Wednesday, November 17, 2010

மிஸ்டர் எக்ஸுடன் ஜிடாக் சிறு விவாதத்தின் தொகுப்பு

செந்தழல் ரவி : தல இருக்கீங்களா ?

எக்ஸ் : ம் சொல்லுப்பா. என்ன மேட்டர் ? ரொம்பநாளா ஆளை காணோம் ?

செந்தழல் ரவி : கொஞ்சம் பிஸி. அதை விடுங்க. அந்த பெரிய எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரோட கதையை சுட்டுட்டாராமே ? அந்த‌ மூல‌க்க‌தையை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்க‌ன்னு கேள்விப்ப‌ட்டேன் உண்மையா ?

எக்ஸ் : எங்க‌ப்பா பெரிய‌ புத்த‌க‌ சேக‌ரிப்பாள‌ர்னு தெரியும்ல‌ ? அவ‌ர்ட்ட முடவன் வளத்த வெள்ளைப்புறா இருந்த‌து. ஒருமுறை போஸ்ட் கார்டு கூட‌ போட்டார் எழுதின‌ எழுத்தாள‌ருக்கு.

செந்த‌ழ‌ல் ர‌வி : அதை கேள்விப்ப‌ட்டேன். ஆனா பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌ல் நீங்க‌ எழுத்துகூட்டியிருக்கீங்க‌ன்னு சொன்னாங்க‌. அது உண்மையா. ?

எக்ஸ் : ஆமாம். நான் அவ‌ரோட‌ பெரிய‌ ர‌சிக‌னாச்சே. ப‌டிக்காமே இருப்பேனா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : யோவ் அப்ப‌ ப‌ட்டுனு மேட்ட‌ரை போட்டு உடை. சுட்டாரா இல்லையா ?

எக்ஸ் : ரவி என்ன‌ காமெடியா ? அது எத்த‌னை ப‌க்க‌ம் ? இது எத்த‌னை ப‌க்க‌ம் ? 26 எங்கே ? 700 எங்கே ? வ‌டிவ‌ம் ஒன்னா இருக்குது அப்ப‌டீங்க‌ற‌துக்காக‌ உருண்டையா இருக்க‌ற‌து எல்லாம் ப‌ந்தா ?

செந்தழ‌ல் ர‌வி : இல்லீங்ணா. துரத்தப்பட்ட தொழிற்ச‌ங்க‌வாதி. குடிகார‌ன். கண்டெடுக்கும் நோட்டு புத்தகம், கதைக்குள் கதை, அதுக்குள்ள கதை எக்ஸெட்ரா எக்ஸ‌ட்ரா எக்ஸ‌ட்ரா ?

எக்ஸ் : எல்லா தொழிற்ச‌ங்க‌த்துலயும் எவ‌னையாவ‌து துர‌த்திக்கிட்டே தான் இருக்காங்க‌. எல்லாரும் குடிக்க‌றான். இதெல்லாம் ஒரு ரிச‌ம்பிள்ன‌ஸா ? நெடுஞ்சாலையில் பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு ஒருத்த‌ன் க‌தை எழுதினா, வேற‌ யாரும் நெடுஞ்சாலையில‌ வ‌ர்ர‌ பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு க‌தை எழுத‌வே கூடாதா ? அப்ப‌டி இருந்தா அ ஆ ஈ ஈன்னு இருக்க‌ எழுத்து கூட‌த்தான்யா காப்பி.

