Showing posts with label நிறைவு. Show all posts
Showing posts with label நிறைவு. Show all posts

Saturday, November 08, 2008

டோண்டு ராகவன் : செந்தழலின் பார்வையில்....

நான் வலைப்பதிவுலகிற்கு 2006 பிப்ரவரி வாக்கில் வந்தபோது வலையுலகை உருட்டி பிரட்டிக்கொண்டிருந்த பிரச்சினை இப்போது இல்லை...

டோண்டுவை பெங்களூர் வலைப்பதிவில் சந்தித்ததில் இருந்து அவரது பதிவுகளை / மொக்கைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்...

டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு அதன் பலனை நானும் லக்கிலூக்கும் நன்றாகவே அனுபவித்துள்ளோம்...

கோவி.கண்ணன், மகேந்திரன், குழலி, செல்லா, ஜயராமன் உட்பட பலருக்கும் ஏதோ ஒரு வகையில் "மனக்கஷ்டம்" அல்லது "சைக்கோத்தனம்" அல்லது "அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி" அல்லது "அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது" அல்லது "நல்லவர் போல் நடித்து இன்பம் காண்பது" என்று பல உணர்ச்சிகளை கொடுத்த பிரச்சினை எல்லாம் இப்போது இல்லை...

வைஸ் வர்ஸாவாக இல்லாமல் போய்விட்டது, யாருக்கு என்ன உணர்ச்சி என்பதை நீங்களே பொருத்திக்கொள்ளுங்கள்...



படம் : திரு டோண்டு ராகவன் அவர்கள்...!!! (டோண்டுவின் படம் கிடைக்கவில்லை, அதனால் ஜெயகாந்தன் படத்தை போட்டிருக்கிறேன் )

டோண்டு ஒரு மசோக்கிஸ்ட் என்றார் குழலி...(அப்போது தான் அப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரியும்...அதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை)..டோண்டுவே !!! தமிழ் வலைப்பதிவுலகை விட்டு வெளியேறு !!! என்று நானே பதிவிட்டுள்ளேன்...அது தவறு என்று அப்போதே உணர்ந்தேன்..ஆனான் அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கோருகிறேன்...

தனிப்பட்ட வாழ்வை விடுங்கள்...இந்த மூன்று ஆண்டுகளில நட்பு, கோபம், உணர்வு, பாசம், கண்ணீர், வேகம் என்று பல உணர்ச்சிகளும், அறிவியல்,அரசியல் போன்ற அறிவும் இந்த வலையுலகம் மூலமாகவும் வந்து சேர்ந்துள்ளன...

ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகவேண்டிய பதிவுலகம், என்னை இவ்வளவு தூரம் ஆக்ரமித்தது என்றால் அதற்கு டோண்டு ராகவன் பதிவில் போட்ட ஒரு சிங்கிள் பின்னூட்டமும் காரணம்...

பதிவுலகம் என்னை மெருகேற்றியிருக்கிறது. நிறைய பொறுமை, உலகை பற்றிய அறிவு, என்னுடைய சொந்த எழுத்து திறமை, நிறைய நன்பர்கள், ஆளுமை திறமை போன்றவை இந்த பதிவுலகம் எனக்கு கொடுத்த கொடைகள்...

அதனால் டோண்டு ராகவனுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்...

இந்த பதிவு டோண்டு ராகவனை பற்றியது என்று திடீர் என்று நினைவுக்கு வந்து தொலைக்கிறது...

டோண்டு ராகவன் பற்றி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டு முடித்துவிடமுடியாது என்பதால் தான் இந்த தனிப்பதிவு...

அவருடைய என்னை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை , முரட்டு வைத்தியம் (சீரிஸ் பதிவுகள், முரட்டு வைத்தியம் என்ற லேபிளின் கீழ் பார்க்கவும்) போன்ற பதிவுகளை எப்போது மனக்கஷ்டம் ஏற்பட்டு உடைந்து போனாலும் படிப்பேன்...

தன்னை உணர்ந்தவனின் சுய பரிசோதனைகள் அவை...

ஆராதிக்கப்படவேண்டியவை...

கண்ணீரின் உப்பு வாயில் நனைக்க நனைக்க மீண்டும் மீண்டும் படிக்கப்படவேண்டியவை...

என்னைப்பொறுத்தவரை இதுவரை எந்த எழுத்தாளராளும் எழுதப்படாதவை...

பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டியவை...

இளவஞ்சி எழுதியிருப்பார்...தனித்துவமானவன்...உங்களைப்போலவே...
என்று...

