Thursday, July 24, 2008

இளமை விகடன் தளம் பல்லிளிக்குதே !!!!

நைனா !!!

தளம் என்னவோ பட்டாஸா தான் கீது...ஆனா கரீயர் கைடன்ஸ் பேஜ் க்ளிக் பண்ணா எரர் அடிக்குது...

http://youthful.vikatan.com/ ( சேமிச்சுக்கறேன் தளத்த)

அப்புறம் தபா தபா லாகின் பன்னச்சொல்ல சொல்ல கயுத்த அறுக்குதுபா !!!! கொஞ்சம் டெக்னிக்கல் டீம் டிக்கியில கொஞ்சம் முள்ள கட்டுங்கப்பா !!!

(அந்த தளத்துக்கு போய் வந்ததுல இருந்தே இப்படித்தான் பேச வருது அக்காங்க்க்க் !!!

Tuesday, July 22, 2008

சுகுணா திவாகர் - அ.மார்க்ஸ் - எக்ஸ்குளூசிவ் படம்




சுகுணா திவாகர் திருமணத்தின் போது, பேராசிரியர்.அ.மார்க்ஸ் முன்னிலையில் திருமண உறுதிமொழி எடுத்தபோடு எடுத்த படம்...

Monday, July 21, 2008

SSL பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கீங்களா ?

இப்போது புடுங்கிக்கொண்டிருக்கும் ஆன்சைட் ஆணி SSL பற்றியதாகும்..பல்வேறு வகை சர்ட்டிபிக்கேட்டுகள் உருவாக்குவது,

அவற்றை சுயமாக கையொப்பமிடுவது (Self Signing the Certificates) மற்றும் பல்வேறு வகை எரர் மெஜேஜுகளை சர்வர் தரப்பில் இருந்து நாமே உருவாக்கி அளிப்பது ( Bad Certificates, Illegal Certificates, Client Error) போன்றவற்றை...

Client Hello, Server Hello, Key Exchange, Chipers ஆகியவற்றுக்கு முன்னும் பின்னும் வரவைப்பது...

மற்றும் வகைவகையாக SSL தளங்கள் மாறும்போது, நமது Session ID மாறிக்கொண்டேயிருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்...

மேலும் Forced Alerts ( Warning & Fatel) ஆகியவற்றை SSL3/TLS போன்றவற்றை பாவிக்கும்போது தரவேண்டும், அதை கணக்கீடு செய்தல் வேண்டும்...

நான் இப்போது பாவிப்பது OpenSSL மற்றும் Apache / IIS ஆகியவற்றை கொண்டும், கிளையண்ட் கொடுத்த ஒரு சிறிய சர்வெர் அப்ளிக்கேஷன் மூலமாகவும்...

ஒப்பன் எஸ்.எஸ்.எல் s_server & s_client ஏதோ அவுட் புட் வீசுகிறது, முழுமையாக புரிந்துகொள்ள இயலவில்லை...

ஈத்தரியல் உபயோகப்படுத்தி பார்த்தேன், அதில் Forced Alerts காண்பிப்பதில்லை...Client Hello மற்றும் server Hello, key exchange, cipher ஆகியவை (High Level layer ல்) காட்டுகிறது...

இன்றைக்கு கடும் தலைவலி ஊடாக செய்ய முயன்ற ஆராய்ச்சியின் விளைவு...ஒன்னுமில்லை...

வலைப்பதிவர்கள் யாராவது SSL பற்றி அறிந்திருந்தால் அதற்கான வழிவகைகளை சொல்லி உதவினால் நலம்...

உங்கள் மின் அஞ்சல் அனுப்பினால் நானே தொடர்புகொள்கிறேன்....

என்னுடைய பதிவு அன்மையில் மறுமொழியப்பட்ட இடுகையில் வராது. உங்களுக்கு தெரிந்த நன்பர்கள் இது பற்றி அறிந்தவர்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் ஒரு பார்வேட் செய்யுங்கள் ப்ளீஸ்...

Monday, July 14, 2008

பெருமூச்சு + பீஜியோ 207 - வண்டின்னா இது வண்டி...

சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில் நான் மிகவும் விரும்பும் பீஜியோவின் புதிய மாடல் CC 207 நிறுத்தியிருந்தார்கள்...



அதை வாங்கி ஓட்டத்தான் முடியாது...ஒரு படமாவது எடுத்துக்குவமே என்று எடுத்தது....!!! ஹும்...(பெருமூச்சு)

கடிகாரம்...(அறிவியல் சிறுகதை போட்டிக்கு)

அதிகாலை நேரம்...

நான் என்னுடைய மெகா-சைஸ் படுக்கையில்....

