கிருபாநந்தினி என்பவர், தமிழ்நதி அவர்களை பற்றி அவதூறு செய்து எழுதியிருப்பதை பார்த்தேன். அவர் எவ்வளவு முட்டள்தனமாகவும், குழந்தைத்தனமாகவும் எழுதியிருந்தாலும், அதை புறக்கணித்தாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால் இதுபோன்ற முட்டாள்தனங்களை வெகுஜன எழுத்துத்தாளர்களுக்கு பதிவுலகில் இருந்து கொடுப்பது தவறு என்று தோன்றுகிறது. என்னால் கிருபாநந்தினியை திருத்தமுடியாது. ஆனால் எதிர்வினையாற்ற முடியும். அதை இந்த இடுகை செய்யும். ஆணாதிக்கம், அது இது என்று யாராவது வந்து வம்பு செய்யுங்கள். அதற்கு முன் கிருபாமந்தினியின் இரண்டு இடுகைகளையும், அதில் அவர் எவ்வளவு முட்டாள்தனமாக எழுதியுள்ளார் என்பதையும் படித்துவிட்டு வாருங்கள்.
முதலில் படுத்தாதீங்க தமிழ்நதி
ஆனால் பாவம் இந்த தமிழ்நதி. வேலை மெனக்கெட்டு இவருக்கு பதில் சொல்லி தன்னுடைய நேரத்தை தான் வீணடித்துள்ளார்கள். எங்கோ ஒரு வேலையாக போயிருக்கும் நேரத்தில் மின்னஞ்சலை திறக்க, அதில் இந்த அவதூறு கண்டு ஆங்கிலத்தில் (அவர் உபயோகப்படுத்தும் எழுத்துரு இல்லாத நிலையில்) பதில் சொல்ல, அதையும் கிருபாமந்தினி கிண்டல் செய்துள்ளார்.
////இந்த வார குமுதத்துல ‘இங்கு ஈழம் விற்கப்படும்’கிற தலைப்புல ஈழக் கவிஞர் தமிழ்நதி எழுதியிருந்ததைப் படிச்சேன். என்ன சொல்றாங்கன்னா... புத்தகக் காட்சிக்குப் போயிருந்தாங்களாம். அங்கே பல பதிப்பகங்கள் ஈழத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களைத்தான் முன்னிலைப்படுத்தி இருந்துச்சாம். இது இனம்புரியாத கசப்பு உணர்வை அவங்களுக்குத் தந்துச்சாம்.
அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு////
அது என்ன ‘இனம்புரியாத’ன்னு புரியலை. இனம் புரிஞ்ச கசப்பு உணர்வுதான் அது. அவங்களே பின்னாடி ஒரு இடத்துல சொல்றாங்க, ‘காசு பார்ப்பதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு, ஈழத் தமிழர்களின் இழப்பையெல்லாம் பிழைப்பாக மாற்ற எத்தனிக்கும் கயமைத்தனங்கள் எரிச்சலூட்டுகின்றன’ன்னு. ஆள் உயர சைஸ் டம்ளர்ல, ஜூஸோ காபியோ குடிச்சுக்கிட்டே சிரிச்சபடி போஸ் கொடுத்துக்கிட்டே இதை அவங்க சொல்றதுதான் எனக்கு எரிச்சலா இருக்கு////
இனம்புரியாத, இனம்புரிந்த, ஏதோ ஒரு கசப்பு உணர்வு அவர்களுக்கு தோன்ற பல காரணங்கள் உண்டு கிருபாமந்தி. அதே ஈழத்தில் இருந்து தமிழ்நாட்டிலேயே அகதி வாழ்க்கை வாழும் பலர் அவரது சகோதர சகோதரிகளாக இருக்கக்கூடும். முள்வேலியில் அகப்பட்டு அழுக்குநீரை குடிக்கும் ஒரு அக்கா அவருக்கு இருக்கக்கூடும். இந்திய அமைதிப்படையாலோ, சிங்கள குரங்குப்படையாலோ பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டு அடிவயிறு வலிக்க கதறிய ஒரு தங்கச்சி இருக்கக்கூடும். உங்களுக்கு அப்படி யாருமுண்டா ? டெல்லிக்கு வேலை விஷயமாக போன கிருபா உண்டு. அவர் ஒருவேளை அங்கிருந்து ரசகுல்லா வாங்கி வரக்கூடும். ரசகுல்லா பிடிக்கும்தானே ? இனிப்பாயிருக்கும்.
