Wednesday, December 02, 2009

ஜில் ஜில்....சிறுகதை வித் முடிவு

மாம்ஸ். சோஷா ஷ்ரட்டன் போறேன். சரக்கு போட..

இன்னைக்காவது நீ வரியா ?

இல்லைடா. இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு. வீக் எண்ட் எப்பவும் கொஞ்சம் அவுட் பேஷண்ட்ஸ் அதிகம்டா.  உனக்கு தெரியாதா ?

ஓக்கே. நான் தனியா போறேன்...வைக்கிறேன்..

தனியா போ. ஆனா நான் போனவாரம் டெல்லி கான்ப்ரன்ஸ் போனப்போ அப்பார்ட்மெண்ட்டை பொண்ணுங்களை கூட்டிவந்து நாஸ்தி பண்ணியே ? அதை மட்டும் செய்யாதே..

ஹி ஹி. நீ ஊர்ல இருக்கும்போது நான் ரொம்ப்ப நல்லவண்டா..

டொக்...

இளம் மருத்துவர் அருணை பணி செய்ய விடாமல் தடுத்து அழைக்கும் விஷால் உயர அல்லது ஆந்திர சாக்லேட் நிற சுந்தர், ஹைதராபாத் ஒயின்ஷாப் ஓனர் ஒருவரின் மகன். இருவரும் இணையும் புள்ளி அவர்கள் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ராமச்சந்திரா மருத்துவமனை.சுந்தரைப்போல வகைதொகையின்றி புரளும் பணம் கிடையாது என்றாலும், அருணுடைய அப்பாவும் கொஞ்சம்கூட கஞ்சம் பிடிக்காத கோவையைச் சேர்ந்த  இண்டஸ்ட்ரியலிஸ்ட் தான். அண்ணா நகரின் உயர்தர அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருவரும் அறை எடுத்து வாசம்..

                            [newrule.gif]

p1020260.jpg (640×425)

சோழா ஷெரட்டன் மேப்ளவர் பார்.. கழுத்தில் தேவை இல்லாமல் சதைவளர்ந்த புள்ளிகள், ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்து பொண்ணிற திரவத்தையும் விழுங்கிக்கொண்டும் முந்திரியையை கொறித்துக்கொண்டும்.

பார்மேன் பாட்டில்களை வைத்து ஏதோ வித்தை காட்டிக்கொண்டிருக்க, சுந்தர் ஆஜர்.

என்ன சுரேஷ். நல்லாருக்கியா ?

சூப்பரா இருக்கேன் சார். டாக்டர் சார் வரலையா சார் ? அளவுக்கதிகமாகவே குழைந்தான் நீலநிற கழுத்து பட்டியணிந்த சுரேஷ்.

இல்லடா... அவன் பிஸி.

இன்னைக்கு என்ன சார் சாப்பிடறீங்க ?

காக்டெயில்ல காபி கலந்து கொண்டா..

ஹி ஹி, சார் விளையாடாதீங்க.

ஓக்கே ஒரு வோட்கா மொதல்ல கொண்டா. அப்புறம் மீதிய பார்த்துக்கலாம். அப்படியே ஒரு ப்ரான் ப்ரை சொல்லிடு..

சரி சார்..பவ்யமாக குழைந்து, குனிந்து விலகினான் சுரேஷ்..

சென்றவாரம் முகர்ந்த பச்சை நோட்டு வாசனை செய்யும் மாயம்...

                              [newrule.gif]


114.jpg (450×300)


மெல்லிய மினி ஸ்கர்ட் , வெள்ளைநிற, கிட்டத்தட்ட சீ த்ரூ டாப்ஸ் போன்ற அதாவது ஆடை ஒன்றை பெயருக்கு அணிந்தபடி உள்ளே நுழைத்தாள் அவள்..

அவள் சுமா.

அவளை பல வகையில் வர்ணிப்பதற்கு பதில். ஒற்றை வார்த்தையில். போர்னோ..பிரம்மன் தனியாக இரண்டு பேரை வேலைக்கமர்த்தி அவர்கள் ஓவர்டைம் பார்த்து செய்தது போல இருந்தாள்.

அதிகம் கூட்டமில்லாவிட்டாலும், இரண்டு மூன்று பேர்களாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருக்கும் டேபிள்களை தவிர்த்து, தனியாக இருந்த சுந்தரின் டேபிள் மேல் ஒரு கணம் பார்வையை நிறுத்தி அப்புறம் விலக்க.

எழுந்தேவிட்டான் சுந்தர்..

பேசியேவிட்டான் சுந்தர்..

ஹாய். ஹாவ் எ சீட்...

ஷ்யூர்..

இவ்வளவு சீக்கிரம் பிகர் மடிந்தது பற்றி எதாவது கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏற்றவேண்டும்...

ட்ரிங்க் ?

யெப்.

வோட்கா ?

யெப் யெப்...

கோவைப்பழத்தில் லிப்ஸ்டிக் தடவிய உதடுகள்.

