Monday, May 31, 2010

புனைவாக எழுதுதல் !


ஒரு செமி.சீரியஸ் பதிவு ஒன்றுக்கு எழுதப்பட்ட படு காமெடி பதிவு, ஆணாதிக்க வெறியும், வன்மமும் அழுக்கும் ஆக நிறைந்த ஒரு கீழ்த்தரமான ஆபாச புனைவு பதிவும், அதில் குழந்தையை கொல்வேன் என்பது போன்ற மிரட்டல் உருட்டல்களாகவும், அந்த ஆபாசத்தை சமப்படுத்தும், நியாயப்படுத்தும் பின்னூட்டங்களாகவும், இதனை வைத்து காமெடி செய்து கல்லா கட்டும் பதிவுகளாகவும்...

இது இரண்டு தனி நபர்களின் பிரச்சினை என்ற அளவில் சுருக்கக்கூடிய ஒன்றா ? அல்லது ஒட்டுமொத்தமாக படிப்பவர்களின் மனதை உலுக்கக்கூடியதா ? ஒருவேளை முல்லை என்ற பெண் என்னைப்போல சஞ்ஜெய் காந்திக்கோ, வடகரையாருக்கோ, அல்லது விக்னேஷ்வரிகோ, சின்ன அம்மணிக்கோ சகோதரி இல்லை என்றால், நீங்களும் சொம்பை தூக்கிகொண்டு போய் பின்னூட்டத்தில் பஞ்சாயத்து செய்யலாம்..!!

எனக்கு கோபம் மட்டுமே வருகிறது...!

அவள் என் மீது கல் எறிந்தாள். நான் அவள் நெஞ்சைப்பிளந்து இதயத்தை எடுத்தேன் என்பது போல, என் மீது எதிர்பதிவும் பின்னூட்டமும் போட்டமைக்காய், நாள் அவளை அவுசாரி என்றேன். எவனோடோ படுப்பவள் என்றேன். குழந்தையையும் அதில் கொண்டுவந்தேன். என்று சொன்னால். உங்களால் ஒருவேளை, ஓ கொஞ்சம் ஓவராய்த்தான் டென்ஷன் ஆகி புனைந்துட்டார் என்று நினைக்கமுடிகிறதென்றால், நீங்கள் என்னைப்போல அவளுக்கு சகோதரன் இல்லை என்று நினைக்கிறேன்...

நாம் என்ன வகையான சமூகத்தில் வாழ்கிறோம் ? பகுத்தறிவும், சக மனிதனை மதிக்கும் பாங்கும் வளரவேண்டிய தருணம். அதை வளர்க்கவேண்டிய ஆட்களே அதனை குழி தோண்டி சமாதி செய்தால் எங்கே சென்று முறையிடுவது ?

பிள்ளை கண்ணாடி டம்ளரை உடைத்தமைக்கு கத்தியால் குத்தியது போல இருக்கிறது இந்த செய்கை. பலர் பின்னூட்டங்களில் சொம்பை தூக்கிகொண்டு நிற்பதும் இதை வைத்து கும்மி அடிப்பதும் கொடூரத்தின் உச்சம்..

அந்த 'புனைவில்' தெறிக்கும் வன்மத்தை வைத்து சொல்கிறேன். இதை போன்றதொரு வார்த்தை பிரயோகத்தையும், ஏதுமறியா குழந்தையை கூட ஆபாச வார்த்தைகளை சொல்லி எழுதுவதற்கும், ஒன்று மனப்பிறழ்வு இருக்கவேண்டும், அல்லது அந்த அளவு காயப்பட்டிருக்கவேண்டும்...

நன்பருக்கு உதவுகிறேன் என்று சகா அங்கே பின்னூட்டத்தில் பேசும் வார்த்தைகள் உச்சகட்ட ஆபாசம். இந்த ஆபாசங்களையும், பெண் இனத்தையே இழிவு செய்யும் வார்த்தைகளையும் 'தோழி' படித்துப்பார்ப்பாரா ? உருகி உருகி காதல் செய்யும் கார்க்கியின் மனதில் இருந்து வழியும் அந்த அமிலம். நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு குழந்தையை கொல்கிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் மனநோயாளி. அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்..

முதல் பதிவை எழுதிய ஆதி, எதிர்பதிவு விஜி, அதில் பின்னூட்டிய முல்லை, அப்புறம் நர்சிம், அதன் பிறகு கார்க்கி என்று எல்லாரும் ஒன்று என்மீது மதிப்பாய் இருப்பவர்கள். அல்லது உறவினர். அல்லது நன்பர். என் கண்களும் கைகளும் ஒன்றோடொன்று காயப்படுத்திக்கொள்வதை போலத்தான் கடந்த இரண்டு நாட்களுக்குமான பதிவுகள் வந்துள்ளன..என்ன ஒரு கை இன்னொரு கையை லேசாக தட்ட, அது கண்களை பிய்த்து எறிந்துவிட்டது. என்னால் தான் சரியாக பார்க்க இயலவில்லை. 

நான் பெரிதும் நட்பை வைத்துள்ளவர்கள் இப்படி கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நர்சிம் அந்த ஆபாச பதிவை நீக்கினாலும், அது அனைவரின் ரீடரிலும் உள்ளது. அவர் தனது தவறை உணர்ந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விட்டால் பாதி கிணறு. அதனை பாதிக்கப்பட்ட எனது சகோதரி ஏற்றுக்கொண்டால் மீதி. 

Friday, May 21, 2010

குணங்குடி ஹனீபா விடுதலை. தூங்கிய நீதி !!



தமுமுக குணங்குடி ஹனீபா, குண்டுவெடிப்பு பொய் வழக்கு ஒன்றில் இருந்து விடுதலை பெற்றுள்ளார். ஒன்றா இரண்டா பதிமூன்று ஆண்டுகள். தாமதித்துத்தான் இந்த நீதி கிடைத்துள்ளது.

இப்படி பதிமூன்று ஆண்டுகள் அவர் சிறையில் வாடிய காலம் திரும்ப கிடைக்குமா ? தனது தந்தையார் இறந்த நிகழ்வுக்கு கூட இவரை பரோலில் விடாமல் செய்தது எப்பேர்ப்பட்ட அநீதி ?