///ஜூனியர் விகடன் பத்திரிகையைக் கண்டாலே எனக்குப் பிடிக்காதுன்னு நான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன். அதுக்காக, ஈழத்தைப் பத்தி அது புஸ்தகம் போடுறதை எழுத்து வியாபாரம்னு சொல்றதை எப்படிங்க ஏத்துக்கறது?
போட்டாலும் இப்படி, எழுத்து வியாபாரம், கயமைத்தனம்னு பேசுறது; போடலேன்னாலும், ஈழத்து மக்களின் கண்ணீர் இந்தத் தமிழகப் பத்திரிகைகள் இதயத்தைக் கரைக்கலையான்னு கேட்க வேண்டியது!///
எழுத்து வியாபாரம் இல்லாமல் வேறென்ன மந்தினி ? ஜூனியர் விகடன் என்ன இலவசமாகவா கிடைக்கிறது ? அவர்கள் பத்திரிக்கை நிறுவனம் நடத்துகிறார்கள். சர்க்குலேஷன், இத்யாதி, எழுத்தாளர், நிருபர் சம்பளம், டீ செலவு, காமிரா சார்ஜ் செய்ய கரண்ட் செலவு என்று இருக்கும். அதனால் பத்திரிக்கையை பணத்துக்கு விற்கிறார்கள். விற்கும் எதுவும் வியாபாரம் தானே ? ஏன் உங்களுக்கு ஜூனியர் விகடன் பிடிக்காது, நக்கீரன் பிடிக்கும் என்ற கேள்வியை நாங்கள் கேட்கலாம் தானே ? தமிழ்நதிக்கு ஈழத்தை கூறுகட்டி விற்பது பிடிக்கவில்லை. செத்து மடிந்த சொந்தங்களின் ரத்தம் மண்ணில் காயும் வரையாவது கூட இவர்கள் பொறுக்க மறுக்கிறார்களே என்பதாக பிடிக்கவில்லை. அவரது சொந்த விருப்பு வெறுப்புகளைக்கூடவா அவர்கள் எழுதக்கூடாது ?
///இந்தக் கட்டுரைக்குத் ‘தமிழ்நதி’யின் படத்தைப் போடலாமேன்னு இணையத்தில் தேடினப்போ, எழுத்தாளர் ஷோபாசக்தியின் இணையப் பக்கத்தில் இந்தக் கட்டுரை கிடைச்சுதுங்க. அதிலிருந்து சில வரிகளை இங்கே கொடுத்திருக்கேன். அதுக்கு மேல நீங்களாச்சு, ஷோபாசக்தியாச்சு! நான் ஒதுங்கிக்கிறேன். ஆள விடுங்க!///
ஷோபா சக்தியின் ஒரு இணைய பக்கத்தில் இருந்து சில வார்த்தைகளையும், ஒரு சுட்டியையும் தந்துள்ளீர்கள். இதற்கு முன் ஷோபா சக்தி ஆணா பெண்ணா என்று கூட தெரியாதவர் நீங்கள். தமிழ்நதி என்று கூகிளில் டைப்பினால் கிடைப்பது அந்த சுட்டி. ஆஹா. தமிழ்நதியை வேறொருத்தன் திட்டியிருக்கான் என்று உங்களுக்கு ஆதரவான சுட்டியாக அதை மாற்று வன்மத்தோடு (இந்த வன்மத்தை பின்னூட்டத்தில் செல்வேந்திரன் சுட்டிக்காட்டிருப்பார்) வெளியிட்டுள்ளீர்கள்...
