tag:blogger.com,1999:blog-262852392024-03-14T12:29:28.226+05:30தனித்திரு விழித்திரு பசித்திரு.....ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comBlogger688125tag:blogger.com,1999:blog-26285239.post-15438637651524963502016-09-05T15:37:00.001+05:302016-09-05T15:37:33.085+05:30டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3>
<a data-cke-saved-href="http://tvpravi.blogspot.se/2016/06/blog-post.html" href="http://tvpravi.blogspot.se/2016/06/blog-post.html">டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்</a></h3>
டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.<br />
<br />
பரிந்துரை-1<br />
சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.<br />
--------------<br />
<br />
பரிந்துரை-2<br />
குழுவில் ரிப்போட் அப்டேட் செய்தபின், சீனியர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருந்து, டயட் பெற்று அதன் பின்னர் மட்டுமே பேலியோ தொடங்க வேண்டும். (உதா : யூரிக் ஆசிட் அளவுகள் அதிகம் இருந்தால், ரெட் மீட், கீரைகள் தவிர்க்க சொல்வோம். ஆனால் நீங்களாக டயட் ஆரம்பித்தால் இதை கணக்கில் கொள்ளாமல் ரெட் மீட் சாப்பிட்டு யூரிக் ஆசிட் அளவுகள் மேலும் அதிகரித்து பிறகு எங்களை குறை சொல்வீர்கள்)<br />
--------------<br />
<br />
பரிந்துரை-3<br />
தினமும் வைட்டமின் டி: வைட்டமின் டி புரோட்டகாலை பாலோ செய்யவேண்டும். அதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டும். (உங்கள் வைட்டமின் டி அளவுகள் அடுத்த ரிப்போட்டில் சிறப்பாக வரும் வரை. வைட்டமின் டி அளவுகள் 100 இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் நான் பார்க்கும் ரிப்போட்டுகளில் பலவற்றில் வைட்டமின் டி 25க்கு குறைவே. சிலருக்கு 10க்கும் குறைவு. 6 கூட பார்த்தேன். அதிக வெய்யில் இருக்கும் நம் நாட்டில் இந்த நிலை என்பது தான் மிகவும் ஆச்சர்யம். ஆக தினமும் மதிய வெய்யிலில் நின்று, அடுத்த ரிப்போட்டில் உங்கள் வைட்டமின் டி அளவு மிக அதிகரிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மதிய வெய்யிலில் (11:30 யில் இருந்து 2 மணி வரை) ஏதாவது ஒரு 20 நிமிடம், தண்ணீர் வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொள்ளவும்.<br />
<br />
தினமும் வெய்யிலில் 20 நிமிடம்.<br />
+<br />
சாப்ட்ஜெல்ஸ் டாக்டர்ஸ் பெஸ்ட் வைட்டமின் டி3 - 5000 ஐயு - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை<br />
வைட்டமின் கே2 - ஜாரோ - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை (ஜாரோ பார்முலாஸ் எம்.கே7) வைட்டமின் கே2 90 எம்சிஜி<br />
மக்னீசியம் க்ளைசினேட் - சொலாரே - ஒரு மாத்திரை இரவு உணவுக்கு முன்.<br />
----------------<br />
<br />
பரிந்துரை-4<br />
தினம் ஒரு ஒமேகா 3 - எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வெஜிட்டேரியன்கள் கண்டிப்பாக தயங்க கூடாது. 1000 எம் ஜி. டயபட்டீஸ் மக்களுக்கு மிக மிக தேவையானது. நார்வீஜியன் காட் லிவர் ஆயில் என கேட்டு பார்த்து அந்த பிராண்ட் வாங்கவும். எது பெஸ்ட் என விசாரித்து வாங்கவும்.<br />
---------------<br />
பரிந்துரை-5<br />
வைட்டமின் பி 12 குறைபாட்டை போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒருமுறை ஈரல் + ரத்த பொரியல் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.<br />
----------------<br />
<br />
பரிந்துரை-6<br />
கட்டுப்பாடற்ற சுகர் இருப்பவர்கள் (300க்கு மேல் / 11க்கு மேல்) கண்டிப்பாக வாரத்தில் ஐந்து நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நல்ல கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நமது குழுவின் வாக்கிங் ஈவண்டில் சேர்ந்து உங்கள் நடைப்பயிற்சி விவரங்களை தெரிவித்துவாருங்கள்.<br />
---------------<br />
<br />
பரிந்துரை-7<br />
பசு மஞ்சள் வைத்தியம் : கொழுப்புணவு சாப்பிட்ட பின், பசு மஞ்சள் வைத்தியம் செய்யவும். ஆர்கானிக் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் + துளசி இலை 3 + மிளகு தட்டியது 8 + ஒரு சின்ன வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டியது இவற்றை மாத்திரை போல விழுங்கவும், அல்லது கடித்தும் சாப்பிடலாம்.<br />
-------------<br />
பரிந்துரை-8<br />
பூண்டு : தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அப்படியே விழுங்கவும். (இரண்டு பூண்டு என்றால் இரண்டு முழு பூண்டு அல்ல. இரண்டு சின்ன பல் பூண்டு.)<br />
-----------------<br />
<br />
பரிந்துரை-9<br />
லெமன் ஜூஸ் : தினமும் ரெண்டு எலுமிச்சையை ஒரு பெரிய க்ளாஸில் பிழிந்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு குடிக்கவும். ஒரே நேரமாக குடிக்க முடியவில்லை என்றால் லெமன் ஜூஸ் வாட்டர் பாட்டில் தயாரித்துக்கொண்டு தாகம் வரும்போதெல்லாம் இதையே குடிக்கவும். பேராதிமனிதனான நம் குழுவின் தலைவர் செல்வன் தினம் 4 லெமன் ஜூஸ் குடிக்கிறார். விருப்பம் இருந்தால் நீங்களும் செய்யலாம்.<br />
--------------<br />
<br />
பரிந்துரை-10<br />
ஆப்பிள் சைடர் வினிகர் : உங்கள் குருதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை 20 சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடியது ஆப்பிள் சைடர் வினிகர். ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் விட்டு, அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து உணவுக்கு பின் ஒவ்வொரு வேளையும் அருந்தலாம். ப்ராக் ப்ராண்ட் ரா அண்பில்ட்டர்ட் ஆப்பிள் சைடர் வினிகர் மட்டுமே அருந்தவேண்டும். நார்மல் வினிகர், நார்மர் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்த கூடாது. இது அந்த நிறுவனத்தின் இணைய தளம் - bragg.com. அனைத்து இ-காம் இணைய தளங்களிலும் ஆப்பிள் சைடர் வினிகர் கிடைக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் எப்படி அருந்துவது என்ற யூடியூப் வீடியோ இது : https://www.youtube.com/watch?v=SmQRpL97ltE<br />
--------------<br />
<br />
பரிந்துரை-11<br />
நாட்டு மருந்துகள், நிலவேம்பு பொடி பவுடர் தூள் குச்சி மரம் ஓமியோபதி மருந்துகள் சித்தா யுனானி மருந்துகள் எனக்கு எந்த பலனையும் தரவில்லை. இது என் சொந்த அனுபவம். மேற்கொண்டு இதில் எதுவும் பேசுவதாயில்லை. (அக்கு பஞ்சர், பீலர் பாஸ்கர் என ஏமாந்தவர்கள் பலரும் நம் குழுவில் உண்டு, அவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.)<br />
--------------<br />
<br />
பரிந்துரை-12<br />
டயபட்டீஸ் இருக்கும் பலரிடம் குருதியில் ரத்த சர்க்கரை அளவை அளக்கும் கருவி கிடையாது. நீங்கள் குடும்பமாக சினிமாவுக்கு போகும் செலவு தான் அந்த மெஷின். அக்யூ செக் என்ற பிராண்ட் நன்றாக இருக்கிறது. பேலியோ ஆரம்பித்தப்பின் வாரம் 3 முறையாவது உணவுக்கு முன் ஒரு முறையும், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறையும் குருதி பரிசோதனை செய்து பார்த்துவரவும். காலை உணவுக்கு முன் 110க்கு கீழேயும், உணவுக்கு பின் 140க்கு கீழேயும் இருக்கவேண்டும்.<br />
--------------<br />
<br />
பரிந்துரை-13<br />
டயபட்டீஸுக்கு இதுவரை எந்த மாத்திரையும் எடுக்காமல் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் ரிப்போட்டை ஆங்கில மருத்துவர் - டாக்டர் எம்பிபிஎஸ்ஸிடம் காட்டி டயபட்டீஸுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி தவறாமல் உண்ணவும். ஒரு மாதம் பேலியோ எடுத்தபிறகு மீண்டும் ஒரு ரிப்போர்ட் எடுத்து, அதே மருத்துவரிடம் காட்டி மாத்திரை அளவுகள் குறைப்பதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ செய்யலாம்.<br />
<br />
டயபட்டீஸுக்கு மாத்திரை எடுப்பவர்கள் உங்கள் மாத்திரைகளை நீங்களாக நிறுத்தவேண்டாம். பேலியோ பாலோ செய்து அதன் பின் குருதி பரிசோதனை செய்து மருத்துவரின் அனுமதி பெற்று அதன் பின்னரே மாத்திரைகளை நிறுத்தவேண்டும்.நான் அப்படித்தான் செய்தேன். மருத்துவர் மெட்பார்மினை நிறுத்தி முழுவதும் டயட் பாலோ செய் என அனுமதி கொடுத்தார்.<br />
<br />
அவர் அனுமதியோடு பேலியோவை கடைபிடித்து குருதி சர்க்கரை அளவுகளை குறைத்து காட்டினேன். நீங்களும் அவ்வாறே செய்க.அதிகப்படியான டயபட்டீஸ் தொடர்ந்து இருந்தால் 8 முதல் 10 ஆண்டுகளில் டயாலிஸிஸ் செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை.<br />
-----------------<br />
<br />
பரிந்துரை-14<br />
பெண்கள் கண்டிப்பாக இரும்பு சட்டியில் சமைத்து உண்டால் உங்கள் இரும்பு சத்து குறைபாடு நீங்கும். பெரும்பாலான டயபட்டீக் இருக்கும் பெண்களுக்கு (ஏன் இல்லாதவர்களுக்கும் கூட) இரும்பு சத்து குறைபாடு கண்டிப்பாக இருக்கிறது என்பதை பல ரிப்போட்களில் பார்க்கிறேன்.<br />
----------------<br />
<br />
பரிந்துரை-15<br />
கிழங்கு வகைகள் தவிர்த்துவிடவும். டயபட்டீஸ் முழுதாக குறைந்தபிறகு எடை இழப்பை நிறுத்த தினம் ஒரு உருளைக்கிழங்கு எடுக்கலாம்.பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய காய்கறிகள் பட்டியலில் கேரட், பீட்ரூட் எல்லாம் உண்டு. ஆனால் டயபட்டீஸுக்கு அது பொருந்தாது.<br />
-----------------<br />
<br />
பரிந்துரை-16<br />
சர்க்கரை வியாதி / நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பால் பொருட்கள் முடிந்த அளவு தவிர்த்துவிடவேண்டும். காலையில் சிற்றுண்டி தவிர்க்க நினைப்பவர்கள் நல்லதாக ஒரு கப் முழுக்கொழுப்பு பால் ஒரு கப் அருந்தலாம். ஆனால் உங்கள் மூன்று மாத குருதி பரிசோதனையில் டயபட்டீக் அதிகரித்திருந்தால் தவிர்த்துவிடவும். சரியான அளவில் இருந்தால் தொடர்ந்து எடுக்கலாம்.<br />
--------------------<br />
<br />
பரிந்துரை-17<br />
பாத பராமரிப்பு : இரவில் ஈமு ஆயில் போட்டு பாதங்களை மசாஜ் செய்யலாம். பாதங்களில் ஆறாத புண் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். மாதம் ஒரு முறை டெட்டால் போட்டு நன்றாக ஊறவைத்து (20 நிமிடமாவது) கழுவலாம். பாதங்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.<br />
---------------------<br />
<br />
இறுதியாக - உங்களுக்கு சர்க்கரை நோய் / நீரிழிவு குறைபாடு இருக்கிறது, இருந்தது, வரப்போகிறது என்றால் மேலே சொன்ன பரிந்துரைகளோடு பேலியோ டயட் ஆரம்பித்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைத்து, நிறுத்தி, ஆறு வாரங்களில் ஏசி1 டெஸ்ட் எடுத்து பார்க்கவும். டயபட்டீஸ் நன்றாக குறைந்து 5 இல் இருந்து 5.5 வரை முடிவுகள் இருந்தால் சூப்பர் பெஸ். இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் முழுமையாக கார்ப் தவிர்க்க முயலவேண்டும். எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானே அடங்கும். கார்பை குறைத்தால் டயபட்டீஸ் தானே குறையும். டயபட்டீஸ் குறைந்தால் ஆரோக்கிய வாழ்வு மீண்டும் கிடைக்கும்.<br />
<br />
<br />
Credits: Dr.Bruno, MBBS, MCS, Dr.V.Hariharan MBBS, MD. Dr Raja Ekambaram MBBS, Dr,Sumathi Raja MBBS, Dr Vijayapriya Panneerselvam Sivaram Jagadeesan (Author, Unnai Velven Neerizive), DR.Arun, MBBS.<br />
<br />
Link to buy Paleo Books : http://paleo.co.in (you can also buy various products displayed in our meetup events - People want to add their products, do let me know)</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-25826727549952691032016-07-06T14:54:00.004+05:302016-07-06T14:54:54.179+05:30இரும்பு பாத்திரத்தில் சமையல். அல்லது சமையலில் இரும்பு மீன்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: "San Francisco", -apple-system, BlinkMacSystemFont, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: "San Francisco", -apple-system, BlinkMacSystemFont, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
கம்போடிய மக்கள் இரும்பு சத்து குறைபாடு மற்றும் அனீமியாவில் தவித்தபோது கனடாவை சேர்ந்த ஹெல்த் ஒர்க்கர்கள் / Guelph பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் சார்லஸ் குறிப்பாக - அந்த ரத்த மாதிரிகளை சோதித்து இரும்பு பாத்திரம் / கேஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமையல் செய்தால் அவர்களுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கும் என பரிந்துரைத்தார்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: "San Francisco", -apple-system, BlinkMacSystemFont, ".SFNSText-Regular", sans-serif; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ஆனால் இந்த முயற்சி செயல் வடிவம் பெற தடையாக இருந்தது அனைவருக்கும் பாத்திரம் கொடுப<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;">்பதற்கான பட்ஜெட். காரணம் சுமார் 60 சதவீத கம்போடிய பெண்களுக்கு பாத்திரங்கள் கொடுக்க எவ்வளவு செலவாகும் ?</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px;">
டாக்டர் சார்லஸ் முதலில் தாமரை வடிவத்திலான இரும்பு செய்து அதனை உணவு சமைக்கும் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் போதும் என கிராமத்தினரிடம் தாமரையை வழங்கினார். ஆனால் அது போதுமான வரவேற்பை பெறவில்லை. அதன் பின் கிராம பெரியவர்களிடம் உரையாடி - மீன் வடிவத்தை மக்கள் அதிஷ்டமாக கருதுவார்கள் என கண்டறிந்தார்..</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
அதன்பின் செப்டம்பர் 2008 முதல் பிப்ரவரி 2009 வரை சோதனை முறையில் இரும்பு மீன் கொடுக்கப்பட்டு அது சமையல் பாத்திரத்தில் போட்டு சமைக்கும்படி வலியுறுத்தப்பட்டது..அதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மேலும் ஒரு ஆண்டுகள் வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
12 மாதங்களில் இரும்பு சத்து குறைபாடு / அனீமியா 43% குறைந்தது கண்டறியப்பட்டது !!!! ஆச்சர்யம்தானே !!!</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
நான் பரிசோதித்து பார்க்கும் பெரும்பாலான மருத்துவ சோதனை முடிவுகளில் இரும்பு சத்து குறைபாடு உள்ளது. பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. இது அனீமியா, உடல் சோர்வு, பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சனை போன்றவை வரலாம்..</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தீர்வுகள்:</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இரும்பு பாத்திரத்தில் சமைக்கவும்.<br />காஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமைக்கவும்.<br />கம்போடியாவுக்கு டூர் போய் வருபவர்களிடம் லக்கி பிஷ் வாங்கி வர சொல்லவும்.<br />உள்ளுறுப்பு மாமிசம், ரத்த பொரியல் சாப்பிடவும்.<br />மேற்சொன்ன எதுவும் முடியவில்லை என்றால் அயர்ன் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவும் !</div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
மற்றபடி ஒரு பாப்புலரான வதந்தி : பேரிச்சம் பழத்தில் நிறைய இரும்பு சத்து உள்ளது என்பது. பேரிச்சம்பழம் பழைய இரும்பு வியாபாரிகள் வாங்குவார்கள் என்பதை தவிர இரும்புக்கும் பேரிச்சம்பழத்துக்கும் சம்பந்தமில்லை.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: San Francisco, -apple-system, BlinkMacSystemFont, .SFNSText-Regular, sans-serif;"><span style="font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px;">Watch Video : <a href="http://www.bbc.com/news/health-32749629">http://www.bbc.com/news/health-32749629</a></span></span></div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="color: #1d2129; font-family: inherit; font-size: 14px; letter-spacing: -0.24px; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px;">
இரும்பு பாத்திரம் உங்க ஊர் பாத்திர கடையில் கிடைக்கும்.</div>
</div>
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-26285239.post-7640311171758444562016-06-25T19:25:00.001+05:302016-09-05T15:35:41.369+05:30டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h3>
<a data-cke-saved-href="http://tvpravi.blogspot.se/2016/06/blog-post.html" href="http://tvpravi.blogspot.se/2016/06/blog-post.html">டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்</a></h3>
டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.<br />
பரிந்துரை-1<br />சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.<br />--------------<br />
பரிந்துரை-2<br />குழுவில் ரிப்போட் அப்டேட் செய்தபின், சீனியர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருந்து, டயட் பெற்று அதன் பின்னர் மட்டுமே பேலியோ தொடங்க வேண்டும். (உதா : யூரிக் ஆசிட் அளவுகள் அதிகம் இருந்தால், ரெட் மீட், கீரைகள் தவிர்க்க சொல்வோம். ஆனால் நீங்களாக டயட் ஆரம்பித்தால் இதை கணக்கில் கொள்ளாமல் ரெட் மீட் சாப்பிட்டு யூரிக் ஆசிட் அளவுகள் மேலும் அதிகரித்து பிறகு எங்களை குறை சொல்வீர்கள்)<br />--------------<br />