சமீப காலத்தில் ஜூவி இவரை பேட்டி கண்டு வெளியிட்டபோது, தமிழக முதல்வர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் வரும் தேர்தலில் இஸ்லாமியர்களின் ஆதரவு தேவை என்பதாலும், மமக ஒரு ஒருங்கமைந்த சக்தியாக உருவெடுத்து வருவதாலும், இவர் விடுதலை செய்யப்பட்டிருக்கக்கூடும்...

முதலில் இதுபோன்ற பொய் வழக்குகளை அரசியல் காரணத்துக்காக சோடிக்கும் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்போது தான் இப்படிப்பட்ட அநீதிகளை வரும் காலத்தில் நடாத்த அதிகார வட்டம் கொஞ்சமாவது தயங்கும்..!!

தாமதிக்கப்பட்ட நீதி என்பது அநீதியாகும். ஆகவே அதனை இழைத்தவர்கள் குற்றவாளிகள். ஆகவே அந்த அநீதியை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் !!! தந்தையின் முகத்தை இறுதியாக காண விடாத இந்த பாவிகள் உப்பை தின்றவர்கள். தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!! அது கோவை குண்டுவெடிப்பு வழக்கானாலும் சரி. குணங்குடி ஹனீபா வழக்கானாலும் சரி !!

...

தோழி அல்லது தோழருக்கு !!

ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் இன்பாக்ஸ் பகுதி இருக்கிறது. பல வலைத்தளங்களை வெளியிட்டுவருகிறார்கள்.அந்த வகையில் கடந்த 24 ஆம் தேதியிட்ட மார்ச் மாத இதழில் தோழி என்பவரின் வலைத்தளத்தை அறிமுகம் செய்தார்கள்.

சித்தர்கள் பற்றிய வலைப்பூ அது. http://siththarkal.blogspot.com

அந்த வலைப்பூவில் வரும் உடான்ஸுகளை தாங்க முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்...!! வீர ரசம் காந்த ரசம் என்று காதில் பூ சுற்றும் சமாச்சாரங்களாக இருக்கிறது.

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவ முறைகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை அனுபவத்தால் கற்று தேர்ந்து, அதனை வைத்து பல வாழ்வை ஒளியேற்றியது உண்மைதான். அவர்களை நான் மதிக்கிறேன், வணங்குகிறேன்...



ஆனால் அந்த காலத்திய வாழ்க்கை முறைக்கும் சமூக நிலைக்கும் மட்டுமே அவை பொருத்தமானவையாக இருந்தன.

ஆனால் இப்போது சைக்யாட்ரிஸ்டும் ஆங்கில மருத்துவமும் தான் பொருத்தமான ஒன்று. காரணம் நமது வாழ்வியல் முறையும், சமூக அமைப்பும் மாறிவிட்டது. நாம் உண்ணும் உணவில் இருந்து, பேசும் பேச்சில் இருந்து, பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, அனைத்தும் மாறிவிட்டது.

ஆகவே பழைய மருத்துவம் ஒருவேளை ஒருசில நோய்களில் பயன்படலாம். அதே அனைத்துக்குமான சர்வலோக நிவாரணி அல்ல. மேலும் நவீன மருத்துவத்தின் வசதிகளும் வாய்ப்புகளும் பழைய முறைகளில் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நான் பொங்குவதன் காரணம் அது அல்ல. அதில் மூட நம்பிக்கைகளின் உச்சமாக ரசவாதம் , இரும்பை தங்கமாக மாற்றுதல் ஆகியவற்றை பற்றி உடான்ஸ் விடப்படுகிறது..

தங்கம் உருவாக பல லட்சம் டிகிரி வெப்பம் தேவை. நட்சத்திரங்களின் நடுவே நியூக்ளியர் ப்யூஷன் ஏற்பட்டு பெருவெடிப்பு ஏற்படும்போது அங்கே உருவாகும் தனிமங்களில் தங்கமும் ப்ளாட்டினமும் சிதறுகின்றன என்று நான் மிகவும் மதிக்கும் இப்போதைய வாழும் அறிவியலாளர்களில் முதன்மையான காஸ்மாலஜிஸ்ட் ஸ்டிபன் ஹாக்கிங் சொல்கிறார்.

இங்கே சட்டியில் தங்கம் உருவாக்கலாம் என்கிறார்கள். இது போன்ற பாடல்களை உண்மையில் போகர்தான் எழுதினாரா ? இல்லை வேறு யாராவது எழுதினார்களா ? இந்த மருத்துவ முறையால் எயிட்சுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்து கொடுக்கமுடியவில்லையே ? என்று பல கேள்விகள் எழுகின்றன.

எதுவும் தவறாக சொல்லியிருந்தால் மன்னிக்க தோழி அல்லது தோழர். உங்களை வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிகிச்சை மருத்துவர் என்று நான் நம்பவில்லை. ஆனால் காலத்துக்கு ஒவ்வாத பொய்த்த தகவல்களை ஏன் பதிவு செய்து படிப்பவர்களை முட்டாளாக்குகிறீர்கள் ?

ரசவாதத்தில் காந்த ரசத்தில் இருந்து தங்கம் வரும் என்றால் நான் அமவுண்டு தருகிறேன். வால்பையனை போல ஆன்லைன் தங்கம் இல்லாவிட்டாலும் ஐந்து கிராம் தங்கமாவது கையில் கொடுத்திடவேண்டும்..!! இந்த சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் உங்களை சந்திக்க வரும்போது தக்காளி ரசமும் முட்டை ஆம்லெட்டும் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு போகிறேன்...!!!

பின் கேள்விகள் :

ஜெயா டிவியில் திருவண்ணாமலையில் சிந்தர் ராக்கெட் போல பறந்த ஒரு வீடியோ வேறு வந்தது. திருவண்ணாமலையில் நல்ல கூட்டம்...!!! அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றும் சொல்லவும்..

