Wednesday, December 29, 2010

தமிழ்நதியின் புத்தக வெளியீடு

Tamilnathy Rajarajan


அன்பு நண்பர்களுக்கு,

எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை 6 மணிக்கு, “ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“  என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.  அதனோடு சேர்த்து மேலும் 8 புத்தகங்கள் வெளியிடப்படவிருக்கின்றன. இடம்- அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கம்.

மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழை இணைத்துள்ளேன். நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி






வாழ்த்துக்கள் தமிழ்நதி அவர்களே !!

Tuesday, December 28, 2010

கோங்கூரா சட்னி !

.
.
கொஞ்சம் ஆந்திர அரசியலை ஸ்னாப்ஷாட் வடிவில் கொடுக்கிறேன்.



* தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு (முன்னாள் ஸ்பீக்கர்) ஒழுங்காக தெலுங்கு பேசவே தெரியாது.

* தெலுங்கானாவுக்கான கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 31 ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முடிவு சாதகமாக இருந்தால் 2011 இல் தெலுங்கானா பிறக்கும்.



* சிரஞ்சீவிக்கு மக்கள் ஆதரவில்லை. அவர் நமது கேப்டன் விஜயகாந்தை போல ஓட்டை பிரிக்கும் வேலையை மட்டும் செய்துவருகிறார்.



* ஜகன்மோகன் ரெட்டி காங்கிரஸை பெரிய அளவில் கூறுபோடவில்லையென்றாலும், சிரஞ்சீவி போல (20 ~ 30) எம்.எல்.ஏக்களை பெறும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இது காங்கிரசுக்கு ஆப்பு.

* கடந்த தேர்தலில் சிரஞ்சீவி தெலுங்கு தேசத்தின் ஓட்டுக்களை பிரித்ததில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ( சுமார் 1 ~ 2 சதம்). நம்மூர் கேப்டன் கதை அங்கேயும்.



* தெலுங்கு தேசத்தின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது. அதனால் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு உண்டு.



* தல்லி தெலுங்கானா என்று ஆரம்பித்து கல்லா கட்ட நினைத்த விஜயசாந்தி, விஜய பூந்தியாகிவிட்டார்.



* தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா அமைந்தால் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்து காங்கிரசுக்கு மேலும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

* ஜனவரியில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் ஐதராபாத்தில் நடக்கலாம் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.

பதிவில் தகவல் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்...!!!

!!!

Saturday, December 25, 2010

தண்டவாளம் - குட்டிக்கதை



சிவப்பு கொடியுடன் ஓடிவரும் இரண்டு இளைஞர்களை பார்த்து அதிர்ந்த நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரயில் ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

தண்டவாளம் உடைஞ்சு கெடக்குதுங்க !!!

அடுத்த நாள் நாளிதழ் செய்தி. நெல்லை எக்ஸ்ப்ரஸ் ரெயிலை சாதுர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த வாலிபர்கள். ரயில்வேயில் வேலை வாய்ப்பு. அமைச்சர் அறிவிப்பு.

அடுத்த நாள் இரவு டீக்கடையில்.

தப்பில்ல. எதுவும் தப்பில்ல என்றான் சுகுமார்.

என்ன தோழா சினிமா டயலாக் பேசுற ?

இது சரவணன். இப்போதைய அரசு ஊழியர். ரயிலை நிறுத்திய இளைஞர்களில் ஒருவன்..

புன்னகைத்தான் தோழன் சுகுமார்.

ஆமாம், நாற்பது ஆண்டுகள் லைன் மேனாக இருந்த உன்னோட அப்பாவை தொழில்நுட்ப காரணங்களுக்காக நடந்த விபத்துக்காக பணியை விட்டு டிஸ்மிஸ் செய்தாங்க இல்லையா ? அதனால் உன்னுடைய வாரிசுரிமை பணியும் கிடைக்காம போச்சு. தண்டவாளத்தை தண்டவாளத்தால தானே அடிக்கனும் ?

இருவரும் சேர்ந்து வெடிச்சிரிப்பு சிரித்தார்கள்...!!

Monday, December 13, 2010

வருத்தம் தெரிவித்தவர்களுக்கு நன்றி !!!

நடந்துவிட்ட ஒரு துக்க நிகழ்வுக்காக தொலைபேசியிலும், மின் அஞ்சலிலும், நேரிலும் வந்து என்னுடன் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து பதிவுலக நன்பர்கள் / தோழிகள் அனைவருக்கும் நன்றி !

ஆற்றுப்படுத்த இயலாத ஒன்றாயினும், என் பின்னே இத்தனைபேர் இருப்பது தெரிந்து ஆறுதல் !

Wednesday, November 17, 2010

மிஸ்டர் எக்ஸுடன் ஜிடாக் சிறு விவாதத்தின் தொகுப்பு

செந்தழல் ரவி : தல இருக்கீங்களா ?

எக்ஸ் : ம் சொல்லுப்பா. என்ன மேட்டர் ? ரொம்பநாளா ஆளை காணோம் ?

செந்தழல் ரவி : கொஞ்சம் பிஸி. அதை விடுங்க. அந்த பெரிய எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரோட கதையை சுட்டுட்டாராமே ? அந்த‌ மூல‌க்க‌தையை நீங்க‌ ப‌டிச்சிருக்கீங்க‌ன்னு கேள்விப்ப‌ட்டேன் உண்மையா ?

எக்ஸ் : எங்க‌ப்பா பெரிய‌ புத்த‌க‌ சேக‌ரிப்பாள‌ர்னு தெரியும்ல‌ ? அவ‌ர்ட்ட முடவன் வளத்த வெள்ளைப்புறா இருந்த‌து. ஒருமுறை போஸ்ட் கார்டு கூட‌ போட்டார் எழுதின‌ எழுத்தாள‌ருக்கு.

செந்த‌ழ‌ல் ர‌வி : அதை கேள்விப்ப‌ட்டேன். ஆனா பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌ல் நீங்க‌ எழுத்துகூட்டியிருக்கீங்க‌ன்னு சொன்னாங்க‌. அது உண்மையா. ?

எக்ஸ் : ஆமாம். நான் அவ‌ரோட‌ பெரிய‌ ர‌சிக‌னாச்சே. ப‌டிக்காமே இருப்பேனா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : யோவ் அப்ப‌ ப‌ட்டுனு மேட்ட‌ரை போட்டு உடை. சுட்டாரா இல்லையா ?

எக்ஸ் : ரவி என்ன‌ காமெடியா ? அது எத்த‌னை ப‌க்க‌ம் ? இது எத்த‌னை ப‌க்க‌ம் ? 26 எங்கே ? 700 எங்கே ? வ‌டிவ‌ம் ஒன்னா இருக்குது அப்ப‌டீங்க‌ற‌துக்காக‌ உருண்டையா இருக்க‌ற‌து எல்லாம் ப‌ந்தா ?

செந்தழ‌ல் ர‌வி : இல்லீங்ணா. துரத்தப்பட்ட தொழிற்ச‌ங்க‌வாதி. குடிகார‌ன். கண்டெடுக்கும் நோட்டு புத்தகம், கதைக்குள் கதை, அதுக்குள்ள கதை எக்ஸெட்ரா எக்ஸ‌ட்ரா எக்ஸ‌ட்ரா ?

எக்ஸ் : எல்லா தொழிற்ச‌ங்க‌த்துலயும் எவ‌னையாவ‌து துர‌த்திக்கிட்டே தான் இருக்காங்க‌. எல்லாரும் குடிக்க‌றான். இதெல்லாம் ஒரு ரிச‌ம்பிள்ன‌ஸா ? நெடுஞ்சாலையில் பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு ஒருத்த‌ன் க‌தை எழுதினா, வேற‌ யாரும் நெடுஞ்சாலையில‌ வ‌ர்ர‌ பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு க‌தை எழுத‌வே கூடாதா ? அப்ப‌டி இருந்தா அ ஆ ஈ ஈன்னு இருக்க‌ எழுத்து கூட‌த்தான்யா காப்பி.

செந்தழ‌ல் ர‌வி : த‌ல. இது மாதிரி க்ளோப‌ல் ரிச‌ம்பிள்ன‌ஸை சொல்ல‌லை. குறிப்பிட்ட‌ ஒரு வ‌டிவ‌ம். க‌தைக்குள் க‌தை. அதுக்குள் க‌தை. அந்த‌ மாதிரியான‌ வ‌டிவ‌ ஒற்றுமை ஒரு இண்ட‌ல‌க்சுவ‌ல் ப்ராப்ப‌ர்ட்டி இல்லையா ? (அதான் அறிவார்ந்த‌ சொத்துடைமை)

எக்ஸ் : ம்க்கும். கிழிஞ்ச‌து. முத‌ல்ல‌, ஒன்னு சொல்லு. ஜெ மாதிரி ஒரு ம‌ண்டை சுட்டுத்தான் க‌தை எழுத‌னுமா ? தும்முற‌தை வெச்சே ப‌தினைஞ்சு ப‌க்க‌ம் எழுதுற‌ ஆளுக்கு 13 வ‌ருச‌த்துக்கு முன்னாடி வ‌ந்த‌ ஒரு ப‌டைப்பை சுட‌வேண்டிய‌ தேவை என்ன‌ ?

செந்த‌ழ‌ல் ர‌வி : த‌ல‌. இப்ப‌ அதுவா பிர‌ச்ச‌னை ? ஜெமோவின் கூர்மையான எழுத்தாற்ற‌ல், உள் ஒளி, ய‌தோ ய‌தோ க‌வாசாகி அதோ அதோ மிட்சுபிஷி, த‌த்துவ‌ம், இல‌க்கிய‌ம், இசை, நடை(கை)ச்சுவை இது ப‌த்தி இப்ப‌ நான் கேட்க‌லையே ? அடிச்சாரா இல்லையா , அதை மட்டும் சொல்லுங்க போதும்..?

எக்ஸ் : ரெண்டு ப‌டைப்பையும் ப‌டிச்ச‌வ‌ன் என்ற‌ முறையில் இல்லை என்று எளிதாக‌ சொல்ல‌லாம். அதுவும் இல்லாம‌ இல‌க்கிய‌ வ‌ட்ட‌த்தில் இத‌னை எளிதாக‌ க‌ண்டுகொள்வார்க‌ள் என்று கூட‌ தெரியாத‌ முட்டாளா அவ‌ர் ? இது வெறும் வெத்து ப‌ப்ளிஸிட்டி ஸ்ட‌ண்ட். எந்திர‌ன் க‌தையை எட்டுபேர் சொந்த‌ம் கொண்டாட‌லையா ? அப்ப‌டி சொந்த‌ம் கொண்டாடுப‌வ‌ர்க‌ள் எல்லாம் என்ன‌ ஜ‌ப்பான்ல சிலிக்கான் சில்லை புரட்டி போட்டு ரோபோவா த‌யாரிக்க‌றானுங்க‌ ? த‌க்காளி தீபாவ‌ளி ம‌ல‌ருக்கு க‌தை எழுத‌ற‌வங்க‌ தானே ? டென்ஷ‌னாயிடுவேன் நான்.

செந்த‌ழ‌ல் ர‌வி: த‌ல‌ அப்ப‌டி பார்த்தா எந்திர‌னும் ரெண்டு மூனு இங்கிலீசு ரோபோ ப‌ட‌த்தோட‌ காப்பி தானே ? ஷ‌ங்க‌ர் என்ன‌ சிலிக்கான் வேலியில‌ மேய‌ற‌ ஆடா ? இல்லை சூப்ப‌ர் க‌ம்பூட்ட‌ர் சைண்ட்டிஸ்டா ? அதை விடுங்க ராஜேஷ் குமார் எழுதின ஆயிரத்தி நானூனு நாவல்ல இன்னைக்கு வர்ர எத்தனை படங்களோட பாதிப்பு இருக்கு ?

எக்ஸ் : ராஜேஷ் குமாரை எல்லாம் நாங்க இலக்கியவாதி ஆட்டத்துல க்கறதில்லையேப்பா.

செந்தழல் ரவி : என்னாது ராஜேஷ்குமார் இலக்கியவாதி இல்லையா ? உங்க கும்பல் பாலகுமாரனையும் ஒத்துக்கமாட்டேங்குது. ஏங்ணா கமர்ஷியல் ரைட்டர்ஸை ஆட்டத்துல சேக்கமாட்டேங்குறீங்க ? அப்படி பார்த்தா சுஜாதா கூட கமர்ஷியல் ரைட்டர்தானே ?

எக்ஸ் : அது இல்லை ரவி

செந்தழல் ரவி : என்ன அது இல்லை இது இல்லை. சிவகாசி எஸ் விஜயன் காமிக்ஸ் போட முடியாம முடங்கியபோது ஒரு பெரிய க்ரூப் ராஜேஷ் குமாரை படிக்கலையா ?

எக்ஸ் : ட்ரெயின்ல போகும்போது வாட்டர் பாட்டிலோட சேர்த்து வாங்குற பாக்கெட் நாவலை எப்படிய்யா இலக்கியம்னு ஒத்துக்க முடியும் ?

