
ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு!
(அப்படித்தானே!)
தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!
என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?
ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?
சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...
..
..