பரிந்துரை-3<br />தினமும் வைட்டமின் டி: வைட்டமின் டி புரோட்டகாலை பாலோ செய்யவேண்டும். அதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டும். (உங்கள் வைட்டமின் டி அளவுகள் அடுத்த ரிப்போட்டில் சிறப்பாக வரும் வரை. வைட்டமின் டி அளவுகள் 100 இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் நான் பார்க்கும் ரிப்போட்டுகளில் பலவற்றில் வைட்டமின் டி 25க்கு குறைவே. சிலருக்கு 10க்கும் குறைவு. 6 கூட பார்த்தேன். அதிக வெய்யில் இருக்கும் நம் நாட்டில் இந்த நிலை என்பது தான் மிகவும் ஆச்சர்யம். ஆக தினமும் மதிய வெய்யிலில் நின்று, அடுத்த ரிப்போட்டில் உங்கள் வைட்டமின் டி அளவு மிக அதிகரிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மதிய வெய்யிலில் (11:30 யில் இருந்து 2 மணி வரை) ஏதாவது ஒரு 20 நிமிடம், தண்ணீர் வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொள்ளவும்.<br /><br />தினமும் வெய்யிலில் 20 நிமிடம்.<br />+<br />சாப்ட்ஜெல்ஸ் டாக்டர்ஸ் பெஸ்ட் வைட்டமின் டி3 - 5000 ஐயு - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை<br />வைட்டமின் கே2 - ஜாரோ - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை (ஜாரோ பார்முலாஸ் எம்.கே7) வைட்டமின் கே2 90 எம்சிஜி<br />மக்னீசியம் க்ளைசினேட் - சொலாரே - ஒரு மாத்திரை இரவு உணவுக்கு முன்.<br />----------------<br />
பரிந்துரை-4<br />தினம் ஒரு ஒமேகா 3 - எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வெஜிட்டேரியன்கள் கண்டிப்பாக தயங்க கூடாது. 1000 எம் ஜி. டயபட்டீஸ் மக்களுக்கு மிக மிக தேவையானது. நார்வீஜியன் காட் லிவர் ஆயில் என கேட்டு பார்த்து அந்த பிராண்ட் வாங்கவும். எது பெஸ்ட் என விசாரித்து வாங்கவும்.<br />---------------<br />
பரிந்துரை-5<br />வைட்டமின் பி 12 குறைபாட்டை போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒருமுறை ஈரல் + ரத்த பொரியல் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.<br />----------------<br />
பரிந்துரை-6<br />கட்டுப்பாடற்ற சுகர் இருப்பவர்கள் (300க்கு மேல் / 11க்கு மேல்) கண்டிப்பாக வாரத்தில் ஐந்து நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நல்ல கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நமது குழுவின் வாக்கிங் ஈவண்டில் சேர்ந்து உங்கள் நடைப்பயிற்சி விவரங்களை தெரிவித்துவாருங்கள்.<br />---------------<br />
பரிந்துரை-7<br />பசு மஞ்சள் வைத்தியம் : கொழுப்புணவு சாப்பிட்ட பின், பசு மஞ்சள் வைத்தியம் செய்யவும். ஆர்கானிக் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் + துளசி இலை 3 + மிளகு தட்டியது 8 + ஒரு சின்ன வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டியது இவற்றை மாத்திரை போல விழுங்கவும், அல்லது கடித்தும் சாப்பிடலாம்.<br />-------------<br />
பரிந்துரை-8<br />பூண்டு : தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அப்படியே விழுங்கவும். (இரண்டு பூண்டு என்றால் இரண்டு முழு பூண்டு அல்ல. இரண்டு சின்ன பல் பூண்டு.)<br />-----------------<br />
பரிந்துரை-9<br />
லெமன் ஜூஸ் : தினமும் ரெண்டு எலுமிச்சையை ஒரு பெரிய க்ளாஸில் பிழிந்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு குடிக்கவும். ஒரே நேரமாக குடிக்க முடியவில்லை என்றால் லெமன் ஜூஸ் வாட்டர் பாட்டில் தயாரித்துக்கொண்டு தாகம் வரும்போதெல்லாம் இதையே குடிக்கவும். பேராதிமனிதனான நம் குழுவின் தலைவர் செல்வன் தினம் 4 லெமன் ஜூஸ் குடிக்கிறார். விருப்பம் இருந்தால் நீங்களும் செய்யலாம்.<br />
--------------<br />
பரிந்துரை-10<br />ஆப்பிள் சைடர் வினிகர் : உங்கள் குருதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை 20 சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடியது ஆப்பிள் சைடர் வினிகர். ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் விட்டு, அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து உணவுக்கு பின் ஒவ்வொரு வேளையும் அருந்தலாம். ப்ராக் ப்ராண்ட் ரா அண்பில்ட்டர்ட் ஆப்பிள் சைடர் வினிகர் மட்டுமே அருந்தவேண்டும். நார்மல் வினிகர், நார்மர் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்த கூடாது. இது அந்த நிறுவனத்தின் இணைய தளம் - bragg.com. அனைத்து இ-காம் இணைய தளங்களிலும் ஆப்பிள் சைடர் வினிகர் கிடைக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் எப்படி அருந்துவது என்ற யூடியூப் வீடியோ இது : https://www.youtube.com/watch?v=SmQRpL97ltE<br />--------------<br />
பரிந்துரை-11<br />நாட்டு மருந்துகள், நிலவேம்பு பொடி பவுடர் தூள் குச்சி மரம் ஓமியோபதி மருந்துகள் சித்தா யுனானி மருந்துகள் எனக்கு எந்த பலனையும் தரவில்லை. இது என் சொந்த அனுபவம். மேற்கொண்டு இதில் எதுவும் பேசுவதாயில்லை. (அக்கு பஞ்சர், பீலர் பாஸ்கர் என ஏமாந்தவர்கள் பலரும் நம் குழுவில் உண்டு, அவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.)<br />--------------<br />
பரிந்துரை-12<br />டயபட்டீஸ் இருக்கும் பலரிடம் குருதியில் ரத்த சர்க்கரை அளவை அளக்கும் கருவி கிடையாது. நீங்கள் குடும்பமாக சினிமாவுக்கு போகும் செலவு தான் அந்த மெஷின். அக்யூ செக் என்ற பிராண்ட் நன்றாக இருக்கிறது. பேலியோ ஆரம்பித்தப்பின் வாரம் 3 முறையாவது உணவுக்கு முன் ஒரு முறையும், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறையும் குருதி பரிசோதனை செய்து பார்த்துவரவும். காலை உணவுக்கு முன் 110க்கு கீழேயும், உணவுக்கு பின் 140க்கு கீழேயும் இருக்கவேண்டும்.<br />--------------<br />
பரிந்துரை-13<br />டயபட்டீஸுக்கு இதுவரை எந்த மாத்திரையும் எடுக்காமல் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் ரிப்போட்டை ஆங்கில மருத்துவர் - டாக்டர் எம்பிபிஎஸ்ஸிடம் காட்டி டயபட்டீஸுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி தவறாமல் உண்ணவும். ஒரு மாதம் பேலியோ எடுத்தபிறகு மீண்டும் ஒரு ரிப்போர்ட் எடுத்து, அதே மருத்துவரிடம் காட்டி மாத்திரை அளவுகள் குறைப்பதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ செய்யலாம்.<br />டயபட்டீஸுக்கு மாத்திரை எடுப்பவர்கள் உங்கள் மாத்திரைகளை நீங்களாக நிறுத்தவேண்டாம். பேலியோ பாலோ செய்து அதன் பின் குருதி பரிசோதனை செய்து மருத்துவரின் அனுமதி பெற்று அதன் பின்னரே மாத்திரைகளை நிறுத்தவேண்டும்.நான் அப்படித்தான் செய்தேன். மருத்துவர் மெட்பார்மினை நிறுத்தி முழுவதும் டயட் பாலோ செய் என அனுமதி கொடுத்தார். அவர் அனுமதியோடு பேலியோவை கடைபிடித்து குருதி சர்க்கரை அளவுகளை குறைத்து காட்டினேன். நீங்களும் அவ்வாறே செய்க.அதிகப்படியான டயபட்டீஸ் தொடர்ந்து இருந்தால் 8 முதல் 10 ஆண்டுகளில் டயாலிஸிஸ் செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை.<br />
-----------------<br />
பரிந்துரை-14<br />பெண்கள் கண்டிப்பாக இரும்பு சட்டியில் சமைத்து உண்டால் உங்கள் இரும்பு சத்து குறைபாடு நீங்கும். பெரும்பாலான டயபட்டீக் இருக்கும் பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு கண்டிப்பாக இருக்கிறது என்பதை பல ரிப்போட்களில் பார்க்கிறேன்.<br />
----------------<br />
பரிந்துரை-15<br />கிழங்கு வகைகள் தவிர்த்துவிடவும். டயபட்டீஸ் முழுதாக குறைந்தபிறகு எடை இழப்பை நிறுத்த தினம் ஒரு உருளைக்கிழங்கு எடுக்கலாம்.பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய காய்கறிகள் பட்டியலில் கேரட், பீட்ரூட் எல்லாம் உண்டு. ஆனால் டயபட்டீஸுக்கு அது பொருந்தாது.<br />
-----------------<br />
பரிந்துரை-16<br />சர்க்கரை வியாதி / நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பால் பொருட்கள் முடிந்த அளவு தவிர்த்துவிடவேண்டும். காலையில் சிற்றுண்டி தவிர்க்க நினைப்பவர்கள் நல்லதாக ஒரு கப் முழுக்கொழுப்பு பால் ஒரு கப் அருந்தலாம். ஆனால் உங்கள் மூன்று மாத குருதி பரிசோதனையில் டயபட்டீக் அதிகரித்திருந்தால் தவிர்த்துவிடவும். சரியான அளவில் இருந்தால் தொடர்ந்து எடுக்கலாம்.<br />
--------------------<br />
பரிந்துரை-17<br />பாத பராமரிப்பு : இரவில் ஈமு ஆயில் போட்டு பாதங்களை மசாஜ் செய்யலாம். பாதங்களில் ஆறாத புண் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். மாதம் ஒரு முறை டெட்டால் போட்டு நன்றாக ஊறவைத்து (20 நிமிடமாவது) கழுவலாம். பாதங்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.<br />---------------------<br />
இறுதியாக - உங்களுக்கு சர்க்கரை நோய் / நீரிழிவு குறைபாடு இருக்கிறது, இருந்தது, வரப்போகிறது என்றால் மேலே சொன்ன பரிந்துரைகளோடு பேலியோ டயட் ஆரம்பித்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைத்து, நிறுத்தி, ஆறு வாரங்களில் ஏசி1 டெஸ்ட் எடுத்து பார்க்கவும். டயபட்டீஸ் நன்றாக குறைந்து 5 இல் இருந்து 5.5 வரை முடிவுகள் இருந்தால் சூப்பர் பெஸ். இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் முழுமையாக கார்ப் தவிர்க்க முயலவேண்டும். எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானே அடங்கும். கார்பை குறைத்தால் டயபட்டீஸ் தானே குறையும். டயபட்டீஸ் குறைந்தால் ஆரோக்கிய வாழ்வு மீண்டும் கிடைக்கும்.<br />
<br /><br />Credits: Dr.Bruno, MBBS, MCS, Dr.V.Hariharan MBBS, MD. Dr Raja Ekambaram MBBS, Dr,Sumathi Raja MBBS, Dr Vijayapriya Panneerselvam Sivaram Jagadeesan (Author, Unnai Velven Neerizive), DR.Arun, MBBS.<br />Link to buy Paleo Books : http://paleo.co.in (you can also buy various products displayed in our meetup events - People want to add their products, do let me know)</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-26285239.post-71316339509442434772014-05-09T14:51:00.001+05:302014-05-09T14:51:53.078+05:30எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..<br />
<br />
சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...<br />
<br />
அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...<br />
<br />
விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...<br />
<br />
ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்தில் பனை மரங்கள் மிதந்து வருது என்று ஒருவர் கேட்க, அட பக்கிப்பயலே அது முதலைகள்டா என்று வடிவேலு பாணியில் வலைகளை விட்டுவிட்டு டீமோடு அப்பீட் ஆன கதைகள் சொல்வார்...<br />
<br />
சாராயம் விற்றிருக்கிறார்..கிளாஸில் ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் வத்திக்குச்சியை கிழித்து போட்டு அதன் தரத்தை உறுதிசெய்து ஓரே மூச்சில் அவர் குடிப்பதை பத்து வயதில் பார்த்திருக்கிறேன்..<br />
<br />
சோடா மெஷின் அமைத்து 40 பைசாவுக்கு கிராமத்தில் பன்னீர் சோடா விற்றிருக்கிறார்..30 காசுக்கு கம்பெயினில் இருந்து வேறு ஏதோ ஒரு பானத்தை விற்க, இலவசமாக தருகிறேன் வந்து குடிங்கடா என்று அந்த பிஸினஸையும் பாட்டில்களையும் கிடாசியிருக்கிறார்...<br />
<br />
ஊரில் எல்லாரும் மிலிட்டிரிக்கு போக, நிறைய மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டிகளுக்கெல்லாம் “ஆதரவாக” இருந்திருக்கிறார்...எந்த வீட்டில் சைக்கிள் நிற்கிறது என்பதை வைத்து “கண்டுபிடிக்க” வேண்டியிருக்கும் என்று எங்க ஆயா கரித்துகொட்டுவதை கேட்டிருக்கிறேன்...சில இடங்களில் ஆண்டு கணக்கில் தினமும் சைக்கிள் நிற்கும்...இந்த ஸ்டாப் கேப் மேட்டர்களையும், அவரைது “திறமைகளை”யும் நினைத்தால் இப்பவும் வயிறு எரியுது :)<br />
<br />
70 வயதில் கிணற்றில் விழுந்து ஒருமுறை இடுப்பு உடைந்து படுக்கையில் இருந்து, அதன் பிறகு எழுந்து நடந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறார்..<br />
<br />
தண்ணீரில் வாடும் பயிர்களை காக்க / தனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஊர் கட்டுப்பாட்டை மீறி ஒரு ஊரின் ஏரியில் இருந்து அவரது நிலத்துக்கு (சுமார் 5 கிலோமீட்டர்) - இரவோடிரவாக தன்னுடைய இரண்டு மகன்களையும் வைத்து வாய்க்கால் வெட்டியிருக்கிறார்..<br />
<br />
இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லாமல் இந்த குறும்பதிவை நிறைவு செய்ய முடியாது !!<br />
<br />
முப்பதுகளின் மத்தியில் அவரது கை உடைந்துபோக, புத்தூரில் கட்டு கட்டியிருக்கிறார்கள்..ட வடிவத்தில் மடக்கி கட்டப்பட்ட கை, கட்டு பிரித்ததும் அப்படியே ப்ரீஸ் ஆன நிலையில் நின்றுவிட்டது. கையை நீட்ட முடியவில்லை..இப்படியே ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டு வாசலில் பிச்சை கேட்டு ஒரு சித்தர் சாமி வந்து நின்றுள்ளார்..<br />
<br />
வாட் நான்ஸென்ஸ் நீ பிச்சை எடுக்கிறே மேன், கம் இன்ஸைட் இந்தா சாராயம் என்று கொடுக்க, அதில் மகிழ்ந்த சித்தர் சாமி, என்னப்பா உன் கை இப்படி கிடக்கிறது என்று கேட்டிருக்கிறார்.<br />
<br />
இவர் புத்தூர் கட்டினால் ட வடிவமாகிப்போன கையை காட்ட, சற்றுநேரம் கையை அனலைஸ் செய்த சித்தர்சாமி, ஒரு சொம்பை எடுத்து, அதில் மண் நிரப்பி, அந்த சொம்பை ஒரு முழ நீளம் உள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனை பழுதடைந்து இறுகிப்போன கையின் நுனியில் கட்டிவிட்டு, இதனை 48 நாளைக்கு எடுக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..<br />
<br />
இவரும் கர்மசிரத்தையாக எங்கு போனாலும் அந்த சொம்போடு அலைய, ஊர் மக்கள் சிரித்து கிண்டல் செய்துள்ளார்கள்..ஆனால் ஆச்சர்யம் நாற்பதாவது நாளில் ஆரம்பித்தது..மெல்ல மெல்ல இறுகிப்போன ட வடிவ கைகள் நேராக, சரியாக 48 ஆவது நாளில் கை முழுமையும் நேராகி, முழுமையாக இயங்கும் வடிவத்தில் வந்துவிட்டது !!<br />
<br />
என்ன அவ்வபோது கொஞ்சம் பேட் வேர்ட்ஸ் பேசுவார், ஏய் ”அலங்காரம்மா” ஸ்டுப்பிட் நான்ஸென்ஸ் இடியட், கண்டாரஓழி என்று திட்டி கிலியை கிளப்புவார்..சுருட்டு பிடிப்பார்..பீடி பிடிப்பார்..கடைசி காலத்தில் சாராயத்துக்கு பதில் அப்பா / சித்தபா அவரை க்வாட்டருக்கு (MC) மாற்றினார்கள்...<br />
<br />
உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-26285239.post-31674902101527913182014-05-05T15:18:00.004+05:302014-05-05T15:18:52.299+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>பிஷ்ஷிங்</b><br />
<br />
சமீபமாக மிக அதிகமாக பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் பெட்டியை ரொப்புகின்றன. மீன் பிடிப்பவன் பல்வேறு தூண்டில்களை போட்டு காத்திருப்பது போல, இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் / ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பி காத்திருக்கிறார்கள்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2bHJ_stkslE6tVbU30w5C3CT-GEm0WfQAaV_mEkcoL1__poPKiJV9Ac3nzv7uPa0bjdM6sJIkvljVepLD-k6y1GAH3b4OGjwYc2e5kv_7RXtQT_oMJTI3pFxDvc-95kddQCKe9w/s1600/419-scam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2bHJ_stkslE6tVbU30w5C3CT-GEm0WfQAaV_mEkcoL1__poPKiJV9Ac3nzv7uPa0bjdM6sJIkvljVepLD-k6y1GAH3b4OGjwYc2e5kv_7RXtQT_oMJTI3pFxDvc-95kddQCKe9w/s1600/419-scam.jpg" height="320" width="289" /></a></div>
<br />
<br />
என்ன என்ன வருகின்றன என்று பார்த்தால் - துபாயில் ஹோட்டல் வேலை என்று ஆரம்பித்து TCS / CTS இல் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்பில் பயணித்து, க்வால்காம் / ஆப்பிள் ஷேர்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்ற அளவில்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJU5mOxtQEAphCtAXAfaD4irS_RbPTCyLxdZS3f7oyjqYPHG4vl0INGEM7MpUb7UcTP8s7ymWEJ8t22nKll1f-DokrLC3IoOtTFl0zCvUyRJfvVVBxc8lQ63mEqQaBDG39Wy4LPg/s1600/909852-d197d6e8-8d6e-11e3-836d-02ea2adb9f0a.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJU5mOxtQEAphCtAXAfaD4irS_RbPTCyLxdZS3f7oyjqYPHG4vl0INGEM7MpUb7UcTP8s7ymWEJ8t22nKll1f-DokrLC3IoOtTFl0zCvUyRJfvVVBxc8lQ63mEqQaBDG39Wy4LPg/s1600/909852-d197d6e8-8d6e-11e3-836d-02ea2adb9f0a.jpg" height="180" width="320" /></a></div>
<br />
<br />
தாய்லாந்து / இந்தோனேஷியா / பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முறையான கால் செண்டர்கள் கூட உண்டாம். தனி மேனேஜர் போட்டு, இளிச்சவாயர்களிடம் பணம் பிடுங்க ஜொள்ளோடு மின்னஞ்சல்கள் / பேஸ்புக் தகவல்கள் அனுப்பிவைக்கிறார்கள்..<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0ktfMZc1fDttyABJKtgRpQJ4tZmvQ98pdDc0iAeiRYJ_51Pkkhr9B1u-Iql-CLIivXJwje1vgVRoxUh6NYn4lX1zZn5KPjKITe7U64a3sBZlM_mqjQ1v_BGvcROIlSJx7kDcmTA/s1600/nigscam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0ktfMZc1fDttyABJKtgRpQJ4tZmvQ98pdDc0iAeiRYJ_51Pkkhr9B1u-Iql-CLIivXJwje1vgVRoxUh6NYn4lX1zZn5KPjKITe7U64a3sBZlM_mqjQ1v_BGvcROIlSJx7kDcmTA/s1600/nigscam.jpg" height="226" width="320" /></a></div>
<br />
<br />
ஆகவே மக்கழே, இதுபோன்ற பிஷ்ஷிஙில் மாட்டி பணம் செலுத்தவேண்டாம். உங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகிறேன் என்று டுபாக்கூர் விடுபவர்களை நம்பவேண்டாம்...அந்த ஹோட்டலில் ரூம் போட்டு காத்திருக்கிறேன், வருக வருக என்று அழைப்பவர்களை நம்பி போகவேண்டாம்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrqbz5kDm8gAxPFW66ASR7XCWdPrdvt0KQpxQLkjdhLLhkz_QafdagcbE1kj6V5TiwP9NL3ummeOX0wUtgg7G3dbSRncmwLXHGxoxUigI0tbz_RV6JHpgPXGx0KnXldAVnJfoEsg/s1600/nigerian+scammers.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrqbz5kDm8gAxPFW66ASR7XCWdPrdvt0KQpxQLkjdhLLhkz_QafdagcbE1kj6V5TiwP9NL3ummeOX0wUtgg7G3dbSRncmwLXHGxoxUigI0tbz_RV6JHpgPXGx0KnXldAVnJfoEsg/s1600/nigerian+scammers.jpg" height="237" width="320" /></a></div>
