1. ஒரு வேட்டி
2. ஒரு சேலை
3. ஒரு கைலி
4. ஒரு நைட்டி
5. இரண்டு துண்டுகள்
6. மற்ற துணி வகைகள் நியாபகம் இல்லை
ஒவ்வொரு பேக்கேஜிலும் மொத்தம் எட்டு வகையான துணி வகைகள் இருக்கும்...இது போன்ற எண்பதாயிரம் பாக்கேஜுகள் இன்னும் இரண்டு நாளில் தயாராகிவிடும் என்று கைத்தறி துறை அமைச்சர் தெரிவித்தார்...
இவை அனைத்தும் தமிழ்மக்களுக்கு சென்று சேர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்...
ஆனா இப்பவே சொல்லிக்கிறேன்...அவங்களுடைய கையில அது கரெக்ட்டா கிடைக்கனும்...
வடக்கு இலங்கையில் குழந்தகள் கிபிர் விமானத்து குண்டு வீச்சினால் பதுங்கு குழியில் ஒளிவது போல இலங்கை அதிபர் ராஜபக்சேவும் ஒளிந்துகொள்வதாக தகவல் கிடைக்கிறது...

இவர் ஒளிந்துகொள்ளும் நேரம் வேற யாராவது அந்த துணிகளை லவட்டிக்கப்போறானுங்க...
காய்ந்துகிடக்கும் சிங்கள காடையர்கள், பிள்ளையாள் கிள்ளையான் கருணா கிருணா தூக்கிக்கினு போயிடப்போறானுங்க ( கிழக்கிலங்கைக்கும் உதவிகள் தேவைதான், ஆனால் இப்போதைய நிலையில் வடக்கு பக்கம் இருக்கும் - உள் நாட்டிலேயே அகதிகளாக வாழும் மக்களுக்குதான் உதவிகள் உடனே தேவை, உங்களுக்கும் அனுப்புறோம் கொஞ்சம் பொறுங்க ஓகே...)
எவனாவது இந்த உதவிகளை எல்லாம் லவட்டனும்னு நெனைச்சீங்க, மவனே கைய கால முறிச்சுடுவேன்...!!!

இது வரை ஏழரை கோடி நிதி சேர்ந்திருக்கு என்று படித்தேன்...முதல்வர் அவர்களே...பீகார் வெள்ள நிவாரண நிதிக்கு 10 கோடி முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கினீங்களே...
ஆனா தமிழர்கள் நிதிக்கு மட்டும் நாங்க பாக்கெட்டுல் இருந்து தரவேண்டி இருக்கே ? நீங்க முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு நூறு கோடி ஓதுங்குங்க அய்யா...
இதெல்லாமா நான் சொல்லனும் உங்களுக்கு ? :)))