போகர் ஒரு சீனர் என்றும் நினைத்த மாத்திரத்தில் சீனாவுக்கு சென்று மேட்டர் செய்துவிட்டு வந்துவிடுவார், அதனால் தான் அவர் பெயர் போகர் என்றும் வரவணையான் சொன்னார். அது உண்மையா ? அவர் ஒரு சீனரா ? இப்போதெல்லாம் விக்கிபீடியாவிலும் உடான்ஸ் கலையை ஆரம்பித்துவிட்டார்கள் அய்யா...!!

..
..

கிக் ஆஸ் (kick ass) - 2010

kick-ass.jpg (603×417)

படம் கலக்கல் !!! மிஸ் பண்ணாதீங்க !!!

Wednesday, May 19, 2010

9தாரா - தென்னாட்டு மைக்கேல் ஜாக்சன் காவியக்காதல் !!!

+18 பதிவு..!!! மற்றவர்கள் ப்ளீஸ் டோண்ட் ரீட்!!!




மேலே ஒரு போட்டோ இருக்கு பாருங்க. அதில் முகத்தில் ரோஸ் பவுடர் கொஞ்சம் தூக்கலாக பூசி இருக்காங்களே ? அது தான் 9 தாரா. பக்கத்துல குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதை நிரூபிக்கும் வகையில் தாடியோடு உராசுகிறது பெயர் பிரபு தேவா.

இவர்கள் இருவரையும் பற்றி இன்னொரு சுவாரஸ்ய செய்தி, இந்த பிகர் கேரளத்து அழகி. இந்த பயல் கோங்கூரா சட்னி. அதான் கொலுட்டீன்னு சொல்லவரேன். இவங்க ரெண்டு பேரும் குப்பை கொட்டுவதோ தமிழ் கூறும் நல்லுலக பிலிம் இண்டஸ்ட்ரி கோடம்பாக்கம்...!!!

இதில் இந்த பிகரை பற்றி இன்னொரு விஷயம். ஏற்கனவே ஒரு தாடிக்கார கேரள இயக்குனர் இந்த பிகரை பிரிச்சு மேய்ந்ததாக ஒரு கிசு கிசு படித்த வேளை கூட நடித்த கரடி நடிகரின் மகன் விரல் வித்தையாருடன் உதட்டு முத்தம் கொடுத்தபடி இருந்த ப்ரைவேட் படம் இணையத்தில் உலாவ விடப்பட்டது.

[nayanthara1.jpg]

கரடியின் மகனுக்கு நயன் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் காதல் முறிந்தது. காதல் முறிந்ததால் கரடி நடிகரின் மகன் விரல்வித்தையாரே அந்த கிளுகிளு படங்களை ரிலீஸ் செய்துவிட்டதாக ஒரு பேச்சு அடிபட்டது. நான் அதை நம்பவில்லை. இவர்களின் இருவரையும் படம் எடுத்த மூன்றாம் நபர் அல்லக்கை முண்டமே அதை செய்திருக்கவேண்டும். இப்ப லிட்டில் ஸ்டார், பிறகு சூப்பர் ஸ்டார் , அதன் பிறகு 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் என்று கனவில் இருக்கும் விரல் வித்தை, அந்த படத்தை ரிலீஸ் செய்யும் அளவுக்கு மூளையில்லாத முண்டமா என்ன ?

இது மட்டும் இல்லாமல் விரல் வித்தை வேறொரு பிகரை லைட் மப்பில் போனில் கலாய்த்ததை ரெக்கார்டு செய்து அதை இணையத்தில் உலாவ விட்டதும் நடந்தது. விரல் வித்தையின் குரல்தான் ஊருக்கே தெரியுமே ? சரி நாம் ரொம்ப ஆப் டாப்பிக் போகிறோம். லெட்ஸ் கம்மிங் பேக் டு டான்ஸ் தாடி..

இந்த டான்ஸ் தாடி, ஒரு நல்ல டாடியா என்றால் அது கிடையாது. கூட நடித்த ரம்லத் என்ற டான்ஸரை மணந்தது நன்று. மூன்று பிள்ளைகள். கல்யாணத்துக்கு பிறகோ அல்லது மூன்று பிள்ளைகளுக்கு பிறகோ கொஞ்சம் குண்டடித்து, தமிழக தாய்மார்களின் அக்மார்க் வடிவத்தில் இருந்த ரம்லத் டான்ஸ் தாடிக்கு கொஞ்சம் போரடித்துத்தான் போனார் என்பது நிஜம்.



மூன்று பிள்ளைகளை வளர்க்கும் பணியோடு, இன்னும் ஜீன்ஸு பேண்டும், துள்ளல் நடையுமாக வந்த டான்ஸ் தாடியையும் மேய்க்கும் பணியை சரியாகத்தான் இந்த படத்தில் மங்களகரமாக நிற்கும் இந்த அம்மாள் செய்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை.

சமீபமாக டவுனில் இருந்த தாடிக்கு, தெலுங்கு படவுலகம் கொஞ்சம் ப்ரேக் கொடுத்து, அதன் பிறகு சினிமா இயக்கம், நடன இயக்கம், இந்தி பட உலகம், பாலிவுட் டிவி உலகம் தொடர்பு, உங்களில் யார் அடுத்த அரைவேக்காடு என்பது போல தமிழ் டிவிக்களும் உசுப்பிவிட்டது. மும்பை டெல்லி என்று பறந்து பணி செய்ததில் மீண்டும் தாடிக்கு இளமை ஊஞ்சலாட ஆரம்பித்தது...

Vishal

வில்லு படத்தில் டான்ஸ் தாடி பிஸியாக இருந்த ஒரு டிசம்பர் மாசம் வியாழக்கிழமை அவருடைய மூத்த மகன் விஷால் கேன்ஸர் போன்றதொரு வியாதியால் இயற்கையையுடன் இணைந்துகொண்டார். ஆறு மாதம் கஷ்டப்பட்டுவிட்டுத்தான் தம்பி இப்படியானார். இந்த இழப்பை பற்றி நினைக்கும்போதே எனக்கு நெஞ்சம் பதறுகிறது..பெசண்ட் நகர் இடுகாட்டில் பிள்ளையை வழியனுப்பிய அந்த பெற்ற தாயின் கண்ணீர் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணரமுடிகிறது..உடம்பெல்லாம் சிலிர்க்கிறது...