செந்தழல் ரவி : அண்ணே சும்மா டகுல்பாஜி காட்டாதீங்க. இலக்கியம்னு ஒத்துக்கவேண்டாம். இலக்கியவாதின்னு ஒத்துக்கோங்களேன். பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடியே சி.பி.யுன்னா செண்ட்ரல் ப்ராஸஸிங் யூனிட்னு பாக்கெட் நாவல்ல கொண்டுவந்தவர். இன்னைக்கு நடக்கற நியூட்ரினோ ஆராய்ச்சி வரை பாமர மக்களுக்கு புரியற மாதிரி சொல்லிக்கிட்டிருக்கார். இந்த சிறுபத்த்திரிக்கை, கையெழுத்து இதழ் கும்பல் வெகுஜனத்தோட ஒட்டாத மனநோயாளிங்கன்னு ரொம்பநாளா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.

எக்ஸ் : ரவி, கமர்ஷியல் ரைட்டிங் ஒரு அளவுக்கு மேல மனதுக்குள்ள நுழையமுடியாது.

செந்தழல் ரவி : அண்ணே, உள்ளொளி, புற ஒளி, நித்யானந்த யதி, அகத்தேடல் எக்ஸெட்ரா எல்லாம் பாமர மக்களோட வாசிப்புல இருந்து கிலோமீட்டர் கணக்கில இருக்கறது உண்மைன்னு ஒத்துக்கோங்க.

எக்ஸ் : சரி நீ ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கியா ?

செந்தழல் ரவி : ஆங் நிறைய.

எக்ஸ் : நிறையன்னா ?

செந்தழல் ரவி : முதல் நாலு பக்கத்தை பதினாலுமுறை.

எக்ஸ் : டேய்...

செந்தழல் ரவி : சரி நாம தேவையில்லாம பல மேட்டருக்கு போறோம்னு நினைக்கறேன். பவா செல்லத்துரையோட போனப்போ பாலகுமாரனை விசிறி சாமியார் இக்னோர் செய்ததும் வேணாம், ஜெவை கூப்டு உக்கார வெச்சதும் வேணாம், உத்தம தமிழ் எழுத்தாளருக்கும் சாருவுக்கும் உள்ள சண்டையும் வேண்டாம். நீங்க‌ பின் தொடரும் நிழலின் குரல் காப்பியா இல்லையான்னு சொல்லுங்க. ஆட்டைய க்ளோஸ் பண்ணுவோம்.

எக்ஸ் : த‌ம்பி. சும்மா விவாத‌ம் செய்ய‌ற‌துக்காக‌ இஷ்டத்துக்கும் டகுல்பாஜி உட்டு திசை திருப்பாத.. கடைசியா சொல்றேன் கேட்டுக்கோ. ஜெமோ பி.தொ.நி.குரலில் கையாண்டிருக்கும் விரிவான மீபுதின டெக்னிக், அதில் வ‌ரும் அங்க‌த‌ நாட‌க‌ம், க‌ம்யூனிஸ்டு மேட்ட‌ர்க‌ள் எல்லாம் அவ‌ரே அனுப‌வித்த‌து. அவ‌ரும் தொழிற்ச‌ங்க‌த்தில் இருந்திருக்கிறார் தெரியுமா ?

செந்த‌ழ‌ல் ர‌வி : அண்ணே. மாம‌ல்ல‌னும் க‌வ‌ர்மெண்ட் ஆள்தானே ? அவ‌ரும் தொழிற்ச‌ங்க‌த்தில் எல்லாம் செய‌ல்ப‌ட்டிருப்பார்தானே ? மேட்ட‌ர் என்ன‌ன்னா எழுத‌ப்ப‌ட்ட‌ கால‌ம்தான். இது 1999 ல் வெளிவ‌ந்த‌ நாவ‌லுக்கு 13 ஆண்டுக‌ளுக்கு முன்னால் வ‌ந்த‌து என்ப‌தால் தான் உங்க‌ளை கேட்கிறேன்.

எக்ஸ் : ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. எந்த‌ ஒரு பிர‌ப‌ல‌மான‌ ப‌டைப்புக்கும் ஏதோ ஒரு ப‌டைப்பு, அத‌ன் முன்னாலோ அத‌ன் பின்னாலோ வ‌ருவ‌த‌ன் மைய‌ இழை பொருந்திப்போக‌லாம். அத‌னால் அத‌னை காப்பி என்று புற‌ந்த‌ள்ளிட‌முடியுமா என்ன‌ ? பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌லில் வ‌ரும் காத்திர‌மான சிங்க வீச்சுக்கு முன்னால் ரொம்ப‌ மேலோட்ட‌மாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ முட‌வ‌ன் வ‌ள‌த்த‌ வெள்ளை புறா ஒரு முட‌மான‌ புறா.

செந்த‌ழ‌ல் ர‌வி : அப்ப‌டீன்னா யானைக்கு குதிரை ம‌ட்ட‌ம்னு சொல்றீங்க‌ளா ?

எக்ஸ் : நீ தப்பா புரிஞ்சுக்கற. மாமல்லன் மட்டமான எழுத்தாளர் அப்படீன்னோ அவரோட படைப்பு சரியில்லைன்னோ நான் சொல்லலை. அதாவ‌து பின் தொட‌ரும் நிழ‌லின் குர‌லுட‌ன் ஒப்பிட‌வே முடியாத‌ ப‌டைப்பு அதுன்னு சொல்ல‌வ‌ரேன். அது வேற‌ ப‌டைப்பு. வேறொரு ஆளுமையிட‌ம் இருந்து. இது வேறு ஒரு ப‌டைப்பு. முற்றிலும் வேறான‌ ஒரு ஆளுமையிட‌மிருந்து. வார்த்தைக‌ள் வேறு. வாச‌க‌ருக்கு காட்டும் சித்திர‌ம் வேறு. கேன்வாஸ் வெள்ளை ம‌ல் துணி, ஆனா வேறு வேறு ஓவிய‌ர்க‌ள் வ‌ரைஞ்ச‌ குழப்பமான வண்ணக்கலவைகளுடன் கூடிய‌ ந‌தியோட‌ ஓவிய‌ம்னு வெச்சுக்கோயேன்.

செந்த‌ழ‌ல் ர‌வி : அப்ப‌ மாம‌ல்ல‌ன் ஏன் இதை இப்ப‌ வ‌ந்து சொல்ல‌னும் ? இம்புட்டு நாளா சொல்லியிருக்க‌லாமே ?

எக்ஸ் : அவர் ஏன் இப்ப இதை சொல்றார் அப்படீன்னு மாமல்லனையே கேளு.

செந்த‌ழ‌ல் ர‌வி : உங்களுக்கு தான் ஜெமோ பழக்கமாச்சே அவர்ட்ட கேட்டு அவர் தரப்பை சொல்லுங்களேன்.

எக்ஸ் : இது வெறும் ப‌ப்ளிஸிட்டிக்காக‌ செய்ய‌ற‌து அப்ப‌டீங்க‌றார் ஜெ. பிரபலமான ஒரு படைப்பை பற்றி இப்ப‌டியான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் எழும்போது, இது ப‌ற்றி அந்த‌ ப‌டைப்புக‌ளை வாசிச்ச‌ வாச‌க‌ர்க‌ள் தான் முடிவு செய்ய‌னும்னு சொல்லிட்டார்.

செந்தழல் ரவி : அவரோட சைட்ல விளக்கம் எழுதுவாரா ? கொஞ்ச‌ம் கேட்டு சொல்லுங்க‌ளேன்.

எக்ஸ் : இதை நீ கேப்பேன்னு தெரியும். உங்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது அவரை சேட்ல புடிச்சு ஏற்கனவே கேட்டுட்டேன். இது மாதிரியான‌ சீப் ப‌ப்ளிஸிட்டிக்கெல்லாம் டைம் வேஸ்ட் ப‌ண்ண‌மாட்டேன்னுட்டார். இது தான் அவ‌ரோட‌ ப‌தில்.

செந்த‌ழ‌ல் ர‌வி : ஓக்கே ஓக்கே. அவ‌ருக்கு ஒரு தேங்ஸ் சொல்லிடுங்க. உங்க சாட்டிங்கை வெச்சே ஒரு ப‌திவை தேத்திட்டேன்.

எக்ஸ் : அடப்பாவி...

செந்தழல் ரவி : சரி உங்களை யார்னு பதிவுல போட்டுடவா ?

எக்ஸ் : போட்டுக்கோ. வழக்கமா மனசாட்சிக்கு போடுற வெள்ளை பைஜாமா குர்த்தா இல்லாம ஒரு ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுவிட்டுடு.

.....

Monday, November 15, 2010

To Mr.மணிஜி அங்கிள்



மிஸ்டர் மணிஜி, இது என்னோட ரெண்டாவது பர்த்டே ட்ரஸ். துணிக்கடை விளம்பரத்துக்கு கால்ஷீட் தருவேன். ஆனா டிவிஆர் அய்யா மாதிரி அவுட் ஆப் போக்கஸ்ல காட்டமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க !!

ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு

நான் ஒரு ஆராய்ச்சி மாணவன். நாங்கள் ஈடுபடும் ஆராய்ச்சி கொஞ்சம் கடினமானது என்றபடியால் அதிக பணிசுமை ஆகிவிடும் நாட்களில் பல்கலைகழக ஆய்வகத்திலேயே உறங்குவதுண்டு. இன்றும் அப்படித்தான். பல முறை தோல்விகளில் முடிந்த எங்களது ஆராய்ச்சி பணியில் ஒரு முறை கூட நான் சலிப்படைந்ததில்லை.
 
அதில் என் சுயநலனும் உண்டு. அல்லும் பகலும் பாடுபட்டு இந்த ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தால் மட்டுமே அரசிடம் இருந்து நிதி உதவி மற்றும் பணி வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் தங்கை திருமணம், அம்மாவுக்கு உடல் நலன் சிகிச்சை, காதலியுடன் திருமணம் என்று என் ஆயிரம் கன‌வுகள் நிறைவேறும்.
 
ஆய்வகத்தில் எங்கள் இயந்திரத்திலேயே நான் உறங்கும் நாட்களில் சீக்கிரம் எழுந்துவிடுவது வழக்கம். அங்கே குளிக்கும் வசதியில்லை. அருகில் இருக்கும் தேநீர்க்கடையில் ஒரு தேநீரும், முகம் அலம்ப கொஞ்சம் தண்ணீரும் மீண்டும் பணியை துவக்க போதுமானது. சாலையில் இறங்கி நடந்தேன். இன்றைக்கு எல்லாமே புதிய‌தாயிருக்கிற‌து.
 
தேநீர் க‌டையில் பெரிதாக கூட்டமில்லை.வ‌ழ‌க்க‌மான‌ தேநீர் போடும் ஆசாமி மாறியிருந்தார். ச‌ட்டைபையை தொட்டுப்பார்த்தேன். கொஞ்ச‌ம் சில்ல‌றை இருந்த‌து.
 
நான் கேட்ப‌த‌ற்கு முன்பே ? டீயா என்றார். கொஞ்ச‌ம் ஆச்ச‌ர்ய‌மாக‌ த‌லையாட்டினேன்.பையில் இருந்து சில்ல‌றையை எடுத்து கொடுத்தேன்.
 
சார் இன்னா காமெடி ப‌ண்றியா, இந்த‌ பொத்த‌ கால‌ணா எல்லாம் இப்ப‌ வாங்குற‌தில்லை, அஞ்சு ரூபா கொடு சார் என்றார் நீர்க‌டைக்கார‌ர். விதிர்த்து நின்றேன் நான்.
 
ஆராவ‌முத‌ன் நாட்குறிப்பு புத்த‌க‌ம் மூன்று கார்த்திகை மாத‌ம் ஏழாம் நாள் ஆங்கில‌ வ‌ருட‌ம் 1933.

எப்பதான் கேக் வெட்டுவீங்க ?

Friday, November 12, 2010

போண்டா மாதவன் பதில்கள்

புரளி மனோஹர் சொல்கிறான் என்பதால் மட்டுமல்ல. என்னுடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதாலும் (சரி விடுங்க பத்துக்கணக்கான) இந்த கேள்வி பதில் பகுதியை மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று என் அப்பன் தகர நெடுங்குழைகாதன் சத்தியமாக முடிவெடுத்ததில். இனி நேரே பதில்கள். (கேள்விகள் ?) அனானி ஆப்ஷன் இல்லாததால் என்னுடைய நன்பர்கள் பல ப்ளாக்கர் ஐடிகளில் வருவார்கள்.

செர்வாண்டிஸ்


கேள்வி : கோவை எண்கவுண்டர் சம்பவத்தை பற்றி நீங்கள் ஏன் இன்னும் பதிவு போடவில்லை ?


போண்டா : நானும் ஒரு பதிவை எழுதி வைத்திருந்தேன். எண்கவுண்டர் தவறு. அதே நேரம் பாலியல் வண்புணர்வும் தவறு. மேலும் சிறுமிகளும் இதற்கு காரணம் என்பது போல. மேலும் இஸ்ரேலில் இதை விட சிறப்பாக எப்படி செயல்படுவார்கள் என்பது பற்றியும். மாற்றுக்கருத்துக்களை எழுதிய உண்மைத்தமிழனுக்கே ஏராளமான மைனஸ் ஓட்டுக்கள் விழும் நிலையில், பார்வதி அம்மாள் விவகாரத்தில் அனைவரும் துப்பிய எச்சில் இன்னும் பாத் டப் அளவுக்கு ரொம்பியிருப்பதால், பதிவை அப்படியே ட்ராப்டில் வைத்துவிட்டேன். கடுமையாக உழைக்கும் கவுண்டர் சாதி என்று ஒரு பதிவு உள்ளது. அதை படித்துக்கொள்ளுங்களேன் ?

