வீட்டு வாடகைகளை தமிழக அரசு கட்டுப்படுத்துமா ?
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களின் பிரச்சினைகள் பற்றி எனக்கு தெரிந்த அளவில்:
1. ஓனர்கள் கேட்கும் அதிகப்படியான அட்வான்ஸ்
2. தகவல் தொழில்நுட்பத்துறையினரை மையமாக வைத்து கேட்கும் அதிகப்படியான வாடகை
3. ஒரு வருடம் வாடகைக்கு இருந்துவிட்டோம் என்றால், எங்க மாமா குடிவருகிறார், மச்சினிச்சி கல்யாணம் ஆகி குடிவருகிறான் என்று உடான்ஸ் விட்டு, வேறு ஒரு குடும்பத்தை அதிக வாடகைக்கு அமரவைப்பது
4. ஹவுஸ் ஓனர் என்றால் அமெரிக்க அதிபர் ரேஞ்சுக்கு கண்டிஷன் போடுவது...இருந்தால் இரு, இல்லைன்னா போ என்பது போல எடுத்தெறிந்து பேசுவது
5. வாடகைக்கு விட்டுவிட்டு, குழாய் ரிப்பேரில் இருந்து எலக்ட்ரிசிட்டி ப்ராப்ளம் எதுவானாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது...
6. வீட்டை காலிசெய்யும்போது, பெயிண்ட் செலவு என்று ஒரு ஐந்தாயிரம் / பத்தாயிரம் பணத்தை அட்வான்ஸில் இருந்து பிடித்தம் செய்துகொள்வது..
7. வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிகள் வந்தால் ரெட் ஐ வைத்து பார்த்து, தண்ணீர் செலவாகிறது, வெண்ணீர் செலவாகிறது என்று லொள்ளு பேசுவது.
மேலும் பல பிரச்சினைகள் பதிவுலக நன்பர்கள் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்...
பல்வேறு தொழில்களை கட்டுப்படுத்தும் / முறைப்படுத்து அரசு, இந்த ஹவுஸ் ஓனர்களையும் ஒரு குட்டு வைத்து கட்டுப்படுத்தினால் என்ன ?
வீட்டு வாடகைகள் வானளாவ உயர்ந்ததற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரும் ஒரு காரணம், அதற்கான இந்த துறையில் இருக்கும் நான் வேதனைப்படுகிறேன்...
தி.நகர் ஏரியாவில் இருக்கும் அரசு ஊழியர் தி.நகர் பகுதியில் வாழவே முடியாத அளவுக்கு வாடகைகள் உள்ளன, அவர் செங்கல்பட்டு போன்ற ஏரியாவிலிருந்து இரண்டு மணிநேரம் பயணம் செய்து வரவேண்டியுள்ளது, அவர்கள் சந்திக்கும் தொல்லைகள் சொல்லி மாளாது, குறிப்பாக பெண் ஊழியர்கள், அரசு / மற்றும் தனியார் துறையில் (தகவல் தொழில்நுட்பத்துறை அல்லாத) உள்ளவர்கள்...!!!
அடையாறு ஏரியாவா, வீட்டு வாடகை ஆறு ஆயிரத்தை தாண்டக்கூடாது, அட்வான்ஸ் இருபதாயிரத்தை தாண்டக்கூடாது...அம்பத்தூர் ஏரியாவுக்கு இவ்வளவு தான் வாடகை...
அதிகப்படியாக கேட்கும் ஹவுஸ் ஓனர் மீது கிரிமினல் வழக்கு பதியலாம் என்பது போன்ற கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்...
மீறி தவறு செய்யும் ஹவுஸ் ஓனர்கள் வீட்டை பிடுங்கி, அனாதை ஆசிரமங்களுக்கு தானமாக கொடுக்கவேண்டும்...
தகவல் தொழில்நுட்பத்துறையினர் வாடகை தர தயாராக இருக்கிறார்கள் என்பதற்காக சாதாரன மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வயிற்றில் அடிக்கும் இந்த ஹவுஸ் ஓனர்களுக்கு இது போன்ற ட்ரீட்மெண்ட் தான் பலன் தரும்...
இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறையினரை குற்றம் சாட்டி பலன் இல்லை, அவர்கள் நான்கு ஐந்து பேராக தங்கி அலுவலகம் செல்வதற்கு, தலைக்கு இரண்டாயிரம் என்று போட்டு பத்தாயிரம் கூட வாடகையாக கொடுத்துவிடுகிறார்கள்...
அதிகப்படியான வேலை மற்றும் நேரம் காலம் இல்லாத துறையான தகவல் தொழில்நுட்பத்துறையினர், அலுவலகத்துக்கு அருகில் வீடு இருந்தால் நல்லது என்று அதிகப்படியான வாடகை கூட கொடுத்துவிடுகிறார்கள்..
ஆனால் பாதிக்கப்படுவது, உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் தான்...
சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு வாடகை என்று சரியாக தெரியவில்லை, நன்பர்கள் பின்னூட்டத்தில் தரவும்...
அரசின் காதில் இந்த விஷயத்தை கொண்டுசெல்ல வலைப்பதியும் பத்திரிக்கையாளர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும்..
Showing posts with label ஓனர்கள். Show all posts
Showing posts with label ஓனர்கள். Show all posts
Tuesday, August 26, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...