Wednesday, October 21, 2009

மு.இளங்கோவனுக்கு குடியரசு தலைவர் விருது


இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் சங்க இலக்கியங்களில் நல்ல புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்ட இளைஞர்களுக்கு "இளம் அறிஞர் விருது" அறிவித்துள்ளது.

இவ்விருது [^]க்கு உரியவராகப் புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் மு.இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் சங்க இலக்கியம்,இலக்கணம் குறித்து எழுதியுள்ள நூல்கள்,ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசைக்குறிப்புகளை விரித்துரைக்கும் ஆய்வுகளைச் செய்துள்ளார்.

முனைவர் மு.இளங்கோவன் சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சியுடையவர் என்பதுடன் சங்க இலக்கிய நடையில் மாணவப் பருவத்திலேயே பாடல் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.

மாணவராற்றுப்படை(1990) அச்சக ஆற்றுப்படை(1992) என்னும் நூலும், அரங்கேறும் சிலம்புகள் (2004) என்ற மரபுக்கவிதை நூலும் இதற்குச் சான்றுகளாகும்.இவர் எழுதியுள்ள பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலக அளவில் புகழ் பெற்றனவாகும்.

சங்க இலக்கியத்தில் ஒன்றான மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நன்னனின் கோட்டையை, நவிரமலையைக் கண்டுபிடித்துப் படத்துடன் இதழ்களிலிலும் இணையத்திலும் வெளியிட்டதால் வெளிநாட்டு அறிஞர்கள் இக்கட்டுரையை உயர்வாக மதிக்கின்றனர். சங்க காலப் பாரியின் நண்பர் கபிலர் உயிர் துறந்த இடம் தென் பெண்ணையாற்றங்கரையில் உள்ள கபிலர் குன்று என்பதையும் வெளியுலகிற்குக் கொண்டு வந்தார்.

சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இசையைப் பற்றி முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குத் தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்காம் தொகுதி உருவாக்கி வழங்கிய பெரும் பணியில் ஈடுப்பட்டவர்.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கூத்து, இசை பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்தவர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் இவற்றின் முதற் பதிப்புகளை மின்னூலாக்கி இணையத்தில் வழங்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ளவர்.

சங்க இலக்கியப் புலவர்கள்,சங்க இலக்கிய ஆய்வில் ஈடுபட்ட அறிஞர்களின் வாழ்க்கையை இணையத்தில் ஒருங்குகுறி வடிவில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் சங்க இலக்கிய ஆய்விலும் பதிப்பிலும் ஈடுப்பட்ட உ.வே.சாமிநாத ஐயர்,பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.வே.கோபாலையர், வீ.ப.கா. சுந்தரம், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உள்ளிட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையத்தில் வெளியிட்டவர்.

சங்க இலக்கிய ஆய்வுகளை இணையம் வழியாக அடுத்த கட்டத்திற்கு உலக அளவில் எடுத்துச் செல்பவர் மு.இளங்கோவன். எனவே இவர் ஆய்வு முயற்சிகளை இலண்டன் கோல்ட்சுமிது பல்கலைக்கழகம்,மலேசியா பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழகம்(மலேசியா), சிங்கப்பூர் நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைகழகம், இலங்கை [^] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்அறிஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

இது தவிர உலக அளவில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் மு.இளங்கோவனின் இலக்கியம்,இலக்கணத்தை இணையத்தில் ஏற்றும் தமிழ் இணையப் பணியைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகின்றனர். இவர்களுள் நாசா விண்வெளி ஆய்வுமையத்தின் பொறியாளரும் தமிழறிஞருமான நா.கணேசன், தமிழமணம் முனைவர் சொ.சங்கரபாண்டி, தமிழ் மரபு அறக்கட்டளை ந.கண்ணன் (தென்கொரியா) சுபா(செர்மனி), துபாயில் உள்ள தமிழ்நாடன், சுவிட்சர்லாந்தில் உள்ள நளாயினி உள்ளிட்டவர்கள் முனைவர் மு.இளங்கோவனின் சங்க இலக்கிய ஆராய்ச்சிப் பணிக்கு ஊக்கமூட்டி வருபவர்கள்.

