Tuesday, December 27, 2011

ஆனந்த தொல்லை

பால்வீதி நாயகன், பச்சைக்குழந்தை முக அழகன், சுட்டும் விழியில் சூரியன், பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை ட்ரைலர் அல்லது முன்னோட்டம் இங்கே காட்டப்படும்.



முழுப்படத்தையும் பார்த்து செத்து தொலைபவர்களுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

Monday, November 21, 2011

SMS செத்துபோச்சுங்க (Nimbuzz)

எஸ்.எம்.எஸ் பரபரவென அனுப்புற ஆளா நீங்க ? எஸ்.எம்.எஸ் காஸ்ட் 1 பைசாவா இருந்தா பரவால்ல. ஆனா நேஷனல் எஸ்.எம்.எஸ், இண்டர் நேஷனல் எஸ்.எம்.எஸ் (5 ரூபா வரைக்கும் இதுக்கு நான் செலவு பண்ணியிருக்கேன்.). ஆகியவற்றை அனுப்பனும்னா கொஞ்சம் செலவு பிடிக்குமில்லையா ?



ஓக்கே இன்னொரு கொஸ்டின். ஒரு மாசம் முழுமையும் உங்களோட எஸ்.எம்.எஸ் செலவு என்ன ? 100 ரூபாய் இருக்குமா ? அப்படி இருந்தா மேல படிங்க.

யாருக்கு வேண்டும்னாலும் இலவசமா ஆயிரக்கணக்கா அனுப்பிக்கலாம் என்று நாங்க கெளம்பி வந்திருக்கோம்ல ? (இந்தியாவில் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்ஸுக்கு மேல அனுப்ப முடியாதுன்னு ஒரு தடை இருக்குங்க, அது கம்பெனிகள் அன்லிமிட்டெட் எஸ்.எம்.எஸ் ஸை மிஸ் யூஸ் பண்ணதால வந்தது).

எப்படி ?

உங்க மொபைல்ல (ப்ரி பெய்ட் அல்லது போஸ்ட் பெய்ட்), மாத இண்டர்நெட் பேக்கேஜ் போட்டுக்கோங்க. 99 ரூபாய் மேக்ஸிமம் ஆகும்னு நினைக்கிறேன்.

அப்புறம் நிம்பஸ் அப்ளிக்கேஷன டவுன்லோட் பண்ணி போடுக்கோங்க.

நிம்பஸ் எங்க கிடைக்கும் ?

http:// get.nimbuzz.com என்ற முகவரிக்கு உங்க மொபைல்ல இருந்து போகலாம். (மொபைல்ல இண்டர்நெட் ஆக்டிவேட் செஞ்ச பிறகு)

http://market.android.com (அண்ட்ராய்ட் மொபைல் ஆக இருந்தால்)

itunes (ஐபோனுக்கு)

http://store.ovi.com நோக்கியா மொபைல் ஆக இருந்தால். ஓவி ஸ்டோர் அப்ளிக்கேஷனும் போடலாம்.

ப்ளாக்பெரியும் அப்வேர்ட் வச்சிருக்கு. அங்கேயும் போகலாம்.

இப்ப டவுன்லோட் செய்த பிறகு, உங்களோட ஜிமெயில், யாஹூ, பேஸ்புக், எம்.எஸ்.என் ஆகிய அனைத்து மெசஞ்சரையும் கூட இணைத்துக்கொள்ளலாம்.

உங்க மொபைல் நம்பரை வெரிபை செய்யறதுக்கு கேக்கும், அதையும் கரெக்ட்டா கொடுத்துருங்க.

உங்களோட போன் புக்ல இருக்க நம்பர்களில் இருப்பவர்கள் யாராவது நிம்பஸ் உகயோகப்படுத்தினால் அதையும் நிம்பஸ் கண்டுபிடித்து உங்கள் நட்பு லிஸ்டில் இணைத்துக்கொள்ளும்.

இப்ப உங்களோட நட்பு / தோழர் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு இலவசமாக மெசேஜ் அனுப்பலாம்.

அவர்கள் ஜிடாக்கில் அல்லது யாஹூவில் ஆன்லைனில் இருந்தால் கால் பட்டனை அழுத்தி 24 மணி நேரம் கால் போட்டே பேசலாம்.

அவர்கள் ஆன்லைனில் இல்லை என்றாலும் நிம்பஸ் பிங் என்ற வசதியை உபயோகப்படுத்தி அவர்களை ஆன்லைனில் வருமாறு சொல்லலாம். (நிம்பஸ் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும்.)

கிரிக்கெட் ஸ்கோர், அஸ்ட்ராலஜி, ஜோக்ஸ் என்று எல்லாவற்றுக்கும் அங்கே அப்டேட்ஸ் வந்துகொண்டே இருக்கும்.

டைரக்டாக ட்விட்டருக்கும் அப்டேட் செய்யலாம், பேஸ் புக் சாட்டில் இருப்பவர்களுடனும் பேசலாம்.

நிம்பஸ் மொபைலுக்கு மட்டும் இல்லாமல் PC க்கும் MAC க்கும் கூட இருக்கிறது. குறைந்த வசதியுள்ள மொபைல்கள், ஜாவா மொபைல்கள் கூட நிம்பஸை உபயோகப்படுத்தலாம்.


நிம்பஸ் தமிழ் பாண்டை டிஸ்ப்ளே செய்கிறது, அதனால் உங்கள் நன்பர்கள் தமிழில் உங்களுடன் உரையாடினால் / குறுஞ்செய்தி அனுப்பினால், அது தமிழிலேயே உங்களுக்கு தெரியும்....

இம்புட்டு வசதியை அள்ளித்தரும் நிம்பஸ்ஸை உபயோகப்படுத்திப்பாருங்க.

எஸ்.எம்.எஸ் என்று காசு செலவு செய்வதை மொத்தமாக நிறுத்திடுவீங்க...


Tuesday, October 18, 2011

பூந்தியும் புளியோதரையும் உங்கள் மீது நிலவுவதாக...


அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகிக்கு, எல்லாரும் உங்களை திட்டுகிறார்கள். நான் இந்த கூகிள் பஸ் பக்கம் வந்து கொஞ்ச நாள் ஆவதால் தமிழ்மணத்தில் என்ன நடக்குது என்று தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் என்ன செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்று நினைப்பதால் உங்கள் மேல் பூந்தியும் புளியோதரையும் உண்டாவதாக என்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். 

Friday, June 24, 2011

லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி

எழுத்தாளர் பாமாவின் சிறுகதை நாடக வடிவில்..

நெறியாள்கை :ஸ்ரீஜித் சுந்தரம்

சாதியின் பேராலும் வர்க்கத்தின் பேராலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்ப்புக்குரலாய்..வருகிறோம்.
அனைவரும் வருக!

இடம் :
ஸ்பெசஸ், 1 , எலியட்ஸ் கடற்கரை சாலை பெசன்ட் நகர், சென்னை

நாள் : 25, 26 ஜூன் இரண்டு நாட்களும் மாலை 6 மணி...

அரங்கில்:

அ. அமுதா
ஏஞ்சல் கிளாடி
பிரம்மா
ஜீவா ரகுநாத்
கவின் மலர்
லிவிங் ஸ்மைல் வித்யா
நளினி ஜமீலா
பூங்குழலி
சக்தி சரவணன்
செந்தில் குமார்
சாரதி கிருஷ்ணன்
செந்தில் குமார்
சௌமியா
சுரேந்தர்
தமிழ் அரசன்
தாயம்மா ரம்யா
எஸ்.உஷா

பாடல்கள் : இன்குலாப்

பின்னணி இசை : சித்திரை சேனன்

இசை அமைப்பு : சாரதி கிருஷ்ணன், கவின் மலர்

மேடை பொருட்கள்:
பரணிதரன்
கமலஹாசன்
சோலைராஜ்
ஆனந்த குமார்
ராம்குமார்

ஒளியமைப்பு : விக்டர், அஸ்வினி காசி
உடைகள் : அ.மங்கை, உதவி : செந்தில் குமார்

தயாரிப்பு மேலாண்மை & விளம்பரங்கள் வடிவமைப்பு : சுரேந்தர்

தயாரிப்பில் உதவி : செந்தில் குமார், சோமசுந்தரம்

நெறியாள்கை : ஸ்ரீஜித் சுந்தரம்

உதவி நெறியாள்கை : அற்புதன் விஜய்

பின் அரங்கில் :
அமலா மோகன்
பானு
தர்ஷினி
தினேஷ் குமார்
ஜெனிஃபர் மார்ஷல்
பிரவீன் குமார்
ரூபன் பால்
ஸ்ரீராம்
வைஷ்ணவி
வின்சென்ட் பால்

நன்றி:
அ.மங்கை
சதானந்த் மேனன் (ஸ்பேசஸ்)
பேராசிரியர்.சரஸ்வதி
கொளத்தூர் மணி
பழனிச்சாமி
ஜீவா ரகுநாத்
உமா சத்தியநாரயணா
பிரளயன்
திருமுருகன்
சுதா ஸ்ரீதர்
சிவா
சங்கரி & அனுசுயா சுந்தரம்

”தூரிகையில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி’’ - லிவிங் ஸ்மைல் வித்யாவின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது

Sunday, May 29, 2011

UAE தமிழ் சங்கத்தின் குறும்பட போட்டி


UAE Tamil Sangam's Short Film Competition

Please don't miss the great opportunity of participation in this competition.
Last Date for Registration 1st June 2011, 9PM.

Thank you very much for all those who have already registered for this.

