Monday, September 05, 2016

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.

பரிந்துரை-1
சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.
--------------

பரிந்துரை-2
குழுவில் ரிப்போட் அப்டேட் செய்தபின், சீனியர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருந்து, டயட் பெற்று அதன் பின்னர் மட்டுமே பேலியோ தொடங்க வேண்டும். (உதா : யூரிக் ஆசிட் அளவுகள் அதிகம் இருந்தால், ரெட் மீட், கீரைகள் தவிர்க்க சொல்வோம். ஆனால் நீங்களாக டயட் ஆரம்பித்தால் இதை கணக்கில் கொள்ளாமல் ரெட் மீட் சாப்பிட்டு யூரிக் ஆசிட் அளவுகள் மேலும் அதிகரித்து பிறகு எங்களை குறை சொல்வீர்கள்)
--------------

பரிந்துரை-3
தினமும் வைட்டமின் டி: வைட்டமின் டி புரோட்டகாலை பாலோ செய்யவேண்டும். அதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டும். (உங்கள் வைட்டமின் டி அளவுகள் அடுத்த ரிப்போட்டில் சிறப்பாக வரும் வரை. வைட்டமின் டி அளவுகள் 100 இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் நான் பார்க்கும் ரிப்போட்டுகளில் பலவற்றில் வைட்டமின் டி 25க்கு குறைவே. சிலருக்கு 10க்கும் குறைவு. 6 கூட பார்த்தேன். அதிக வெய்யில் இருக்கும் நம் நாட்டில் இந்த நிலை என்பது தான் மிகவும் ஆச்சர்யம். ஆக தினமும் மதிய வெய்யிலில் நின்று, அடுத்த ரிப்போட்டில் உங்கள் வைட்டமின் டி அளவு மிக அதிகரிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மதிய வெய்யிலில் (11:30 யில் இருந்து 2 மணி வரை) ஏதாவது ஒரு 20 நிமிடம், தண்ணீர் வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொள்ளவும்.

தினமும் வெய்யிலில் 20 நிமிடம்.
+
சாப்ட்ஜெல்ஸ் டாக்டர்ஸ் பெஸ்ட் வைட்டமின் டி3 - 5000 ஐயு - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை
வைட்டமின் கே2 - ஜாரோ - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை (ஜாரோ பார்முலாஸ் எம்.கே7) வைட்டமின் கே2 90 எம்சிஜி
மக்னீசியம் க்ளைசினேட் - சொலாரே - ஒரு மாத்திரை இரவு உணவுக்கு முன்.
----------------

பரிந்துரை-4
தினம் ஒரு ஒமேகா 3 - எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வெஜிட்டேரியன்கள் கண்டிப்பாக தயங்க கூடாது. 1000 எம் ஜி. டயபட்டீஸ் மக்களுக்கு மிக மிக தேவையானது. நார்வீஜியன் காட் லிவர் ஆயில் என கேட்டு பார்த்து அந்த பிராண்ட் வாங்கவும். எது பெஸ்ட் என விசாரித்து வாங்கவும்.
---------------
பரிந்துரை-5
வைட்டமின் பி 12 குறைபாட்டை போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒருமுறை ஈரல் + ரத்த பொரியல் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.
----------------

பரிந்துரை-6
கட்டுப்பாடற்ற சுகர் இருப்பவர்கள் (300க்கு மேல் / 11க்கு மேல்) கண்டிப்பாக வாரத்தில் ஐந்து நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நல்ல கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நமது குழுவின் வாக்கிங் ஈவண்டில் சேர்ந்து உங்கள் நடைப்பயிற்சி விவரங்களை தெரிவித்துவாருங்கள்.
---------------

பரிந்துரை-7
பசு மஞ்சள் வைத்தியம் : கொழுப்புணவு சாப்பிட்ட பின், பசு மஞ்சள் வைத்தியம் செய்யவும். ஆர்கானிக் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் + துளசி இலை 3 + மிளகு தட்டியது 8 + ஒரு சின்ன வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டியது இவற்றை மாத்திரை போல விழுங்கவும், அல்லது கடித்தும் சாப்பிடலாம்.
-------------
பரிந்துரை-8
பூண்டு : தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அப்படியே விழுங்கவும். (இரண்டு பூண்டு என்றால் இரண்டு முழு பூண்டு அல்ல. இரண்டு சின்ன பல் பூண்டு.)
-----------------

பரிந்துரை-9
லெமன் ஜூஸ் : தினமும் ரெண்டு எலுமிச்சையை ஒரு பெரிய க்ளாஸில் பிழிந்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு குடிக்கவும். ஒரே நேரமாக குடிக்க முடியவில்லை என்றால் லெமன் ஜூஸ் வாட்டர் பாட்டில் தயாரித்துக்கொண்டு தாகம் வரும்போதெல்லாம் இதையே குடிக்கவும். பேராதிமனிதனான நம் குழுவின் தலைவர் செல்வன் தினம் 4 லெமன் ஜூஸ் குடிக்கிறார். விருப்பம் இருந்தால் நீங்களும் செய்யலாம்.
--------------

பரிந்துரை-10
ஆப்பிள் சைடர் வினிகர் : உங்கள் குருதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை 20 சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடியது ஆப்பிள் சைடர் வினிகர். ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் விட்டு, அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து உணவுக்கு பின் ஒவ்வொரு வேளையும் அருந்தலாம். ப்ராக் ப்ராண்ட் ரா அண்பில்ட்டர்ட் ஆப்பிள் சைடர் வினிகர் மட்டுமே அருந்தவேண்டும். நார்மல் வினிகர், நார்மர் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்த கூடாது. இது அந்த நிறுவனத்தின் இணைய தளம் - bragg.com. அனைத்து இ-காம் இணைய தளங்களிலும் ஆப்பிள் சைடர் வினிகர் கிடைக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் எப்படி அருந்துவது என்ற யூடியூப் வீடியோ இது : https://www.youtube.com/watch?v=SmQRpL97ltE
--------------