உறங்கிக்கொண்டிருக்கிறேன்...

அலாரம்...

முதல்முறை அடித்தது...

கண்கள் சொக்கிக்கொண்டு வந்தது...

நேற்றிரவு நேரத்துக்கு படுக்கைக்கு வராததன் விணை...

மீண்டும் அடித்தது...

போர்வையை சற்று நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டேன்...

மீண்டும் அடித்தது...

ஆனால் இந்த முறை அலாரமாக இல்லை...

தன்னுடைய ரோபோ கால் ஒன்றை படுக்கைக்கு அருகே ஊன்றி, ஒரு காலை படுக்கையின் மேல் ஊன்றி, ஒரு கரத்தால் என் தலை முடியை பிடித்து தூக்கி...

கன்னத்தில் "பொடேர்" என அடித்தது...ஆம்...கடிகாரம் என் கன்னத்தில் தான் அடித்தது....

சன்னமான குரலில் சொன்னது...

மிஸ்டர் "2454ரவி10X"...செவ்வாய் கிரகத்துக்கான உங்கள் பயணம் இன்னும் எட்டு நிமிடத்தில் ஆரம்பிக்கப்படப்போகிறது...அழிந்துபோன பழைய கல்பாக்கம் நகர் அருகே உங்கள் கலம் காத்திருக்கும் செய்து வந்துள்ளது...வெளியில் சென்று ஏர் காரில் ஏறுங்கள்...!!

மணி பார்த்தேன்...திருவள்ளுவர் ஆண்டு 3039 காலை ஆறு...




பி.கு: திருவள்ளுவர் ஆண்டு என்பது, கிரகோரியன் காலெண்டர் (ஆங்கில காலண்டர்) உடன் 31 ஆண்டுகள் கூட்டினால் வருவது..(அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் காலெண்டர் முறையினை பின்பற்றவேண்டும் தமிழக அரசு எழுபதுகளில்அரசாணை பிறப்பித்தது என்று நினைக்கிறேன்.)

கதை பற்றி: சிறில் அலெக்ஸ் அறிவியல் புனைக்கதை போட்டிக்கு எழுதியது...உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நன்பர்களுக்கும் சொல்லவும்..மேலும் ஒரூ ஓட்டை குத்தவும்...

Sunday, July 13, 2008

அன்புக்குரிய வாத்தியார், அண்ணன் உண்மைத்தமிழன், கூடுதுறை எல்லோருக்கும் ஒரே பதிவில்

சோதிடம், ஜாதகம், கடவுள் நம்பிக்கை, கோவில், அய்யர், வருணாசிரமம், மனுதர்மம், உண்டியல், தேங்காய்மூடி, பகுத்தறிவு, சொரணை, தமிழன், இராவணன், அலைபேசி, ஆட்டுக்குட்டி.

அவல், ஆர்யா, அட்டு, ஆறு, அறுவை, வகுப்பு, வெட்டி, கொட்டி, பட்டி, ஆடு, அய்யோ, முட்டாள், மங்குனி, மடையன், மஸ்காரா, தம்பி, தவுடு, வடகலை, வறுத்தமுந்திரி, பார்ப்பனர், குரங்கு, அமீபா, பால்வெளி மண்டலம், நட்சத்திரம், பீனிக்ஸ், விண்கலம், செவ்வாய், சனி.

உருப்படாதவன், அபிஷ்டு, சனியன், சகடை, சண்டாளன், சூத்திரன், செட்டியார், நாயுடு, கம்மாவார், ஆச்சி, போச்சு, மூச்சு.

முருகன், பழனி, ஆண்டி, சந்தனம், திண்ணை, திண்டுக்கல், சமுத்திரம், பாரதிராஜா, ஊ.வே.திரிப்புசாமி அய்யர், குடந்தை ஜெஸ்டின் கோபால்சாமி, கோத்தகிரி, பார்வை நீதிபதி, பார்ப்பார்.

வளர், திகழ், புகழ், ஏழரை, எட்டறை, ஒம்போதறை, ஓடிப்போனவன், பத்துமணி, நெத்தியடி, ஜல்லியடி.

ஜட்டி, குட்டி, புட்டி, முட்டி, ஒட்டி, வெட்டி, சட்டி, பட்டி, மட்டி, செட்டி, தீபாவளி ஜாட்டி.

திருமணம், கல்யாணம், மணம், அணு, அண்டம், கரும்புள்ளி, நாடகம், கண்ணதாசன், கருமை, புட்டி, புதுவை, வியர்வை.

கடைசியாக...

