும் பணியை சரியாகத்தான் இந்த படத்தில் மங்களகரமாக நிற்கும் இந்த அம்மாள் செய்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.
சமீபமாக டவுனில் இருந்த தாடிக்கு, தெலுங்கு படவுலகம் கொஞ்சம் ப்ரேக் கொடுத்து, அதன் பிறகு சினிமா இயக்கம், நடன இயக்கம், இந்தி பட உலகம், பாலிவுட் டிவி உலகம் தொடர்பு, உங்களில் யார் அடுத்த அரைவேக்காடு என்பது போல தமிழ் டிவிக்களும் உசுப்பிவிட்டது. மும்பை டெல்லி என்று பறந்து பணி செய்ததில் மீண்டும் தாடிக்கு இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது...
வில்லு படத்தில் டான்ஸ் தாடி பிஸியாக இருந்த ஒரு டிசம்பர் மாசம் வியாழக்கிழமை அவருடைய மூத்த மகன் விஷால் கேன்ஸர் போன்றதொரு வியாதியால் இயற்கையையுடன் இணைந்துகொண்டார். ஆறு மாதம் கஷ்டப்பட்டுவிட்டுத்தான் தம்பி இப்படியானார். இந்த இழப்பை பற்றி நினைக்கும்போதே எனக்கு நெஞ்சம் பதறுகிறது..பெசண்ட் நகர் இடுகாட்டில் பிள்ளையை வழியனுப்பிய அந்த பெற்ற தாயின் கண்ணீர் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணரமுடிகிறது..உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...
இதே போல பட்டம் பறக்கவிடும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துபோன நடிகர் பிரகாஷ் ராஜின் நான்கு வயது மகன் சித்து, அப்புறம் வாழ்ந்த டிஸ்கோ சாந்தியின் சிஸ்டரை டைவர்ஸ் செய்துவிட்டு ஏதோ போனி வர்மாவாம், அப்படீன்னு ஒரு டான்ஸ் மாஸ்டரை கல்யாணம் செய்யப்போகும் அவர் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அதை விடுங்கப்பா !!
மறுபடி நம்ம டான்ஸ் தாடிக்கே வருவோம். விரல் வித்தை கரடி சன்னோடு டூ விட்டு வந்த 9 தாரா, கொஞ்சம் ப்ரீயாக உலாத்தியபோது (உடையிலும்) டான்ஸ் தாடியின் வில்லு படத்தில் நடித்தார்.
மேற்கானும் படம் டான்ஸ் தாடி கேரளத்து மேடத்துக்கு காட்சிகளை எக்ஸ்ப்ளெயின் செய்யும்போது.
கையை கொஞ்சம் தள்ளி வைத்து டீசண்டாக காட்சிகளை எக்ஸ்பிளெயின் செய்யும் இன்னொரு படம்.
மீடியாக்கள் அதிகம் போடும் இந்த படத்தில் இன்னொரு ஆள் நிற்பார். அது கட் செய்யப்பட்டுள்ளது. நல்லா போட்டோஷாப் செய்யறானுங்கடா...மேடத்தின் லிப்ஸ் டிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நல்லா இருக்கில்ல ?
ரிமம்பர், இந்த வில்லு படத்தில் நடிக்கும்போது தான் மகன் இறந்து டான்ஸ் தாடியின் மனது புண்பட்டது. ஆனால் அதை புகை விட்டு ஆத்துவதற்கு பதில், பிகர் வைத்து ஆற்றிவிட்டார் போலிருக்கு. அதுதான் நமது கேரளத்து அழகிக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.
நயன் தாராவுக்கு என்ன அழகில்லையா, அறிவில்லையா ? போயும் போயும் கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற இந்த டான்ஸ் தாடியின் பெயரை எதுக்கு பச்சை குத்தி காதலிக்கனும் என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால்...
முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்டப்படி தவறு என்று இந்தியன் பீனல் கோர்ட் சொல்லும்போது அதை பீனட்டுக்கு கூட மதிக்காமல் இவர்களால் சட்டப்படி திருமணம் செய்ய இயலாது. அதே சமயம், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் எங்கேயும் வெளியில் இணைந்து செல்வதற்கோ, மன, உடல் ரீதியான தொடர்பில் இருப்பதற்கோ சட்டப்படி தடை எதுவும் இல்லை.
நயன் தாரா இந்த செயலை பணம் வாங்கிகொண்டு செய்வதாகவும் இங்கே வாதம் வரவில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரின் மேல் விபச்சார கேஸ், கஞ்சா கேஸ் என்று கூட போட இயலாது. சொல்லப்போனால் டான்ஸ் தாடி அமைக்கும் இண்டர் நேஷனல் டான்ஸ் ஸ்கூலுக்கு நயன் தாரா தான் ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்வதாக சொல்லப்படுகிறது.