சுரேஷ்...

இங்கே வா..தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒரு அதிகாரக்குரல்..

எஸ் ஸார்...

இன்னொரு வோட்கா ஸ்மால் எடுத்துவந்திடு..

லார்ஜ் ப்ளீஸ்...

வலம்புரி சங்கை வெளிச்சத்தில் பார்த்தது போல் கழுத்து...

சுரேஷ். அப்படியே, வழக்கமா எடுக்கற பதினைந்தாம் நம்பர் சூட் சொல்லிடு...மேனேஜர் கிட்ட நான் சொல்லிடுறேன்...நீ கீ மட்டும் கொண்டுவந்திரு...

பழம் நழுவி பாலில். இல்லை இல்லை. பாலும் பழமும் சேர்ந்து வாயில்..

                       [newrule.gif]

Laguna Basic Wood Bathtub.jpg (474×389)


சுந்தர் விழித்தபோது அவன் இருந்தது பாத்டப்பில். பாத்டப் முழுவதும் ஐஸ். ஐஸ். ஐஸ்.

கைக்கெட்டும் தூரத்தில் ஒரு சின்ன டேபிளில் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில்...

ஆன் செய்து அருணை லைனில் பிடித்தான்...

டேய் எங்கடா போன ? நைட்டு வீட்டுக்கு வரலைன்னு பார்த்தா, ஈவ்னிங் வரைக்கும் மொபைலை ஸ்விட்ச் ஆப் பண்ணிவெச்சுட்டு ?

நான்..நான்...நான் சோழால ஒரு சூட் எடுத்தேண்டா...அங்கே தான் இருக்கேன்...நைட்டு..நைட்டு..அவ பேரு ?

என்னடா திணறல் ? என்ன ஆச்சு ? யாரோட தங்கினே ??

என்னை பாத்டப்ல படுக்க வெச்சுட்டுட்டு அவ எங்கியோ கம்பி நீட்டிட்டாடா..ஆனா என்னோட பர்ஸ், மொபைல் எல்லாமே இங்கேயே இருக்கு...ட்ரஸ் தாண்டா எதுவும் இல்லை..அதுவும் இல்லாம பாத்டப்ல புல்லா ஐஸ். எங்கிருந்து அவ்ளோ ஐஸ் வந்ததுன்னு தெரியலை. அவ்ளோ ஐஸ்ல நான் எப்படி மயங்கி கிடந்தேன் அப்படீன்னும் தெரியல. எனக்கு ஒன்னுமே புரியலைடா...

டேய் என்னடா ஹேங்கோவர் படம் மாதிரி சொல்லிக்கிட்டிருக்க ? எதுவும் காமெடி பண்ணலியே ?

சத்தியமா இல்லை...உண்மையிலேயே முடியலடா. அடிச்சு போட்டமாதிரி உடம்பெல்லாம் வலிக்குது...

அருணுக்கு பொறிதட்டியது...

டேய்..ஹோல்ட்..ஒரு நிமிடம் இரு...

கொஞ்சம் விரைவாக, முப்பது வினாடியில் அருண் பேசினான்...

சுந்தர், நீ அந்த ஐஸ் பாத் டப்ல போய் படுத்துக்கோ...சோழா ஹோட்டலுக்கு நான் சீக்கிரமா வந்திடுறேன்...

டேய்..என்னன்னு சொல்லுடா ப்ளீஸ்..எனக்கு என்ன ஆச்சு...

சற்று மயான மவுனத்துக்கு பின் அருண்...

கொஞ்சம் இடுப்பு பக்கமா கை வெச்சு பாரேன்...ஸ்டிச் பண்ணியிருக்கா ?

ஸ்ஸ்...தொட்டதில் வந்த வலியோடு சொன்னான் சுந்தர்...ஆமாண்டா...லெப்ட் சைட்ல ஸ்டிச் பண்ணியிருக்கு...அப்படீன்னா...அப்படீன்னா...

ஆமாண்டா...போனவாரம் டெல்லி டைம்ஸ்ல இப்படி ஒரு இன்ஸிடெண்ட் வந்திருந்தது...உன்னோட கிட்னியை உருவிட்டாடா அவ..

உடம்பெல்லாம் வலியோடு சிலிர்த்தான் சுந்தர்...பேசிக்கொண்டிருந்த போனை தூக்கி எறிந்தான்...

ஷிட் ஷிட் ஷிட்....அய்யோ...

ஒரு சின்ன சந்தேகம் வர, வலது பக்கமும் கைவைத்து பார்த்தான் சுந்தர்...

அங்கேயும் ஸ்டிச் இருந்தது...
.
.
.

Tuesday, December 01, 2009

ஜில் ஜில்...சிறுகதை

மாம்ஸ். சோஷா ஷ்ரட்டன் போறேன். சரக்கு போட..இன்னைக்காவது நீ  வரியா ?