1st week of June registered participants will be called for discussion. Time & Venue will be SMSed only to those who register.
Registration is compulsory. Online Registration: http://www.uaetamilsangam.com/utsshortmovies.asp

Dear Directors you have to choose your Teams Talented members for Acting, Dancing, Singing, Editing, Music, Script writing... from UAE Tamil Sangam only.
Any one can participate but the Participants should be a Member of UAE Tamil Sangam
Become Member : http://www.uaetamilsangam.com/becomemember.asp

The Best Movie, Director, Actor, Actress, Editor, Musician, Singer will be selected by Famous Tamil Movie Directors.
Your Movie will be telecasted during one of UTS Mega Event.
If your Movie gets selected as best movie it will have a big chance of being telecasted in any Major Tamil Channel in Chennai.

Tuesday, May 03, 2011

மாலைமலரில் இருந்து காப்பியடிக்கும் தட்ஸ்தமிழ்

ஒசாமா செத்துட்டான். இது க்ளோபல் நியூசு. இந்த மேட்டரை டிவியில பாத்து அப்படியே வேற மாதிரி (இவுங்களே சண்டை நடக்கும்போது பைனாக்குலர்ல வாச்சுனமாதிரி) எழுதுவாய்ங்க. அதை கேட்டா ஏ.என்.ஐ, ராய்ட்டர்ஸு எல்லாம் ஒரே மேட்டரைத்தான் தரான் அப்படீம்பாங்க. ஆனா பாருங்க, ஒரு அட்டு நியூஸ். அதை மாலை மலரில் சனிக்கிழமை போட்டதை வரிக்கு வரி மாறாம அடிச்சிருக்கான் தட்ஸ் தமிழ். இத்தனைக்கும் தட்ஸ்தமிழ் என்பது ஒன் இண்டியா குழுமம், நல்ல வருமானம் உள்ள கொம்பேனி, இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை ?

சரக்கு இல்லையா இல்லை ஆளுவளுக்கு சம்பளம் கொடுக்க மனசு இல்லையா ? தக்காளி இந்த லொட்டை நியூசை மாலைமலர்ல வேற காப்பியடிச்சு போடனுமாக்கு ?

சனிக்கிழமை மாலை மலர்ல வந்த நியூசு : படத்தை பெரிசாக்க அதுமேல க்ளிக்கவும்


ஞாயித்து கிழமை தட்ஸ்தமிழ்ல வந்த நியூசு




இனி மாலை மலர் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் ?

பாரீஸ் கார்னர்ல இருந்து ஒரு வக்கீல் நோட்டீஸை ஒன் இண்டியா குழுமத்தின் அட்ரசுக்கு அனுப்பலாம்.

கோர்ட்டுக்கு வெளிய சமரசம் செய்ய வந்தா ஒரு அமவுண்டை பைன் போட்டு பிரச்சனைய முடிக்கலாம்.

ஏதோ நாம கூவுறத கூவிடுவோம்.

Tuesday, March 15, 2011

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம், கருத்து சொல்லுதல்




சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துச் சொல்வதோ, பிரச்சாரம் செய்வதோ சட்டப்படி குற்றமில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கருத்துரிமை இயக்கம் சார்பில் இயக்குநரும் பத்திரிகையாளருமான புகழேந்தி தங்கராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவில், "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தனர். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கமிஷனரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே விடுதலைப் புலிகள் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல.

இதுதொடர்பாக, புலிகளுக்கு ஆதரவுக் கருத்துக்களைச் சொல்லவும் தடை இல்லை. இவை அரசியல் சட்டத்துக்கு எதிரான செயல்கள் அல்ல. இதனால் கமிஷனர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த போலீஸ் அனுமதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.



நன்றி - தட்ஸ்தமிழ்..

மென்பொருள் நிறுவனம்



சென்னையை சேர்ந்த ஒரு மென்பொருள் நிறுவனம் 500+ கஸ்டமர்களோடு விற்பனைக்கு வருகிறது. PoS (Point of Sale Software Product) - கடைகள், வணிக நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். 5 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். 30 முதல் 40 லட்ச ரூபாய் எதிர்பார்க்கிறார்கள். விற்பனைக்கான காரணம், நிறுவனரின் உடல்நிலை. மெர்ஜர் / அக்யூஷன் துறையில் இருப்பவர்கள் அல்லது நிறுவனத்தை வாங்கி நடத்த விருப்பம் இருப்பவர்கள் தொடர்புகொள்க. ravi.antone@gmail.com

Friday, March 11, 2011

#tnfisherman ஆலோசனைக் கூட்டம்

நாம், கடந்த 30/01/2011 அன்று சென்னை மெரீனாவில் சந்தித்து, மீனவர்
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அன்றைய சந்திப்பில்
முடிவெடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களிலும் நமது
செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நம் இணைய நண்பர்கள்
குழுவினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களையும் அறிந்து
வந்துள்ளனர். மேலும் சில அமைப்பினரும் நம்முடன் இணைந்து இதனை
முன்னெடுப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது வரை மேற்கொண்ட செயல்கள் பற்றிய பரிசீலனைகளை (Review) மேற்கொள்வதோடு,
அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும்
கலந்துரையாடி, செயல்படும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இது
சம்பந்தமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மீனவர் சங்கப்
பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.

அதன்படி நமது அடுத்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20/03/2011 அன்று
நடைபெற உள்ளது. #tnfisherman இணையக் குழும உறுப்பினர்களும், ஆர்வலர்களும்
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

நாள்: 20/03/2011 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், மேற்கு KK நகர். (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ்
அருகில்)

savetnfishermen.org சார்பாக
கும்மி.

Wednesday, February 23, 2011

டோபா டக்திதான் புள்ளிராஜா...

கீற்று தளத்தில் தமிழச்சியின் கட்டுரை..ஒரே ஒரு சின்ன தகவல் பிழை. சோபா சக்திக்கு பயங்கர ராணுவ வைரஸ் எல்லாம் பரப்ப தெரியாது. காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதை. ஆகவே கணினியில் நல்லதொரு வைரஸ் ரிமூவர் சாப்ட்வேர் பயன்படுத்தவும்..

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன்.

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.

சில நாட்களுக்கு முன் ப்ரியா தம்பி தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதிய விவாதம் கீற்று தளத்தில் 'ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?' என்ற தலைப்பில் பிரசுரமானது. கடந்த 3 வருடங்களாக ஒரு பெண், பாலியல் தாக்குதல் குறித்து எழுதியபோது பாராமுகமாய் இருந்த இந்த சோபா சக்தி, பிரச்சினை கீற்று மூலமாக அதிகமான பேரைச் சென்றடைந்தபோது மிரண்டு போய் விளக்கம் கொடுக்கிறார். "தமிழச்சியின் விருப்பத்தின் பேரிலேயே உடல் சார்ந்த உறவாய் இருந்தது. இதைச் சொல்லுவதால் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் அவதூறாளர்களே என்னை பேச வைத்தார்கள்" என்கிறார்.

இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம்? இதையும் தாண்டி இக்கட்டுரை வெளியிடப்பட்ட உடன் சோபாவின் நண்பர்கள் ‘இது எனக்கு முன்பே தெரியும்’ என்று பின்னூட்டமிடுகிறார்கள். ஓர் அயோக்கியனுக்கு உதவியாய் குழுவாய் இணைந்து ஒரு கட்டுக்கதையின் உருவாக்கத்திற்கு இவ்வளவு ஆர்வமாய் மின்னல் வேகத்தில் விழும் கருத்துக்களுக்கு பின் எந்த அரசியலும் இல்லையா? அல்லது இவர்கள் என் படுக்கை அறைக்குள் நுழைந்து பார்த்தவர்களா?

'இதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசியதில்லை' என்று சோபா சக்தி சொல்வது உண்மையென்றால், அவரது நண்பர்கள் முன்னமே எங்களுக்குத் தெரியும் என்று சொல்வது எப்படி? பெண்களை எப்போதும் படுக்கையறைப் பொருளாக பார்க்கும் புத்தி இருப்பதால் மட்டுமே, சோபாவால் அவரது நண்பர்களிடம் இப்படி பேச முடிந்திருக்கிறது.

இந்த மாதிரி அசிங்கம் பிடித்த வேலைகளை 3 வருடங்களுக்கு முன்பு சோபா செய்தார் என்றுதான் உதை கொடுத்து அனுப்பினேன்.

சோபாவுடன் எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?

இலக்கியம், பெரியாரியம், கம்யூனிசம் என்று பொது நலன் சார்ந்து இயங்கும் நபராக ஆனந்த விகடன் இதழில் சோபா சக்தியின் பேட்டி வந்தது. 'பிரான்ஸில் பெரியாரியம் பேசும் ஆளா' என்ற மகிழ்ச்சியில் அவரைத் தொடர்பு கொண்டேன். அவரது தங்கைதான் எடுத்தார். சோபா அப்போது வீட்டில் இல்லை. மாலையில் சோபாவிடம் இருந்து போன் வந்தது. பெரியாரின் கருத்துக்களை பேசுவதற்கே ஆளில்லாமல் இருந்த எனக்கு, பெரியார் குறித்தும், பெண்விடுதலை குறித்தும் சோபா பேசியது உற்சாகமளித்தது. ஏற்கனவே பழகியவரிடம் பேசுவது போல் அவரது பேச்சு பகடி கலந்து இருந்தது. அரைமணி நேரம் பேசியிருப்போம்.

ஒரு வாரம் கழித்து சோபாவே மறுபடியும் பேசினார். 'அன்றைக்கு அவ்வளவு நேரம் பேசினீர்கள். அதோடு மறந்து விட்டுட்டீங்களா?' என்றார். என்னை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். ஒரு பெரியாரிஸ்ட் மற்றும் ஈழப் போராளியாக இருந்தவரைச் சந்திக்கும் ஆவல் எனக்கும் இருந்ததால் வீட்டிற்கு வரச் சொன்னேன்.