இந்த முதல் அவதூறு பதிவில் இருக்கும் சில பின்னூட்டங்கள் மிகவும் முட்டாள்தனமானவை. ஒரு சில நானும் போட்டேன்ல, நீயும் போடு என்பது போல மொ(ய்)த்தனமாக இருந்தாலுல் குப்பன் யாஹு பின்னூட்டத்தை மட்டும் சொல்லலாம்.
//என் பார்வையில் நான் பழகிய பல ஈழத் தமிழர்களிடம் , சிங்களர்களிடம் உணர்ந்த ஒன்று, ஈழ தமிழர்களுக்கு மற்றும் சிங்களர்களுக்கும் பரந்த மனப்பான்மை, எண்ணம் இல்லை என்பதே.
சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.//
சிறிய நாடு என்பதால் மனமும் சிறியதாக இருக்கிறது என்று எண்ணுகிறேன்.//
இவ்வளவு முட்டாள்தனமான பின்னூட்டத்தை இணையத்தில் தேடிதான் எடுக்கவேண்டும். அப்படி பார்த்தால் தைவான் நாடு இலங்கையை விட சிறியது. தைவான் காரர்கள் தலையை பிச்சிக்கொண்டும், மாலத்தீவுக்காரர்கள் மண்டையை ங் ங் ங் ங் என்று சுரண்டிக்கொண்டும், தைமூர்க்காரர்கள் ப்ளாட்பாரத்தில் சட்டையை கிழித்துக்கொண்டும் தான் அலையவேண்டும். நல்லா கெளப்புராங்கப்பா பீதிய. குப்பன் யாஹூ ? யாஹூவே அவுட்டேட்டட். இப்போ எல்லாம் ஜிமெயில். நல்ல டாக்டரை பாருங்க.
அடுத்து மனநல மருத்துவர் ருத்ரன், கீப் ரைட்டின் என்ற பின்னூட்டத்துக்கு கண்களில் நீர் துளிர்த்து உச்சி குளிர்ந்துதது கிருபா மந்தினி.
///ஐயா! மன நல மருத்துவர் டாக்டர் ருத்ரனுங்களா! ஐயோ! என்னால நம்பவே முடியலீங்களே! நீங்க எவ்ளோ பெரியா மனுஷன்.. இந்தச் சாதாரண மனுஷியின் வலைப்பூவுக்கு வந்து படிச்சுப் பார்த்ததோடல்லாம பாராட்டிப் பின்னூட்டமும் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றிங்கய்யா! (என் கண்கள்ல துளிர்க்கிற நீரை இங்கே பதிவு பண்ண முடியலை!///
எனக்கு தெரிந்து அதே மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தால் தான் இவருக்குள்ள இம்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ், தாழ்வு மனப்பான்மை, அடுத்தவங்க புகழோடு இருப்பது கண்டு பொறாமை, இத்யாதி, இத்யாதி எல்லாம் தீரும்.
//ஹை! வாங்க தமிழ்நதி! ரொம்பக் கடுப்பாயிட்டீங்க போல! நீங்க பெரிய எழுத்தாளர். கவிதாயினி! உங்களுக்கு உங்க கருத்துக்களைச் சொல்ல குமுதம், விகடன் மாதிரியான பெரிய களம் இருக்கு. என் எழுத்துக்களையெல்லாம் எங்கே சீந்துறாங்க? //
இந்த பின்னூட்டத்தில் இருந்தே தெரியவில்லையா ? இவரது உண்மையான நோக்கம், தமிழ்நதியின் மீது ஜீனியர்விகடன் மீது ஏற்பட்டது போன்றதொரு பொறாமை, காம்ப்ளக்ஸ் இத்யாதி என்று.