மு.இளங்கோவன் இதுவரை 18 நூல்களை வெளியிட்டுள்ளார். இவற்றுள் இரண்டு நூல்கள் இவர் பதிப்பித்த நூல்களாகும். உலக அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படைத்துள்ளார். தேசிய அளவில் 42 கட்டுரைகளும், இலக்கிய இதழ்களில் 79 கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் முன்னணி ஏடுகளான தினமணி, தமிழ் ஓசை, செந்தமிழ்ச்செல்வி, சிந்தனையாளன், கண்ணியம் உள்ளிட்ட ஏடுளிலும் திண்ணை, தட்ஸ்தமிழ் [^], தமிழ்க்காவல், மின்தமிழ், பதிவுகள், வார்ப்பு உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுதிவருபவர்.

சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் கலந்து கொண்டு கட்டுரை படித்து உலக அளவில் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றவர்.

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலை தமிழ் படித்தவர். புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தவர். முனைவர் பட்ட ஆய்வினைத் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் "பாரதிதாசன் பரம்பரை" என்ற தலைப்பில் நிகழ்த்தி முனைவர் பட்டம் பெற்றவர்.

சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,பாரதிதாசன் பல்கலைக்கழகம், கலவை ஆதிபராசக்தி கலை,அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்தவர். இந்திய நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப் பெற்றுப் புதுச்சேரி [^] பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இப்பொழுது பணிபுரிந்து வருகிறார்.

இவரின் பிறந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகில் உள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூர் ஆகும்.

Thanks to : ThatsTamil


Monday, October 19, 2009

கார்ட்டூன்ஸ். குசும்பன் மன்னிக்க.











High Quality Image, Please Click on this to Enlarge. (If you really want to do so)

திருமாவை என்னுடைய ஆதர்ச நாயகனாக இந்த ஆண்டின் ஆரம்பம்வரை நம்பியிருந்தேன். இன்றைக்கு திரும்பிப்பார்க்கையில் நான் ஏமாளி மட்டுமல்ல, ஒரு கோமாளியும் கூட என்று உணர்கிறேன். சிறுத்தைகள் திருமாவின் பல்டிகளை எப்படி தாங்கிக்கொள்கிறார்கள், ஏற்றுக்கொள்கிறார்கள் என்று வியப்பாக உள்ளது. 17ஆம் தேதி பிறந்தநாள் காணும் திருமாவுக்கு வாழ்த்துக்கள்.
..
..
..

Wednesday, October 14, 2009

எடுத்துக்காட்டு...!!



பாண்டிச்சேரியில் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலைபார்த்த காலம் தொண்ணூறுகளின் இறுதியில். பக்கத்துவீட்டுக்காரன் கம்பூட்டர் வாங்கிட்டானே என்று தானும் வாங்க ஆரம்பித்த மக்களால் எங்களுக்கும் ஓயாத வேலை. சிடியை கம்ப்யூட்டரி எப்படி போடுவதில் இருந்து, கம்பியூட்டரில் ஸ்டார்ட் பட்டன் தெரியமாட்டேங்குது வரை இரவு பதினோரு மணி வரை பம்பரமாக சுற்றவேண்டிய வேலை.

சம்பளம் என்னவோ பெரிதாக இல்லை என்றாலும், நெல்லித்தோப்பு ஆபீஸுடன் இணைந்த ஓனர் வீட்டு நான் வெஜ் சாப்பாடும், பீச் காற்று முகத்தில் அறையுமாறு அரியாங்குப்பத்தில் இருந்த கம்பெனி ஓனரின் உபயோகப்படுத்தாத பீச் கெஸ்ட் ஹவுசும், அவ்வப்போது ரத்னா தியேட்டர் எதிர் சந்தில் கிடைக்கும் பீரும் இட்லியும் புரோட்டாவுமாக காலம் ஓடிய ஓட்டம் புல்லட் ரயில்வேகம்..