<br />
<br />
படிக்காதவர்களை விட, மெத்த படித்தவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து நிற்பதை பார்க்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது..புத்தியா பொழைச்சுக்கங்க மக்களே !!!</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-26285239.post-35689111752590964892014-04-30T20:45:00.000+05:302014-04-30T20:49:24.928+05:30உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...<br />
<br />
<u>பல்ப் நெம்பர் 1:</u><br />
<br />
சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...<br />
<br />
ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..<br />
<br />
அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..<br />
<br />
உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..<br />
<br />
கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..<br />
<br />
அவ்வ்வ்..<br />
<br />
அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjN0hr2L60cD43zJDwW8tH03_MVibtql3buupaJtvMINmx1GDb9iuVZBkjz39b0DPZo6BxNpeJRDcgRLsLaBVy772RZoLkkuuZIHN1DJJtxsItLe7WBFYhOZxIQ-kWwlfPoKVonQ/s1600/sweden.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjN0hr2L60cD43zJDwW8tH03_MVibtql3buupaJtvMINmx1GDb9iuVZBkjz39b0DPZo6BxNpeJRDcgRLsLaBVy772RZoLkkuuZIHN1DJJtxsItLe7WBFYhOZxIQ-kWwlfPoKVonQ/s1600/sweden.jpg" height="300" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<u>பெண்ணியம் !!</u><br />
<br />
ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...<br />
<br />
விஷயம் அதுவல்ல..<br />
<br />
இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senthazalravi)<br />
<br />
ஒரு பெண் தன்னை பெண்ணாக உணராமல் இருந்தாலே பெண் சுகந்திரம் !<br />
<br />
ஒரு தோழரிடம் இது பற்றி விரிவாக சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்..<br />
<br />
அலுவலகத்தின் பின்புறம் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள்..<br />
<br />
பெண்ணுக்கு கணுக்காலுக்கு மேலே ஏதோ அலர்ஜி போலிருக்கிறது..பேண்டை உயர்த்தி ஆண் அலுவலக தோழர்களிடம் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார்..<br />
<br />
இந்தியாவை நினைத்துக்கொண்டேன். இந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ள முடியுமா ? உடனே அயிட்டம் என்றல்லவா பெயரை சூட்டியிருப்பார்கள் நமது ஹிப்போக்கிரட்ஸ்..<br />
<br />
இது தான் பெண் சுகந்திரம்..பெண் என்பதால் இயல்பாக நடந்துகொள்ள முடியாத இந்தியா போன்ற நாட்டுக்கும், ஒரு வளர்ந்த நாட்டுக்கும் இடையேயான வித்யாசம்..<br />
<br />
<u>பேஸ்புக் திமுக</u><br />
<br />
கலைஞரை அடுத்து, ஸ்டாலினும் சமூக ஊடகங்கள் பக்கம் ஒதுங்கியதால் இப்போதெல்லாம் பேஸ்புக்கில் தீவிர திமுகவினர் கும்பல் அதிகமாயிட்டது..<br />
<br />
சும்மாங்காச்சுக்கும் எல்லாத்துக்கும் கலைஞர்தான் காரணம் என்று சொல்லும் 2009 கும்பல் மரண அடி வாங்க ஆரம்பித்துள்ளது...<br />
<br />
வரலாறு புவியியல் எதுவும் தெரியாமல் வைகோ / சீமான் போன்ற டம்மி பீசுகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கி பேசுபவர்கள் குமுறி எடுக்கிறார்கள் திமுகவினர்...<br />
<br />
ஸ்ப்பா..பாவம் குழந்தைகள்...திருந்தினால் சரி..<br />
<br />
சரி மற்ற பத்திகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்..</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-26285239.post-39298154868250451772013-11-27T14:18:00.000+05:302013-11-30T09:40:45.500+05:30சோனியாவுக்கு மருத்துவ உதவி !! - அப்டேட் !!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடந்த 2006 ஆம் ஆண்டு நான் வலைப்பதிவுக்கு நுழைந்த காலத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்வி உதவி கேட்டு வலைப்பதிவர்களை அணுகியிருந்தேன். மகாலட்சுமி ஒரு ஏழை / தலித் பெண், கல்லூரியை தொடர முடியாமல் (பணம் கட்ட இயலா சூழலில்) வெளியேறியிருந்தார்.<br />
<br />
அவரை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க கிட்டத்தட்ட ரூ 60 ஆயிரத்தை வலைப்பதிவர்கள் கொடுத்து உதவினார்கள்.....<br />
<br />
அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதிகமாக உதவியவர்கள் அவர்கள் தான் :) :)<br />
<br />
இன்றைக்கு மகாலட்சுமி ஒரு ஆசிரியை !!<br />
<br />
மேல்விவரங்களை இந்த பதிவில் படிக்கலாம் :<br />
<br />
<a href="http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html">http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html</a><br />
<br />
இப்போது அதுபோன்றதொரு கோரிக்கையுடன் உங்களை அணுகுகிறேன். இந்தமுறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய !!!<br />
<br />
திருவண்ணாமலையில் புனர்ஜீவன் அறக்கட்டளையை நடத்திவரும் திரு லூர்து அவர்கள் - 30 குழந்தைகளை புனர்ஜீவன் மூலம் படிக்க வைத்துவருகிறார்...அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் - இயேசு சபையை சேர்ந்தவர் - இந்த குழந்தைகளுக்காக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார் !!<br />
<br />
தற்போது இந்த முக்கியமான கோரிக்கையோடு அணுகியிருக்கிறார் !!<br />
<br />
<u>சோனியா</u><br />
<u><br /></u>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjymM-pncCaN1Sj9NM46poXbw9qaTsgyGu4KRYB-YHxt7dq7aD1WjMdhV6RuMZN5A3tn2aO6WFXvNjZV7S304XNz3bHIIlO9ye2ZeE2pbeEskxZeOboJ4akmZjcMdNd5e8mOH5Rlw/s1600/soniya1+(1).JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjymM-pncCaN1Sj9NM46poXbw9qaTsgyGu4KRYB-YHxt7dq7aD1WjMdhV6RuMZN5A3tn2aO6WFXvNjZV7S304XNz3bHIIlO9ye2ZeE2pbeEskxZeOboJ4akmZjcMdNd5e8mOH5Rlw/s320/soniya1+(1).JPG" width="320" /></a></div>
<br />
<br />
இவருக்கு வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது - அது கிட்னியை நசுக்கும் அளவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மரண வேதனையில் அவதிப்பட்டு வருகிறார்.இப்போது வலி அதிகமாகிவிட்டபடியால் - கட்டி பெரிதாகிவிட்டது- என்றும் உடனடியாக ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் அவசர உதவி தேவை என்றும் மின்னஞ்சல் செய்துள்ளார் !! அவரிடம் பேசிய போது இந்த வலியை பொறுத்துக்கொண்டே கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குழந்தை இருந்து வருகிறது என்பதை மிகுந்த வருத்ததோடு சொன்னார் !!!<br />
<br />
மெடிக்கல் ரிப்போர்ட் ஸ்கேன் கூகிள் மூலம் அப்லோட் செய்துள்ளேன் - பிடிஎப் கோப்பு <a href="https://drive.google.com/file/d/0B0ng1nVEvPr4RHgxWU5KQm9ja2s/edit?usp=sharing">https://drive.google.com/file/d/0B0ng1nVEvPr4RHgxWU5KQm9ja2s/edit?usp=sharing</a> (கோப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)<br />
<br />
திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆப்பரேஷன் செய்வதற்கான வசதிகள் இல்லை - உங்களுக்கு தெரியும் தானே - சென்னையில் MMC யில் உள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்...<br />
<br />
MMC யும் அரசு மருத்துவமனை / மருத்துவக்கல்லூரி தான், ஆனால் மூன்று மாதங்கள் அங்கே தங்கி சிகிச்சை எடுக்கவும் - ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று பிழைத்தால் - இன்ன பிற செலவுகளுக்கு சுமார் 30 ஆயிரம் வரை கேட்டுள்ளார்.<br />
<br />
தாயில்லா பிள்ளையான சோனியாவின் தந்தையார் கண் பார்வை இழந்தவர் - அவரால் இது கண்டிப்பாக முடியாது என்ற நிலையில் நம்மிடம் உதவி கேட்டுள்ளார்.<br />
<br />
நீங்கள் நேரடியாக லூர்து அவர்களிடம் பேசலாம், அவரிடம் மின்னஞ்சலில் மேல் விவரம் - தேவை எனில் - கேட்கலாம் அல்லது அவர் வங்கி கணக்கில் உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவலாம்...எவ்வளவு சிறிய தொகையானாலும் பரவாயில்லை...<br />
<br />
லூர்து அவர்களின் மின்னஞ்சல் klourdu@gmail.com<br />
அலைபேசி எண் : 9566615687<br />
<br />
அவரது வங்கி கணக்கு விவரம்<br />
<br />
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>Account Name : Punar Jeevan (New Life ) Trust</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>Savings Bank Account Holder : 0407 0530 0001 4629</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>IFSC: SIBL0000407</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>The South Indian Bank LTD</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>Poonamallee Branch</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>70 IBAYAM Complex, Trunk Rd.,</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>Karayan Chavadi, Poonamallee.</b></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 13px;">
<b>Chennai 600056</b></div>
<br />
இதை வாசிக்கும் தோழர்கள் / தோழிகள் உங்கள் பேஸ்புக் வால் / ட்விட்டர் கணக்கில் / வலைப்பதிவில் இதனை பதிவு செய்யுங்கள், முடிந்தால் ஊடகத்துறை தோழர்களும் பதிவு செய்யுங்களேன் !!!<br />
<br />
<span style="color: red;"><u>அப்டேட்</u></span><br />
<br />
ஒரு சிறுநீரகம் முழுவதுமாக பழுதடைந்துள்ளது. (suppressed by tumor). இன்னொரு சிறுநீரகத்தின் வேலை செய்யும் தன்மையை பரிசோதித்து அது நன்றாக இருப்பதாக உறுதி செய்துள்ள மருத்துவர், திங்கள் அன்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.<br />
<br />
இப்போதைக்கு நாம் செய்யவேண்டியது இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கவேண்டும் என்று நம்பிக்கையோடிருப்பதே !!! (மேலதிக உதவிகள் ஏதாவது தேவை எனில் என்று திங்கள் அன்று சொல்கிறேன்)<br />
<br />
இதுவரை செய்யப்பட்ட உதவிகள் பற்றிய தகவல் - பேலன்ஸ் ஷீட் செவ்வாய் அல்லது புதன் கிழமை ஆன்லைனில் அப்லோட் செய்கிறேன் !!! நன்றி !!<br />
<br />
<span style="color: red;"><u>மேலும் அப்டேட் / தகவல்கள்</u></span><br />
<br />
முன்னதாக MMC யில் உடனடியாக அனுமதிக்கவும், ஆபரேஷன் செய்யவும் ஒத்துக்கொள்ளவில்லை. அங்கே இருந்தவர்கள் சொல்லிய தகவலில் ராய் மெமோரியல் மருத்துவமனையில் சென்று சந்தித்து சேர்த்தார்கள். சோனியா இப்போது இருப்பது 3 ஆம் மாடி - தேனாம்பேட்டை ராய் மெமொரியல் மருத்துவமனை... உதவிக்காக இருப்பது இரண்டு ஆசிரியைகள்..<br />
<br />
மீனா : மொபைல் எண் விரைவில் அப்டேட் செய்கிறேன்<br />
ராஜேஸ்வரி: 8189938342<br />
<br />
இவர்கள் இருவரும் ஒரு மாணவிக்காக சிரமம் பார்க்காமல் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..<br />
<br />
மொத்த செலவு 95 ஆயிரம் ஆகலாம் என்று எஸ்டிமேட் கொடுத்துவிட்டார்கள்...<br />
<br />
இதில் ஏற்கனவே 10 (என் பங்கு) +10+2+5+30 (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) வந்துள்ளது, அவர்கள் அனுமதி பெற்று அவர்களின் பெயரை பதிவில் வெளியிடுவேன்..<br />
<br />
இன்னும் 40k வரை தேவைப்படலாம் !! ஆகவே நல்லிதயங்கள் தொடர்ந்து இந்த பதிவை ஷேர் செய்து உதவவேண்டும்...<br />
<br />
ஒரு சிறுநீரகம் நீக்கப்பட இருப்பதால் 3 மாதம் முதல் 6 மாதம் முதல் மருந்துகளும் கொடுக்கவேண்டும் !! ஆகவே தொகையில் மீதி இருந்தால் அதனை அதற்கு உபயோகப்படுத்துவேன்..</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-83742592982759526222012-09-04T08:49:00.000+05:302012-09-04T08:49:15.681+05:30மனிதன் பாதி! மிருகம் பாதி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
From : http://www.facebook.com/siva.sinna<br />
<br />
அரை மணித்தியாலத்துக்குள் 63<br />
தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை –<br />
யாழ்ப்பாணத்தில் கொடூரம்!<br />
சிங்களவர்களுக்கு மட்டுமல்ல,<br />
தமிழர்களுக்கும் உண்டு<br />
படுகொலை வரலாறு -<br />
இளைஞர்களே மன்னித்துவிடுங்கள்!<br />
மனிதன் பாதி! மிருகம் பாதி!<br />
நீங்கள் பாதி மிருகத்தை அடக்கிவைத்த மனிதர்கள்-<br />
அவர்கள் பாதி மனிதனை<br />
தங்கள் பாதியிடம் பலிகொடுத்தவர்கள்’<br />
<br />
இலங்கையில் மூன்று தசாப்தகாலம் ஈழப்போர் நடைபெற்றதாக அரசியல்-இராணுவ ஆய்வாளர்கள் பெரும்போக்காக வர்ணிப்பதுண்டு. நான்கு ஈழப்போர்கள் இடம்பெற்றன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1983இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.<br />
<br />
பிரபாகரன், செல்லக்கிளி உட்பட பதுங்கியிருந்து ஆயுததாரிகள் சிலர் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து நாடு பற்றியெரிந்தது. அன்று இலங்கையில் அதிகாரத்திலிருந்த யு.என்.பி.யின் ஆட்சி, செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கைகளில் ஆட்சிக் கடிவாளம் இருந்தது.<br />
<br />
அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆசீர்வாதத்துடனும் உசுப்புதலுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான இனசங்காரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. முழு நாடுமே பற்றியெரிந்தது. சுமார் 350 தமிழர்கள் கொல்லப்பட்டனர் கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து நாசமாக்கப்பட்டது என்பதை அரசாங்க அறிக்கை கூறியது. மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனரென்று தமிழர் தரப்புகள் கூறின. இதனையே முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென்று சில ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.<br />
<br />
1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடு பிரிவினைக்கான தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனையே சில அரசியல் நோக்கர்கள் முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென வகைப்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழீழ ஆயுததாரிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. யாழ்.மாநகர மேயராகவும், எம்.பி.யாகவும் விளங்கிய அல்பிரட் துரையப்பா 1975 ஜூலை 26இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.<br />
<br />
பிரபாகரனின் தலைமையிலான குழுவொன்றே இப் படுகொலையில் ஈடுபட்டது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே யாழ்.நூல்நிலைய எரிப்பு இடம்பெற்றது. 1977 ஆகஸ்ட் 13இல், யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மக்களுடன் பொலிசார் மோதிக்கொண்ட ஒரு சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகள் வேட்டைக்காடுகளாக மாறின. அப்பாவிப் பொதுமக்கள் பலர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.<br />
<br />
1990இல் இரண்டாவது ஈழப்போரும், 100 நாள் போர் அமைதிக்குப் பின்னர் 19 ஏப்ரல் 1995இல் மூன்றாவது ஈழப்போரும், 2006இல் நான்காவது ஈழப்போரும் ஆரம்பித்ததாக அரசியல் – இராணுவ நோக்கர்கள் வகைப்படுத்துகின்றனர். 2009 மே 18இல் யுத்தம் முடிவடைந்தது.<br />
<br />
1987 ஜூலை இறுதியில் இந்தியப் படை திருகோணமலையில் வந்திறங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் இந்தியப் படையை வாழ்த்தி வரவேற்ற புலிகள், அதே ஆண்டு ஒக்டோபரில் இந்தியப் படையுடன் மோதலை ஆரம்பித்தனர். இரண்டரை வருடங்கள் நீடித்த இந்த மோதலில் சுமார் 1400 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களும் பலியானார்கள்.<br />
<br />
யாழ் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இந்தியப் படை நடத்திய தாக்குதலில் டாக்டர்கள், நோயாளிகள், பணியாளர்கள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டனர். 1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. வீதிவழியே ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்து புலிகளின் குழுவொன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து இந்தக் கொடூரம் நிகழ்ந்தது.<br />
<br />
மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புகளுமே அப்பாவி மக்களைத்தான் அதிகளவில் பலியெடுத்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மைலந்தனைப் படுகொலை, வவுனியாப் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை என்று பலவற்றைப் பட்டியலிட முடியும். அனுராதபுர பௌத்த யாத்திரிகர் படுகொலை, அரந்தலாவைப் பிக்குமார் படுகொலை, தலதா மாளிகைத் தாக்குதல், சிங்கள எல்லைக் கிராமத் தாக்குதல்கள், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும்.<br />
<br />
தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குள் உள் இயக்கப் படுகொலைகளும் தாராளமாகவே இடம்பெற்றிருக்கின்றன.<br />
<br />
1983 ஜூலை இன சங்காரத்தின்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகள் 23, 25 ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெற்றன. ஆனால் 63 தமிழ்க் கைதிகள் அரை மணித்தியாலத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன. புலி இயக்க உறுப்பினர்கள் இரண்டே இரண்டு பேர் இந்தப் படுகொலைகளைப் புரிந்தனர். ஒருவனின் இயக்கப் பெயர் அருணா, மற்றவனின் இயக்கப் பெயர் சந்தியா.<br />
