Showing posts with label தமிழ் ஈழம். Show all posts
Showing posts with label தமிழ் ஈழம். Show all posts

Sunday, April 26, 2009

தனி ஈழமே தீர்வு : புரட்சித்தலைவி வீர முழக்கம்...!!!



இன்றைக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தமிழருக்கு தனி ஈழமே ஒரே தீர்வு என்றும் அ.இ.அ.தி.மு.க தனி ஈழம் அமைய பாடுபடும் என்றும் முழங்கியிருக்கிறார்...

*********

கலைஞர் கருணாநிதி அவர்களே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் 'கடைசி நேர' பந்த் ஒன்றை நடாத்திவிட்டு, அது வாக்குகளாக விழுமா ஆப்புகளாக விழுமா என்று கணக்கு பார்த்துக்கொண்டிருக்கையில் புரட்சித்தலைவியின் இந்த அறிவி(ஆ)ப்பு வந்து விழுந்துள்ளது...

*********

காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தவேண்டுமாயின் அதற்கு அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பதே ஒரே வழி என்ற நிலையில் (விஜயகாந்தின் மீது முழு நம்பிக்கை வராத சூழ்நிலையில்), அம்மா ஆட்சியை திரும்ப கொண்டுவந்தால் மீண்டும் பொடா வாடா தடா என்று எதையாவது கையில் எடுப்பாரோ என்று கொஞ்சம் தயங்கிய உணர்வாளர்கள், இனி தயங்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்..

*********

தனிப்பட்ட முறையில் திருமா, ஆர்.எஸ்.பாரதி, மாறன் போன்றவர்கள் வெற்றிபெறவேண்டும் என்று நினைத்தாலும், என்னைப்பொறுத்தவரை, 40 தொகுதிகளையும் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே சிந்தாமல் சிதறாமல் தருவேதே சாலச்சிறந்தது...அப்போது தான், இத்தாலி அடிமைகளை ஓட ஓட விரட்டமுடியும்...

*********

இளங்கோவன், மனிசங்கர அய்யர், சிதம்பரம், தங்கபாலு போன்றவர்கள் வரலாறு காணாதவகையில் தோற்கவேண்டும். இவர்களின் தோல்வி, காங்கிரசு துரோகிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்...

*********

சமீபத்தில் வன்னியில் இருந்து வெளியான அறிக்கை ஒன்றில் புலிகள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அண்ணன் வைகோவையும் கூட்டணி தொகுதி பங்கீடு பிரச்சினைகளை பொறுத்துப்போகுமாறு களத்திலிருந்தே தகவல் வந்ததாம்..

*********

அம்மாவின் இந்த மனமாற்றம் தேர்தல் ஸ்டண்ட் என்று எகிறி குதிக்க ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கும்...ஆனால் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் இந்த முடிவு, கண்டிப்பாக ஒரு திருப்புமுனையாகும்...மீண்டும் அம்மா ஆட்சி மலரும்போது, புலிகளுக்கு சென்னையில் ஆபீஸ் போடக்கூட அனுமதி கிடைக்கக்கூடும்...யார் கண்டா ?

*********

வலையுலகில் பதிவர் பொடி டப்பா, உடன் திருப்பு, இங்கிலீஸ் பூவியா போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்கப்பட்டவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை...ஆனால் பதிவர் லக்கிலுக் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகம் சென்று அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் அட்டை பெறுவது என்றால் அதற்கு நான் உதவ தயார்..

*********

வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே...!!!!

!!!!!!!!!!

!!!!!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....