Tuesday, September 04, 2012

மனிதன் பாதி! மிருகம் பாதி!


From : http://www.facebook.com/siva.sinna

அரை மணித்தியாலத்துக்குள் 63
தமிழ் இளைஞர்கள் சுட்டுக்கொலை –
யாழ்ப்பாணத்தில் கொடூரம்!
சிங்களவர்களுக்கு மட்டுமல்ல,
தமிழர்களுக்கும் உண்டு
படுகொலை வரலாறு -
இளைஞர்களே மன்னித்துவிடுங்கள்!
மனிதன் பாதி! மிருகம் பாதி!
நீங்கள் பாதி மிருகத்தை அடக்கிவைத்த மனிதர்கள்-
அவர்கள் பாதி மனிதனை
தங்கள் பாதியிடம் பலிகொடுத்தவர்கள்’

இலங்கையில் மூன்று தசாப்தகாலம் ஈழப்போர் நடைபெற்றதாக அரசியல்-இராணுவ ஆய்வாளர்கள் பெரும்போக்காக வர்ணிப்பதுண்டு. நான்கு ஈழப்போர்கள் இடம்பெற்றன என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. 1983இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இராணுவ வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

பிரபாகரன், செல்லக்கிளி உட்பட பதுங்கியிருந்து ஆயுததாரிகள் சிலர் நடத்திய இந்தத் தாக்குதலையடுத்து நாடு பற்றியெரிந்தது. அன்று இலங்கையில் அதிகாரத்திலிருந்த யு.என்.பி.யின் ஆட்சி, செயலாற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கைகளில் ஆட்சிக் கடிவாளம் இருந்தது.

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆசீர்வாதத்துடனும் உசுப்புதலுடனும் தமிழ் மக்களுக்கு எதிரான இனசங்காரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. முழு நாடுமே பற்றியெரிந்தது. சுமார் 350 தமிழர்கள் கொல்லப்பட்டனர் கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து நாசமாக்கப்பட்டது என்பதை அரசாங்க அறிக்கை கூறியது. மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனரென்று தமிழர் தரப்புகள் கூறின. இதனையே முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென்று சில ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடு பிரிவினைக்கான தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டது. இதனையே சில அரசியல் நோக்கர்கள் முதலாவது ஈழப்போரின் ஆரம்பமென வகைப்படுத்துகின்றனர். ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழீழ ஆயுததாரிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்துவிட்டன. யாழ்.மாநகர மேயராகவும், எம்.பி.யாகவும் விளங்கிய அல்பிரட் துரையப்பா 1975 ஜூலை 26இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரபாகரனின் தலைமையிலான குழுவொன்றே இப் படுகொலையில் ஈடுபட்டது. 1983ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே யாழ்.நூல்நிலைய எரிப்பு இடம்பெற்றது. 1977 ஆகஸ்ட் 13இல், யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மக்களுடன் பொலிசார் மோதிக்கொண்ட ஒரு சம்பவத்தையடுத்து யாழ்ப்பாணத்தில் பல பகுதிகள் வேட்டைக்காடுகளாக மாறின. அப்பாவிப் பொதுமக்கள் பலர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990இல் இரண்டாவது ஈழப்போரும், 100 நாள் போர் அமைதிக்குப் பின்னர் 19 ஏப்ரல் 1995இல் மூன்றாவது ஈழப்போரும், 2006இல் நான்காவது ஈழப்போரும் ஆரம்பித்ததாக அரசியல் – இராணுவ நோக்கர்கள் வகைப்படுத்துகின்றனர். 2009 மே 18இல் யுத்தம் முடிவடைந்தது.

1987 ஜூலை இறுதியில் இந்தியப் படை திருகோணமலையில் வந்திறங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் இந்தியப் படையை வாழ்த்தி வரவேற்ற புலிகள், அதே ஆண்டு ஒக்டோபரில் இந்தியப் படையுடன் மோதலை ஆரம்பித்தனர். இரண்டரை வருடங்கள் நீடித்த இந்த மோதலில் சுமார் 1400 இந்திய ஜவான்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்களும் பலியானார்கள்.

யாழ் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து இந்தியப் படை நடத்திய தாக்குதலில் டாக்டர்கள், நோயாளிகள், பணியாளர்கள் உட்பட எழுபது பேர் கொல்லப்பட்டனர். 1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. வீதிவழியே ரோந்து சென்ற இந்தியப் படையினர் மீது ஆஸ்பத்திரிக்குள் பதுங்கியிருந்து புலிகளின் குழுவொன்று தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதையடுத்து இந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புகளுமே அப்பாவி மக்களைத்தான் அதிகளவில் பலியெடுத்திருக்கின்றன. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மைலந்தனைப் படுகொலை, வவுனியாப் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை என்று பலவற்றைப் பட்டியலிட முடியும். அனுராதபுர பௌத்த யாத்திரிகர் படுகொலை, அரந்தலாவைப் பிக்குமார் படுகொலை, தலதா மாளிகைத் தாக்குதல், சிங்கள எல்லைக் கிராமத் தாக்குதல்கள், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலைகள் எனப் பலவற்றைப் பட்டியலிட முடியும்.