சோபா சக்தி பிரியாவிற்கு அளித்த பதிலில், அவரது பொய்க்கு வலு சேர்க்க உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதியிருக்கிறார். எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். சிறுவயது முதல் என்னை நன்கு அறிந்த ஒரு குடும்ப நண்பர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். சோபா எனது ஊருக்கு வந்தபோது, ரயில்வே ஸ்டேஷன் சென்று அழைத்து வந்ததும் என் கணவர்தான்.

இதையெல்லாம் சோபா ஏன் சொல்லவில்லை? வீட்டிற்கு அழைத்தவளை, படுக்கையறைக்கு அழைத்ததுபோல் ஏன் பேச வேண்டும்? அப்போதுதானே அவர் சொல்லும் 'மூன்றாவது சந்திப்பு உறவுக்கு' வலு சேர்க்க முடியும்!!

நான் பிரான்சில் பல ஆண்டுகள் வசித்திருந்தாலும் பொதுவெளியில் தமிழ் மக்களுடன் எனக்குத் தொடர்பே இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்களைத் தவிர பொதுவாழ்க்கையில் நான் சந்தித்த முதல் நபர் சோபா சக்திதான்.

என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது. அரை மணி நேரம்தான் அந்த சந்திப்பு நீடித்தது. பின்னர் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் பெரியார், பெண்விடுதலை, சாதியொழிப்பு பற்றியே பேச்சு இருக்கும்.

இரண்டாவது முறை எனது ஊருக்கு வந்தபோது, ஒரு ரெஸ்டாரெண்டில் சந்தித்தோம். நான் குழந்தைகளுடன் சென்றிருந்தேன். 'ஏன் குழந்தைகளை அழைத்து வந்தீர்கள்' என்று கேட்டார் சோபா. அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. 'அவர்களையும் வெளியே கூட்டி வந்த மாதிரி இருக்குமல்லவா?' என்றேன். 'எப்போதும் குடும்பத்தை சுமந்து கொண்டு இருக்காதீர்கள்' என்று பகடி செய்தார்.

சோபா சொன்ன பொய்களில் ஒன்று எனது வலைப்பக்கத்தை அவர்தான் ஆரம்பித்துக் கொடுத்தார் என்பது. உண்மை என்னவென்றால், நான் ஏற்கனவே வலைப்பக்கம் வைத்திருந்தேன். பெரியாரது கட்டுரைகளை தட்டச்சு செய்து இணையத்தில் ஏற்றும் வேலையைச் செய்துவந்தேன். தட்டச்சு செய்வது, வலையேற்றுவது தவிர இணையம் தொடர்பான தொழில்நுட்பங்கள் எனக்குத் தெரியாது. இரண்டாவது சந்திப்பின்போது சோபா, எனது வலைப்பக்கத்தின் வடிவமைப்பு நன்றாக இல்லை, அதை மாற்றித் தருவதாக சொன்னார். நானும் சரியென்றேன். அதன் விபரீதமும் அப்போது எனக்குப் புரியவில்லை. 'நான் தனியாளாக டைப் செய்து பெரியார் கட்டுரைகளைப் போட்டு வருகிறேன், பெரிய அளவில் வாசிக்கப்படுவதில்லை' என்று சொன்னபோது, சோபா சக்தி 'தமிழ்மணம் என்ற ஒரு திரட்டி இருக்கிறது. அதில் உங்கள் வலைப்பக்கத்தை இணைக்கலாம்' என்று சொன்னார். அதுபோல் இணைத்தும் கொடுத்தார்.

‘பெரியாரின் பார்வையில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் அப்போது ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தேன். அதை தொலைபேசியில் சோபாவிடம் சொன்னபோது, அந்த எழுத்துப்பிரதியைப் பார்க்க ஆர்வமாக இருப்பதாகச் சொன்னார். ‘வேறொரு வேலையாக அந்தப் பக்கம் வர வேண்டியிருக்கிறது. அப்படி வந்தால், அந்தப் பிரதியைத் தர முடியுமா’ என்று கேட்டார். அப்படித்தான் மூன்றாவது சந்திப்பு நடைபெற்றது. அவர் என் ஊருக்கு வந்தபோது, இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த பார்க்கிங் பகுதியில் எனது காரை நிறுத்தி, பேசிக்கொண்டிருந்தோம். எழுத்துப் பிரதியைப் படித்து விட்டு, ‘பெரியாரைத் திரிக்கிறீர்கள்’ என்று சொன்னார். நான் மறுத்து, விவாதித்தேன்.

ஆனால் இப்போது 'இந்த சந்திப்பில்தான் எங்களிடையே உடல்ரீதியான உறவு ஏற்பட்டது' என்கிறார். தெரியாமல்தான் கேட்கிறேன், பகற்பொழுதில் தெருவில் காமம் கொள்ள அவர் என்ன நாய் ஜென்மமா? இல்லை என்னைப் போன்ற பெண்கள்தான் அப்படித் திரிகிறோமோ?

2007 காலகட்டங்களில் சோபா சக்தி அடிக்கடி வெளிநாடு போய்வந்து கொண்டிருப்பார். கியூபா, மலேஷியா, கொரியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி நாடுகளுக்குப் போய் வந்ததை சொல்வார்.

‘அரசு உதவிப் பணத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு வெளிநாடுகளுக்கு எப்படிப் போய்வர முடிகிறது?’ என்று கேட்டபோது, சிரித்துச் சமாளித்தார். ‘நண்பர்கள் கொடுத்து உதவுவார்கள்’என்று வேறொரு முறை சொன்னார்.

ஒரு முறை கடும்போதையில், பேச்சுவாக்கில் தோழர் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொன்னார். 'நீங்களே இங்கு காசில்லாமல் நண்பர்களிடம் வாங்குவதாகச் சொல்லும்போது, சுகுணாவுக்கு எப்படி ஒரு லட்சம் கொடுக்க முடிகிறது? உங்களிடம் ஏது இவ்வளவு பணம்? எந்நேரமும் குடிப்பதற்கு எப்படி பணம் கிடைக்கிறது' என்று கேட்டேன். வழக்கம்போல் பகடியாக, 'பணம்காய்ச்சி மரம் வைத்திருக்கிறேன்' என்று சொல்லி எனது கேள்வியைக் கடந்துபோய்விட்டார்.

எங்களுக்கு இடையே பல்வேறு முரண்கள் இருந்ததாக சோபா சொல்கிறார். ஆனால் அது என்னவென்று சொல்லதாதில்தான் அவரது கள்ளத்தனம் இருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து என்னிடம் பேசிவந்தார். 'புலிகளுக்கு ஆதரவான எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றார். நான் கடுமையாக மறுத்தேன். 'மக்கள் அங்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனிதாபிமானமற்றவை. சமரசமில்லாமல் போராடி வருவது புலிகள் தான்' என்று சொன்னேன். ஈழப்போராட்டத்திற்கு எதிராக சோபா சொல்வது எல்லாம் மிகத் தவறானவை என்று கொள்கை ரீதியாக தொடர்ந்து மறுத்து வந்தேன்.

புலி எதிர்ப்பு அரசியலை என்மீது திணிப்பதில் அவர் தீவிரமாக இருந்தார். என்னுடன் பேசிய பொழுதுகளில் பெரும்பாலான நேரத்தை அதற்குச் செலவிட்டார். ஆனால் தொடர்ந்து கடுமையான வாதங்களால் மறுப்பு தெரிவித்து வந்தேன். ஈழப் பிரச்சினையில் என்னிடம் எதிர்க்கருத்தை உருவாக்க முடியாது என்று தெரிந்த பின்பு அது குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு, பாலியல் சுதந்திரம் தொடர்பாக தனது கருத்தைத் திணிக்கத் தொடங்கினர். ஆண், பெண் மட்டுமல்லாது மூன்றாம் பாலினத்தவரோடும் தான் உறவு வைத்திருப்பது குறித்து பேசினார். நான் அறிந்தவரை மேலை நாடுகளில் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுபவர்கள் எதிர்பாலினருடன் உறவு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதை ஒரு ஒழுக்கமாகவே அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கு எதிரான செயலுக்கு பாலியல் சுதந்திரத்தை காரணமாக சோபா சொன்னார்.

'ஒரே கணவருடன் எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது. பெண்ணிற்கு பாலியல் சுதந்திரம் வேண்டும்' என்றார். 'ஆண் இரண்டு பொண்டாட்டிகள் வைத்துக்கொண்டால், பெண்ணும் இரண்டு புருஷன்கள் வைத்துக் கொள்ள வேண்டும்' என்று பெரியார் பேசியதை சோபா குறிப்பிட்டபோது, அதை மறுத்து, பெரியார் அதற்கு முன்னும் பின்னும் சொன்னதைச் சொல்லி, ‘பெரியார் எதிர்ப்பது கற்பைத் தான், பாலியல் ஒழுக்கத்தை அல்ல’ என்று பதில் கூறினேன். பல பெண்களை மணந்த கடவுளர்களையும், மன்னர்களையும் பெரியார் கடுமையாக சாடியிருப்பதை எடுத்துக்காட்டிப் பேசினேன்.

அதன்பின்பு பெரியாரை விட்டுவிட்டு, பின்நவீனத்துவம் பேசத் தொடங்கினார். கட்டற்ற பாலியல் சுதந்திரம், கூட்டுக் கலவி பற்றியெல்லாம் பேசினார்.