பரிந்துரை-11
நாட்டு மருந்துகள், நிலவேம்பு பொடி பவுடர் தூள் குச்சி மரம் ஓமியோபதி மருந்துகள் சித்தா யுனானி மருந்துகள் எனக்கு எந்த பலனையும் தரவில்லை. இது என் சொந்த அனுபவம். மேற்கொண்டு இதில் எதுவும் பேசுவதாயில்லை. (அக்கு பஞ்சர், பீலர் பாஸ்கர் என ஏமாந்தவர்கள் பலரும் நம் குழுவில் உண்டு, அவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.)
--------------

பரிந்துரை-12
டயபட்டீஸ் இருக்கும் பலரிடம் குருதியில் ரத்த சர்க்கரை அளவை அளக்கும் கருவி கிடையாது. நீங்கள் குடும்பமாக சினிமாவுக்கு போகும் செலவு தான் அந்த மெஷின். அக்யூ செக் என்ற பிராண்ட் நன்றாக இருக்கிறது. பேலியோ ஆரம்பித்தப்பின் வாரம் 3 முறையாவது உணவுக்கு முன் ஒரு முறையும், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறையும் குருதி பரிசோதனை செய்து பார்த்துவரவும். காலை உணவுக்கு முன் 110க்கு கீழேயும், உணவுக்கு பின் 140க்கு கீழேயும் இருக்கவேண்டும்.
--------------

பரிந்துரை-13
டயபட்டீஸுக்கு இதுவரை எந்த மாத்திரையும் எடுக்காமல் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் ரிப்போட்டை ஆங்கில மருத்துவர் - டாக்டர் எம்பிபிஎஸ்ஸிடம் காட்டி டயபட்டீஸுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி தவறாமல் உண்ணவும். ஒரு மாதம் பேலியோ எடுத்தபிறகு மீண்டும் ஒரு ரிப்போர்ட் எடுத்து, அதே மருத்துவரிடம் காட்டி மாத்திரை அளவுகள் குறைப்பதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ செய்யலாம்.

டயபட்டீஸுக்கு மாத்திரை எடுப்பவர்கள் உங்கள் மாத்திரைகளை நீங்களாக நிறுத்தவேண்டாம். பேலியோ பாலோ செய்து அதன் பின் குருதி பரிசோதனை செய்து மருத்துவரின் அனுமதி பெற்று அதன் பின்னரே மாத்திரைகளை நிறுத்தவேண்டும்.நான் அப்படித்தான் செய்தேன். மருத்துவர் மெட்பார்மினை நிறுத்தி முழுவதும் டயட் பாலோ செய் என அனுமதி கொடுத்தார்.

அவர் அனுமதியோடு பேலியோவை கடைபிடித்து குருதி சர்க்கரை அளவுகளை குறைத்து காட்டினேன். நீங்களும் அவ்வாறே செய்க.அதிகப்படியான டயபட்டீஸ் தொடர்ந்து இருந்தால் 8 முதல் 10 ஆண்டுகளில் டயாலிஸிஸ் செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை.
-----------------

பரிந்துரை-14
பெண்கள் கண்டிப்பாக இரும்பு சட்டியில் சமைத்து உண்டால் உங்கள் இரும்பு சத்து குறைபாடு நீங்கும். பெரும்பாலான டயபட்டீக் இருக்கும் பெண்களுக்கு (ஏன் இல்லாதவர்களுக்கும் கூட) இரும்பு சத்து குறைபாடு கண்டிப்பாக இருக்கிறது என்பதை பல ரிப்போட்களில் பார்க்கிறேன்.
----------------

பரிந்துரை-15
கிழங்கு வகைகள் தவிர்த்துவிடவும். டயபட்டீஸ் முழுதாக குறைந்தபிறகு எடை இழப்பை நிறுத்த தினம் ஒரு உருளைக்கிழங்கு எடுக்கலாம்.பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய காய்கறிகள் பட்டியலில் கேரட், பீட்ரூட் எல்லாம் உண்டு. ஆனால் டயபட்டீஸுக்கு அது பொருந்தாது.
-----------------

பரிந்துரை-16
சர்க்கரை வியாதி / நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பால் பொருட்கள் முடிந்த அளவு தவிர்த்துவிடவேண்டும். காலையில் சிற்றுண்டி தவிர்க்க நினைப்பவர்கள் நல்லதாக ஒரு கப் முழுக்கொழுப்பு பால் ஒரு கப் அருந்தலாம். ஆனால் உங்கள் மூன்று மாத குருதி பரிசோதனையில் டயபட்டீக் அதிகரித்திருந்தால் தவிர்த்துவிடவும். சரியான அளவில் இருந்தால் தொடர்ந்து எடுக்கலாம்.
--------------------

பரிந்துரை-17
பாத பராமரிப்பு : இரவில் ஈமு ஆயில் போட்டு பாதங்களை மசாஜ் செய்யலாம். பாதங்களில் ஆறாத புண் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். மாதம் ஒரு முறை டெட்டால் போட்டு நன்றாக ஊறவைத்து (20 நிமிடமாவது) கழுவலாம். பாதங்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
---------------------

இறுதியாக - உங்களுக்கு சர்க்கரை நோய் / நீரிழிவு குறைபாடு இருக்கிறது, இருந்தது, வரப்போகிறது என்றால் மேலே சொன்ன பரிந்துரைகளோடு பேலியோ டயட் ஆரம்பித்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைத்து, நிறுத்தி, ஆறு வாரங்களில் ஏசி1 டெஸ்ட் எடுத்து பார்க்கவும். டயபட்டீஸ் நன்றாக குறைந்து 5 இல் இருந்து 5.5 வரை முடிவுகள் இருந்தால் சூப்பர் பெஸ். இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் முழுமையாக கார்ப் தவிர்க்க முயலவேண்டும். எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானே அடங்கும். கார்பை குறைத்தால் டயபட்டீஸ் தானே குறையும். டயபட்டீஸ் குறைந்தால் ஆரோக்கிய வாழ்வு மீண்டும் கிடைக்கும்.