<br />
1986ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரெலோ அமைப்பை தடைசெய்து நூற்றுக்கணக்கான கொலை செய்தும், உயிருடன் எரித்தும் வெறியாட்டம் நடத்தினர் புலிகள். 1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை புலிகள் தடை செய்தனர். இந்த இரண்டு இயக்கங்களின் முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்படிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே அப்போது கொல்லப்பட்டனர். புலிகளுக்குக் கப்பம் செலுத்தாததால் பிடித்துத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தகர்களும் இப் படுகொலையின்போது பலியானார்கள்.<br />
<br />
1985ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பதாகையின் கீழ் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகியவை திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.<br />
<br />
1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலை இடம்பெற்றது. இதனைக் ‘கந்தன் கருணைப் படுகொலை’ என்று அழைப்பதுண்டு. ‘கந்தன் கருணை’ என்பது ஒரு காரணப் பெயர். யாழ்ப்பாணத்தில் பல வீடுகளுக்கு கந்தன் கருணை இல்லம் எனப் பெயர் வைப்பதுண்டு. யாழ்ப்பாணத்தில் ‘அரஸ்கோ’ முதலாளி என்பவரின் ஆடம்பர வீடு நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அரசரட்ணம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது இந்த வீடு. நல்லூர் கோவில் வீதியிலும் ‘கந்தன் கருணை’ என்று பெயரிடப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. இந்த வீடுகள் ஒரு காலத்தில் புலிகளின் அலுவலககமாகப் பாவிக்கப்பட்டு வந்தன. ஆனால் படுகொலைகள் நடைபெற்றது இந்த வீடுகளிலல்ல.<br />
<br />
புலிகளால் கைது செய்யப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் நல்லூர் கந்தன் கருணை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஒரு வீட்டுக்கு இடமாற்றப்பட்டிருந்தனர். இந்த வீடு சிவகுருநாதர் வீதியில் அமைந்திருந்தது. இங்குதான் படுகொலைகள் இடம்பெற்றன.<br />
<br />
‘கந்தன் கருணை’ இல்லத்திலிருந்து இங்கு இடமாற்றப்பட்ட புலிகளின் கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால்தான் ‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ என்று சிலர் இதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்.<br />
<br />
இந்த வீடு நடராஜா என்பவருக்கு சொந்தமானது. அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். படுகொலை நடைபெற்று பத்து வருடங்களின் பின்னர் இந்த வீட்டில் நடேசபிள்ளை வித்தியாதரன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இவர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவனின் சொந்த மைத்துனர். புலிகளின் காலத்தில் புலிச்சார்பு பத்திரிகைகளாக விளங்கிய ‘உதயன்’, ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.<br />
<br />
இப் படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. அப்போது சிந்தியா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. சிந்தியாவின் தந்தை யாழ் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிவந்தார்.<br />
<br />
ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். அன்றைய தினம் காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார்.<br />
<br />
அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவர் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவரே. கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தார். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான். நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் நாவலர் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான். அரை மணித்தியாலத்தில் 63 பேர் கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம்.<br />
<br />
தாக்குதலின்போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன். இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா. விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி.<br />
<br />
ஆனால் புலிகள் இயக்க உள் முரண்பாடுகளே கிட்டு மீதான தாக்குதலுக்குக் காரணமெனப் பின்னர் தெரியவந்தது. கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்தத் தாக்குதல். மாத்தையாவின் ஆட்களே இத்தாக்குதலை நடத்தினரென்ற சந்தேகம் பரவலாக வெளிப்பட்டது.<br />
<br />
இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைகளுக்கு மாறியது. பிற்காலத்தில் ‘றோ’ உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தையாவைக் கைது செய்து, நிலத்துக்குக் கீழான சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து பிரபாகரன் கொன்றது வேறு விடயம். வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்த மாத்தையா நாயைப் போல நடத்தப்பட்டாரென்று இந்தியப் பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ‘ஐலன்ட் ஒப் புளட் (இரத்தத் தீவு) என்ற தனது ஆங்கில நூலில் அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனைப் பேட்டி கண்டவர் அனிதா பிரதாப். அத்துடன் சிறையிலிருந்த மாத்தையாவை பிரபாகரனின் அனுமதியுடன் பார்வையிட்டவர் அவர்.<br />
<br />
இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தியப் படை இலங்கையின் வடக்கு – கிழக்கில் நிலை கொண்டது. ஜூலை இறுதியில் இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது. இந்திய இராணுவத்துடனான சண்டையில் குருநகரில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய கூர்க்கா இராணுவவீரனால் கொல்லப்பட்டான்.<br />
<br />
மற்றைய கொலையாளியான சந்தியா என்பவன் முன்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றியவன். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான்.<br />
<br />
கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டனவா அல்லது புதைக்கப்பட்டனவா? என்பது தெரியாது. ஆனால் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் சடலங்கள் எரிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளிவந்தன. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையை விட, ‘கந்தன் கருணை’ப் படுகொலைகள் குரூரமானவையென அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.<br />
<br />
இப்படுகொலைகள் குறித்துப் புலிகள் மௌனம் சாதித்தனர். ஆனால் மெல்ல மெல்ல விஷயம் கசியத் தொடங்கியதும் அதனைத் ‘தமிழீழத் துரோகிகளின் சதி’ என்று புலிகள் தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இது தொடர்பாகப் புலிகள் அறிக்கையொன்றினை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.<br />
<br />
‘விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், அவர்களுக்குக் காவலுக்கு நின்றவர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பதினெட்டுக் கைதிகளும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேரும் பலியானானர்கள்’<br />
<br />
அந்த காலப்பகுதியில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்டிருந்தார். அங்கு இலங்கை மாணவர்கள் சிலர், கந்தன் கருணைப் படுகொலைகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டிருந்தார்கள். அதற்கு, ‘கிட்டுவுக்கு நடந்த தாக்குதல் உட்கட்சிப் பிரச்சினையால் ஏற்பட்டது என்பது தவறு. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்கள் யார்?, அவர்கள் எங்கிருந்தார்கள்?, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.<br />
<br />
பேராசிரியர் சிவத்தம்பி வடமராட்சியில் பிறந்தவர், கற்றறிந்த பேராசிரியர். முன்னாளில் முற்போக்குவாதியாக இனங்காணப்பட்டவர். எனினும் பின்னாளில் அவர் புலிகளின் விசுவாசியாக செயற்பட்டவர். ‘அதிகமான அப்பாவி மக்கள் இறப்பது, தமிழீழம் மலர வழிவகுக்கும்’ என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை புலிகளுக்கு வழங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது.<br />
</div>
ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-26285239.post-76278782529523557722012-07-12T11:49:00.001+05:302012-07-12T11:52:10.458+05:30இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFQeMEjhUNaNzfo1Zy-oKUTyH-MsYpuwgrTWyrNWO54m8ZQx3bpKdToPF2qFcZtnhLdX-IQwp-vNR2-FhVE0p_bSpuHbFbaKV3RoSan4UuKJDk4mrDf7PBVYz9z5baV5HQWVa-/s1600/caste-system+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="286" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFQeMEjhUNaNzfo1Zy-oKUTyH-MsYpuwgrTWyrNWO54m8ZQx3bpKdToPF2qFcZtnhLdX-IQwp-vNR2-FhVE0p_bSpuHbFbaKV3RoSan4UuKJDk4mrDf7PBVYz9z5baV5HQWVa-/s320/caste-system+%25281%2529.jpg" width="320" /></a></div>
<br />
<br />
கலைஞர் கேள்வி பதிலில் இருந்து<br />
<br />
கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.<br />
<br />
பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.<br />
<br />
<b>இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம். அரசு வேலை இனிமேல் இல்லை என்று சொல்லலாம். அதே ஊர்ல இருந்துக்கிட்டு அங்க படிக்காத பசங்களுக்கு எஞ்சினீயரிங், மெடிக்கல், அரசு கல்லூரியில் இடம் தராமல் தடுக்கலாம், அரசு கொடுத்த டிவி லேப்டாப் மிக்ஸி கிரைண்டர் எதாவது இருந்தா அதை பிடிங்கிடலாம்.</b></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-26285239.post-17072572003940500162012-07-11T06:50:00.002+05:302012-07-11T06:50:35.516+05:30LG ஸ்ப்லிட் ஏசி விற்பனைக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உபயோகப்படுத்தாத LG ஸ்ப்லிட் ஏசி (பெங்களூரில் கடந்த 2 வருடம் முன்பு வாங்கியது) தமிழ்நாட்டில் இருக்கிறது. நார்வே போகும் முன் (ஒரு மாதம் முன்) வாங்கி உபயோகப்படுத்தினேன், நார்வே போகும்போது மாமனார் வீட்டுக்கு அனுப்பினேன். அவங்க வீட்டில் 3 பேஸ் வராததால் அவராலும் அதை உபயோகப்படுத்த முடியல. சில நாளுக்கு முன் ஒரு பஸ்/ப்ளஸ் விட்டேன், சில பேர் தொடர்புகொண்டார்கள், அதில் ஒருவருக்கு தருவதாக சொன்னேன், ஆனால் அவரால் அதை எடுத்துக்கொள்ள முடியல. வாங்கிய போது விலை 25K. இப்ப அந்த மாடலுக்கு டேக்ஸ் எல்லாம் போட்டு 30 ஆயிரம் வரை (ஹரியானா / டெல்லியில்) விக்கிறாங்க. சல்லீசா எதாவது அமவுண்டை எனக்கு கொடுத்துட்டு தூக்கினு போங்கப்பா...(பிக்கப் நீங்க தான் அரேஞ்ச் செய்துக்கனும்). விருப்பம் இருப்பவர்கள் தனிமடல் அனுப்பவும்.<br />
<br />
http://www.lg.com/in/air-conditioning/split-ac/LG-LSA3AR2T.jsp</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-25813000304510919632012-03-30T23:34:00.003+05:302012-03-30T23:34:54.626+05:30ஸ்க்ரீன் ஷாட்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbD6aVCo-wd6PKYUokTkq_ZIMkWpsfr2GYy07iyeKUIqkWr0bUVSB0rMos7AZTNuud1AJyeeTyoKCA1b5eOFdeg3IUF1KNUX4oh1w3pR5sMp-jNnDNcVttiUPAz-0fsl4FH0HY6A/s1600/2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="44" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbD6aVCo-wd6PKYUokTkq_ZIMkWpsfr2GYy07iyeKUIqkWr0bUVSB0rMos7AZTNuud1AJyeeTyoKCA1b5eOFdeg3IUF1KNUX4oh1w3pR5sMp-jNnDNcVttiUPAz-0fsl4FH0HY6A/s320/2.png" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBopsYnBRSCXzA9QVAgMHGsKIke_vxQ1GRgfcWnauWDbcfZAJ_iBgEck7eVAXen6v2bYJbmoxSmrbig1NQyeYaEK5nBEbN4EX3tixvTG9F7DUFofFBxkDDLqku9lq9xcptBi1TnA/s1600/4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="159" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBopsYnBRSCXzA9QVAgMHGsKIke_vxQ1GRgfcWnauWDbcfZAJ_iBgEck7eVAXen6v2bYJbmoxSmrbig1NQyeYaEK5nBEbN4EX3tixvTG9F7DUFofFBxkDDLqku9lq9xcptBi1TnA/s320/4.png" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5axxO97N-1vIR_kISaJ-0GXavhHU-7BNCrA57nkvWfyl2Fhgvv4TKii8rz9z2KqZao7B00Rl6gBxWAlfB0iZRzoarum9uIMWi4t1uMXnE5syJV7hO8_bGSZRS0CUZ6bPm2OLtjw/s1600/IMG_1166.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5axxO97N-1vIR_kISaJ-0GXavhHU-7BNCrA57nkvWfyl2Fhgvv4TKii8rz9z2KqZao7B00Rl6gBxWAlfB0iZRzoarum9uIMWi4t1uMXnE5syJV7hO8_bGSZRS0CUZ6bPm2OLtjw/s320/IMG_1166.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKdpauzad_X8R0Xwk3WBtQibInmMtAUSu2ngZRsqZ-2hXXzfcr5L9leex98gN7kN25p12eOJ9t4dS5tsOn0b33BRxSZEaVX8vvg6uVhQDUqzj5rp4OoAbx7au3NrXpgcdqMq9Xlw/s1600/IMG_1172.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKdpauzad_X8R0Xwk3WBtQibInmMtAUSu2ngZRsqZ-2hXXzfcr5L9leex98gN7kN25p12eOJ9t4dS5tsOn0b33BRxSZEaVX8vvg6uVhQDUqzj5rp4OoAbx7au3NrXpgcdqMq9Xlw/s320/IMG_1172.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBkwoc6uIxtxkUv9ps3mImApgBD2OxZRNeqzXlSG3W329zVye06HwvlLB0pMhTQaQGItWtJgKuHydUEOlVLE30lJRUrOrqWwdYb6QtQT8p9oetlg5RMcChPAA4l29LffgokFquHQ/s1600/IMG_1178.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBkwoc6uIxtxkUv9ps3mImApgBD2OxZRNeqzXlSG3W329zVye06HwvlLB0pMhTQaQGItWtJgKuHydUEOlVLE30lJRUrOrqWwdYb6QtQT8p9oetlg5RMcChPAA4l29LffgokFquHQ/s320/IMG_1178.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJsmj8iamXTXPrmXsyt6Nun662e_vg_bE0fzsZrOXkthzE2I6d_miaasInlt2NiN5MFvj1M-ouJYjMlZPWNu7JjnNJXVqWWjPNvNCTgglbghW-S8UZ8dqNod4gyQMC62SUzFzcQ/s1600/IMG_1180.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJsmj8iamXTXPrmXsyt6Nun662e_vg_bE0fzsZrOXkthzE2I6d_miaasInlt2NiN5MFvj1M-ouJYjMlZPWNu7JjnNJXVqWWjPNvNCTgglbghW-S8UZ8dqNod4gyQMC62SUzFzcQ/s320/IMG_1180.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi14bpOGtEOletsX1gsN-hKq_LlOuELOHFeb90XiUGjJo6-0nLtNiwMDgsW-klwLmCXPvcKbmR4_sLDy3-8Y4QIiC7H9RFW-VquTN4gP8YIs3M-z5mQxVxW_o8ene7he42kBhhwYA/s1600/IMG_1182.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi14bpOGtEOletsX1gsN-hKq_LlOuELOHFeb90XiUGjJo6-0nLtNiwMDgsW-klwLmCXPvcKbmR4_sLDy3-8Y4QIiC7H9RFW-VquTN4gP8YIs3M-z5mQxVxW_o8ene7he42kBhhwYA/s320/IMG_1182.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQGaLl59jfxwlpRHGybhdsbMB6Hlp_KPy5oiSkaBQsiaipUkYWzMQ91w28659UnPjnPWCcXOeAwpdY66ky3lbODRiuKbSP5ChJ_yiSrD9NfYClK_eXLQMNIN-ItM_h2gblepx8SQ/s1600/IMG_1183.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQGaLl59jfxwlpRHGybhdsbMB6Hlp_KPy5oiSkaBQsiaipUkYWzMQ91w28659UnPjnPWCcXOeAwpdY66ky3lbODRiuKbSP5ChJ_yiSrD9NfYClK_eXLQMNIN-ItM_h2gblepx8SQ/s320/IMG_1183.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1mMx1TKa54VCL55EkunzilWhMu_8f9lccnv_5w_lqu9UfSFfoVIN4cYZG3KB6oWEv5xTA20n7GBSvruU36Vul-De2WEmsvoZdg8eE-rPia69SNz7NJgTz6LUVeu6myGbLJXUi3w/s1600/IMG_1184.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1mMx1TKa54VCL55EkunzilWhMu_8f9lccnv_5w_lqu9UfSFfoVIN4cYZG3KB6oWEv5xTA20n7GBSvruU36Vul-De2WEmsvoZdg8eE-rPia69SNz7NJgTz6LUVeu6myGbLJXUi3w/s320/IMG_1184.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtVoK1U7HLetcaTdHwrp_iYVjzijXl6JiaksI7JR7FnPdRzwYzO-HYcHofLAqiHvHSV7xv0u0E4gntw-X1Xzu0V-P_t0wR9xkpm49IvpMicx90HVDxdPBRfulgEG_fsx8glTTzNg/s1600/IMG_1190.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtVoK1U7HLetcaTdHwrp_iYVjzijXl6JiaksI7JR7FnPdRzwYzO-HYcHofLAqiHvHSV7xv0u0E4gntw-X1Xzu0V-P_t0wR9xkpm49IvpMicx90HVDxdPBRfulgEG_fsx8glTTzNg/s320/IMG_1190.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5OA110jTupZ98opwlV_6ZQphuDajub4nt6ikfLlpoEQ4au0NvbXdNgDst6_1qKpkF87jKLHrMaotFi5AEbKGH78kXi5F571oApqWpN-X0K78EuV6fVevB4K36IQ-5jMwM9F7Fkw/s1600/IMG_1191.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5OA110jTupZ98opwlV_6ZQphuDajub4nt6ikfLlpoEQ4au0NvbXdNgDst6_1qKpkF87jKLHrMaotFi5AEbKGH78kXi5F571oApqWpN-X0K78EuV6fVevB4K36IQ-5jMwM9F7Fkw/s320/IMG_1191.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKykNTPvoWpj402JajGJ7HbndRhX1WEgPatsZFBhPxrpUEb_x_OTUDPd6zg2sBRhyhwUvN_sFfGDqqBmJk9z8WwOeu9eDfFP07FXEHFaOaMDnxoSaMuGQAoB6FRUoozR1lC4seQQ/s1600/IMG_1193.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKykNTPvoWpj402JajGJ7HbndRhX1WEgPatsZFBhPxrpUEb_x_OTUDPd6zg2sBRhyhwUvN_sFfGDqqBmJk9z8WwOeu9eDfFP07FXEHFaOaMDnxoSaMuGQAoB6FRUoozR1lC4seQQ/s320/IMG_1193.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNpjl8zCoEPSEz-J9r20uX1fYDO1BqUKRF5xVRdc6402yxIao9MfvHz8FypxILHqWnJiFeQL_xvbd-fl4CjgUNDw_VaiXdUTILZ2JFnhPu6BT6PFNuRTuDLH1yR5Nvhiid9qwVRg/s1600/IMG_1194.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNpjl8zCoEPSEz-J9r20uX1fYDO1BqUKRF5xVRdc6402yxIao9MfvHz8FypxILHqWnJiFeQL_xvbd-fl4CjgUNDw_VaiXdUTILZ2JFnhPu6BT6PFNuRTuDLH1yR5Nvhiid9qwVRg/s320/IMG_1194.