டோண்டுவின் சில தனிப்பட்ட (யுனீக்) குணங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்...நீங்கள் தனித்துவமானவர் என்று எண்ணினால் இதுபோன்ற உங்களின் குணங்களை நீங்கள் பட்டியலிட முடிகிறதா என்று பாருங்கள்...

1. அசாத்திய பொறுமை : இதற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமா என்ன ?

2. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...தன்னுடைய போலியோடு அவர் போராடியதை சொல்லலாம்...

3. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...சல்மா அயூப் விவகாரத்தை சொல்லலாம்...சல்மா என்பவர் ஒரு குறிப்பிட்ட நபர் என்று ஆதாரங்களோடு விளக்கியும் இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து மாறவில்லை...ஒரு வேளை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாறலாம்...

4. நேர்மை..ஒரு வெள்ளிக்கிழமை கேள்வி எதுவும் வரவில்லை, அதனால் பதிவு போடவில்லை என்று சொல்லும் நேர்மை எத்தனைபேரிடம் இருக்கிறது ?

5. நெஞ்சுரம் : சகல தொழில்நுட்பங்களிலும் வித்தகரான அவருடைய போலியிடம் போராட அவரிடம் நெஞ்சுரத்தை தவிற வேறென்ன இருந்தது ? நாட்டாமையில் இருந்து ஹாரி பாட்டர் வரை கிளம்பி வந்தார்களே ?

மேலும் அவருடைய முரட்டு வைத்தியம் பதிவில் தொழிற்சங்கத்தை சேர்தவர்கள் பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்தபோது அவர் செய்தது இது !!!

நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.

இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன்.


6. விடா முயற்சி : அவரே சொல்கிறார் பாருங்கள்...

ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")

என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது.


7. நியாபக திறன்...தொடர்ச்சியாக பல சம்பவங்களை ஏதோ நேற்று நடந்தது போல நினைவில் வைத்திருப்பது...

மச்சினிச்சி கல்யாண வீடியோயில் இருந்து பள்ளிக்கூடத்தில் வாத்தியார் நடத்திய பாடம் வரை இன்றுவரை நியாபகம் வைத்து சொல்வது...

வாழ்க்கையின் மீது தெளிந்த பார்வை உடையவர்களாலேயே இப்படி நியாபகம் வைத்திருக்கமுடியும்...

8. இளமை : இன்றும் இளைஞராகவே திரிவது, தன்னுடைய துனைவியாரை அவ்வப்போது இழுத்து அவர் மீது உள்ள அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவது...

எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ?

கடைசீயாக...

என்மேல் கிளப்பப்பட்ட பல அவதூறுகளுக்கு எல்லாம் நான் அவரிடம் சென்று விளக்கம் அளிக்கும் முன்பே உண்மையை அறிந்துகொண்ட கூரிய அறிவு...!!!

யாராவது அவதூறு கிளப்பினால், அதனால் டோண்டு சார் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை...காரணம் அவர் நம்மை நம்புகிறார் என்ற உணர்வே தெம்பைத்தரும் தெரியுமா ?

கருத்து ரீதியாக எனக்கும் அவருக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நிபந்தனை அற்ற எதிர்பார்ப்புகள் அற்ற நட்பை தொடர்ந்து பாராட்டிவருவது...

ஏன் தொடர்ந்து காண்டு கஜேந்திரன் பதிவை எழுதி போதை ஏற்றிவரும் லக்கிலூக் தான் அவரது ஜெயா டிவி பேட்டியை பல இன்னல்களுக்கிடையே சி.டியில் காப்பி செய்து அவரை தேடி சென்று கொடுத்தவர்...

தீவிர திராவிட சிந்தனை உள்ளவரான லக்கியிடம் அவருக்கு நட்பு என்ற செய்தி, அவர் நட்பு பார்க்க மற்ற வடகலையார்கள் செய்வது போல தோள் சட்டையை தொட்டு பார்ப்பவர் அல்ல என்ற செய்தியை சொல்கிறதல்லவா ? ( என்ன வரவணையான் என்றால் தான் அவருக்கு கொஞ்சம் ஆகாது கிகிகி - டோண்டு சார் அடித்த கிங்ஸுக்கு வரவணை பில்லு போட்டது தான் காரணம் கிகிகி)



நானும் வரவணையானும் (இருவரும் மப்பில்)



படத்தை எடுத்தவர் ஓசை செல்லா !!!! லக்கிலூக் எதிர் பக்கத்தில் தண்ணியடிப்பதால் அவர் இந்த படத்தில் இல்லை...

