Showing posts with label போப். Show all posts
Showing posts with label போப். Show all posts

Saturday, March 21, 2009

ஏன் இந்த பதிவுக்கு மட்டும் இப்படி ?


பதிவு போட்டேன். சேர்க்கமுடியல.

மீள்பதிவாக்கினேன். அப்பவும் ஆட்டத்துல சேத்துக்க முடியாது என்று சொல்லுது.

நான் என்னதான் பண்றது ? அதான் ஒரு புது பதிவு போட்டு அந்த பதிவோல சுட்டியை இதுல குடுக்கறேன்.

பார்ப்போம் இதுவாவது வருதா என்று ? போப்பாண்டவர் உளரல் பற்றிய பதிவு

இருண்ட க(கா)ண்டமும் உளறிய போப்பாண்டவரும்



கிறிஸ்தவ மதத்தில் உயர்ந்த பதவி போப் ஆண்டவர் பதவியாகும்...பங்கு தந்தைகள், ஆயர்கள், கார்டினல்கள் என்று விரியும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத அடிப்படை பதவிகளில் இதுவே உயர்ந்தது.

இயேசுபெருமானால் முதல் போப் ஆண்டவராக - மதத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் புனித.இராயப்பர்.

இயேசுபெருமானின் வாயினால்..

"நீ பாறை, உன் மீது எனது திருச்சபையை கட்டுவேன்" என்றும் "சொர்க்கத்தின் திறவுகோல் உன்னிடமேயிருக்கும்" என்றும் புகழப்பட்டவர்..

இயேசுபெருமானை யூதர்கள் மற்றும் பரிசேயர்கள் கைதுசெய்யவந்தபோது (Final Assualt) தன்னிடமிருந்த குறுவாளை கொண்டு ஒருவரது காதை வெட்டினார் புனித இராயப்பர்.

வழிவழியாக இராயப்பருக்கு பிறகு இந்த உயர் பதவிக்கு கார்டினல்களில் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.

அதற்கான தேர்தல் நடைபெற்று அதன் பின் போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

தற்போதைய போப். இரண்டாம் பெனடிக்ட், ஜெர்மனியை சேர்ந்தவர்.

கடந்தவாரத்தில் இருந்து போப் பெனடிக்ட் அவர்களின் காண்டம் பற்றிய கருத்தை ஆங்கில ஊடகங்கள் குத்திக்குதறி கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும், இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் ஒரு பதிவும் வரக்காணோம்.

அதனால்தான் நானே களமிறங்கினேன்...

இந்த பதிவின் மூலம் யாரையும் புண்படுத்த முயலவில்லை. ஒரு செய்திப்பதிவு மட்டுமே இது.

போப்.பெனடிக்ட் அவர்கள் தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.கேமரூன் நாட்டுக்கு கிளம்பும் முன் அவர் எய்ட்ஸ் பற்றியும் காண்டம் பற்றியும் கூறிய தவறான சில கருத்துக்கள் தான் இப்போதைய விவாதப்பொருள்.

போப் சொன்னது என்னவென்றால்...

காண்டம் உபயோகப்படுத்துவதால் ஒரு புரயோசனமும் இல்லை..காண்டம் வினியோகிப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் செயல்தான் என்று உளறித்தள்ளிவிட்டார்.

அதுவும் ஒரு ஆப்ரிக்க நாட்டில், 22 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டதொரு கண்டத்தில், இப்படி காண்டத்தைப்பற்றிய அவரது உளரல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...

உலகளாவிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, போப் ஆண்டவரின் இந்த கருத்து "outrageous and insulting" என்று கூறியுள்ளது. மேலும் மேலும் பல நோயாளர்களைத்தான் இது உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது...

வாடிகன் பேச்சாளர் பெடரிக்கோ லம்பார்டி ஏதோ மழுப்பியுள்ளார். போப் ஆண்டவர் சொன்னது பர்சனல் ரெஸ்பான்ஸிபிலிட்டியை அதிகப்படுத்த மட்டுமே, போப் ஆண்டவர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்படிச்சொன்னார் என்று...

முன்பெல்லாம் போப் ஆண்டவர் பதவி வானளாவிய அதிகாரங்கள் படைத்ததாகவும், அரசுகளை கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது...

"இப்போ எல்லாம் யாரு நம்மளை மதிக்கறா" என்று பழைய ரயில்வே ரிட்டையர்டு பார்ப்பண பெரிசுகள் மாதிரி "போப்பாண்டவரும்" சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான் போல இருக்கிறதே ?

*******
******
*****

பாஸிடிவ்வோ நெகட்டிவ்வோ, ஓட்டை போடுங்கப்பா..

*****
****
***

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....