காலையில் எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பான பணிச்சுமையில் இரவு வந்து படுக்கையில் விழுவது எப்போது மீண்டும் எழும்புவது எப்போது என்றே தெரியாத வகையில் இருந்ததொரு காலம். ஆங்காங்கே சிகரெட் பட்ஸும், மூலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட கடைசி ரெண்டு ஸிப் குடிக்கப்படாத பீர் பாட்டில்களும், வாசலில் நிற்கும் அரச மரத்தில் இருந்து எப்போதாவது உள்ளேயே பறந்து வந்து விழும் காய்ந்த சருகுகளுமாக, அந்த அழகிய கெஸ்ட் ஹவுஸ் ஒரு குட்டி குப்பைத்தொட்டியாக்கியிருந்தது.

சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமை காலை. லட்சங்களை கொட்டி வாங்கிப்போட்ட கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு போகலாம் என்று காரை செல்ப் ட்ரைவ் செய்துகொண்டு வந்து என்னுடைய ஓனரே வீட்டு கதவை தட்டுகிறார். கைலி அவிழ்ந்துவிடாமல் கொஞ்சம் இறுக்கமாக கட்டிக்கொண்டு கையில் கிடைத்த ஏதோவொரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு, கதவை திறக்கிறேன்..

உள்ளே நுழைந்தவருக்கு வீடு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி...ஒன்றும் பேசவில்லை..சுவரோரம் தானும் அழுக்காக நின்றிருந்த துடைப்பம் ஒன்றை எடுத்து, பரபரவென வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பல கோடிகளுக்கு அதிபர், இப்படி நம் வீட்டை சுத்தம் செய்கிறாரே என்று கொஞ்சம் உறைந்துதான் போனேன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள்.

கையை நீட்டி ஒட்டடை அடித்து, அதனையும் பெருக்கி, குப்பைகளை, பீர் பாட்டில்களை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு, சரி நான் வரேன் ரவி. நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம். என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்...

நான் அதன்பின் எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன்..!!!
.
.
.

UAE தமிழ் சங்கம் / முதல் பிறந்தநாள்

UAE தமிழ் சங்கம் அதன் முதல் பிறந்தாளை பதிமூன்றாம் தேதி நவம்பர் மாதம் கொண்டாடுகிறது. வாழ்த்துக்கள் UAE தமிழ் சங்கத்தினரே...(13-November-2009)

இது தொடர்பில் பட்டிமன்றம், கிரிக்கெட் போட்டி, மற்றும் பேமிலி கெட் டு கெதர் 23 ஆம் தேதி எல்லாம் வைத்துள்ளார்கள்.

பட்டிமன்றம் செலக்ஷன்:

Date : 16-October-2009, Time : 3pm, Day - Friday
Venue : Al Masjid Building, Next to King Faisal Saravana Bhavan/HSBC Sharjah
Please call our Committee Member to know the Topic & Exact Location. CONTACT US

தொடர்புகொள்ளவேண்டிய சுட்டி:

http://www.uaetamilsangam.com/contactus.asp

Tuesday, October 13, 2009

முடி திருத்தும் நிலையம்..



எங்கள் ஊர் பக்கம் உள்ள சலூன் கடை பெரியவர், திருவிழாக்களில் நாயனம் வாசிப்பார். அதிகம் வேலை இல்லாத மதிய நேரங்களில் "சானை பிடிக்கறது.." என்று டயர் இல்லாத சைக்கிள் ரிம்மும் பெடலுமுடன் கூடிய சானை பிடிக்கும் மிஷினை தூக்கிக்கொண்டும் சுற்றுவார். சில சமயங்களில் வீட்டுக்கே அவரது கத்தரியும் சில்வர் கிண்ணமும் உள்ள அழுக்கு கைப்பையை தூக்கிக்கொண்டு வந்துவிடுவதுண்டு. அதிகபட்சம் ஐந்து ரூபாய்.

கல்லூரி காலத்தில் எல்லாம், முடியை கொஞ்சம் ஸ்டைலாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை தவிர்த்து, சலூன் கடை விசிட்டுக்கு பல காரணங்கள் உண்டு. அங்கே கண்டிப்பாக தீப்பெட்டி இருக்கும். தம் போடலாம். அன்றைய பேப்பர் எல்லாம் படிக்கலாம். தினத்தந்திக்கு, தினமலருக்கு வரும் ஞாயிறு சப்ளிமெண்ட்கள், வாரம் முழுவதும் அங்கே உலாவரும்...