தமிழீழ விடுதலை அமைப்புகளுக்குள் உள் இயக்கப் படுகொலைகளும் தாராளமாகவே இடம்பெற்றிருக்கின்றன.

1983 ஜூலை இன சங்காரத்தின்போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் 53 தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைகள் 23, 25 ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெற்றன. ஆனால் 63 தமிழ்க் கைதிகள் அரை மணித்தியாலத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன. புலி இயக்க உறுப்பினர்கள் இரண்டே இரண்டு பேர் இந்தப் படுகொலைகளைப் புரிந்தனர். ஒருவனின் இயக்கப் பெயர் அருணா, மற்றவனின் இயக்கப் பெயர் சந்தியா.

1986ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரெலோ அமைப்பை தடைசெய்து நூற்றுக்கணக்கான கொலை செய்தும், உயிருடன் எரித்தும் வெறியாட்டம் நடத்தினர் புலிகள். 1986 டிசம்பரில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை புலிகள் தடை செய்தனர். இந்த இரண்டு இயக்கங்களின் முகாம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல நூற்றுக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இப்படிக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினரே அப்போது கொல்லப்பட்டனர். புலிகளுக்குக் கப்பம் செலுத்தாததால் பிடித்துத் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு சில வர்த்தகர்களும் இப் படுகொலையின்போது பலியானார்கள்.

1985ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற பதாகையின் கீழ் புலிகள், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் ஆகியவை திம்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் முப்பதாம் திகதி இந்தப் படுகொலை இடம்பெற்றது. இதனைக் ‘கந்தன் கருணைப் படுகொலை’ என்று அழைப்பதுண்டு. ‘கந்தன் கருணை’ என்பது ஒரு காரணப் பெயர். யாழ்ப்பாணத்தில் பல வீடுகளுக்கு கந்தன் கருணை இல்லம் எனப் பெயர் வைப்பதுண்டு. யாழ்ப்பாணத்தில் ‘அரஸ்கோ’ முதலாளி என்பவரின் ஆடம்பர வீடு நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் இருந்தது. அரசரட்ணம் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது இந்த வீடு. நல்லூர் கோவில் வீதியிலும் ‘கந்தன் கருணை’ என்று பெயரிடப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. இந்த வீடுகள் ஒரு காலத்தில் புலிகளின் அலுவலககமாகப் பாவிக்கப்பட்டு வந்தன. ஆனால் படுகொலைகள் நடைபெற்றது இந்த வீடுகளிலல்ல.

புலிகளால் கைது செய்யப்பட்ட மாற்று இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் நல்லூர் கந்தன் கருணை வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரு தொகுதியினர் யாழ் இந்துக் கல்லூரிக்கும் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கும் இடையிலுள்ள ஒரு வீட்டுக்கு இடமாற்றப்பட்டிருந்தனர். இந்த வீடு சிவகுருநாதர் வீதியில் அமைந்திருந்தது. இங்குதான் படுகொலைகள் இடம்பெற்றன.

‘கந்தன் கருணை’ இல்லத்திலிருந்து இங்கு இடமாற்றப்பட்ட புலிகளின் கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால்தான் ‘கந்தன் கருணைப் படுகொலைகள்’ என்று சிலர் இதனை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்.

இந்த வீடு நடராஜா என்பவருக்கு சொந்தமானது. அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டார். படுகொலை நடைபெற்று பத்து வருடங்களின் பின்னர் இந்த வீட்டில் நடேசபிள்ளை வித்தியாதரன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வந்திருக்கிறார். இவர் தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. சரவணபவனின் சொந்த மைத்துனர். புலிகளின் காலத்தில் புலிச்சார்பு பத்திரிகைகளாக விளங்கிய ‘உதயன்’, ‘சுடரொளி’ ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

