Friday, May 09, 2014

எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!


திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..

சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...

அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...

விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...

ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்தில் பனை மரங்கள் மிதந்து  வருது என்று ஒருவர் கேட்க, அட பக்கிப்பயலே அது முதலைகள்டா என்று வடிவேலு பாணியில் வலைகளை விட்டுவிட்டு டீமோடு அப்பீட் ஆன கதைகள் சொல்வார்...

சாராயம் விற்றிருக்கிறார்..கிளாஸில் ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் வத்திக்குச்சியை கிழித்து போட்டு அதன் தரத்தை உறுதிசெய்து ஓரே மூச்சில் அவர் குடிப்பதை பத்து வயதில் பார்த்திருக்கிறேன்..

சோடா மெஷின் அமைத்து 40 பைசாவுக்கு கிராமத்தில் பன்னீர் சோடா விற்றிருக்கிறார்..30 காசுக்கு கம்பெயினில் இருந்து வேறு ஏதோ ஒரு பானத்தை விற்க, இலவசமாக தருகிறேன் வந்து குடிங்கடா என்று அந்த பிஸினஸையும் பாட்டில்களையும் கிடாசியிருக்கிறார்...

ஊரில் எல்லாரும் மிலிட்டிரிக்கு போக, நிறைய மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டிகளுக்கெல்லாம் “ஆதரவாக” இருந்திருக்கிறார்...எந்த வீட்டில் சைக்கிள் நிற்கிறது என்பதை வைத்து “கண்டுபிடிக்க” வேண்டியிருக்கும் என்று எங்க ஆயா கரித்துகொட்டுவதை கேட்டிருக்கிறேன்...சில இடங்களில் ஆண்டு கணக்கில் தினமும் சைக்கிள் நிற்கும்...இந்த ஸ்டாப் கேப் மேட்டர்களையும், அவரைது “திறமைகளை”யும் நினைத்தால் இப்பவும் வயிறு எரியுது :)

70 வயதில் கிணற்றில் விழுந்து ஒருமுறை இடுப்பு உடைந்து படுக்கையில் இருந்து, அதன் பிறகு எழுந்து நடந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறார்..

தண்ணீரில் வாடும் பயிர்களை காக்க / தனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஊர் கட்டுப்பாட்டை மீறி ஒரு ஊரின் ஏரியில் இருந்து அவரது நிலத்துக்கு (சுமார் 5 கிலோமீட்டர்) - இரவோடிரவாக தன்னுடைய இரண்டு மகன்களையும் வைத்து வாய்க்கால் வெட்டியிருக்கிறார்..

இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லாமல் இந்த குறும்பதிவை நிறைவு செய்ய முடியாது !!

முப்பதுகளின் மத்தியில் அவரது கை உடைந்துபோக, புத்தூரில் கட்டு கட்டியிருக்கிறார்கள்..ட வடிவத்தில் மடக்கி கட்டப்பட்ட கை, கட்டு பிரித்ததும் அப்படியே ப்ரீஸ் ஆன நிலையில் நின்றுவிட்டது. கையை நீட்ட முடியவில்லை..இப்படியே ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டு வாசலில் பிச்சை கேட்டு ஒரு சித்தர் சாமி வந்து நின்றுள்ளார்..

வாட் நான்ஸென்ஸ் நீ பிச்சை எடுக்கிறே மேன், கம் இன்ஸைட் இந்தா சாராயம் என்று கொடுக்க, அதில் மகிழ்ந்த சித்தர் சாமி, என்னப்பா உன் கை இப்படி கிடக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

இவர் புத்தூர் கட்டினால் ட வடிவமாகிப்போன கையை காட்ட, சற்றுநேரம் கையை அனலைஸ் செய்த சித்தர்சாமி, ஒரு சொம்பை எடுத்து, அதில் மண் நிரப்பி, அந்த சொம்பை ஒரு முழ நீளம் உள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனை பழுதடைந்து இறுகிப்போன கையின் நுனியில் கட்டிவிட்டு, இதனை 48 நாளைக்கு எடுக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

இவரும் கர்மசிரத்தையாக எங்கு போனாலும் அந்த சொம்போடு அலைய, ஊர் மக்கள் சிரித்து கிண்டல் செய்துள்ளார்கள்..ஆனால் ஆச்சர்யம் நாற்பதாவது நாளில் ஆரம்பித்தது..மெல்ல மெல்ல இறுகிப்போன ட வடிவ கைகள் நேராக, சரியாக 48 ஆவது நாளில் கை முழுமையும் நேராகி, முழுமையாக இயங்கும் வடிவத்தில் வந்துவிட்டது !!