இதே போல பட்டம் பறக்கவிடும்போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்துபோன நடிகர் பிரகாஷ் ராஜின் நான்கு வயது மகன் சித்து, அப்புறம் வாழ்ந்த டிஸ்கோ சாந்தியின் சிஸ்டரை டைவர்ஸ் செய்துவிட்டு ஏதோ போனி வர்மாவாம், அப்படீன்னு ஒரு டான்ஸ் மாஸ்டரை கல்யாணம் செய்யப்போகும் அவர் ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அதை விடுங்கப்பா !!

மறுபடி நம்ம டான்ஸ் தாடிக்கே வருவோம். விரல் வித்தை கரடி சன்னோடு டூ விட்டு வந்த 9 தாரா, கொஞ்சம் ப்ரீயாக உலாத்தியபோது (உடையிலும்) டான்ஸ் தாடியின் வில்லு படத்தில் நடித்தார்.



மேற்கானும் படம் டான்ஸ் தாடி கேரளத்து மேடத்துக்கு காட்சிகளை எக்ஸ்ப்ளெயின் செய்யும்போது.



கையை கொஞ்சம் தள்ளி வைத்து டீசண்டாக காட்சிகளை எக்ஸ்பிளெயின் செய்யும் இன்னொரு படம்.



மீடியாக்கள் அதிகம் போடும் இந்த படத்தில் இன்னொரு ஆள் நிற்பார். அது கட் செய்யப்பட்டுள்ளது. நல்லா போட்டோஷாப் செய்யறானுங்கடா...மேடத்தின் லிப்ஸ் டிக்கு கொஞ்சம் அதிகமா இருந்தாலும் நல்லா இருக்கில்ல ?

ரிமம்பர், இந்த வில்லு படத்தில் நடிக்கும்போது தான் மகன் இறந்து டான்ஸ் தாடியின் மனது புண்பட்டது. ஆனால் அதை புகை விட்டு ஆத்துவதற்கு பதில், பிகர் வைத்து ஆற்றிவிட்டார் போலிருக்கு. அதுதான் நமது கேரளத்து அழகிக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்தது.

நயன் தாராவுக்கு என்ன அழகில்லையா, அறிவில்லையா ? போயும் போயும் கல்யாணம் ஆகி பிள்ளை பெற்ற இந்த டான்ஸ் தாடியின் பெயரை எதுக்கு பச்சை குத்தி காதலிக்கனும் என்று எல்லாம் கேள்வி எழுப்பாதீர்கள். அது அவரது தனிப்பட்ட விஷயம். ஆனால்...

முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்டப்படி தவறு என்று இந்தியன் பீனல் கோர்ட் சொல்லும்போது அதை பீனட்டுக்கு கூட மதிக்காமல் இவர்களால் சட்டப்படி திருமணம் செய்ய இயலாது. அதே சமயம், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் எங்கேயும் வெளியில் இணைந்து செல்வதற்கோ, மன, உடல் ரீதியான தொடர்பில் இருப்பதற்கோ சட்டப்படி தடை எதுவும் இல்லை.

நயன் தாரா இந்த செயலை பணம் வாங்கிகொண்டு செய்வதாகவும் இங்கே வாதம் வரவில்லை. சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவரின் மேல் விபச்சார கேஸ், கஞ்சா கேஸ் என்று கூட போட இயலாது. சொல்லப்போனால் டான்ஸ் தாடி அமைக்கும் இண்டர் நேஷனல் டான்ஸ் ஸ்கூலுக்கு நயன் தாரா தான் ஒரு கோடி ரூபாய் வரை நிதி உதவி செய்வதாக சொல்லப்படுகிறது.

அதே சமயம், ஒரு குடும்பத்தில், ஒரு கணவன் மனைவிக்கிடையில் நாம் நுழைகிறோம், அவர்கள் வாழ்வை கெடுக்கிறோம் என்று கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாதவராக இருக்கிறார் நயன். தான், தனது காதல், தனது சந்தோஷம் என்று இருப்பவரிடம் மனிதத்தன்மையை எதிர்பார்ப்பது தவறு.

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையமுடியும் ? தாடிக்காரன் முதல் முறை நீட்டிக்கொண்டு வரும்போதே, டேய், நீ கல்யாணம் ஆனவன் என்று ஒதுக்கியிருக்கக்கூடாதா ? சரி அதை விடுங்கள்...

டான்ஸ் தாடியின் மனைவி ரம்லத்தோ, மீடியாக்களில் தனது ஆற்றாமையை எப்படி ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்துகிறார் ? அவர் டான்ஸ் தாடியை விட்டு பிரிந்துவிடவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே ? அந்த மற்ற இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை ஏன் டான்ஸ் தாடி கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை ? படிப்பு செலவுக்கு காசு கொடுத்துவிட்டால் போதுமா ? அவர்களுக்கான சமூக அந்தஸ்தை கொடுக்கவேண்டாமா ?

கீழே உள்ள படத்தில் சமீபத்தில் இயக்குனர் சித்திக் வீட்டு திருமணத்தில் டான்ஸ் தாடியும் டயானாவும் (அதுதான் நம்ம அழகியின் சொந்த பெயர்) எப்படி போஸு கொடுக்கிறார்கள் பாருங்கள் ?



அதே சமயம்,  சமீபமாக முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா ஒன்றில் (ஏகப்பட்ட பாராட்டு விழா நடக்குதுங்க, எதுன்னு கேக்காதீங்க) டயானாவும் தாடியும் இணைந்து நடனம் ஆடி தமிழக முதல்வரை குஷிப்படுத்தினார்கள். ஆக அரசும் இதை கண்டுகொள்ளவில்லை (அதான் முதல்வரே ஒன்றும் சொல்லவில்லை). அதே சமயம், அரசாங்கத்துக்கு சொப்பன சுந்தரியின் காரை யார் வைத்துள்ளார்கள், அவளை யார் ஓட்டுகிறார்கள் என்பதை பார்ப்பதா வேலை ?