இப் படுகொலை இடம்பெற்ற காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் தளபதியாக விளங்கியவர் கிட்டு என்று அழைக்கப்படும் சதாசிவம் கிருஷ்ணகுமார். இவரது காதலி சிந்தியாவின் வீடு, யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத்தெருவில் இருந்தது. அப்போது சிந்தியா யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. சிந்தியாவின் தந்தை யாழ் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிவந்தார்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் கிட்டு தனது காதலியைச் சந்திப்பதற்கு சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத் தெரு வீட்டுக்குச் செல்வது வழக்கம். ஆயுதம் தரித்த மெய்ப் பாதுகாவலர்கள் சகிதமே கிட்டு வாகனத்தில் பயணிப்பார். அன்றைய தினம் காதலியைச் சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார்.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பொன்றில் இருந்தவர் அருணா. இந்தப் படுகொலையின் பிரதான சூத்திரதாரி இவரே. கிட்டு தாக்குதலுக்குள்ளாகி மயக்கமுற்று இருக்கும் செய்தி கேள்விப்பட்டதும் அவன் கொதித்தெழுந்தார். கல்லூரி வீதிப் புலிகள் இயக்கப் பணிமனைக்குள் புகுந்த அருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சரமாரியாகச் சுட்டான். நேரம் சுமார் இரவு எட்டு மணியைத் தாண்டியிருக்கும். அதே வேகத்துடன் நாவலர் வீதி, சிவப்பிரகாசம் வீதியிலுள்ள முகாம்களுக்கும் சென்று மாற்று இயக்கப் போராளிகளை சுட்டுக் கொன்றான். அரை மணித்தியாலத்தில் 63 பேர் கொல்லப்பட்டார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டுமென்பது அருணாவின் சந்தேகம்.

தாக்குதலின்போது தப்பியோட முனைந்த தடுப்புக்காவல் கைதிகள் சிலர், அந்த முகாமில் சென்றிக்கு நின்ற புலி இயக்க உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அருணா ஏற்கனவே படையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தவன். இவனைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன்தான் அருணா. விடுவிக்கப்பட்ட மற்றைய புலி உறுப்பினரின் இயக்கப் பெயர் காமினி.

ஆனால் புலிகள் இயக்க உள் முரண்பாடுகளே கிட்டு மீதான தாக்குதலுக்குக் காரணமெனப் பின்னர் தெரியவந்தது. கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்தத் தாக்குதல். மாத்தையாவின் ஆட்களே இத்தாக்குதலை நடத்தினரென்ற சந்தேகம் பரவலாக வெளிப்பட்டது.

இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைகளுக்கு மாறியது. பிற்காலத்தில் ‘றோ’ உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் மாத்தையாவைக் கைது செய்து, நிலத்துக்குக் கீழான சிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து பிரபாகரன் கொன்றது வேறு விடயம். வன்னியில் சிறை வைக்கப்பட்டிருந்த மாத்தையா நாயைப் போல நடத்தப்பட்டாரென்று இந்தியப் பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ‘ஐலன்ட் ஒப் புளட் (இரத்தத் தீவு) என்ற தனது ஆங்கில நூலில் அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனைப் பேட்டி கண்டவர் அனிதா பிரதாப். அத்துடன் சிறையிலிருந்த மாத்தையாவை பிரபாகரனின் அனுமதியுடன் பார்வையிட்டவர் அவர்.

இந்தப் படுகொலை இடம்பெற்றுச் சரியாக நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் இந்தியப் படை இலங்கையின் வடக்கு – கிழக்கில் நிலை கொண்டது. ஜூலை இறுதியில் இந்தியப் படை நிலை கொண்டது. அதே வருடம் ஒக்டோபர் பத்தாம் திகதி இந்தியப் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் வெடித்தது. இந்திய இராணுவத்துடனான சண்டையில் குருநகரில் அருணா மதிலால் பாய்ந்து தப்ப முயன்றபோது இந்திய கூர்க்கா இராணுவவீரனால் கொல்லப்பட்டான்.

மற்றைய கொலையாளியான சந்தியா என்பவன் முன்னர் ரெலி என்ற ஒரு தமிழ் ஆயுதக் குழுவில் இணைந்து பணியாற்றியவன். அந்த இயக்கம் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டதையடுத்து. சந்தியா வெளிநாடொன்றிற்குச் சென்றிருந்தான். வெளிநாட்டில் இருக்கும்போதே புலிகள் இயக்கத்துடன் இவன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கைக்குத் திரும்பிய பின் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயற்பட்டான்.

கொல்லப்பட்ட மாற்று இயக்கப் போராளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டனவா அல்லது புதைக்கப்பட்டனவா? என்பது தெரியாது. ஆனால் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் சடலங்கள் எரிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளிவந்தன. வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையை விட, ‘கந்தன் கருணை’ப் படுகொலைகள் குரூரமானவையென அப்போது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படுகொலைகள் குறித்துப் புலிகள் மௌனம் சாதித்தனர். ஆனால் மெல்ல மெல்ல விஷயம் கசியத் தொடங்கியதும் அதனைத் ‘தமிழீழத் துரோகிகளின் சதி’ என்று புலிகள் தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி இது தொடர்பாகப் புலிகள் அறிக்கையொன்றினை விடுத்திருந்தனர். அந்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்ட கைதிகள், அவர்களுக்குக் காவலுக்கு நின்றவர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் பதினெட்டுக் கைதிகளும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இரண்டு பேரும் பலியானானர்கள்’