நாட்டாமை
கேள்வி :  தமிழ்மணம் விளம்பரம் போடுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?


போண்டா : தமிழ்மணம் விளம்பரம் போடுவது நல்லதே. ஆனால் நிர்வாகிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து காசை பறிப்பது எப்படி என்பதை குறித்து நான் எழுதிய பதினைந்து பதிவுகளையும் வழிப்பறி என்ற லேபளின் கீழ் க்ளிக் செய்து படித்துக்கொண்டால் நல்லது. இப்படித்தான் சமீபத்தில் 1979 இல் அப்போதைய குடியரசு தலைவர் மாளிகையில் உகாண்டா அதிபர் கொவாடிண்டா காவாலிக்கு ப்ரெஞ்சு மொழியில் இருந்து அஸ்ஸாம் மொழிக்கு மாற்றி அதில் இருந்து இங்கிலீஷ் மொழிக்கு மாற்றி சொல்லும் டங்குவார் டவாலி வேலைக்கு (மூன்று மொழி துபாஷி) சென்ற போது பீஸ் கொடுக்காமல் ஏமாற்றிய நாற்பது வயது பிகருக்கு டகுல்பாஜி கொடுத்து அங்கே கொடியில் காய்ந்த ஜனாதிபதி மாளிகையின் சமையல்காரரின் இண்டியன் டை, மற்றும் போட்டோ ஸ்டுடியோ அழுக்கடைந்த கோட்டு, பாரின் டை (அந்த பிகரே கட்டிவிட்டது) ஆகியவற்றை அடித்துவந்ததை சொல்லவேண்டும். இன்னும் அந்த இண்டியன் டை என்னுடைய கர்ச்சீப் ஆக உபயோகம் ஆகிறது. இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், வாடிக்கையாளரிடம் வழிப்பறி என்பது ஒரு கலை.

க்ருஷ்ணன்
கேள்வி : ஆ ராசாவை ஏன் இன்னும் பிரதமர் நீக்கவில்லை ? உங்கள் கருத்து என்ன ?


போண்டா : இதுபற்றி துக்ளக் சோ கருத்து தான் என் கருத்தும். துக்ளக் சோவின் கருத்து இதுவரை எனக்கு தெரியாது.

சரவணன் கொளத்துமேடு
கேள்வி : மோடி பிரதமர் ஆக வாய்ப்பு உண்டா ?


வாங்க திரு சரவணன் அவர்களே. இப்படி திடீர்னு யாராவது உண்மையிலேயே கேள்வி கேட்டுவிடும்போது அந்த சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. என்ன கேட்டீர்கள் ? மோடி பிரதமர் பதவிக்கா ? என் அப்பன் தென் திருப்பல்லி தகர கடுங்குழைகாதன் அருளால் மோடி பிரதமர் பதவியை பிடித்தால் பட்டாப்பட்டி, மங்குணி அமைச்சர், வெளியூர்க்காரன் ஆகியோரை சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும்படி செய்வேன்.

To Be Continued .........

Thursday, November 04, 2010

தீபாவளியன்று பாத்ரூம் போக சிறந்த நேரம் எது ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-
"நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் முதன்மையான கங்கையில் நீராடிட வேண்டும் என்றும் நரகாசுரன் வேண்டுகோள் விடுத்தான்'' என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாதம் அதாவது துலா மாதம் சூரியன்-சந்திரன் ஒன்று கூடும்(அமாவாசை) தினத்தில், நள்ளிரவு முடிந்து, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு(அதுதான் நரகாசுரனை வதம் செய்த நேரம்) சூரியன், சுவாதி நட்சத்திரத்தில் இருக்கையில், சந்திரன் கூடுகிற சதுர்த்தசி திதியில், நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும். வென்னீரில் கங்கை வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

சுடு தண்ணீரைக்கூட எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன் தினம் இரவில், வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், சூரியன்-சந்திரன் படம் வரைந்து, தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தில், ஆல், அரசு, அத்தி, பூவரசு ஆகிய 4 மரங்களின் பட்டைகளைப்போட்டு மூடி வைத்து விடவேண்டும். 

குறைந்தது 2-1/2 மணி நேரத்துக்குப் பின், தண்ணீரை சூடு செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, துவாதசி, அஷ்டமி, சப்தமி, சஷ்டி, சங்கரமனம் இவைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். திதி வார நட்சத்திர முதலிய எவ்விதமான தோஷம் இருப்பினும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எந்த தோஷமும் எவரையும் பாதிக்காது.

நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சதுர்த்தசி திதி, எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் ஆகும்.

தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிவரையில் குரு ஹோரை நேரம் ஆகும்.

குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, சுவாமி, அம்பாள் முன்பாக இனிப்பு வகைகளுடன் புத்தாடையை வைத்து பூஜை செய்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.

சிவபெருமான் தன்னிடம் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தவம் இருந்த நிகழ்வே கேதார கவுரி விரதமாக கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையே எப்போதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பெண்கள் தீபாவளி தினத்தில், இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தீபாவளி அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை, 10 மணியில் இருந்து 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கேதார கவுரி அனுஷ்டிப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.

இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி 04-11-2010

Read more: http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_04.html#ixzz14KfNNAyo









இந்த பதிவில் நான் எதையும் மாற்றவில்லை. எல்லாரும் பாத்ரூம் போய் குளிக்கவும். வந்தால் போகவும். வரவில்லையென்றாலும் பாதகமில்லை. முயற்சி திருவினையாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் என்பதை மனதில் வைத்து முக்கி(ய).முனகி.(யா)வது காரியத்தில் குறியாக இருக்கவும். எங்கள் கல்லூரி சாலையில் பாடும் ஒரு பாடலை நீங்களும் ஹம் செய்யலாம்.ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ ஆ ஊ ஆ.


Friday, October 29, 2010

பதிவுலகை விட்டு போண்டா மாதவன் விலகுவானா ?

பார்வதி அம்மாள் பற்றி ஒரு பதிவொன்றில் தமிழ்மண வரலாற்றிலேயே அதிக நெகட்டிவ் ஓட்டுகளை குவித்து,  தென்பென்ணை, பாலாறு, வைகையாறு போல எல்லோரும் முகத்தில் துப்பிய எச்ச்சில் ஆற்றில் நீந்தி, மூஞ்சியில எதுவும் படல ! என்று எழுந்துவந்த போண்டா மாதவன், தனது பதிவு ஒன்றில் தான் எக்காலத்திலும் தமிழ்மணத்தினை விட்டு விலகப்போவதில்லை என்று அறுதியிட்டு உளறியுள்ளார்.

இதுபற்றி வலையுலக சுனாமி ஒன்று எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு !

அதாவது மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டுவதே அதை வைத்து எதாவது கல்லா கட்டத்தான் என்ற நிலையில், போண்டா வலைப்பதிவர் சந்திப்புகளில் கையில் நோட்டுடன் குந்தியிருந்த காலம் ஒன்று. போலி டோண்டு பிரச்சினையில், தன் பெயர் உட்பட எதையும் வெளிப்படுத்த விரும்பாத பதிவர்களை பற்றி தெரிந்தும் லஜ்சையில்லாமல் அங்கே நீங்கள் வேலை செய்யும் கம்பெனி எது என்று நோண்டும் போண்டா மாதவனை பார்த்து பேஸ்த் அடித்து தெறித்து ஓடிய கும்பல் அதிகம்.

நண்டு அல்லது நொரண்டு பதிவில், நாத்திகர்கள் என்பவர்கள் கொலைவெறியோடு நாத்திகத்தை கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறார். திருக்குறளையும் துணைக்கழைக்கிறர். இன்றைய சமூச்சூழல் என்ன, அதில் நாத்திக பிரச்சாரம் செய்வது எப்படிப்பட்ட கடினமான காரியம் என்பதை புரியாதவரா நொரண்டு ?

அருள் வலியுறுத்தும் கருத்து மிகவும் பொருத்தமானது. நாத்திகம், பகுத்தறிவு போன்றவற்றை தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ளும் சூழலில், இனி வரும் காலத்தில், அல்லது தன்னிடம் முழு கண்ட்ரோலும் இருக்கும் நேரத்தில், இது போன்றவற்றை தவிர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை தான் முக்கியமானது என்கிறார்.

வடிவேலு பாணியில் சொன்னால், ஒன்னு நம்பி வாழனும், இல்லைன்னா நம்பவச்சு வாழனும் என்கிறார். என்னுடைய பார்வையில் அது 100 சதவீதம் சரியே !!!

என்னுடைய சொந்த வாழ்க்கையில் இருந்து உதாரணம் காட்டப்போனால், (நான் சாதி மத மொழி எதிர்ப்பு திருமணம் செய்தவன் என்பது நன்பர்களுக்கு தெரியும்)., யாழினி பிறந்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தவன் நான் மட்டுமே ! தொலைபேசியில் கூட என் மனைவியால் தன்னுடைய தாயிடம் பேசமுடியாத நிலை. அதன் பின் அவரது தாயாரின் முயற்சியாலும் என் முயற்சியாலும் அனைவரும் இணைந்துவிட்ட சூழலில், மாமனார் (வெகு தீவிர ஆத்திகர்) குழந்தையிடம் சாமி படத்தை காட்டி " உம்மாச்சி நோடு, நமஸ்காரம் மாடு" என்றெல்லாம் சொல்வதை கேட்டு குழந்தையும் அப்படியே செய்ய, அதை எல்லாம் புன்னகையோடு தான் கடந்துசெல்கிறேன்.

காரணம், அந்த நேரத்தில் அதுவே சரியான செயல்பாடு. பிற்பாடு என் மகள் நாம் சொல்வதை புரிந்துகொள்ளும் நேரம் வந்தபிறகு (வெனவு தெரிஞ்சபிறகு என்று எங்க கிராமத்தில் சொல்வார்கள்), அவளுக்கு அனைத்தையும் புரியவைக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பி வாழ்கிறேன்.

அதே நேரம் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் பழக்கமுடைய என் மனைவிக்கு ப்தாலமியில் இருந்து ஸ்டீவன் ஹாக்கின்ஸ் வரையில் அறிமுகம் செய்கிறேன். இது ஒரு நீண்டகால செயல்பாடு. அறிவின் வீச்சு முழுமை அடைவதில்லை, ஆனால் தேடும் பணியை நிறுத்திவிடக்கூடாது என்பதே என் கொள்கை.

பதிவுலகம் நிறைய புரியவைத்தது. டேம்போரல் லோப்பின் நரம்பு சிலிர்ப்புகள் எப்படி சாமியாட வைக்கிறது என்பதில் இருந்து, நமது வாசிப்பின் நீட்சியை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது, என்பது வரை. சமீபகாலமாக ஜெயமோகனை ஆழ்ந்து படித்துவருகிறேன். அவருடையை யதியை விட்டுவிட்டு, மற்ற அறிவின் ஆழத்தை பார்த்து வியக்கிறேன்.

அது தான் தேவை !

குழந்தையில் இருந்து சொல்லிக்கொடுக்கப்படும் சாமி, நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதை உடனே மாற்ற முடியாது என்றாலும், இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து அறிவு சார் தளத்தில் தொடர்ந்து விவாதிக்கவேண்டியது முக்கியம்.

ப்ரான்ஸ் நாடு பர்தாவை ஒழித்துவிட்டது, அதனால் முஸ்லிம்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிடப்போகிறார்களா என்ன ? ஹாப்பிங் காம்ப்ளக்ஸில் தலாக் சொன்ன கதையில் இருந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் செய்யும் கொடுமைகள் எத்தனை எத்தனை ? பாதிரியார்கள் பாப்பாக்களை பழுதாக்குகிறார்கள் என்பதை சொன்னபோது ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர் ? இன்றைக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கற்பழித்தான் பாதிரி என்ற செய்தி என்ன, தாழ்த்தப்பட்டவர்கள் கல்லறையில் கூட தனியாகத்தான் துயில வேண்டும் என்பது என்ன ? கருவறையிலே அபலைப்பெண்களிடமும் பூக்காரியுடனும் கூட அஜால் குஜாலாக இருந்த தேவநாதனில் இருந்து, கோவிலில் குண்டர்களை வைத்து கொலை செய்த காஞ்சி காமகேடி வாழை இலையில் ஆய் போகும் பெரிய மூங்கில் (நன்றி அருள்) என்ன ? பெரியார் காட்டிய பாதையில் குறைந்தபட்சம் செல்ல முயற்சியாவது செய்கிறீர்களா ?

