Wednesday, July 29, 2009

ஆண்மையிழந்த அடைக்கலங்குருவிகள்....!!!!

முன்பெல்லாம் கிராமத்து வீடுகளெங்கும் காணக்கிடைக்ககூடிய ஒரு விடயம், அடைக்கலங்குருவிக்கூடு...கூரை வீடு,பனைவாரை அடித்த ஓட்டு வீடு,செங்கல் சுவர் மச்சு வீடு என்று எந்த வீடாக இருந்தாலும் மேக்கால ரூம், கிழக்கால ரூம் என்று எல்லாவிடங்களிலும் வாகான இடமாய்ப்பார்த்து கூடுகட்டியிருக்கும்...

அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...



பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...

முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச்ச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...

இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...

ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...

ஆச்சர்யமாக இருக்கிறதா என்ன ? ஆமாம். அதுதான் உண்மை.

நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..

மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை..நன்மையே..என்று அதன் சின்ன உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...

இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...எப்படி என்று கேட்கிறீர்களா ?

புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...

ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...

இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...



ஆக இனவிருத்தி செய்யமுடியாமல் போன அடைக்கலங்குருவிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து, நகரமயமாக்கலில் அதன் சிறிய உணவு தானிய இருப்பும் விஷமாகிப்போன நிலையில் ஒவ்வொன்றாக அழிந்துவிட்டன. இனி அடைக்கலங்குருவிகளின் பொம்மைகளைத்தான் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கமுடியும் போலும்..




இந்த கட்டுரையை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!

Thursday, July 16, 2009

சீமான் 'நாம் தமிழர்'


இலங்கையின் வன்னிப் பகுதியில் முள் வேலிக்குள் முடங்கிப் போன மூன்று லட்சம் தமிழர்கள் தன்மானத்துடன் வாழ, சீமான் தனது அடுத்தகட்ட போராட்டத்தை தொடங்குகிறார்.

வரும் ஜூலை 18 ஆம் தேதி சனிக்கிழமை, மதுரையில் 'நாம் தமிழர்' என்ற பெய‌ரில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். அன்று மாலை 4 மணிக்கு மதுரை ஜான்சிராணி பூங்காவிலிருந்து ஊர்வலம் தொடங்குகிறது. 6 மணிக்கு வடக்குமாசி வீதியும் மேலமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இயக்குனர் மணிவண்ணன், அருட்தந்தை ஜெகத்கஸ்பர், மருத்துவர் எழிலன், கவிமுழக்கம் சாகுல் ஹமீது இவர்களுடன் சீமானும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

திரைப்பட இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். முள் கம்பிக்குள் அடைக்கப்பட்ட தமிழனின் அடிப்படை உ‌ரிமையை பெற்றுத்தர நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது. நாம் தமிழர் என்பதை நிரூபிக்கும் வேளை இது.

உலகமெங்கும் தமிழீழத்துக்காகவும் ஈழத் தமிழ் மக்களுக்காகவும் தமிழர்கள் போராட்டங்களை கொ்ண்டிருக்க, தாய் வழி உறவுகள் என பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் தாயகத் தமிழர்கள் மட்டும் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்கிறார்களே என்ற வேதனையின் விளைவே இந்த நாம் தமிழர் இயக்கம் என்று தெரிவித்துள்ளார் சீமான்.

Thanks, Thatstamil.

Monday, July 13, 2009

கூகிள் க்ரோம் OS. மைக்ரோசாப்ட்டுக்கு ஆப்பு...




மைக்ரோசாப்ட்டின் காதில் ஏற்கனவே புகை, ரத்தம் போன்ற மேட்டர்களை வரவழைத்த கூகிள், இப்போது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மார்க்கெட்டிலும் களமிளங்குகிறது.

க்ரோம் என்ற பெயரில் ஓ.எஸ்ஸை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இதுபற்றிய தகவல் கூகிளின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் காணக்கிடைக்கிறது...அதன் சுட்டி

லைனக்ஸ் அடிப்படையில் இயங்கப்போகும் இதில் மின்னஞ்சல்களை ப்ரவுசர்களை திறக்காமலே பார்க்கும் வசதி, அனைத்தும் ஓப்பன் சோர்ஸ், வெப் பேஸுடு ஆர்க்கிடெக்சர் என்று கச்சைகட்டுகிளார்கள் கூகிளார்.