செந்தழ‌ல் ர‌வி : த‌ல. இது மாதிரி க்ளோப‌ல் ரிச‌ம்பிள்ன‌ஸை சொல்ல‌லை. குறிப்பிட்ட‌ ஒரு வ‌டிவ‌ம். க‌தைக்குள் க‌தை. அதுக்குள் க‌தை. அந்த‌ மாதிரியான‌ வ‌டிவ‌ ஒற்றுமை ஒரு இண்ட‌ல‌க்சுவ‌ல் ப்ராப்ப‌ர்ட்டி இல்லையா ? (அதான் அறிவார்ந்த‌ சொத்துடைமை)

எக்ஸ் : ம்க்கும். கிழிஞ்ச‌து. முத‌ல்ல‌, ஒன்னு சொல்லு. ஜெ மாதிரி ஒரு ம‌ண்டை சுட்டுத்தான் க‌தை எழுத‌னுமா ? தும்முற‌தை வெச்சே ப‌தினைஞ்சு ப‌க்க‌ம் எழுதுற‌ ஆளுக்கு 13 வ‌ருச‌த்துக்கு முன்னாடி வ‌ந்த‌ ஒரு ப‌டைப்பை சுட‌வேண்டிய‌ தேவை என்ன‌ ?

செந்த‌ழ‌ல் ர‌வி : த‌ல‌. இப்ப‌ அதுவா பிர‌ச்ச‌னை ? ஜெமோவின் கூர்மையான எழுத்தாற்ற‌ல், உள் ஒளி, ய‌தோ ய‌தோ க‌வாசாகி அதோ அதோ மிட்சுபிஷி, த‌த்துவ‌ம், இல‌க்கிய‌ம், இசை, நடை(கை)ச்சுவை இது ப‌த்தி இப்ப‌ நான் கேட்க‌லையே ? அடிச்சாரா இல்லையா , அதை மட்டும் சொல்லுங்க போதும்..?

எக்ஸ் : ரெண்டு ப‌டைப்பையும் ப‌டிச்ச‌வ‌ன் என்ற‌ முறையில் இல்லை என்று எளிதாக‌ சொல்ல‌லாம். அதுவும் இல்லாம‌ இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் இத‌னை எளிதாக‌ க‌ண்டுகொள்வார்க‌ள் என்று கூட‌ தெரியாத‌ முட்டாளா அவ‌ர் ? இது வெறும் வெத்து ப‌ப்ளிஸிட்டி ஸ்ட‌ண்ட். எந்திர‌ன் க‌தையை எட்டுபேர் சொந்த‌ம் கொண்டாட‌லையா ? அப்ப‌டி சொந்த‌ம் கொண்டாடுப‌வ‌ர்க‌ள் எல்லாம் என்ன‌ ஜ‌ப்பான்ல சிலிக்கான் சில்லை புரட்டி போட்டு ரோபோவா த‌யாரிக்க‌றானுங்க‌ ? த‌க்காளி தீபாவ‌ளி ம‌ல‌ருக்கு க‌தை எழுத‌ற‌வங்க‌ தானே ? டென்ஷ‌னாயிடுவேன் நான்.

செந்த‌ழ‌ல் ர‌வி: த‌ல‌ அப்ப‌டி பார்த்தா எந்திர‌னும் ரெண்டு மூனு இங்கிலீசு ரோபோ ப‌ட‌த்தோட‌ காப்பி தானே ? ஷ‌ங்க‌ர் என்ன‌ சிலிக்கான் வேலியில‌ மேய‌ற‌ ஆடா ? இல்லை சூப்ப‌ர் க‌ம்பூட்ட‌ர் சைண்ட்டிஸ்டா ? அதை விடுங்க ராஜேஷ் குமார் எழுதின ஆயிரத்தி நானூனு நாவல்ல இன்னைக்கு வர்ர எத்தனை படங்களோட பாதிப்பு இருக்கு ?

எக்ஸ் : ராஜேஷ் குமாரை எல்லாம் நாங்க இலக்கியவாதி ஆட்டத்துல க்கறதில்லையேப்பா.

செந்தழல் ரவி : என்னாது ராஜேஷ்குமார் இலக்கியவாதி இல்லையா ? உங்க கும்பல் பாலகுமாரனையும் ஒத்துக்கமாட்டேங்குது. ஏங்ணா கமர்ஷியல் ரைட்டர்ஸை ஆட்டத்துல சேக்கமாட்டேங்குறீங்க ? அப்படி பார்த்தா சுஜாதா கூட கமர்ஷியல் ரைட்டர்தானே ?