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHYrN2XoTUFfizBRBXyhdBYlKkKFp1SVVGXL1P1fSLqOGf-nNjq5xbf4jb_pfv5SFsgpz8Sd_QtJmZnWhAi23WaTVgv0o6SSJZACUK5GcGaTtoGa6VdcAIca11PYFbS7igdFWEMQ/s1600/IMG_1195.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHYrN2XoTUFfizBRBXyhdBYlKkKFp1SVVGXL1P1fSLqOGf-nNjq5xbf4jb_pfv5SFsgpz8Sd_QtJmZnWhAi23WaTVgv0o6SSJZACUK5GcGaTtoGa6VdcAIca11PYFbS7igdFWEMQ/s320/IMG_1195.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsGq2aWXJ5R7UQrCoeMPuWjmmjkovc6uZwLFjW-XDfW2wzjTNjGTDCGzr87LBDGF9P6PZ7ERmPNgvRljqDCQVMMsmW_MufGF-g6zMCCZRb2QS0v9TcPwEvtT7Zc8-1CO3_h1DA2A/s1600/IMG_1196.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhsGq2aWXJ5R7UQrCoeMPuWjmmjkovc6uZwLFjW-XDfW2wzjTNjGTDCGzr87LBDGF9P6PZ7ERmPNgvRljqDCQVMMsmW_MufGF-g6zMCCZRb2QS0v9TcPwEvtT7Zc8-1CO3_h1DA2A/s320/IMG_1196.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx-x1A3BCRCQtfVTO0L3XqvYu34W9u71fwFxdtlsjW0_tdhsgpvnHX80GfGsGHYe1AWDggKKVZ9VR_mLH8gy3ww7rlC3FWEDckLSZzRd8BhqhtpL9BEcTpT720_bXQFQfnsTHZ-w/s1600/IMG_1197.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjx-x1A3BCRCQtfVTO0L3XqvYu34W9u71fwFxdtlsjW0_tdhsgpvnHX80GfGsGHYe1AWDggKKVZ9VR_mLH8gy3ww7rlC3FWEDckLSZzRd8BhqhtpL9BEcTpT720_bXQFQfnsTHZ-w/s320/IMG_1197.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Xtp3MPorjJzMD-15sHc_a2n6ZWZQmYzEWy4JDF0vsmOY5SB5F1BVMe2ShWdDOmhOvBZ7ztuiKu1KuASKFEN4HgyM6af8SncqaNfd438frMy5VmfYhjQ5Cv_gWhgXN_mfD6qDwA/s1600/IMG_1207.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1Xtp3MPorjJzMD-15sHc_a2n6ZWZQmYzEWy4JDF0vsmOY5SB5F1BVMe2ShWdDOmhOvBZ7ztuiKu1KuASKFEN4HgyM6af8SncqaNfd438frMy5VmfYhjQ5Cv_gWhgXN_mfD6qDwA/s320/IMG_1207.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQhdvItfllSCODgUi1IHJxFv2KAAaKNBZjRZ65I-MSW35i1yaXOhA0o1GsiHIMT9aRIyG22eHdOFBZyBpTSb91a7kar2gi3NJAqNYgqul1oMeOw1WC7ul_QCSpBBkSiCTw1O1elA/s1600/IMG_1214.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQhdvItfllSCODgUi1IHJxFv2KAAaKNBZjRZ65I-MSW35i1yaXOhA0o1GsiHIMT9aRIyG22eHdOFBZyBpTSb91a7kar2gi3NJAqNYgqul1oMeOw1WC7ul_QCSpBBkSiCTw1O1elA/s320/IMG_1214.PNG" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaVlW3K_pRTz4BGuN8Mq5_7Ogtbi3DdeUlY0Tu7ZQMmClzQ4gGcFIEr-w_es1R4aRBwL6UiQ9juotp2NeZNNWA7ERsbb4U7fldaJmrOXeFV2n0bPusevp6pPJn7Rwi4aqMV9bnlQ/s1600/IMG_1221.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaVlW3K_pRTz4BGuN8Mq5_7Ogtbi3DdeUlY0Tu7ZQMmClzQ4gGcFIEr-w_es1R4aRBwL6UiQ9juotp2NeZNNWA7ERsbb4U7fldaJmrOXeFV2n0bPusevp6pPJn7Rwi4aqMV9bnlQ/s320/IMG_1221.PNG" width="213" /></a></div>
<br /></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-60249183671466691702012-02-20T13:34:00.002+05:302012-02-20T13:34:52.887+05:30ரியல் எஸ்டேட் / கன்ஸ்ட்ரக்சன் துறையினர் கவனத்துக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMrJvOZVMitoaCxKVg9fSTzjIJ5saYY4BluhFfSQZJKVe9gInJu_gq9KszPa3K-_2tsE9vJW-zx4WnmUAz4J_8-LuA_sYWqbpx_ySYaxHTkMAeZQki87yY0BIMVaWdNQ_C3Xzo7g/s1600/sen.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMrJvOZVMitoaCxKVg9fSTzjIJ5saYY4BluhFfSQZJKVe9gInJu_gq9KszPa3K-_2tsE9vJW-zx4WnmUAz4J_8-LuA_sYWqbpx_ySYaxHTkMAeZQki87yY0BIMVaWdNQ_C3Xzo7g/s320/sen.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
செந்தில், யுவகிருஷ்ணா, ரவி</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கவனத்துக்கு. எனது தோழர் செந்தில் அவர்கள் நீண்டகாலம் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.<br />
<br />
அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் துறைக்கான தேவைப்பாடு மிகுந்த சிமெண்ட் மூட்டைகளை இறக்கும்மதி செய்யும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.<br />
<br />
அவர் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்ட் ஆனது, உலகத்திலேயே இரண்டாவது - மிகுந்த தரம் மிகுந்த சிமெண்ட் ஆகும். ஜெர்மனியின் மாபெறும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஹெடல்பெர்க் (உலகின் நம்பர் ஒன் குவாலிட்டி சிமெண்டுக்கு பெயர் பெற்றது) சிமெண்டின் மூலப்பொருளான மண்ணை கராச்சியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கராச்சியின் மண் அவ்வளவு தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.<br />
<br />
30 மெட்ரிக் டன் ஆண்டுக்கு உற்பத்தியாகும் சிமெண்டை விட, வெறும் மண்ணாக கராச்சி ஏற்றுமதி செய்வது அதிகம் என்றும் இணையத்தில் படித்தேன்.<br />
<br />
அந்த கராச்சியில் இருந்து நேரடியாக சிமெண்டை இறக்குமதி செய்யும் தோழர் செந்தில், அதனை தமிழகத்தில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விற்பனைக்கும் வெற்றிகரமாக கடந்த ஒரு ஆண்டாக தந்துகொண்டிருக்கிறார்.<br />
<br />
விலையை பொறுத்தவரை, இந்தியாவிலேயே தயாராகி அரசு மூலமாகவும் / தனியார் மூலமாகவும் விற்பனையாகும் சிமெண்டை விட, இது மிகவும் குறைவு. மொத்தமாக பார்க்கப்போனால் மிகப்பெரிய சேமிப்பு.<br />
<br />
தொடர்புகொள்வதற்கு எளிமையான தோழர் செந்திலை இந்த விடயத்தில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து பேசுங்கள். அவரது அலைபேசி எண் 9176758759.<br />
<br />
இது குறிந்து எந்த கேள்விகள் / சந்தேகங்களாக இருந்தாலும் எளிமையாக பதில் அளிப்பார்.<br />
<br />
இதுகுறித்தான இந்த இணைய பதிவை உங்கள் பக்கதில் இணைத்தால் நன்று. மேலும் உங்களுக்கு தெரிந்த மேஸ்திரிகள் / ரியல் எஸ்டேட் / கட்டிட துறையினருக்கும் இது குறித்து தெரியப்படுத்துங்கள். நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்லலாம், அதுவே உங்கள் நன்பரே செய்தால் நானூறு பேருக்கு கூட சொல்லலாம் தானே ?<br />
<br />
செந்தில் எண் மறுபடி 9176758759 , அழைக்க நேரம் இல்லாதவர்கள் மின்னஞ்சல் அனுப்ப : senthil5478@gmail.com <br />
<br />
இதனை ட்வீட்டரில் ரீஷேர் செய்பவர்கள் / பேஸ்புக்கில் ஷேர் / அப்டேட் செய்பவர்கள், தனி பதிவாக போடுபவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்...<br />
</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-26285239.post-334366233137962192012-02-19T16:11:00.000+05:302012-02-19T16:19:35.767+05:30பயோ டிஸ்க் - அடுத்த MLM காந்தபடுக்கை மோசடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-D8fUE4Y4YskmbXNBm1O994Ib6uZe2q2QDdS7Bx52ChkkuQh9WCFWJy3wklfC-rUMXWGJob4PkcTdWhRc8vraiopM0NxQ6LtEJNm82Sjkk5gslNyNKPzbtUxTvdC_mSBgR2imNw/s1600/dr_ian_biodisc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="256" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-D8fUE4Y4YskmbXNBm1O994Ib6uZe2q2QDdS7Bx52ChkkuQh9WCFWJy3wklfC-rUMXWGJob4PkcTdWhRc8vraiopM0NxQ6LtEJNm82Sjkk5gslNyNKPzbtUxTvdC_mSBgR2imNw/s320/dr_ian_biodisc.jpg" width="320" /></a></div>
<span style="background-color: white; color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; text-align: -webkit-auto;"><br /></span><br />
<span style="background-color: white; color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; text-align: -webkit-auto;">Amezcua Bio Disc - தயாரிப்பது க்வெஸ்ட் நெட் என்ற நிறுவனம், இந்த பயோ டிஸ்க் உபயோகப்படுத்தி வாட்டரை (குடிநீர்) எனர்ஜைஸ் செய்வதை டெமோ காட்டுகிறோம் என்று அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு தமிழ் பேமிலி அழைத்து நாங்கக் போனோம்.</span><br />
<span style="background-color: white; color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px; text-align: -webkit-auto;"><br /></span><br />
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">வாட்டர் ரீசைக்கிளிங் ப்ளாண்ட் என்பது ஏதோ பெரிசாக இருக்கும் (35 ஆயிரம் விலையாம்) என்று நினைத்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பா, அதில் ஒரு சிறிய மோட்டர். வட்ட வடிவத்தில் ஒரு கண்ணாடி. கைப்பிடியை கழட்டிய பெரிதாக்கும் ஆடி (ஜூமிங் லென்ஸு) மாதிரி இருந்தது. சுவிட்சை போட்டால் மோட்டர் இயங்கி, தண்ணீரை லென்ஸு மேல் ஊற்றுகிறது. (அதுக்கு தனியாக ஒரு ஸ்டேண்ட்). லென்ஸில் பட்டு தண்ணீர் மீண்டும் ப்ளாஸ்டிக் பட்டாவிலேயே ஊற்றிவிடுகிறது. இது போல ஆறு முறை தண்ணீரை எனர்ஜைஸ் செய்தால் அந்த தண்ணீர் மிகச்சிறந்த தண்ணீரா மாறிவிடும் என்றார்கள்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">நான் பார்த்த ப்ளாண்டை பெயிண்ட் ப்ரஷ் உதவியுடன் வரைந்திருக்கிறேன். (படம் சிறப்பாக வர நான் ஒன்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா அல்ல, ஏதோ என்னால் முடிந்தவரை கோடுகளை இழுத்து விட்டிருக்கிறேன்)</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW26_2f0CHqiSCLDPr6FgFaFZHyvmJzEQa7Gsc5jRUC0_dsW4zC_p5sH-9vuEQgQSHtjMiZX4NgNylb009eeni8lQ3z2VSISrR5bVikBd-skIznPTNvURs55bf-y9Aw3SCumEv-w/s1600/biodisc.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="270" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW26_2f0CHqiSCLDPr6FgFaFZHyvmJzEQa7Gsc5jRUC0_dsW4zC_p5sH-9vuEQgQSHtjMiZX4NgNylb009eeni8lQ3z2VSISrR5bVikBd-skIznPTNvURs55bf-y9Aw3SCumEv-w/s400/biodisc.jpg" width="400" /></a></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;">இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களாக அவர்கள் சொல்லியவை</span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">- அந்த தண்ணீரை குடித்தால் நாட்பட்ட நோய்கள், டயபட்டீஸ், இதய நோய் எல்லாம் ஓடிவிடும்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">- சாதாரண சளி, சுரம் போன்ற நோய்கள் குடும்பத்தில் இருக்கவே இருக்காது</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">- சாதாரணமாக இருக்கும் அசதி, மறதி போன்றவை நீங்கிவிடும்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அப்படி என்னப்பா இந்த பயோ டிஸ்க் வேலை செய்கிறது ? என்ற கேள்விக்கு,</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">பதில் கேள்வியாக அவர்கள் கேட்டது</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அதாவது மலை காடுகளில் வரும் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா...</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">ஆமாம்ங்க, ஒத்துக்கொள்கிறேன், காரணம் மலையில் இயற்கையாக தோன்றி வரும் போது அவை பல்வேறு மூலிகைகளில் பட்டு வருகிறது, அதனால் அந்த தண்ணீர் நல்ல தண்ணீர் என்று நம்ம முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்..</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அப்படியே பாய்ண்ட்டை பிடித்துவிட்டதுபோல உற்சாகமாக பேச ஆரம்பித்தார்...</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அதாவதுங்க, மலை காடுகளில் வரும் தண்ணீரை போல நம்ம போர்வெல் வாட்டர் சத்து உள்ளது அல்ல. </span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">ஆமாம் நீங்க சொல்றது சரிதான் சார், என்று சொல்லிவைத்தேன்...</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அதனால ஜெர்மனியில இருக்க மருத்துவர் தன்னோட ஆராய்ச்சி மூலமா கண்டுபிடிச்சது தான் இந்த பயோ டிஸ்க். அதாவது இந்த பயோ டிஸ்க்ல பயர் ப்யூஷன் முறையிலயும், நானோ டெக்னாலஜி முறையிலயும் பதினாலு மினரல்ஸை புகுத்தி, அதன் மூலமா பலரோட வாழ்க்கைக்கு ஒளியேத்தினார் மருத்துவர் இயான் லியோன்ஸ். (மேலே படத்தில் இருப்பவர்கள். படம் உதவி கூகிள் அண்ணாச்சி)</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அதனால அந்த பயோ டிஸ்க்கை உபயோகப்படுத்தி நாம பயன் அடையுறோம். இந்த பயோ டிஸ்க் மூலமாக தண்ணீர் பாயும்போது அந்த மினரல்ஸ் நம்ம தண்ணீர்ல உடைஞ்சு போன, ஓஞ்சு போன மினரல்ஸை சரிப்படுத்தி உருப்புடியா மாத்துது. அதன் மூலமா நாம குடிக்கிற தண்ணீர் நமக்கு டாக்டரா செயல்படுது என்று மிகப்பெரிய லெக்சரை முடித்தார்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இந்த பயோ டிஸ்கோட சேர்த்து ஒரு பெண்டண்ட் ஒன்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்த அந்த பெண்டண்டை எடுத்து காட்டினார். </span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi26YOj0ikwMNcSxthOqi6D5c-t5_gdNu_IsjuxHonkrMGnpPRKzjQfNBdBb5wP_NjpHQnC9NWg2EBcPZndurwZsMcaqm3OuaJzY6xxbxmzaeGRQVzk2TOxITt4oJcN5H5vlU4-xg/s1600/Amezcua-Pendant.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi26YOj0ikwMNcSxthOqi6D5c-t5_gdNu_IsjuxHonkrMGnpPRKzjQfNBdBb5wP_NjpHQnC9NWg2EBcPZndurwZsMcaqm3OuaJzY6xxbxmzaeGRQVzk2TOxITt4oJcN5H5vlU4-xg/s320/Amezcua-Pendant.JPG" width="278" /></a></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">அதாவது பயோ டிஸ்க் 22 ஆயிரம், இந்த பெண்டண்ட் ஒரு பதினைந்தாயிரம், இரண்டும் சேர்ந்த ஒரு பேக்கேஜ் ஆக 35 ஆயிரம். இந்த பெண்டண்டை கழுத்தில் போட்ட பிறகு, நீண்டகாலமாக இருந்த முட்டிவலி (????) குணமாயிட்டதாம். காலையில் ஆறு மணியில் இருந்து இரவு 12 மணி வரை வேலை செய்தாலும் உடல் சோர்வடைவதே இல்லையாம்..</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இந்த பொருளுக்கு CE போன்ற தர சான்றிதழ் கிடைத்துள்ளதா என்று ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எழுப்பினேன். அதை மிகுந்த கான்பிடன்ஸோடு எதிர்கொண்டவர், இது ஒரு ஹெல்த் ப்ராடக்ட் அல்ல, ஒரு வெல்னெஸ் ப்ராடக்ட், இதற்கு அது போன்ற சர்ட்டிப்பிக்கேட் எதுவும் தேவை இல்லை என்றார்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இரண்டு அரை எலுமிச்சை பழங்களை ஒன்று இடது கையிலும் ஒன்று வலது கையிலும் கொடுத்து, இரண்டையும் சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒன்று பயோ டிஸ்க் மூலம் எனர்ஜி செய்யப்பட்டது, ஒன்று பயோ டிஸ்க் இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் வைக்கப்பட்டது. இரண்டும் எனக்கு எலுமிச்சை சுவையாக தெரிந்தது, பெரிதாக எதுவும் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மையாரோ, ஆஹா, பயோ டிஸ்க் மூலம் எனர்ஜைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை சுவையோ சுவை என்று கூற, நானும் சபை நாகரீகம் கருதி, ஆமாங்க அப்படித்தான் என்று மையமாக தலையாட்டி வைத்தேன்...</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இந்த ஸ்டோரியில் ஒரு சப் ஸ்டோரியாக, இந்த டெமோ ஒரு பக்கம் நடக்க, யாழினி அப்போது லொக் என்று ஒரு இருமல் விட, இதை நான் ரெய்க்கியில் குணமாக்குகிறேன் என்று அந்த வீட்டு அம்மையார் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அல்லேலூயா கும்பல் ஆசீர்வதிப்பது போல தலையில் கை வைக்க, யாழினி அதை விரும்பாமல் கையை தட்டிவிட, சரி அப்ப நான் டிஸ்டன்ஸ் ரெய்க்கி கொடுக்கிறேன் என்று கொஞ்சம் தூரத்தில் இருந்து மொன மொன என்று ஏதோ சொல்லி ஆசீர்வதித்தார்கள். (அன்னாரது மாமியார் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்க கலிபோர்னியா வரை டிஸ்டன்ஸ் ரெய்கி கொடுக்கிறாராம். இது வேறொரு ஆராய்ச்சி தலைப்பு. </span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இந்த பயோ டிஸ்க் என்பது தண்ணீயை மட்டும் சுத்திகரிக்காதாம். அதை சுத்தி அஞ்சு அடிக்கு உள்ள பொருட்களை எல்லாம் சுத்திகரிச்சுவிடுமாம். அதாவது சமையல்கட்டில் உள்ள எலுமிச்சை, குளிர்சாதன பெட்டியில் உள்ள முள்ளங்கி, அப்புறம் தாளிக்க வைத்துள்ள கடுகு உளுத்தம்பருப்பு என்று அனைத்தையும். மேற்படி பத்தியில் சுவைக்காக கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் கூட பயோ டிஸ்க் டெமோ செய்வதற்காக பயோ டிஸ்கில் இருந்து வெகுதொலைவில் (அதாவது சமையல் அறையில் இருந்து படுக்கை அறையில்) வைக்கப்பட்டதாம்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">கடைசியாக, இந்த பயோ டிஸ்கை வாங்க வேண்டும் என்றால் அவரது ரெபரன்ஸ் ஐடி மூலம் வாங்கினால் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று சொன்னார். எல்லாத்தையும் மெயில்ல அனுப்பிடுங்க, வாங்கிடலாம் என்று சொல்லிவிட்டு, பயோடிஸ்க் மூலம் டிஸ்டன்ஸ்ல வைத்து எனர்ஜைஸ் செய்யப்பட்ட ஆரஞ்சு பழரசத்தை அருந்திவிட்டு நடையை கட்டினோம்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இந்த பயோடிஸ்க் பற்றி இணையத்தில் ஆரய்ச்சி செய்யும்போது இதன் ஏமாற்று வேலைகள் பற்றி பல ரெபரன்ஸ்கள் கிடைத்தன. கேரளாவில் மருந்துவர்கள், டெண்டிஸ்டுகள் கூட இந்த பயோடிஸ்கை வாங்கி போட்டுவிட்டு, அதன் பின்னால் மற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நன்று கற்று அறிந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கூட இந்த வலையில் விழுந்துள்ளதும் தெரிகிறது. ஏன் இந்த பயோடிஸ்கை என்னிடம் விற்க முயன்ற தோழர் கூட தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்ந்த பதவி வகிப்பவர்தான்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">ஏற்கனவே காந்த படுக்கை என்று ஒரு MLM மோசடி (MLM என்பது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதின் சுருக்கமாகும் - அதாவது சங்கிலி தொடர் விற்பனை). அதாவது நீங்கள் ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்கினால், அதே பொருளை நீங்கள் பத்து பேருக்கு விற்று கொடுத்தால் உங்கள் பொருள் உங்களுக்கு இலவசம். இது போல பல வகையாக விற்பார்கள்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">காந்த படுக்கை பற்றி இணையத்தில் தேடினால், காவல்துறை வழக்கு விவரங்கள், ஏமாந்த சோனகிரிகள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் கொட்டும். நேரம் இருப்பவர்கள் தேடிப்பாருங்கள்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">பல ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையானுக்கு / ஜீசசுக்கு என்று தபால் கார்டுகள் வரும். அந்த தபால் கார்டை படித்து அதை போலவே இருபது பேருக்கு எழுதி போட்டால் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் - சில பயனாளிகளின் தகவல்கள் காணப்படும். ஆனால் அந்த தபால் கார்டை புறக்கணித்தாலோ, கால் உடைந்து விடும். ஆண்மை குறைந்துவிடும். எயிட்சு வரும் என்று கிலி ஏற்படுத்துவார்கள். அதே போன்றதொரு மின்னஞ்சல் சமீபமாக எனக்கு வந்து சேர்ந்தது. இந்தமுறை ஏழுமலையானோ ஜீசசோ இல்லை. வினாயகர். </span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">ஆக, ஏமாற்றுபவர்கள், எம்.