சோதிடம், ஜாதகம், பரிகாரம், கோவில், அய்யர், அய்யங்கார், மனுதர்மம், மூடநம்பிக்கை, சாதீயம், வெளிப்பாடு, பகுத்தறிவு, பெரியார், பார்ப்ஸ், அடி, உதை, கலகம், முட்டு, மூடு, பொத்து.

Saturday, July 12, 2008

தமிழ் வலைப்பதிவு for டம்மீஸ் !!!

முதலில் நீங்கள் பழைய வலைப்பதிவரா, அல்லது புதிய வலைப்பதிவரா என்பதை கண்டுபிடித்துவிட்டு எப்படி வலைப்பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்...

அ மற்றும் ஆ என்றால் என்ன என்பதை கடைசியில் பார்க்கலாம்...

செக்-பாய்ண்ட் - 1

தமிழ்மணத்தை துவக்கியது காசி என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

தமிழ்மணத்தை துவக்கியது டோண்டு ராகவன் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்...

செக்-பாய்ண்ட் - 2

தமிழ்மணம் அமெரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்...

தமிழ்மணம் ஆப்ரிக்காவில் இருந்து நடத்தப்படுவது என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 3

லக்கிலூக் முப்பத்து மூன்று வயதுக்காரர், ஓல்டு மங்கை ராவாக...அடிப்பவர்...மற்றும் கல்யாணமானவர் என்று நீங்கள் நினைத்தால் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

லக்கிலூக் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன், செவன் அப் குடித்தாலே மப்பு ஏறக்கூடியவர் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 4

பார்ப்பணீயம், மீபொருண்மை, பெண்-ஈயம், பின்நவீனத்துவம், பொதுவெளி, வர்க்கபோராட்டம், போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இதெல்லாம் இன்னாது என்று கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 5

ஆடுமாடு, பைத்தியம், கூடுதுறை போன்ற வஸ்துக்கள் என்னவென்று தெரிந்தால் நீங்கள் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

மாடு என்பது மேயும், பைத்தியம் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் போன்ற பொதுவான பதில்களை நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 6

சூடான இடுகையில் வர, "தசாவதாரம்" என்று தலலப்பு வைக்கவேண்டும் என்று தெரிந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

பக்கம் பக்கமாக ஆராய்ச்சி, பயணக்கட்டுரை, சோதிடம் என்று நல்ல பதிவுகள் போட்டால் உங்கள் பதிவை பலர் வாசிப்பார்கள் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 7

உண்மைத்தமிழன் பதிவை ஓப்பன் செய்ய ஒன்னே முக்கா மணிநேரமும், படிக்க பதினாறு மணி நேரமும் ஆகும் என்ற ரகசியம் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

உண்மைத்தமிழன் பதிவு ஓப்பன் ஆகாததுக்கு உங்கள் கம்பியூட்டரில் தான் ஏதோ கோளாறு என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 8

நரேந்திர மோடி, சோ, குருமூர்த்தி, இஸ்ரேல் போன்றவற்றை ஆதரிப்பவர் ஒரு க்ராஸ் பெல்ட் என்று ஜஸ்ட் லைக் தட் நீங்கள் கண்டுபிடித்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

கராத்தேயில் ப்ளாக் பெல்ட் தானே தருகிறார்கள், அது என்ன க்ராஸ் பெல்ட் என்று நீங்கள் கேட்டால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

செக்-பாய்ண்ட் - 9

உள்குத்து, கும்மி, சுண்டக்கஞ்சி, மொக்கை, டவுஸர் கிழிந்து தாவு தீருவது, ஏஞ்சலினா கோவிந்தசாமி, கேத்தரின் பழனியம்மாள், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்ற பதங்களையும் அவற்றின் பயன்களையும் நீங்கள் அறிந்திருந்தால் நீங்கள் (அ) வலைப்பதிவர்..

இவை எல்லாம் தமிழில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் (ஆ) வலைப்பதிவர்..

இப்போது பதில்கள்...

அ - பழைய
ஆ - புதிய]

நன்றாக இருந்தால் இந்த விண்ணர் கையை அமுங்குங்க !!!

Tuesday, July 08, 2008

நான் கொரியாவில் நேஷனல் பார்ட்டியைத்தான் ஆதரிக்கிறேன்...

ஜப்பான் பற்றியும் ஜிங்கிலி கட்சி பற்றியும் பதிவு போட்டு படுத்தியாகிவிட்டது. இப்போது கொரியா முறை ("யாரையும் விடமாட்டியா நீயி" என்று காண்டு கஜேந்திரன் கத்துகிறான்).

