Tuesday, May 05, 2009

கானா பிரபாவின் கம்போடிய உலாத்தல் புத்தகமாக



கானா பிரபா ஒரு புதிய கம்போடியாவை எங்களுக்குக் காட்டியிருக்கிறார். பல சுவையான தகவல்கள். சில தகவல்கள் எமது இலங்கைக்கேயுரிய குணங்குறிகளுடன் காணப்படுகின்றன. காட்சிகளை எமது கற்பனைக்கு மட்டும் விட்டுவிடாமல் அழகிய வர்ணப்படங்களுடன் அவற்றைத் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிரபாவின் எழுத்துகளில் ஒரு எள்ளல் சுவையிருக்கும். அதையும் ஆங்காங்கே தூவி விட்டிருக்கிறார். நீயும் போய்ப் பார் இந்த இடங்களை எனச் சொல்லாமல் சொல்லும் வர்ணனைகள் அவை.
-எஸ். எழில்வேந்தன்

இது முகவுரைக்கு எழில்வேந்தன் சொல்வது மட்டுமல்ல. என்னுடைய மனதிலும் இதுதான்...

முதல் முதலில் உலாத்தல் பதிவில் படித்த இந்த வரிகள் இன்னும் கூட மனதை விட்டு அகலவில்லை..

"எந்த நேரமும் உலாத்தல் தான் உவனுக்கு" என்று என் அம்மா ஊரில் இருக்கும் போது என்னைப் பார்த்துச் சொன்னது போல, ஒரு இடத்தில பொறுமையாக இருக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. என்னைப்பொறுத்தவரை படிப்போ, வேலையோ, வாசிப்போ, இசையோ, அல்லது நான் படைக்கும் வானொலி நிகழ்ச்சிகளோ, அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும்.அதுபோலவே அடிக்கடி புதுசு புதுசாக இடங்களைப் பார்ப்பதும், பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது அந்த இடங்களைப் பற்றிய பதிவுகளை என் நாட்குறிப்பில் எழுதுவது கூட எனக்கு ஆனந்தம் தரும் விடயங்கள்.

கானாவின் பதிவுகளில் அவரையும் அறியாமல் வந்து ஒட்டிக்கொள்ளும் ப்ரொபஷனலிஸம் என்னை எப்போதும் கவரும்..கண்டிப்பாக இவரது வலைப்பதிவுகள் புத்தகமாக வரும் ஒரு நாள் என்று முன்பே நினைத்தேன்...இப்ப பாருங்க...கம்போடிய உலாத்தல் புத்தகமாக...

படங்கள் எல்லாம் அவரே எடுத்தது, அதுவும் பின் அட்டையில் இருக்கும் படம் எக்ஸலண்ட்...

ஏன் சார் சும்மா நாம பேசிக்கிட்டே இருக்கனும் ? ஓன்லைனில் வாங்க இங்க அழுத்தி அமுக்கவும்..., அடுத்த புக் பேர் போட்டால் அங்கே கானாவின் புத்தகத்தை காணாமல் வராதீர்...!!!

2 comments:

இது நம்ம ஆளு said...

நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

கானா பிரபா said...

;) இன்றைக்கு தான் கவனிச்சேன், நன்றி நண்பா

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....