Credits: Dr.Bruno, MBBS, MCS, Dr.V.Hariharan MBBS, MD. Dr Raja Ekambaram​ MBBS, Dr,Sumathi Raja MBBS, Dr Vijayapriya Panneerselvam​ Sivaram Jagadeesan (Author, Unnai Velven Neerizive), DR.Arun, MBBS.

Link to buy Paleo Books : http://paleo.co.in (you can also buy various products displayed in our meetup events - People want to add their products, do let me know)

Wednesday, July 06, 2016

இரும்பு பாத்திரத்தில் சமையல். அல்லது சமையலில் இரும்பு மீன்...


கம்போடிய மக்கள் இரும்பு சத்து குறைபாடு மற்றும் அனீமியாவில் தவித்தபோது கனடாவை சேர்ந்த ஹெல்த் ஒர்க்கர்கள் / Guelph பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் சார்லஸ் குறிப்பாக - அந்த ரத்த மாதிரிகளை சோதித்து இரும்பு பாத்திரம் / கேஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமையல் செய்தால் அவர்களுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கும் என பரிந்துரைத்தார்.
ஆனால் இந்த முயற்சி செயல் வடிவம் பெற தடையாக இருந்தது அனைவருக்கும் பாத்திரம் கொடுப்பதற்கான பட்ஜெட். காரணம் சுமார் 60 சதவீத கம்போடிய பெண்களுக்கு பாத்திரங்கள் கொடுக்க எவ்வளவு செலவாகும் ?
டாக்டர் சார்லஸ் முதலில் தாமரை வடிவத்திலான இரும்பு செய்து அதனை உணவு சமைக்கும் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் போதும் என கிராமத்தினரிடம் தாமரையை வழங்கினார். ஆனால் அது போதுமான வரவேற்பை பெறவில்லை. அதன் பின் கிராம பெரியவர்களிடம் உரையாடி - மீன் வடிவத்தை மக்கள் அதிஷ்டமாக கருதுவார்கள் என கண்டறிந்தார்..
அதன்பின் செப்டம்பர் 2008 முதல் பிப்ரவரி 2009 வரை சோதனை முறையில் இரும்பு மீன் கொடுக்கப்பட்டு அது சமையல் பாத்திரத்தில் போட்டு சமைக்கும்படி வலியுறுத்தப்பட்டது..அதில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மேலும் ஒரு ஆண்டுகள் வேறு இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
12 மாதங்களில் இரும்பு சத்து குறைபாடு / அனீமியா 43% குறைந்தது கண்டறியப்பட்டது !!!! ஆச்சர்யம்தானே !!!
நான் பரிசோதித்து பார்க்கும் பெரும்பாலான மருத்துவ சோதனை முடிவுகளில் இரும்பு சத்து குறைபாடு உள்ளது. பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. இது அனீமியா, உடல் சோர்வு, பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பிரச்சனை போன்றவை வரலாம்..
தீர்வுகள்:
இரும்பு பாத்திரத்தில் சமைக்கவும்.
காஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமைக்கவும்.
கம்போடியாவுக்கு டூர் போய் வருபவர்களிடம் லக்கி பிஷ் வாங்கி வர சொல்லவும்.
உள்ளுறுப்பு மாமிசம், ரத்த பொரியல் சாப்பிடவும்.
மேற்சொன்ன எதுவும் முடியவில்லை என்றால் அயர்ன் சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவும் !
மற்றபடி ஒரு பாப்புலரான வதந்தி : பேரிச்சம் பழத்தில் நிறைய இரும்பு சத்து உள்ளது என்பது. பேரிச்சம்பழம் பழைய இரும்பு வியாபாரிகள் வாங்குவார்கள் என்பதை தவிர இரும்புக்கும் பேரிச்சம்பழத்துக்கும் சம்பந்தமில்லை.

இரும்பு பாத்திரம் உங்க ஊர் பாத்திர கடையில் கிடைக்கும்.

Saturday, June 25, 2016

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.
பரிந்துரை-1
சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.
--------------
பரிந்துரை-2
குழுவில் ரிப்போட் அப்டேட் செய்தபின், சீனியர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்காக காத்திருந்து, டயட் பெற்று அதன் பின்னர் மட்டுமே பேலியோ தொடங்க வேண்டும். (உதா : யூரிக் ஆசிட் அளவுகள் அதிகம் இருந்தால், ரெட் மீட், கீரைகள் தவிர்க்க சொல்வோம். ஆனால் நீங்களாக டயட் ஆரம்பித்தால் இதை கணக்கில் கொள்ளாமல் ரெட் மீட் சாப்பிட்டு யூரிக் ஆசிட் அளவுகள் மேலும் அதிகரித்து பிறகு எங்களை குறை சொல்வீர்கள்)
--------------
பரிந்துரை-3
தினமும் வைட்டமின் டி: வைட்டமின் டி புரோட்டகாலை பாலோ செய்யவேண்டும். அதாவது சப்ளிமெண்ட்ஸ் எடுக்கவேண்டும். (உங்கள் வைட்டமின் டி அளவுகள் அடுத்த ரிப்போட்டில் சிறப்பாக வரும் வரை. வைட்டமின் டி அளவுகள் 100 இருந்தால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் நான் பார்க்கும் ரிப்போட்டுகளில் பலவற்றில் வைட்டமின் டி 25க்கு குறைவே. சிலருக்கு 10க்கும் குறைவு. 6 கூட பார்த்தேன். அதிக வெய்யில் இருக்கும் நம் நாட்டில் இந்த நிலை என்பது தான் மிகவும் ஆச்சர்யம். ஆக தினமும் மதிய வெய்யிலில் நின்று, அடுத்த ரிப்போட்டில் உங்கள் வைட்டமின் டி அளவு மிக அதிகரிக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். மதிய வெய்யிலில் (11:30 யில் இருந்து 2 மணி வரை) ஏதாவது ஒரு 20 நிமிடம், தண்ணீர் வைத்துக்கொள்ளவும். அவ்வப்போது தண்ணீர் குடித்துக்கொள்ளவும்.