தமிழகத்துப் பெண்கள் சிலரை உதாரணம் காட்டினார். 'பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் முற்போக்கானவர்கள்; நாங்கள் எல்லாம் கூட்டுக்கலவி செய்வோம்; அவர்கள் போல மற்ற பெண்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் ஆணாதிக்கத்திலிருந்து பெண்கள் விடுபட முடியும்' என்றார். ஒழுக்கம் பற்றிய எனது கருத்துக்களை மாற்ற முயற்சித்தார். நான் கடுமையாக மறுத்தேன்.

'பிற்போக்கான தமிழ்ச் சமூகத்திலிருந்து மக்களை முன்னேற்ற விரும்புவர்கள், பொதுவாழ்க்கையிலும், சொந்த வாழ்க்கையிலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவர்கள் பின்னே அணி திரளுவார்கள். சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்வது மக்களுக்குத் தெரியவந்தால், அவர்கள் நம்மை மட்டுமல்ல, நமது சித்தாந்தங்களையும் சேர்த்தே நிராகரிப்பார்கள்' என்று பதில் கூறினேன். இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஒரு தொலைபேசி பேச்சில் நடந்ததல்ல. வெவ்வேறு நாட்களில் எந்தத் தொடர்ச்சியும் இல்லாமல் பேசியவை. ஆனால் பேசியதன் சாராம்சம் இதுதான்.

இவ்வளவு முரண்பாடுகளுக்கு இடையிலும் சோபாவுடன் நட்பைத் தொடர்வதற்கான காரணங்களும் இருந்தன. பெரியார் எழுத்துக்களை இணையத்தில் பரப்புவதை ஊக்கப்படுத்தினார். இணையத்தோடு மட்டும் நின்றுவிடாமல், செயல்பாடுகளில் இறங்கி, பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியபோது சோபா என்னை அதிகமாக உற்சாகப்படுத்தினார். பாரீஸில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதற்கு துண்டறிக்கை அச்சிட உதவினார். இவை அனைத்திற்கும் மேலாக சோபா ஒரு ஈழப்போராளி, பெரியாரியவாதி என்பதும், தலித் என்று சொல்லியதும் அவருடனான நட்பைத் தொடரச் செய்தது.

எனது வலைப்பக்கம் தமிழ்மணம் வாயிலாக அதிகமான பேர் வாசிக்கும் தளமாக மாறியது. வலைப்பதிவர்களிடையே தமிழச்சி பெயர் பரிச்சயமாகி இருந்தது.

ஒரு நாள் சுவிஸிலிருந்து சோபா போன் செய்தார். வழக்கம்போல் போதை. 'தமிழச்சி எனக்கு நெருங்கிய தோழி என்று சொன்னால் எனது நண்பர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் பேச முடியுமா?' என்று கேட்டார்.

ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. அதன்பின்பு இந்த மாதிரி போன் செய்வது அடிக்கடி நடந்தது. எதிர்முனையில் பலரின் சிரிப்புச் சத்தம் கேட்கும்போது இதில் ஏதோ உள்விளையாட்டு இருக்கிறது என்று தெரிந்து, போனைத் துண்டிக்கத் தொடங்கினேன்.

பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தைப் பாராட்டி கி.வீரமணி எழுதிய மின்னஞ்சல் நான் படிப்பதற்கு முன்பாகவே வேறு யாரோலோ படிக்கப்பட்டிருப்பதை அறிந்து, சோபாவுக்கு போன் செய்தேன். ஏனென்றால் எனது வலைப்பக்கத்தின் பாஸ்வேர்டும், மின்னஞ்சலின் பாஸ்வேர்டும் ஒன்றாகத்தான் இருந்தது. வலைப்பக்கத்தின் வடிவமைப்பை மாற்றுவதற்காக சோபா என்னிடம் பாஸ்வேர்ட் வாங்கியிருந்தார். 'வீரமணியின் மெயிலைப் படித்தீர்களா' என்று கோபமாகக் கேட்டபோது, 'ஏன் படிக்கக்கூடாதா? நான் உனக்கு நெருங்கிய நண்பனல்லவா! நமக்குள் என்ன ரகசியம்?' என்று கேட்டார். கடுமையாகத் திட்டி போனை வைத்தேன்.

'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று இன்னொரு நாள் சோபா பேசியபோது, கோபத்தை அடக்கிக் கொண்டு எனது ஊருக்கு வரச் சொன்னேன். இரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து சராமாரியாக அடித்தேன். போதையில் இருந்த சோபா, அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு, ஐ லவ் யூ என்றார். மேலும் கோபமடைந்து உடனே அங்கிருந்து கிளம்பி, சோபாவின் நடத்தையையும், அவரை அடித்ததையும் எனது வலைப்பக்கத்தில் பதிவாகப் போட்டேன். வலைப்பதிவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சில நாட்களில் திடீரென எனது வலைப்பதிவுகள் முழுக்க அழிந்துபோனது. இணையத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களை வைத்துப் பார்த்தபோது, பெரிய ராணுவக் கேந்திர இணையதளங்களையே முடக்கும் வைரஸ் ஒன்று எனது வலைதளத்தில் செலுத்தப்பட்டிருப்பதாக சொன்னார்கள். எனது நேரத்தையெல்லாம் உருப்படியாக செலவழித்து இணையத்தில் ஏற்றி வைத்திருந்த சுமார் 1600 பெரியார் கட்டுரைகளும் அதோடு அழிந்துபோனது. எனது கணிப்பொறியும் பயன்படுத்த முடியாத அளவிற்கு வைரஸ் தாக்கி, புது கணிப்பொறி வாங்க வேண்டி வந்தது.

இரண்டாவது முறையாக சோபா என்னிடம் அடிவாங்கியதும் நடந்தது. ஒரு நாள் இரவு 8 மணிக்கு சோபா எனக்குப் போன் செய்து, ‘தமிழச்சிக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறது என்று சொன்னால், எனது நண்பர்கள் நம்ப மறுக்கிறார்கள். அவர்களிடம் பேச முடியுமா?’ என்று கேட்டார். ‘முன்பின் தெரியாதவர்களை எல்லாம் என்னுடன் பேச வைக்க முயற்சிக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்தேன்.

அன்று இரவு 11.45 மணிக்கு மீண்டும் சோபாவிடம் இருந்து போன். நான் இருக்கும் ஊரில் இருப்பதாகவும், ஒரு நண்பனைப் பார்ப்பதற்கு காரில் அழைத்துப் போக முடியுமா என்றும் கேட்டார். நான் முடியாது என்று சொல்லிவிட்டு, காலையில் போன் செய்து விசாரித்தேன். நான் இருக்கும் ஊரில் உள்ள ஹோட்டலில் இருப்பதாகவும், உடல்நலம் சரியில்லை என்றும் சொன்னார். மனம் பொறுக்காமல் பார்க்கச் சென்றேன். அந்த காலை நேரத்திலும் போதையில் இடுப்பில் ஒரு துண்டுடன் இருந்தார். குகன் என்பவர் சோபாவைத் தொலைபேசியில் அழைக்க, சோபா அவரிடம் 'நான் தமிழச்சியுடன் ஹோட்டலில் இருக்கிறேன்' என்றார். அடுத்து வந்த 3, 4 அழைப்புகளிலும் இதேதான் சொன்னார். எனக்கு ஆத்திரமாகி ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, இடுப்பில் இருந்த துண்டை அவிழ்த்துவிட்டு, என் கைபிடித்து இழுத்தார். நான் கோபத்தில் அவரை பலமாகத் தாக்கினேன். அடித்தும், உதைத்தும் அவரைக் கீழே விழச் செய்தேன். சோபா அழத் தொடங்கிவிட்டார். அன்றோடு துண்டாகிப் போனது சோபாவுடனான எனது நட்பு. அதுதான் நான் அவரைக் கடைசியாக சந்தித்தது.

என்னை புலியெதிர்ப்பு அரசியல் பேச வைக்கவும், பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தவும் முயற்சித்து தோல்வி கண்ட சோபா, என்னை அவரது படுக்கையறைப் பெண்களுள் ஒருவராக நண்பர்களிடம் சித்தரித்து அற்ப சுகம் கண்டார். சோபாவின் நண்பர்கள் சிலர் அண்ணி என்று அழைக்க ஆரம்பித்தது, தமிழ்மணத்தில் என்னைப் பற்றி பலவாறு செய்திகள் வந்தது, இதிலெல்லாம் சோபாவின் கள்ளத்தனம் இருந்ததை பின்னர்தான் நான் உணர முடிந்தது.

சோபாவை மொத்தம் 12 முறைதான் நேரில் சந்தித்திருக்கிறேன். புதுவை எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்ஸ் வந்தபோது சந்தித்தது, பெண்கள் சந்திப்பின்போது சந்தித்தது, பகுத்தறிவு பிரசுரங்களை அச்சடிக்க உதவியபோது சந்தித்தது, பிரசுர விநியோகத்தின்போது ஒரு முறை, தலித் மாநாட்டில் இரண்டு முறை, மாசிலாமணி வீட்டிற்கு கணவருடன் சென்றபோது ஒரு முறை, கடைசியாக இரண்டு முறை அடி கொடுத்தது என மொத்தம் 12 முறைதான் சோபாவை சந்தித்திருக்கிறேன். அதில் கடைசி இரண்டு சந்திப்புகளிலும் அவர் அடி வாங்கினார். பல முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அப்படி பேசியது எல்லாம் கருத்தியல் விவாதங்கள்தான். அவ்வளவுதான் எங்களுக்குள் இருந்தது. அவரிடம் காதல் கொள்வதற்கான எந்த காரணமும், அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. வரைமுறையற்ற பாலியல் உறவு, முழுநேரமும் போதை என இருக்கும் ஒருவர், ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் ஒரு பெண்ணிடம் எந்த வகையிலேனும் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தி விட முடியுமா?