அவ்வளது தான் டோண்டு சார் புராணம்...

இந்த பதிவு யாருக்கு கோபம் தரும், யாருக்கு நிறைவு தரும் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை...

எனக்கு நிறைவாக இருக்கிறது...!!!

Wednesday, September 24, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (இறுதி பகுதி)

ஒருமுறை கொஞ்சம் சீரியஸான பொழுதில் அவருக்கும் என்னுடைய நன்பனுக்கு கடுமையான வாக்குவாதம்...குடி, கடவுள், பெண்கள், வறுமை என்று பல்வேறு திசைகளில் போனது..

சார், உங்களை நீங்க கொஞ்சம் மாத்திக்கிட்டா நல்லது...

என்ன மாத்திக்கனும் ?

உங்கக்கிட்ட இருக்க கெட்ட பழக்கங்கள் கொஞ்சம் மாத்திக்கிடுங்க சார், அப்புறம் ரொம்ப கஷ்டமாகிரும்...

என்ன கெட்ட பழக்கம் ? சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்...

ஏய் விஜய், நீ சொல்றா...

விஜய் மெதுவாக ஆரம்பிச்சான்...சார் குடிக்கறது தப்பில்லையா ?

யார் சொன்னது தப்புன்னு ? ஏன் மேலை நாட்டுல சாப்பாட்டு டேபிள் மேலயே சரக்க வெச்சிருக்கான்...அப்பன் மவன் எல்லாரும் அடிக்கறான், அவன் கிட்ட போய் சொல்லுவியா ?

அங்க குடிக்கிறாங்கன்னா அது அவங்க க்ளைமேட்டுக்கு சூட் ஆகும் குடிக்கிறாங்க...இங்க எதுக்கு சார் குடிக்கிறோம் ? போதைக்கு தானே ?

ஏன் இங்க சரக்கே இல்லையா என்ன ? கற்காலத்துலயே சோம பாணம், சுறா பாணம் அப்படின்னு இருந்தது...

ஏன் ராமாயணம், மகாபாரத கதையில கூடத்தான் சரக்கு இருந்ததுக்கு ஆதாரம் இருக்கு...அப்போ என்ன இந்தியா க்ளைமேட் ஸ்விஸ்ஸர்லாந்து க்ளைமேட்டா இருந்ததா என்ன ?

சார், குடிக்கறது தப்பில்லை சார், அளவுக்கதிகமா குடிக்கறது தான் தப்பு...இடையில் புகுந்து நான்...

ஏண்டா, இவ்ளோ நேரம் குடிக்கறதே தப்புன்னு சொன்னீங்க, இப்ப அளவா குடிக்கனும்ங்கறீங்க...

எதுடா உங்க அளவு ? ஒருத்தனுக்கு நைண்டி அடிச்சா போதும்னா எனக்கு ஆப் அடிச்சாலும் மப்பு ஏறமாட்டேங்குது...நீங்க எல்லாம் மோந்து பாத்தாலே படுத்திடுறீங்க...அப்ப எது அளவு ? கவர்மெண்ட அதை மொதல்ல பிக்ஸ் பண்ணச்சொல்லு...அளவோட குடிக்கறோம்...

சார் அதை விடுங்க...கோவிலுக்கு போகக்கூடாது அப்படீன்னு நீங்க உங்க வொய்ப் கிட்ட சண்டை போட்டதா சொன்னீங்களே ? அது தப்பில்லையா ?

ஆமா...பூஜை, புனஸ்காரம்னு உப்பு சப்பில்லாத மேட்டருக்கு காசு செலவு பண்ணா ? அதான் இழுத்து போட்டு அடிச்சேன்...

சார், உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாம இருக்கலாம்...அதுக்காக அவங்களை ஏன் சார் தடுக்கனும் நீங்க ?

ஏய் என்ன சொல்ற நீ ? கொஞ்சமாவது அறிவு இருக்கா ? உலகம் கடவுள் படைச்சாடா உருவாச்சி ? பிக் பேங் தியரி தெரியுமா ? ஓசோன்ல ஹோல் தெரியுமா ? ப்ளாக் ஹோல் தெரியுமா ?

இவ்ளோ சைன்ஸ் வளந்திருக்கு, டி.என்.ஏவுல உள்ள ஸ்ட்ரக்சரை ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கும்போது, கோயில்ல அய்யர் ஊத்தற மாட்டு மூத்திரத்த தலையில தெளிச்சிக்கிட்டு வர்றது எதுக்கு ?