அப்பதிவில் உள்ளதுபோல் இங்கேயும் என்னை சப்பை மூக்கு கொரியனாகவே கருதிக்கொண்டு எழுதுகிறேன் (பச்சையாக சாப்பிட்ட மீன் பற்றி சொல்லமாட்டேன்..அது நிறைய பேருக்கு உவ்வே ஏற்படுத்திவிடும்)..

கொரியாவில் கிராண்ட் நேஷனல் பார்ட்டி மற்றும் யுனைட்டட் நியூ டெமாக்கிரட்டிக் பார்ட்டி ஆகியவை இருந்தாலும் கிரியேட்டிவ் கொரியா பார்ட்டி என்று ஒரு பாட்டி...ச்ச்சே பார்ட்டி உண்டு...அந்த கட்டியின்...ச்சே கட்சியின் மூன் கூக் கியூன் தவிர மீதிப்பேர் முப்பது ஓட்டுக்கு கம்மியாகத்தான் வாங்கியுள்ளார்கள்...அதனால் அதுகுறித்து இப்போது பேசவேண்டாம்...(எப்போது பேசினால் என்ன ? புரியவா போவுது ?)

நான் ஜப்பான் விடயத்தில் கூறியதுபோல கிராண்ட் நேஷனல் பார்ட்டி ஆச்சி...ச்சே ஆட்சி காலத்தில் கொரியா பல பெருமைகளை அடைந்தது...மனதுக்கு வருபவர்கள் பிம்பிலிக்கா பிலாப்பி, மற்றும் மாமா பிஸ்கோத்து...இல்லை இல்லை...லீ இன் ஜீ மற்றும் ஹக் ஹுக் ஹெக் ஜங்...

லீ இஞ்சி பற்றி இப்போது கூறுவேன்...இல்லை கூறமாட்டேன்...இல்லை இல்லை கூறுவேன்...அதுக்கு முன்னால அப்பாலிக்கா ஒரு டைவர்ஸ்..இல்ல..டைவர்ஷன்.....

"yes Mr.Mokkai's an-yong-ha-sim-ni-ka", "No Mr.Mokkai yo mokkai's kam- sa - mi - da" போன்ற கொரிய சீரியல்களை பதிவர்கள் பலர் பார்த்திருப்பார்கள்..(யோவ் நான் எப்பய்யா அதெல்லாம் பார்த்தேன் என்று கேக்கப்படாது ஆமாம்)

அந்த சீரியலில் ஆட்டுக்கால் சூப்பை மந்திரிகளும் பிரதமரும் போட்டி போட்டுக்கொண்டு வெவித்து திங்கும்போது சூப்பராக இருக்கும்...

லீ இஞ்சி, குடி கஞ்சி ஆகியவர்களை தவிர வேறு யாரும் என் கண்ணில் படவில்லை...( அவங்க எப்படி கண்ணில் படுவாங்க...அவுங்க என்ன தூசா, துரும்பா ? )

லீ இஞ்சி அமெரிக்காவுக்கு ஜால்ரா போட்டு வட கொரியா அழிவுக்கு காரணமாக இருந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கூறுவேன்...(எவனாவது அழிஞ்சா மகிழ்ச்சிதானே )

லீ இஞ்சி எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கி நல்ல துட்டு சம்பாதித்தார்...மேலும் அவரது காலத்தில் சியோலில் இருந்து பூசான் செல்லும் பாதையில் மொத்த வரிவசூல் பதினைந்து மில்லியன் கொரியன் வான் (WON - கொரியா காசு) ஆனால் அதே நேரத்தில் பூசான் பக்கத்தில் மொத்த வரிவசூல் பண்ணிரண்டு மில்லியன் வான் மட்டுமே...

இதில் இருந்தே தெரியவில்லையா ? லீ இஞ்சி எப்படிப்பட்ட நிர்வாகி, எவ்வளவு சிறப்பான ஆட்சியை தந்தார் என்று ?

லீ இஞ்சி அவர்களுக்கு ஜுரு ஜூர்த்தி என்று ஒரு ஆலோசகர் கூட இருந்தார்...அவர் சிறப்பாக செயல்பட்டதால் கொரியாவில் எல்லா இடங்களிலும் விளக்கு எரிந்தது, பகலில் கூட...

பதிவை பப்ளிஷ் செய்தபிறகு இன்று வாடிக்கையாளர் அனுப்பிய வாடகைக்காரில் கஸான் தாங் (KASAN DONG) ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று காய்கறி வாங்கவேண்டும்...

அதுவரை கணிணியை திறந்து வைத்தால் காற்றுபோய் விடும் என்பதால் கணினியை மூடிவிட்டு, இந்த பதிவை பப்ளிஷ் செய்த கையோடு, பதிவர் லக்கி அவர்களிடம் என்னுடைய பதிவை மீள் பதிவாக அவர் பதிவில் போடுமாறு கோரிக்கை விடுத்துக்கொண்டு, கிளம்புகிறேன்...