அவரது நட்பால் நான் இழந்ததுதான் அதிகம். நான் தட்டச்சு செய்திருந்த பெரியார் கட்டுரைகள் முழுக்க அழிந்து போனது. ஆபாசப்படங்களில் எனது முகத்தை ஒட்டி, நான் நிர்வாணமாக இருப்பதாகக் காட்டியது நடந்தது. எனது கேரக்டரைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டது. இவற்றையெல்லாம் கடந்த மூன்றரை ஆண்டுகளாக எனது இணையதளத்தில் கடுமையாக திட்டி எழுதி வந்திருக்கிறேன் (இணைப்புகளைப் பார்க்கவும்). அப்போதெல்லாம் கள்ள மௌனம் சாதித்து வந்தார் சோபா சக்தி.

என்னைப் பற்றி தவறாக செய்தி பரப்பியதுபோல்தான், மற்றவர்களைப் பற்றியும் என்னிடம் தவறான செய்தி சொல்லியிருந்தார். வளர்மதி, மாலதி மைத்ரி ஆகியோர்களைப் பற்றி வேறுவிதமாக திரித்துப் பேசினார். இவர்களை எல்லாம் நான் தவறாகப் விமர்சித்ததற்குக் காரணம் சோபாதான். ஆனால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சோபா சக்தி தொடர்ந்து இப்போதும் பொய்களேயே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நட்பை காமமாகப் பார்ப்பதும் பெண்ணை ஆபாசமாய்ப் பேசுவதும், உண்மை தெரியவரும்போது பாலியல் ரீதியாக தாக்குதல் தொடுக்கவும் தயாராய் இருப்பவருக்கு சமூகப் பிரச்சனை குறித்துப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

பெரியாரைப் படித்த நான் எப்போதும் மனவுளைச்சலுக்கு ஆளாக மாட்டேன். எதையும் துணிவுடன் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு. கீற்றுவில் எழுதியதாலேயே நான் இவ்வளவு நாகரிகமாக எழுதியிருக்கிறேன். சோபா மேலும் பொய்களையே பேசுவார் என்றால், தொடர்ந்து என்னிடம் நாசூக்கை எதிர்பார்க்காதீர்கள். வழக்கமான பாணியில் என்னுடைய இணையதளத்தில் பதில் சொல்ல வேண்டி வரும்.

இவ‌ரை பின்ந‌வீன‌த்துவவாதி, முற்போக்காளர், நாகரிகமானவர் என்று சொல்லும் பெண்க‌ளைப் பார்த்தால் சிரிப்பாகவும், ப‌ய‌மாக‌வும் இருக்கிறது. உங்க‌ளுக்குள் எந்தப் பிரச்சினையும் வ‌ராத‌ வ‌ரைக்கும்தான் சோபா உங்க‌ளுக்கு தேவகுமாரனாகவே காட்சியளிப்பார். முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கினால், நான் ச‌ந்தித்த யூதாஸையே நீங்க‌ளும் ச‌ந்திக்க நேரிடும்.

இணைப்புகள்:

ஆண்குறி அரசியல் வெறிக்குள் பெண்குறி! (http://tamizachi.com/index.php?page=date&date=2010-01-14)

28-வது பெண்கள் சந்திப்பு: ´புலியெதிர்ப்பு பெண் தாதாக்களின் முகத்திரை கிழிந்தது.´ (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1562)

"ரா" கூலிக் கூட்டத்தினரை அம்பலப்படுத்துவோம்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1009)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்! - தொடர்ச்சி:2 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=482)

இலக்கியவாதிகளின் "அறநெறி" கோட்பாட்டு கட்டுடைப்புகள்..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=468)

பெண்கள் சந்திப்பு : உள்ளாடை புரட்சி பெண்களுக்கும், நளினி ஜமீலாவுக்கும் உள்ள வித்தியாசங்கள்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=426)

சோபா சகதியின் அரசியல் விபச்சாரம் - தொடர்ச்சி : 3 (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=399)

பின்ஈனத்துவத்துக்கு வக்காலத்து வாங்கும் பொட்டை பொறுக்கி நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=364)

பிழையான புரிதலில் பெண்ணீயம்..! (http://tamizachi.com/index.php?page=date&date=2008-09-20&article=2013)

பாரீசில் தாதாக்கள் நடத்திய 1983-2008 நெடுங்குருதி..! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=258)

27- ஆம் வருட பெண்கள் சந்திப்பும், தீவிரவாதமும், கேள்விகளும்! - மீள் ஆய்வு (http://tamizachi.com/index.php?page=date&date=2008-08-16)

"ங்கொய்யாலா" (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=297)

27 -ஆம் வருட பெண்கள் சந்திப்பும் - "Sho" காட்டுதலும்…! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=290)

"sho" பா சக்தியின் டாவு? (http://tamizachi.com/index.php?page=date&date=2008-07-18)

விவகாரமான "மாமா" பதிவர்! (http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=945)

(சிறுகுறிப்பு: சோபா சக்தி என்னிடம் திரித்துப் பேசிய தகவல்களின் அடிப்படையிலேயே தோழர் மாலதி மைத்ரியைத் தவறாகப் புரிந்து கொண்டு சில கட்டுரைகளில் விமர்சிக்க நேர்ந்தது. அந்தப் பகுதிகளை விரைவில் நீக்குவேன். தோழர் மாலதி மைத்ரியிடம் இப்போது வெளிப்படையாக மன்னிப்பு கேட்கிறேன்)

- தமிழச்சி

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

Saturday, January 29, 2011

உலக கோப்பையை புறக்கணிப்போம்.



எம் இனம் கடலில் ரத்தம் சிந்தும்போது , களிப்புடன் பார்ப்பேனா கிரிக்கெட் ? கிரிக்கெட் உலக கோப்பையை புறக்கணிக்கிறேன். சேப்பாக்கத்தில் போட்டி நடந்தால் தெரு நாய் மட்டுமே பார்வையாளராக இருக்கட்டும்.

Tuesday, January 25, 2011

லிப்ட் - குட்டிக்கதை

மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசே நடத்தும் பந்த். செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்திரங்கிய பாவனா கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து பொறியியல் படிக்கும் மாணவி.

சாலைகளில் சிற்சில தனியார் வாகனங்களை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆட்டோ, டாக்ஸி எல்லாம் முடங்கி, துடைத்துவிட்டது போல சாலைகள்.



ஸ்கூட்டி வைத்திருக்கும் தோழியின் மொபைலோ நாட் ரீச்சபுள். செய்வதறியாது தவித்தாள்..

செந்நிற சாண்ட்ரோவில் வந்த இளைஞன் சுகுமார், அழகிய இளம்பெண் லிப்ட் கேட்கும்போது நிறுத்தாமலா போய்விடுவான் ?

ப்ளீஸ். உட்காருங்க. எங்கே போகனும் சொல்லுங்க. நான் ட்ராப் பண்ணிடுறேன். என்றான்.

தேங்ஸ். எப்படி வீட்டுக்குக்கு போறதுன்னு தெரியாம ரொம்ப பயமாயிருச்சு..

ஐந்தே நிமிடங்கள் தான்.

நான் இந்த ஜங்ஷன்ல இறங்கிக்கறேன் சார். நிறுத்துங்க. என்றாள் பாவனா.

அண்ணா நகர் போகனும்னு சொன்னீங்களே மேடம். நான் அங்கயே ட்ராப் பண்றேன்.

நோ தேங்ஸ்.

குழப்பத்துடன் புறப்பட்டது சாண்ட்ரோ !

வேறு ஒரு தோழிக்கு அலைபேசியில் அழைத்து, அவளுடைய வண்டியில் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தவுடன், கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும்போது டைரியில் இப்படி எழுதினாள்.

கார் ஏஸியில் இருந்து ம்யூஸிக் வரை அடுத்தவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காத ஒரு முட்டாளின் காரில் ஒரு கிலோமீட்டர் லிப்ட் கேட்டு வந்தேன். முற்றுப்புள்ளி.

Sunday, January 23, 2011

ப்ரீலான்ஸ் வெப் டெவலப்பர்கள் தேவை

இணைய தள வடிவமைப்பில் ஆர்வம் / அனுபவம் கொண்டவர் தேவை. வீட்டில் இருந்தே அல்லது ஓய்வு நேரத்திலும் கூட பணியாற்றலாம்.

இணைய தளத்துக்கான டேட்டாபேஸ் உருவாக்கம், ஸ்க்ரிப்டிங், வெப் சர்வர் மெயிண்டனன்ஸ் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் : ravi.antone@gmail.com

தமிழ் ஓவியாவின் காமெடி



சமீபத்தில் வலைப்பதிவர் தமிழ் ஓவியா வெளியிட்ட " கலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்" என்ற அற்புதமான விமர்சனத்தை கண்டேன்.

உண்மையிலேயே கிலி ஏற்பட்டு, அலறி துடித்தேன். இந்த கொடூரத்தை செய்ய மிஸ்டர் தமிழ் ஓவியாவுக்கு எப்படி மனசு வந்தது என்று தெரியவில்லை.

ஏழு ஓட்டுக்கள் தனக்குத்தானே போட்டுக்கொள்வது கூட பரவாயில்லை. ஆனால் இது போன்ற கொடுமைகளை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு வீரமணி அவர்கள் தமிழர்களே ப்ரட்டு சாப்பிடுங்கள் என்று சொல்லியதை கூட ஜீரணிக்கமுடியும். ஆனால் இளைஞன் திரைக்காவியத்தை எல்லாரும் பாருங்கள் என்று சொல்வது கொடுத்த காசுக்குமேல் கூவுவதை போல இல்லையா ?