சார், கடவுள் அப்படீங்கறது அவங்கவங்க நம்பிக்கை சார்ந்த விஷயம். நீங்க பாலோ பண்ணலைன்னா ஏன் சார் அடுத்தவங்களை இரிட்டேட் பண்ணனும் ?

ஏன் விஜய் கூடத்தான் தினமும் காலையில சாமி கும்பிடுறான்...அதுக்காக நாங்க பண்ற ப்ராஜக்ட் டெலிவரி வேணாம்னு சொல்லிருவீங்களா சார் ?

கும்பிடுங்கடா. நல்லா கும்பிடுங்க. அதுக்கு முன்னால உங்க மண்டையில இருக்க களி மண்ணை கொஞ்சம் யூஸ் பண்ணுங்கன்னு சொல்றேன்...ஒம்போது கிரகமாம், பூமியை சுத்தி எல்லா கிரகமும் இருக்காம், அரை லூசுப்பயலுகளா.

புளூட்டோ, நெப்டியூனை ஏன் சேர்க்கலை ? அதுவும் இல்லாம மில்க்கீ வேயில ஆயிரக்கணக்கான கிரகங்கள் இருக்கே, அதுக்கெல்லாம் போடவேண்டியது தானே கட்டம் ? ஏன் துலாம், கண்ணியோட நிறுத்திட்டீங்க ? டைனோசர் ராசியையும் சேர்க்கவேண்டியது தானே ?

சார் இது வீண் விதண்டாவாதம். நம்மளோட முன்னோர்கள் சொன்னது எல்லாம் ஒவ்வொரு காரணத்துக்காகத்தான்..

ஏண்டா காக்காயிக்கு சோறு வைக்கச்சொன்னாங்களா முன்னோர்கள் ? முண்டச்சிக்கு மொட்டையடிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ?

எலுமிச்சம்பழத்தை வெச்சு திருஷ்டி கழிக்க சொன்னாங்களா முன்னோர்கள் ? அப்படி ஒரு மண்ணுக்கும் யூஸ் இல்லாத மேட்டரை வெச்சு என்னாங்கடா கிழிச்சீங்க ? கம்புயூட்டர் கண்டுபிடிச்சீங்களா, கரண்ட கண்டுபிடிச்சீங்களா, அட்லீஸ்ட் ஒரு கால்குலேட்டரயாவது கண்டுபிடிச்சீங்களா ?

வாழை எலையை எப்படி போட்டு திங்கனும்னு சொல்லிக்குடுக்கறதுக்கு எதுக்குடா அந்த பண்ணாடைங்க ? ஏன் இப்ப வாழை எலையை உட்டுட்டு ப்ளாஸ்டிக் ப்ளேட்ல திங்கறீங்க ? ஏன் வாழை எலையிலேயே திங்கறது ?

சார், உங்களை மடக்க வேற வழியில்ல, உங்க பர்சனல் மேட்டருக்கு தான் வரவேண்டியிருக்கு...

தாராளமா வாங்க, எதுவார்ந்தாலும் கேளுங்க சொல்றேன்...

ஒய்ப் குழந்தைன்னு ஆனதுக்கப்புறம் உங்களுக்கு எதுக்கு சார் வேற பொண்ணு ? ஏன் உங்களால உங்களோட ஒய்ப் குழந்தைக்கு உண்மையா இருக்கமுடியல ?

உண்மையா இருந்தாத்தான் நல்ல புருஷனா ? அவங்களை நான் நல்லா வெச்சிருக்கேன். அதே சமயம் என்னுடைய செக்ஸ் தேவைகளை அவளாள பூர்த்தி செய்ய முடியாது, அதனால் தான் நான் அடுத்த பெண்ணை தேடி போறேன்...

பணம் கொடுக்கிறென், வராளுங்க. அவளுங்க வரலைன்னா நான் போவ முடியாது இல்லையா ? அதே சமயம் எங்கிட்ட பணம் இல்லைன்னா எவ வருவா சொல்லு ?

சார், இதை ஏத்துக்க முடியாது, நீங்க என்ன தான் சொன்னாலும் தன்னோட புருஷன் ராமனா இருக்கத்தான் எந்த பொண்ணும் விரும்புவா.

நீ சொல்ற அதே கதைகள்ல ஒரு பொண்டாட்டியோட ராமனும் இருந்தான், அவுங்கப்பன் தசரதன் ஆயிரம் பொண்டாட்டியோட இருந்தான்.

