முதலில் இந்த கேள்வியை நல்லதந்தியாரினை நோக்கித்தான் வீசலாம் என்று இருந்தேன்..நல்ல தந்தியின் ஐடெண்டிட்டி பற்றி எனக்கு முழுமையாக தெரியாததால் வேறு யார் தேசியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று யோசித்தபோது..
அட நம்ம மாம்ஸ் சஞ்ஜெய்..அக்மார்க் காங்கிரஸ்க்காரர்...அவர் தற்போது தேசிய ஜல்லிகள் அடித்துவருவதால் அவரை கேட்பது தான் சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்...
காங்கிரஸ் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வருவது என்னுடைய தந்தையார் தான்...பல தேர்தல்களில் என்னுடைய தாயாரை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு சொல்லியவர், தானும் அவ்வண்ணமே வாக்களித்து வருபவர்...
அவர் சொன்னதால் மட்டும் அல்லாமல், என்னுடைய மனதுக்கு மூப்பனாருக்கு நியாயம் தேவை என்று எண்ணியதால், ரசினிகோந்து (நன்றி அதிஷா) வாய்ஸ் கொடுத்ததால் அல்லது மூப்பனாருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அறிவூட்டப்பட்டதால் ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசுக்கு வாக்களித்துள்ளேன்...
சஞ்ஜெய்க்கு வைக்கப்படும் கேள்வி !!
முந்தா நேற்றைக்கு நாளிதழ்களை ஆக்ரமித்துள்ள ஒரு செய்தி, தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடித்து உதைக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்...
மீனவர்களின் வலைகளை அறுத்து சிங்கள கடற்படையினர் கடலில் எறிந்துள்ளனர்...
மீனவர்கள் சிங்கள படையினரின் காலில் விழுந்து உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்..
இந்தியா இதனை ஏன் கண்டிக்கவில்லை ? தமிழர்கள் இந்திய குடிமக்கள் இல்லையா ?
கிட்டத்தட்ட 450 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும் ஏன் இந்திய மைய அரசு அதன் குடி மக்களை காக்கவில்லை ?
அணுகுண்டு வெடித்து சந்திரனுக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா ? குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டாமா ?
ப.சிதம்பரம் மற்றும் மன்மோஹன் சிங் ஆகிய இரண்டு பொருளாதார மேதைகள் இருந்தும் ஏன் இந்திய நாட்டின் செலவு வரவை விட அதிகமாக உள்ளது ? நான்கரை ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவில் பணவீக்கம் ?
பதில் சொல்லுங்கள் சஞ்ஜெய் !!!!!