அங்கே கீழே விழும் முடிகளை கூட்டி வாரும் பையனிடம் ஒரு டீ வாங்கி வர சொல்லிவிட்டு, அப்படியே ட்ராயரை திறந்து சீப்பை எடுத்து தலையை வாறு வாறு என்று வாறும் நாட்கள் வந்தபோது, சலூனில் பெரியவர் போய், அவர் பையன் தொழில் செய்ய ஆரம்பித்திருந்தார்..

வீட்டில் முப்பது ரூபாயை கேட்டு வாங்கிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். ரெண்டு வாரம் முன்னாலதான முப்பது ரூபாய் கொடுத்தேன் ? என்ற வெளிப்படையான கேள்விகளும், இவன் அங்கே போறதே சிகரெட்டு அடிக்கத்தான் என்ற மறைமுக சிந்தனைகளுக்கும்பிறகு, அந்த முப்பது ரூபாய் நம் பாக்கெட்டில் வரும்...

கடையிலோ, லைட்டா கட் பண்ணிரு. பேக்ல கொஞ்சம் மேல ஏத்தி. போன்ற ஆரம்பகட்ட பேச்சுகளுக்கப்புறம், இருவத்தஞ்சு ரூவா ஹேர் கட்டிங்குக்கு, அஞ்சு ரூபாய்க்கு ஒரு கிங்ஸ் அப்புறம் ஒரு ஷாம்பு, என்ற நமது கால்குலேஷன்களை உடைக்கவே பிறப்பெடுத்தது போல, ஷேவ் பண்ணலியா சார் ? என்ற கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலை எப்படி கொடுக்கமுடியும் ? இல்ல, செல்ப் ஷேவிங் ஆரம்பிச்சுட்டேன் மகேசு. வேண்டாம். வேண்டாம்னா விடேன். முடியலைடா சாமீ...

சில சமயம் ஷேவிங்கும் செய்வதுண்டு. அடுத்த வாரம் ஒரு இண்டர்வியூ. மெட்ராஸ் போறீங்களா ? ஆமாம். கம்பெனிக்காரன் கேட்கிற கேள்விகளை தவிர எல்லா கேள்விகளும் கேட்கப்படும். இன்பர்மேஷன் ஈஸ் வெல்த். ஆப்போசிட் போடவா சார் ? வேண்டாம். அப்புறம் தாடி அதிகமாக வளரும் போன்ற மூட நம்பிக்கைகள்.

புது ப்ளேடு தானே ? ஆமாம் சார். இப்பத்தான் போட்டேன். உங்களுக்கு நம்பிக்கையில்லைன்னா சொல்லுங்க, இப்பவே மாத்துறேன்...இல்ல, எய்ட்ஸ் வருதுங்கறாங்க..வழித்து வழித்து, கையில் வைத்துக்கொண்டு, ஷேவிங் முடியும்வரை. அந்த கையில் எப்படித்தால் இவ்வளவு நுரையும் புகுந்து அடங்குகிறதோ ?

முகத்தில் எட்டுக்கால் பூச்சி மாதிரி அந்த நுரைக்கையை வைத்துக்கொண்டு, அந்த உள்ளங்கையில் இருக்கும் முடியும் ஷேவிங் க்ரீமும் கலந்த கலவை முகத்தில் மறுபடி ஒட்டுமோ போன்ற அவநம்பிக்கைகள், கழுத்துக்கு கீழே சரியாக கத்தி போகும்போது போகும்போது, எங்கே போன முறை டிப்ஸ் கொடுக்காமைக்கு இந்த முறை இழுத்து வெட்டிவிடுவானோ போன்ற பயங்களுடன் முடியும் ஷேவிங்.

மெஷின் கட்டிங் என்பது இன்னும் எளிமை. மெஷினை ஆன் செய்தவுடன் அதில் இருக்கும் பல்போன்ற அமைப்பு அப்படியே வழித்து எடுக்கும். கடலூர் புனித வளனார் பள்ளி உள்விடுதியில் வரிசையில் அமர்ந்து டோக்கனை கொடுத்து வழித்துக்கொண்டு வந்தது நியாபகத்தில் அலையடிக்கிறது...