தினமும் வெய்யிலில் 20 நிமிடம்.
+
சாப்ட்ஜெல்ஸ் டாக்டர்ஸ் பெஸ்ட் வைட்டமின் டி3 - 5000 ஐயு - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை
வைட்டமின் கே2 - ஜாரோ - காலை உணவுக்கு பின் 1 மாத்திரை (ஜாரோ பார்முலாஸ் எம்.கே7) வைட்டமின் கே2 90 எம்சிஜி
மக்னீசியம் க்ளைசினேட் - சொலாரே - ஒரு மாத்திரை இரவு உணவுக்கு முன்.
----------------
பரிந்துரை-4
தினம் ஒரு ஒமேகா 3 - எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். வெஜிட்டேரியன்கள் கண்டிப்பாக தயங்க கூடாது. 1000 எம் ஜி. டயபட்டீஸ் மக்களுக்கு மிக மிக தேவையானது. நார்வீஜியன் காட் லிவர் ஆயில் என கேட்டு பார்த்து அந்த பிராண்ட் வாங்கவும். எது பெஸ்ட் என விசாரித்து வாங்கவும்.
---------------
பரிந்துரை-5
வைட்டமின் பி 12 குறைபாட்டை போக்க அசைவம் சாப்பிடுபவர்கள் வாரம் ஒருமுறை ஈரல் + ரத்த பொரியல் கண்டிப்பாக சாப்பிடவேண்டும்.
----------------
பரிந்துரை-6
கட்டுப்பாடற்ற சுகர் இருப்பவர்கள் (300க்கு மேல் / 11க்கு மேல்) கண்டிப்பாக வாரத்தில் ஐந்து நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நல்ல கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், வாரத்தில் 3 நாட்கள் 4 கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யவேண்டும். நடைப்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். நமது குழுவின் வாக்கிங் ஈவண்டில் சேர்ந்து உங்கள் நடைப்பயிற்சி விவரங்களை தெரிவித்துவாருங்கள்.
---------------
பரிந்துரை-7
பசு மஞ்சள் வைத்தியம் : கொழுப்புணவு சாப்பிட்ட பின், பசு மஞ்சள் வைத்தியம் செய்யவும். ஆர்கானிக் மஞ்சள் பொடி 1 ஸ்பூன் + துளசி இலை 3 + மிளகு தட்டியது 8 + ஒரு சின்ன வெங்காயம் சிறிய துண்டுகளாக வெட்டியது இவற்றை மாத்திரை போல விழுங்கவும், அல்லது கடித்தும் சாப்பிடலாம்.
-------------
பரிந்துரை-8
பூண்டு : தினமும் காலையில் இரண்டு பூண்டுகளை சிறு துண்டுகளாக வெட்டி, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அப்படியே விழுங்கவும். (இரண்டு பூண்டு என்றால் இரண்டு முழு பூண்டு அல்ல. இரண்டு சின்ன பல் பூண்டு.)
-----------------
பரிந்துரை-9
லெமன் ஜூஸ் : தினமும் ரெண்டு எலுமிச்சையை ஒரு பெரிய க்ளாஸில் பிழிந்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு குடிக்கவும். ஒரே நேரமாக குடிக்க முடியவில்லை என்றால் லெமன் ஜூஸ் வாட்டர் பாட்டில் தயாரித்துக்கொண்டு தாகம் வரும்போதெல்லாம் இதையே குடிக்கவும். பேராதிமனிதனான நம் குழுவின் தலைவர் செல்வன் தினம் 4 லெமன் ஜூஸ் குடிக்கிறார். விருப்பம் இருந்தால் நீங்களும் செய்யலாம்.
--------------
பரிந்துரை-10
ஆப்பிள் சைடர் வினிகர் : உங்கள் குருதியில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை 20 சதவீதம் வரை கட்டுப்படுத்தக்கூடியது ஆப்பிள் சைடர் வினிகர். ஒரு கிளாஸில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் விட்டு, அதில் முழுவதும் தண்ணீர் நிரப்பி, பத்து நிமிடம் வைத்திருந்து உணவுக்கு பின் ஒவ்வொரு வேளையும் அருந்தலாம். ப்ராக் ப்ராண்ட் ரா அண்பில்ட்டர்ட் ஆப்பிள் சைடர் வினிகர் மட்டுமே அருந்தவேண்டும். நார்மல் வினிகர், நார்மர் ஆப்பிள் சைடர் வினிகர் அருந்த கூடாது. இது அந்த நிறுவனத்தின் இணைய தளம் - bragg.com. அனைத்து இ-காம் இணைய தளங்களிலும் ஆப்பிள் சைடர் வினிகர் கிடைக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் எப்படி அருந்துவது என்ற யூடியூப் வீடியோ இது : https://www.youtube.com/watch?v=SmQRpL97ltE
--------------
பரிந்துரை-11
நாட்டு மருந்துகள், நிலவேம்பு பொடி பவுடர் தூள் குச்சி மரம் ஓமியோபதி மருந்துகள் சித்தா யுனானி மருந்துகள் எனக்கு எந்த பலனையும் தரவில்லை. இது என் சொந்த அனுபவம். மேற்கொண்டு இதில் எதுவும் பேசுவதாயில்லை. (அக்கு பஞ்சர், பீலர் பாஸ்கர் என ஏமாந்தவர்கள் பலரும் நம் குழுவில் உண்டு, அவர்களின் அனுபவங்களை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.)