அந்த காலப்பகுதியில் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேராசிரியர் சிவத்தம்பி கலந்துகொண்டிருந்தார். அங்கு இலங்கை மாணவர்கள் சிலர், கந்தன் கருணைப் படுகொலைகள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்டிருந்தார்கள். அதற்கு, ‘கிட்டுவுக்கு நடந்த தாக்குதல் உட்கட்சிப் பிரச்சினையால் ஏற்பட்டது என்பது தவறு. இதனால் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் அவர்கள் யார்?, அவர்கள் எங்கிருந்தார்கள்?, அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் பார்க்க வேண்டும்’ என்று பதிலளித்திருந்தார்.

பேராசிரியர் சிவத்தம்பி வடமராட்சியில் பிறந்தவர், கற்றறிந்த பேராசிரியர். முன்னாளில் முற்போக்குவாதியாக இனங்காணப்பட்டவர். எனினும் பின்னாளில் அவர் புலிகளின் விசுவாசியாக செயற்பட்டவர். ‘அதிகமான அப்பாவி மக்கள் இறப்பது, தமிழீழம் மலர வழிவகுக்கும்’ என்ற முட்டாள்தனமான நம்பிக்கையை புலிகளுக்கு வழங்கிய அறிவுஜீவிகளில் இவரும் ஒருவர் என்பதை மறுக்கமுடியாது.

Thursday, July 12, 2012

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா ?




கலைஞர் கேள்வி பதிலில் இருந்து

கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம். அரசு வேலை இனிமேல் இல்லை என்று சொல்லலாம். அதே ஊர்ல இருந்துக்கிட்டு அங்க படிக்காத பசங்களுக்கு எஞ்சினீயரிங், மெடிக்கல், அரசு கல்லூரியில் இடம் தராமல் தடுக்கலாம், அரசு கொடுத்த டிவி லேப்டாப் மிக்ஸி கிரைண்டர் எதாவது இருந்தா அதை பிடிங்கிடலாம்.

Wednesday, July 11, 2012

LG ஸ்ப்லிட் ஏசி விற்பனைக்கு

உபயோகப்படுத்தாத LG ஸ்ப்லிட் ஏசி (பெங்களூரில் கடந்த 2 வருடம் முன்பு வாங்கியது) தமிழ்நாட்டில் இருக்கிறது. நார்வே போகும் முன் (ஒரு மாதம் முன்) வாங்கி உபயோகப்படுத்தினேன், நார்வே போகும்போது மாமனார் வீட்டுக்கு அனுப்பினேன். அவங்க வீட்டில் 3 பேஸ் வராததால் அவராலும் அதை உபயோகப்படுத்த முடியல. சில நாளுக்கு முன் ஒரு பஸ்/ப்ளஸ் விட்டேன், சில பேர் தொடர்புகொண்டார்கள், அதில் ஒருவருக்கு தருவதாக சொன்னேன், ஆனால் அவரால் அதை எடுத்துக்கொள்ள முடியல. வாங்கிய போது விலை 25K. இப்ப அந்த மாடலுக்கு டேக்ஸ் எல்லாம் போட்டு 30 ஆயிரம் வரை (ஹரியானா / டெல்லியில்) விக்கிறாங்க. சல்லீசா எதாவது அமவுண்டை எனக்கு கொடுத்துட்டு தூக்கினு போங்கப்பா...(பிக்கப் நீங்க தான் அரேஞ்ச் செய்துக்கனும்). விருப்பம் இருப்பவர்கள் தனிமடல் அனுப்பவும்.

http://www.lg.com/in/air-conditioning/split-ac/LG-LSA3AR2T.jsp

Monday, February 20, 2012

ரியல் எஸ்டேட் / கன்ஸ்ட்ரக்சன் துறையினர் கவனத்துக்கு


செந்தில், யுவகிருஷ்ணா, ரவி

கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் கவனத்துக்கு. எனது தோழர் செந்தில் அவர்கள் நீண்டகாலம் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

அவர் ரியல் எஸ்டேட் மற்றும் கன்ஸ்ட்ரக்சன் துறைக்கான தேவைப்பாடு மிகுந்த சிமெண்ட் மூட்டைகளை இறக்கும்மதி செய்யும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவர் கராச்சியில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்ட் ஆனது, உலகத்திலேயே இரண்டாவது - மிகுந்த தரம் மிகுந்த சிமெண்ட் ஆகும். ஜெர்மனியின் மாபெறும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான ஹெடல்பெர்க் (உலகின் நம்பர் ஒன் குவாலிட்டி சிமெண்டுக்கு பெயர் பெற்றது) சிமெண்டின் மூலப்பொருளான மண்ணை கராச்சியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கராச்சியின் மண் அவ்வளவு தரம் வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.