பெரியார் இருந்தால் இதை கண்டிப்பாக தாங்கிகொள்ளமாட்டார். பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய நேர்மை முக்கியம் :))

காப்பியடிக்கும் தினகரன்



நீங்கள் தினகரன் மட்டும் வாங்குபவர்களாக இருந்தால் ஓக்கே. ஆனால் உங்கள் வீட்டில் தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இண்டியா ஆகிய இரண்டு பேப்பர்களும் வந்தால் நீங்கள் ஆங்கில பேப்பரான டைம்ஸ் ஆப் இண்டியாவை தைரியமாக நிறுத்தலாம்.

காரணம், தினகரனில் வேலை செய்யும் காப்பி கேட் ஒன்று,  ஆங்கில பேப்பர்களில் வருவதை அப்படியே மொழி பெயர்த்து அடித்து விடுவதற்கே முழு நேரமாக வேலை செய்கிறது.

கடந்தமாதம் உயரமான மாடல் ஒருவரைப்பற்றிய தகவல் மும்பை டைம்ஸில் பார்த்து அடுத்த நாளே தினகரனில் அதை ஒரு வரி கூட மாற்றாமல் ( மாடலின் உயரம், எடை மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள்) அவரை பற்றிய செய்திகள் ஆகியவற்றை அப்படியே எழுதினார்கள்.

அது முதல் இவர்கள் உண்மையில் காப்பியடிக்கிறார்களா என்று பார்த்துவந்தேன். இன்றைய தினகரனில் உடற்பயிற்சி செய்தால் ஜலதோஷம் வராது என்ற செய்தி வரை, அம்புட்டும் படு காப்பி.

ஒரு செய்தி என்பது எல்லாருக்கும் பொதுவானது. உதாரணம், சமீபத்திய சபரிமலை சம்பவம். அதனை அனைத்து நாளிதழ்களும் வெளியிட்டனவே ? அதனை காப்பி என்று சொல்லப்போவதில்லை.

ஆனால் குறிப்பிட்ட சில செய்திகள், மற்ற நாளிதழ்களில் வருவதை அப்படியே அடுத்த நாள் அடித்து விடுவது காப்பிதான்.

அவர்களும் (ஆங்கில நாளிதழகள்) , இணைய தளங்களில் இருந்தும் மற்ற செய்தி சோர்ஸ்களில் இருந்தும் தான் செய்திகளை சேகரிக்கமுடியும். காரணம், ரஷ்யாவில் எங்கோ ஒரு மூலையில் ஒரு சம்பவம் நடந்தால் அதனை ஒரு நிறுவனத்தின் சொந்த செய்தியாளர் தான் எழுதவேண்டும் என்று இல்லை. ஆனால் இன்னொரு நாளிதழில் வந்ததை அப்பட்டமாக அடிக்கும் காப்பி, அறிவுத்திருட்டு.

ஸ்பெக்டம் ராஜா வீட்டில் சோதனை நடந்ததை பற்றி ஒரு வரி கூட எழுதாமல், காமன்வெல்த் கல்மாடி வீட்டில் நடந்த சோதனையை தலைப்பு செய்தியாக வெளியிடுவது பற்றி கூட ஒன்றும் சொல்லதவில்லை. ஏன் என்றால் உங்கள் சார்பு நிலை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த அறிவுத்திருட்டை பொறுத்துக்கொள்ளமுடியவில்லையே ? சம்பந்தப்பட்ட பைத்தியங்களுக்கு உறைக்குமா ?

..

Tuesday, January 11, 2011

பின்னூட்ட வெளாட்டு ! வாரீகளா ?

ஒரு மொக்கை பதிவை போடுவதற்கு பதில் நாலு நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போடலாம் - இப்படிக்கு அனானிமஸாக கடந்த ஆண்டு பின்னூட்டம் போட்ட கணேஷ் என்பவரின் புதிய தத்துவ திரட்டு பக்கம் 232.



உண்மையில் நீங்க படித்துக்கொண்டிருக்கும் பதிவு ஒரு புதிய பின்னூட்ட புரட்சி. இது உங்களை பிரட்டி எடுக்கப்போவுது.

இந்த வெளாட்டின் ரூல்ஸ் கீழே.

1. பத்து நல்ல பதிவுக்கு (இடுகைகளுக்கு) பின்னூட்டம் போடனும். (கொஞ்சம் குஷ்டந்தான், இருந்தாலும் தேடுங்க)
2. ஐஞ்சு பேர இந்த ஆட்டத்துக்கு அழைக்கனும்.
3. எந்த எந்த நல்ல பதிவுக்கு பின்னூட்டம் போட்டீங்க, ஏன் போட்டீங்க அப்படீங்கறத எழுதி, 'என்னோட பின்னூட்ட வெளாட்டு' ' நானும் ஆடிட்டேன்' 'பிச்சுப்புட்டேன் பிச்சு' அந்த மாதிரி எதாவது தலைப்பு வெச்சு ஒரு பதிவா போடனும்.

வெளாட்ட நான் ஆரம்பிக்கறதால நான் அஞ்சு பயபுள்ளைகள கூட்டுட்டு, கெளம்பறேன். என்னோட பின்னூட்ட வெளாட்டு ரிசல்ட் அடுத்த பதிவா வரும்.

1. பட்டாப்பட்டி
2. சித்ரா
3. எம் அப்துல் காதர்
4. படைப்பாளி
5. சசிகுமார்

ஹேப்பி வெளாண்டிங். ஹேப்பி பின்னூட்டம் போட்டிங்.

Sunday, January 09, 2011

கோவில்பட்டி கல்லூரிக்கெதிராக ஆர்ப்பாட்டம் - ஜெ அறிவிப்பு

.
.
.முதலில் இது பற்றி அண்ணன் உண்மைத்தமிழனின் பதிவை வாசித்துவிடுங்கள்.

வணக்கம் உண்மைத்தமிழன்  அவர்களே,
                              
தங்கள் வாசகனான எனக்கு தங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அவசியம் இன்று வந்துள்ளது. குறிப்பாகச் சொன்னால் தங்கள் உதவி எனக்கு தேவைப்படுகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக ஒரு உதவியை உங்களிடம் நாடுகிறேன்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்து இருந்தது. இந்த ஆண்டில் அட்மிஷன் போடப்பட்ட மாணவ மாணவிகளில் பெரும்பான்மையானோர் இந்த சலுகையை நம்பி சேர்ந்தவர்கள்தான். பலரும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

கோவில்பட்டியை சேர்ந்த பிரபல "நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி" ஆரம்பத்தில் முதல் பட்டதாரி மாணவ மாணவியரிடம் அட்மிசனின்போதே அரசாங்கத்தின் அறிவிப்புக்கு மாறாக பதினைந்தாயிரம் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். 

எங்கள் பிள்ளைகள் எப்படியாவது இன்ஜினியரிங் படித்தால் போதும் என்ற வேகத்தில் நாங்களும் எப்படியோ பணத்தை கட்டிவிட்டோம்.  இப்போது மிகவும் சூட்சுமமாக கல்வியாண்டிண் நடுப்பகுதியில் மேலும் Rs.12700 கட்ட சொல்லி முதல் பட்டதாரி மாணவ மாணவிகளை வற்புறுத்துகின்றனர். கணக்கு பார்த்தால் வருடத்திற்கு முப்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வருகிறது. எந்த வகையில் இது நியாயம்..? பெற்றோர்கள் எல்லாம் செத்து சுண்ணாம்பாக ஆகிக் கொண்டு வருகின்றனர். 

அரசாங்கம் "கல்விக் கட்டணம் இலவசம்" என்ற பசப்பு வார்த்தையை நம்பி எங்கள் பிள்ளையை சேர்த்த நாங்கள் இப்போது நடுக்காட்டில் தவிக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

தயவு செய்து இந்த கடிதத்தோடு நான் இணைத்துள்ள ஆதாரத்தை பார்த்து, அதை தங்கள் தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அநியாயத்தை எதிர்த்து நீங்கள் பதிவு எழுத வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு ,
அனானிமஸ்
கோவில்பட்டி







Read more: http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_08.html#ixzz1AW1v0EQN



இந்த கடிதம் போலியாகவோ உண்மையில்லாமலோ இருக்க வாய்ப்பில்லை !டைரக்டர் கையொப்பத்துடன் தெளிவாகவே உள்ளது. அதிலும் அண்ணனுக்கு முருகனே லெட்டர் எழுதியிருக்கிறார். சம்பந்தப்பட்ட மாணவ மாணவியரை கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அதனால் அவரது பெயரை நீக்கிவிடுமாறு உண்மையாரை கேட்டுக்கொண்டுள்ளேன். 


இதுகுறித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை.


கோவில்பட்டியில் இருக்கும் நேஷனல் பொறியியல் கல்லூரியில் நிர்ணயித்த தொகையை விட அதிக தொகையை வசூலிப்பதாக தெரிகிறது. இது மைனாரிட்டி திமுக அரசு வகுத்த விதிமுறைகளுக்கு மாறாக உள்ளதோடு, மைனாரிட்டி திமுக அரசின் அமைச்சர்கள், திட்டங்களை அறிவிப்பதோடு அதனை பற்றி அக்கறை கொள்வதில்லை என்று தெளிவாக அறிவிக்கும் செயலாகும். 


தனியார் பள்ளி கட்டண குறைப்பும் சரி, இதுபோன்ற அறிவிப்புகளும் சரி, வெறும் கண்துடைப்புதான் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.