--------------
பரிந்துரை-12
டயபட்டீஸ் இருக்கும் பலரிடம் குருதியில் ரத்த சர்க்கரை அளவை அளக்கும் கருவி கிடையாது. நீங்கள் குடும்பமாக சினிமாவுக்கு போகும் செலவு தான் அந்த மெஷின். அக்யூ செக் என்ற பிராண்ட் நன்றாக இருக்கிறது. பேலியோ ஆரம்பித்தப்பின் வாரம் 3 முறையாவது உணவுக்கு முன் ஒரு முறையும், உணவுக்கு பின் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு முறையும் குருதி பரிசோதனை செய்து பார்த்துவரவும். காலை உணவுக்கு முன் 110க்கு கீழேயும், உணவுக்கு பின் 140க்கு கீழேயும் இருக்கவேண்டும்.
--------------
பரிந்துரை-13
டயபட்டீஸுக்கு இதுவரை எந்த மாத்திரையும் எடுக்காமல் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் ரிப்போட்டை ஆங்கில மருத்துவர் - டாக்டர் எம்பிபிஎஸ்ஸிடம் காட்டி டயபட்டீஸுக்கு கொடுக்கப்படும் மருந்துகளை வாங்கி தவறாமல் உண்ணவும். ஒரு மாதம் பேலியோ எடுத்தபிறகு மீண்டும் ஒரு ரிப்போர்ட் எடுத்து, அதே மருத்துவரிடம் காட்டி மாத்திரை அளவுகள் குறைப்பதோ அல்லது முற்றிலும் நிறுத்துவதோ செய்யலாம்.
டயபட்டீஸுக்கு மாத்திரை எடுப்பவர்கள் உங்கள் மாத்திரைகளை நீங்களாக நிறுத்தவேண்டாம். பேலியோ பாலோ செய்து அதன் பின் குருதி பரிசோதனை செய்து மருத்துவரின் அனுமதி பெற்று அதன் பின்னரே மாத்திரைகளை நிறுத்தவேண்டும்.நான் அப்படித்தான் செய்தேன். மருத்துவர் மெட்பார்மினை நிறுத்தி முழுவதும் டயட் பாலோ செய் என அனுமதி கொடுத்தார். அவர் அனுமதியோடு பேலியோவை கடைபிடித்து குருதி சர்க்கரை அளவுகளை குறைத்து காட்டினேன். நீங்களும் அவ்வாறே செய்க.அதிகப்படியான டயபட்டீஸ் தொடர்ந்து இருந்தால் 8 முதல் 10 ஆண்டுகளில் டயாலிஸிஸ் செய்யவேண்டிவரும் ஜாக்கிரதை.
-----------------
பரிந்துரை-14
பெண்கள் கண்டிப்பாக இரும்பு சட்டியில் சமைத்து உண்டால் உங்கள் இரும்பு சத்து குறைபாடு நீங்கும். பெரும்பாலான டயபட்டீக் இருக்கும் பெண்களுக்கு இரும்பு சத்து குறைபாடு கண்டிப்பாக இருக்கிறது என்பதை பல ரிப்போட்களில் பார்க்கிறேன்.
----------------
பரிந்துரை-15
கிழங்கு வகைகள் தவிர்த்துவிடவும். டயபட்டீஸ் முழுதாக குறைந்தபிறகு எடை இழப்பை நிறுத்த தினம் ஒரு உருளைக்கிழங்கு எடுக்கலாம்.பேலியோ டயட்டில் உண்ணக்கூடிய காய்கறிகள் பட்டியலில் கேரட், பீட்ரூட் எல்லாம் உண்டு. ஆனால் டயபட்டீஸுக்கு அது பொருந்தாது.
-----------------
பரிந்துரை-16
சர்க்கரை வியாதி / நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் பால் பொருட்கள் முடிந்த அளவு தவிர்த்துவிடவேண்டும். காலையில் சிற்றுண்டி தவிர்க்க நினைப்பவர்கள் நல்லதாக ஒரு கப் முழுக்கொழுப்பு பால் ஒரு கப் அருந்தலாம். ஆனால் உங்கள் மூன்று மாத குருதி பரிசோதனையில் டயபட்டீக் அதிகரித்திருந்தால் தவிர்த்துவிடவும். சரியான அளவில் இருந்தால் தொடர்ந்து எடுக்கலாம்.
--------------------
பரிந்துரை-17
பாத பராமரிப்பு : இரவில் ஈமு ஆயில் போட்டு பாதங்களை மசாஜ் செய்யலாம். பாதங்களில் ஆறாத புண் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். மாதம் ஒரு முறை டெட்டால் போட்டு நன்றாக ஊறவைத்து (20 நிமிடமாவது) கழுவலாம். பாதங்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் இருந்தால் மருத்துவரை அணுகவும்.
---------------------
இறுதியாக - உங்களுக்கு சர்க்கரை நோய் / நீரிழிவு குறைபாடு இருக்கிறது, இருந்தது, வரப்போகிறது என்றால் மேலே சொன்ன பரிந்துரைகளோடு பேலியோ டயட் ஆரம்பித்து, மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி குறைத்து, நிறுத்தி, ஆறு வாரங்களில் ஏசி1 டெஸ்ட் எடுத்து பார்க்கவும். டயபட்டீஸ் நன்றாக குறைந்து 5 இல் இருந்து 5.5 வரை முடிவுகள் இருந்தால் சூப்பர் பெஸ். இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் முழுமையாக கார்ப் தவிர்க்க முயலவேண்டும். எரிகிறதை பிடுங்கினால் கொதிக்கிறது தானே அடங்கும். கார்பை குறைத்தால் டயபட்டீஸ் தானே குறையும். டயபட்டீஸ் குறைந்தால் ஆரோக்கிய வாழ்வு மீண்டும் கிடைக்கும்.