என்ன அவ்வபோது கொஞ்சம் பேட் வேர்ட்ஸ் பேசுவார், ஏய் ”அலங்காரம்மா” ஸ்டுப்பிட் நான்ஸென்ஸ் இடியட், கண்டாரஓழி என்று திட்டி கிலியை கிளப்புவார்..சுருட்டு பிடிப்பார்..பீடி பிடிப்பார்..கடைசி காலத்தில் சாராயத்துக்கு பதில் அப்பா / சித்தபா அவரை க்வாட்டருக்கு (MC) மாற்றினார்கள்...

உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....

Monday, May 05, 2014

பிஷ்ஷிங்

சமீபமாக மிக அதிகமாக பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் பெட்டியை ரொப்புகின்றன. மீன் பிடிப்பவன் பல்வேறு தூண்டில்களை போட்டு காத்திருப்பது போல, இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் / ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பி காத்திருக்கிறார்கள்...



என்ன என்ன வருகின்றன என்று பார்த்தால் - துபாயில் ஹோட்டல் வேலை என்று ஆரம்பித்து TCS / CTS இல் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்பில் பயணித்து, க்வால்காம் / ஆப்பிள் ஷேர்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்ற அளவில்.



தாய்லாந்து / இந்தோனேஷியா / பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முறையான கால் செண்டர்கள் கூட உண்டாம். தனி மேனேஜர் போட்டு, இளிச்சவாயர்களிடம் பணம் பிடுங்க ஜொள்ளோடு மின்னஞ்சல்கள் / பேஸ்புக் தகவல்கள் அனுப்பிவைக்கிறார்கள்..



ஆகவே மக்கழே, இதுபோன்ற பிஷ்ஷிஙில் மாட்டி பணம் செலுத்தவேண்டாம். உங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகிறேன் என்று டுபாக்கூர் விடுபவர்களை நம்பவேண்டாம்...அந்த ஹோட்டலில் ரூம் போட்டு காத்திருக்கிறேன், வருக வருக என்று அழைப்பவர்களை நம்பி போகவேண்டாம்...



படிக்காதவர்களை விட, மெத்த படித்தவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து நிற்பதை பார்க்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது..புத்தியா பொழைச்சுக்கங்க மக்களே !!!

Wednesday, April 30, 2014

உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!

ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...

பல்ப் நெம்பர் 1:

சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...

ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..

அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..

உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..

கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..

அவ்வ்வ்..

அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...




பெண்ணியம் !!

ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...

விஷயம் அதுவல்ல..

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senthazalravi)

ஒரு பெண் தன்னை பெண்ணாக உணராமல் இருந்தாலே பெண் சுகந்திரம் !

 ஒரு தோழரிடம் இது பற்றி விரிவாக சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்..

 அலுவலகத்தின் பின்புறம் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள்..

 பெண்ணுக்கு கணுக்காலுக்கு மேலே ஏதோ அலர்ஜி போலிருக்கிறது..பேண்டை உயர்த்தி ஆண் அலுவலக தோழர்களிடம் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார்..

 இந்தியாவை நினைத்துக்கொண்டேன். இந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ள முடியுமா ? உடனே அயிட்டம் என்றல்லவா பெயரை சூட்டியிருப்பார்கள் நமது ஹிப்போக்கிரட்ஸ்..

 இது தான் பெண் சுகந்திரம்..பெண் என்பதால் இயல்பாக நடந்துகொள்ள முடியாத இந்தியா போன்ற நாட்டுக்கும், ஒரு வளர்ந்த நாட்டுக்கும் இடையேயான வித்யாசம்..

 பேஸ்புக் திமுக

 கலைஞரை அடுத்து, ஸ்டாலினும் சமூக ஊடகங்கள் பக்கம் ஒதுங்கியதால் இப்போதெல்லாம் பேஸ்புக்கில் தீவிர திமுகவினர் கும்பல் அதிகமாயிட்டது..