ஆக, சட்டம் எதுவும் சொல்லவில்லை. ஏன் என்றால் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் நடைபெற்றுவிடவில்லை. (i mean தாடியின் இரண்டாவது திருமணம்). அல்லது திரை மறைவில் நடந்திருக்கலாம். மேற்கானும் படத்தில் உற்று கவனித்தால் டயானாவின் கையில் ஒரு வைர மோதிரம். ஒரு வேளை கிறிஸ்டீன் முறைப்படி, அதே முகூர்த்த நாளில் கந்தர்வ அல்லது இவர்களை ஏற்றுக்கொள்ளும் அல்லக்கைஸ் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமணம் நடந்திருக்கலாம். யாருக்கு தெரியும் ?

ஒரு தோழி சொல்கிறார், இவர்கள் இருவரும் சமூகத்தின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கண்ணிய நிலையை கெடுக்கிறார்கள் என்று ஏன் யாரும் வழக்கு தொடரக்கூடாது ? அதை கேட்டு டயானாவை நாலு பேர் பிடித்துக்கொள்ள தாடி குத்துப்பாட்டுக்கு போக் டான்ஸ் ஆடி போகாதே போகாதே என் கனவே என்ற சாங் பேக் ரவுண்டில் ஓடுவது போல ஒரு கற்பனை ஓடுவதை மறைக்க இயலவில்லை..



சமீபமாக, கேரளாவில் இருந்து மிஸ் வேர்ல்டோ மிஸ் யூனிவர்ஸோ போன பார்வதி ஓமனக்குட்டி, இப்போது கோடம்பாக்கத்தில் தெறம காட்ட கால் பதிக்கிறது. இது, தாடி - டயானா காதலில் தவறில்லை என்று பேட்டியில் சொல்கிறது. (இந்த கருத்தை இவள் கேரளா என்பதால் கேட்ட பத்திரிக்கையாளர் ரொம்ப புத்திசாலி இல்லையா) அட ஓமனக்குட்டி அல்லக்கை முண்டமே, இது காதல் இல்லை. கள்ளக்காதல். வெளிப்படையாக செய்தால் காவியக்காதலாகிவிடுமா என்ன ?

இவர்கள் இருவரும் திருமணம் செய்யக்கூடாது அல்லது ப்ரெஞ்சு உம்மா கொடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் அல்பையாக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவரவர்கள் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யட்டுமே ? இருவரில் ஒருவர் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் விவாகரத்து கிடைக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..!! ரம்லத் கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்..

டான்ஸ் தாடி இதுவரை ஏன் தான் டயானாவிடம் செல்கிறேன், ரம்லத்திடம் என்ன குறை கண்டார் என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அவரது மனைவி ரம்லத்தும் பத்திரிகைகளிடம் தான் புலம்புகிறார். டான்ஸ் தாடிக்கு அப்படி பூவை முறுக்கி தோளில் போட்டுக்கொள்ள real need இருக்கும் பட்சத்தில் எங்க அக்கா ரம்லத்திடம் சம்மதம் கேட்டுத்தான் செய்யவேண்டும். பிள்ளைகள் எதிர்காலத்துக்கும் சரியான அளவில் ஏற்பாடு செய்யவேண்டும்...

இதை எல்லாம் ஏன் சொல்கிறாய் நீ என்று கேட்கிறீர்களா ? மிஸ்டர் ரோமியோ என்ற மொக்கை படத்தை மதுபாலா, ஷில்பா ஷெட்டியின் கிளு கிளு ஆட்டத்துடன், திருச்சி ரம்பா ஊர்வசி தியேட்டரில் இருபத்தைந்து ரூபாய் கொடுத்து பார்த்தவன் என்ற முறையில் எனக்கு எல்லா உரிமையும் உள்ளது..அந்த படத்தில் ஷில்புக்குட்டி ரெட் கலர் /கருப்பு வட்டம் ஆங்காங்கே போட்டமாதிரி சாரியில் சூப்பராக இருப்பார்..!! கண்ணைக்கொஞ்சம் திறந்தேன், என் கண்களுக்குள் விழுந்தாய் என்ற பாடல் இன்னைக்கு வரை என் பேவரிட்..

ஓக்கே சீ யூ லேட்டர் யா !!!

உங்கள் வைரமான வாக்குகளை பதிவுக்கு அளிக்கவும்..!!

..

..

Tuesday, May 18, 2010

கூகிள் விளம்பரமும் பள்ளிக்கல்வித்துறையும்

தமிழக அரசு, தனியார் பள்ளிகளுக்கு பெரிய ஆப்பை அடித்து சொருகிவிட்டது. அவர்களும் உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டிப்பார்த்துவிட்டு, ஸ்ட்ரைக் அது இது என்று பூச்சாண்டி காட்டிவிட்டு, இன்றைக்கு ஓஞ்ச வாழைப்பழமாகிவிட்டார்கள்.

2 ஆம் தேதி பள்ளிக்கூடம் திறப்பாங்களாம். பீஸை அஞ்சு மடங்கு அதிகரிக்கச்சொல்லி நீதிபதி கோவிந்தராசன் அய்யாவிடம் கோரிக்கை விடுப்பார்களாம். கோவிந்தராசன் அய்யா தலையாட்டினால், ஜூலை மாதம் கட்டணத்தை உயர்த்திவிடுவார்களாம்.

பொட்டியை நீட்டி சரி செய்துவிடலாம் என்று இவர்கள் நினைப்பது வெள்ளிடை மலை. இதை தமிழக அரசு உறுதியாக கவனிக்கவேண்டும்..

பொட்டி தர ஏற்கனவே ரொம்ப முயற்சி செய்திருப்பார்கள் போலிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு உறுமலும் விட்டுவிட்டார்...

இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த கட்டண விகிதம் தான் என்றும் உறுதியாக தெரிந்துவிட்டது. இந்த அற்புதமான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்.

இது குறித்து மேல் விவரம் பார்க்க தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்துக்கு போனால், அங்கே தாய்லாந்து நாட்டில் பேசப்படும் தாய் மொழியை கற்கவோ அல்லது தாய் ச்சி என்ற உடற்பயிற்சியை கற்கவும் என்னை அழைக்கிறார்கள்...

