
பல ஆபாச தளங்களை நடத்திய மலேசியா மூர்த்தி என்பவர் இவர்தான்
மார்ச் இரண்டாயித்தி எட்டு என்று நான் எழுதிய இடுகை சாரு நிவேதிதாவின் பணத்தை ஆட்டைய போட்டது மலேசியா மூர்த்தி என்பது.
சமீபத்திய யுவக்ருஷ்ணாவின் குமுதம் சைபர்க்ரைம் கட்டுரையில் அதனை வெளிப்படையாக எழுதியிருக்கலாம் என்பது உண்மைத்தமிழனை போலவே என்னுடைய கருத்துமாகும்.
குடும்பம், இரண்டு குழந்தைகள் என்று இருப்பதாலும், ஏற்கனவே சென்னை சைபர் க்ரைம் பிரிவில் ஆஜராகி, இவ்வாறு ஆபாசமாக எழுதி எல்லோருக்கும் மன உளைச்சலை கொடுத்தது தான் தான் என்றும் ஒப்புக்கொண்டதாலும், மேலும் சில வெளியில் சொல்லமுடியாத 'லும்', இனி இவ்வாறு செய்ய கனவிலும் நினைக்கமாட்டான் என்றே எண்ணியிருந்தேன். (ஆனாலும் உண்மைத்தமிழன் அண்ணனின் புகார், தொடர்ந்து காவல்துறையில் இருக்கிறது)
ஆனால் என்னுடைய பதிவிலும், உண்மைத்தமிழனின் பதிவிலும் மீண்டும் தன்னுடைய கைவரிசையை காட்டியுள்ளான். அந்த பின்னூட்டங்களை பார்க்கும்போது, இவன் இன்னும் முழுமையான அளவில் திருந்தவில்லை என்று தெரிகிறது.
இந்த மூர்த்திக்கும், மூர்த்திக்கு இன்னும் தொடர்பில் இருந்து உதவுபவர்களுக்கும் இந்த பதிவின் மூலம் கடுமையாக எச்சரிக்கிறேன். !!!! குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறது என்று எல்லா குற்றவாளிகளுக்கும் பாவம் பரிதாபம் பார்த்தால் அவர்கள் திருந்துவதற்கும், அவர்களால் மற்றவர்கள் திருந்துவதற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்ற உண்மையை உண்மைத்தமிழன் அண்ணன் உணர்த்தியுள்ளார். அவருக்கு என் நன்றி.