30 மெட்ரிக் டன் ஆண்டுக்கு உற்பத்தியாகும் சிமெண்டை விட, வெறும் மண்ணாக கராச்சி ஏற்றுமதி செய்வது அதிகம் என்றும் இணையத்தில் படித்தேன்.

அந்த கராச்சியில் இருந்து நேரடியாக சிமெண்டை இறக்குமதி செய்யும் தோழர் செந்தில், அதனை தமிழகத்தில் மொத்தமாகவும் மற்றும் சில்லறை விற்பனைக்கும் வெற்றிகரமாக கடந்த ஒரு ஆண்டாக தந்துகொண்டிருக்கிறார்.

விலையை பொறுத்தவரை, இந்தியாவிலேயே தயாராகி அரசு மூலமாகவும் / தனியார் மூலமாகவும் விற்பனையாகும் சிமெண்டை விட, இது மிகவும் குறைவு. மொத்தமாக பார்க்கப்போனால் மிகப்பெரிய சேமிப்பு.

தொடர்புகொள்வதற்கு எளிமையான தோழர் செந்திலை இந்த விடயத்தில் எப்போது வேண்டுமானாலும் அழைத்து பேசுங்கள். அவரது அலைபேசி எண் 9176758759.

இது குறிந்து எந்த கேள்விகள் / சந்தேகங்களாக இருந்தாலும் எளிமையாக பதில் அளிப்பார்.

இதுகுறித்தான இந்த இணைய பதிவை உங்கள் பக்கதில் இணைத்தால் நன்று. மேலும் உங்களுக்கு தெரிந்த மேஸ்திரிகள் / ரியல் எஸ்டேட் / கட்டிட துறையினருக்கும் இது குறித்து தெரியப்படுத்துங்கள். நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்லலாம், அதுவே உங்கள் நன்பரே செய்தால் நானூறு பேருக்கு கூட சொல்லலாம் தானே ?

செந்தில் எண் மறுபடி 9176758759 , அழைக்க நேரம் இல்லாதவர்கள் மின்னஞ்சல் அனுப்ப : senthil5478@gmail.com    

இதனை ட்வீட்டரில் ரீஷேர் செய்பவர்கள் / பேஸ்புக்கில் ஷேர் / அப்டேட் செய்பவர்கள், தனி பதிவாக போடுபவர்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்...

Sunday, February 19, 2012

பயோ டிஸ்க் - அடுத்த MLM காந்தபடுக்கை மோசடி



Amezcua Bio Disc - தயாரிப்பது க்வெஸ்ட் நெட் என்ற நிறுவனம், இந்த பயோ டிஸ்க் உபயோகப்படுத்தி வாட்டரை (குடிநீர்) எனர்ஜைஸ் செய்வதை டெமோ காட்டுகிறோம் என்று அப்பார்ட்மெண்ட்டில் இருக்கும் இன்னொரு தமிழ் பேமிலி அழைத்து நாங்கக் போனோம்.


வாட்டர் ரீசைக்கிளிங் ப்ளாண்ட் என்பது ஏதோ பெரிசாக இருக்கும் (35 ஆயிரம் விலையாம்) என்று நினைத்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பா, அதில் ஒரு சிறிய மோட்டர். வட்ட வடிவத்தில் ஒரு கண்ணாடி. கைப்பிடியை கழட்டிய பெரிதாக்கும் ஆடி (ஜூமிங் லென்ஸு) மாதிரி இருந்தது. சுவிட்சை போட்டால் மோட்டர் இயங்கி, தண்ணீரை லென்ஸு மேல் ஊற்றுகிறது. (அதுக்கு தனியாக ஒரு ஸ்டேண்ட்). லென்ஸில் பட்டு தண்ணீர் மீண்டும் ப்ளாஸ்டிக் பட்டாவிலேயே ஊற்றிவிடுகிறது. இது போல ஆறு முறை தண்ணீரை எனர்ஜைஸ் செய்தால் அந்த தண்ணீர் மிகச்சிறந்த தண்ணீரா மாறிவிடும் என்றார்கள்.

நான் பார்த்த ப்ளாண்டை பெயிண்ட் ப்ரஷ் உதவியுடன் வரைந்திருக்கிறேன். (படம் சிறப்பாக வர நான் ஒன்றும் கார்ட்டூனிஸ்ட் பாலா அல்ல, ஏதோ என்னால் முடிந்தவரை கோடுகளை இழுத்து விட்டிருக்கிறேன்)

இந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களாக அவர்கள் சொல்லியவை

- அந்த தண்ணீரை குடித்தால் நாட்பட்ட நோய்கள், டயபட்டீஸ், இதய நோய் எல்லாம் ஓடிவிடும்.
- சாதாரண சளி, சுரம் போன்ற நோய்கள் குடும்பத்தில் இருக்கவே இருக்காது
- சாதாரணமாக இருக்கும் அசதி, மறதி போன்றவை நீங்கிவிடும்.