இல்லைடா. இன்னைக்கு ஒரு சர்ஜரி இருக்கு. வீக் எண்ட் எப்பவும் கொஞ்சம் அவுட் பேஷண்ட்ஸ் அதிகம்டா.  உனக்கு தெரியாதா ?

ஓக்கே. நான் தனியா போறேன்...வைக்கிறேன்..

தனியா போ. ஆனா நான் போனவாரம் டெல்லி கான்ப்ரன்ஸ் போனப்போ அப்பார்ட்மெண்ட்டை பொண்ணுங்களை கூட்டிவந்து நாஸ்தி பண்ணியே ? அதை மட்டும் செய்யாதே..

ஹி ஹி. நீ ஊர்ல இருக்கும்போது நான் ரொம்ப்ப நல்லவண்டா..

டொக்...

இளம் மருத்துவர் அருணை பணி செய்ய விடாமல் தடுத்து அழைக்கும் விஷால் உயர or ஆந்திர சாக்லேட் நிற சுந்தர், ஹைதராபாத் ஒயின்ஷாப் ஓனர் ஒருவரின் மகன். இருவரும் இணையும் புள்ளி அவர்கள் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ராமச்சந்திரா மருத்துவமனை.சுந்தரைப்போல வகைதொகையின்றி புரளும் பணம் கிடையாது என்றாலும், அருணுடைய அப்பாவும் கொஞ்சம்போல கஞ்சம் பிடிக்கும் கோவையைச் சேர்ந்த  இண்டஸ்ட்ரியலிஸ்ட் தான். அண்ணா நகரின் உயர்தர அப்பார்ட்மெண்ட் ஒன்றில் இருவரும் அறை எடுத்து வாசம்..

                            [newrule.gif]

சோழா ஷெரட்டன் மேப்ளவர் பார்.. கழுத்தில் தேவை இல்லாமல் சதைவளர்ந்த புள்ளிகள், ஆங்காங்கே டேபிள்களில் அமர்ந்து பொண்ணிற திரவத்தையும் விழுங்கிக்கொண்டும் முந்திரியையை கொறித்துக்கொண்டும்.

பார்மேன் பாட்டில்களை வைத்து ஏதோ வித்தை காட்டிக்கொண்டிருக்க, சுந்தர் ஆஜர்.

என்ன சுரேஷ். நல்லாருக்கியா ?

சூப்பரா இருக்கேன் சார். டாக்டர் சார் வரலையா சார் ? அளவுக்கதிகமாகவே குழைந்தான் கழுத்து பட்டியணிந்த சுரேஷ்.

இல்லடா. அவன் பிஸி.

இன்னைக்கு என்ன சார் சாப்பிடறீங்க ?

காக்டெயில்ல காபி கலந்து கொண்டா..

ஹி ஹி, சார் விளையாடாதீங்க.

ஓக்கே ஒரு வோட்கா மொதல்ல கொண்டா. அப்புறம் மீதிய பார்த்துக்கலாம். அப்படியே ஒரு ப்ரான் ப்ரை சொல்லிடு..

சரி சார்..குனிந்தி விலகினான் சுரேஷ்..

                              [newrule.gif]
மெல்லிய மினி ஸ்கர்ட் , வெள்ளைநிற, கிட்டத்தட்ட சீ த்ரூ டாப்ஸ் போன்ற அதாவது ஆடை ஒன்றை பெயருக்கு அணிந்தபடி உள்ளே நுழைத்தாள் அவள்..

அவள் சுமா.

அவளை பல வகையில் வர்ணிப்பதற்கு பதில். ஒற்றை வார்த்தையில். போர்னோ..பிரம்மன் தனியாக இரண்டு பேரை வேலைக்கமர்த்தி அவர்கள் ஓவர்டைம் பார்த்து செய்தது போல இருந்தாள்.

அதிகம் கூட்டமில்லாவிட்டாலும், இரண்டு மூன்று பேர்களாக ஆண்களும் பெண்களும் அமர்ந்திருக்கும் டேபிள்களை தவிர்த்து, தனியாக இருந்த சுந்தரின் டேபிள் மேல் ஒரு கணம் பார்வையை நிறுத்தி அப்புறம் விலக்க.

எழுந்தேவிட்டான் சுந்தர்..

பேசியேவிட்டான் சுந்தர்..

ஹாய். ஹாவ் எ சீட்...

ஷ்யூர்..

இவ்வளவு சீக்கிரம் மடிந்தது எதாவது கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏற்றவேண்டும்...

ட்ரிங்க் ?

யெப்.

வோட்கா ?

யெப் யெப்...

கோவைப்பழத்தில் லிப்ஸ்டிக் தடவிய உதடுகள்.

சுரேஷ்...

இங்கே வா..தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒரு அதிகாரக்குரல்..

எஸ் ஸார்...

இன்னொரு வோட்கா ஸ்மால் எடுத்துவந்திடு..

லார்ஜ் ப்ளீஸ்...

வலம்புரி சங்கை வெளிச்சத்தில் பார்த்தது போல் கழுத்து...

