நேற்று அலுவலகம் முடிந்து பேருந்து நிலையத்துக்கு 199 ஆம் நம்பர் பஸ்ஸை பிடிக்க போனால் அந்த பஸ்ஸில் "ஹெல்லேஸ்கார்கடன்" என்பதுக்கு பதில் வேற என்னமோ எழுதி இருந்தது...
என்னடா இது, நம்ம பஸ்ஸு தானா, இல்லை வேற எங்கியாது கொண்டுபோய் எறக்கி விட்டுடப்போறானா என்று மண்டை காய்ந்தது...
பேருந்தில் ஏற்கனவே ஏறி அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அழைத்தேன்...பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று வரும் பெண் போல...
அந்தம்மாவுக்கோ ஸ்வீடிஷ் தவிர ஏதும் தெரியவில்லை...
நான் கேட்டது, ஈஸ் திஸ் பஸ் கோயிங் டு ஹெல்லேஸ்கார்கடன் ?
அவள் சொன்னது, ஆஷு ஹ்ஜீ ஜ்ஜு க்கா க்கூ ஹே அஷி ஷி ஹ்ஷி ஷ்...
நான் கேட்டது, கேன் யூ ஸ்பீக் இங்கிலீஷ் ?
அவள் சொன்னது, ஷி ஷி ஷு ஷு ஹா ஹெல்லோ ப்ளூண்டா டோர்க் 99 ?
நான் வேற வழியில்லாம சொன்னது, ங்கொக்கமக்கா, இந்த வண்டி நான் போற எடத்துக்கு போவுமா போவாதா ?
அவள் திரு திரு வென விழித்தபடி, ஹி சு ஷெ ஹே ?
அப்புறம் வேற வழியில்லாம அந்த வண்டியிலேயே ஏறி, போற பக்கம் போவட்டும்யா என்று விட்டதில் வீட்டு முன்னால் சரியாக வண்டியை நிறுத்தினார் டிரைவர் பெண்மணி. கதவும் திறந்தது. இறங்கி அந்த லேடீஸ்க்கு ஒரு டாட்டா காட்டியபடி வீட்டுப்பக்கம் நடையை கட்டினேன்...
>> வினையூக்கி மட்டும்தான் சுவீடன்ல இருந்து கதை எழுதுவாரா ? நானும் ஜாயினிங் த க்ளப்.
>> சுவீடனில் என்னை தொடர்புகொண்டு மொக்கை போட விரும்புபவர்கள் அழைக்கவேண்டிய தொலை பேசி இலக்கம் +46 700598845 அல்லது 0700598845.
>> சுவீடனில் எங்கே இட்டிலி கிடைக்கும் என்று சொன்னீர்கள் என்றால் வசதியாயிருக்கும்...
>> சுவீடனில் ஆட்டோ இல்லாததால் அனுப்ப மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் ஏரியா உட்பட சொல்லிவிட்டேன்...
Showing posts with label சோக கதை. Show all posts
Showing posts with label சோக கதை. Show all posts
Tuesday, December 09, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...