அப்படி என்னப்பா இந்த பயோ டிஸ்க் வேலை செய்கிறது ? என்ற கேள்விக்கு,

பதில் கேள்வியாக அவர்கள் கேட்டது

அதாவது மலை காடுகளில் வரும் தண்ணீர் மூலிகை தண்ணீர் என்று ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா...

ஆமாம்ங்க, ஒத்துக்கொள்கிறேன், காரணம் மலையில் இயற்கையாக தோன்றி வரும் போது அவை பல்வேறு மூலிகைகளில் பட்டு வருகிறது, அதனால் அந்த தண்ணீர் நல்ல தண்ணீர் என்று நம்ம முன்னோர்கள் சொல்லிவைத்தார்கள்..

அப்படியே பாய்ண்ட்டை பிடித்துவிட்டதுபோல உற்சாகமாக பேச ஆரம்பித்தார்...

அதாவதுங்க, மலை காடுகளில் வரும் தண்ணீரை போல நம்ம போர்வெல் வாட்டர் சத்து உள்ளது அல்ல. 

ஆமாம் நீங்க சொல்றது சரிதான் சார், என்று சொல்லிவைத்தேன்...

அதனால ஜெர்மனியில இருக்க மருத்துவர் தன்னோட ஆராய்ச்சி மூலமா கண்டுபிடிச்சது தான் இந்த பயோ டிஸ்க். அதாவது இந்த பயோ டிஸ்க்ல பயர் ப்யூஷன் முறையிலயும், நானோ டெக்னாலஜி முறையிலயும் பதினாலு மினரல்ஸை புகுத்தி, அதன் மூலமா பலரோட வாழ்க்கைக்கு ஒளியேத்தினார் மருத்துவர் இயான் லியோன்ஸ். (மேலே படத்தில் இருப்பவர்கள். படம் உதவி கூகிள் அண்ணாச்சி)

அதனால அந்த பயோ டிஸ்க்கை உபயோகப்படுத்தி நாம பயன் அடையுறோம். இந்த பயோ டிஸ்க் மூலமாக தண்ணீர் பாயும்போது அந்த மினரல்ஸ் நம்ம தண்ணீர்ல உடைஞ்சு போன, ஓஞ்சு போன மினரல்ஸை சரிப்படுத்தி உருப்புடியா மாத்துது. அதன் மூலமா நாம குடிக்கிற தண்ணீர் நமக்கு டாக்டரா செயல்படுது என்று மிகப்பெரிய லெக்சரை முடித்தார்.

இந்த பயோ டிஸ்கோட சேர்த்து ஒரு பெண்டண்ட் ஒன்றையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கழுத்தில் போட்டிருந்த அந்த பெண்டண்டை எடுத்து காட்டினார். 


அதாவது பயோ டிஸ்க் 22 ஆயிரம், இந்த பெண்டண்ட் ஒரு பதினைந்தாயிரம், இரண்டும் சேர்ந்த ஒரு பேக்கேஜ் ஆக 35 ஆயிரம். இந்த பெண்டண்டை கழுத்தில் போட்ட பிறகு, நீண்டகாலமாக இருந்த முட்டிவலி (????) குணமாயிட்டதாம். காலையில் ஆறு மணியில் இருந்து இரவு 12 மணி வரை வேலை செய்தாலும் உடல் சோர்வடைவதே இல்லையாம்..

இந்த பொருளுக்கு CE போன்ற தர சான்றிதழ் கிடைத்துள்ளதா என்று ஒரு புத்திசாலித்தனமான கேள்வியை எழுப்பினேன். அதை மிகுந்த கான்பிடன்ஸோடு எதிர்கொண்டவர், இது ஒரு ஹெல்த் ப்ராடக்ட் அல்ல, ஒரு வெல்னெஸ் ப்ராடக்ட், இதற்கு அது போன்ற சர்ட்டிப்பிக்கேட் எதுவும் தேவை இல்லை என்றார்.

இரண்டு அரை எலுமிச்சை பழங்களை ஒன்று இடது கையிலும் ஒன்று வலது கையிலும் கொடுத்து, இரண்டையும் சுவைத்து பார்க்க சொன்னார்கள். ஒன்று பயோ டிஸ்க் மூலம் எனர்ஜி செய்யப்பட்டது, ஒன்று பயோ டிஸ்க் இருக்கும் இடத்தில் இருந்து தூரத்தில் வைக்கப்பட்டது. இரண்டும் எனக்கு எலுமிச்சை சுவையாக தெரிந்தது, பெரிதாக எதுவும் வித்யாசம் தெரியவில்லை. ஆனால் பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அம்மையாரோ, ஆஹா, பயோ டிஸ்க் மூலம் எனர்ஜைஸ் செய்யப்பட்ட எலுமிச்சை சுவையோ சுவை என்று கூற, நானும் சபை நாகரீகம் கருதி, ஆமாங்க அப்படித்தான் என்று மையமாக தலையாட்டி வைத்தேன்...