சுரேஷ். அப்படியே, வழக்கமா எடுக்கற பதினைந்தாம் நம்பர் சூட் சொல்லிடு...மேனேஜர் கிட்ட நான் சொல்லிடுறேன்...நீ கீ மட்டும் கொண்டுவந்திரு...

                       [newrule.gif]

..கதையின் முடிவு நாளைக்கு வெளியாகும்...முடிஞ்சா கெஸ் ப்ளீஸ்...

Thursday, November 26, 2009

ராம்மோஹன் - கொஞ்சம் பெரிய குட்டிக்கதை



சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை.

நாங்களா ? ப்ரெண்ட்ஸ்...நான், ராம்மோஹன், சுதாகர் மூவரும். சுதாகரின் மொழியில் ஈயும் பீயூமாக. ஒற்றை வார்த்தையில் நட்புக்கு அர்த்தம் சொல்ல என்னால் முடியாது. நாங்கள் சந்தித்தது பணிக்காக சென்னை வந்து வாழ குறைந்த விலை கூரை தேடியபோது கிடைத்த ஒரு இட நெருக்கடி மேன்ஷனில் தான் என்றாலும், நாங்கள் ரொம்பவே ப்ரெண்ட்ஸ். இப்போது நாங்கள் மூவரும் சிட்டிக்கு வெளியே தனியாக வீடு பிடித்து தங்கிவிட்டாலும், எங்கள் ராசி மேன்ஷன் அறையை காலி செய்யாமல் வைத்திருக்கிறோம்..

ராம்மோஹன் மருத்துவப்படிப்பு முடித்து ஹவுஸ் சர்ஜன். அவனது ஹாபி, காட்டு விலங்குகள், காட்டுவாசிகள், அவர்களின் உணவுப்பழக்கங்கள். அடிக்கடி பழனி ஹில்ஸ், கொடைக்கானல், முதுமலைக்காடுகள், நீலகிரி, சங்கராபுரம் மலைப்பகுதிகளில் ட்ரெக் அடிப்பான். பயல் கொஞ்சநாட்களாக மூட் அவுட். விசாரிக்கவேண்டும்.

மற்றபடி இன்னொரு ப்ரெண்ட் சுதாகர்.இப்போதைக்கு வெட்டி. ஒரு அனாதை இல்லத்தில் வளந்தவன். அப்புறம் வளர்ந்த இடம் பிடிக்காமல் வெளியேறியவன் நாங்கள் தங்குமிடம் கொடுத்து அரவணைக்க எங்கள் நட்பானான்..விளம்பர படங்கள் எடுக்கிறேன் என்று கேமராவை தூக்கிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறான். ராம்மோஹனுக்கு கம்பெனி அவன்தான்..

கம்மிங் பேக் டு த பாய்ண்ட். சுதாகரை மூன்று நாட்களாக காணவில்லை. எங்கே போனாலும் கேமரா இல்லாமல் போகமாட்டான். அவனுடைய ஷெல்பில் கேமரா அப்படியே இருந்தது. சொல்லாமல் போக அவனுக்கு போக்கிடமில்லை.

எங்கே போயிருப்பான் ? அதுவும் எந்த உடையும் எடுத்துக்கொள்ளாமல்..எனக்கு வேலையே ஓடவில்லை...எல்லோரிடம் இருப்பதுபோல அவனிடமும் வீட்டின் ஒரு சாவி இருக்கிறது. இன்றைக்கு அலுவலகம் முடிந்துவரும்போது வீட்டை திறந்து அவன் அமர்ந்திருக்கமாட்டானா என்று ஏங்கியதென்னவோ உண்மை.

போன் ரிங்கியது...

ராம்மோஹன்..

என்னடா..சுதாகர் ஏதும் போன் பண்ணானா ?

என்னது வீடியோ அனுப்பியிருக்கியா ? எப்போ ? அதுல க்ளூ இருக்கா ? என்னடா கொழப்பற ? சரி நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்துசேரு..

ராம்மோஹனிடம் இருந்து மின்னஞ்சல் எதுவும் வந்திருக்கிறதா என்று பார்த்தேன்.

வந்திருக்கிறது...

ஒரு வீடியோ பைல்...

ராம்மோஹன் காமிராவை பார்த்து மையமாக பார்த்து சிரித்தபடி பேசிக்கொண்டிருக்கிறான்.

அது ஒரு கிச்சன்..

அவன் ஹவுஸ் சர்ஜன் செய்யும் ஹாஸ்பிட்டலாக இருக்குமோ ??

படம் கட்டாகி இடையில் இருந்து ஓடுவது போல இருக்கிறது..

இப்போது நாம் ஏற்கனவே மிளகாய் தூளில் பிரட்டி வைத்திருக்கும் துண்டுகளை, எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவேண்டும்..நியாபகம் இருக்கட்டும், தீயை அதிகம் வைக்கவேண்டாம். அப்போதுதான் மென்மையாக வரும்.