எக்ஸ் : அது இல்லை ரவி

செந்தழல் ரவி : என்ன அது இல்லை இது இல்லை. சிவகாசி எஸ் விஜயன் காமிக்ஸ் போட முடியாம முடங்கியபோது ஒரு பெரிய க்ரூப் ராஜேஷ் குமாரை படிக்கலையா ?

எக்ஸ் : ட்ரெயின்ல போகும்போது வாட்டர் பாட்டிலோட சேர்த்து வாங்குற பாக்கெட் நாவலை எப்படிய்யா இலக்கியம்னு ஒத்துக்க முடியும் ?

செந்தழல் ரவி : அண்ணே சும்மா டகுல்பாஜி காட்டாதீங்க. இலக்கியம்னு ஒத்துக்கவேண்டாம். இலக்கியவாதின்னு ஒத்துக்கோங்களேன். பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடியே சி.பி.யுன்னா செண்ட்ரல் ப்ராஸஸிங் யூனிட்னு பாக்கெட் நாவல்ல கொண்டுவந்தவர். இன்னைக்கு நடக்கற நியூட்ரினோ ஆராய்ச்சி வரை பாமர மக்களுக்கு புரியற மாதிரி சொல்லிக்கிட்டிருக்கார். இந்த சிறுபத்த்திரிக்கை, கையெழுத்து இதழ் கும்பல் வெகுஜனத்தோட ஒட்டாத மனநோயாளிங்கன்னு ரொம்பநாளா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.

எக்ஸ் : ரவி, கமர்ஷியல் ரைட்டிங் ஒரு அளவுக்கு மேல மனதுக்குள்ள நுழையமுடியாது.

செந்தழல் ரவி : அண்ணே, உள்ளொளி, புற ஒளி, நித்யானந்த யதி, அகத்தேடல் எக்ஸெட்ரா எல்லாம் பாமர மக்களோட வாசிப்புல இருந்து கிலோமீட்டர் கணக்கில இருக்கறது உண்மைன்னு ஒத்துக்கோங்க.

எக்ஸ் : சரி நீ ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கியா ?

செந்தழல் ரவி : ஆங் நிறைய.

எக்ஸ் : நிறையன்னா ?

செந்தழல் ரவி : முதல் நாலு பக்கத்தை பதினாலுமுறை.

எக்ஸ் : டேய்...

செந்தழல் ரவி : சரி நாம தேவையில்லாம பல மேட்டருக்கு போறோம்னு நினைக்கறேன். பவா செல்லத்துரையோட போனப்போ பாலகுமாரனை விசிறி சாமியார் இக்னோர் செய்ததும் வேணாம், ஜெவை கூப்டு உக்கார வெச்சதும் வேணாம், உத்தம தமிழ் எழுத்தாளருக்கும் சாருவுக்கும் உள்ள சண்டையும் வேண்டாம். நீங்க‌ பின் தொடரும் நிழலின் குரல் காப்பியா இல்லையான்னு சொல்லுங்க. ஆட்டைய க்ளோஸ் பண்ணுவோம்.

எக்ஸ் : த‌ம்பி. சும்மா விவாத‌ம் செய்ய‌ற‌துக்காக‌ இஷ்டத்துக்கும் டகுல்பாஜி உட்டு திசை திருப்பாத.. கடைசியா சொல்றேன் கேட்டுக்கோ. ஜெமோ பி.தொ.நி.குரலில் கையாண்டிருக்கும் விரிவான மீபுதின டெக்னிக், அதில் வ‌ரும் அங்க‌த‌ நாட‌க‌ம், க‌ம்யூனிஸ்டு மேட்ட‌ர்க‌ள் எல்லாம் அவ‌ரே அனுப‌வித்த‌து. அவ‌ரும் தொழிற்ச‌ங்க‌த்தில் இருந்திருக்கிறார் தெரியுமா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : அண்ணே. மாம‌ல்ல‌னும் க‌வ‌ர்மெண்ட் ஆள்தானே ? அவ‌ரும் தொழிற்ச‌ங்க‌த்தில் எல்லாம் செய‌ல்ப‌ட்டிருப்பார்தானே ? மேட்ட‌ர் என்ன‌ன்னா எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌ம்தான். இது 1999 ல் வெளிவ‌ந்த‌ நாவ‌லுக்கு 13 ஆண்டுக‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌து என்ப‌தால் தான் உங்க‌ளை கேட்கிறேன்.

