1. உங்கள் முதல் திருமணத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் முடியுங்கள் - பொருளாதார, சமூக, வாழுமிடத்தில் உள்ள தொல்லைகளில் இருந்து முதலில் வெளியே வாருங்கள்...நீங்கள் ஒரு புதிய உறவுக்கு தயார் என்பதை நீங்கள் உங்கள் மனதில் இருத்துங்கள்...
2. உங்கள் தவறுகளை உணருங்கள்...உங்கள் முதல் திருமண அனுபவத்தினை சீர் தூக்கிப்பாருங்கள்...உங்கள் பலம், பலவீனம் ஆகியவற்றை அசைபோடுங்கள்...பழைய தவறுகளை திரும்ப செய்துவிடாமல் இருக்க இது நிச்சயம் தேவையான ஒன்று...
3. உங்கள் புதிய உறவை முழுமையாக புரிந்துகொள்ள முயலுங்கள்...இந்த இரண்டாவது திருமணம் உங்களுடைய உயிரில்பாதியை பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு என்று நினையுங்கள்....உங்களுக்கு குழந்தை இருப்பின் அந்த குழந்தையை பற்றி, அந்த குழந்தையின் எதிர்காலம் பற்றி உங்கள் புதிய வாழ்க்கைத்துணையின் உள்ளக்கிடக்கை என்னவாக இருக்கிறது என்பதை ஆழமாக வெளிக்கொண்டுவாருங்கள்...
4. நீங்கள் நீங்களாக இருங்கள், திறந்த புத்தகமாயிருங்கள்...மென்மையாக பேசுங்கள்...உங்கள் பயங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள் போன்றவைகளை வெளிப்படையாக சொல்லுங்கள்...உங்கள் உள்ளக்கிடக்கைகள் மற்றும் ஒரு தோல்வியை தந்துவிடும் என்ற எண்ணம் இல்லாமல் உங்கள் புதிய உறவிடம் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள்...
5. திருமணத்துக்கு முன்பு வழிகாட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கவுன்ஸிலிங் போன்றவற்றில் கலந்துகொள்ளுங்கள்...உங்கள் மறுமணத்திற்கான ஆழமான அடித்தளம் அமையுங்கள்...
6. புதிதாக தொடங்குங்கள். ஒரு புதிய வீட்டில் - புதிய நன்பர்களுடன் உங்கள் மறுமணத்தை தொடங்குங்கள்...பழைய பேய்கள் உங்கள் இதயத்தை மீண்டும் துளைத்துவிடாதபடிக்கு, பழைய ஊரில் இருந்து வெளியேறுவது கூட பலனையும் நிம்மதியையும் தரும்...
7. புதிய பழக்க வழக்கங்களை உருவாக்குங்கள்...ஜாகிங், ஜிம், ஏதாவது புதிய மொழி படித்தல், புத்தகங்கள் வாசித்தல் என்று உங்கள் பழைய பழக்கங்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய ஒரு உலகத்துக்கு தயாராகுங்கள்...மறுமணத்தினை புத்தம் புதியதாக ஆரம்பிக்க ஒரு சிறந்த வழி இது...
8. வளைந்துகொடுக்க பழகுங்கள்....உங்கள் பழைய பழக்கங்களில் இருந்து விடுபட்டால் தான் ஒரு வெற்றிகரமான புதிய வாழ்க்கையை தொடங்கமுடியும்...உங்கள் உள்ளத்தை திறந்தே வைத்திருங்கள்...உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இருங்கள்...இது உங்கள் புதிய வாழ்க்கைத்துணையையும் உங்களையும் அற்புதமான தம்பதியினராக உதவும்...
9. பணப்பரிமாற்றம் போன்ற விடயங்களே மன உளைச்சலை தந்து, புதிய வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க விடாமல் செய்யும் தொந்தரவுகள். அதனால் முதலில் ஒரு வழக்கறிஞரின் உதவியையோ அல்லது பொருளாதார விடயங்களை கவனிக்கும் நபர்களையோ சந்தித்து, பொருளாதார விடயங்களை முழுமையாக முடித்துக்கொள்ளவும்...
10. தோல்விகளை பற்றிய சிந்தனைகளை அறவே விட்டொழியுங்கள்...உங்கள் புதிய வாழ்க்கையை பாஸிட்டிவ் சிந்தனைகளோடு எதிர்கொள்ளுங்கள்...உங்கள் பழைய தோல்விகளை நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்...உங்கள் புதிய வாழ்க்கைத்துணையை, அவரது விருப்பு வெறுப்புகளை அறிந்துகொண்டு, "ஈகோ" என்ற விடயத்தை அறவே விட்டொழித்து, புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக அனுபவியுங்கள்...
உங்கள் மறுமணத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!!
Showing posts with label மறுமணம். Show all posts
Showing posts with label மறுமணம். Show all posts
Tuesday, September 23, 2008
Subscribe to:
Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...