சிக்கனோ மட்டனோ, ஏதோ ஒரு செய்முறையை புன்முறுவலுடன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அந்த ப்ளேட்டை மேசை மேல் வைக்கிறான் ராம்மோஹன். அப்போது தான் கவனித்தேன். அங்கே பக்கத்தில் ஒரு கை, வெட்டப்பட்ட கை, அதன் விரல்கள் அய்யோ. அதில் சுதாகர் அணிந்திருந்த ஒற்றைக்கல் மோதிரம்....

என் காது மடல்கள் சில்லிட்டது போன்றிருந்தது. உண்மையில் சில்லிடுகிறது.

ஏதோ கூர்மையான ஒன்று காதை வருடுகிறது. பின்னால் நின்றுகொண்டு கூரிய கத்தியொன்றை பிடித்துக்கொண்டு சிரித்தபடி..

ராம்மோஹன்.

..

..

Tuesday, November 24, 2009

லிப்ட் மாமா - ஒரு பக்க கதை



நான் ஸ்வேதா. ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணி. குடும்பம் சென்னையில். பெங்களூரில் தனி வீடு எடுத்து தங்கியிருக்கிறேன்..

அலுவலகம் முடிந்து என்னுடயை அப்பார்ட்மெண்ட் லிப்டில் நுழைய எத்தனித்தேன். எதிர்த்த அப்பார்ட்மெண்ட் ஜொள்ளு மாமா ஏற்கனவே லிப்டில் நிற்கிறார்.

எப்போதும் ஒரு ஜொள்ஸ் லுக் விட்டுத்தொலையும் கிழம்.

என்னம்மா,  ஆபீஸ் முடிஞ்சதா ?

(வேற என்ன நிலாவுக்கா போயிட்டு வறேன், கிழவா.....)

முடிஞ்சது..

சுருக்கமாக பதில் சொன்னேன்...

எந்த ப்ளோர் போறேம்மா..நீ ?

நான் என்னோட பிப்த் ப்ளோர் அப்பார்ட்மெண்ட்டுக்கு.

லிப்ட் பட்டனில் கை வைப்பதுபோல மேலே உரசுகிறது கிழம்.

ஹி ஹி. வீட்டுக்கு வரவாம்மா ? ஏதாவது ஹெல்ப் வேனும்னா சொல்லு..நான் தான் நெக்ஸ்ட் மந்த்லேர்ந்து ப்ளாட் செக்கரட்டரி தெரியுமோல்லியோ ?

எதுவும் தேவையில்லை..

கையை பிடித்துவிட்டான். ..

சார். என்ன பண்றீங்க ?

நீ ரொம்ப அழகாயிருக்கே...!!

இடியட். கையை எடுய்யா ?. வயசானவராச்சேன்னு பார்த்தா ?

உனக்கு ஓக்கேன்னா சொல்லு..வயசாச்சேன்னு பார்க்காதே. நான் ரெண்டை கட்டி மேய்ச்சவனாக்கும்...

நங்கென முட்டிக்கு கீழே ஒரு உதைவிட்டேன். நிலை குலைந்து விழுந்தான் கிழம். ஐந்தாவது ப்ளோர் கதவு திறந்தது. விரைவாக வெளியே வந்து, எமெர்ஜென்ஸி லிப்ட் பவர் ஆப் என்ற லிவரை மேலே தூக்கினேன். லிப்ட் பாதியில் நின்றது.  என்னுடைய மடிக்கணினியை திறந்து லிப்ட் 10000 முறை மேலும் கீழுமாக போய் வருவது போல் எழுதியிருந்த கல்லூரி ப்ராஜக்ட் மென்பொருளை தேட ஆரம்பித்தேன்..அதில் கதவை திறக்கமுடியாதபடி ஒரு வரியை சேர்த்து இயக்கிப்பார்க்கவேண்டும்...

Monday, November 23, 2009

வைரஸ் / குட்டிக்கதை



மாம்ஸ். என்னோட பர்சனல் இமெயில்ல வைரஸ் தாக்கிருச்சு தெரியுமா ...காலையில் அலுவலகம் வந்தவுடன் மென்மையாக அரற்றினான் க்ருஷ்.

ஏன் என்ன ஆச்சு ? எப்படி ஆச்சு ? என்ன செய்யுது ? கேள்விமேல் கேள்விகளை அடுக்கினான் சுதாகர்..

என்னோட கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்)தெரிஞ்சு வச்சுக்கிட்டு எனக்கு வரும் இமெயில் எல்லாத்தையும் படிச்சுடுது டா...

அப்புறம் ?

மொக்கையான இமெயிலை மட்டும் விட்டு வெச்சுட்டு மத்ததை டெலீட் பண்ணிடுது.

அட ?

என்னோட தங்கச்சி, அண்ணன் யார்க்கிட்ட இருந்தாவது இமெயில் வந்தா அதையும் டெலீட் பண்ணிடுது..

இங்கபார்ரா ??