எக்ஸ் : ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. எந்த‌ ஒரு பிர‌ப‌ல‌மான‌ ப‌டைப்புக்கும் ஏதோ ஒரு ப‌டைப்பு, அத‌ன் முன்னாலோ அத‌ன் பின்னாலோ வ‌ருவ‌த‌ன் மைய‌ இழை பொருந்திப்போக‌லாம். அத‌னால் அத‌னை காப்பி என்று புற‌ந்த‌ள்ளிட‌முடியுமா என்ன‌ ? பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌லில் வ‌ரும் காத்திர‌மான சிங்க வீச்சுக்கு முன்னால் ரொம்ப‌ மேலோட்ட‌மாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ முட‌வ‌ன் வ‌ள‌த்த‌ வெள்ளை புறா ஒரு முட‌மான‌ புறா.

செந்த‌ழ‌ல் ர‌வி : அப்ப‌டீன்னா யானைக்கு குதிரை ம‌ட்ட‌ம்னு சொல்றீங்க‌ளா ?

எக்ஸ் : நீ தப்பா புரிஞ்சுக்கற. மாமல்லன் மட்டமான எழுத்தாளர் அப்படீன்னோ அவரோட படைப்பு சரியில்லைன்னோ நான் சொல்லலை. அதாவ‌து பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌லுட‌ன் ஒப்பிட‌வே முடியாத‌ ப‌டைப்பு அதுன்னு சொல்ல‌வ‌ரேன். அது வேற‌ ப‌டைப்பு. வேறொரு ஆளுமையிட‌ம் இருந்து. இது வேறு ஒரு ப‌டைப்பு. முற்றிலும் வேறான‌ ஒரு ஆளுமையிட‌மிருந்து. வார்த்தைக‌ள் வேறு. வாச‌க‌ருக்கு காட்டும் சித்திர‌ம் வேறு. கேன்வாஸ் வெள்ளை ம‌ல் துணி, ஆனா வேறு வேறு ஓவிய‌ர்க‌ள் வ‌ரைஞ்ச‌ குழப்பமான வண்ணக்கலவைகளுடன் கூடிய‌ ந‌தியோட‌ ஓவிய‌ம்னு வெச்சுக்கோயேன்.

செந்த‌ழ‌ல் ர‌வி : அப்ப‌ மாம‌ல்ல‌ன் ஏன் இதை இப்ப‌ வ‌ந்து சொல்ல‌னும் ? இம்புட்டு நாளா சொல்லியிருக்க‌லாமே ?

எக்ஸ் : அவர் ஏன் இப்ப இதை சொல்றார் அப்படீன்னு மாமல்லனையே கேளு.

செந்த‌ழ‌ல் ர‌வி : உங்களுக்கு தான் ஜெமோ பழக்கமாச்சே அவர்ட்ட கேட்டு அவர் தரப்பை சொல்லுங்களேன்.

எக்ஸ் : இது வெறும் ப‌ப்ளிஸிட்டிக்காக‌ செய்ய‌ற‌து அப்ப‌டீங்க‌றார் ஜெ. பிரபலமான ஒரு படைப்பை பற்றி இப்ப‌டியான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் எழும்போது, இது ப‌ற்றி அந்த‌ ப‌டைப்புக‌ளை வாசிச்ச‌ வாச‌க‌ர்க‌ள் தான் முடிவு செய்ய‌னும்னு சொல்லிட்டார்.