தமிழ்நதியின் படத்தை இணையத்தில் இருந்து சுட்டு பதிவு எழுதியிருக்கீங்க. யார் அனுமதி கொடுத்தது ? இதுவே மிகப்பெரிய குற்றம். உங்கள் படத்தை போட்டு பதிவு எழுதினால் அனுமதிப்பீர்களா ? பின்னூட்டத்தையே அனுமதிக்க மறுக்கும் நீங்கள் எப்படி பதிவை ?
இந்த அவதூறுகளுக்கும், பின்னூட்டத்தில் செய்யப்பட்ட அவதூறுகள் மற்றும் முட்டள்தனங்களுக்கும் தமிழநதியின் பதில் கீழே:
ஒரே பின்னூட்டத்தில் இவ்வளவையும் வலைப்பூ ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் இரண்டாகப் பிரித்துப் போடுகிறேன். மீண்டும் சொல்கிறேன்..... வரலாறு சம்பந்தப்பட்டவர்களை மன்னிக்காது. பூமராங் போல ஒருநாள் திருப்பியடிக்கும். அதை நீங்களும் பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது இந்த நக்கல், குத்தல், நையாண்டி, ஏளனம் எல்லாம் எங்கு போகுமென்று பொறுத்திருந்து பார்க்கத்தான் போகிறோம்
செந்தழல் ரவி ஈஸ் ஈக்குவல் டு வரலாறு. ஓக்கே க்ரேஸ் கவ். grace cow என்று தன்னை அழைக்குமாறு அவர் எழுதிய அடுத்த முட்டாள்தனத்துக்கு பதில் சொல்ல நாங்க என்ன அவ்ளோ வெட்டியாவா இருக்கோம் ? போய் புள்ளக்குட்டிகள பாருங்க. உங்களைப்போல நாங்களும் புள்ளவளக்கறோம், சோறு ஊட்டறோம். babycenter.uk போனீங்கன்னா எப்படி கம்பூட்டர்ல நேரத்தை வீணடிக்காமல் புள்ளை வளர்ப்பது என்று சொல்வார்கள். அதை செய்யவும். அதை விடுத்து ஈழப்பிரச்சினை நடந்தபிறகு ஏன் தமிழ்நதி காப்பி குடித்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் என்று அடுத்தவரின் பர்சனல் வாழ்க்கையில் தலையிடும் வேலை வேண்டாம்.
நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவருக்கு வந்தா தக்காளி சூஸா ?
படித்துறை என்ற அழகான பெயரில் பதிவெழுதும் ஷன்முகப்பிரியனை காப்பியடித்து பதிவு வைத்துக்கொண்டு அடுத்தவரை தூற்றிக்கொண்டு ? உங்களது எழுத்து நடை நன்றாக உள்ளது. கலர் கலராக அடித்து நன்றாகத்தான் எழுதுகிறீர்கள். சமையல் குறிப்பு, குழந்தை வளர்ப்பு, கல்லூரி கலாட்டா, சிறுகதை, கவிதை, பதிவர் வட்டம், போன்றவற்றை எழுதலாமே ? ஈழம், உலக அரசியல், உள்ளூர் அரசியல் பற்றி ஆழ்ந்து வாசித்துவிட்டு பிறகு எழுதலாமே ? குறைந்தபட்சம் பிரபாகரனாவது யார் என்று தெரிந்துகொண்டு ? வாட் யூ சே ?
டிஸ்கி : பெண்ணியவியாதிகள், பெருவியாதிகள், பெரியாரியவியாதிகள், பின்னூட்ட மொய்வியாதிகள், டாவுவியாதிகள் என்று அனைவருக்கும் சொல்வது. நீங்கள் இங்கே பின்னூட்டம் போடுமுன், ஒரு அவதூறை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டு பிறகு வாருங்கள்.