உண்மையிலேயே கடவுளுக்கு சக்தி இருந்தால் தேவநாதனின் லுல்லாவை கடித்து துப்பியிருக்காதா ? அது வெறும் கல் என்பதால் தானே அதன் மேலேயே (நல்லா வாயில் வருது)

பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவர்கள் கல்யாணம் காட்சி கட்டாமல் நாத்திக சாமியாராக (??) வலம் வரவேண்டும், அப்போது தான் பிரச்சாரம் செய்யண்டுமா ? அட அல்லக்கை முண்டங்களே ? கடவுளுக்கு சக்தியில்லை என்பதையும், மத அடிப்படை வாத பத்வா சொறிநாய்களையும், கன்னியாஸ்திரிகளை கற்பழிக்கும் சாதி வெறி சாமியார்களையும், கேள்வி கேட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதா ? அதனால் ஒரு சமயம் கிடைத்தவுடன் வள் என்று பாய்ந்து பிறாண்ட ஆசை வருகிறதா ? நாய் தடுப்பு ஊசி போட்டு பட்டியில் (பட்டா பட்டியில் அல்ல) அடைத்தால் தான் புத்திவரும் !!!

சரி, பதிவின் மையமான போண்டாவை பற்றி :

திருச்சியில் வேலைக்கான நேர்முக தேர்வில் தான் பாப்பான் என்பதால் பெருமிதம் அடைகிறேன் என்று சொன்ன டோண்டு ராகவன் தான் பார்ப்பணீயத்தை கடைப்பிடிப்பதில் முதன்மையாக நிற்கிறார். இதை அந்த போண்டாவிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்களேன்.

Thursday, October 28, 2010

போண்டா மாதவன் கலக்கும் நாராயண ! நாராயண !!



குறிப்பிட்ட படத்தினை இணையத்தில் இருந்து எடுத்து அதில் ஒரு சின்ன போண்டாவை இணைத்துள்ளேன் ! பொருந்தி வருதா என்று பாருங்கள் !!!

இவ்வளவு நாளாக காத்திருந்த வாய்களுக்கு (அரிசி) அவல் போடத்தான் போண்டா சார் இந்த கல்யாணத்துக்கு போனார் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்கள் தளத்தில் பகுத்தறிவை பேசுகிறார்கள் என்று கையை பிசைந்துகொண்டிருந்த கும்பல் போண்டா சார் பதிவில் புகுந்து விளையாடுகிறது.

குழலி ஒருமுறை போண்டா சாரை மஸோக்கிஸ்ட் என்றார். அதாவது தன்னை வருத்தி, அதிலே சுகம் காணுதல். அடித்து பிடித்தாவது எதாவது ஹிட்ஸ் தேத்துதல். அப்பத்தானே நன்பர்களுக்கு நன்றி என்று பதிவிடலாம் ? மேலும் போண்டா சாரின் பதிவில் வரும் பல அனானீஸ் அவரின் புரளி மனோஹர் கோஸ்டியில் இருந்தே வருகிறார்கள். நாட்டாமை, கிருஸ்னன், செங்கோட்டையன், பனங்காட்டையன் என்று வாய்க்கு வந்தபடி தனித்தனியாக உருவாக்கிய ஐடிகள் எல்லாம் இப்போது உபயோகப்படுவதில்லை. அனானியை திறந்துவிட்டாச்சு !!!

என்னைய அடிச்ச ரவுடிகள் எல்லாம் ஊரை விட்டே ஓடிட்டானுங்க என்ற வடிவேலு பாணியில் சொல்லிக்கொண்டு செய்த நாரதர் வேலையை எல்லோரும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் ?

ஒரு சம்பவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அது போண்டா சாரை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள உதவியது என்றால் மிகையில்லை. போலி பிரச்சினை கடுமையாக நடந்துகொண்டிருந்த நேரம். தினமும் போலி டோண்டுவிடம் இருந்து ஆபாச கமெண்டுகள் மின் அஞ்சல் பெட்டியை நிரப்பும். நான் ஒரு வேலையாக பெங்களுர் பிக் பஸாரின் உள்ளே இருந்தேன். என்னுடைய மனைவி ஜெர்மன் மொழி படிக்க விரும்புவதாகவும் அது சம்பந்தமான தகவல்கள் தேவை என்றும் போண்டா சாரை தொலைபேசியில் அழைத்தேன். சந்தடி சாக்கில் உன் மனைவி என்ன ஜாதி என்று கேட்டு, அவர் பார்ப்பணர் என்பதை அறிந்துகொண்டார் போண்டா. கான்வர்சேஷன் முடிந்தது. அடுத்த நாள் காலையில், என்னுடைய மனைவியின் ஜாதியை சொல்லி திட்டி பின்னூட்டங்கள் வந்தன. இணையத்தில் பல இடங்களிலும் என்னுடைய மனைவியின் சாதியை போஸ்டர் அடித்து ஒட்டினார் திருவாளர் போலி. இதை போண்டா மாதவனால் மறுக்க முடியுமா ?

தன்னுடைய சுகத்துக்காக எந்த கேவலத்தையும் செய்ய துணிபவர் போண்டா சார். இதை வெகு தாமதமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் ஒரு சம்பவம். இதில் ஒரு முருகனடிமை பதிவரை இழுக்கவேண்டிய தேவை. எனக்கு வேறு வழியில்லை. அப்போதையை பணமுடை காரணமாக திருச்சியில் கையில் இருந்த ரெண்டு ரூபாய்க்கு ஏதோ ஒரு வேலையாக முருகனடிமை போண்டா மாதவனுக்கு போன் செய்ய, வள வளவென்று தொலைபேசியில் கழுத்தறுக்கும் போண்டாவிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று முருகனடிமை நொந்து நூடுல்ஸ் ஆகிப்போய் இருந்த நேரத்தில், இப்ப ஒரு பதிவு போட்டிருக்கேன், அதுல ஒரு பின்னூட்டம் கொடுத்திருங்க என்று கோரிக்கை வைத்த போண்டா மாதவனை எண்ணி அந்த வேகாத வெய்யிலில் முருகா !! என்று அலறியவர் முருகனடிமை. அந்த முருகனடிமை நமது அண்ணன் உண்மைத்தமிழன். வேண்டுமானால் இந்த கேவலத்தை அண்ணனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

போண்டாவிடம் சுயமரியாதை என்பது எள் அளவும் இல்லை என்பதை இன்னொரு உதாரணம் மூலமும் சொல்லலாம். சென்னையில் தி நகர் குடிகார மூத்திர சந்தில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில், வரவனையான், சுகுணா திவாகர், நான் மூவரும் குடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகி, தனக்கு சிக்கன் ஆர்டர் செய்து கடித்துக்கொண்டிருந்த நேரத்தில், வரவணையான் செந்தில் கொடுத்த 4 ரூபாய் கிங்ஸ் சிகிரெட்டை புகைத்துவிட்டு, அதற்கு காசு கொடுக்காமல் ஏமாற்றியர். மொத்த பில்லில் போண்டவின் பங்கு 114 ரூபாய். ஆனால் 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு தன்னுடைய (வாடகை) காரில் ஏறி போய்விட்ட போண்டாவிடம், இதை சும்மா கிண்டலுக்காக வரவணையான் சுட்டிக்காட்ட, அந்த பதினாலு ரூபாயை மணியார்டர் செய்கிறேன் என்று தொலைபேசியில் எகிறியவர், இன்று வரை அந்த பதினாலு ரூபாயை செட்டில் செய்யவில்லை. 1956 ல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் வேட்டியில் ஒன்னுக்கு போனது நியாபகம் இருக்கிறது, ஆனால் மூன்று வருடம் முன்னால் நடந்த பதினாலு ரூபாய் அவமான மேட்டர் செலக்டிவ் அம்னீஷியாவில் மறந்துவிட்டதா ?

ஆமை புகுந்தவீடு போல திருமணத்துக்கு வந்ததே தனக்கு அதில் ஏதாவது மேட்டர் கிடைக்குமா என்று பார்ப்பது என்று ஆனபிறகு, வலிய ராஜனிடம் சென்று மண்டப வாடகை எவ்வளவு என்று கேட்டது ஏன் ? உண்மையில் ராஜனுக்கு மண்டப வாடகை தெரியாமலா இருந்திருக்கும் ? இந்த டொங்கனிடம் எதற்கு சொல்லவேண்டும் என்று பெண் வீட்டார் பார்த்துக்கொள்கிறார்கள் என்று தட்டி கழித்திருப்பார். அதை வைத்து போண்டா கும்மியடிக்கும் என்று தெரிந்திருந்தால், வாட்ச்மேனை வைத்து வாசலிலேயே விரட்டியிருக்கலாமே ?

இதில் இஸ்லாமிய அடிப்படைவாத முண்டம் ஒன்றும் திட்டி பதிவெழுதி உள்ளது. விளையாட்டு போக்கில் தலாக் தலாக் தலாக் என்றவன் பொண்டாட்டியை புடுங்கிக்கொள்ளும் அறிவுகெட்ட மூடப்பயல்களின் முட்டாள்தனமான கொள்கைகளை விமர்சித்தால், அதுக்கு பதில் சொல்லாமல் என்றைக்கு சிக்குவான் என்று நாக்கை தரைவரைக்கும் தொங்கவிட்டுக்கொண்டு திரிபவர்களுக்கு குற்றம் சொல்ல பிள்ளையார் படம் தேவையில்லை. கல்யாண மண்டபத்தில் ஒரு கிழவி தும்மியது என்றால் அது கூட ஒரு காரணம் தான்.

உணமையில் போண்டாவின் பதிவில் பின்னூட்டம் எழுதும் எந்த அனானிக்காவது சொந்த பெயர் இருக்கிறதா ? இல்லை தன்னுடைய அப்பன் ஆத்தா வைத்த பெயரை மறந்துவிட்டார்களா ? அருளிடம் கேட்ட கேள்விக்கு செருப்பால் அடித்த மாதிரி பதிலை சொல்லிவிட்டாரே ? அந்த அனானி வாழை மரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளுமா ?

தனக்கும் போலி டோண்டுவுக்கும் இடையேயான பிரச்சினையில் அனைவரையும் இழுத்துவிட்டு, எனக்கு கமெண்ட் போடுங்க என்று சந்தடி சாக்கில் கேட்டு, அவர்கள் கமெண்ட் போட்டவுடன் கிடைக்கும் ஆபாச அர்ச்சனையால் அவர்களும் தன் பக்கம் சேர்வார்கள் என்று பல அப்பாவிகளுக்கு ஆபாச அர்ச்சனை கிடைக்கவைத்தவர் இந்த மஸோக்கிஸ்டு.

இந்த அல்லக்கை முண்டங்களை லூஸ்ல விட்டுவிட்டு, ராஜனும் சிஸ்டரும் தங்களது விடுமுறையை சந்தோஷமாக அனுபவிக்கவேண்டும் !! என் வாழ்த்துக்கள்...

Wednesday, October 27, 2010

இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தில் பட்டய மற்றும் பட்ட படிப்புகள்

தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் அமைந்துவிட்ட இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தின் பொது நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு அந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

http://www.imu.tn.nic.in/

பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான முதல் பேட்ச். இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலே அரசு வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை. இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தயங்கவேண்டாம். படிப்புக்கான தேர்வு தகுதிகள், உடல் தகுதி தேர்வுகள், கட்டண விவரம்  அனைத்தும் இணைய தளத்திலேயே உள்ளது.( கொஞ்சம் அதிகமாக உள்ளது, அரசு இதனை தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வேவியர் செய்துவிட்டால் மிக சிறப்பக இருக்குமே ?)

Saturday, October 23, 2010

இரத்த படலம் பற்றிய யுவக்ருஷ்ணா பதிவு

சிங்கத்தின் தீபாவளி ஸ்டார்ட்ஸ்...

October 23, 2010

 
இந்த தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?

3டி மேக்ஸ் புடவை..

மல்டி மசகலி சல்வார்..

குந்தன் ஒர்க் சுரிதார் மெட்டீரியல்..

காட்டன் மஸ்லின் சட்டை..

பொந்தூர் வேட்டி..

பிளாக்பெர்ரி பெர்ல்3ஜி9100..

ஸ்டேண்டர்ட் மார்க் பட்டாசுகள்..

பாசிப்பருப்பு அல்வா, முள்ளு முறுக்கு..

உங்கள் சாய்ஸ் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஆனால் காமிக்ஸ் ரசிகர்களின் பல்லாண்டுகால வனவாசம் இந்த தீபாவளியோடு முடிவுக்கு வருகிறது.

என்னது காமிக்ஸா? குழந்தைகள்லாம் படிக்குமே.. அதுவா? என்று முகம் சுளிக்கிறீர்களா?

வெயிட் பண்ணுங்க ஜெண்டில்மேன். உங்களுக்காக ஒரு தகவல்..

இன்றைய தேதியில் தமிழில் காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவரும் இருபது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே 80 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள் என்று ஏதோ ஒரு அமைப்பின் ஏதோ ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இது நிச்சயமாக குழந்தைகள் சமாச்சாரம் அல்ல.

ஏனெனில்..

1960களின் இறுதியில் 'மாலைமதி காமிக்ஸ்' வெளிவந்து கொண்டிருந்தது. ஒரு இதழின் விலை 75 காசு. உங்கள் தாத்தாவோ, அப்பாவோ அந்த காலத்தில் வாங்கி பரண் மேல் போட்டு வைத்திருந்தார்களேயானால் தூசு தட்டி எடுத்து வையுங்கள். ஒரு இதழ் இன்று பிரிமீயம் ரேட்டில் 4000 ரூபாய் வரை விலை போக வாய்ப்புண்டு.