இணையத்தை வெறும் சர்ச் எஞ்சினை வைத்து ஆக்ரமித்த கூகிள், அதன் பிறகு ஜிமெயில், கூகிள் எர்த், ஆர்க்குட், அண்ட்ராய்ட் மொபைல், இப்போது ஓ.எஸ். என்று நம்முடைய கணினி பயன்பாட்டின் மிகப்பெரிய பங்கை கொண்டுள்ளது.

இது ஆபத்து. எதிர்காலத்தில் தனி நபரின் ப்ரைவஸியை கூகிள் விழுங்கக்கூடிய சாத்தியம் 100 சதவீதம் உள்ளது. இதில் இருந்து தப்பிக்க நாம் செய்யவேண்டியது இரண்டு.

ஒன்று > கூகிளை புறக்கணிப்பது !!!!

அல்லது

இரண்டு > கூகிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துவிடுவது...!!!

பொதுவா அதிகமா சிரிச்சா லூசுங்கறாய்ங்க...!!!

Wednesday, July 08, 2009

ஒளிவட்டம் சுமக்கும் வலைப்பதிவர்கள்



சமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..

நீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...

இதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.

இந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.

இருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.

சுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா ?, மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.

ஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை ? முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது ?

இந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...!!

சிந்தாநதி....போய்வா...நதியலையே.....


ஒருமுறை வலைச்சரம் தொடுக்க அழைத்திருந்தார்...நான் தமிழ் பார்க்க வாய்ப்பில்லாத ஒரு கணியில் இருந்து பார்த்ததால் அதனை பார்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் எழுதி அனுப்புமாறு கேட்டிருந்தேன், பதில் இல்லை.

நேரில் சந்திக்கும்போது அலைபேசி ஒன்று கொடுடா என்று கட்டளை இட்டிருந்தார். கடந்த டிசம்பரில் சந்திக்கலாம் என்று எண்ணி அது கைகூடாமல் போனது..

ஜிமெயில் சாட்டில் கடந்த ஆறுமாதங்களாக அதிகம் புழங்காததால் அவர் ஆன்லைனில் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, அதனால் அதிகம் தொடர்பில்லை...

அவர் ஒரு போட்டி வைத்து பரிசாக சில புத்தகங்கள் ஸ்பான்ஸர் செய்ய சொல்லியிருந்தார், செய்தேன்...ரொம்ப நாளாக தொடர்பில்லையே, விரைவில் பேசலாம் என்று எண்ணியிருந்தேன்..

வலைப்பதிவில் காலையில் பார்த்ததும் ஒரே ஷாக்...

இணையத்தில் என்னுடைய உடல் நலனை விசாரித்தவரின் உடல் நலனை மீள் அஞ்சல் அனுப்பி கூட விசாரிக்காமல் இருந்திருக்கிறேன். என் பணி நேரம் என் நட்புகளை கூட தின்றிருக்கிறது...வருந்துகிறேன்...ஆழமாக வருந்துகிறேன்...


சிந்தாநதி ☆

to me
show details 10/31/07
அன்பின் ரவி
வணக்கம்
இருவாரங்களாக உங்களை இணையத்தில் காண முடியவில்லை?
உடல்நிலை எப்படி இருக்கிறது?
மறுபடியும் ஏதாவது பிரச்சினையா? நன்கு ஓய்வெடுத்து குணமடைந்து வாருங்கள்.
--
அன்புடன்

۞ சிந்தாநதி
http://valai.blogspirit.com/
☆ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்...!
☯ Views, News, Thoughts and Writings in Tamil.

*
தமிழ்.கணிமை.காம்
http://tamil.kanimai.com
இது திரட்டிகளின் திரட்டு, தமிழ்ச் செய்திகளின் தொகுப்பு

Monday, July 06, 2009

பேச்சை குறைப்போம்...செயலில் இறங்குவோம்..!!!


பெங்களூர்: பெங்களூர் எலஹங்காவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழந்தைகளுக்கான பள்ளியில் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லாததால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிக்கு உடனடியாக 6 ஆசிரியர்களும், வாரம் முழுவதும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் 16 கூடுதல் உணவும் தேவைப்படுகிறதாம்.