எல்.எம் கும்பல், ரெய்க்கி, வாஸ்து, மக்களின் மூட நம்பிகைகளை வைத்து பணம் செய்பவர்கள், கடிதம் மூலம் ஏழுமலையானை மார்க்கெட்டிங் செய்பவர்கள், மணியார்டர் மூலம் காசை வாங்கிக்கொண்டோ அல்லது வி.பி.பி மூலமோ விலங்குகளை பயமுறுத்தும் துப்பாக்கிக்கு பதில் செங்கல்லை வைத்து அனுப்புபவர்கள், நைஜீரியா கும்பல், ஆப்ரிக்க நாட்டின் செத்துப்போன நிதி மந்திரிக்கு பிறந்த கருப்பு மகளிடம் இருக்கும் இரண்டு மில்லியனை வைத்து ஏமாற்றுபவர்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் ஏ(கோ)மாளிகளாக ஆகாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;">இதை எழுதவேண்டும் என்று தோன்றியது ஏன் என்றால், இந்த கான்ஸெப்ட் இப்போது தான் வட இந்தியாவில் பரவி வருகிறது. இதை பற்றி மெயின் லைன் பத்திரிக்கைகள், நீயா-நானா மாதிரி அவேர்னஸ் க்ரியேட் செய்யும் ப்ரொக்ராம்ஸ், புதிய தலைமுறை செய்தி சேனல் இவர்கள் எல்லாம் அவேர்னஸ் க்ரியேட் செய்து, நம் தமிழ் மக்கள் ஏமாந்து காசை வீணடிக்காமல் உதவவேண்டும்.</span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
<div style="text-align: -webkit-auto;">
<span style="color: #4a4848; font-family: Tahoma, Verdana, Arial, Helvetica, sans-serif;"><span style="font-size: 12px;"><br /></span></span></div>
</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-26285239.post-87711798551927081072012-01-31T13:09:00.002+05:302012-01-31T13:09:57.213+05:30அட முட்டாள் தலிபான்களா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்க</span><span class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;">ிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.</span>
<br />
<span class="text_exposed_show" style="background-color: white; display: inline; font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 11px; line-height: 14px;"><br /></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;">பேஸ்புக்கில் கவின்மலரின் வேண்டுகோள் இது. இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு தோன்றிது இந்த தலைப்புதான். அது எப்படி எல்லாரையும் அப்படி சொல்லப்போச்சு என்று கிளம்பவேண்டாம். இது பத்வாவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு மட்டும்தான் பொருந்தும்.</span></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;"><br /></span></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;">அடப்பாவிகளா இது என்ன ஆப்கானிஸ்தானா ? அங்க ஹீனம் செய்யறானுங்களாமுல்ல ? </span></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;"><br /></span></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;">சர்ச்சைக்குள்ளாக்கப்படும் தளம் இது தான் : </span></span><a href="http://iraiyillaislam.blogspot.com/">http://iraiyillaislam.blogspot.com/</a><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://media.nowpublic.net/images//c8/a/c8ab54d6f3287b86ef713e499e0bc9af.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="228" src="http://media.nowpublic.net/images//c8/a/c8ab54d6f3287b86ef713e499e0bc9af.jpg" width="320" /></a></div>
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;"><br /></span></span><br />
<span style="font-family: 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 11px; line-height: 14px;">இவனுங்கள எல்லாம் கும்பலா ஒரு வண்டியில ஏத்தி ஆப்கானிஸ்தான்ல கொண்டுபோய் விட்டுடுங்கப்பா.</span></span></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-3285841221104146992011-12-27T22:19:00.000+05:302011-12-27T22:19:19.587+05:30ஆனந்த தொல்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பால்வீதி நாயகன், பச்சைக்குழந்தை முக அழகன், சுட்டும் விழியில் சூரியன், பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை ட்ரைலர் அல்லது முன்னோட்டம் இங்கே காட்டப்படும்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/gTyryGJnulM" width="420"></iframe><br />
<br />
முழுப்படத்தையும் பார்த்து செத்து தொலைபவர்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல.</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-36429167612882995842011-11-21T12:17:00.001+05:302011-11-21T12:35:19.130+05:30SMS செத்துபோச்சுங்க (Nimbuzz)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எஸ்.எம்.எஸ் பரபரவென அனுப்புற ஆளா நீங்க ? எஸ்.எம்.எஸ் காஸ்ட் 1 பைசாவா இருந்தா பரவால்ல. ஆனா நேஷனல் எஸ்.எம்.எஸ், இண்டர் நேஷனல் எஸ்.எம்.எஸ் (5 ரூபா வரைக்கும் இதுக்கு நான் செலவு பண்ணியிருக்கேன்.). ஆகியவற்றை அனுப்பனும்னா கொஞ்சம் செலவு பிடிக்குமில்லையா ?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://www.coolpctips.com/wp-content/uploads/2010/12/nimbuzz-mobile-logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://www.coolpctips.com/wp-content/uploads/2010/12/nimbuzz-mobile-logo.png" /></a></div>
<br />
<br />
ஓக்கே இன்னொரு கொஸ்டின். ஒரு மாசம் முழுமையும் உங்களோட எஸ்.எம்.எஸ் செலவு என்ன ? 100 ரூபாய் இருக்குமா ? அப்படி இருந்தா மேல படிங்க.<br />
<br />
யாருக்கு வேண்டும்னாலும் இலவசமா ஆயிரக்கணக்கா அனுப்பிக்கலாம் என்று நாங்க கெளம்பி வந்திருக்கோம்ல ? (இந்தியாவில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஸுக்கு மேல அனுப்ப முடியாதுன்னு ஒரு தடை இருக்குங்க, அது கம்பெனிகள் அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் ஸை மிஸ் யூஸ் பண்ணதால வந்தது).<br />
<br />
எப்படி ?<br />
<br />
உங்க மொபைல்ல (ப்ரி பெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட்), மாத இண்டர்நெட் பேக்கேஜ் போட்டுக்கோங்க. 99 ரூபாய் மேக்ஸிமம் ஆகும்னு நினைக்கிறேன்.<br />
<br />
அப்புறம் நிம்பஸ் அப்ளிக்கேஷன டவுன்லோட் பண்ணி போடுக்கோங்க.<br />
<br />
நிம்பஸ் எங்க கிடைக்கும் ?<br />
<br />
http:// get.nimbuzz.com என்ற முகவரிக்கு உங்க மொபைல்ல இருந்து போகலாம். (மொபைல்ல இண்டர்நெட் ஆக்டிவேட் செஞ்ச பிறகு)<br />
<br />
http://market.android.com (அண்ட்ராய்ட் மொபைல் ஆக இருந்தால்)<br />
<br />
itunes (ஐபோனுக்கு)<br />
<br />
http://store.ovi.com நோக்கியா மொபைல் ஆக இருந்தால். ஓவி ஸ்டோர் அப்ளிக்கேஷனும் போடலாம்.<br />
<br />
ப்ளாக்பெரியும் அப்வேர்ட் வச்சிருக்கு. அங்கேயும் போகலாம்.<br />
<br />
இப்ப டவுன்லோட் செய்த பிறகு, உங்களோட ஜிமெயில், யாஹூ, பேஸ்புக், எம்.எஸ்.என் ஆகிய அனைத்து மெசஞ்சரையும் கூட இணைத்துக்கொள்ளலாம்.<br />
<br />
உங்க மொபைல் நம்பரை வெரிபை செய்யறதுக்கு கேக்கும், அதையும் கரெக்ட்டா கொடுத்துருங்க.<br />
<br />
உங்களோட போன் புக்ல இருக்க நம்பர்களில் இருப்பவர்கள் யாராவது நிம்பஸ் உகயோகப்படுத்தினால் அதையும் நிம்பஸ் கண்டுபிடித்து உங்கள் நட்பு லிஸ்டில் இணைத்துக்கொள்ளும்.<br />
<br />
இப்ப உங்களோட நட்பு / தோழர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு இலவசமாக மெசேஜ் அனுப்பலாம். <br />
<br />
அவர்கள் ஜிடாக்கில் அல்லது யாஹூவில் ஆன்லைனில் இருந்தால் கால் பட்டனை அழுத்தி 24 மணி நேரம் கால் போட்டே பேசலாம்.<br />
<br />
அவர்கள் ஆன்லைனில் இல்லை என்றாலும் நிம்பஸ் பிங் என்ற வசதியை உபயோகப்படுத்தி அவர்களை ஆன்லைனில் வருமாறு சொல்லலாம். (நிம்பஸ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்.)<br />
<br />
கிரிக்கெட் ஸ்கோர், அஸ்ட்ராலஜி, ஜோக்ஸ் என்று எல்லாவற்றுக்கும் அங்கே அப்டேட்ஸ் வந்துகொண்டே இருக்கும்.<br />
<br />
டைரக்டாக ட்விட்டருக்கும் அப்டேட் செய்யலாம், பேஸ் புக் சாட்டில் இருப்பவர்களுடனும் பேசலாம்.<br />
<br />
நிம்பஸ் மொபைலுக்கு மட்டும் இல்லாமல் PC க்கும் MAC க்கும் கூட இருக்கிறது. குறைந்த வசதியுள்ள மொபைல்கள், ஜாவா மொபைல்கள் கூட நிம்பஸை உபயோகப்படுத்தலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCp1pa0R_6q4zzi1Q1Y9_vHnBOOG5IwDXY1KcTsriKjDytpIXkGakFyp643h-Rw9R0eeC-5HN878iLdYkp5py1Yyjz5Q7S_D98YpMCq-AJnC4SndNkL0Wni7pdn0_mhETiGemk3w/s1600/nokia.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCp1pa0R_6q4zzi1Q1Y9_vHnBOOG5IwDXY1KcTsriKjDytpIXkGakFyp643h-Rw9R0eeC-5HN878iLdYkp5py1Yyjz5Q7S_D98YpMCq-AJnC4SndNkL0Wni7pdn0_mhETiGemk3w/s320/nokia.png" width="164" /></a></div>
<br />
நிம்பஸ் தமிழ் பாண்டை டிஸ்ப்ளே செய்கிறது, அதனால் உங்கள் நன்பர்கள் தமிழில் உங்களுடன் உரையாடினால் / குறுஞ்செய்தி அனுப்பினால், அது தமிழிலேயே உங்களுக்கு தெரியும்....<br />
<br />
இம்புட்டு வசதியை அள்ளித்தரும் நிம்பஸ்ஸை உபயோகப்படுத்திப்பாருங்க.<br />
<br />
எஸ்.எம்.எஸ் என்று காசு செலவு செய்வதை மொத்தமாக நிறுத்திடுவீங்க...<br />
<br />
<br /></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-51076716518423646502011-10-18T17:32:00.003+05:302011-10-18T17:33:26.545+05:30பூந்தியும் புளியோதரையும் உங்கள் மீது நிலவுவதாக...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVXiCpMz8AKeGX1ZIXvHfQPaOfgysQTRFaShBw2N2FArXTAxDIZeak7F1CHc0JdiLgJuiH1hLN6vpSuSlEBxNN2FU-PNCrP4y2VexkYaSEpRw2C11Qhvpdm6qUhLUDtACEcTCKFQ/s1600/anna.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVXiCpMz8AKeGX1ZIXvHfQPaOfgysQTRFaShBw2N2FArXTAxDIZeak7F1CHc0JdiLgJuiH1hLN6vpSuSlEBxNN2FU-PNCrP4y2VexkYaSEpRw2C11Qhvpdm6qUhLUDtACEcTCKFQ/s640/anna.JPG" width="424" /></a></div>
<br />
அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிக்கு, எல்லாரும் உங்களை திட்டுகிறார்கள். நான் இந்த கூகிள் பஸ் பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆவதால் தமிழ்மணத்தில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நினைப்பதால் உங்கள் மேல் பூந்தியும் புளியோதரையும் உண்டாவதாக என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். </div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-51486234531067237092011-06-24T09:01:00.002+05:302011-06-24T09:01:58.892+05:30லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சிஎழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்.. <br />
<br />
நெறியாள்கை :ஸ்ரீஜித் சுந்தரம்<br />
<br />
சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்..வருகிறோம்.<br />
அனைவரும் வருக!<br />
<br />
இடம் : <br />
ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை<br />
<br />
நாள் : 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...<br />
<br />
அரங்கில்:<br />
<br />
அ. அமுதா<br />
ஏஞ்சல் கிளாடி<br />
பிரம்மா<br />
ஜீவா ரகுநாத்<br />
கவின் மலர்<br />
லிவிங் ஸ்மைல் வித்யா<br />
நளினி ஜமீலா<br />
பூங்குழலி<br />
சக்தி சரவணன்<br />
செந்தில் குமார்<br />
சாரதி கிருஷ்ணன்<br />
செந்தில் குமார்<br />
சௌமியா<br />
சுரேந்தர்<br />
தமிழ் அரசன்<br />
தாயம்மா ரம்யா<br />
எஸ்.உஷா<br />
<br />
பாடல்கள் : இன்குலாப்<br />
<br />
பின்னணி இசை : சித்திரை சேனன்<br />
<br />
இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்<br />
<br />
மேடை பொருட்கள்:<br />
பரணிதரன்<br />
கமலஹாசன்<br />
சோலைராஜ்<br />
ஆனந்த குமார்<br />
ராம்குமார்<br />
<br />
ஒளியமைப்பு : விக்டர், அஸ்வினி காசி<br />
உடைகள் : அ.மங்கை, உதவி : செந்தில் குமார்<br />
<br />
தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பு : சுரேந்தர்<br />
<br />
தயாரிப்பில் உதவி : செந்தில் குமார், சோமசுந்தரம்<br />
<br />
நெறியாள்கை : ஸ்ரீஜித் சுந்தரம்<br />
<br />
உதவி நெறியாள்கை : அற்புதன் விஜய்<br />
<br />
பின் அரங்கில் :<br />
அமலா மோகன்<br />
பானு<br />
தர்ஷினி<br />
தினேஷ் குமார்<br />
ஜெனிஃபர் மார்ஷல்<br />
பிரவீன் குமார்<br />
ரூபன் பால்<br />
ஸ்ரீராம்<br />
வைஷ்ணவி<br />
வின்சென்ட் பால்<br />
<br />
நன்றி:<br />
அ.மங்கை<br />
சதானந்த் மேனன் (ஸ்பேசஸ்)<br />
பேராசிரியர்.சரஸ்வதி<br />
கொளத்தூர் மணி<br />
பழனிச்சாமி<br />
ஜீவா ரகுநாத்<br />
உமா சத்தியநாரயணா<br />
பிரளயன்<br />
திருமுருகன்<br />
சுதா ஸ்ரீதர்<br />
சிவா<br />
சங்கரி & அனுசுயா சுந்தரம்<br />
<br />
”தூரிகையில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி’’ - லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறதுரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-63879545559668279742011-05-29T13:56:00.000+05:302011-05-29T13:56:03.955+05:30UAE தமிழ் சங்கத்தின் குறும்பட போட்டி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXTei30DX3ajfUPLwOm2b84i0HyF5B_UgcdFWxtQ1TVS8aMoasJK9pSf-vR8W3iBDXq4tTRUJIrQW288HOxIMy3sVLBS9KDK1TXpkyKP-7Yl05c4qexrw6A-uMr_OqFGn769MsVw/s1600/UTS+Short+Film+Competition.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="256" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXTei30DX3ajfUPLwOm2b84i0HyF5B_UgcdFWxtQ1TVS8aMoasJK9pSf-vR8W3iBDXq4tTRUJIrQW288HOxIMy3sVLBS9KDK1TXpkyKP-7Yl05c4qexrw6A-uMr_OqFGn769MsVw/s320/UTS+Short+Film+Competition.jpg" /></a></div><br />
UAE Tamil Sangam's Short Film Competition<br />
<br />
Please don't miss the great opportunity of participation in this competition.<br />
Last Date for Registration 1st June 2011, 9PM.<br />
<br />
Thank you very much for all those who have already registered for this.<br />
<br />
1st week of June registered participants will be called for discussion. Time & Venue will be SMSed only to those who register.<br />
Registration is compulsory. Online Registration: http://www.uaetamilsangam.com/utsshortmovies.asp<br />
<br />
Dear Directors you have to choose your Teams Talented members for Acting, Dancing, Singing, Editing, Music, Script writing... from UAE Tamil Sangam only. <br />
Any one can participate but the Participants should be a Member of UAE Tamil Sangam<br />
Become Member : http://www.uaetamilsangam.com/becomemember.asp<br />
<br />
The Best Movie, Director, Actor, Actress, Editor, Musician, Singer will be selected by Famous Tamil Movie Directors.<br />
Your Movie will be telecasted during one of UTS Mega Event.<br />
If your Movie gets selected as best movie it will have a big chance of being telecasted in any Major Tamil Channel in Chennai.ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-3879486277439825522011-05-03T01:23:00.001+05:302011-05-03T01:23:45.203+05:30மாலைமலரில் இருந்து காப்பியடிக்கும் தட்ஸ்தமிழ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">ஒசாமா செத்துட்டான். இது க்ளோபல் நியூசு. இந்த மேட்டரை டிவியில பாத்து அப்படியே வேற மாதிரி (இவுங்களே சண்டை நடக்கும்போது பைனாக்குலர்ல வாச்சுனமாதிரி) எழுதுவாய்ங்க. அதை கேட்டா ஏ.என்.ஐ, ராய்ட்டர்ஸு எல்லாம் ஒரே மேட்டரைத்தான் தரான் அப்படீம்பாங்க. ஆனா பாருங்க, ஒரு அட்டு நியூஸ். அதை மாலை மலரில் சனிக்கிழமை போட்டதை வரிக்கு வரி மாறாம அடிச்சிருக்கான் தட்ஸ் தமிழ். இத்தனைக்கும் தட்ஸ்தமிழ் என்பது ஒன் இண்டியா குழுமம், நல்ல வருமானம் உள்ள கொம்பேனி, இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ?<br />