அடுத்த பதிவு, சீனாவை பற்றியது...சீனாவில் நான் எந்த கட்சியை ஆதரிப்பேன் என்று யூகமாக கூறுபவர்களுக்கு ஒரு செட் சாரைப்பாம்பு வறுவல் அனுப்பத்தயார்...

வளர்க மொக்கை...!!!

ஓசை செல்லாவுக்கு ஒரு சவால் !!!!

ஓஷோ சீடர் ஓசை செல்லா அவர்களே !!!



காமம் கலக்காத ஒரு காமக்கதை எழுதி அதை சூடான இடுகையில வரவையுங்க பார்ப்போம்...!!!!

Friday, July 04, 2008

லவ் லெட்டர்...!!!!

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தபின் வேறு பெரிய வேலை ஒன்றும் இருக்காது...நாங்கள் நான்கு பேச்சுலர்ஸ் ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கோம்...

நான், மணி, கோயிந்தன் மற்றும் இளா நாலுபேரும் ரூம்மெட்ஸ்..

திருச்சியில இப்பல்லாம் ரெண்டாயிரத்துக்கு பேச்சுலர்ஸ் வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டமாயிருது...

மாம்பழச்சாலை ஏரியாவுல ஒரு சிங்கிங் பெட்ரூம்...

வீட்டுக்கு பக்கத்துல கேள்ர்ஸ் ஹைஸ்கூல்...

நம்ம மணி ஒரு 'காதலன்'...எங்க ரூம்லயே லவ், அது இதுன்னு போனது அவன் மட்டும்தான்...லவ் லெட்டர்லாம் வரும் அவனுக்கு...காலேஜ் கட்டடிச்சுட்டு வந்து கேர்ல்ஸ் ஸ்கூல் பக்கம் அலைஞ்சுக்கிட்டிருபான்...

நாங்க மாரீஸ்ல படம்பார்க்க போனா, எவளோ ஒருத்திக்கு ட்யூசன் முடியும், பார்க்க போவனும்னு போவான்...

இந்த லவ் மேட்டர் எல்லாம் அதிகம் எங்கக்கிட்ட ஷேர் பண்ணமாட்டான்னு வைங்களேன்...

நான் தான் அப்பப்ப சொல்லிக்கிட்டிருப்பேன்...இந்த லவ் அது இது எல்லாம் வேண்டாம், ஏதாவது பிரச்சினை வரும்டா என்று...

நாங்க மூனுபேரும் வெத்துவேட்டுங்க...எதும் செட்டாகலன்னு வைங்களேன்...

ஆங்...எதுல விட்டேன்...காலேஜ்ல இருந்து வந்தபிறகு நாங்க அப்படியே வீட்டுக்கு பக்கத்துல ப்ளாஸ்டிக் பால் கிரிக்கெட் விளையாடுவோம்னு வைங்களேன்...

அன்னைக்கு அப்படித்தான்...ஒரு நாலுமணி இருக்கும்...நாங்க விளையாடிக்கிட்டிருக்கோம்...

ஏதோ பாரின் கார் வந்து நிக்குது...

தடார் புடார்னு நாலுபேர் இறங்குறானுங்க...

ஏய்...எவண்டா இங்க மணி...அவனுங்களோட குரல்ல அனல் பறக்குது...

எங்க கை விரல் மட்டும் தானா அவனை காட்டுது...

என்ன சார் விஷயம்...இது நான்...

இளா மட்டும், சார், எதுவா இருந்தாலும் உள்ள வாங்க சார், பேசிக்கலாம் அப்படீன்னு அவங்களை தேக்குறான்...

அவனுங்க பேசுற மூட்லயே இல்லை...

பொடேர்னு ஒரு அப்பு அப்பிட்டானுங்க...மணி எழுதுன ரெண்டு 'கவிதை' லவ் லெட்டரை எடுத்து மூஞ்சி மேலே வீசுறானுங்க...(அந்த கவிதை யாருக்கும் புரியாதுங்கறதுன்றது வேற விஷயம்...)

விசயம் இது தான்....பொண்ணோட அண்ணன் அவளோட புத்தகத்தை திறந்து பார்க்கையில...அதுல மணியோட லெட்டர் சிக்கிருச்சு...

பொண்ணு நல்லவ வேஷம் போட்டுட்டு...மணி தான் தன்னை தொந்தரவு செய்யறதாவும், அவ ரொம்ப நல்லவன்னும் சொல்லிட்டா...