செந்தழல் ரவி : அவரோட சைட்ல விளக்கம் எழுதுவாரா ? கொஞ்ச‌ம் கேட்டு சொல்லுங்க‌ளேன்.

எக்ஸ் : இதை நீ கேப்பேன்னு தெரியும். உங்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது அவரை சேட்ல புடிச்சு ஏற்கனவே கேட்டுட்டேன். இது மாதிரியான‌ சீப் ப‌ப்ளிஸிட்டிக்கெல்லாம் டைம் வேஸ்ட் ப‌ண்ண‌மாட்டேன்னுட்டார். இது தான் அவ‌ரோட‌ ப‌தில்.

செந்த‌ழ‌ல் ர‌வி : ஓக்கே ஓக்கே. அவ‌ருக்கு ஒரு தேங்ஸ் சொல்லிடுங்க. உங்க சாட்டிங்கை வெச்சே ஒரு ப‌திவை தேத்திட்டேன்.

எக்ஸ் : அடப்பாவி...

செந்தழல் ரவி : சரி உங்களை யார்னு பதிவுல போட்டுடவா ?

எக்ஸ் : போட்டுக்கோ. வழக்கமா மனசாட்சிக்கு போடுற வெள்ளை பைஜாமா குர்த்தா இல்லாம ஒரு ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுவிட்டுடு.

.....

Monday, November 15, 2010

To Mr.மணிஜி அங்கிள்



மிஸ்டர் மணிஜி, இது என்னோட ரெண்டாவது பர்த்டே ட்ரஸ். துணிக்கடை விளம்பரத்துக்கு கால்ஷீட் தருவேன். ஆனா டிவிஆர் அய்யா மாதிரி அவுட் ஆப் போக்கஸ்ல காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க !!

ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். நாங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி கொஞ்சம் கடினமானது என்றபடியால் அதிக பணிசுமை ஆகிவிடும் நாட்களில் பல்கலைகழக ஆய்வகத்திலேயே உறங்குவதுண்டு. இன்றும் அப்படித்தான். பல முறை தோல்விகளில் முடிந்த எங்களது ஆராய்ச்சி பணியில் ஒரு முறை கூட நான் சலிப்படைந்ததில்லை.
 
அதில் என் சுயநலனும் உண்டு. அல்லும் பகலும் பாடுபட்டு இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடம் இருந்து நிதி உதவி மற்றும் பணி வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தங்கை திருமணம், அம்மாவுக்கு உடல் நலன் சிகிச்சை, காதலியுடன் திருமணம் என்று என் ஆயிரம் கன‌வுகள் நிறைவேறும்.
 
ஆய்வகத்தில் எங்கள் இயந்திரத்திலேயே நான் உறங்கும் நாட்களில் சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். அங்கே குளிக்கும் வசதியில்லை. அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் ஒரு தேநீரும், முகம் அலம்ப கொஞ்சம் தண்ணீரும் மீண்டும் பணியை துவக்க போதுமானது. சாலையில் இறங்கி நடந்தேன். இன்றைக்கு எல்லாமே புதிய‌தாயிருக்கிற‌து.
 
தேநீர் க‌டையில் பெரிதாக கூட்டமில்லை.வ‌ழ‌க்க‌மான‌ தேநீர் போடும் ஆசாமி மாறியிருந்தார். ச‌ட்டைபையை தொட்டுப்பார்த்தேன். கொஞ்ச‌ம் சில்ல‌றை இருந்த‌து.
 
நான் கேட்ப‌த‌ற்கு முன்பே ? டீயா என்றார். கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மாக‌ த‌லையாட்டினேன்.பையில் இருந்து சில்ல‌றையை எடுத்து கொடுத்தேன்.
 