அதிர்ச்சி. ஒருவேளை தமிழ் எழுத்து சீர்மை முழுமையாக செயல்படுத்தப்பட்டு, தாய்லாந்து நாட்டின் மொழிதான் தமிழ்மொழி என்ற அளவில் மாற்றிவிட்டார்களோ என்று வருடத்தை பார்த்தேன். இன்னும் 2010 இல் தான் இருக்கிறேன்..

அப்புறம் எப்படி தமிழக அரசின் இணைய தளத்தில் தாய்லாந்து மொழி வந்தது ? அவர்கள் காண்ட்ராக்டு கொடுத்துள்ள நிறுவனமோ அல்லது ஊழியர்களோ அதில் கூகிள் விளம்பரங்களை இட்டு நிரப்பியுள்ளார்கள்.

அதனால் கண்ட கண்ட விளம்பரங்கள் வந்து தொலைக்கின்றன. கூகிள் விளம்பரம் என்றால் அதில் ஒரு ப்ரொபைல் மின்னஞ்சல் எல்லாம் போடவேண்டும். ஆகவே எளிதாக இதனை யார் செய்கிறார்கள் என்று கண்டறிந்துவிடலாம்.

எனக்கு சந்தேகம் என்னவென்றால், இது தளத்தை நடத்தும் நிறுவனத்தின் வேலையா அல்லது பணியாற்றும் ஊழியர்கள் வேலையா என்று தெரியவில்லை. அரசு சம்பந்தமான இணைய தளங்களில் கூகிள் விளம்பரங்கள் போடவேண்டிய தேவை என்ன ?

இது அரசின் ரெப்யூட்டேஷனை பாதிக்காதா ? இன்றைக்கு தாய் ச்சீ பழகலாம் வா என்று அழைக்கும் விளம்பரம் நாளைக்கு தாய்லாந்து அழகி இருக்கிறாள் வா என்று அழைக்க 100% சதவீதம் வாய்ப்பு உண்டே ?





கூகிள் விளம்பரங்கள் தளத்தில் இருக்கும் வார்த்தைகள் மற்றும் நீங்கள் தளத்தினை திறக்கும் இடம் ஆகியவைகளை கருத்தில் கொண்டே வெளியாகின்றன என்று நினைக்கிறேன். ஆகவே இதனை கண்டிப்பாக அரசுத்துறையை சேர்ந்தவர்கள் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பத்து ருபாய் செலவழித்து அந்த கூகிள் கணக்கு யாருடையது, அல்லது அந்த கணக்கில் எவ்வளவு நாளாக இந்த விளம்பரங்கள் அந்த தளத்தில் வருகிறது என்று வழக்கு தொடர்வேன் என்று உறுதியாக சொல்கிறேன்...
.
.
.

குசும்பனுக்கு இல்லை !!







நார்வே தேசிய நாள் அணிவகுப்பின்போது எடுத்த படம் !!

ஏன் குசும்பனுக்கு இல்லையா ? இங்கிட்டு வந்து ஆஹா சூப்பர் பிகரெல்லாம் போவுது நான் அங்கே வரேன் அந்தமாதிரி ஏதாவது கமெண்டு வைப்பான். அப்புறம் என் தங்கச்சி பூரிக்கட்டையால சில்லி மூக்கை உடைப்பாள். தக்காளி சாஸ் வரும்..ஏன் அந்த வம்பு ?

நியோவுக்காக



நியோ பாப்பாவின் வீடியோவை போடுமாறு கேட்டார்..here you go !

Tuesday, May 11, 2010

குளம் சந்திப்பு !!!




பிரபல இன்னாள் முன்னாள் பதிவர்கள் சந்தித்து, சப்பையாகிப்போன பதிவர் சங்க மேட்டர்கள் பற்றி விவாதித்து, குறை நிறைகளை களைந்து அந்த கருத்தாக்கத்துக்கு புத்துயிர் ஊட்ட முயல்கிறார்கள். சந்திப்பு, நர்சிம் வீட்டுக்கு பின்னாடி உள்ள குளத்தில் நடைபெறுகிறது. இன்ரொடக்சன் உரை நிகழ்த்துகிறார் நர்சிம்.

நர்சிம் : இந்த குளம் சந்திப்பு எந்த கேனிக்கும் போட்டி அல்ல.

கேபிள் : சைதாப்பேட்டை பஸ்டாண்டு எதிரே நைட்டு பத்து மணிக்கு மேல் வரும் சாப்பாட்டு கடையில் போட்டி நல்லா இருக்கும்.

நர்சிம் : கேபிள் அடங்கவே மாட்டீங்களா ? நான் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.  இந்த சந்திப்பில் நமது பழைய வேறுபாடுகளை களைந்து, உரையாடலோடு இணைந்து இந்த முயற்சியை தொடர்ந்து செய்யனும். எதாவது செய்யனும் பாஸ். வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா ?

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

துன்பத்தால் அழிந்தோர்க்குதான் நன்பர்கள் துணையில்லையாம். வலைப்பதிவர்கள் அனைவரும் நன்பர்களாக எங்களது இந்த முயற்சிக்கு துணையிருக்கவேண்டும்.

மணிஜி : உமாவுக்கு உம்மா கொடுக்கும்போது இச்சி இச்சின்னு கொடுக்காம உச்சு உச்சுன்னு கொடுப்பது தான் சூப்பர். எப்படி இருக்கு ? ஆனா தாடி இருந்தா குத்தும். குத்துறது எல்லாம் கத்தியா ? என்னோட ரசனை அப்படி ஆளை விடுங்களேண்டா...

பைத்தியக்காரன் : மணிஜி, நீங்க இன்னும் ரெண்டு நிமிஷம் பேசுனீங்கன்னா நான் ஜ்யோராம் சுந்தரோடு தற்கொலை செய்துகொள்வேன்.

...ஜ்யோவ் பைத்தியக்காரனை பீதியாக பார்க்கிறார்...

உண்மைத்தமிழன் : செம்மொழி மாநாட்டுல பதிவர் சந்திப்பு நடக்கறாமாதிரி ஒரு கனவு கண்டு, அதை சுருக்கமா பத்தாயிரம் பக்கத்துல ஒரு பதிவு எழுதியிருக்கேன். அதை பற்றி விவாதிக்கலாமா ?