இந்த ஸ்டோரியில் ஒரு சப் ஸ்டோரியாக, இந்த டெமோ ஒரு பக்கம் நடக்க, யாழினி அப்போது லொக் என்று ஒரு இருமல் விட, இதை நான் ரெய்க்கியில் குணமாக்குகிறேன் என்று அந்த வீட்டு அம்மையார் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு அல்லேலூயா கும்பல் ஆசீர்வதிப்பது போல தலையில் கை வைக்க, யாழினி அதை விரும்பாமல் கையை தட்டிவிட, சரி அப்ப நான் டிஸ்டன்ஸ் ரெய்க்கி கொடுக்கிறேன் என்று கொஞ்சம் தூரத்தில் இருந்து மொன மொன என்று ஏதோ சொல்லி ஆசீர்வதித்தார்கள். (அன்னாரது மாமியார் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்க கலிபோர்னியா வரை டிஸ்டன்ஸ் ரெய்கி கொடுக்கிறாராம். இது வேறொரு ஆராய்ச்சி தலைப்பு. 

இந்த பயோ டிஸ்க் என்பது தண்ணீயை மட்டும் சுத்திகரிக்காதாம். அதை சுத்தி அஞ்சு அடிக்கு உள்ள பொருட்களை எல்லாம் சுத்திகரிச்சுவிடுமாம். அதாவது சமையல்கட்டில் உள்ள எலுமிச்சை, குளிர்சாதன பெட்டியில் உள்ள முள்ளங்கி, அப்புறம் தாளிக்க வைத்துள்ள கடுகு உளுத்தம்பருப்பு என்று அனைத்தையும். மேற்படி பத்தியில் சுவைக்காக கொடுக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் கூட பயோ டிஸ்க் டெமோ செய்வதற்காக பயோ டிஸ்கில் இருந்து வெகுதொலைவில் (அதாவது சமையல் அறையில் இருந்து படுக்கை அறையில்) வைக்கப்பட்டதாம்.

கடைசியாக, இந்த பயோ டிஸ்கை வாங்க வேண்டும் என்றால் அவரது ரெபரன்ஸ் ஐடி மூலம் வாங்கினால் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று சொன்னார். எல்லாத்தையும் மெயில்ல அனுப்பிடுங்க, வாங்கிடலாம் என்று சொல்லிவிட்டு, பயோடிஸ்க் மூலம் டிஸ்டன்ஸ்ல வைத்து எனர்ஜைஸ் செய்யப்பட்ட ஆரஞ்சு பழரசத்தை அருந்திவிட்டு நடையை கட்டினோம்.

இந்த பயோடிஸ்க் பற்றி இணையத்தில் ஆரய்ச்சி செய்யும்போது இதன் ஏமாற்று வேலைகள் பற்றி பல ரெபரன்ஸ்கள் கிடைத்தன. கேரளாவில் மருந்துவர்கள், டெண்டிஸ்டுகள் கூட இந்த பயோடிஸ்கை வாங்கி போட்டுவிட்டு, அதன் பின்னால் மற்றவர்கள் தலையில் கட்டுகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. நன்று கற்று அறிந்த கல்வியாளர்கள், பேராசிரியர்கள் கூட இந்த வலையில் விழுந்துள்ளதும் தெரிகிறது. ஏன் இந்த பயோடிஸ்கை என்னிடம் விற்க முயன்ற தோழர் கூட தகவல் தொழில்நுட்ப துறையில் உயர்ந்த பதவி வகிப்பவர்தான்.

ஏற்கனவே காந்த படுக்கை என்று ஒரு MLM மோசடி (MLM என்பது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் என்பதின் சுருக்கமாகும் - அதாவது சங்கிலி தொடர் விற்பனை). அதாவது நீங்கள் ஒரு பொருளை பத்து ரூபாய்க்கு வாங்கினால், அதே பொருளை நீங்கள் பத்து பேருக்கு விற்று கொடுத்தால் உங்கள் பொருள் உங்களுக்கு இலவசம். இது போல பல வகையாக விற்பார்கள்.

