ஏதோ ஒரு டி.வியில் ஏதோ ஒரு புரோகிராம் பார்த்தபோது, அதில் பேசிய ஒருவர்...
தான் ஒரு FC (பார்வேர்டு கேஸ்ட்டு) என்று குறிப்பிட்டதை பார்த்து வெறுத்துப்போனேன்...
இந்த தமிழ் சாக்கடையின் அடி மனதில் தங்கியிருக்கும் சாதீய அழுக்கே இந்த வார்த்தைகள் என்று நினைத்தபோது...
குமட்டிக்கொண்டு வருகிறது...!!!
இந்த வார குட்டு, தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணனுக்கே...
உபயோகமான குறிப்புகள் இல்லாமல் பதிவு எழுதுவதில்லை என்று கொ.மி.மி.மி அனானியிடம் செய்த சத்தியத்தின் காரணமாக...
தமிழ் வலையுலகி எழுபத்தேழாவது முறையாக சாம்பார் வைப்பது எப்படி என்ற குறிப்பை தருகிறேன்...
முதலில் கையளவு பருப்பை எடுத்துக்கொள்ளவும்...
அதை குக்கரிலோ (குக்கர் இருந்தால்) அல்லது சுடு நீரிலோ வேகவைக்கவும்...
முக்கியமாக கவனிக்க வேண்டியது, பருப்பை வேகவைக்கும்போது உப்பு போடக்கூடாது...
உப்பு போட்டால் வேகும் ஆனால் வேகாது என்று ஆட்டம் காட்டி கேஸையோ அல்லது மண்ணென்னையையோ தீர்த்துவிடும் இந்த பருப்பு மேக்கிங் ப்ராஸஸ்...
இதன் பிறகு பருப்பை கந்தல் துணி பிடித்து ஓரமாக இறக்கி வைத்துவிடவேண்டியது சாம்பார் வைக்கும் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்...
சாம்பாரில் பலவகை, ஒவ்வொன்றும் ஒருவகை...முருங்கைக்காய் சாம்பாரில் ஆரம்பித்து முள்ளங்கி சாம்பார் வரை, குறைந்த காசில் கிடைக்கும் அத்துனை காய்கறிகள் கொண்ட சாம்பார்களும் உங்கள் வயிற்றில் ஹோட்டல்கள் மூலம் இறங்கி இருக்கும்...
ஆனால் கி.போ.சா என்ற இந்த புதுவித சாம்பாரை நீங்கள் கேள்வி பட்டிருக்க வாய்ப்பில்லை...
கி.போ.சா என்றால் கிள்ளி போட்ட சாம்பார் என்று அர்த்தம்...
கிள்ளி போடுவது என்றால், வெறும் மிளகாயை கிள்ளி போட்டு, பருப்பை கண்ணில் காட்டி, சாம்பார் என்ற பெயரில் அடுப்பில் இருந்து இறக்குவது...
பொதுப்புத்தி சாம்பாருக்கும் இந்த சாம்பாருக்கும் உள்ள ஒரே வித்தியாசம், மற்ற உயர்ந்த சாதி சாம்பாரைபோல் இதில் மிளகாய்த்தூள் போடுவதில்லை...
வெறும் நாலு மிளகாயை கிள்ளி போடுவார்கள்...
சரி இப்போ மறுபடி கம்மிங் பேக் டு த பாய்ண்ட் (வசனம் உதவி மற்றும் நன்றி பொந்துமணி)
பருப்பை இறக்கிய பிறகு, வாணலை வைத்து / அல்லது குண்டானை வைத்து / அதில் கொஞ்சம்போல எண்ணையை காட்டவும் ( ஏற்கனவே எதையாவது வறுத்து / தாளித்து மீதி வைத்த எண்ணையாக இருந்தாலும் பரவாயில்லை)
எண்ணை லைட்டாக சூடானபின், இரண்டு கறிவேப்பிலை, கொஞ்சம் கடுகு, மற்றும் ஏற்கனவே சொன்னபடி நாலு மிளகாயை கிள்ளி போடவும்...
தன்னுடைய சாதி திமிரை சொல்லிய நொள்ளைக்கண்ணனை கண்டு சுரணை கெட்டு பக்கத்தில் அமர்ந்திருந்த ஏதோ ஒரு கவிஞரை போல சூடு இல்லாமல் தீயை கொஞ்சம் மிதமாகவே வைத்துக்கொண்டால், மிளகாய் தீய்ந்து போகாமல் காக்கலாம்...
இதன் மூலம் சாம்பார் சுவை கூடும்...
லைட்டாக கருகிய வாடை வரும் சமயம் பருப்பு தண்ணீரை / பருப்போடு சேர்த்து அதில் ஊற்றி ஒரு கலக்கு கலக்குங்கள்...
கொஞ்சம் உப்பு சேருங்கள்...கொஞ்சம் போதும்...சரியா ? சுரணை ஏதும் வந்துவிடப்போகிறது ஆமாம்...தமிழனை கருநாடகத்தவன், ஆந்திரன், கேரளன் எல்லாம் ஏமாற்றவேண்டுமல்லவா ? செஞ்சோலையில் குண்டுகள் போட்டாலும், கிளிநொச்சியில் மக்கள் மேல் குண்டு போட்டாலும் நாம் அமைதியாக இருக்கவேண்டும் அல்லவா...அதனால் உப்பை கம்மியாகவே சேருங்கள்...
இன்னும் கொஞ்சம் கலக்குங்கள்...
அப்படியே இடது புறம், வலது புறம் கிண்டுங்கள்...இடது மற்றும் வலது ரெண்டும் ஒன்று தான்...
இந்த வேளையில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து அதை அரை டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, பிசைந்து, குழைத்து, நசுக்கி, அமுக்கி அரை டம்ளர் தண்ணீர் முழுவதும் புளித்தண்ணீராக கரையும் அளவுக்கு செய்யவும்..
இதனை அப்படியே சாம்பார் குண்டானில் ஊற்றிவிடவும்..
பிறகு டி.வியை வைத்து ஹிந்து பேச்சு, சேட்ஜியின் மூச்சு என்ற புரொகிராமை ஜீ டி.வியில் பார்த்து கொஞ்சநேரம் டைம் பாஸ் செய்யுங்கள்...
இப்போது சாம்பார் லைட்டாக வாசனை வீசும்...சாம்பார் வாசனைதான்...
இன்னும் கொஞ்சம் கிண்டுங்கள்...
வெள்ளையாக நுரையுடன் சேர்ந்து சாம்பார் கொதிக்கும்...கொஞ்சம் மஞ்சள் தூள், சாம்பார் பொடியை இதன் தலையில் தூவி, இன்னும் இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்குங்கள்...
மொத்த சாம்பார் மேக்கிங் ப்ராஸஸ் பத்து நிமிடத்துக்குள் முடியுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்...
நொள்ளைக்கண்ணன் ப்ரோகிராம் மாதிரி அறுக்கவேண்டாம்...
இப்படித்தான் சாம்பார் வைப்பது மற்றும் தன் உயர் சாதி பாசத்தை வெளிக்காட்டும் தமிழ் சாக்கடை நொள்ளைக்கண்ணன்களுக்கு குட்டு வைப்பது...
டேகு: தமிழ்சாக்கடை, நொள்ளைக்கண்ணன், சாம்பார்
Showing posts with label சாம்பார். Show all posts
Showing posts with label சாம்பார். Show all posts
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...