போலி விவகாரம் முடிஞ்சுருச்சு.."எங்களுக்கும் கொம்பேனி நடக்கனுமில்ல" என்று எங்கிருந்தோ புரளிமனோஹர் கத்துகிறான்...!!!
இருந்தாலும் பெயரிலி போட்ட அந்த கொமண்டுக்கு என்னுடைய கண்டனங்களை கன்னாபின்னாவென தெரிவித்துக்கொள்கிறேன்...
சோ, இந்து ராம், சு.சுவாமி வகையறா, தொகையறாக்களை திட்ட தன்னுடைய சொந்த வலைப்பூவை பயன்படுத்துமாறு பெயரிலி அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்...

எனக்கு தெரிந்து ஒரு சிலர் கழுத்து பட்டியில் அலைபேசியை மாட்டிக்கொண்டு திருதிருவென ஆடு திருடியது போல் விழித்துக்கொண்டு நிற்பார்கள்...
அவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டு கிட்டே போகவேண்டாம்...ஒரு வேளை ரயிலில் மயக்க பிஸ்கட் கொடுத்து திருடும் கும்பல் ஆக இருக்கவேண்டும்...
ஆகவே ரயிலில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...கிட்ட வந்து எதாவது கருத்து சொல்ல ஆரம்பித்தால் முகத்தை திருப்பிக்கொள்ளவும், பிஸ்கட் கொடுத்தாலோ, பழக வந்தாலோ அதற்கு ஒத்துழைக்கவேண்டாம்...
சமீபகாலமாக இன்றைக்கு இஸ்லாம், நாளைக்கு இந்து மதம், அடுத்த நாள் புத்த மதம், அப்பாலிக்கா கிறிஸ்தவ மதம் என்று நாளைக்கு ஒரு மதம், பொழுதுக்கு ஒரு சாதி என்று சாடி பதிவுகள் இட்டு நடுநிலைத்தன்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில் சில கருத்து கந்தசாமிகள் இருக்கிறார்கள்...
ஒரு வேளை அவர்கள் "மெய்யாலுமே" நடுநிலைவியாதிகளாக இருக்கலாம்...வெள்ளிக்கிழமை மட்டும் புள்ளையார் கோயிலுக்கு போய் பிரசாதம் வாங்கி துன்னலாம். பட்டையை அடித்துக்கொண்டும் பருப்பு சாதம் சாப்பிட்டுக்கொண்டும் !!!
சரி வந்த வேலை முடிந்தது !!!