 சும்மாங்காச்சுக்கும் எல்லாத்துக்கும் கலைஞர்தான் காரணம் என்று சொல்லும் 2009 கும்பல் மரண அடி வாங்க ஆரம்பித்துள்ளது...

 வரலாறு புவியியல் எதுவும் தெரியாமல் வைகோ / சீமான் போன்ற டம்மி பீசுகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கி பேசுபவர்கள் குமுறி எடுக்கிறார்கள் திமுகவினர்...

 ஸ்ப்பா..பாவம் குழந்தைகள்...திருந்தினால் சரி..

சரி மற்ற பத்திகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Wednesday, November 27, 2013

சோனியாவுக்கு மருத்துவ உதவி !! - அப்டேட் !!!

கடந்த 2006 ஆம் ஆண்டு நான் வலைப்பதிவுக்கு நுழைந்த காலத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்வி உதவி கேட்டு வலைப்பதிவர்களை அணுகியிருந்தேன். மகாலட்சுமி ஒரு ஏழை / தலித் பெண், கல்லூரியை தொடர முடியாமல் (பணம் கட்ட இயலா சூழலில்) வெளியேறியிருந்தார்.

அவரை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க கிட்டத்தட்ட ரூ 60 ஆயிரத்தை வலைப்பதிவர்கள் கொடுத்து உதவினார்கள்.....

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதிகமாக உதவியவர்கள் அவர்கள் தான் :) :)

இன்றைக்கு மகாலட்சுமி ஒரு ஆசிரியை !!

மேல்விவரங்களை இந்த பதிவில் படிக்கலாம் :

http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html

இப்போது அதுபோன்றதொரு கோரிக்கையுடன் உங்களை அணுகுகிறேன். இந்தமுறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய !!!

திருவண்ணாமலையில் புனர்ஜீவன் அறக்கட்டளையை நடத்திவரும் திரு லூர்து அவர்கள் - 30 குழந்தைகளை புனர்ஜீவன் மூலம் படிக்க வைத்துவருகிறார்...அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் - இயேசு சபையை சேர்ந்தவர் - இந்த குழந்தைகளுக்காக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார் !!

தற்போது இந்த முக்கியமான கோரிக்கையோடு அணுகியிருக்கிறார் !!

சோனியா




இவருக்கு வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது - அது கிட்னியை நசுக்கும் அளவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மரண வேதனையில் அவதிப்பட்டு வருகிறார்.இப்போது வலி அதிகமாகிவிட்டபடியால் - கட்டி பெரிதாகிவிட்டது- என்றும் உடனடியாக ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் அவசர உதவி தேவை என்றும் மின்னஞ்சல் செய்துள்ளார் !! அவரிடம் பேசிய போது இந்த வலியை பொறுத்துக்கொண்டே கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குழந்தை இருந்து வருகிறது என்பதை மிகுந்த வருத்ததோடு சொன்னார் !!!

மெடிக்கல் ரிப்போர்ட் ஸ்கேன் கூகிள் மூலம் அப்லோட் செய்துள்ளேன் - பிடிஎப் கோப்பு https://drive.google.com/file/d/0B0ng1nVEvPr4RHgxWU5KQm9ja2s/edit?usp=sharing (கோப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)

திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆப்பரேஷன் செய்வதற்கான வசதிகள் இல்லை - உங்களுக்கு தெரியும் தானே - சென்னையில் MMC யில் உள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்...

MMC யும் அரசு மருத்துவமனை / மருத்துவக்கல்லூரி தான், ஆனால் மூன்று மாதங்கள் அங்கே தங்கி சிகிச்சை எடுக்கவும் - ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று பிழைத்தால் - இன்ன பிற செலவுகளுக்கு சுமார் 30 ஆயிரம் வரை கேட்டுள்ளார்.

தாயில்லா பிள்ளையான சோனியாவின் தந்தையார் கண் பார்வை இழந்தவர் - அவரால் இது கண்டிப்பாக முடியாது என்ற நிலையில் நம்மிடம் உதவி கேட்டுள்ளார்.

நீங்கள் நேரடியாக லூர்து அவர்களிடம் பேசலாம், அவரிடம் மின்னஞ்சலில் மேல் விவரம் - தேவை எனில் - கேட்கலாம் அல்லது அவர் வங்கி கணக்கில் உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவலாம்...எவ்வளவு சிறிய தொகையானாலும் பரவாயில்லை...