அதான், மண்டகப்படி நடத்த பொண்ணோட அண்ணனும் அவனோட ப்ரெண்ஸும் வந்துட்டானுங்க...

காட்டுக்கார்த்தின்னு ஒரு காலேஜ் பிரெண்டு...அவன் யானை மாதிரி இருப்பான்...அன்னைக்குன்னு பார்த்து ஏதோ வேலையா எங்க ஏரியாவுக்கு வந்தவன், வீட்டுப்பக்கம் வரவும்...

நல்ல வேளை....

அதிக மொத்து விழாம அந்த தடியனுங்களை தேக்கிட்டான்...

அப்புறம் என்ன...காம்பரமைஸ் அது இதுன்னு ஒரு வழியா முடிஞ்சது.....இந்த காம்பரமைஸ் நடக்கும்போதும் சரி, அவனுங்க மொத்தும்போதும் சரி, மணி ஒரு விஷயத்தை மட்டும் ஓப்பன் பண்ணவேயில்லை...

எனக்கும் பயங்கர டென்ஷன் தான்...அது என்னன்னு கேக்குறீங்களா...

அந்த பொண்ணும் இவனுக்கு சில பல லெட்டர்களை எழுதுச்சு தானே...அதை பட்டுனு எடுத்து அவனுங்க மூஞ்சியில எறிஞ்சிருந்தா, அவனுங்களே ஆப் ஆகி போயிருப்பானுங்க...

ஆனா இந்தப்பய கெணத்துல போட்ட கல்லுமாதிரி கம்முனு இருக்கான்...அதான் எனக்கும் டென்ஷன்...

சரி அவனே சொல்லலை...அதுக்கு ஏதாவது காரணம் சொல்வான்...அந்த பொண்ணை காட்டி கொடுக்க விரும்பல அப்படீ இப்படீன்னு ஏதாவது... அதனால நானும் அமைதியா இருந்துட்டேன்...

ஒருவழியா ஓஞ்சு போய் - பெரிய வார்னிங் மெஸேஜ் எல்லாம் கொடுத்துட்டு கிளம்பினானுங்க.....காட்டுக்கார்த்தி அனுப்பிவுட்டுட்டானுன்னு வெய்ங்களேன்...

நான் எரிச்சலா கேட்டேன்...மணிய...

ஏண்டா நாதாரி...அவனுங்கக்கிட்ட அந்த பொண்ணு எழுதுன லட்டரை எடுத்து போட்டிருந்தின்னா, இவ்ளோ நேரம் அவனுங்க பேசியிருப்பானுங்களா....அப்படீன்னேன்..

இவன் அமைதியா சொல்றான்...

டேய் அது எனக்கு தெரியாதா...இவனுங்க என்ன பெரிய ஆளா...ஆனா...இந்த லட்டர்ஸை நான் மாலாவுக்கு எழுதினேனா இல்லை அவங்கக்கா பிரதீபாவுக்கு எழுதினேனான்னு தெரியலடா...அதுமட்டும் நியாபகம் வந்து தொலைஞ்சிருந்துது....கரெக்டா எடுத்து மூஞ்சியில வீசியிருக்கமாட்டேன்...ஹூம்...

Thursday, July 03, 2008

ஹிராநந்தானி இட்லி

என்ன ? நேத்து நைட்டு சாம்பாரா ?

சாப்பாட்டு தட்டை தடாரென வீசி எறிந்தவுடன் அதிர்ந்து போனாள் அம்மா...

அதிகம் அலம்பல் எல்லாம் பண்ணாத நான் இப்போதெல்லாம் யாரையும் மதிப்பதில்லை...தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆறு இலக்க சம்பளம் வாங்கும் எனக்கு யாரை மதிக்கவேண்டிய அவசியம்...

என்னுடைய ப்ராஜக்ட் மேனேஜரும், அப்ரைசலும், ப்ராஜக்ட்டும் தான் முக்கியம் எனக்கு...

என்னுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை அம்மா, அப்பா உட்பட எல்லோரும் சகித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்...

வேற வழி...

ஆனால் இப்போதெல்லாம் அதிகம் கோபம் வருகிறது எனக்கு...ஹும்...

ஏண்டா சாப்பாட்டு தட்டை வீசுற...பிடிக்கலைன்னா வெச்சிடலாமில்ல...

என்னது...பிடிக்கலைன்னா வெச்சுடறதா ? என்ன பண்ணிவெச்சிருக்க நீ ?

இட்லி தாண்டா...இவ்ளோநாளா சாப்பிட்டுக்கிட்டு தானே இருக்கே...தெரியாதா...