வாத்தியார் சுப்பைய்யா : நான் உண்மையாருக்கு எக்ஸாம் கண்ட்ரோலரா இருந்தா ஒரு அடிஷனல் ஷீட்டு கூட கொடுக்கமாட்டேன்..!!

டி.வி.ஆர் : யாரும் ஆக்கப்பூர்வமாக பேசுவதில்லை. மனிதனுக்கு ஏன் தான் இப்படிப்பட்ட சிந்தனையோ ? அடுத்தவன் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும். அவன் சுகந்திரத்தில் தலையிட நாம் யார் ? காளமேக புலவர் சொன்னமாதிரி

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

நர்சிம் : சார் நிறுத்துங்க. இங்க நாம எதுக்கு கூடியிருக்கோமோ அதை பற்றி விவாதிக்கலாமே ?

டி.வி.ஆர் : கேணி சந்திப்புல பாமா நாடகம் நடந்துதாமே ? ஒரு ராஜா காலத்து நகைச்சுவை நாடகம் எழுதி வெச்சிருக்கேன். அதை முதலில் நடிச்சு பார்க்கலாமா ? ஆதிமூலகிருஷணன் அரசரா நடிக்கட்டும். ஜாக்கிசேகர் பராக் பராக் சொல்லட்டும். எதிரி நாட்டு மன்னன் அனுப்பும் புறாவை ஆதிமூலக்கிருஷ்னன் அடிச்சு சாப்பிட்டு ஏப்பம் விடுறமாதிரி ஒரு புது நகைச்சுவை துணுக்கு வெச்சிருக்கேன். எல்லாரும் குலுங்கி குலுங்கி சிரிச்சு..

கார்க்கி : சகா, என்னை தோழி கூப்பிடறாங்க. எனக்கு ஜொள்றதுக்கு வேற விஷயம் எதுவும் இல்லாததால நான் பப்ளுவோட அப்லு ஆயிக்கறேன்..

பட்டாப்பட்டி : பதிவர்கள் எல்லாரும் சங்கம் அமைக்கறது சரிதான் சார். ஆனா பதிவர் சங் அப்படீன்னு பேர் வைங்களேன். கொஞ்சம் டெரரா இருக்கும்...நான் சிங்கை கிளை தலைவர் பொறுப்பு ஏத்துக்கறேன்..

டோண்டு : எனக்கென்னவோ இந்த தம்பி சிங்கப்பூர்ல இருக்கறதால இவன் போலி டோண்டா இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு.

முகிலன் : யார் சார் இந்த போலிடோண்டு ?

டோண்டு : (தோளில் கை போட்டு ஓரமாக தள்ளிக்கொண்டு போய் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்) அதாவது தம்பி, நான் உனக்கு எலிக்குட்டி சோதனைன்னா என்னன்னு சொல்றேன்.

டி.ஆர்.அஷோக் : மூட்டு செத்த பார்ப்பனர்களை இந்த கூட்டத்துக்கு அழைக்கவேண்டாம் என்று எத்தனை முறை சொன்னேன் ? முதல் வரிசையில போயி உக்காந்துக்கறாங்க. இதை எதிர்த்து நான் உடனே உள் நடப்பு செய்யறேன்.

அதிஷா : நர்சிம், எந்த பிரபலத்தையும் கூப்பிடாத இந்த குளம் சந்திப்பு எனக்கு குட்டை மாதிரி தெரியுது.

லக்கி : தோழர், நான் நெட்டை. குட்டையில்லையே ? நல்ல பதிவு. நன்றி பத்ரி.

பரிசல் : லக்கி நீங்க ஏன் மந்திரிச்சுவிட்டமாதிரி இருக்கீங்க ?

லக்கி : நான் கடவுளையும் நம்புறதில்லை, சாமியாரையும் நம்புறதில்லை, அப்புறம் எப்படி நான் மந்திரிச்சு உட்டமாதிரி அலையமுடியும் ?

மணிஜி : நான் சாமியாரினிகளை நம்பலாம்னு இருக்கேன். ஜெயசுதா சாமியாரா ?

ஆதிமூலகிருஷ் : இல்லை. மாமியார். இந்த மீட்டிங்குக்கு சம்பந்தமா பேசுய்யா. சிக்ஸ் ஸிக்மாப்படி இந்த கூட்டம் ஊத்திக்கும்னு எனக்கு தோனுது ?

கேபிள் : நான் யூத்து. எனக்கு ஸிக்ஸ் பேக் பாடி இருக்கறத பத்தி தான சொல்ற ? அதை விடு...எப்படி கூட்டம் ஊத்திக்கும் ? முதல்ல எல்லாரையும் அரவணைக்கலாம். ஒரு ஏ ஜோக் சொல்றேன் ஆதி நீ கேளேன்..ஜாக்கி நீ கேளேன்...பாஸ்டன் சிரிராம் நீ கேளேன்..

நர்சிம் : (குரலை உயர்த்தி ) ஷட் அப் !!! உங்களை எல்லாம் சர்க்கஸ் புலி இருக்கற கூண்டுல தூக்கி போட்டுடுவேன்...

வெள்ளிநிலா ஷர்புதீன் : நர்சிம் நர்சிம். அப்படியே ஒவ்வொரு கூண்டுலயும் இந்த வெள்ளிநிலா புத்தகத்தையும் போடுங்களேன். தம் பிரியாணி செய்வது எப்படின்னு மூனாவது பக்கத்துல காயல்பட்டினம் அரிசி மண்டி மொத்த வியாபாரம் விளம்பரத்துக்கு கீழ இருக்கு !!

நர்சிம் : என்னை பாத்தா பாவமாயில்லையா ?

கிழவன் : தமிழின் புதிய திரட்டி கிழவன். ஓட்டளிப்பு பட்டை பெற இங்கே க்ளிக். உங்கள் பதிவுக்கு கன்னாபின்னாவென ஹிட்டு வரவேண்டுமா ? இங்கே க்ளிக்.

நர்சிம் : இப்ப என்னைய என்னதான் பண்ணச்சொல்றீங்க ? இந்த குளத்துலயே விழுந்து நான் முழுகிடுவேன்.