லூர்து அவர்களின் மின்னஞ்சல் klourdu@gmail.com
அலைபேசி எண் : 9566615687

அவரது வங்கி கணக்கு விவரம்

Account Name : Punar Jeevan (New Life ) Trust
Savings Bank Account Holder : 0407 0530 0001 4629
IFSC: SIBL0000407
The South Indian Bank LTD
Poonamallee Branch
70 IBAYAM Complex, Trunk Rd.,
Karayan Chavadi, Poonamallee.
Chennai 600056

இதை வாசிக்கும் தோழர்கள் / தோழிகள் உங்கள் பேஸ்புக் வால் / ட்விட்டர் கணக்கில் / வலைப்பதிவில் இதனை பதிவு செய்யுங்கள், முடிந்தால் ஊடகத்துறை தோழர்களும் பதிவு செய்யுங்களேன் !!!

அப்டேட்

ஒரு சிறுநீரகம் முழுவதுமாக பழுதடைந்துள்ளது. (suppressed by tumor). இன்னொரு சிறுநீரகத்தின் வேலை செய்யும் தன்மையை பரிசோதித்து அது நன்றாக இருப்பதாக உறுதி செய்துள்ள மருத்துவர், திங்கள் அன்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

இப்போதைக்கு நாம் செய்யவேண்டியது இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கவேண்டும் என்று நம்பிக்கையோடிருப்பதே !!! (மேலதிக உதவிகள் ஏதாவது தேவை எனில் என்று திங்கள் அன்று சொல்கிறேன்)

இதுவரை செய்யப்பட்ட உதவிகள் பற்றிய தகவல் - பேலன்ஸ் ஷீட் செவ்வாய் அல்லது புதன் கிழமை ஆன்லைனில் அப்லோட் செய்கிறேன் !!! நன்றி !!

மேலும் அப்டேட் / தகவல்கள்

முன்னதாக MMC யில் உடனடியாக அனுமதிக்கவும், ஆபரேஷன் செய்யவும் ஒத்துக்கொள்ளவில்லை. அங்கே இருந்தவர்கள் சொல்லிய தகவலில் ராய் மெமோரியல் மருத்துவமனையில் சென்று சந்தித்து சேர்த்தார்கள். சோனியா இப்போது இருப்பது 3 ஆம் மாடி - தேனாம்பேட்டை ராய் மெமொரியல் மருத்துவமனை... உதவிக்காக இருப்பது இரண்டு ஆசிரியைகள்..

மீனா :  மொபைல் எண் விரைவில் அப்டேட் செய்கிறேன்
ராஜேஸ்வரி: 8189938342

இவர்கள் இருவரும் ஒரு மாணவிக்காக சிரமம் பார்க்காமல் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..

மொத்த செலவு 95 ஆயிரம் ஆகலாம் என்று எஸ்டிமேட் கொடுத்துவிட்டார்கள்...

இதில் ஏற்கனவே 10 (என் பங்கு) +10+2+5+30 (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) வந்துள்ளது, அவர்கள் அனுமதி பெற்று அவர்களின் பெயரை பதிவில் வெளியிடுவேன்..

இன்னும் 40k வரை தேவைப்படலாம் !! ஆகவே நல்லிதயங்கள் தொடர்ந்து இந்த பதிவை ஷேர் செய்து உதவவேண்டும்...

ஒரு சிறுநீரகம் நீக்கப்பட இருப்பதால் 3 மாதம் முதல் 6 மாதம் முதல் மருந்துகளும் கொடுக்கவேண்டும் !! ஆகவே தொகையில் மீதி இருந்தால் அதனை அதற்கு உபயோகப்படுத்துவேன்..

Tuesday, September 04, 2012

மனிதன் பாதி! மிருகம் பாதி!