சார் இன்னா காமெடி ப‌ண்றியா, இந்த‌ பொத்த‌ கால‌ணா எல்லாம் இப்ப‌ வாங்குற‌தில்லை, அஞ்சு ரூபா கொடு சார் என்றார் நீர்க‌டைக்கார‌ர். விதிர்த்து நின்றேன் நான்.
 
ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு புத்த‌க‌ம் மூன்று கார்த்திகை மாத‌ம் ஏழாம் நாள் ஆங்கில‌ வ‌ருட‌ம் 1933.

எப்பதான் கேக் வெட்டுவீங்க ?

Friday, November 12, 2010

போண்டா மாதவன் பதில்கள்

புரளி மனோஹர் சொல்கிறான் என்பதால் மட்டுமல்ல. என்னுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாலும் (சரி விடுங்க பத்துக்கணக்கான) இந்த கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று என் அப்பன் தகர நெடுங்குழைகாதன் சத்தியமாக முடிவெடுத்ததில். இனி நேரே பதில்கள். (கேள்விகள் ?) அனானி ஆப்ஷன் இல்லாததால் என்னுடைய நன்பர்கள் பல ப்ளாக்கர் ஐடிகளில் வருவார்கள்.

செர்வாண்டிஸ்


கேள்வி : கோவை எண்கவுண்டர் சம்பவத்தை பற்றி நீங்கள் ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?


போண்டா : நானும் ஒரு பதிவை எழுதி வைத்திருந்தேன். எண்கவுண்டர் தவறு. அதே நேரம் பாலியல் வண்புணர்வும் தவறு. மேலும் சிறுமிகளும் இதற்கு காரணம் என்பது போல. மேலும் இஸ்ரேலில் இதை விட சிறப்பாக எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும். மாற்றுக்கருத்துக்களை எழுதிய உண்மைத்தமிழனுக்கே ஏராளமான மைனஸ் ஓட்டுக்கள் விழும் நிலையில், பார்வதி அம்மாள் விவகாரத்தில் அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?

நாட்டாமை
கேள்வி :  தமிழ்மணம் விளம்பரம் போடுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?


போண்டா : தமிழ்மணம் விளம்பரம் போடுவது நல்லதே. ஆனால் நிர்வாகிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து காசை பறிப்பது எப்படி என்பதை குறித்து நான் எழுதிய பதினைந்து பதிவுகளையும் வழிப்பறி என்ற லேபளின் கீழ் க்ளிக் செய்து படித்துக்கொண்டால் நல்லது. இப்படித்தான் சமீபத்தில் 1979 இல் அப்போதைய குடியரசு தலைவர் மாளிகையில் உகாண்டா அதிபர் கொவாடிண்டா காவாலிக்கு ப்ரெஞ்சு மொழியில் இருந்து அஸ்ஸாம் மொழிக்கு மாற்றி அதில் இருந்து இங்கிலீஷ் மொழிக்கு மாற்றி சொல்லும் டங்குவார் டவாலி வேலைக்கு (மூன்று மொழி துபாஷி) சென்ற போது பீஸ் கொடுக்காமல் ஏமாற்றிய நாற்பது வயது பிகருக்கு டகுல்பாஜி கொடுத்து அங்கே கொடியில் காய்ந்த ஜனாதிபதி மாளிகையின் சமையல்காரரின் இண்டியன் டை, மற்றும் போட்டோ ஸ்டுடியோ அழுக்கடைந்த கோட்டு, பாரின் டை (அந்த பிகரே கட்டிவிட்டது) ஆகியவற்றை அடித்துவந்ததை சொல்லவேண்டும். இன்னும் அந்த இண்டியன் டை என்னுடைய கர்ச்சீப் ஆக உபயோகம் ஆகிறது. இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், வாடிக்கையாளரிடம் வழிப்பறி என்பது ஒரு கலை.

க்ருஷ்ணன்
கேள்வி : ஆ ராசாவை ஏன் இன்னும் பிரதமர் நீக்கவில்லை ? உங்கள் கருத்து என்ன ?