எனது தலைமையில் கழக ஆட்சி வரும்வேளையில், இது போன்ற கல்லூரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


இது குறித்து வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழக முன்னனியினர், கூட்டணி கட்சி தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் பெரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும். மேலும் மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, எம்ஜியார் மன்றம், ஜெ பேரவையினர் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு நல்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 


-- அம்மா அறிக்கை விடுவதற்கு கண்டண்ட் நானே டைப் செய்து கொடுத்துவிட்டேன். !!

Saturday, January 08, 2011

திமுகவுக்கே ஓட்டு போடலாம்னு இருக்கேன் !!!

.

இணையத்தில் மட்டும் வீசும் திமுக எதிர்ப்பலை, இப்ப இன்னும் கொஞ்சம் அதிகமாயிட்டதோ என்று தோன்றும் அளவுக்கு, கொஞ்சம் கொலைவெறியோடு அலைகிறார்கள். அதற்கு பல காரணங்கள். பல நியாயங்கள். பல கற்பிதங்கள்.

ரசினிகோந்து வாய்ஸ் கொடுத்ததால் ஏமாந்து திமுக-தமாக கூட்டணிக்கு 96 அடியேன் ஓட்டு போட்டது வரலாற்று நிகழ்வு, அதை பற்றி அதிகம் வேண்டாம், ஆனால் இந்த முறை, திமுகவுக்கு ஓட்டு போடுவது என்று முடிவெடுத்துவிட்டேன்.

காரணங்களை கீழே அடுக்குறேன் !!!

சூப்பரா இருக்கு இதெல்லாம்.

1. கடந்த அதிமுக ஆட்சியின் ஹிட் திட்டங்களை (மகளிர் சுய உதவிக்குழு, மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் போன்ற பல) ஒழிக்காமல் அப்படியே செயல்படுத்தியது. அம்மா ஆட்சியில் உழவர் சந்தை, சமத்துவபுரம் திட்டங்கள் பொலிவிழந்துபோனது போல் இல்லாமல்.

2. மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டத்தை சுணங்கடிக்காமல் செயல்படுத்தி, கிராம அளவில் நல்ல பணப்புழக்கம் ஏற்பட வகைசெய்தது.

3. ஒரு ரூபாய் அரிசி ! இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி. வயிறும் மனசும் நிறையும் திட்டங்கள்.

4. கிராம குளங்கள் / ஏரிகள் தூர்வாறப்பட்டு, புதிய நீர் ஆதாரங்கள் தமிழகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.

5. அரவாணிகள், நரிக்குறவர்கள் மேல் அக்கறையான நடவடிக்கைகள், தனி நல வாரியம் அமைத்தது.

6. அரசு பள்ளிகளில் கட்டணம் ரத்து, வாரத்தில் ஐந்து நாளும் முட்டை(புள்ளைங்களா, பாடத்துல இதை வாங்கிடாதீங்க) !

7. வீட்டு வசதி திட்டம் (முன்னால அவர் பெயரை சேர்த்துக்கோங்க. நான் அதிமுகக்காரன், அம்மாவுக்கு மொட்டை கடுதாசி போட்டுடுவாங்க)

8. இலவச மருத்துவ காப்பீடு

9. அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, வாத்தியார்கள் / டீச்சர்களுக்கு வழக்கம்போல சம்பள உயர்வு ( இவர் ஆட்சின்னாலே இவங்களுக்கு தனி குஷி தெரியுமா)

10. 108 ஆம்புலன்ஸ் சேவை. (நான் கூட ஒரு ஆக்ஸிடெண்ட் அப்போ போன் செய்தேன். அதி அவசர சேவை. வெரிகுட்)

11.  இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள்

12. கனிமொழி தலைமையில் நடக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி முகாம்கள். லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளனராம்.

13. தேசிய கடல்வாழ் பல்கலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தது.

14. புதிய பொறியியல், மருத்துவ கல்லூரிகள் அமைக்க சீரிய முயற்சிகள் ( கடலூர் திண்டுக்கல் மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் வரப்போவுதாமே)

15. உடல் ஊனமுற்றோர் என்ற பதத்தை ஒழித்து மாற்றுதிறனாளிகள் என்று அழைக்கவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தது

இன்னும் பல இருக்கு. தமிழகம் பல துறைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்குன்னு ஸ்டேட் சொல்லுது.

இனி, என்ன என்ன செய்யவேண்டிய தேவை :

தனியார் பள்ளி கட்டணங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதே பெரிய சாதனைதான். தொடர்ந்து இதனை கவனித்து, இந்த பெருமுதலாளிகள் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்துவிடாமல் காத்து, கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கள் இறக்க அனுமதி கொடுக்கவேண்டும். கள் என்பது உடலுக்கு ஊறு விளைவிக்காத சாதாரண சரக்கு. இதை ஏன் சட்டம் போட்டு தடுக்கவேண்டும் ? டாஸ்மாக் மது விற்பனை செய்யும் நாட்டில் கள்ளுக்கு ஏன் அனுமதி மறுக்கவேண்டும் ? புரியாத புதிர். இதில் பனைப்பொருள் நலவாரியத்துக்கு ஒரு உருப்புடாத கோயில்ல உண்டசோறு வாங்கி தின்ற குமரி அனந்தன் தலைவர். கொடுமை.

கிராம சாலைகள் எல்லாம் என்றைக்கு தான் சரியாகும் ? மத்திய அரசின் சாலைகள் எல்லாம் பள பளவென மாறிய பிறகும் நீங்கள் திருந்தவேண்டாமா ?

சேது சமுத்திர திட்டம், மத்திய அரசின் சட்டையை பிடித்து பெறவேண்டிய ஒன்று. விடவேண்டாம். வொர்க் ஹார்ட் !

ஈழத்தமிழர்களின் நாடுகடந்த தமிழ் ஈழ அரசை வெளிப்படையாக ஆதரித்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடவேண்டும்

அனைத்து மக்களுக்கும் - குடும்ப அட்டைக்கு ஒன்று - என்று இலவச மொபைல் வழங்கிடவேண்டும். இதை விட மாநிலத்தை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறவைக்க ஒரு திட்டம் தேவையில்லை.

104 சேவை. குஜராத் அரசின் சிறப்பான திட்டம். 24 மணி நேரமும் மருத்துவரை அழைத்து காய்ச்சல் தலைவலி பெண்கள் பிரச்சினை என்று எதுவாக இருந்தாலும் சொல்லி மருந்து கேட்கலாம். கண்டிப்பாக செயல்படுத்துங்கள், சூப்பர்ஹிட் ஆகும்.

ஆன்லைனில் வெப்சைட் ஆரம்பித்த துணைமுதல்வர், ஏன் மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் உரையாடக்கூடாது ? ஜனநாயகத்துக்கு பெயர்போன(?) பாகிஸ்தான் பிரதமர் பேசுகிறார். நீங்களும் செய்யலாமே ?

சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். ஆபாசம், மூடநம்பிக்கைகளை சொல்லும் நிகழ்வுகளை தடுக்கவேண்டும்.


இந்த ஆர்டிஓ ஆபீஸ், தாலுக்கா ஆபீஸ்ல எல்லாம் லஞ்சம் வாங்கக்கூடாதுன்னு ஒரு போர்டு வைங்க. முடிந்தால் கர்நாடகாவில் இருப்பது போல ஒரு பவர்புல் லஞ்ச ஒழிப்பு துறையை (லோக் அயுக்தா) ஆரம்பிங்க. ட்ராபிக் ராமசாமியை இதுக்கு தலைவரா போட்டுடுங்க. அப்புறம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் வேட்டி இன்ஸ்டண்டா உருவப்படும்.

தமிழகம் எங்கும் உள்ள தீண்டாமை / பாவச்செயல் / பெருங்குற்றங்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் நசுக்கவேண்டும். இங்கெல்லாம் காவல்துறை ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்கவேண்டும். ( உதா: திருச்சி தீண்டாமை கல்லறைகள்)

மலையாளிகள் அவர்களது சுற்றுலாத்துறையை எப்படி எப்படியோ பிரபலப்படுத்துகிறார்கள். எந்த நாட்டு இந்தியன் எம்பஸி போனாலும் அங்கே குமரகத்தில் மஸாஜ் செய்ய அழைக்கிறார்கள். தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சென்னை ஏர்ப்போட்டில் இருந்தே ஆப்பு தான் காத்திருக்கிறது. தேவை எபக்ட்டிவ் மார்க்கெட்டிங் in சுற்றுலா துறை மற்றும் வரவேற்ப்புக்கு என்று தனி வாரியம் and படித்த ஊழியர்கள்.

கோபம் - இது சரியில்ல

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை இல்லாமை.

லஞ்ச ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாத நடவடிக்கை தேவை. சமூக சேவகர் என்று பொய் சொல்லி வீட்டு வசதி வாரிய நிலம் வாங்கி அப்பார்ட்மெண்ட் கட்டும் ஒரு அதிகாரி, முதல்வர் கையால் பதக்கம் வாங்கி குத்திக்கொள்கிறார். வெட்கக்கேடு.

கொலைவெறியொடு நடக்கும் மணல் கொள்ளை, நிலத்தடி நீரை பாதாளத்துக்கு தள்ளுகிறது. முந்தைய அதிமுக அரசில் கட்டாயமாக செயல்படுத்தப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது வருத்தமே !

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது, அது ஒரு ரவுடி ராஜ்ஜியம் என்ற பெயரை தொடர்ந்து காத்துவருகிறது இந்த அரசு.

தலையை சொறிந்து சொறிந்து தமிழகத்தையே இருளில் மூழ்கடிக்கும் மின் தட்டுப்பாடு

சுட்டுக்கொல்லப்படும் தமிழக மீனவர்களை காக்க லெட்டர் எழுதுவதை தவிர எதுவும் செய்யாதது

ஊடக ஏகாதிபத்தியம். சினிமா துறையிலும். ஏம்பா மீதி பேரும் கொஞ்சம் பொழைக்கட்டும் விடுங்களேன்.