From : http://www.facebook.com/siva.sinna

அரை மணித்தியாலத்துக்குள் 63
தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை –
யாழ்ப்பாணத்தில் கொடூரம்!
சிங்களவர்களுக்கு மட்டுமல்ல,
தமிழர்களுக்கும் உண்டு
படுகொலை வரலாறு -
இளைஞர்களே மன்னித்துவிடுங்கள்!
மனிதன் பாதி! மிருகம் பாதி!
நீங்கள் பாதி மிருகத்தை அடக்கிவைத்த மனிதர்கள்-
அவர்கள் பாதி மனிதனை
தங்கள் பாதியிடம் பலிகொடுத்தவர்கள்’

இலங்கையில் மூன்று தசாப்தகாலம் ஈழப்போர் நடைபெற்றதாக அரசியல்-இராணுவ ஆய்வாளர்கள் பெரும்போக்காக வர்ணிப்பதுண்டு. நான்கு ஈழப்போர்கள் இடம்பெற்றன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1983இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிரபாகரன், செல்லக்கிளி உட்பட பதுங்கியிருந்து ஆயுததாரிகள் சிலர் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து நாடு பற்றியெரிந்தது. அன்று இலங்கையில் அதிகாரத்திலிருந்த யு.என்.பி.யின் ஆட்சி, செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கைகளில் ஆட்சிக் கடிவாளம் இருந்தது.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆசீர்வாதத்துடனும் உசுப்புதலுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான இனசங்காரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. முழு நாடுமே பற்றியெரிந்தது. சுமார் 350 தமிழர்கள் கொல்லப்பட்டனர் கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து நாசமாக்கப்பட்டது என்பதை அரசாங்க அறிக்கை கூறியது. மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனரென்று தமிழர் தரப்புகள் கூறின. இதனையே முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென்று சில ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடு பிரிவினைக்கான தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனையே சில அரசியல் நோக்கர்கள் முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென வகைப்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழீழ ஆயுததாரிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. யாழ்.மாநகர மேயராகவும், எம்.பி.யாகவும் விளங்கிய அல்பிரட் துரையப்பா 1975 ஜூலை 26இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபாகரனின் தலைமையிலான குழுவொன்றே இப் படுகொலையில் ஈடுபட்டது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே யாழ்.நூல்நிலைய எரிப்பு இடம்பெற்றது. 1977 ஆகஸ்ட் 13இல், யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மக்களுடன் பொலிசார் மோதிக்கொண்ட ஒரு சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகள் வேட்டைக்காடுகளாக மாறின. அப்பாவிப் பொதுமக்கள் பலர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990இல் இரண்டாவது ஈழப்போரும், 100 நாள் போர் அமைதிக்குப் பின்னர் 19 ஏப்ரல் 1995இல் மூன்றாவது ஈழப்போரும், 2006இல் நான்காவது ஈழப்போரும் ஆரம்பித்ததாக அரசியல் – இராணுவ நோக்கர்கள் வகைப்படுத்துகின்றனர். 2009 மே 18இல் யுத்தம் முடிவடைந்தது.

1987 ஜூலை இறுதியில் இந்தியப் படை திருகோணமலையில் வந்திறங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் இந்தியப் படையை வாழ்த்தி வரவேற்ற புலிகள், அதே ஆண்டு ஒக்டோபரில் இந்தியப் படையுடன் மோதலை ஆரம்பித்தனர். இரண்டரை வருடங்கள் நீடித்த இந்த மோதலில் சுமார் 1400 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களும் பலியானார்கள்.

யாழ் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இந்தியப் படை நடத்திய தாக்குதலில் டாக்டர்கள், நோயாளிகள், பணியாளர்கள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டனர். 1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. வீதிவழியே ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்து புலிகளின் குழுவொன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து இந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புகளுமே அப்பாவி மக்களைத்தான் அதிகளவில் பலியெடுத்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மைலந்தனைப் படுகொலை, வவுனியாப் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை என்று பலவற்றைப் பட்டியலிட முடியும். அனுராதபுர பௌத்த யாத்திரிகர் படுகொலை, அரந்தலாவைப் பிக்குமார் படுகொலை, தலதா மாளிகைத் தாக்குதல், சிங்கள எல்லைக் கிராமத் தாக்குதல்கள், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும்.

தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குள் உள் இயக்கப் படுகொலைகளும் தாராளமாகவே இடம்பெற்றிருக்கின்றன.

1983 ஜூலை இன சங்காரத்தின்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகள் 23, 25 ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெற்றன. ஆனால் 63 தமிழ்க் கைதிகள் அரை மணித்தியாலத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன. புலி இயக்க உறுப்பினர்கள் இரண்டே இரண்டு பேர் இந்தப் படுகொலைகளைப் புரிந்தனர். ஒருவனின் இயக்கப் பெயர் அருணா, மற்றவனின் இயக்கப் பெயர் சந்தியா.