போண்டா : இதுபற்றி துக்ளக் சோ கருத்து தான் என் கருத்தும். துக்ளக் சோவின் கருத்து இதுவரை எனக்கு தெரியாது.

சரவணன் கொளத்துமேடு
கேள்வி : மோடி பிரதமர் ஆக வாய்ப்பு உண்டா ?


வாங்க திரு சரவணன் அவர்களே. இப்படி திடீர்னு யாராவது உண்மையிலேயே கேள்வி கேட்டுவிடும்போது அந்த சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. என்ன கேட்டீர்கள் ? மோடி பிரதமர் பதவிக்கா ? என் அப்பன் தென் திருப்பல்லி தகர கடுங்குழைகாதன் அருளால் மோடி பிரதமர் பதவியை பிடித்தால் பட்டாப்பட்டி, மங்குணி அமைச்சர், வெளியூர்க்காரன் ஆகியோரை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும்படி செய்வேன்.

To Be Continued .........

Thursday, November 04, 2010

தீபாவளியன்று பாத்ரூம் போக சிறந்த நேரம் எது ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-
"நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் முதன்மையான கங்கையில் நீராடிட வேண்டும் என்றும் நரகாசுரன் வேண்டுகோள் விடுத்தான்'' என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாதம் அதாவது துலா மாதம் சூரியன்-சந்திரன் ஒன்று கூடும்(அமாவாசை) தினத்தில், நள்ளிரவு முடிந்து, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு(அதுதான் நரகாசுரனை வதம் செய்த நேரம்) சூரியன், சுவாதி நட்சத்திரத்தில் இருக்கையில், சந்திரன் கூடுகிற சதுர்த்தசி திதியில், நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும். வென்னீரில் கங்கை வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

சுடு தண்ணீரைக்கூட எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன் தினம் இரவில், வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், சூரியன்-சந்திரன் படம் வரைந்து, தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தில், ஆல், அரசு, அத்தி, பூவரசு ஆகிய 4 மரங்களின் பட்டைகளைப்போட்டு மூடி வைத்து விடவேண்டும். 

குறைந்தது 2-1/2 மணி நேரத்துக்குப் பின், தண்ணீரை சூடு செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, துவாதசி, அஷ்டமி, சப்தமி, சஷ்டி, சங்கரமனம் இவைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். திதி வார நட்சத்திர முதலிய எவ்விதமான தோஷம் இருப்பினும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எந்த தோஷமும் எவரையும் பாதிக்காது.

நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சதுர்த்தசி திதி, எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் ஆகும்.

தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிவரையில் குரு ஹோரை நேரம் ஆகும்.

குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, சுவாமி, அம்பாள் முன்பாக இனிப்பு வகைகளுடன் புத்தாடையை வைத்து பூஜை செய்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.

சிவபெருமான் தன்னிடம் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தவம் இருந்த நிகழ்வே கேதார கவுரி விரதமாக கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையே எப்போதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பெண்கள் தீபாவளி தினத்தில், இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தீபாவளி அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை, 10 மணியில் இருந்து 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கேதார கவுரி அனுஷ்டிப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.

இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி 04-11-2010

Read more: http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_04.html#ixzz14KfNNAyo









இந்த பதிவில் நான் எதையும் மாற்றவில்லை. எல்லாரும் பாத்ரூம் போய் குளிக்கவும். வந்தால் போகவும். வரவில்லையென்றாலும் பாதகமில்லை. முயற்சி திருவினையாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் என்பதை மனதில் வைத்து முக்கி(ய).முனகி.(யா)வது காரியத்தில் குறியாக இருக்கவும். எங்கள் கல்லூரி சாலையில் பாடும் ஒரு பாடலை நீங்களும் ஹம் செய்யலாம்.ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ ஆ ஊ ஆ.


டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....