அதே ராமன் தான் அவன் பொண்டாட்டிய நெருப்புல இறங்க சொன்னான், நேருக்கு நேர் சண்டைபோடாம மறைஞ்சு இருந்து அம்பு உட்டான்...

சார், உங்களால உங்களோட பெயிலியர்ஸ் எதையும் ஒத்துக்க முடியாது...அதனாலதான் உங்களோட தனிப்பட்ட வாழ்க்கையில உங்களால சக்ஸஸ்புல்லா இருக்கமுடியல...

ஏன், இப்ப என்ன பெயிலியர் ? என்னால நினைச்சத குடிக்க முடியுது, நினைச்ச பொண்ணோட படுக்க முடியுது, நினைச்ச பொருளை வாங்க முடியுது, இதுக்கு மேல என்ன சக்ஸஸ்புல்லா இருக்கறது ?

நினைச்ச பொருளை வாங்குறதோ, நினைச்ச சரக்க குடிக்கிறதோ, நினைச்ச பொண்ணோட படுக்கிறதோ - இது மட்டுமே லைப் இல்லை சார். சமுதாயம் உங்களை எப்படி பார்க்குதுன்னு.....

இடைமறிக்கிறார்...

என்ன பெரிய சமுதாயம் ? நான் ஒன்னுமில்லாதவனாயிருந்தா இந்த சமுதாயம் வந்து எனக்கு சோறு போடுமா என்ன ? என்னோட காருக்கு என்ன சமுதாயமா பெட்ரோல் போடப்போவுது ? எவன் எப்படி இருக்கான்னு புறனி பேசறதுக்கு தான் இந்த சமுதாயம் லாயக்கு.

அவனுங்களால யாருக்கும் எந்த நன்மையும் இல்ல. அதுனால சமுதாயம், சாக்கடை டிச்சு, சவுக்கு மரம்னு பேசுறதை விட்டுரு சரியா ? நான் ஹைதராபாத் போனா இதே சமுதாயத்தை கூட்டிக்கிட்டா போவப்போறேன் ?

கொஞ்சம் மெல்லிய குரலில் விஜய் சொல்கிறான்...உங்களோட குழந்தையோட எதிர்காலத்துக்காகவாவது உங்களோட ஈகோவை விட்டுட்டு ?

என்ன ஈகோ ? பொட்டச்சிகளுக்குத்தான் இப்ப ஈகோ அதிகம். பத்தாயிரம் ரூபா சம்பளம் வாங்கிட்டாலே என்னமோ ப்ளைட் ஓட்டுறமாதிரி நடக்கறாளுங்க. அம்பதாயிரம் சம்பாதிக்கற என்னோட பொண்டாட்டிக்கு எவ்ளோ ஈகோ இருக்கும்னு நீயே முடிவு பண்ணிக்க...

சார், இந்த மைண்ட் செட்டோட இருந்தா எப்படி சார் நீங்க ஒன்னா சேர்ந்து வாழமுடியும் ? அட்லீஸ்ட் உங்களோட குழந்தையோட எதிர்காலத்தை பாருங்க சார் ப்ளீஸ்...

இப்ப அடுத்த ரவுண்ட போடலாம், அப்புறமா குழந்தையோட எதிர்காலத்தை பார்க்கலாம் ஹா ஹா ஹா என்று வெடிச்சிரிப்பாக சிரிக்கிறார்...நான் விஜய் முகத்தை பார்த்தேன்...

என்னவென்று தெரியாத ஏதோ ஒரு உணர்ச்சியை அவன் முகம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது...அவன் எப்போதும் இப்படித்தான், அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவன் முகத்தில் இருந்து கண்டுபிடிக்கவே முடியாது...!!!

சார் கிளம்பறேன் என்றபடி எழுந்தேன், விஜய் எனக்கு முன்பாக வாசல் அருகில் நின்றிருந்தான்...

அடுத்த வாரம் அவருடைய ட்ரைவர் சலீம் பாய் போன் செய்தார்.

சார். ரோட்ல ட்ராபிக்ல சண்டையில ஒருத்தன் கழுத்த நெறிச்சுட்டான் சார். தொண்டையில காயம் சார், டாக்டர் குடிக்கக்கூடாதுன்னு சொன்னார். இவர் நைட்டு குடிச்சார் சார்.

மேலே பேசமுடியாமல் தினறினார் பாய்...

காலையில எழுந்தவுடனே மூச்சுவிட முடியாம, இருமல் வந்து,

சார் போய்ட்டார் சார்...

. முற்றுப்புள்ளி

நினைவுகள் முற்றும்...!!!

.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....