Credits: Dr.Bruno, MBBS, MCS, Dr.V.Hariharan MBBS, MD. Dr Raja Ekambaram​ MBBS, Dr,Sumathi Raja MBBS, Dr Vijayapriya Panneerselvam​ Sivaram Jagadeesan (Author, Unnai Velven Neerizive), DR.Arun, MBBS.
Link to buy Paleo Books : http://paleo.co.in (you can also buy various products displayed in our meetup events - People want to add their products, do let me know)

Friday, May 09, 2014

எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!


திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..

சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...

அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...

விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...

ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்தில் பனை மரங்கள் மிதந்து  வருது என்று ஒருவர் கேட்க, அட பக்கிப்பயலே அது முதலைகள்டா என்று வடிவேலு பாணியில் வலைகளை விட்டுவிட்டு டீமோடு அப்பீட் ஆன கதைகள் சொல்வார்...

சாராயம் விற்றிருக்கிறார்..கிளாஸில் ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் வத்திக்குச்சியை கிழித்து போட்டு அதன் தரத்தை உறுதிசெய்து ஓரே மூச்சில் அவர் குடிப்பதை பத்து வயதில் பார்த்திருக்கிறேன்..

சோடா மெஷின் அமைத்து 40 பைசாவுக்கு கிராமத்தில் பன்னீர் சோடா விற்றிருக்கிறார்..30 காசுக்கு கம்பெயினில் இருந்து வேறு ஏதோ ஒரு பானத்தை விற்க, இலவசமாக தருகிறேன் வந்து குடிங்கடா என்று அந்த பிஸினஸையும் பாட்டில்களையும் கிடாசியிருக்கிறார்...

ஊரில் எல்லாரும் மிலிட்டிரிக்கு போக, நிறைய மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டிகளுக்கெல்லாம் “ஆதரவாக” இருந்திருக்கிறார்...எந்த வீட்டில் சைக்கிள் நிற்கிறது என்பதை வைத்து “கண்டுபிடிக்க” வேண்டியிருக்கும் என்று எங்க ஆயா கரித்துகொட்டுவதை கேட்டிருக்கிறேன்...சில இடங்களில் ஆண்டு கணக்கில் தினமும் சைக்கிள் நிற்கும்...இந்த ஸ்டாப் கேப் மேட்டர்களையும், அவரைது “திறமைகளை”யும் நினைத்தால் இப்பவும் வயிறு எரியுது :)

70 வயதில் கிணற்றில் விழுந்து ஒருமுறை இடுப்பு உடைந்து படுக்கையில் இருந்து, அதன் பிறகு எழுந்து நடந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறார்..

தண்ணீரில் வாடும் பயிர்களை காக்க / தனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஊர் கட்டுப்பாட்டை மீறி ஒரு ஊரின் ஏரியில் இருந்து அவரது நிலத்துக்கு (சுமார் 5 கிலோமீட்டர்) - இரவோடிரவாக தன்னுடைய இரண்டு மகன்களையும் வைத்து வாய்க்கால் வெட்டியிருக்கிறார்..

இன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லாமல் இந்த குறும்பதிவை நிறைவு செய்ய முடியாது !!

முப்பதுகளின் மத்தியில் அவரது கை உடைந்துபோக, புத்தூரில் கட்டு கட்டியிருக்கிறார்கள்..ட வடிவத்தில் மடக்கி கட்டப்பட்ட கை, கட்டு பிரித்ததும் அப்படியே ப்ரீஸ் ஆன நிலையில் நின்றுவிட்டது. கையை நீட்ட முடியவில்லை..இப்படியே ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டு வாசலில் பிச்சை கேட்டு ஒரு சித்தர் சாமி வந்து நின்றுள்ளார்..

வாட் நான்ஸென்ஸ் நீ பிச்சை எடுக்கிறே மேன், கம் இன்ஸைட் இந்தா சாராயம் என்று கொடுக்க, அதில் மகிழ்ந்த சித்தர் சாமி, என்னப்பா உன் கை இப்படி கிடக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

இவர் புத்தூர் கட்டினால் ட வடிவமாகிப்போன கையை காட்ட, சற்றுநேரம் கையை அனலைஸ் செய்த சித்தர்சாமி, ஒரு சொம்பை எடுத்து, அதில் மண் நிரப்பி, அந்த சொம்பை ஒரு முழ நீளம் உள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனை பழுதடைந்து இறுகிப்போன கையின் நுனியில் கட்டிவிட்டு, இதனை 48 நாளைக்கு எடுக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..

இவரும் கர்மசிரத்தையாக எங்கு போனாலும் அந்த சொம்போடு அலைய, ஊர் மக்கள் சிரித்து கிண்டல் செய்துள்ளார்கள்..ஆனால் ஆச்சர்யம் நாற்பதாவது நாளில் ஆரம்பித்தது..மெல்ல மெல்ல இறுகிப்போன ட வடிவ கைகள் நேராக, சரியாக 48 ஆவது நாளில் கை முழுமையும் நேராகி, முழுமையாக இயங்கும் வடிவத்தில் வந்துவிட்டது !!

என்ன அவ்வபோது கொஞ்சம் பேட் வேர்ட்ஸ் பேசுவார், ஏய் ”அலங்காரம்மா” ஸ்டுப்பிட் நான்ஸென்ஸ் இடியட், கண்டாரஓழி என்று திட்டி கிலியை கிளப்புவார்..சுருட்டு பிடிப்பார்..பீடி பிடிப்பார்..கடைசி காலத்தில் சாராயத்துக்கு பதில் அப்பா / சித்தபா அவரை க்வாட்டருக்கு (MC) மாற்றினார்கள்...

உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....