அதே சமயம், ஒரு குடும்பத்தில், ஒரு கணவன் மனைவிக்கிடையில் நாம் நுழைகிறோம், அவர்கள் வாழ்வை கெடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவராக இருக்கிறார் நயன். தான், தனது காதல், தனது சந்தோஷம் என்று இருப்பவரிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது தவறு.
ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் ? தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா ? சரி அதை விடுங்கள்...
டான்ஸ் தாடியின் மனைவி ரம்லத்தோ, மீடியாக்களில் தனது ஆற்றாமையை எப்படி ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறார் ? அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே ? அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை ? படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா ? அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுக்கவேண்டாமா ?
கீழே உள்ள படத்தில் சமீபத்தில் இயக்குனர் சித்திக் வீட்டு திருமணத்தில் டான்ஸ் தாடியும் டயானாவும் (அதுதான் நம்ம அழகியின் சொந்த பெயர்) எப்படி போஸு கொடுக்கிறார்கள் பாருங்கள் ?
அதே சமயம், சமீபமாக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் (ஏகப்பட்ட பாராட்டு விழா நடக்குதுங்க, எதுன்னு கேக்காதீங்க) டயானாவும் தாடியும் இணைந்து நடனம் ஆடி தமிழக முதல்வரை குஷிப்படுத்தினார்கள். ஆக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை (அதான் முதல்வரே ஒன்றும் சொல்லவில்லை). அதே சமயம், அரசாங்கத்துக்கு சொப்பன சுந்தரியின் காரை யார் வைத்துள்ளார்கள், அவளை யார் ஓட்டுகிறார்கள் என்பதை பார்ப்பதா வேலை ?
ஆக, சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஏன் என்றால் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடைபெற்றுவிடவில்லை. (i mean தாடியின் இரண்டாவது திருமணம்). அல்லது திரை மறைவில் நடந்திருக்கலாம். மேற்கானும் படத்தில் உற்று கவனித்தால் டயானாவின் கையில் ஒரு வைர மோதிரம். ஒரு வேளை கிறிஸ்டீன் முறைப்படி, அதே முகூர்த்த நாளில் கந்தர்வ அல்லது இவர்களை ஏற்றுக்கொள்ளும் அல்லக்கைஸ் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் நடந்திருக்கலாம். யாருக்கு தெரியும் ?
ஒரு தோழி சொல்கிறார், இவர்கள் இருவரும் சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கண்ணிய நிலையை கெடுக்கிறார்கள் என்று ஏன் யாரும் வழக்கு தொடரக்கூடாது ? அதை கேட்டு டயானாவை நாலு பேர் பிடித்துக்கொள்ள தாடி குத்துப்பாட்டுக்கு போக் டான்ஸ் ஆடி போகாதே போகாதே என் கனவே என்ற சாங் பேக் ரவுண்டில் ஓடுவது போல ஒரு கற்பனை ஓடுவதை மறைக்க இயலவில்லை..
சமீபமாக, கேரளாவில் இருந்து மிஸ் வேர்ல்டோ மிஸ் யூனிவர்ஸோ போன பார்வதி ஓமனக்குட்டி, இப்போது கோடம்பாக்கத்தில் தெறம காட்ட கால் பதிக்கிறது. இது, தாடி - டயானா காதலில் தவறில்லை என்று பேட்டியில் சொல்கிறது. (இந்த கருத்தை இவள் கேரளா என்பதால் கேட்ட பத்திரிக்கையாளர் ரொம்ப புத்திசாலி இல்லையா) அட ஓமனக்குட்டி அல்லக்கை முண்டமே, இது காதல் இல்லை.
கள்ளக்காதல். வெளிப்படையாக செய்தால் காவியக்காதலாகிவிடுமா என்ன ?
இவர்கள் இருவரும் திருமணம் செய்யக்கூடாது அல்லது ப்ரெஞ்சு உம்மா கொடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் அல்பையாக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவரவர்கள் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யட்டுமே ? இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..!! ரம்லத் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்..
டான்ஸ் தாடி இதுவரை ஏன் தான் டயானாவிடம் செல்கிறேன், ரம்லத்திடம் என்ன குறை கண்டார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அவரது மனைவி ரம்லத்தும் பத்திரிகைகளிடம் தான் புலம்புகிறார். டான்ஸ் தாடிக்கு அப்படி
பூவை முறுக்கி தோளில் போட்டுக்கொள்ள real need இருக்கும் பட்சத்தில் எங்க அக்கா ரம்லத்திடம் சம்மதம் கேட்டுத்தான் செய்யவேண்டும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கும் சரியான அளவில் ஏற்பாடு செய்யவேண்டும்...
இதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா ? மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்..!! கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..
ஓக்கே சீ யூ லேட்டர் யா !!!
உங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..!!
..
..