இட்லி சரி...ஏன் நேத்து நைட்டு சாம்பாரை ஏன் சூடு பண்ணி வெக்குற ? ஏன் புதுசா செய்யவேண்டியது தானே ?

நேத்து நைட்டு உனக்காக பண்ணது தாண்டா...நீ லேட்டா வந்தெ...ஆபீஸ்ல பிசா சாப்பிட்டேன்னு சொன்னே...அப்படியே நின்னுபோச்சு...

நானும் அப்பாவும் இதை தாண்டா சாப்பிட்டோம்...நல்லாத்தானே இருக்கு...

நல்லா இருக்கு - நல்லா இல்லைங்கறது இல்லை பிரச்சினை...நேத்து சாம்பார் எதுக்கு வெச்சே ? ஆபீஸ்ல நாலு வெரைட்டி சாப்பாடு இருந்தும் இங்கே சாப்பிடுறேன் பாரு...என் தலையெழுத்து...

சரேலென வெளியேறினேன்....

***************************************************

மும்பைக்கு மாற்றலானது...மேனேஜராக உடனே பணி ஏற்கும்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள்...

அந்தேரிக்கு அருகில், ஹிராநந்தானி காம்ப்ளக்ஸில் ஆபீஸ்...

ஒரு வாரமாக ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம்...

அடுத்த வாரம் அப்பார்ட்மெண்ட் ஷிப்ட் ஆகிறேன்...

ஆபீஸ்ல வெறும் சப்பாத்தி சப்ஜிகள், நார்த் இண்டியன் ஐட்டம்ஸ்...

ஒரே வாரத்தில் வெறுத்துப்போனது...

உடன் பணியாற்றும் பஞ்சாபி கேள், அந்தேரி ஈஸ்ட்டில் இருந்து வருகிறாள்...

அவளிடம் உணவுப்பிரச்சினையை சொல்லி, ஈவ்னிங் ஏதாவது நல்ல சவுத் இண்டியன் ஹோட்டலுக்கு அழைத்துப்போகுமாறு சொன்னேன்...

ஹோ யூ வாண்ட் ஸவுத் இண்டியன் புட் ? இன் அவர் கேப்பஸ் நீல்கிரீஸ் ஈஸ் தேர் யா...

ஐ வில் டேக் யூ டுடே லஞ்ச் ஒன்லி...என்றால்...

நீல்கிரீஸ் நான் நினைத்த அளவு பெரியதாக இல்லை என்றாலும்...ஏதோ தமிழ் முகம் அங்கே கவுண்டரில் இருந்தது...

வாட் யூ வான்ன ஹாவ் சார் ?

தமிழ்லேயே சொல்லுங்கப்பூ...என்ன இருக்கு...

இட்லி இருக்கு சார்...ரொம்ப ப்ரஷ்...பிப்டி ருப்பீஸ் பர் ப்ளேட்...என்றான்...

ஓக்கே ரெண்டு ப்ளேட்டா கொடுத்திருங்க என்றேன்...

நாக்கு உள்ளுக்குள் தாளம்போட்டது...

சார் வீ டோண்ட் ஹேவ் சட்னி...சாம்பார் மட்டும்தான் சார்...என்றான்...

ஓக்கே பரவால்ல கொடு என்றேன்...

ரெண்டு ப்ளேட்களில், ப்ளேட்டுக்கு இரண்டு இட்லியாக வந்துசேர்ந்தது...

படபடவென சாம்பாரில் நனைத்து நான்கு இட்லிகளை ஐந்து நிமிட நேரத்தில் உள்ளே இறக்கியதை பார்த்து 'ஆ' வென வாயை பிளந்தது பஞ்சாப்...

பில் கொடுக்கும்போது...

இட்லி நல்லா இருக்கே...நீங்க இங்கேயே பண்றீங்களா...

நோ சார்...ஈரேட்ல இருந்து வருது...கிங்பிஷர் ஏர்லைன்ஸ்ல...சண்டே நைட் பாக் ஆகி, மண்டே மார்னிங் வந்திரும் சார்...அது ஒன் வீக் ப்ரிஜ்ல வெச்சு, ஹாட் பேக்ல சூடு பண்ணி தரோம் சார்...என்றான்...

கையில் இருந்த வாட்சில் கிழமையை பார்த்தேன்...வெள்ளிக்கிழமை...

ஹே. நவ்ஜோத்...ஐ நீட் மை போன் கால்யா...கேன்யூ கிவ் யுவர் மொபைல்...

வீட்டு தொலைபேசி எண்ணை டயல் செய்தேன்...அம்மாவிடம் பேசவேண்டும்போலிருந்தது.