Monday, May 05, 2014

பிஷ்ஷிங்

சமீபமாக மிக அதிகமாக பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் பெட்டியை ரொப்புகின்றன. மீன் பிடிப்பவன் பல்வேறு தூண்டில்களை போட்டு காத்திருப்பது போல, இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் / ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பி காத்திருக்கிறார்கள்...



என்ன என்ன வருகின்றன என்று பார்த்தால் - துபாயில் ஹோட்டல் வேலை என்று ஆரம்பித்து TCS / CTS இல் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்பில் பயணித்து, க்வால்காம் / ஆப்பிள் ஷேர்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்ற அளவில்.



தாய்லாந்து / இந்தோனேஷியா / பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முறையான கால் செண்டர்கள் கூட உண்டாம். தனி மேனேஜர் போட்டு, இளிச்சவாயர்களிடம் பணம் பிடுங்க ஜொள்ளோடு மின்னஞ்சல்கள் / பேஸ்புக் தகவல்கள் அனுப்பிவைக்கிறார்கள்..



ஆகவே மக்கழே, இதுபோன்ற பிஷ்ஷிஙில் மாட்டி பணம் செலுத்தவேண்டாம். உங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகிறேன் என்று டுபாக்கூர் விடுபவர்களை நம்பவேண்டாம்...அந்த ஹோட்டலில் ரூம் போட்டு காத்திருக்கிறேன், வருக வருக என்று அழைப்பவர்களை நம்பி போகவேண்டாம்...



படிக்காதவர்களை விட, மெத்த படித்தவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து நிற்பதை பார்க்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது..புத்தியா பொழைச்சுக்கங்க மக்களே !!!

Wednesday, April 30, 2014

உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!

ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...

பல்ப் நெம்பர் 1:

சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...

ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..

அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..

உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..

கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..

அவ்வ்வ்..

அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...




பெண்ணியம் !!

ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...

விஷயம் அதுவல்ல..

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senthazalravi)

ஒரு பெண் தன்னை பெண்ணாக உணராமல் இருந்தாலே பெண் சுகந்திரம் !

 ஒரு தோழரிடம் இது பற்றி விரிவாக சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்..

 அலுவலகத்தின் பின்புறம் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் புகைபிடித்துக்கொண்டிருந்தார்கள்..

 பெண்ணுக்கு கணுக்காலுக்கு மேலே ஏதோ அலர்ஜி போலிருக்கிறது..பேண்டை உயர்த்தி ஆண் அலுவலக தோழர்களிடம் காட்டி விளக்கிக்கொண்டிருந்தார்..

 இந்தியாவை நினைத்துக்கொண்டேன். இந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்துகொள்ள முடியுமா ? உடனே அயிட்டம் என்றல்லவா பெயரை சூட்டியிருப்பார்கள் நமது ஹிப்போக்கிரட்ஸ்..

 இது தான் பெண் சுகந்திரம்..பெண் என்பதால் இயல்பாக நடந்துகொள்ள முடியாத இந்தியா போன்ற நாட்டுக்கும், ஒரு வளர்ந்த நாட்டுக்கும் இடையேயான வித்யாசம்..

 பேஸ்புக் திமுக

 கலைஞரை அடுத்து, ஸ்டாலினும் சமூக ஊடகங்கள் பக்கம் ஒதுங்கியதால் இப்போதெல்லாம் பேஸ்புக்கில் தீவிர திமுகவினர் கும்பல் அதிகமாயிட்டது..

 சும்மாங்காச்சுக்கும் எல்லாத்துக்கும் கலைஞர்தான் காரணம் என்று சொல்லும் 2009 கும்பல் மரண அடி வாங்க ஆரம்பித்துள்ளது...

 வரலாறு புவியியல் எதுவும் தெரியாமல் வைகோ / சீமான் போன்ற டம்மி பீசுகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கி பேசுபவர்கள் குமுறி எடுக்கிறார்கள் திமுகவினர்...

 ஸ்ப்பா..பாவம் குழந்தைகள்...திருந்தினால் சரி..

சரி மற்ற பத்திகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்..

Wednesday, November 27, 2013

சோனியாவுக்கு மருத்துவ உதவி !! - அப்டேட் !!!

கடந்த 2006 ஆம் ஆண்டு நான் வலைப்பதிவுக்கு நுழைந்த காலத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்வி உதவி கேட்டு வலைப்பதிவர்களை அணுகியிருந்தேன். மகாலட்சுமி ஒரு ஏழை / தலித் பெண், கல்லூரியை தொடர முடியாமல் (பணம் கட்ட இயலா சூழலில்) வெளியேறியிருந்தார்.

அவரை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க கிட்டத்தட்ட ரூ 60 ஆயிரத்தை வலைப்பதிவர்கள் கொடுத்து உதவினார்கள்.....

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதிகமாக உதவியவர்கள் அவர்கள் தான் :) :)

இன்றைக்கு மகாலட்சுமி ஒரு ஆசிரியை !!

மேல்விவரங்களை இந்த பதிவில் படிக்கலாம் :

http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html

இப்போது அதுபோன்றதொரு கோரிக்கையுடன் உங்களை அணுகுகிறேன். இந்தமுறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய !!!

திருவண்ணாமலையில் புனர்ஜீவன் அறக்கட்டளையை நடத்திவரும் திரு லூர்து அவர்கள் - 30 குழந்தைகளை புனர்ஜீவன் மூலம் படிக்க வைத்துவருகிறார்...அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் - இயேசு சபையை சேர்ந்தவர் - இந்த குழந்தைகளுக்காக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார் !!

தற்போது இந்த முக்கியமான கோரிக்கையோடு அணுகியிருக்கிறார் !!