மற்றபடி, பொதுவாக இது ஒரு சிறப்பான ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் திமுக அரசை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இப்படி நினைக்கலாம், (ஒருவேளை அதிமுக வென்று ஆட்சியில் அமர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைப்பார்கள், என்னடா, திமுக அவ்வளவு பணிகள் செய்தும் மக்கள் மாற்றித்தானே குத்தினார்கள், ஆக மக்கள் பணியை பார்க்காமல் மணியை தான் பார்க்கிறார்கள் என்று, ஆக ஒரு பணியும் நடைபெறாது.). விடுங்க அது சும்மா லூலுவாயி. முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை பாராட்டுவதில்லையா ? அதுபோல சிறப்பாக செயல்படும் திமுக அரசை பாராட்டாமல் என்ன செய்ய ? ஆகவே என்னுடைய ஓட்டு திமுகவுக்கே.



ஆனால் பாவம் இந்த ஸ்டாலின். இவர் ஆறாவது முறையாக முதல்வர் பதவியில் தொடர, இவர் துணை முதல்வராகவே குப்பை கொட்டவேண்டியிருக்கும். பேசாம தமிழ்மணம் அல்லது பஸ் / ட்விட்டர் பக்கம் வந்திருங்களேன் ஸ்டாலின், ஓட்டு போட்டு லைக் பண்ணி ரீ ட்வீட் பண்றோம்.  கும்தலக்கடி கிரிகிரியா இருக்கும் !!!

Monday, January 03, 2011

ஒப்பீடு வலைப்பூவில் இணைய விருப்பமா ?

வணக்கம் வலைத்தமிழர்களே. முந்தைய பதிவின்சுட்டியை படித்துவிட்டீர்கள் என்றால் இந்த வலைப்பூவின் நோக்கம் முழுமையாக தெரிந்துபோகும்.

ஒப்பீடு வலைப்பூ என்பது பல்வேறு பொருட்களை / சேவைகளை ஒப்பிடப்போகிறது. ஆனால், ஒரு சேவையை அல்லது பொருளை, கண்ணால் கூட பார்க்காமல் / பயன்படுத்தி பார்க்காமல் அதனை மற்றொன்றோடு ஒப்பிட முடியாது.

அப்படி செய்தால் அது அந்த சேவைக்கு / பொருளை தயாரிக்கும் நிறுவனத்துக்கு பெரும் இழப்பாகும். அவ்வாறான தவறும் இவ்வலைப்பூவில் நிகழ அனுமதியோம்.

ஒப்பீடு வலைப்பூவில் இணைவது குறித்தான பதிவு இங்கே 

Sunday, January 02, 2011

ஒப்பீடு வலைப்பூ பற்றி !!

ஒப்பீடு வலைப்பூ ஏன் ?

நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஒரு பொருளை வாங்குதற்கு முன் பல முறை யோசிக்கிறோம். அந்த பொருளின் விலை, நம்முடைய பட்ஜெட், நமக்கு அந்த பொருள் அல்லது சேவை உண்மையிலேயே அவசியமான ஒன்றா ? போன்றவை அவற்றில் சில.

அப்படி பல விஷயங்களை யோசித்தாலும், அந்த பொருளை வாங்கி உபயோகப்படுத்தினால் தான் அதன் உண்மையான தரம் தெரியவரும். சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு அந்த பொருளை பற்றி பலரிடம் விசாரிப்பார்கள். அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனம் பற்றி, அந்த குறிப்பிட்ட பொருளைப்பற்றி இணையத்தில் கிடைக்கும் ரிவ்யூக்களை வாசிப்பார்கள். (பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருக்கும்).

இந்த ரிவ்யூக்களை தமிழில் வழங்குவதுதான் திட்டம். அதே நேரம் இதுபோன்ற நேரடியான ரிவ்யூக்களை ( எல்ஜி / சாம்சங் / வீடியோகான், எந்த வாஷிங் மெஷின் சிறந்தது ) வெகுஜன ஊடகங்களால் நேரடியாக வெளியிடுவது கொஞ்சம் கடினமே. காரணம் இது அந்த பொருளின் மார்க்கெட்டை நேரடியாக பாதிக்கும் விஷயம். வெகுஜன ஊடகத்தில் இது பற்றிய ரிவ்யூ வேண்டுமானால் வெளியிடலாம், ஆனால் அதில் எது சிறந்தது என்று எழுதினால் எழுதியவரை நோக்கி ஆட்டோ அனுப்பபடலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளராக நமக்கு மிகவும் தேவையான விஷயம் இது.

மேலும் படிக்க 

போண்டா மாதவன் லெட்டர் டு மன்னார்

மன்னார் மெரினாவில் சுண்ட கஞ்சி காய்ச்சி விற்கும் குடிசைத்தொழிலை செய்யும் எளிய விவசாயி(?) அல்லது பிஸினஸ் மேக்னட். அவரிடம் சுண்டக்கஞ்சி ஆர்டர் செய்த போண்டா மாதவனுக்கு சரக்கு ரெடியாகிவிட்ட தகவலை தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பவேண்டும். இதனை சரியாக அனுப்புவது எப்படி ?

ஒரு வாடிக்கையாளர் அல்லது க்ளையண்ட் அல்லது மேலாளர் எரிச்சலடையாமல் மின்னஞ்சலை அனுப்பித்தொலைவது எப்படி என்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்துவது நோக்கம். இமெயில் எத்திக்ஸ் பார் டம்மீஸ் அப்படீன்னு வெச்சுங்க. வேற மேட்டர் (?) எதிர்பார்த்து பதிவில் குந்தியிருந்தா கெடக்காது ஆமாம் சொல்லிப்பிட்டேன். அப்பாலிக்கா என்ன வைய கூடாது.

இந்த படத்தின் மேல் க்ளிக் செய்து பார்த்தால் பெரிதாக தெரியும். பட்டென உங்கள் கண்ணில் படுவது சப்ஜெக்ட் இல்லை.  அலைன்மெண்ட் சரியில்லை. அவ்வளவு தானே ?

இப்போது அடுத்த படம்.

இந்த ரெண்டாவது படத்தை க்ளிக் பண்ணி பெரிசா பார்தீங்களா ? சப்ஜெக்ட் லைன் இருக்கு.  டியர் மிஸ்டர் என்று ஆரம்பிக்கிறது. சல்யூட்டேஷன் என்பது ஒரு நல்ல முறை. மிஸ்டர், மிஸ், மிஸஸ் என்று ஆரம்பிப்பது. டியர் என்று ஆரம்பித்தால் பெண்ணாக இருந்தால் கோச்சுக்குவாங்களோ என்று நினைப்பது முட்டாள்தனம்.

தேவையான இடங்களில் முற்றுப்புள்ளி, தேவையான இடத்தில் கமா (அரைப்புள்ளி) சேர்ப்பது தேவையானது.

க்ரீடிங்ஸ், குட் டே என்று மின்னஞ்சலை ஆரம்பித்தால் அழகாக இருக்கும் இல்லையா ? அதுக்கு மேல நன்றி என்று முடிப்பதும் நன்றே.

Thanks and Regards
Best Regards,

என்று முடிக்கலாம்.

மின்னஞ்சலின் முடிவில் உங்கள் மின்னஞ்சல், உரல் (இணைய முகவரி), அலைபேசி மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிடுவது சரியான
முறையாகும்.

பெயரை எழுதும்போது mannaar என்று சின்ன எழுத்தில் போடாமல் Mannar என்று முதல் எழுத்து பெரிய எழுத்தாக போடுவது நன்று.

அதே சமயம் மின்னஞ்சல் பெட்டி திறந்தவுடன் ஸ்பேஸ் பாரை டொக்கு டொக்கு என்று அழுத்தி மின்னஞ்சலின் நடுவில் இருந்து ஆரம்பிப்பது சிலருடைய பழக்கம். அது தேவையில்லை. பார்மெட்டிங் பிரச்சினை கொடுப்பதோடு (சிலர் அவுட் லுக், இண்க்ரிடிமெயில், லோடஸ் நோட்ஸ் போன்ற மின்னஞ்சல் க்ளையண்ட் அப்ளிகேஷன் (தமிழ்ல இன்னாபா இது) உபயோகப்படுத்துவார்கள். அதில் தொல்லை தரும் இந்த ஸ்பேஸ்.

அதே சமயம் மின்னஞ்சலில் எண்ணிக்கை, விலை, ஆகியவற்றை சரியாக குறிப்பிடுவதும் சரியான முறையாகும்.

மின்னஞ்சல் நீளமாக போனால், ஒரு அட்டாச்மெண்ட் பைல் ஆக உங்கள் மின்னஞ்சலை அனுப்பலாம்.

PFA  என்றால் Please Find Attached.  சல்லூட்டேஷன் எல்லாம் போட்டுவிட்டு, PFA, Details attached என்று சொல்லிவிடலாம்.

ஆங்காங்கே Kindly, Please என்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உங்கள் மின்னஞ்சலுக்கு அழகு சேர்க்கும்.

எனக்கு தெரிந்தவரை / முடிந்தவரை சொல்லியிருக்கிறேன்.  நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சவரைக்கும் உதவுங்கள். நச் பாய்ண்ட் ஆக இருந்தால் மெயின் பதிவில் சேர்த்து பதிவை அழகூட்டலாம்.

எல்லாரும் போதையேற்றியிருப்பதேயன்றி வேறொன்றுமறியேன் போண்டா மாதவனே - மன்னார், புதிய தத்துவம் 133434 1-1-11 அன்று.
.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....