காந்த படுக்கை பற்றி இணையத்தில் தேடினால், காவல்துறை வழக்கு விவரங்கள், ஏமாந்த சோனகிரிகள் பற்றிய தகவல்கள் என அனைத்தும் கொட்டும். நேரம் இருப்பவர்கள் தேடிப்பாருங்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் திருப்பதி ஏழுமலையானுக்கு / ஜீசசுக்கு என்று தபால் கார்டுகள் வரும். அந்த தபால் கார்டை படித்து அதை போலவே இருபது பேருக்கு எழுதி போட்டால் உங்கள் வீட்டு கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கொட்டும் - சில பயனாளிகளின் தகவல்கள் காணப்படும். ஆனால் அந்த தபால் கார்டை புறக்கணித்தாலோ, கால் உடைந்து விடும். ஆண்மை குறைந்துவிடும். எயிட்சு வரும் என்று கிலி ஏற்படுத்துவார்கள். அதே போன்றதொரு மின்னஞ்சல் சமீபமாக எனக்கு வந்து சேர்ந்தது. இந்தமுறை ஏழுமலையானோ ஜீசசோ இல்லை. வினாயகர். 

ஆக, ஏமாற்றுபவர்கள், எம்.எல்.எம் கும்பல், ரெய்க்கி, வாஸ்து, மக்களின் மூட நம்பிகைகளை வைத்து பணம் செய்பவர்கள், கடிதம் மூலம் ஏழுமலையானை மார்க்கெட்டிங் செய்பவர்கள், மணியார்டர் மூலம் காசை வாங்கிக்கொண்டோ அல்லது வி.பி.பி மூலமோ விலங்குகளை பயமுறுத்தும் துப்பாக்கிக்கு பதில் செங்கல்லை வைத்து அனுப்புபவர்கள், நைஜீரியா கும்பல், ஆப்ரிக்க நாட்டின் செத்துப்போன நிதி மந்திரிக்கு பிறந்த கருப்பு மகளிடம் இருக்கும் இரண்டு மில்லியனை வைத்து ஏமாற்றுபவர்கள் என்று அன்றிலிருந்து இன்றுவரை ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் ஏ(கோ)மாளிகளாக ஆகாமல் தப்பித்துக்கொள்ளவேண்டும்.

இதை எழுதவேண்டும் என்று தோன்றியது ஏன் என்றால், இந்த கான்ஸெப்ட் இப்போது தான் வட இந்தியாவில் பரவி வருகிறது. இதை பற்றி மெயின் லைன் பத்திரிக்கைகள், நீயா-நானா மாதிரி அவேர்னஸ் க்ரியேட் செய்யும் ப்ரொக்ராம்ஸ், புதிய தலைமுறை செய்தி சேனல் இவர்கள் எல்லாம் அவேர்னஸ் க்ரியேட் செய்து, நம் தமிழ் மக்கள் ஏமாந்து காசை வீணடிக்காமல் உதவவேண்டும்.


Tuesday, January 31, 2012

அட முட்டாள் தலிபான்களா ?

நண்பர்களே! ஒரு அவசர உதவி. இஸ்லாமிய நண்பர் ஒருவர் கடையநல்லூர் பகுதியில் இருக்கிறார். அவர் இறையில்லா இஸ்லாம் என்கிற தளத்தில் இருந்து நாத்திகம் பேசும் கட்டுரையொன்றை பேஸ்புக்கில் ஷேர் செய்தார் என்பதற்காக, அவரை ஊர்விலக்கம் செய்திருக்கிறது ஜமாத். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜமாத் கூட்டத்தின் முடிவில் அவருக்கெதிராக ‘பத்வா’ அதாவது அவரை அங்க ஹீனம் செய்யும் முடிவை எடுக்க இருக்கிறது. அவரது மனைவியையும் அவரை விவாகரத்து செய்யும்படிச் சொல்லியிருக்கிறது ஜமாத். தென்காசிக்கு அருகேயுள்ள கடையநல்லூர் பரசுராமபுரம் ஜும்மா பள்ளிவாசலில் நடக்கிறது கூட்டம். இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக யாராவது அவருக்கு உதவ முடியுமா? என்னால் முடிந்த வரை பத்திரிகையாளர்களுக்குத் தகவல் தந்திருக்கிறேன். பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக அமைப்புகள், இயக்கங்கள் அனைவருக்குமான வேண்டுகோள் இது.


பேஸ்புக்கில் கவின்மலரின் வேண்டுகோள் இது. இதை கேள்விப்பட்டவுடன் எனக்கு தோன்றிது இந்த தலைப்புதான். அது எப்படி எல்லாரையும் அப்படி சொல்லப்போச்சு என்று கிளம்பவேண்டாம். இது பத்வாவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு மட்டும்தான் பொருந்தும்.


அடப்பாவிகளா இது என்ன ஆப்கானிஸ்தானா ? அங்க ஹீனம் செய்யறானுங்களாமுல்ல ? 


சர்ச்சைக்குள்ளாக்கப்படும் தளம் இது தான் : http://iraiyillaislam.blogspot.com/



இவனுங்கள எல்லாம் கும்பலா ஒரு வண்டியில ஏத்தி ஆப்கானிஸ்தான்ல கொண்டுபோய் விட்டுடுங்கப்பா.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....