*******************************************

ஏங்க, அவன் என்னை மொறைக்கிறான்..!!!

அலுவலகம் விட்டு வந்தவுடன் வீடு இரண்டுபடுவது போல கத்தினாள்...

ஏய்...ஏன் இந்த கொலைவெறி ? என்ன ஆச்சு ?

அவன்...அவன்...பல்லை நறநறவென கடிக்கிறாள்...

என்னாச்சு சொல்லும்மா...

அவன் என்னை மொறைக்கிறான்...

யாரு ?

எதிர்த்த அப்பார்ட்மெண்ட் வாச்மேன்...

ஹெஹ்ஹே...

ஏங்க...நீங்க என்ன லூசா ? இவ்ளோ சீரியசான விஷயத்தை சொல்லிக்கிட்டிருக்கேன்...

என்னம்மா இது...உன்னை கல்யாணம் பண்ணப்பவே தெரியாதா ? இப்பதான் கண்டுபிடிச்சமாதிரி சொல்ற...

ஏங்க...உங்க மொக்கை காமெடியை நிறுத்துங்க...மொதல்ல விஷயத்துக்கு வாங்க...

இதுல என்னம்மா பெரிய சீரியஸ்...மொதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லு...அவன் யாரு ?

முகத்தை சிடுசிடுவென வைத்தபடி...எதையுமே புரிஞ்சுக்கமாட்டியாடா என்றதுபோன்ற ஒரு பார்வையுடன்...

ஏன் உங்களுக்கு தெரியாதா ?

சும்மா சொல்லேன்...

எதிர்த்த வீட்டு வாச்மேன்...

அப்புறம் ? மொறைக்காம என்ன செய்வான்...கேட்ல நின்னுக்கிட்டு மொறைக்கறதுக்கு தான் அவனுக்கு சம்பளம் தறாங்க...ஹி ஹி...

ஏங்க, இப்படி லூசுமாதிரி பேசுறதை என்னைக்கு தான் நிறுத்தப்போறீங்களோ ? அவன் போறவறவங்களை பார்த்து மொறைக்கறதை நான் சொல்லலை...இந்த புதுவீட்டுக்கு குடிவந்த ஒரு வாரமா நான் எப்ப வெளிய வந்தாலும் என்னையே மொறைச்சு பார்க்குறான்..

அவன் கண்ணு இன்னுமா அவிஞ்சு போகாம இருக்கு ? ஹி ஹி

சர்ர்ர்ரென பறந்து வந்த வாட்டர் பாட்டில் ஒன்று பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது எனக்கு...

ஓக்கே ஓக்கே செல்லம்...நான் இப்பவே கவனிக்கறேன்...

மெதுவாக வெளியே வந்தேன்...பெங்களூரின் மெல்லிய காற்று முகத்தை வருடியது...எங்கோ பார்ப்பதுபோல் லேசாக எதிர்விட்டு கேட் பக்கமாக பார்வையை திருப்பினேன்...

குள்ளமான வடக்கத்தி வாச்மேன்...குறுகுறுவென பார்க்கிறான்...ஆமாம்...இவன் பார்வையில் ஏதோ வித்யாசம் இருக்கிறது...எனக்கு ஜில்லென்றது...

போனவாரத்திலிருந்து வாச்மேன் கொலைகாரனாக மாறிய கேஸ் ஒன்று ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது...

மனைவியை தனியாக விட்டுவிட்டு அலுவலகம் போகும் எனக்கு அது வேறு நினைவுக்கு வந்து லைட்டாக கிறுகிறுத்தது...

வேகமாக உள்ளே வந்தேன்...

ஏய்..ஆமாண்டி..என்னையும் குறுகுறுன்னு பார்க்கிறான்...

நான் சொன்னேனே...மடையா...என்றதுபோன்ற ஒரு பார்வையோடு சரேலென்று சமையல் கட்டுக்குள் புகுந்துகொண்டாள்...

என்ன பண்றது இவன....ராம்கிக்கு போனை போட்டு வரச்சொல்லலாமா...என்று மனசுக்குள் கணக்கு போட்டபடி மீண்டும் வெளியே வந்தேன்...

வாச்மேன் என்னை பார்த்து கிடுகிடுவென வருகிறான்...அய்யோ என்னடா இது கிட்டயே வர்றான் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே....

கிட்ட நெருங்கிவிட்டான்...

சாப்...துமாரா காடி க்ளீன் கரேங்கே சாப் டெய்லி...டூ ஹண்ரட் ருப்பீஸ் சார்ஸ் தேதே சாப் மந்த்லி... என்று தலையை சொறிகிறான்....

ங்கே !!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....