யாராவது பணம் கடன் கேட்டு மெயிலோ சேட்டோ செய்தா அதை அப்படியே த்ராஸுக்கு அனுப்பிடுது...

அட...ஏன் இந்த கொலைவெறி ?

இதுக்கே அசந்துட்டா எப்படி...இதைக்கேளு...பழைய க்ளாஸ்மெட் ஒருத்தி அனுப்பின மின்னஞ்சலுக்கு ஏதோ திட்டி கூட பதில் அனுப்பியிருக்கு..

நிஜம்மாவா ? என்ன வைரஸ்டா அது ? யாருடா உருவாக்கியிருப்பா அதை ?

வேற யார் ? என்னோட மாமனார்தான்...

..

..

Friday, November 20, 2009

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறுங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!


Thursday, November 19, 2009

சிகரெட். இன்னொரு ஒரு பக்க கதை.



என்னுடைய காதலியின் முறைப்பின் சூடு தாங்காமல் இரண்டடி பின்னேறினேன்.

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

ஹோல்ட் ஆன். கூல். சொல்றேன்மா. சொல்றேன்...

நான் செய்தது என்ன என்று உங்களுக்கும் சொல்லிவிடுகிறேன். ஒரு ரெண்டு நிமிடம் முன்னால்.

அவள் அற்புதமான அழகி. எங்களைப்போலவே பார்க் பெஞ்சில். தனியாக. பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்தாள்.

நான் தடாலென எழுந்தேன். பத்தே வினாடிகளில் அவளை சமீபித்தேன். அவளிடம்..

மேம். ஒரு சிகரெட் கிடைக்குமா ? என்றேன்.

அவள் பெரிதாக யோசித்ததாக தெரியவில்லை. பாக்கெட்டை நீட்டினாள். ஒன்றை உருவிக்கொண்டு, ஒரு தாங்யூ உதிர்த்துவிட்டு, அவளது ஸ்மைலியை பெற்றுக்கொண்டு என் இடத்துக்கு திரும்பினேன்..

இப்போ மறுபடி நிகழ்காலத்தில். முறைப்பு கொஞ்சமும் குறையாமல் மீண்டும் என்னவள் கடித்தாள்..

டேய் ? ஏன்டா இப்படி பண்ண ? எங்கிட்ட செய்துகொடுத்த சத்தியம் என்னாச்சு ?

நான் கொஞ்ச நாளா இதைத்தான்மா பண்றேன். யாராவது ஸ்மோக் பண்ணா அவங்கக்கிட்ட அப்ரோச் பண்ணி, ஒரு சிகரெட் கேட்பேன். அதை கொடுத்தால் வாங்கிக்கிட்டு வந்திடுவேன். நான் அதை ஸ்மோக் பண்ணமாட்டேன். உன்னோட பெயரை ஒருமுறை மனசுல நெனைச்சுக்கிட்டே தூக்கி எறிஞ்சுடுவேன்.

அதான் ஏன் ??? இப்போது ஆச்சர்யக்குறியான கண்களுடன் என்னவள்.

ஸ்மோக் பண்றதால வர்ர கெடுதல் எல்லாம் நீ எனக்கு புரியவெச்ச. ஆனா உன்னை மாதிரி தங்க கட்டி எல்லோருக்கும் கிடைக்குமா ? ஆனா அவங்க ஸ்மோக் பண்றதை பார்த்தால் அவங்க இதயமும் நுரையீரலும் காயப்படுறதை நினைச்சு வருத்தப்படுவேன். அப்புறம் இந்த ஐடியா தோனுச்சு. அவங்கக்கிட்ட ஒரு சிகரெட் வாங்கி, அதை தூக்கி எறிஞ்சுடுவேன். அட்லீஸ்ட் அவங்களோட சாவை ஒரு நாளைக்காவது தடுக்கலாம் இல்லையா ?

அதற்குமேல் நாங்கள் எதுவும் பேசவில்லை. நச் நச். இச்.இச்..

ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள்

'ழ'

***************************************************


துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.

மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.

'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...

தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.

அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.

அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?

அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.

அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..

அங்கே மேடையில்,

'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.

குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.

அகர முதல எலுத்தெல்லாம் ஆதி
பகவன் முதர்ட்டே உயகு

பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.

***************************************************

சாட் லவ்.
***************************************************

அவன் - ஹாய்

அவள் - ஹாய். எஸ்ஸ்.

அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?

அவள் - ஸ்வேதா

அவன் - ஸ்வீட் நேம்.

அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?

அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.

அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.

அவன் - ஆர் யூ ஹிண்டு

அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?

அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.

அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?

அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?

அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.

அவன் - ஐ லவ் யு.

அவள் - மீ டூ.



***************************************************

Wednesday, November 18, 2009

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி - ரஷ்ய அதிபர் திமித்ரி திடீர் அங்கீகாரம்


டெல்லி பிப் 8 2025: இலங்கை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று ரஷ்ய அதிபர் டிமித்ரி விளாடிமிர் திடீரென அங்கீகாரம் அளித்துள்ளார்.