சோனியா




இவருக்கு வயிற்றில் கட்டி வளர்ந்துள்ளது - அது கிட்னியை நசுக்கும் அளவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மரண வேதனையில் அவதிப்பட்டு வருகிறார்.இப்போது வலி அதிகமாகிவிட்டபடியால் - கட்டி பெரிதாகிவிட்டது- என்றும் உடனடியாக ஆப்பரேஷன் செய்யவேண்டும் என்றும் அவசர உதவி தேவை என்றும் மின்னஞ்சல் செய்துள்ளார் !! அவரிடம் பேசிய போது இந்த வலியை பொறுத்துக்கொண்டே கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குழந்தை இருந்து வருகிறது என்பதை மிகுந்த வருத்ததோடு சொன்னார் !!!

மெடிக்கல் ரிப்போர்ட் ஸ்கேன் கூகிள் மூலம் அப்லோட் செய்துள்ளேன் - பிடிஎப் கோப்பு https://drive.google.com/file/d/0B0ng1nVEvPr4RHgxWU5KQm9ja2s/edit?usp=sharing (கோப்பை தரவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)

திருவண்ணாமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த ஆப்பரேஷன் செய்வதற்கான வசதிகள் இல்லை - உங்களுக்கு தெரியும் தானே - சென்னையில் MMC யில் உள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்...

MMC யும் அரசு மருத்துவமனை / மருத்துவக்கல்லூரி தான், ஆனால் மூன்று மாதங்கள் அங்கே தங்கி சிகிச்சை எடுக்கவும் - ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடைபெற்று பிழைத்தால் - இன்ன பிற செலவுகளுக்கு சுமார் 30 ஆயிரம் வரை கேட்டுள்ளார்.

தாயில்லா பிள்ளையான சோனியாவின் தந்தையார் கண் பார்வை இழந்தவர் - அவரால் இது கண்டிப்பாக முடியாது என்ற நிலையில் நம்மிடம் உதவி கேட்டுள்ளார்.

நீங்கள் நேரடியாக லூர்து அவர்களிடம் பேசலாம், அவரிடம் மின்னஞ்சலில் மேல் விவரம் - தேவை எனில் - கேட்கலாம் அல்லது அவர் வங்கி கணக்கில் உங்களால் முடிந்த தொகையை கொடுத்து உதவலாம்...எவ்வளவு சிறிய தொகையானாலும் பரவாயில்லை...

லூர்து அவர்களின் மின்னஞ்சல் klourdu@gmail.com
அலைபேசி எண் : 9566615687

அவரது வங்கி கணக்கு விவரம்

Account Name : Punar Jeevan (New Life ) Trust
Savings Bank Account Holder : 0407 0530 0001 4629
IFSC: SIBL0000407
The South Indian Bank LTD
Poonamallee Branch
70 IBAYAM Complex, Trunk Rd.,
Karayan Chavadi, Poonamallee.
Chennai 600056

இதை வாசிக்கும் தோழர்கள் / தோழிகள் உங்கள் பேஸ்புக் வால் / ட்விட்டர் கணக்கில் / வலைப்பதிவில் இதனை பதிவு செய்யுங்கள், முடிந்தால் ஊடகத்துறை தோழர்களும் பதிவு செய்யுங்களேன் !!!

அப்டேட்

ஒரு சிறுநீரகம் முழுவதுமாக பழுதடைந்துள்ளது. (suppressed by tumor). இன்னொரு சிறுநீரகத்தின் வேலை செய்யும் தன்மையை பரிசோதித்து அது நன்றாக இருப்பதாக உறுதி செய்துள்ள மருத்துவர், திங்கள் அன்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார்.

இப்போதைக்கு நாம் செய்யவேண்டியது இந்த அறுவை சிகிச்சை நல்லபடியாக நடக்கவேண்டும் என்று நம்பிக்கையோடிருப்பதே !!! (மேலதிக உதவிகள் ஏதாவது தேவை எனில் என்று திங்கள் அன்று சொல்கிறேன்)

இதுவரை செய்யப்பட்ட உதவிகள் பற்றிய தகவல் - பேலன்ஸ் ஷீட் செவ்வாய் அல்லது புதன் கிழமை ஆன்லைனில் அப்லோட் செய்கிறேன் !!! நன்றி !!

மேலும் அப்டேட் / தகவல்கள்

முன்னதாக MMC யில் உடனடியாக அனுமதிக்கவும், ஆபரேஷன் செய்யவும் ஒத்துக்கொள்ளவில்லை. அங்கே இருந்தவர்கள் சொல்லிய தகவலில் ராய் மெமோரியல் மருத்துவமனையில் சென்று சந்தித்து சேர்த்தார்கள். சோனியா இப்போது இருப்பது 3 ஆம் மாடி - தேனாம்பேட்டை ராய் மெமொரியல் மருத்துவமனை... உதவிக்காக இருப்பது இரண்டு ஆசிரியைகள்..

மீனா :  மொபைல் எண் விரைவில் அப்டேட் செய்கிறேன்
ராஜேஸ்வரி: 8189938342

இவர்கள் இருவரும் ஒரு மாணவிக்காக சிரமம் பார்க்காமல் மிகவும் உதவியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..

மொத்த செலவு 95 ஆயிரம் ஆகலாம் என்று எஸ்டிமேட் கொடுத்துவிட்டார்கள்...

இதில் ஏற்கனவே 10 (என் பங்கு) +10+2+5+30 (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) வந்துள்ளது, அவர்கள் அனுமதி பெற்று அவர்களின் பெயரை பதிவில் வெளியிடுவேன்..

இன்னும் 40k வரை தேவைப்படலாம் !! ஆகவே நல்லிதயங்கள் தொடர்ந்து இந்த பதிவை ஷேர் செய்து உதவவேண்டும்...

ஒரு சிறுநீரகம் நீக்கப்பட இருப்பதால் 3 மாதம் முதல் 6 மாதம் முதல் மருந்துகளும் கொடுக்கவேண்டும் !! ஆகவே தொகையில் மீதி இருந்தால் அதனை அதற்கு உபயோகப்படுத்துவேன்..

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....