கேபிள் : இப்ப நான் ஒரு விஷயம் சொல்றேன். அதை கேட்டுட்டு மேற்கொண்டு யாரா இருந்தாலும் பேசுங்க...

...
..
..
..

... சிறிது நேரம் கழித்து ....
..
..

வீட்டுக்குள் தலைதெறிக்க ஓடிவரும் டிவிஆர் அய்யாவை வீட்டம்மா ஆறுதலாக பிடிக்கிறார்கள். ஏங்க இந்த ஓட்டம் என்ன ஆச்சு ?

வந்து கேபிள் சங்கர். கேபிள் சங்கர்..

ஏன் என்ன ஆச்சு ? கேபிள் சங்கர் என்ன பண்ணாரு ?

ஓடிவந்த மூச்சு இறைக்க இறைக்க சொல்கிறார் டிவிஆர்...30 ரூபாயில 30 ஆயிரம் பேரை சேர்த்து நர்சிம்மை ஹீரோவா போட்டு முக்கோண காதல் கதை பண்றேன்னார். பாக்கெட்ல கைய உட்டு ஆட்டோவுக்கு வெச்சிருந்த 25 ரூபாயை புடுங்கிட்டார். பாக்கி அஞ்சு ரூபாய்க்கு பேண்ட் பாக்கெட்ல கைய உடுறதுக்கு முன்னாடி ஓடிவந்துட்டேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

Friday, May 07, 2010

நித்யானந்தா - விலைபோன காவல்துறை

நித்யானந்தா விவகாரத்தில் யார் கச்சை கட்டுகிறார்களோ இல்லையோ ? ஊடகத்துறை நன்றாக கல்லா கட்டுகிறது. ஒரு ஊடகம் ஒரு படி மேலே போய், காசை கட்டு வீடியோ பார் என்று ப்ளூ ப்லிம் விற்கும் அளவில் சென்றது.





அதுவும் நித்யானந்தா படத்தை போட்டு, அந்த நடிகை இந்த நடிகை என்று யாரையாவது லே அவுட்டில் போட்டு பணம் சம்பாதித்தன புத்தகங்கள். வழக்கமாக நடிகை படத்தை போட காரணம் கிடைக்கவில்லை என்றால் நடிகை கோலம் போடுவது, பொங்கல் வைப்பது, உடற்பயிற்சி செய்வது என்று பக்கத்தை நிரப்புவார்கள். இவர்கள் வெறும் வாயில் அவல் போல நித்தி மாட்டிக்கொண்டார் இப்போது..


லெட்ஸ் பாஸ் ஆன்..!!

இன்றைக்கு நித்யானந்தாவை சிஅய்டி அதிகாரிகள் விசாரணை செய்யும் காட்சியும், அவரை லாக்கப்பில் அடைத்து பூட்டும் காட்சியும், அவர் அங்கே அமருவதும், படுத்து உறங்கிக்கொண்டிருப்பதும் ஆகிய காட்சிகளை காவல் நிலையத்தின் அல்லது காவல் தலைமையகத்தின் சி.சி.டி.வி பூட்டேஜுகளாக செய்தி காட்சி ஊடகங்கள் வெளியிடுகின்றன.

என்ன அய்யா நடக்கிறது இந்த நாட்டில் ? அதி முக்கியமான காவல் நிலைய இண்ட்ராகேஷன் காட்சிகள் ஊடகங்களுக்கு எப்படி விற்கப்பட்டன ? இவை விற்கப்பட்டன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பாதுகாப்புத்துறை எங்கே அய்யா இருக்கிறது ? இந்த அளவுக்கு லீக்கேஜ் ஆன ப்ராஸஸ் ஐ கையில் வைத்துக்கொண்டிருந்தால், ஒரு கஸாப் அல்ல, நூறு கஸாப் இந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பான்.

அந்த வீடியோவில் தெரியும் டி.வி குருப்ரஸாத், கருநாடக போலீசு சிஐடியின் டி.ஐ.ஜி. மற்றொருவர் டி.ஜி.பி சரண் ரெட்டி. இவர்கள் அனுமதி கொடுத்தார்களா என்ன, இந்த விசாரணை நடவடிக்கைகளை படம் பிடித்து ஒளிபரப்ப ? இது குறித்து கடுமையான விசாரணை மற்றும் நடவடிக்கை தேவை.

இங்கே மற்றொரு முக்கியமான விடயம். நித்தி குட்டி அதே காவி உடையுடன் இருந்துவருகிறது. கதவை திறந்து உள்ளே போ என்றவுடன் சப்ஜாடாக உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டு, அப்புறம் அப்படியே உறக்கம்.

உலகம் எங்கும் சுற்றி ஆன்மீகம் பரப்பி அதனை நம்புவோர் வாழ்வில் ஒளியேற்றி வந்த சுவாமியை இப்படியா சாதாரண செல்லில் அடைப்பது ? ஒரு நல்ல கட்டில் மெத்தை கொடுக்கவேண்டாமோ ? சுவாமி நித்யானந்தா எந்த குற்றமும் செய்யவில்லை, அவரது ப்ரைவஸியை கெடுத்த ஊடகத்துறை தான் குற்றம் செய்துள்ளது என்பது என்னுடைய ஸ்டேண்ட் ஆகும்..இந்த சுட்டியில்  முழுமையாக பார்க்கலாம்...

ஆகவே நித்யானந்தா பெரும் சமூக குற்றம் எதுவும் செய்துவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. உச்சநீதிமன்றம் நார்கோ அனலிஸில் சோதனை தவறு என்று சொல்லிவிட்டது. குறைந்தபட்ச மனித உரிமையாவது காக்கப்பட்டது. இல்லை என்றால் அதற்கும் நித்தியை அழைத்துப்போய், படுக்க வைத்து, மஸாஜ் செய்து, கன்னத்தில் அறைந்து ஊசி போட்டு கொடுமைப்படுத்தியிருப்பீர்கள்.

ஐ சப்போர்ட் நித்தி, For நியாயமான விசாரணை, தவறு இருந்தால் தண்டனை, or Else, Leave Him Alone...!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....