<br />
சரக்கு இல்லையா இல்லை ஆளுவளுக்கு சம்பளம் கொடுக்க மனசு இல்லையா ? தக்காளி இந்த லொட்டை நியூசை மாலைமலர்ல வேற காப்பியடிச்சு போடனுமாக்கு ?<br />
<br />
சனிக்கிழமை மாலை மலர்ல வந்த நியூசு : படத்தை பெரிசாக்க அதுமேல க்ளிக்கவும்<br />
<br />
<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimrYKtJqzxSDV7dTObqkelzoNhGw9Nd4wE7dCQkcmBTEDl2BluxgqVEIq0RIpBK_-AyBYXoCHJjknA46MGGScP-TRZu-95kC9bIusjWiRaUD1T7bn8HbL_EIjcOU3-v7pN6aTDXA/s1600/malaimalar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimrYKtJqzxSDV7dTObqkelzoNhGw9Nd4wE7dCQkcmBTEDl2BluxgqVEIq0RIpBK_-AyBYXoCHJjknA46MGGScP-TRZu-95kC9bIusjWiRaUD1T7bn8HbL_EIjcOU3-v7pN6aTDXA/s400/malaimalar.jpg" width="400" /></a></div><br />
ஞாயித்து கிழமை தட்ஸ்தமிழ்ல வந்த நியூசு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYohFHgPo8R83YWCYmYnYVR4j2yB1nzUjD133PaXGCSgBvzn3eLkJOEw2w5xk0-QekA3LC2N3a3OcoIQQ3BZCekQ62q-b3AbVhT-gpCfg9Xhv_9C3-2lwomtjDQpxAE7XGtrswVw/s1600/thatstamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="223" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYohFHgPo8R83YWCYmYnYVR4j2yB1nzUjD133PaXGCSgBvzn3eLkJOEw2w5xk0-QekA3LC2N3a3OcoIQQ3BZCekQ62q-b3AbVhT-gpCfg9Xhv_9C3-2lwomtjDQpxAE7XGtrswVw/s400/thatstamil.jpg" width="400" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div>. </div></div><br />
இனி மாலை மலர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் ?<br />
<br />
பாரீஸ் கார்னர்ல இருந்து ஒரு வக்கீல் நோட்டீஸை ஒன் இண்டியா குழுமத்தின் அட்ரசுக்கு அனுப்பலாம். <br />
<br />
கோர்ட்டுக்கு வெளிய சமரசம் செய்ய வந்தா ஒரு அமவுண்டை பைன் போட்டு பிரச்சனைய முடிக்கலாம். <br />
<br />
ஏதோ நாம கூவுறத கூவிடுவோம்.ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-43563056153776963682011-03-15T20:07:00.001+05:302011-03-15T20:07:55.744+05:30விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம், கருத்து சொல்லுதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"><img src="http://www.topnews.in/files/Tamil-chief22.jpg" /></span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 20px;"><br />
</span></span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;"><span class="Apple-style-span" style="line-height: 20px;">சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.</span></span><br />
<div class="news_quotes_details" id="quote_relatedlink" style="float: right; padding-bottom: 6px; padding-left: 14px; padding-right: 2px; padding-top: 4px; width: 250px;"></div><span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;"><br />
<br />
கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.<br />
<br />
அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.<br />
<br />
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.<br />
<br />
இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.<br />
<br />
விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.<br />
<br />
இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;"><br />
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial, latha, TSCu_paranar;">நன்றி - தட்ஸ்தமிழ்..</span></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-26285239.post-70192989363792322712011-03-15T13:54:00.000+05:302011-03-15T13:54:43.436+05:30மென்பொருள் நிறுவனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><img src="http://www.eziworx.com/upimages/pos.jpg" /><br />
<br />
சென்னையை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனம் 500+ கஸ்டமர்களோடு விற்பனைக்கு வருகிறது. PoS (Point of Sale Software Product) - கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 5 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 30 முதல் 40 லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். விற்பனைக்கான காரணம், நிறுவனரின் உடல்நிலை. மெர்ஜர் / அக்யூஷன் துறையில் இருப்பவர்கள் அல்லது நிறுவனத்தை வாங்கி நடத்த விருப்பம் இருப்பவர்கள் தொடர்புகொள்க. ravi.antone@gmail.com</div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-26285239.post-655262948874863382011-03-11T15:53:00.002+05:302011-03-11T15:53:38.691+05:30#tnfisherman ஆலோசனைக் கூட்டம்நாம், கடந்த 30/01/2011 அன்று சென்னை மெரீனாவில் சந்தித்து, மீனவர்<br />
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அன்றைய சந்திப்பில்<br />
முடிவெடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களிலும் நமது<br />
செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நம் இணைய நண்பர்கள்<br />
குழுவினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களையும் அறிந்து<br />
வந்துள்ளனர். மேலும் சில அமைப்பினரும் நம்முடன் இணைந்து இதனை<br />
முன்னெடுப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
இது வரை மேற்கொண்ட செயல்கள் பற்றிய பரிசீலனைகளை (Review) மேற்கொள்வதோடு,<br />
அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும்<br />
கலந்துரையாடி, செயல்படும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இது<br />
சம்பந்தமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மீனவர் சங்கப்<br />
பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.<br />
<br />
அதன்படி நமது அடுத்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20/03/2011 அன்று<br />
நடைபெற உள்ளது. #tnfisherman இணையக் குழும உறுப்பினர்களும், ஆர்வலர்களும்<br />
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.<br />
<br />
நாள்: 20/03/2011 ஞாயிறு<br />
நேரம்: மாலை 5 மணி<br />
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், மேற்கு KK நகர். (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ்<br />
அருகில்)<br />
<br />
savetnfishermen.org சார்பாக<br />
கும்மி.ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-45868797448509126222011-02-23T09:03:00.000+05:302011-02-23T09:03:46.131+05:30டோபா டக்திதான் புள்ளிராஜா...<b>கீற்று தளத்தில் தமிழச்சியின் கட்டுரை..ஒரே ஒரு சின்ன தகவல் பிழை. சோபா சக்திக்கு பயங்கர ராணுவ வைரஸ் எல்லாம் பரப்ப தெரியாது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை. ஆகவே கணினியில் நல்லதொரு வைரஸ் ரிமூவர் சாப்ட்வேர் பயன்படுத்தவும்..</b><br />
<br />
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.<br />
<br />
ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.<br />
<br />
சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது மிரண்டு போய் விளக்கம் கொடுக்கிறார். "தமிழச்சியின் விருப்பத்தின் பேரிலேயே உடல் சார்ந்த உறவாய் இருந்தது. இதைச் சொல்லுவதால் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவதூறாளர்களே என்னை பேச வைத்தார்கள்" என்கிறார்.<br />
<br />
இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? இதையும் தாண்டி இக்கட்டுரை வெளியிடப்பட்ட உடன் சோபாவின் நண்பர்கள் ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று பின்னூட்டமிடுகிறார்கள். ஓர் அயோக்கியனுக்கு உதவியாய் குழுவாய் இணைந்து ஒரு கட்டுக்கதையின் உருவாக்கத்திற்கு இவ்வளவு ஆர்வமாய் மின்னல் வேகத்தில் விழும் கருத்துக்களுக்கு பின் எந்த அரசியலும் இல்லையா? அல்லது இவர்கள் என் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தவர்களா?<br />
<br />
'இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசியதில்லை' என்று சோபா சக்தி சொல்வது உண்மையென்றால், அவரது நண்பர்கள் முன்னமே எங்களுக்குத் தெரியும் என்று சொல்வது எப்படி? பெண்களை எப்போதும் படுக்கையறைப் பொருளாக பார்க்கும் புத்தி இருப்பதால் மட்டுமே, சோபாவால் அவரது நண்பர்களிடம் இப்படி பேச முடிந்திருக்கிறது.<br />
<br />
இந்த மாதிரி அசிங்கம் பிடித்த வேலைகளை 3 வருடங்களுக்கு முன்பு சோபா செய்தார் என்றுதான் உதை கொடுத்து அனுப்பினேன்.<br />
<br />
சோபாவுடன் எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?<br />
<br />
இலக்கியம், பெரியாரியம், கம்யூனிசம் என்று பொது நலன் சார்ந்து இயங்கும் நபராக ஆனந்த விகடன் இதழில் சோபா சக்தியின் பேட்டி வந்தது. 'பிரான்ஸில் பெரியாரியம் பேசும் ஆளா' என்ற மகிழ்ச்சியில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரது தங்கைதான் எடுத்தார். சோபா அப்போது வீட்டில் இல்லை. மாலையில் சோபாவிடம் இருந்து போன் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பேசுவதற்கே ஆளில்லாமல் இருந்த எனக்கு, பெரியார் குறித்தும், பெண்விடுதலை குறித்தும் சோபா பேசியது உற்சாகமளித்தது. ஏற்கனவே பழகியவரிடம் பேசுவது போல் அவரது பேச்சு பகடி கலந்து இருந்தது. அரைமணி நேரம் பேசியிருப்போம்.<br />
<br />
ஒரு வாரம் கழித்து சோபாவே மறுபடியும் பேசினார். 'அன்றைக்கு அவ்வளவு நேரம் பேசினீர்கள். அதோடு மறந்து விட்டுட்டீங்களா?' என்றார். என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஒரு பெரியாரிஸ்ட் மற்றும் ஈழப் போராளியாக இருந்தவரைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்ததால் வீட்டிற்கு வரச் சொன்னேன்.<br />
<br />
சோபா சக்தி பிரியாவிற்கு அளித்த பதிலில், அவரது பொய்க்கு வலு சேர்க்க உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதியிருக்கிறார். எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். சிறுவயது முதல் என்னை நன்கு அறிந்த ஒரு குடும்ப நண்பர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். சோபா எனது ஊருக்கு வந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்ததும் என் கணவர்தான்.<br />
<br />
இதையெல்லாம் சோபா ஏன் சொல்லவில்லை? வீட்டிற்கு அழைத்தவளை, படுக்கையறைக்கு அழைத்ததுபோல் ஏன் பேச வேண்டும்? அப்போதுதானே அவர் சொல்லும் 'மூன்றாவது சந்திப்பு உறவுக்கு' வலு சேர்க்க முடியும்!!<br />
<br />
நான் பிரான்சில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும் பொதுவெளியில் தமிழ் மக்களுடன் எனக்குத் தொடர்பே இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களைத் தவிர பொதுவாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நபர் சோபா சக்திதான்.<br />
<br />
என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது. அரை மணி நேரம்தான் அந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் பெரியார், பெண்விடுதலை, சாதியொழிப்பு பற்றியே பேச்சு இருக்கும்.<br />
<br />
இரண்டாவது முறை எனது ஊருக்கு வந்தபோது, ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம். நான் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். 'ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்' என்று கேட்டார் சோபா. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. 'அவர்களையும் வெளியே கூட்டி வந்த மாதிரி இருக்குமல்லவா?' என்றேன். 'எப்போதும் குடும்பத்தை சுமந்து கொண்டு இருக்காதீர்கள்' என்று பகடி செய்தார்.<br />
<br />
சோபா சொன்ன பொய்களில் ஒன்று எனது வலைப்பக்கத்தை அவர்தான் ஆரம்பித்துக் கொடுத்தார் என்பது. உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே வலைப்பக்கம் வைத்திருந்தேன். பெரியாரது கட்டுரைகளை தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றும் வேலையைச் செய்துவந்தேன். தட்டச்சு செய்வது, வலையேற்றுவது தவிர இணையம் தொடர்பான தொழில்நுட்பங்கள் எனக்குத் தெரியாது. இரண்டாவது சந்திப்பின்போது சோபா, எனது வலைப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை, அதை மாற்றித் தருவதாக சொன்னார். நானும் சரியென்றேன். அதன் விபரீதமும் அப்போது எனக்குப் புரியவில்லை. 'நான் தனியாளாக டைப் செய்து பெரியார் கட்டுரைகளைப் போட்டு வருகிறேன், பெரிய அளவில் வாசிக்கப்படுவதில்லை' என்று சொன்னபோது, சோபா சக்தி 'தமிழ்மணம் என்ற ஒரு திரட்டி இருக்கிறது. அதில் உங்கள் வலைப்பக்கத்தை இணைக்கலாம்' என்று சொன்னார். அதுபோல் இணைத்தும் கொடுத்தார்.<br />
<br />
‘பெரியாரின் பார்வையில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அப்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை தொலைபேசியில் சோபாவிடம் சொன்னபோது, அந்த எழுத்துப்பிரதியைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். ‘வேறொரு வேலையாக அந்தப் பக்கம் வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால், அந்தப் பிரதியைத் தர முடியுமா’ என்று கேட்டார். அப்படித்தான் மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. அவர் என் ஊருக்கு வந்தபோது, இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் எனது காரை நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தோம். எழுத்துப் பிரதியைப் படித்து விட்டு, ‘பெரியாரைத் திரிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் மறுத்து, விவாதித்தேன்.<br />
<br />
ஆனால் இப்போது 'இந்த சந்திப்பில்தான் எங்களிடையே உடல்ரீதியான உறவு ஏற்பட்டது' என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன், பகற்பொழுதில் தெருவில் காமம் கொள்ள அவர் என்ன நாய் ஜென்மமா? இல்லை என்னைப் போன்ற பெண்கள்தான் அப்படித் திரிகிறோமோ?<br />
<br />
2007 காலகட்டங்களில் சோபா சக்தி அடிக்கடி வெளிநாடு போய்வந்து கொண்டிருப்பார். கியூபா, மலேஷியா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் வந்ததை சொல்வார்.<br />
<br />
‘அரசு உதவிப் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு வெளிநாடுகளுக்கு எப்படிப் போய்வர முடிகிறது?’ என்று கேட்டபோது, சிரித்துச் சமாளித்தார். ‘நண்பர்கள் கொடுத்து உதவுவார்கள்’என்று வேறொரு முறை சொன்னார்.<br />
<br />
ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார். 'நீங்களே இங்கு காசில்லாமல் நண்பர்களிடம் வாங்குவதாகச் சொல்லும்போது, சுகுணாவுக்கு எப்படி ஒரு லட்சம் கொடுக்க முடிகிறது? உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? எந்நேரமும் குடிப்பதற்கு எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன். வழக்கம்போல் பகடியாக, 'பணம்காய்ச்சி மரம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி எனது கேள்வியைக் கடந்துபோய்விட்டார்.<br />
<br />
எங்களுக்கு இடையே பல்வேறு முரண்கள் இருந்ததாக சோபா சொல்கிறார். ஆனால் அது என்னவென்று சொல்லதாதில்தான் அவரது கள்ளத்தனம் இருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து என்னிடம் பேசிவந்தார். 'புலிகளுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். நான் கடுமையாக மறுத்தேன். 'மக்கள் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனிதாபிமானமற்றவை. சமரசமில்லாமல் போராடி வருவது புலிகள் தான்' என்று சொன்னேன். ஈழப்போராட்டத்திற்கு எதிராக சோபா சொல்வது எல்லாம் மிகத் தவறானவை என்று கொள்கை ரீதியாக தொடர்ந்து மறுத்து வந்தேன்.<br />
<br />
புலி எதிர்ப்பு அரசியலை என்மீது திணிப்பதில் அவர் தீவிரமாக இருந்தார். என்னுடன் பேசிய பொழுதுகளில் பெரும்பாலான நேரத்தை அதற்குச் செலவிட்டார். ஆனால் தொடர்ந்து கடுமையான வாதங்களால் மறுப்பு தெரிவித்து வந்தேன். ஈழப் பிரச்சினையில் என்னிடம் எதிர்க்கருத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின்பு அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, பாலியல் சுதந்திரம் தொடர்பாக தனது கருத்தைத் திணிக்கத் தொடங்கினர். ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார். நான் அறிந்தவரை மேலை நாடுகளில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் எதிர்பாலினருடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதை ஒரு ஒழுக்கமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எதிரான செயலுக்கு பாலியல் சுதந்திரத்தை காரணமாக சோபா சொன்னார்.<br />
<br />
'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது. பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும்' என்றார். 'ஆண் இரண்டு பொண்டாட்டிகள் வைத்துக்கொண்டால், பெண்ணும் இரண்டு புருஷன்கள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று பெரியார் பேசியதை சோபா குறிப்பிட்டபோது, அதை மறுத்து, பெரியார் அதற்கு முன்னும் பின்னும் சொன்னதைச் சொல்லி, ‘பெரியார் எதிர்ப்பது கற்பைத் தான், பாலியல் ஒழுக்கத்தை அல்ல’ என்று பதில் கூறினேன். பல பெண்களை மணந்த கடவுளர்களையும், மன்னர்களையும் பெரியார் கடுமையாக சாடியிருப்பதை எடுத்துக்காட்டிப் பேசினேன்.<br />
<br />
அதன்பின்பு பெரியாரை விட்டுவிட்டு, பின்நவீனத்துவம் பேசத் தொடங்கினார். கட்டற்ற பாலியல் சுதந்திரம், கூட்டுக் கலவி பற்றியெல்லாம் பேசினார்.<br />