1986ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரெலோ அமைப்பை தடைசெய்து நூற்றுக்கணக்கான கொலை செய்தும், உயிருடன் எரித்தும் வெறியாட்டம் நடத்தினர் புலிகள். 1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை புலிகள் தடை செய்தனர். இந்த இரண்டு இயக்கங்களின் முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்படிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே அப்போது கொல்லப்பட்டனர். புலிகளுக்குக் கப்பம் செலுத்தாததால் பிடித்துத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தகர்களும் இப் படுகொலையின்போது பலியானார்கள்.

1985ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பதாகையின் கீழ் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகியவை திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலை இடம்பெற்றது. இதனைக் ‘கந்தன் கருணைப் படுகொலை’ என்று அழைப்பதுண்டு. ‘கந்தன் கருணை’ என்பது ஒரு காரணப் பெயர். யாழ்ப்பாணத்தில் பல வீடுகளுக்கு கந்தன் கருணை இல்லம் எனப் பெயர் வைப்பதுண்டு. யாழ்ப்பாணத்தில் ‘அரஸ்கோ’ முதலாளி என்பவரின் ஆடம்பர வீடு நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அரசரட்ணம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது இந்த வீடு. நல்லூர் கோவில் வீதியிலும் ‘கந்தன் கருணை’ என்று பெயரிடப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. இந்த வீடுகள் ஒரு காலத்தில் புலிகளின் அலுவலககமாகப் பாவிக்கப்பட்டு வந்தன. ஆனால் படுகொலைகள் நடைபெற்றது இந்த வீடுகளிலல்ல.

புலிகளால் கைது செய்யப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் நல்லூர் கந்தன் கருணை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஒரு வீட்டுக்கு இடமாற்றப்பட்டிருந்தனர். இந்த வீடு சிவகுருநாதர் வீதியில் அமைந்திருந்தது. இங்குதான் படுகொலைகள் இடம்பெற்றன.

‘கந்தன் கருணை’ இல்லத்திலிருந்து இங்கு இடமாற்றப்பட்ட புலிகளின் கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால்தான் ‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ என்று சிலர் இதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்.

இந்த வீடு நடராஜா என்பவருக்கு சொந்தமானது. அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். படுகொலை நடைபெற்று பத்து வருடங்களின் பின்னர் இந்த வீட்டில் நடேசபிள்ளை வித்தியாதரன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இவர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவனின் சொந்த மைத்துனர். புலிகளின் காலத்தில் புலிச்சார்பு பத்திரிகைகளாக விளங்கிய ‘உதயன்’, ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இப் படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. அப்போது சிந்தியா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. சிந்தியாவின் தந்தை யாழ் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிவந்தார்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். அன்றைய தினம் காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவர் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவரே. கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தார். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான். நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் நாவலர் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான். அரை மணித்தியாலத்தில் 63 பேர் கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம்.

தாக்குதலின்போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன். இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா. விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி.

ஆனால் புலிகள் இயக்க உள் முரண்பாடுகளே கிட்டு மீதான தாக்குதலுக்குக் காரணமெனப் பின்னர் தெரியவந்தது. கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்தத் தாக்குதல். மாத்தையாவின் ஆட்களே இத்தாக்குதலை நடத்தினரென்ற சந்தேகம் பரவலாக வெளிப்பட்டது.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைகளுக்கு மாறியது. பிற்காலத்தில் ‘றோ’ உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தையாவைக் கைது செய்து, நிலத்துக்குக் கீழான சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து பிரபாகரன் கொன்றது வேறு விடயம். வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்த மாத்தையா நாயைப் போல நடத்தப்பட்டாரென்று இந்தியப் பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ‘ஐலன்ட் ஒப் புளட் (இரத்தத் தீவு) என்ற தனது ஆங்கில நூலில் அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனைப் பேட்டி கண்டவர் அனிதா பிரதாப். அத்துடன் சிறையிலிருந்த மாத்தையாவை பிரபாகரனின் அனுமதியுடன் பார்வையிட்டவர் அவர்.

இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தியப் படை இலங்கையின் வடக்கு – கிழக்கில் நிலை கொண்டது. ஜூலை இறுதியில் இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது. இந்திய இராணுவத்துடனான சண்டையில் குருநகரில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய கூர்க்கா இராணுவவீரனால் கொல்லப்பட்டான்.

மற்றைய கொலையாளியான சந்தியா என்பவன் முன்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றியவன். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான்.

கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டனவா அல்லது புதைக்கப்பட்டனவா? என்பது தெரியாது. ஆனால் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் சடலங்கள் எரிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளிவந்தன. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையை விட, ‘கந்தன் கருணை’ப் படுகொலைகள் குரூரமானவையென அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படுகொலைகள் குறித்துப் புலிகள் மௌனம் சாதித்தனர். ஆனால் மெல்ல மெல்ல விஷயம் கசியத் தொடங்கியதும் அதனைத் ‘தமிழீழத் துரோகிகளின் சதி’ என்று புலிகள் தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இது தொடர்பாகப் புலிகள் அறிக்கையொன்றினை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், அவர்களுக்குக் காவலுக்கு நின்றவர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பதினெட்டுக் கைதிகளும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேரும் பலியானானர்கள்’

அந்த காலப்பகுதியில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்டிருந்தார். அங்கு இலங்கை மாணவர்கள் சிலர், கந்தன் கருணைப் படுகொலைகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டிருந்தார்கள். அதற்கு, ‘கிட்டுவுக்கு நடந்த தாக்குதல் உட்கட்சிப் பிரச்சினையால் ஏற்பட்டது என்பது தவறு. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்கள் யார்?, அவர்கள் எங்கிருந்தார்கள்?, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி வடமராட்சியில் பிறந்தவர், கற்றறிந்த பேராசிரியர். முன்னாளில் முற்போக்குவாதியாக இனங்காணப்பட்டவர். எனினும் பின்னாளில் அவர் புலிகளின் விசுவாசியாக செயற்பட்டவர். ‘அதிகமான அப்பாவி மக்கள் இறப்பது, தமிழீழம் மலர வழிவகுக்கும்’ என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை புலிகளுக்கு வழங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது.

Thursday, July 12, 2012

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா ?




கலைஞர் கேள்வி பதிலில் இருந்து

கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம். அரசு வேலை இனிமேல் இல்லை என்று சொல்லலாம். அதே ஊர்ல இருந்துக்கிட்டு அங்க படிக்காத பசங்களுக்கு எஞ்சினீயரிங், மெடிக்கல், அரசு கல்லூரியில் இடம் தராமல் தடுக்கலாம், அரசு கொடுத்த டிவி லேப்டாப் மிக்ஸி கிரைண்டர் எதாவது இருந்தா அதை பிடிங்கிடலாம்.

Wednesday, July 11, 2012

LG ஸ்ப்லிட் ஏசி விற்பனைக்கு

உபயோகப்படுத்தாத LG ஸ்ப்லிட் ஏசி (பெங்களூரில் கடந்த 2 வருடம் முன்பு வாங்கியது) தமிழ்நாட்டில் இருக்கிறது. நார்வே போகும் முன் (ஒரு மாதம் முன்) வாங்கி உபயோகப்படுத்தினேன், நார்வே போகும்போது மாமனார் வீட்டுக்கு அனுப்பினேன். அவங்க வீட்டில் 3 பேஸ் வராததால் அவராலும் அதை உபயோகப்படுத்த முடியல. சில நாளுக்கு முன் ஒரு பஸ்/ப்ளஸ் விட்டேன், சில பேர் தொடர்புகொண்டார்கள், அதில் ஒருவருக்கு தருவதாக சொன்னேன், ஆனால் அவரால் அதை எடுத்துக்கொள்ள முடியல. வாங்கிய போது விலை 25K. இப்ப அந்த மாடலுக்கு டேக்ஸ் எல்லாம் போட்டு 30 ஆயிரம் வரை (ஹரியானா / டெல்லியில்) விக்கிறாங்க. சல்லீசா எதாவது அமவுண்டை எனக்கு கொடுத்துட்டு தூக்கினு போங்கப்பா...(பிக்கப் நீங்க தான் அரேஞ்ச் செய்துக்கனும்). விருப்பம் இருப்பவர்கள் தனிமடல் அனுப்பவும்.

http://www.lg.com/in/air-conditioning/split-ac/LG-LSA3AR2T.jsp

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....