Showing posts with label அருந்ததியர். Show all posts
Showing posts with label அருந்ததியர். Show all posts

Sunday, January 25, 2009

அனைவரும் பாராட்டவேண்டிய பறையர் சமூகம்

பறையர்களை நான் மிகவும் அட்மைர் செய்கிறேன்...தமிழகத்தில் முக்கால்வாசி பறையர்களின் வீடுகள் குடிசை வீடுகளே...வேப்பமர நிழலில் சாணி போட்டு மொழுகிய குடிசை வீட்டி தூங்கினால் எவ்வளவு இதமாக இருக்கும்...?

பறையர்களின் அடிப்படை தொழில் விவசாய கூலிகள். அதே சமயம் பெங்களூரில் இருந்து மும்பை வரை சுவீட் கடைகளில், ஓட்டல்களில் கடுமையாக உழைப்பவர்கள்....

ஆங்கிலேயர் காலத்தில் ரொட்டிக்காகவும், கோதுமை மாவுக்காகவும், அரிசிக்காகவும் கிறிஸ்தவ மதத்தை தழுவிய பறையர்களை தவிர மீதிப்பேர் இந்துக்களாகவே இருப்பது மிகவும் பெருமை..

வருணாசிரம தர்மப்படி அவர்கள் சூத்திரர் என்ற பிரிவினர் ஆவர். தமிழக முதல்வர் கலைஞர் கூட தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லிக்கொண்டதுண்டு. இது பெருமை அல்லவா ?

பறையர் இனத்தில் இருந்து முதலில் அமைச்சராக இருந்தவர் கக்கன் ஆவார். காமராஜர் அமைச்சரவையில் சிறந்த அமைச்சர் என்று பெயர் பெற்றவர். கடைசி வரை சொந்த குடிசை மட்டுமே அவரது சொத்து...இது எவ்வளவு பெருமை ?

வேறு எந்த சாதிக்கும் இல்லாத வகையில் பறையர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை என்று தனி துறை, அதற்கு தனி அமைச்சர் என்ற நிலை தமிழ்நாட்டில். இது எவ்வளவு சிறப்பு ?

எந்த சாதிக்கும் இல்லாத வகையில், பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்றால் பணம், கல்லூரியில் படிக்க ஸ்காலர்ஷிப், இடைநிலை ஆசிரிய பயிற்சியில் தேர்வு பெற தனி சலுகை, திருக்கோயில்களில் இலவச திருமணம், கலப்பு மணம் செய்யும் ஆண் பறையராக இருந்தால் மானியத்தொகை என்று எத்தனை எத்தனை சலுகைகள் ?

இவ்வளவு ஏன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்த இனத்தை சேர்ந்தவரே...இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் இன விடுதலைக்காக போராடும் அவரை பாராட்டுகிறேன்...

இரட்டைக்குவளை முறை வைத்து மற்ற சாதியால் தனி குவளையில் உணவு வழங்கப்பட்டு, தனி டம்ளரில் டீ கொடுக்கப்பட்டாலும் " ஆண்ட" என்று சொல்லி எந்த எதிர்ப்பும் காட்டாமல் வாங்கி குடிக்கும் காந்தீய சமூகம் பறையர் சமூகம்...

திருக்கோவில்களில் கருவறைகளில் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, வெளியில் இருந்து கும்பிட்டு செல்லும் அற்புத சமூகம் இந்த சமூகம்...

கஞ்சி ஊற்றினால் அதை குடித்துவிட்டு, நாள் முழுவதும் சலிக்காமல், ஓயாமல் கூலி வேலை செய்யும் உடல் வலுக்கொண்ட ஆண்கள் கொண்ட அற்புத சமூகம்...

சுகந்திர போராட்டம் நடந்தபோது, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எமக்கொரு கவலையில்ல என்று படிப்பறிவை பற்றியோ, முன்னேற்றத்தை பற்றியோ சிந்திக்காமல், உயர்சாதியினர் வீட்டு அடிமைகளாக வாழ்ந்த அமைதி சமூகம் பறையர் சமூகம்...

எல்லா ஊரிலும் சேரி என்று தனியாக தள்ளிவைத்தபோதும் சரி, தொட்டால் தீட்டு என்று ஒதுக்கியபோதும் சரி, எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அதை ஏற்றுக்கொண்ட மென்மை சமூகம் பறையர் சமூகம்...

மற்ற சாதியினருக்கு உட்பிரிவுகள் பல இருந்தாலும் பறையர் சமூகத்தில் அனைவரும் பறையர் என்று வழங்கியது. இதில் இருந்தே தெரியவில்லையா, அது ஒரு சமத்துவ சகோதரத்துவ சமூகம்...

அண்ணல் அம்பேத்கர் போன்ற மாபெரும் பர்சனாலிட்டிகளை கொண்டது இந்த சமூகம். அம்பேத்கர் வடநாட்டு பறையர், தமிழ்நாட்டு பறையரைவிட நல்ல பர்சனாலிட்டி...

திராவிட இயக்கங்களின் வரலாற்றில் பறையரின் பங்கு பெரும்பங்கு. பறையரிடம் ஓட்டு வாங்க ஆயிரம், ஐநூறு எல்லாம் செலவு செய்ய தேவையில்லை...பத்து ரூபாயும் சாராயமும் கொடுத்தாலே போதும். இதில் இருந்தே தெரியவில்லையா, இந்த பறையர் சமூகம் ஒரு சிறந்த சிக்கன சமூகம்...

அரசு இலவசமாக கொடுத்த சீருடைகளை அணிந்துகொண்டு, பள்ளி செல்லும் பிள்ளைகள் அரசு வழங்கும் மதிய உணவை அழகாக உண்டு, செருப்பு அணியாத கால்களில் வெய்யிலை பொருட்படுத்தாமல் வீடு திரும்புவது அழகு. இதில் இருந்தே தெரியவில்லையா ? இந்த சமூகத்தில் சகிப்பு தன்மை இயல்பிலேயே வந்துவிடுகிறது என்று ?




எல்லா சமூகத்தை பற்றியும் எழுதிவிட்டீர்களே, இனி பறையன், சக்கிளி, அருந்ததியர், ஒட்டன் என்று மற்ற சாதியை பற்றியும் பெருமையாக எழுதுங்களேன் சாதி வெறியர்களே ?

தெரு நாய்களே ? உங்கள் வருணாசிரம கொள்கை நெருப்புகள் அணைந்துவிடாம் காப்பாற்ற சாதிகளை பற்றி தொடர்ந்து எழுதி மக்களை மீண்டும் அதே அடிமைப்பாதையில் வைத்திருக்கலாம் என்ற எண்ணமா ?

ஒரு வெகுஜன சரோஜாதேவி பத்திரிக்கையில் இந்த கருமத்தை எழுதும் நாயை செருப்பால் அடியுங்கள்...சர்க்குலேஷனுக்காக மலத்தினை கூட தின்ன தயங்கமாட்டர்கள் இந்த சொறிநாய்கள்..

இன்னும் அடிமைப்பட்டு கிடப்பவனின் உணர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நீங்கள் உணரவில்லை !!!

உங்களை எல்லாம் அதே சேரி பாஷையில் பச்சை பச்சையாக திட்டவேண்டும் என்று எண்ணம் எழுகிறது, இருந்தாலும், என்னை மட்டுப்படுத்திக்கொள்கிறேன்...

அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி !!!!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....