இந்தியாவில் விஜயம் செய்து வரும் புடின் டெல்லியில் இந்திய அதிபர் ராகுல் காந்தியை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இலங்கை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதேசமயம், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விரைவில் பேச்சுவார்த்தைகள் தொடங்க வேண்டும் என்பதையும் ரஷ்யா விரும்புகிறது.

இந்தத் தலைமுறையின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து ரஷ்யா மீளுவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பும் உதவியுள்ளது என்றார்.

பின்னர் ராகுல்ஜி பேசுகையில், இந்தியாவின் இறையாண்மை குறித்த விவகாரங்களில் ரஷ்யா சிறப்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இதற்காக அதிபர் டிமித்ரியை நாங்கள் பாராட்டுகிறோம்.

ஒரே இந்தியா என்ற தத்துவத்தை ரஷ்ய அதிபர் வலியுறுத்துவதையே இலங்கை குறித்த அவரது கருத்து வெளிப்படுத்துகிறது என்றார்.

முன்னதாக சமீபத்தில் சரத் பொன்சேகா மாஸ்கோ வந்தபோது அவரை பார்க்க மறுத்து விட்டார் திமித்ரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

நன்றி / தட்ஸ்தமிழ்

Monday, November 09, 2009

Kreative Krayonz / வேளச்சேரியில் குழந்தைகளுக்கான டே கேர்



வலைப்பதிவர் கவிதாவின் பார்வையில் நடைபெறப்போகும் இந்த வெஞ்ச்சர் இந்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்போறாங்களாம்.

உங்கள் தோழர்கள் மற்றும் தோழிகளில் வேளச்சேரியில் வசிப்பவர்களுக்கு இந்த பதிவை அல்லது பதிவில் உள்ள இமேஜை (இமேஜ் பெரிதாக தெரிய அதன் மேல் க்ளிக் செய்யுங்கள்) பார்வேர்ட் செய்யுங்கள். முடிந்தால் நீங்களும் ஒரு பதிவு போட்டு ஆதரவு தெரிவியுங்களேன்.

லேடி காகா போக்கர் பேஸ் அவுட்டர் ஸ்பேஸ்



லேடி காகாவின் போக்கர் பேஸ் ஆல்பத்தில் வரும் இந்த அவுட்டர் ஸ்பேஸ் பாட்டு குழந்தைகளை கொஞ்ச நேரம் ப்ரீஸ் ஆகவைக்கும். காரணம் அதில் உள்ள க்ரேஸி சவுண்ட் எபக்ட்ஸ்.

மற்றபடி கொஞ்சம் அடல்ட்ரியான போக்கர் பேஸ் பாட்டு கொஞ்சம் 24+. அதனால் சுட்டி மட்டும்.



இட்டாலிடன் பேரண்ட்ஸுக்கு பிறந்த அமெரிக்கன் பொண்ணு இந்த லேடி காகா. இப்போ சூப்பர் ஹிட் ஆல்பம்ஸ் இவங்களோடது தான்.

இந்த ரெண்டு பாடலிலும் வரும் சில டேன்ஸ் ஸ்டெப்ஸ் அல்ட்டிமேட். ரொம்ப பிடிக்கும். என்னோட பேவரிட் லிஸ்ட்ல இவங்க வந்து ரொம்ப நாளாச்சு. நீங்களும் பாருங்க. ரொம்ப ரசிப்பீங்க.

Saturday, November 07, 2009

புதிய தலைமுறை இணையதளம்


இப்போது கலக்கிவரும் புதிய தலைமுறை இதழின் இண்டர்நெட்டு அட்ரஸை பார்த்தேன். அதான் ஒரு பதிவை போட்டுவிடுவோமே என்று.

http://puthiyathalaimurai.com/index.html

மாணவ பத்திரிக்கையாளர் திட்டம் இருக்கிறது. பகுதி நேர வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களுக்கு தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. இளம் பத்திரிக்கை. வலைப்பதிவர்களை கண்டிப்பாக ஊக்குவிக்க அவர்களின் படைப்புகளில் தரமானதை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழில் டெக்னிக்கல் ரகமான படைப்புகளை நிறைய போடுங்கப்பா..

Friday, November 06, 2009

நீ யாருடா என்னை "ரேப்" செய்வது? நான் செய்கிறேன் உன்னை ரேப்...!


ரேப்" தமிழில் கற்பை பறிப்பது அல்லது கற்பை அழிப்பது = கற்பழிப்பு!
(அப்படித்தானே!)

தமிழ் படங்களில் பெண்ணை துரத்தி துரத்தி "ரேப்" செய்ய முயலும் ஆண். இந்த பெண் பாவாடை, ஜாய்க்கெட்டுடன் காப்பாத்துங்க!! காப்பாத்துங்க!!
என்று கத்திக் கொண்டு இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கும். எல்லாம் முடிந்த பின் அந்த பெண் என்ன செய்யும்?