1987ல் வெளிவந்த லயன் காமிக்ஸ் தீபாவளி மலரின் விலை ரூ.10. இன்று அதனுடைய மதிப்பு ஆயிரம் மடங்கு மார்க்கெட்டில் உயர்ந்திருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அந்தப் புத்தகத்தை ஒரு நண்பர் ரூ.10,000 கொடுத்து வாங்கியிருக்கிறார்.

நான் கூட சில ஆயிரங்களை கொட்டி, மிஸ்ஸாகிவிட்ட பழைய சில காமிக்ஸ்களை வாங்கி சேகரித்து வைத்திருக்கிறேன். உடனே சேல்ஸுக்கு கிடைக்குமா? படிக்க கிடைக்குமா? என்று பின்னூட்டம் போட்டு டார்ச்சர் செய்து தொலைக்காதீர்கள். காமிக்ஸ் விஷயத்தில் நான் ஒரு தீவிர சைக்கோ.

காமிக்ஸ் என்பது Passion சார்.. Passion.. ஸ்டேம்ப் கலெக்சன், காயின் கலெக்சன் மாதிரி..

70களிலும், 80களிலும் குழந்தைகளாக இருந்து ஒண்ணரை ரூபாய் இல்லாமல் காமிக்ஸ் வாங்க முடியாதவர்கள் இன்று லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். தாங்கள் இழந்துவிட்ட பால்யகால ஒண்ணரை ரூபாய் பரவசத்தை இன்று ஆயிரங்களில், லட்சங்களில் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேற்றைய குழந்தைகள்.

கஷ்டப்பட்டு ஏதோ ஸ்டேட்டிஸ்டிக்ஸ் எல்லாம் அள்ளிவிட்டிருக்கோம். இப்போதாவது இது சீரியஸ் மேட்டர் என்று நம்புங்க ப்ளீஸ். ஏதோ பார்த்து போட்டு கொடுங்க சாமி.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட்..

மேலே நாம் குறிப்பிட்ட காமிக்ஸ் வெறியர்கள் சாதாரணமாகவே இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் என்று வெறியாட்டம் ஆடக்கூடியவர்கள். நான்கைந்து தீபாவளிகளாக பெரியதாக 'ஸ்பெஷல்' எதுவும் இல்லாமல் முடங்கிக் கிடந்தவர்கள். இந்த தீபாவளிக்கு 854 பக்கங்களில், 200 ரூபாய் விலையில் இந்திய காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன் முறையாக 'லயன் ஜம்போ ஸ்பெஷல்' வெளிவருகிறது. கிட்டத்தட்ட 'எந்திரன்' ரிலீஸுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு இந்த புக்குக்கும் இருக்கிறது என்றால் நம்புங்கள். 'தலைவா வா. தலைமையேற்க வா'வென்று காமிக்ஸ் ரசிகர்கள், லயன் காமிக்ஸ் ஆசிரியர் விஜயனுக்கு போஸ்டர் ஒட்டாததும், ஜம்போ ஸ்பெஷலுக்கு கட்டவுட் வைக்காததும்தான் பாக்கி.

854 பக்கமும் ஒரே கதைதான் என்பது இந்த ஸ்பெஷலின் ஸ்பெஷல். விஷ்ணுபுரத்தை மிஞ்சும் இந்த ஸ்பெஷலை கண்டால் ஜெயமோகன் நொந்துப் போவார். தீவிர காமிக்ஸ் ரசிகரான எஸ்.ராமகிருஷ்ணன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவார். எஸ்.ரா மட்டுமல்ல.. இயக்குனர் மிஸ்கின், நடிகர் பொன்வண்ணன் மாதிரி நிறைய வி.ஐ.பி. காமிக்ஸ் ரசிகர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் 'எக்ஸ்19' சீரியஸ் காமிக்ஸ் மிகப்பிரபலம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக தனித்தனி புத்தகங்களாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதையிலிருந்துதான் 'வெற்றி விழா' திரைப்படத்தை பிரதாப் போத்தன் சுட்டார் என்று கூட கிசுகிசு உண்டு. கதையைப் படித்துப் பார்த்தால் அந்த கிசுகிசு உண்மைதான் என்றுகூட தோன்றும்.

கடற்கரையில் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்கிறான் ஹீரோ. முழித்ததும் தன் பெயர்கூட அவனுக்கு நினைவில்லை. தன் அடையாளத்தை தேடிப் புறப்பட்டவனுக்கு அடுத்தடுத்து பல அதிர்ச்சிகள். அவன் நல்லவனா கெட்டவனா கொலைகாரனா தேசத்துரோகியா கல்யாணமானவனா பொண்டாட்டி இருக்கிறாளா என்று குழம்பித் திரிய வேண்டிய சூழல். சில பேர் அவனை வரவேற்கிறார்கள். பலர் அவனை கொல்லத் துடிக்கிறார்கள். நினைவிழப்பதற்கு முன்பான வாழ்க்கையை தேடிச் செல்லும் நாயகனின் கதையில் சோகம், மகிழ்ச்சி, ஆக்‌ஷன் என்று எல்லா மசாலா செண்டிமெண்டுகளும் உண்டு. கட்டத்துக்கு கட்டம் ஒருவகையான இலக்கிய சோகம் இந்த கதை முழுக்க ஊடே வந்துகொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் 'சேது' படம் பார்க்கும் மனநிலை கூட தோன்றக்கூடும்.

ஓவியங்கள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய முத்துகள். இவ்வளவு சிறப்பான ஓவியங்களோடு உலகளவில் எந்த காமிக்ஸும் வந்ததில்லை என்று தாராளமாக பெட் கட்ட முடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியரின் துல்லியம், டீடெய்லிங் அபாரமாக அமைந்திருக்கும்.

ஆங்கிலத்தில் மொத்தம் 19 புத்தகங்களாக வெளிவந்தது.

தமிழில் 'இரத்தப் படலம்' என்று பெயரிட்டு மொழிமாற்றி லயன் காமிக்ஸ் வெளியிட்டு வந்தது. இப்போது ஒட்டுமொத்த 19 புத்தகங்களையும் ஒரே புத்தகமாக லயன் கொண்டு வருகிறது. இதுதான் லயன் ஜம்போ ஸ்பெஷல். 854 பக்கங்களில் காமிக்ஸ் என்று உலகளவில் இப்படியான ஒரு முயற்சி அனேகமாக இதுதான் முதல் தடவையாக இருக்கக்கூடும். ஆங்கிலத்திலேயே கூட ஒரே புத்தகமாக வந்ததில்லை. 19 புத்தகங்களையும் வாங்க ரூ.4000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஒரு சேல்ஸ்மேனின் லாவகத்தோடு இந்தப் பதிவினை எழுதி வருகிறேன். அனேகமாக இன்னேரம் இப்புத்தகத்தை வாங்கும் எண்ணம் உங்களுக்கு தோன்றியிருக்கலாம். சாரி ஜெண்டில்மேன். காமிக்ஸ் கலெக்டர்ஸ் ஸ்பெஷலான இந்தப் புத்தகம் கடைகளில் கிடைக்கவே கிடைக்காது.

வேறெப்படி வாங்குவது?

உடனடியாக ரூபாய் 230க்கு (புத்தகத்தின் விலை ரூ.200 + கூரியர் செலவு ரூ.30) மணி ஆர்டர் அல்லது "Prakash Publishers" என்ற பெயரில் காசோலை எடுத்து, Prakash Publishers, No 8/D-5, Chairman P.K.S.S.A Road, Amman Kovil Patti, Sivakasi, 626189 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.  04562 272649, 04562 320993 ஆகிய எண்களுக்கு (காலை 10.30 டூ மாலை 5.30) தொலைபேசியும் மேலதிக விவரங்களைப் பெறலாம்.

ஏற்கனவே 800 பிரதிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிட்டது. நிறைய பக்கங்கள் என்பதால் 'பைண்டிங்' செய்வது கொஞ்சம் சிரமம். எனவே 50, 50 புத்தகங்களாக தயார் செய்து முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். முந்துவோருக்கு பிரதிகள் நிச்சயம் கிடைக்கும்.

ஜம்போ ஸ்பெஷலோடு லயன் காமிக்ஸாரின் தீபாவளி கொண்டாட்டம் முடிந்துவிடவில்லை. அடுத்தடுத்து அதிரடியாக சரக்குகளை இறக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அடுத்த மூன்று மாதங்களில் வெளிவர இருக்கும் புத்தகங்கள் : வெள்ளையாய் ஒரு வேதாளம் (சிக் பில்), சாத்தானின் தூதன் டாக்டர் செவன் (காரிகன்), காவல் கழுகு (டெக்ஸ் வில்லர்) ஆகியவை லயன் காமிக்ஸிலும், களிமண் மனிதர்கள் (இரும்புக் கை மாயாவி), கொலைகார கோமாளி (ஜானி நீரோ) ஆகியவை காமிக்ஸ் கிளாசிக்ஸ் பிராண்டிலும், விண்ணில் ஒரு குள்ளநரி (விங் கமாண்டர் ஜார்ஜ்), மரணத்தின் நிசப்தம் (ரிபோர்டர் ஜானி)  ஆகியவை முத்து காமிக்ஸ் பிராண்டிலும் வெளிவர இருக்கிறது. 75 ரூபாய் செலுத்தி மொத்தமாக இந்த 7 புத்தகங்களையும் கூட வாங்கிக் கொள்ளலாம்.

இந்த ஏழு புத்தகங்களுக்கு பிறகு தமிழ் காமிக்ஸுக்கு புத்துயிர் பாய்ச்சும் மிகப்பெரிய முயற்சி ஒன்று நடைபெறவிருக்கிறது. அது என்னவென்று ஜம்போ ஸ்பெஷலின் ஹாட்லைனில் ஆசிரியர் எஸ்.விஜயன் சொல்லியிருக்கிறார்.

ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ்!

 காமிக்ஸ் குறித்த விரிவான, தொடர்ச்சியான தகவல்களுக்கு நண்பர் கிங்விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பூவை வாசிக்கலாம்!

 

Friday, October 22, 2010

சவால் சிறுகதை போட்டிக்கான என் விமர்சனங்கள் ‍‍பார்ட் 2

டைமண்ட் வாசனை : பலாபட்டறை சங்கர்
அல்டிமேட்டான கதை. முடிவை கடைசிவரை ஊகிக்கமுடியாமல் போனதே ஷங்கருக்கு எந்திர வெற்றி. ஆதியும் பரிசலும் கொடுத்த வாசகங்கள் அங்கங்கே பச்சக் என்று பொருந்துகிறது. பயபுள்ள பிச்சு உதறுது. நல்ல ஷேப்பில் வந்திருக்கும் கதை, குமுதம் ஆவி குங்குமம் தர கமர்ஷியல் கதைகளின் க்வாலிட்டியை கூட மிஞ்சுகிறது. பரிசை எப்படியாவது தட்டிடனும்னு எப்படியெல்லாம் ஓட்டல் ரூம் (இல்லை ஓட்டலே) போட்டு யோசிங்கறாங்கபா !!

என் மதிப்பெண் 7.5 / 10 : கலக்கிப்புட்ட ஷங்கர்.

ஆப்பரேஷன் ப்ளூ டைமண்ட் : கார்த்திகைப்பாண்டியன்.தொண்ணூறுகளின் மத்தியில் படித்த ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுபா,நாவல்களின் வாசனை மூக்கை துளைக்கிறது. கதையும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது. பெரிய மீனை சின்ன ஜாடியில் அடைத்ததுபோல ஒரு முழு நீள
நாவலுக்கான ஸ்கோப் உள்ள கதை. பாவம் சிறுகதையாக ருங்கிவிட்டது.
வித்யாசமாக எதுவும் யோசிக்கவில்லை கார்த்திகை பாண்டியன். எக்மோரில் கார் எடுத்து மதுரையில் யு.டர்ண் போடுவது நம்பக்கூடியதா ? அதே போல ஏர்போர்ட் இம்மிக்க்ரேஷன் செக்ஸை கடந்து எப்படி வந்தார், இரு லாஜிக் மீறல் என்று யோசித்தபோது கதையின் முடிவு கிட்டத்தட்ட கொஞ்சம் யோசித்தால்
ஊகிக்கமுடிவதாக இருப்பது மைனஸ். நீல வைர கடத்தலில் ஆரம்பித்து காமினியின் சிவந்த முக லவ்ஸில் முடியும் கதை. வொர்த் ரீடிங்.

என் மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள் கார்த்திகைப்பாண்டியன்.