பெங்களூரில் இருக்கும் சலூன்களின் செய்வது போல ஹெட் மசாஜ் தமிழகத்தில் செய்து பார்க்கவில்லை. கட்டிங் முடிந்தவுடன் டங்கிரி டங்கிரி என்று போட்டு அடித்து இரு கைகளையும் சேர்த்துக்கொண்டு நடு மண்டையில் குவிந்து வருமாறு மசாஜ் செய்வார்கள். முடிவெட்ட ஆகும் அதே காசு. எக்ஸ்ட்ரா வாங்கியதாக நினைவில்லை.

ஹீட்டர் போட்டால் அதிகம் செலவாகும் என்று ரொம்ப நாளைக்கு பயம். அப்புறம் பத்து ரூபாய் தான் அதிகம் ஆகும் என்று தெரிந்தபிறகு ஸ்ஸ்ஸ்ஸ். ஹீட்டருடன் கூடிய மசாஜ் சிறப்பு. ஆனால் அந்த டர்ர்ர் சத்தத்தில் கொஞ்சம்போல வரும் தலைவலி எக்ஸ்ட்ரா பிட்டிங்.

சார், அக்குள்ள ஷேவ் பண்ணவா என்று கேட்கும்போது கொஞ்சம் கூச்சத்தோடு, இல்ல நானே பண்ணிக்கறேன்..சில பேர் அக்குளை தூக்கி காட்டிக்கொண்டிருக்கும்போது உட்கார்ந்து பார்க்கும் எனக்கு ஒரு வகை வாந்தி சென்சேஷன். அது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

ஆரம்பத்தில் சட்டை பட்டனை லூஸ் செய்து போர்த்தும் பெரிய வெள்ளைத்துணிக்குள்ளேயே எல்லா முடியும் விழுந்துவிடவேன்றும் என்று நினைப்பதில் ஆரம்பித்து, அந்த துணியை போர்த்தியபிறகு மூக்கு நுனியில் அரிப்பது வரை நான் கொஞ்சம் க்ரேஸியாகத்தான் இருந்திருக்கிறேன்.

ஷேவ் பண்ணிக்கொண்டிருக்கும்போதோ, அல்லது ஹேர்கட் செய்துகொண்டிருக்கும்போதோ, அலைபேசி அழைப்பை எடுத்து, சலூன்ல இருக்கேன் மச்சி என்று ஆரம்பித்து பேசுபவர்களை பார்த்தால் எரிச்சல் வந்துவிடும்.

கடைக்குள்ளே நுழையும்போது எல்லா வெயிட்டிங் சேர்களும் யாரையாவது கொண்டிருக்க, சரி நான் அப்புறமா வரேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட முடியாது. இந்தா முடிஞ்சுருச்சு சார். டூ மினிட்ஸ். என்று எப்படியாவது கஸ்டமரை உள்ளே அமரவைக்க அவர்கள் படும் பாடு. யார் கண்டது, வெயிட்டிங் சேரில் இருக்கும் எல்லாரும் முடி வெட்டிக்கொள்ள வந்தவர்களாயிருக்காது. வட்டிக் கடை கடன்காரனாக கூட இருக்கலாமோ ?

"இங்கே அரசியல் பேசாதீர்" என்று கண்ணாடியில் சிவப்பு பெயிண்ட் எழுத்தில் ஒரு சலூனில் பார்த்திருக்கிறேன். அரசியல் அதே போன்றதொரு கண்ணாடியை உடைத்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டேன்...

சேரில் உட்கார்ந்து கட்டிங் ஆரம்பித்தவுடன், எதிரில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் பின்னால் உள்ள கண்ணாடி, அதில் உள்ள கண்ணாடியில் எதிரில் உள்ள கண்ணாடி. இதுவரை எனக்கு முடி வெட்டுவதை சரியாக பார்த்ததில்லை...

மனதில் பலவித சொல்லமுடியாத எண்ணங்களோடு, முடி திருத்தும் நிலையத்தில் நான் கொடுத்த சொற்ப தொகைக்கு எனக்கு முடி திருத்தி சேவை செய்த முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்..!!! வாழ்க நீ எம்மான்..!!!
.
.
.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....