<br />
தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் முற்போக்கானவர்கள்; நாங்கள் எல்லாம் கூட்டுக்கலவி செய்வோம்; அவர்கள் போல மற்ற பெண்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும்' என்றார். ஒழுக்கம் பற்றிய எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்தார். நான் கடுமையாக மறுத்தேன்.<br />
<br />
'பிற்போக்கான தமிழ்ச் சமூகத்திலிருந்து மக்களை முன்னேற்ற விரும்புவர்கள், பொதுவாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்கள் பின்னே அணி திரளுவார்கள். சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வது மக்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் நம்மை மட்டுமல்ல, நமது சித்தாந்தங்களையும் சேர்த்தே நிராகரிப்பார்கள்' என்று பதில் கூறினேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஒரு தொலைபேசி பேச்சில் நடந்ததல்ல. வெவ்வேறு நாட்களில் எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் பேசியவை. ஆனால் பேசியதன் சாராம்சம் இதுதான்.<br />
<br />
இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான காரணங்களும் இருந்தன. பெரியார் எழுத்துக்களை இணையத்தில் பரப்புவதை ஊக்கப்படுத்தினார். இணையத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்பாடுகளில் இறங்கி, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியபோது சோபா என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார். பாரீஸில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு துண்டறிக்கை அச்சிட உதவினார். இவை அனைத்திற்கும் மேலாக சோபா ஒரு ஈழப்போராளி, பெரியாரியவாதி என்பதும், தலித் என்று சொல்லியதும் அவருடனான நட்பைத் தொடரச் செய்தது.<br />
<br />
எனது வலைப்பக்கம் தமிழ்மணம் வாயிலாக அதிகமான பேர் வாசிக்கும் தளமாக மாறியது. வலைப்பதிவர்களிடையே தமிழச்சி பெயர் பரிச்சயமாகி இருந்தது.<br />
<br />
ஒரு நாள் சுவிஸிலிருந்து சோபா போன் செய்தார். வழக்கம்போல் போதை. 'தமிழச்சி எனக்கு நெருங்கிய தோழி என்று சொன்னால் எனது நண்பர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?' என்று கேட்டார்.<br />
<br />
ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. அதன்பின்பு இந்த மாதிரி போன் செய்வது அடிக்கடி நடந்தது. எதிர்முனையில் பலரின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது இதில் ஏதோ உள்விளையாட்டு இருக்கிறது என்று தெரிந்து, போனைத் துண்டிக்கத் தொடங்கினேன்.<br />
<br />
பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைப் பாராட்டி கி.வீரமணி எழுதிய மின்னஞ்சல் நான் படிப்பதற்கு முன்பாகவே வேறு யாரோலோ படிக்கப்பட்டிருப்பதை அறிந்து, சோபாவுக்கு போன் செய்தேன். ஏனென்றால் எனது வலைப்பக்கத்தின் பாஸ்வேர்டும், மின்னஞ்சலின் பாஸ்வேர்டும் ஒன்றாகத்தான் இருந்தது. வலைப்பக்கத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்காக சோபா என்னிடம் பாஸ்வேர்ட் வாங்கியிருந்தார். 'வீரமணியின் மெயிலைப் படித்தீர்களா' என்று கோபமாகக் கேட்டபோது, 'ஏன் படிக்கக்கூடாதா? நான் உனக்கு நெருங்கிய நண்பனல்லவா! நமக்குள் என்ன ரகசியம்?' என்று கேட்டார். கடுமையாகத் திட்டி போனை வைத்தேன்.<br />
<br />
'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.<br />
<br />
சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.<br />
<br />
இரண்டாவது முறையாக சோபா என்னிடம் அடிவாங்கியதும் நடந்தது. ஒரு நாள் இரவு 8 மணிக்கு சோபா எனக்குப் போன் செய்து, ‘தமிழச்சிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொன்னால், எனது நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களிடம் பேச முடியுமா?’ என்று கேட்டார். ‘முன்பின் தெரியாதவர்களை எல்லாம் என்னுடன் பேச வைக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்தேன்.<br />
<br />
அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான் இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில் அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான் கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.<br />
<br />
என்னை புலியெதிர்ப்பு அரசியல் பேச வைக்கவும், பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சித்து தோல்வி கண்ட சோபா, என்னை அவரது படுக்கையறைப் பெண்களுள் ஒருவராக நண்பர்களிடம் சித்தரித்து அற்ப சுகம் கண்டார். சோபாவின் நண்பர்கள் சிலர் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தது, தமிழ்மணத்தில் என்னைப் பற்றி பலவாறு செய்திகள் வந்தது, இதிலெல்லாம் சோபாவின் கள்ளத்தனம் இருந்ததை பின்னர்தான் நான் உணர முடிந்தது.<br />
<br />
சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள் சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை சந்தித்திருக்கிறேன். அதில் கடைசி இரண்டு சந்திப்புகளிலும் அவர் அடி வாங்கினார். பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அப்படி பேசியது எல்லாம் கருத்தியல் விவாதங்கள்தான். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்தது. அவரிடம் காதல் கொள்வதற்கான எந்த காரணமும், அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர், ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?<br />
<br />
அவரது நட்பால் நான் இழந்ததுதான் அதிகம். நான் தட்டச்சு செய்திருந்த பெரியார் கட்டுரைகள் முழுக்க அழிந்து போனது. ஆபாசப்படங்களில் எனது முகத்தை ஒட்டி, நான் நிர்வாணமாக இருப்பதாகக் காட்டியது நடந்தது. எனது கேரக்டரைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது இணையதளத்தில் கடுமையாக திட்டி எழுதி வந்திருக்கிறேன் (இணைப்புகளைப் பார்க்கவும்). அப்போதெல்லாம் கள்ள மௌனம் சாதித்து வந்தார் சோபா சக்தி.<br />
<br />
என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்பியதுபோல்தான், மற்றவர்களைப் பற்றியும் என்னிடம் தவறான செய்தி சொல்லியிருந்தார். வளர்மதி, மாலதி மைத்ரி ஆகியோர்களைப் பற்றி வேறுவிதமாக திரித்துப் பேசினார். இவர்களை எல்லாம் நான் தவறாகப் விமர்சித்ததற்குக் காரணம் சோபாதான். ஆனால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சோபா சக்தி தொடர்ந்து இப்போதும் பொய்களேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்.<br />
<br />
நட்பை காமமாகப் பார்ப்பதும் பெண்ணை ஆபாசமாய்ப் பேசுவதும், உண்மை தெரியவரும்போது பாலியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கவும் தயாராய் இருப்பவருக்கு சமூகப் பிரச்சனை குறித்துப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?<br />
<br />
பெரியாரைப் படித்த நான் எப்போதும் மனவுளைச்சலுக்கு ஆளாக மாட்டேன். எதையும் துணிவுடன் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு. கீற்றுவில் எழுதியதாலேயே நான் இவ்வளவு நாகரிகமாக எழுதியிருக்கிறேன். சோபா மேலும் பொய்களையே பேசுவார் என்றால், தொடர்ந்து என்னிடம் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். வழக்கமான பாணியில் என்னுடைய இணையதளத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்.<br />
<br />
இவரை பின்நவீனத்துவவாதி, முற்போக்காளர், நாகரிகமானவர் என்று சொல்லும் பெண்களைப் பார்த்தால் சிரிப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. உங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் வராத வரைக்கும்தான் சோபா உங்களுக்கு தேவகுமாரனாகவே காட்சியளிப்பார். முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கினால், நான் சந்தித்த யூதாஸையே நீங்களும் சந்திக்க நேரிடும்.<br />
<br />
இணைப்புகள்:<br />
<br />
ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி! (http://tamizachi.com/index.php?page=date&date=2010-01-14)<br />
<br />
28-வது பெண்கள் சந்திப்பு: ´புலியெதிர்ப்பு பெண் தாதாக்களின் முகத்திரை கிழிந்தது.´ (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1562)<br />
<br />
"ரா" கூலிக் கூட்டத்தினரை அம்பலப்படுத்துவோம்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1009)<br />
<br />
இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்! - தொடர்ச்சி:2 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482)<br />
<br />
இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468)<br />
<br />
பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும் உள்ள வித்தியாசங்கள்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426)<br />
<br />
சோபா சகதியின் அரசியல் விபச்சாரம் - தொடர்ச்சி : 3 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=399)<br />
<br />
பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364)<br />
<br />
பிழையான புரிதலில் பெண்ணீயம்..! (http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-20&article=2013)<br />
<br />
பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008 நெடுங்குருதி..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258)<br />
<br />
27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! - மீள் ஆய்வு (http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16)<br />
<br />
"ங்கொய்யாலா" (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=297)<br />
<br />
27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும் - "Sho" காட்டுதலும்…! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=290)<br />
<br />
"sho" பா சக்தியின் டாவு? (http://tamizachi.com/index.php?page=date&date=2008-07-18)<br />
<br />
விவகாரமான "மாமா" பதிவர்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945)<br />
<br />
(சிறுகுறிப்பு: சோபா சக்தி என்னிடம் திரித்துப் பேசிய தகவல்களின் அடிப்படையிலேயே தோழர் மாலதி மைத்ரியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில கட்டுரைகளில் விமர்சிக்க நேர்ந்தது. அந்தப் பகுதிகளை விரைவில் நீக்குவேன். தோழர் மாலதி மைத்ரியிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்)<br />
<br />
- தமிழச்சி<br />
<br />
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-26285239.post-78541525554177294072011-02-15T00:59:00.002+05:302011-02-15T20:56:54.379+05:30கார்ட்டூன்ஸ் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp2j-MsbWwiEndzYb75Cqlw8ed1DddM8zmvyb-YMzf3WC-dmsPhifKyB-MDFqNqlIAsFSgz6kdEuvkfkf8GBOZ2mjSPGnQmYaTJoluiEZKRyWqq7og6nnNLB0To7DGKX_wTr2NWw/s1600/ramadosas.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhp2j-MsbWwiEndzYb75Cqlw8ed1DddM8zmvyb-YMzf3WC-dmsPhifKyB-MDFqNqlIAsFSgz6kdEuvkfkf8GBOZ2mjSPGnQmYaTJoluiEZKRyWqq7og6nnNLB0To7DGKX_wTr2NWw/s640/ramadosas.jpg" width="558" /></a></div><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxPvXbNPpNZkCT2ta9hZ0JdffvUhKwCMeAudyy2efOmiA4k5MO590lFtJObc2Tr38lxUJg8b_-g4RUF6wK4FWbXK3Nda9WDm9kIds8qc3F3pZMqB0xYjRtABPFtY3i69eXe0cP-A/s1600/vaico.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxPvXbNPpNZkCT2ta9hZ0JdffvUhKwCMeAudyy2efOmiA4k5MO590lFtJObc2Tr38lxUJg8b_-g4RUF6wK4FWbXK3Nda9WDm9kIds8qc3F3pZMqB0xYjRtABPFtY3i69eXe0cP-A/s640/vaico.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJgGr504jvI0__QGjYTmaZUPAg0B33OtDbzAhMi27e3XPNfZIm-fO773t0QEJiMBquRBEuiCcB_-4j6aZI_GbDTGUsb1jGEJfwUzedTaEiuYiE_n5Sw5FNHjccVYZShJVWSabBDg/s1600/thiruma1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJgGr504jvI0__QGjYTmaZUPAg0B33OtDbzAhMi27e3XPNfZIm-fO773t0QEJiMBquRBEuiCcB_-4j6aZI_GbDTGUsb1jGEJfwUzedTaEiuYiE_n5Sw5FNHjccVYZShJVWSabBDg/s640/thiruma1.jpg" width="516" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_TpTJm6D1jK7TmTwOdD0KWKlQNTFZdVDQ-xyaAUJ01fVOVTkdVrB2kG0AuiiQTii8ROriNAH-LnQnXFMsjGtJ7HKlw1LLbS7YnYJIdeaowwvsArApVweSm2xUGmigP3-250o2aw/s1600/vijay-03.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_TpTJm6D1jK7TmTwOdD0KWKlQNTFZdVDQ-xyaAUJ01fVOVTkdVrB2kG0AuiiQTii8ROriNAH-LnQnXFMsjGtJ7HKlw1LLbS7YnYJIdeaowwvsArApVweSm2xUGmigP3-250o2aw/s1600/vijay-03.jpg" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZzy3sTM_PESnHLnEOJDq4r0JEz_jvh7Kon3AZm3CR2tDw4zpQa_WA2ZE5uSL82OfKgw7bqNkGTjoa_3m4MTXtbBs4GUhVtbmLKkFaO74wShQjFJ1z-eqnNIdlK84jAyVuPppf7Q/s1600/yeddyurappa.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="632" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZzy3sTM_PESnHLnEOJDq4r0JEz_jvh7Kon3AZm3CR2tDw4zpQa_WA2ZE5uSL82OfKgw7bqNkGTjoa_3m4MTXtbBs4GUhVtbmLKkFaO74wShQjFJ1z-eqnNIdlK84jAyVuPppf7Q/s640/yeddyurappa.jpg" width="640" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMQBNA_OraULuLf-57KxrVO5_nvP_0EblsuS4QrgiqRYEYyorRgICThGLofgpVK9_qHNmOsphbD-jVoHmrt6g6lirMruGvqyaDtemFDN4nbdxSsjHyXcD1n0G7VliN4bNI1jAozA/s1600/vsachutanandan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMQBNA_OraULuLf-57KxrVO5_nvP_0EblsuS4QrgiqRYEYyorRgICThGLofgpVK9_qHNmOsphbD-jVoHmrt6g6lirMruGvqyaDtemFDN4nbdxSsjHyXcD1n0G7VliN4bNI1jAozA/s640/vsachutanandan.jpg" width="570" /></a></div><br />
<div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQbNGpjRxy3a6WiO_WDCowFf4VtLIBw6YpU8purt0_g-SH8v75e3yqH6JqEdbS04lrOXOXgK_7VlLaQeCH_0r75x3RJn2E-in3393cxmSftdxAVJzbQ1fbt9FpXTtHaKSaoLHDWw/s1600/LAT_DMK_GENERAL_BODY_33180f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="497" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQbNGpjRxy3a6WiO_WDCowFf4VtLIBw6YpU8purt0_g-SH8v75e3yqH6JqEdbS04lrOXOXgK_7VlLaQeCH_0r75x3RJn2E-in3393cxmSftdxAVJzbQ1fbt9FpXTtHaKSaoLHDWw/s640/LAT_DMK_GENERAL_BODY_33180f.jpg" width="640" /></a></div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"><br />
</div><div class="separator" style="clear: both; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinrDjCsW9wTq9wXcR6M3H5VdM2iODYlR4fjEXL13_o5tHCR7L8Yo0gr7E0qngxkosNLFNjsKbs2D70QXq_baBxel46b9KACr6825mLv9gLn2G6X1vXBcQxbRyhJnH2cmbRtvXY5w/s1600/Jayalalitha_film2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="404" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinrDjCsW9wTq9wXcR6M3H5VdM2iODYlR4fjEXL13_o5tHCR7L8Yo0gr7E0qngxkosNLFNjsKbs2D70QXq_baBxel46b9KACr6825mLv9gLn2G6X1vXBcQxbRyhJnH2cmbRtvXY5w/s640/Jayalalitha_film2.jpg" width="640" /></a></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi7HpwoRET2BNqxwUqfQOapyyeZJbKtqYpHktnuT9NMMhwxvabl9ERCMljFW7U3SRGMHHI9GFUL7EYpivaXDJpVpdF3rvsbf3IIdoWqSZE5YhczUpkRCk6WbpHArA-_y2jDQqbCw/s1600/manmohan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhi7HpwoRET2BNqxwUqfQOapyyeZJbKtqYpHktnuT9NMMhwxvabl9ERCMljFW7U3SRGMHHI9GFUL7EYpivaXDJpVpdF3rvsbf3IIdoWqSZE5YhczUpkRCk6WbpHArA-_y2jDQqbCw/s640/manmohan.jpg" width="521" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicgBjDFEST7Jz5dBwZ-2zGyDVvps_pzylC886AjQbdRWWvPsOKc71mn5-r9YHjbJS-qsICIIkJ-eXf_4QqJizG7Wsp_IMQfVsixGSwpu2vv7Oh6YzwPc-ChKyHCIXCQOYUeVyWSQ/s1600/thangabalu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicgBjDFEST7Jz5dBwZ-2zGyDVvps_pzylC886AjQbdRWWvPsOKc71mn5-r9YHjbJS-qsICIIkJ-eXf_4QqJizG7Wsp_IMQfVsixGSwpu2vv7Oh6YzwPc-ChKyHCIXCQOYUeVyWSQ/s640/thangabalu.jpg" width="459" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIaAdk6FppsRxwOyxXIATwsW8LYqsASgc6xGlt-YpC9dQqBdobHzOzroYR5S6C-FKzLeKsgv3oiJu_3COBI0213L3Tbv2NlhKxBzpN-gslJ8xyhKvQDNHvfncI5X2uyUwYbUZglQ/s1600/ilang.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIaAdk6FppsRxwOyxXIATwsW8LYqsASgc6xGlt-YpC9dQqBdobHzOzroYR5S6C-FKzLeKsgv3oiJu_3COBI0213L3Tbv2NlhKxBzpN-gslJ8xyhKvQDNHvfncI5X2uyUwYbUZglQ/s640/ilang.jpg" width="384" /></a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8wnTch7wLJsU_GzmOB1Rm1LirzR2t0riq7EZU2Ltw9v1jW1U3jLk9T2aqGLevd_mZzjiNxRukcSK0REWS_ws0OcRT9qeN0qOnjzgoNPHUiTU4qJJTjZ2lDNcteUPXfbqQHeXRrg/s1600/ArunPandian_daughter_Kavitha_wedding%25283%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="508" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8wnTch7wLJsU_GzmOB1Rm1LirzR2t0riq7EZU2Ltw9v1jW1U3jLk9T2aqGLevd_mZzjiNxRukcSK0REWS_ws0OcRT9qeN0qOnjzgoNPHUiTU4qJJTjZ2lDNcteUPXfbqQHeXRrg/s640/ArunPandian_daughter_Kavitha_wedding%25283%2529.jpg" width="640" /></a></div><br />
</div></div>ரவிhttp://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com20