காமினியின் கண்கள் ! (சவால் சிறுகதை) : கவிதா கெஜானனன்

கொஞ்சம் இலக்கில்லாமல் பயணிக்கிறது. வர்ணனைகளுக்கு அதிக வார்த்தைகள் செலவிட்டமாதிரி தெரிகிறது. மும்பை, கோவா ரோடு, என்று புதிய இடங்கள். ஏசிபியை ஜொள்ளு பார்ட்டியாக காட்டியது போல தெரிகிறது. ஆனாலும் ஒருசில இடங்களில் டீட்டெயிலிங் மிஸ் ஆகிறது. சிறந்த ப்ரொபஷனில் இருக்கும் காமினி குற்றம் செய்வதற்கான மோட்டிவ் என்ன ? கதையின் முடிவு என்று எதுவும்
இல்லாமல் போகிறதே ? ஏசிபியின் துப்பாக்கியை தட்டிவிட்டு காமினி ஓட்டம் எடுப்பது ஓக்கே. அப்புறம் ஏசிபி வியாழன் கிரகத்துக்கா போயிருவார் என்று திடீர் என்று தோன்றியது. சில கதைகளை போல, கொடுக்கப்பட்ட வார்த்தைகள் வலிந்து திணித்துவிட்டதை போலிருக்கிறது. உரையாடல் கதைப்போற்றியில் வென்ற எழுத்தாளர் என்பதால் இன்னும் எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்குங்க. ப்பீ கேர்புல்.

என்னுடைய மதிப்பெண் : 5/10. கீப் டூயிங் இட் !

மணிகண்டன் விஸ்வநாதன்

மூன்று டேக்லைனையும் கோர்த்து இது தான் கதை என்று காமெடி செய்துள்ளார் மணி. ட்விட்டரில் திவிரவாதியாக இருப்பதால் நறுக் சுருக் என்று வேண்டும் போலிருக்கிறது. போடா மடையா. உக்காரடா சோம்பேறி. என்று சர்தார்ஜி சொல்வது நியாபகம் வருகிறது. இந்த பரிசல் பயபுள்ள இதையும் சீரியஸா டுத்துக்கிட்டு இந்த கதையையும் போட்டியில சேர்த்துருக்கு பாருங்க.

என் மதிப்பெண் : <<ப்ளாங்க் வேல்யூ>>

காமினி என் காதலி - ஆசியா உமர்

அழகான ஓவியத்தின் ஓவியம் ஒன்று நம்மை கதைக்குள் வரவேற்கிறது. கதையின் தீம் நன்றாக இருக்கிறது. ஆனால் வர்ணணைகளிலோ, விளக்கங்களிலோ பெரிதாக அக்கறை எடுக்காமல் இருந்துவிட்டார். சவால் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தீம் வசனங்கள் கதையில் ஒட்டாமல் துருத்துகின்றது. பிட்டு பிட்டாக படத்தை
பார்த்தது போல (அதாவது இடைவெளி விட்டுங்க), கதை ஜெர்க் அடிக்கிறது. இருந்தாலும் நல்ல முயற்சி. ப்ரசண்ட்டேஷனில் கவனம் செலுத்தினால் இன்னும் சூப்பரான படைப்புகளை எதிர்பார்க்கலாம் ஆசியா உமரிடம் இருந்து
.
என்னுடைய மதிப்பெண் : 5/10 வாழ்த்துக்கள் ஆசியா உமர்.

கதைகளின் சுட்டிகளை பார்க்க‌ http://www.parisalkaaran.com/2010/10/1.html

Thursday, October 21, 2010

வாழ்த்துக்கள் ராஜன் & Sister.

ஜாக் அண்ட் ஜில் !


கல்யாணத்துக்கு வரமுடியாம போனதுக்கு சாரி.


வாழ்த்தி பின்னூட்டம் போடமுடியாம போனதுக்கு மன்னிச்சுக்க.


போன் போட்டு வாழ்த்தாம போனதுக்கு வருந்தறேன்.

அட இமெயில் கூட அனுப்பலைக்கு கோச்சுக்காத.


எங்கிட்டு இருந்தாலும் நல்லா இருங்கடே !!!


ஜாக் அண்ட் ஜில் ! இனி இல்லை போன் பில் !

Wednesday, October 20, 2010

சவால் சிறுகதைகள் ‍ : என் விமர்சனங்கள்

ஏற்கனவே உரையாடல் போட்டியின்போதே கதைகளுக்கு விமர்சனம் எழுதி அனுபவம் இருக்கு. அதனால் சவாலையும் படித்து எழுதுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வையே. ஷங்கர் எடுக்கும் படத்துக்கு ஆனந்தவிகடன் விமர்சனம் எழுதுவதில்லையா ? அது போலத்தான். பப்ளிக் டொமைனில் இருக்கும் உங்கள் கதையை நான் படித்து ரசித்து, நல்லவைகளையும் அல்லவைகளையும் சொல்கிறேன்.யாரும் கோச்சுக்கவேண்டாம் ப்ளீஸ். படிக்க நிறைய கதைகள் இருக்கு. நேரமோ
குறைவா இருக்கு. ஸீ யூ.

பலாபட்டறை ஷங்கர்

போட்டிக்கு வந்துள்ள படைப்புகளின் பட்டியலில் முதல் கதையாக
பட்டியலிடப்பட்டிருக்கிறது. சில இடங்களின் புன்முறுவல் பூக்கவைத்தாலும் "கொசுவ அழிக்க மருந்து இல்ல, இதுல கொரங்க வெச்சி பிசைஞ்சிருக்கானுவ." ஓவர் ஆல் ஆக ஒரு குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட் ஆக இருந்திருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. ரோபோ எதிர்காலத்தை கணிச்சு சொல்லும் என்று சொல்லப்படுவது அப்பட்டமான லாஜிக் மீறலாக தெரிகிறது.
அல்லது கன்வின்ஸிங் ஆக இல்லை. அதிகமான பஸ் வேர்ட் எல்லாம் ஆங்கிலத்தில் உபயோகப்படுத்தபடுவதால், ஜனரஞ்சக எழுத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்கிறது பலாபட்டறையாரின் படைப்பு. கடைசியில் குழப்பமே மிஞ்சுகிறது. இன்னும் கொஞ்சம் சுருக்கமாக, எளிமையாக முயற்சி செய்திருக்கலாம்.

என்னுடைய ஸ்கோர் 5/10 ! நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் ஷங்கர்.

2. உனக்காக எல்லாம் உனக்காக........துவாரகன்.

எளிமையாக ஆரம்பிக்கும் கதையில், பேஸ்புக், ப்ரொபைல் என்று ஆங்கில
வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.. ஹைவே என்பதை பெருந்தெரு என்று அழகாக எழுதியிருப்பவருக்கு இது ஒன்றும் பெரிதல்ல. கதையை மூன்றாமவரிடம் இருந்து ஆரம்பிப்பதாக இருக்கிறது. பிறகு பேசினோம், பேசினேன் என்று சுயமாக சொல்வது போல இருக்கிறது. ஏதாவது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நைட்டு 12 மணிக்கு நீ ஏண்டா சுடுகாட்டுக்கு போனே என்ற கதையாக டேட்டிங் செய்யப்போகும் பெண்ணின் மேல் எப்படி ஆசிட் விழுந்தது ? இது ஒரு லாஜிக் மீறல். போட்டியில் கொடுக்கப்பட்டிருந்த வரிகளை கதையில் திணிக்க முயன்று, அது தோல்வியில் முடிந்திருக்கிறது. அறிவியல் கதையும் இல்லாமல், காதல் கதையும் இல்லாமல் மொக்கையாக
முடிந்துபோனது.

என்னுடைய ஸ்கோர் 2/10. மீண்டும் முயலுங்கள், நிறைய வாசியுங்கள்.
வாழ்த்துக்கள் துவாரகன்.

3. விபூதி வாசனை - சவால் சிறுகதை ‍ ‍விதூஷ்.

மர்மதேசம் டைப்பில் விர்ரடிக்கும் கதை. லைட்டாக ஆரம்பித்து ராக்கெட்
வேகத்தில் பயணிக்கிறது. இடையிடையில் வரும் முருகன் பாடல்ஸ், வேல், வசனம்ஸ் எல்லாம் ஜில்லிட வைக்கிறது. கடைசியில் முடிவு புரியாமல் இரண்டாவது முறை படித்தேன். ஓரளவு புரிந்தது. எனக்கென்னவோ இந்த ஆதியும் பரிசலும், வெறும் தலைப்பை அல்லது தீமை மட்டும் கொடுத்துவிட்டு வார்த்தைகள், வசனங்களை முடிவு செய்யும் வேலையை எழுத்தாளர்களிடமே விட்டுவிட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. காரணம், விதூஷ் கதையில் ஆட் மேன் அவுட் ஆக தெரிவது அந்த வசனங்களே. அவை இல்லாமலேயே விதூஷே சிறப்பான
வார்த்தைகளை கோர்க்கும் சுகந்திரத்தை இழந்துவிட்டாரோ என்று
எண்ணத்தோன்றுகிறது.

என்னுடைய ஸ்கோர் 6.5 / 10. வெல் டன் விதூஷ்.

டைமண்ட் - முகிலன்

மொத்தத்தில் தெளிவான சரளமான நடை. இதுவரை படித்த கதைகளில் கொடுக்கப்பட்ட டேக் லைன்ஸ் கிட்டத்தட்ட பொருந்தி வருவது இந்த கதையில்தான். எஸ்பியை கொஞ்சம் மரியாதையாக விளித்திருந்தால் அந்த கேரக்டரின் அழுத்தம் கூடியிருக்கும். குலோப்ஜாமூன் டெக்னிக் புதுசாயிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் லாஜிக் மீறல், கதையின் முடிவில் பெரிய லாஜிக் மீறல். அதாவது போலீஸ் கடத்தல்காரர்களின் அதே என்க்ரிப்ஷன் டெக்னிக்கை உபயோகப்படுத்தி டாக்டரின் இமெயில் ஐடியை பிடித்து சிலமணி நேரத்தில் கண்டுபிடிப்பது கன்வின்ஸிங் ஆக
இல்லை. பரபர நடைக்காக மதிப்பெண்களை அள்ளுகிறது. போட்டிக்கான கதையில் தேவையற்ற டிஸ்கிகளை தவிர்த்திருக்கலாம்.

என்னுடைய மதிப்பெண் 6/10. வாழ்த்துக்கள்.

தெய்வம் ‍ ‍: பலாபட்டறை ஷங்கர்

என்ன ஏது என்று புரியாமல் கடைசிவரை தவிக்கவிட்டதில் பலாபட்டறையாருக்கு வெற்றி. கடைசி ட்விஸ்ட் அருமை. மரம் வெட்டி போடுவது போன்ற சில விஷயங்கள் ஏதோ ஜாதிக்கலவரத்துக்காகத்தான் என்பது போலவும், ஒரு குறிப்பிட்ட ஜாதியார் செய்த போராட்டத்தினை ரீவைண்ட் செய்வது போலவும் இருப்பதை தவிர்த்திருக்கலாம். அருமையாக கதையில் அது ஒரு கரும்புள்ளியாக இரண்டு
இடத்தில் இருக்கிறது. முதல்வர் திரைப்படம் பார்த்துக்கொண்டிருப்பதை
இன்னும் கொஞ்சம் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கலாம். கடைசி
ட்விஸ்டுக்காக அல்லது ரூம் போட்டு யோசித்தமைக்காக மதிப்பெண்களை
அள்ளுகிறது.

என்னுடைய மதிப்பெண் 6/10 , வாழ்த்துக்கள் ஷங்கர்.

tes5t

--
Thanks and Regards,
Ravindran.A
78294 77007

Monday, September 20, 2010

அநீதி ஆக செயல்படுதல்

அநீதி ஆக செயல்படுதல் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. என்னுடைய முந்தைய பதிவை பார்த்த சம்பந்தப்பட்டவர்கள் அதனை உண்ர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காரணம் வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் எது வலி என்று உணராதவர்களுக்கு கொஞ்சமாக குத்தித்தான் உணரவைக்கவேண்டும் என்ற நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

அதன் காரணமாகவே, அவர்கள் குத்திய அதே அறம் இல்லாத, அநீதி ஆக செயல்படுவதான கத்தியை நானும் பயன்படுத்தினேன்.

எப்போதும் எதிரி தான் நாம் எந்த ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கிறான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அண்ணா சொன்னதுபோல வன்முறை என்பது இருபுறமும் கூர்மையான கத்தியாகும். 

நான் வன்முறையை எடுக்கும்போதே, அதே வன்முறை என்னை தாக்கும்போது எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று மனதளவில் என்னை தயார்படுத்திக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் சம்பந்தப்பட்டவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. ஒருவேளை ஆக்சன் ப்ளான் இனிமேல் தான் ரெடியாகும் போல. அதுபற்றி கவலை இல்லை. குறைந்தபட்சம், நான் என் தரப்பில் என்னுடைய முந்தைய பதிவை நீக்கிவிட்டேன்.

தன்னுடைய பதிவு இன்னொருவரை மனதளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் அப்படியே வைத்திருக்க நான் ஒன்றும் புனைவெழுத்தாளர்கள் அளவுக்கு அநீதியானவன் இல்லை. நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இதனை நான் நம்புகிறேன்.

Tuesday, August 31, 2010

வாழ்க்கை வட்டம்டா !!!