தற்போது இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் நிலையை மேம்படுத்த பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பெங்களூரைச் சேர்ந்த பெரும் தொழில் நிறுவனங்களின் பேராதரவைப் பெறவும் யோசித்து வருகிறது.

ஆசிரியர்களுக்கும், சாப்பாட்டுக்கும் ஸ்பான்சர்களைப் பெறவும் அது உத்தேசித்துள்ளது.

தற்போது இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஒன்றாவது முதல் பத்தாவது வகுப்பு வரை எடுக்க வேண்டியுள்ளது. இங்கு மொத்தம் 210 பேர் படிக்கின்றனர். இது 250 ஆக உயரும நிலை உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாக அதிகாரி லட்சுமி கோபிநாத் கூருகையில், பன்னாட்டு நிறுவனங்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு ஸ்பான்சர் செய்தால் நரமாக இறுக்கும். அது இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும்.

எங்களுக்கு தற்போது கணிதம், இயற்பியல், வேதியியல், கம்ப்யூ்ட்டர் அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய படிப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறாரக்ள்.

இங்குள்ள மாணவ, மாணவியர் தாய் மொழியில் (தமிழ்) படிக்க விரும்புகிறார்கள். அது நல்லதுதான். அதேசமயம், ஆங்கில அறிவையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆங்கிலப் புலமை மிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

முழு நேர ஆசிரியர்கள் கிடைத்தால் நலமாக இருக்கும். ஆனால் அவர்களை பிடிப்பதுதான் சிரமமாக உள்ளது. அதேசமயம், பகுதி நேர ஆசிரியர்கள் கிடைத்தாலும் அவர்களையும் வரவேற்கிறோம்.

இதுதவிர பாடங்களைப் படிக்க மாணவர்களுக்கு உதவ தொண்டர்களும் தேவைப்படுகிறார்கள்.

கர்நாடக அரசின் அக்ஷய பாத்திரம் திட்டம் எங்களுக்கு உதவிகரமாக உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மதிய உணவு இதன் மூலம் கிடைத்து விடுகிறது. இருப்பினும் வாரம் முழுவதும் மூன்று வேளை உணவு தர வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் வாரத்திற்கு 21 வேளை உணவு தர வேண்டியுள்ளது.

ஆனால் இதில் சிரமம் உள்ளது. ஸ்பான்சர்கள் யாரேனும் ஒவ்வொரு மாணவன் அல்லது மாணவிக்கு காலை அல்லது இரவு நேர உணவை ஸ்பான்சர் செய்ய முன்வந்தால் பெரும் நிம்மதியாக இருக்கும் என்றார் அவர்.

அதேபோல, பள்ளிக் கட்டடம் புதுப்பிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பள்ளிக்குத் தேவையான இடம் உள்ளபோதிலும் போதிய கட்டடம் இல்லை. தற்போதுள்ள கட்டடம் மிகவும் பழமையாக உள்ளது. குளியலறைகள், ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க வேண்டியுள்ளது. குடிநீர்க் குழாய்கள் பழுது பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இவ்வளவு சிக்கல்கள் உள்ளபோதிலும் மின்சாரம் கிடைப்பதில் இதுவரை எந்த சிக்கலும் இல்லை. அதேபோல பெங்களூர் குடிநீர் வாரியம், எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்வதாக லட்சுமி கோபிநாத் நன்றியுடன் கூறுகிறார்.

இந்தப் பள்ளிக்கு சிஸ்கோ நிறுவனம் கம்ப்யூட்டர்களை தானமாக அளித்துள்ளது. பள்ளிச் சுவர்களுக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் இலவசமாக பெயின்ட்டிங் செய்து தந்துள்ளது.

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நேரடியாக உதவி செய்ய முடியாத வருத்தத்தில் உள்ளவர்கள் அந்தத் தமிழ் மக்களின் வாரிசுகளுக்கு உதவ முன்வரலாம்.

அப்படி முன்வர உதவுவோர் லட்சுமி கோபிநாத்தை 9902421091 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.

நன்றி தட்ஸ் தமிழ்...இதுபோல இன்னும் பல செய்திகளை உலகுக்கு தெரியப்படுத்துங்கள்...!!!

Friends...!! Its Time to get into Action...!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....