
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் இறைவனடி(?) சேர்ந்துவிட்டார்...அவரது மறைவுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...
மக்களிடம் உள்ள பல்வேறு மூட நம்பிக்கைகளை களைவதற்காக 100 வயதில் அயராது உழைத்து அவர் வெளியிட்ட கருத்துக்கள், அதில் உறைந்துள்ள உண்மைகள்...அடேங்கப்பா ரகம்...
என் கண்ணுக்கு அவர் இன்னொரு பெரியாராக தெரிகிறார்...அவரது இந்துமதம் எங்கே போகிறது என்ற கட்டுரை தொகுதிகள் (நக்கீரனில் வெளிவந்தது), இணையத்தில் சிந்திக்க உண்மைகள் பதிவில் தொடர்ந்து வெளியிடப்பட்டது...(தாத்தாச்சாரியார் என்ற டேகின் கீழே 46 பதிவுகள் உண்டு)
சிந்திக்க உண்மைகளின் அயராத உழைப்பின் மூலம் அந்த பதிவுகளை படித்தேன், தெளிந்தேன்...நன்றி சிந்திக்க உண்மைகள் !!! ஒரு சாம்பிள் பதிவு !!!
***********************

சில புதிய பதிவர்களுக்கு போலி டோண்டு பிரச்சினையே என்ன என்று தெரியவில்லை, மறந்துவிட்டார்கள்...போலி டோண்டு என்றால் யார் என்றே தெரியாதவர்களுக்கு போலி சல்மா என்றால் தெரியுமா ?
அதனால் இந்த போலி சல்மா விவகாரம் பற்றி ஒரு சின்ன ஸ்னாப்ஷாட்...
சல்மா அயூப் என்ற பெயரில் இஸ்லாம் / இஸ்லாமியர்களை பற்றி கடுமையாக சாடி திரட்டியில் ஒரு பதிவு இணைந்திருந்தது..
ஒரு முஸ்லீம் பெண் இது போன்ற கேள்விகளை எழுப்புவதால் இஸ்லாமியர்களும் ஓடி ஓடி விளக்கம் கொடுத்து மாய்ந்தார்கள்...இந்துத்துவ / மனு தர்ம சிந்தனையுள்ளவர்களோ உள்ளூர சிரித்து சந்தோஷத்தில் திக்குமுக்காடினார்கள்...
இந்த விஷயம் ஒரு பக்கம் நடந்துகொண்டிந்தபோது, அப்போது வலை உலகில் அற்புதமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு பெண் பதிவர் ( பெயர் / மேல் விவரம் வேண்டாம் ) பெயரில் ஒரு போலி தளம் உருவாக்கப்பட்டது...
அந்த தளத்தில் அருவருப்பானவைகள் எழுதப்பட்டு, அவை அந்த பெண்ணே எழுதுவதுபோல ஜோடிக்கப்பட்டது...
இங்கே ஒரு முட்டாள் தனத்தையும் செய்தார் போலிப்பதிவு உருவாக்கியவர்...
சல்மா அயூப் என்ற மின்னஞ்சல் முகவரியிலேயே இந்த போலி தளத்தை உருவாக்கியது தான் அவர் செய்த மிகப்பெரும் தவறு...
ஏன் என்றால் சல்மா அயூப் ப்ரொபைலை க்ளிக் செய்தால் இந்த அருவருக்கத்தக்க ஆபாச தளமும் கூடவே தெரிந்தது...
பிரச்சினையில் தீவிரம் கருதி பொறிவைத்ததில் எலி சிக்கியது...
அது எலியல்ல, பெருச்சாளி என்று பிறகு தான் தெரிந்தது...
தீவிர இந்துத்துவ கருத்துக்கள் கொண்ட (அதில எந்த பிரச்சினையும் கிடையாதே ? ) இவர் சல்மா அயூப் என்ற இஸ்லாமிய பெண்ணின் பெயரை வைத்து இஸ்லாத்தை பற்றி கேவலமாக எழுதியதோடு அல்லாமல் ( இது பற்றி இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்), பதிவுலகில் அற்புதமாக எழுதிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் பெயரில் போலி தளம் அமைத்து ( இதுல தான் இந்த போலியின் மீது வெறி) அருவருப்பு கருத்துக்கள் எழுதவேண்டிய அவசியம் என்ன ?
ஒரு பிரபல பத்திரிக்கையாளர் முன்னிலையில் தான் செய்த அனைத்தையும் ஒப்புக்கொண்டு ( டேப் செய்யப்பட்டது), மன்னிப்பு கேட்டுவிட்டு, எழுதி கையெழுத்தும் போட்டு கொடுத்துவிட்டு வெளியேறினார் இந்த போலி சல்மா ஜெயராமன்...
இவரது குடும்பம், உயர்ந்த பதவி, சமூகத்தில் இவருக்கிருந்த மதிப்பு போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டும், சம்பந்தப்பட்ட பெண் விட்டுத்தொலைங்க என்றும் கூறியதால் இவரது டவுசர் கிழிந்துபோகாமல் தப்பித்தது...
இதை இப்போது எழுதக்காரணம், பகுத்தறிவுக்கருத்துக்களை யாராவது எழுதினால் கோபம் கொப்பளிக்க வந்து சாடுகிறார்...
இட்லிவடையின் இந்த பதிவின் பின்னூட்டத்தில் பார்க்க
அருவருப்பாக இருக்கிறதாம்...ஆபாசமாக இருக்கிறதாம்...
நான் கேட்பது இது தான்...போலி சல்மாவாகவும் அருவருப்பாக எழுதியபோதும், ஜோதி என்ற
பெயரில் ஆபாச கதைகள் எழுதியபோதும் வராத அருவருப்பும் ஆபாசமும் இப்போது எப்படி வந்து தொலைந்தது திரு ஜெயராமன் அவர்களே ?