ரஜினிபட டயலாக் மாதிரி இருந்தாலும் இது தான் உண்மை. மேல இருக்க வீடியோவ பார்த்தீங்களா ? இந்த பத்துல சிம்பாக்கிட்ட (அதான் குட்டி லயன்) பெரிய சிங்கம் சொல்லும். நாம செத்தா புல்லாவறோம். புல்ல திங்கற மான நாம திங்கறோம். அப்படீங்கும்.பதிவுலகுக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டாலும் நம்ம கடமைய செய்யறதுக்கு வந்திருக்கேன். ஒவ்வொன்னா பார்ப்போமா ? வால்ஸ். லேட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜோதிஜி. திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்த அருமையான பதிவு வினவு தளத்தில். ஹேட்ஸ் ஆப். இணையத்தில் 'புரச்சி' செய்வதாக ட்விட்டரு, பஸ்ஸு, ரயிலு என்று குதித்துக்கொண்டு, காமெடி செய்துகொண்டு இருப்பதை பார்த்தேன். சிப்பு வந்துது சிப்பு. ஒரு பக்கம் பார்ப்பணீயத்தை கடுமையாக எதிப்பது. ஆனால் அதே பார்ப்பணீயத்துடன் நேரம் வரும்போதெல்லாம் கூட்டணி சேர்ந்துகொள்வது. நல்ல ஸ்டேட்டர்ஜி. பிழைப்புவாதம் என்றும் சொல்லலாம்.

ஒரு படத்தில் குட்டி சுவத்தில் உட்கார்ந்திருக்கும் இளைஞர்கள் 'பூமி மாதா சிரிக்கப்போறா, எல்லாரும் உள்ள போவப்போறீங்க' என்று சொல்லும் காமெடி பீஸை தூண்டி விட்டுவிட்டு, விழிப்பார்கள். ஒரு தகரத்தட்டை பார்த்தால் அந்த நியாபகம் தான் வருகிறது. உண்மையில் ஒரு விஷயத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, அல்லது எதிர்ப்பு தெரிவிப்பது, எல்லாவற்றுக்கும் ஒரு சார்பு நிலை நியாயம் இருக்கும். நாம் ஒரு சார்பு. அவன் ஒரு சார்பு. இவர்கள் க்ராஸ் ஆகாமல் இருப்பது நல்லது. இந்த சார்பு நிலை தாண்டி நட்பு பாராட்டலாமா, தேவையற்றதை ஒதுக்கி நல்லதை கொடுக்கலாமா என்று ஒரு மனக்குழப்பம். ஆனால் இந்த கூடா நட்பு தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. இவர்களுடன் வைக்கும் தொடர்பு நாளை மன உளைச்சலைத்தான் கொடுக்கும்போல இருக்கிறது. இத்தனை கள்ளத்தனத்துடன் இருக்கும் இவர்கள் நாளை பாருக்கு அழைத்து சென்று மூக்கில் / முதுகில் குத்தமாட்டார்கள் என்பது என்ன உறுதி ?

ஹமாம் விளம்பரத்தில் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம், இப்போது வருவதில்லை. சோப்பு யாரு மாத்தினா என்பதை போல அந்த விளம்பரத்தை யாரு மாத்தியிருந்தாலும் அவர்களுக்கு நன்றீஸ்.

நேத்து ஒரு உயர்தர கடையில் கிறிஸ்டீன் சிஸ்டர்ஸு இருவர் ஷாப்பிங் வந்தார்கள். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகொண்டு போயிருக்கலாம் தான். இருந்தாலும் அன்னை தெரசா கத்த்துக்கொடுத்த ஏழ்மை, எளிமை ஆகியவற்றை பின்பற்றுகிறார்களா என்று பார்க்க அவர்களை நான் பின்பற்றினேன் (கடையில்தான்). அவர்கள் பில்:

- பியாமா சோப்
- மற்ற உயர்தர பேர்னஸ் க்ரீம்ஸு
- லேய்ஸ் சிப்ஸு
- ஆப்பிள் ட்ரிக்ஸ், இம்போர்ட்டட் ஐஸ் க்ரீம்ஸ்

எவன் அப்பன் ஊட்டு காசு ? மேலும் இங்கே பெங்களூரில் ஒரு கிறிஸ்தவ சிஸ்டர் குழுமத்தின் நிலத்தை 25 கோடிக்கு ஐடி கம்பேனிக்கு விற்பனை செய்து நிதி திரட்டி. என்னத்தை சொல்ல. இவங்களை கேட்டா நாங்க சிறுபான்மை அது இது என்று அடித்து விடுவார்கள். லெட்ஸ் ஸீ.

ரொம்பநாளாக ஆல் இன் ஆல் அழகு ராஜா கடைக்காக ஒரு இடுகையை தயார் செய்ய முயன்றுவருகிறேன். நேரம் தான் சிக்கமாட்டேங்குது.

அடுத்த எரிச்சல், ஜோடி நம்பர் ஒன் ஜூனியர் என்று ஒரு ப்ரொக்ராம். அதில் சின்ன குழந்தைகளை நேத்து ராத்திரி யம்மா ரேஞ்சுக்கு ஆடுவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. செக்ஸ் கல்விக்கு ஆதரவு கொடுக்கும் என்னால் குறைந்த வயதுள்ள குழந்தைகள் ஜோடி பாட்டுக்கு டேன்ஸ் ஆடுவதும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டு ஆவது அதை பெற்றவர்களே கை தட்டி ரசிப்பதும் ! யாராவது இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளரின் போன் நம்பர் கொடுக்கமுடியுமா ? நித்தி மேட்டரிலேயே டிவிக்கு தணிக்கை தேவை என்ற கருத்தையும் விவாதிக்கவேண்டிய நிலை இருந்தது. ஆனால் மன்னரின் (கலைஞர்) உறவினர்களின் தொலைக்காட்சி பெட்டியிலேயே இவ்வாறான நிகழ்வுகளின் ஒளிப்படத்தை காட்டியதால் நம்மால் எதுவும் செய்ய இயலவில்லை. பட்டத்து இளவளின் (ஸ்டாலின்) ஆட்சியிலாவது நாம் இந்த கோரிக்கையை எழுப்பி பார்ப்போம்.

திருச்சியில் அம்மாவுக்கு கூடிய கூட்டம் அவரை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என்று குஸ்பு சொல்லியிருக்கிறார். கழகத்தில் இணைந்தவுடன் குஸ்புவின் கன்னி (?) ஸ்டேட்மெண்ட் இது. வரும் காலத்தில் குஸ்பு மத்திய கல்வி மந்திரியாகி, தமிழகத்தின், இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி
அமைப்பார். மச்சான் புகழ் நமீதா, ஐநா சபையில் பேசுவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் சாதாரண தமிழன் நான். நீங்க சொல்லுங்கம்மா கேட்டுக்கலாம்.

அமெரிக்க பதிவர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. விரைவில் இந்த ரெட்ப்ளேம் உங்கள் ஏரியாவில் லந்தை கூட்ட வருகிறது. ! அப்புறம் என்ன ? அமெரிக்காவில் இருந்து தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பமாகும். (சும்மா ஜோக்குபா. குஜமுகவில் தான் இணைவேன் முதல்ல).

Wednesday, August 18, 2010

புதிய அச்சிதழுக்கு : பல்வகை பணி வாய்ப்புகள் - ஜி கவுதம்



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..
புதிதாக வெளிவர இருக்கும் தமிழ் அச்சு மற்றும் வீடியோ பத்திரிகைகளில் பணியாற்ற 
திறமையும், தகுதியும் உள்ளவர்களை வரவேற்கிறேன்!

வருத்தப்பட்டு பணி சுமக்கும் பழைய பத்திரிகையாளர்களும் சரி, 
கற்றுக்கொண்டு சாதிக்க நினைக்கும் புதிய பத்திரிகையாளர்களும் சரி, 
பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுக்க நினைக்கும்ஆர்வமுள்ள புதியவர்களும் சரி.. 
தயங்காமல் உங்கள் பயோடேட்டாவை (புகைப்படத்துடன்) அனுப்பி வையுங்கள். 
நீங்கள் கொடுக்கும் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளபப்டும் என்ற உத்தரவாதம் தருகிறேன்.

புதிய குழுமம்.. 
புத்தம்புது பத்திரிகைகள்.. 
புறப்படப்போகும் புதிய கூட்டணிக்கு நம்பிக்’கை’ கொடுங்கள்! 

தேவை:
(முழுநேர - பகுதி நேர - ஃப்ரீலான்ஸ் பணிக்கு, உலகின் எந்த மூலையில் இருந்தும் பணியாற்றலாம்)
செய்தியாளர்கள் - Reporters,
உதவி ஆசிரியர்கள் - Sub Editors,
புகைப்படக்காரர்கள் - Photographers,
ஒளிப்பதிவாளர்கள் - Videographers,
வெப் டிசைனர்ஸ் - Web Designers,
வெப் ப்ரோகிராமர்ஸ் - Web Progarammers,
கிராபிக்ஸ் டிசைனர்ஸ் - Graphics Designers,
வீடியோ எடிட்டர்ஸ் - Video Editors,
ஒலிப்பதிவாளர்கள் - Sound Engineers,
காப்பி ரைட்டர்ஸ் - Copy Writers (Tamil-English-Tamil),
டி.டி.பி. ஆபரேட்டர்ஸ் - DTP Operators,
விளம்பர பிரதிநிதிகள் - Advt Representatives,
நூலகர் - Librarian, 
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் - Anchors,
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் - Programme Producers,
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் - Production Co Ordinator,
அலுவலக உதவியாளர்கள் - Office Assistants,

பயோடேட்டா அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editorgowtham@gmail.com

Wednesday, August 11, 2010

கிறிஸ்தவ மிஷநரிகளின் நில ஆக்ரமிப்புகள்




இதுபற்றி கடந்த சில வாரங்களாகவே சிந்தித்துகொண்டிருந்தேன். இரண்டு செய்திகள் இது சம்பந்தமாக இன்றைக்கு கண்ணில் பட்டது. கோவி கண்ணன் பதிவில் வேளாங்கண்ணி தேவாலயத்தின் நில ஆக்ரமிப்பு பற்றியும், தமிழ் ஹிந்துவில் வெளிவந்த நாகை மாரியம்மன் கோவில் போராட்டம் பற்றியும் அறிந்தேன்.

மேட்டருக்கு போறதுக்கு முன்னால ஒரு சின்ன சம்பவம் பாருங்க.

எங்கக்கா எங்க வீட்ல ரொட்டி சுட்டாங்க. பக்கத்து தெருவில் இருந்து ஒரு சொர்ணாக்கா வந்து, ரொட்டிய புடுங்கிட்டா. எங்கக்கா அவகிட்ட போராடி அடிபட்டு உதைபட்டு அவளை வீட்டை விட்டு வெளியில அனுப்பினாங்க. அதில பாருங்க. அவ வெளியில போகும்போது, அவ கையோட கொண்டுவந்த ஒரு பெருச்சாளிய வீட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டா.

எங்கக்கா வீடு வெறும் டபுள் பெட்ரூம், அதில் ஒரு ரூம்ல அந்த பெருச்சாளி உக்காந்திருச்சு.பெருச்சாளிக்கிட்ட போயி ரெண்டு நாளைக்கப்புறம் கெட் அவுட் அப்படீன்னா, நான் காலங்காலமா இந்த ரூம்ல இருக்கேன், இதுல உனக்கென்ன வேலைன்னு எங்கக்காவை கெட் அவுட்டுங்குது.

எங்கக்கா வீட்டுக்காரர் ஒரு சோம்பேறி. எங்கக்கா பல முறை கம்ப்ளைண்டு செய்தும், தடியை எடுத்து பெருச்சாளிய அடிக்கமாட்டேங்குறார். பெருச்சாளியால எதாவது உபயோகம் இருக்கும்டி, சும்மா இரு அப்படீங்குறாராம். பெருச்சாளிக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீங்களா ? நல்லா பெட்ல வாலை நீட்டி படுத்துக்கிட்டு, மோட்டு(?)வளையை பாக்குது.

சரி நான் இனி மேட்டருக்கு வரேன். சமீபமா அரசு துறையில் இருந்து கிடைத்த சில தகவல்கள் கொஞ்சம் ஷாக்கிங் ரகம்.

தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறித்தவ, சி.எஸ்.ஐ, பெந்தகோஸ்து கூட்டத்தின் மொத்த அசையா சொத்து (நிலம்) ஒரு லட்சம் ஏக்கர். இவை மூன்று வகைகளில் அவர்களால் அனுபவிக்கப்படுகிறது.

- வெள்ளைக்காரன் நாட்டை விட்டு போகும்போது இந்திய அரசுடன் போட்ட ஒப்பந்தம் வகையில்.
- பாரினில் இருந்து வந்த நிதி ஆதாரங்கள், மற்றும் இங்கே உண்டியல் குலுக்கியது, பணக்காரர்களிடம் தானப்பத்திரமாக பெற்றது எக்ஸட்ரா
- வேறு சில சொல்லமுடியாத ரீசன் பேரில் மிஷிநரிக்கு வந்த அசையா சொத்துக்கள் வகை.

முதலில் சொன்ன பெருச்சாளி கதை இப்போ புரிந்ததா ? நமது நாட்டு நிலங்களை, எவனோ ஒருவன் எவன் எவனுக்கோ அனுபவ பாத்யதையாக எழுதி வைத்துவிட்டு போக எப்படி அய்யா முடிந்திருக்கிறது ?

அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை சிறுபான்மை ஓட்டுக்கு குறிவைக்கும் ஆட்சியாளர்களும் இதனை கண்டும் காணாமல் இருப்பது, அவ்வப்போது பெறும் தேர்தல் நிதிக்காகவா ?

இவர்களின் ஹை க்ளாஸ் லைப் ஸ்டை பற்றி சொல்லவேண்டும். 2000 ஆம் ஆண்டு ஒருமுறை புதுவையின் பேமஸ் கண்ணியாஸ்திரி ஒருவரின் ட்ரைவர் சொன்னான், க்வாலிஸ் வண்டி பூட்ட 12 லட்சம் ஆனது என்று. ஏம்பா எத்தனை அட்டு அட்டாச்மெண்ட் போட்டாலும் 8 லட்சத்தை தாண்டாதே அப்படி என்னப்பா வண்டியில் வேலை செய்தீர்கள் என்றால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பம்பர் 4 லட்சமாம்.

பார்த்தீர்களா கண்ணிகாஸ்திரிகளின் ஏழை வாழ்க்கை லட்சனத்தை ? கேரள கன்னிகாஸ்திரி புத்தகம் எழுதும் முன்பே பல மேட்டர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நாட்டின் மிகச்சிறந்த ஆண்மைக்குறைவு டாக்டர், கம்பூட்டர் வேண்டும் என்று அப்போது நான் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலை செய்த கம்பேனியை அழைத்தார். நான் அந்த காலை அட்டண்ட் செய்து, அவருக்கு கம்பூட்டர் பூட்டி கொடுத்தேன். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், அவரிடம் சிகிச்சைக்காக பாதிரிகளும் கன்னிகாஸ்திரிகளும் தான் கும்பல் கும்பலாக வருகிறார்களாம் !! இது எப்படி இருக்கு ?

பதிவில் மையமாக பேசும் விஷயத்தை விட்டு விலகிப்போகிறோம் என்று நினைக்கிறேன். நான் சொல்லவருவது என்னவென்றால், இது போன்ற மிஷநரிகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய நிலங்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை உட்பட மலை வாசஸ்தலங்களில் பழங்குடியினரை மிரட்டி கொள்ளையடித்த, எழுதி வாங்கிய நிலங்கள், பஞ்சமி நிலங்கள், அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, மார்க்கெட் ரேட் என்னவோ அதை கட்டும்படி சொல்லவேண்டும். இல்லை என்றால் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கவேண்டும்.

பஞ்சமி நிலம் என்றால் என்ன தெரியுமா ? அதாவது, ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினருக்காக அரசால் ஒதுக்கப்பட்ட நிலங்கள் என்று பொருள். அந்த பஞ்சமி நிலங்களை மற்றைய சாதியாருக்கு விற்பது சட்டப்படி கூடாது. அப்படியான நிலங்களை கூட சர்ச், பங்கு கோவில் ஆகியவற்றின் பெயரில் பல இடங்களில் ஆட்டையை போட்டுவிட்டதாக அறிகிறேன். அதையும் சரியாக கணக்கீடு செய்தல் வேண்டும்.

என்னப்பா, எவ்வித சாதி / மத / அரசியல் சார்பில்லாமல் சிவனே (?) என்று இருக்கும் கிறித்தவ பிரம்பச்சரிய பாதிரியார்களை அவர்களின் நிலங்களை போய் டார்கெட் செய்கிறாயே என்கிறீர்களா ? அடப்போங்க சார்.

- ஒவ்வொரு தேர்தலிலும் சர்ச்சுகளில் / பங்கு கோவில்களில் அங்கே திரட்சியாக திரண்டிருக்கும் ஜீசஸ் பாலோயிங் மந்தைகளிடம் (?) தி.மு.கவுக்கு போடு, அ.தி.மு.கவுக்கு போடு என்று ப்ரீச்சப்படுகிறது. வன்னியர் மாவட்டத்து சர்ச்சு ஓட்டுகள் அன்னியருக்கில்லை. பாட்டாளிகளுக்குத்தான்.

- பாரின் மது, க்யூப (கூப ?) சுருட்டுகள், செட்டப்புகள், ஜில்பான்ஸுகள், என்று ஜலபுல ஜங்காக பாதிரியார்கள் இருக்கிறார்கள். சினிமாவில் காட்டும் முழு வெள்ளை உடை அவர்கள் எப்போதாவது தான் அணிவது. ஜீன்ஸ் ட்ஷ்ர்ட்டும் அணிகிறார்கள்.

- வன்னியர், தேவர், முதலியார், நாடார் என சாதி பாகுபாடு பாதிரியார்களிடம், பங்கு கோவில்களில், அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளின் ஆசிரியர் நியமனம் வரை தலை விரித்தாடுகிறது.

மறுபடி சொல்கிறேன். வெள்ளைக்காரன் பார்த்து பார்த்து சிட்டிக்கு நடுவில் கொடுத்த நிலங்களில் அப்பார்ட்மெண்டு, கம்ர்சியல் பில்டிங், கல்யாண மண்டபம், நிறைய பீஸ் வாங்கும் பள்ளிக்கூடம் என்று கட்டிக்கொண்டு, சுகவாசிகளாக இருக்கும் கும்பலிடம் இருக்கும் ஒரு லட்சம் ஏக்கரை பிடுங்கவேண்டும்.


ஓட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த செயலை, தேர்தலுக்கு பின்னாலாவது (அரசாணை எண் உ.ஆ 392 படி இதை தேர்தலுக்கு அப்பாலிக்கா தான் செய்யமுடியும் என்று அறிகிறேன்) செய்வதன் மூலம், தமிழகம் புதுவையில் இருக்கும் லட்சக்கணக்கான பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு டாலர் 35 அளவில் விற்கப்படும் ஆண்ட்ராய்ட் லைனக்ஸ் ஐ (ஐ பார் இண்டியா) பேடை கொடுக்கமுடியும். வாக்களிப்பதன் மூலமும் இந்த பதிவை பேஸ் புக், டுட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் பகிர்வதன் மூலமும் துணை முதல் மு.க ஸ்டாலினுக்கு அனுப்புங்கள் ஓக்கே ?

தமிழ்நாட்டில் ஒரு செஞ்சோலை !!!

mail (2592×1944)



பெரியாருடன் - பெரியார் சொல்லிய கொள்கைகளுடன் வாழ்ந்துமுடித்த தோழர்களுக்கு ஒரு முதியோர் இல்லம் திண்டுக்கல்லில் அமைகிறது. அதன் படம் தான் மேலே. இது பற்றிய ஒரு சிறிய கலந்துரையாடல் கூட்டமும் ஆகஸ்டு 14 ஆம் தேதி (இந்த தேதியில் என்ன முக்கியத்துவம் ? யோசியுங்களேன்) நடக்கிறது. முடிந்தவர்கள் கலந்துகொள்ளவும். (மின்னஞ்சல் மூலம் வருகையை தெரியப்படுத்துங்கள்).


கலந்துரையாடல் கூட்டம் 14.08.10 மாலை 5 முதல் 15.08.10 பகல் 1 வரை..

கருந்திணை
1 / 810 முத்தமிழ் நகர்
அடியனூத்து-அஞ்சல், திண்டுக்கல் - 624 003 - karunthinai@gmail.com

Friday, July 30, 2010

நாராயணா இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலடா !!

விளம்பரம் : டிஸ்கவரி புக் பேலஸ்

தமிழ் புத்தகங்களின் சங்கமாக விளங்கும் DISCOVERY BOOK PALACE- இப்போது சென்னை கே கே நகரில் விரைவாக வளர்ந்துவருகிறது, இதுவரை 50 க்கும் மேற்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் விமர்சன கூட்டம் என அவ்வப்போது எழுத்தாளர்களின் மிகப்பெரிய ஒரு சந்திப்பு முனையாகவும் மாறியுள்ளது. தாங்கள் மற்றும் தங்களைப் போன்ற புத்தகவிரும்பிகளின் வரவை மேலும் எதிர்பார்க்கிறோம். அனைத்து புத்தக நிறுவனங்களின் ஒத்துழைப்பையும் இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறோம். உங்களின் வாசிக்கும் வசதிக்காக இப்போது புத்தகங்களை இணையதளத்திலும் வாங்கும் வசதியை அறிமுகம் செய்கிறோம் .


எமது இணைய விற்பனையில் புத்தகங்களை பெற http://www.discoverybookpalace.com/ என்ற தொடுப்பை க்ளிக் செய்யவும்.

முகவரி: டிஸ்கவரி புக் பேலஸ்.
எண்:6 , மஹாவீர் காம்ளக்ஸ்
முனுசாமி சாலை,
கே கே நகர் மேற்கு. சென்னை- 78
செல்- 9940 44 6650

--
தமிழ் புத்தகங்கள் அனைத்தும் இப்போது டிஸ்கவரி புக்பேலஸ்-ல் கிடைக்கிறது, தொடர்பு கொள்ளவும் 9940446650

Thursday, July 29, 2010

கார்க்கி - ஜெகநாதன் - ஆதி - லைனக்ஸ் பெங்குவின்

  அப்போது ஏழுமலை தண்ணியடிப்பதை ஒரு மாத காலம் நிறுத்தியிருந்தான்.பாலாஜியின் நண்பன் ஒருவனின் பிறந்த நாள் ட்ரீட்டில் மட்டும் அடிப்பதற்கு ஆறுவிடம் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா: ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏலகிரி உலா மிகவும் எளிமையாக, வித்தியாசமாக இருந்தது. மூவரே சென்றிருந்ததால் கூட்டாக ரசித்த மாதிரியும் இருந்தது, அதே நேரம் கும்மாளமில்லாமல் இருந்ததால் ஒருவர் இன்னொருவரின் தனிமையில் ...மேலும் வாசிக்க

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இவர்களில் என்ன ஒற்றுமை வேற்றுமை ?

லைனக்ஸ் பெங்குவின் மட்டும்தான் குளிர் கண்ணாடி போட்டு உதார் விடலை. இந்த போஸ்டில் 12 மணிக்கு மேல கும்மி அடிப்பவர்களுக்கு ஒரே ஒரு பொற்காசு வால்பையன் ஆண்(ன்)லைனில் ஆர்டர் செய்வார். அல்லது விஜய் ஆதிராஜ் புதிதாக தோன்றும் டாய்லெட் க்ளீனர் ஒரு டஜன் வழங்கப்படும். இல்லை என்றால் கார்க்கி ஆதியின் நீலகிரி பயணத்தில் நான்காவது நபராக (ட்ரைவர்) சேர்த்துக்கொள்ளப்படும். இதன் எதிர்பதிவு போடப்பட்டால் அதில் தமிழ்மணம் கார்க்கி பெயரை கூர்க்கி என்று காட்டுமாறு admin @ tamilmanam.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Friday, July 23, 2010

சவுக்கு சங்கர் கைது : அராஜக காவல்துறை



வளைத்து பிடித்து ஒரு பொய் வழக்கின் மூலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் ஒரு பத்திரிக்கையாளர், வலைப்பதிவர். அவர் சவுக்கு என்னும் வலைப்பதிவை நடத்தும் திரு சங்கர்.நானும் ஒரு பத்திரிக்கையாளன் என்று சொல்லிக்கொள்ளும் தமிழக முதல்வர் கலைஞர் ஆட்சியில் தான் இது நடந்தேறியிருக்கிறது.

இது குறித்து, பிரபல பத்திரிக்கைகளில் குப்பை கொட்டும் சக வலைப்பதிவர்களோ, பத்திரிக்கையாளர்களோ, மூச்சு விடக்காணோம். அதிகாரத்தில் இரு அல்லது அதிகார மையத்துக்கு அல்லக்கையாக இரு என்பது போன்றதொரு ஸ்டேட்டர்ஜியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

பதிவர் சவுக்கு சங்கர் செய்த குற்றம் என்ன ? அவரது சமீபத்திய பதிவில் மிக முக்கியமான இரு காவல் அதிகாரிகளை பற்றி ஆதாரங்களோடு சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதே குற்றச்சாட்டுகளை வைத்து ஒரு பொது நல வழக்காக தொடர்ந்திருப்பாராயின் இது சட்ட ரீதியாக கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்போது இந்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தமே இல்லாத, ஜாமீன் இல்லாத ஒரு பிரிவின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிகிறேன்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டு பொய் எனில் சவுக்கு சங்கர் மீது மானநஷ்ட வழக்கு தொடரலாம். அல்லது பொது மக்கள், இந்த குற்றச்சாட்டு பற்றி மேல் விவரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சொத்து விவரம் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டறியலாம். இப்படியான சட்ட ரீதியான செயல்கள் இருக்கும்போது சவுக்கு சங்கர் சம்பந்தபடாத ஒரு பொய் வழக்கின் மூலம் அவரை கைது செய்வது அநீதியாகும்.

இது குறித்து, மனசாட்சி உள்ள பத்திரிக்கையாளர்கள் கேள்விகேட்கவேண்டும். மாநில அரசுக்கும், எதிர் கட்சிக்கும், மற்ற அமைப்புகளுக்கும் இது குறித்து தகவல் அளித்து, சவுக்கு சங்கரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையுமே தவிர அதிகரிக்காது !! வலைப்பதிவர்கள் தங்களால் ஆன வகையில் இதனை பதிவு செய்யவேண்டும்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....