ஓ...வென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு பாவி! என் வாழ்க்கையை நாசம்பண்ணிட்டியே, நீ நல்லா இருப்பியான்னு கேக்கும். மார்டனாகவும், படித்த பெண்களாகவும் சித்தரிக்கப்படும் பெண்கள் கூட இந்த "ரேப்" மேட்டரில் இதே வசனம் தான் சொல்கிறார்கள். ஏன் இந்த அபத்தமான கேள்விகள்? ஒப்பாரிகள்?

சமூகம் பெண்கள் மீது திணித்திருக்கும் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கங்கள் அதற்கும் மேல் அவளின் பலவீனங்களை பலப்படுத்த விடாமல், நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும். இப்படித்தான் வாழ வேண்டும்மென்ற அடக்கு முறைகளை வைத்திருந்த காலம் மாறிவிட்டது...



..
..

சிங்கிள் பார்ட்டி




சிங்கிள் பார்ட்டி என்று ஒன்று உண்டு இங்கே. Single என்று கருதுபவர்கள் எல்லாம் Single ஆக வரவேண்டிய ஒன்று. குறைந்த அனுமதி கட்டணம் வசூலிக்கிறாங்க.

பேஷன் ஷோ, லோக்கல் ராக் பேண்ட் இசை. ஒரு டேன்ஸ் ப்ளோரும் உண்டு. இந்தியாவில் இந்தமாதிரி பார்ட்டி எதுவும் வைத்தால் தானே ? ம்ஹும். செய்யமாட்டாய்ங்களே !!!

வைரமோதிரம், மொபைல் போன், லேப்டாப் / UAE தமிழ்சங்கம்



கலை அரங்கம் 2009 அப்படீங்கறது யூ.ஏ.இ தமிழ் சங்கம், யுனிடெக் லிமிடெட், வெஸ்டர்ன் யூனியன் மனி ட்ரான்ஸ்பர் ஆகியவை இணைந்து நடத்தும் குடும்ப விழா.

சுட்டி > http://www.uaetamilsangam.com/upcomingevent.asp

எங்கே :

13th November 2009, Friday, at Sheikh Rashid Auditorium. Indian High School,
Dubai (Opp. St. Mary’s Church-Karama) Gates open at 4.30pm & programme commences at 6.00pm


மெம்பர்களுக்கு மட்டும் (Charity Raffle Gift)

Mini Laptop Notebook, Diamond Ring, Mobile Phone…

Charity Raffle / எல்லோருக்கும் :

32" LCD TV, SD Card Video Camera, Digital Camera, Mobile Phone, Portable DVD Player and many more.

யார் யாரெல்லாம் வர்ராங்க:

Mr. D Napoleon Hon’able Minister of State for Social Justice and Empowerment, Govt. of India

His Excellency Mr. Venu Rajamony, Consul General of India

Mr. Syed M.Salahuddin, Managing Director ETA Ascon Star Group

Mr. Ashok Kumar, CEO, Indian High School, Dubai

Mr. K Kumar, Convenor - ICWC, Dubai-UAE.

என்ன ப்ரொக்ராம்:

Semi-Classical & Cinematic Dance performance by children

SSC & HSC Felicitation Ceremony - Felicitating Top Rankers of UAE for the Academic Year 2008-09

Children’s Day Celebrations

PATTIMANDRAM by Mr. Raja, Mrs. Bharathi Bhasker, Pulavar Ramalingam & Local Team

COMEDY & VARIETY SHOW by Mr. Erode Mahesh & Mr. Gokulnath

ஸ்பான்ஸர்ஸ்

Skyline University College | BSCPL | Maruvur Arasi Gen. Transport | EMAX | Royal Palace | LIC International| Auto Trak | Chennai Jewellers | Noor Al Deen | Brain-O-Brain | Times & Chimes | Jenny Flowers | UAE Exchange

Media Support : Dinamalar / Thangam Online / Kumudham Snehidhi / Gulf Today
http://www.dinamalar.com/nri , http://www.thangamonline.com/, EBook - http://ebook.thangamonline.com

FREE TICKET / ENTRY | For further details and To get entry passes please contact

தொடர்புக்கு

Ramesh Viswanathan - 050-5865375
S.Prasanna - 050- 6900230
Saleem Khan - 050-3184073
Sirajudeen - 050- 5153762

ஒரு சின்ன வேண்டுகோள்

We have seen many times if we say the program starts @ 6pm, 75% of the people will come 7 to 7:30... Because of those
75% of people the 25% of crowd will have to wait.

We can start our program sharp, we always start with Kids dance, just imagine when the screen open if the kids see less crowd.
How the kids can perform well. Who else can encourage apart from us. We will make sure all our program starts on time.
But to achieve this we need your support and commitment. See you @ 5:30 pm on 13th November 2009.

Thursday, November 05, 2009

பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009


பெங்களூரு புத்தகக் கண்காட்சி - 2009 நவம்பர் மாசம் நடைபெறுகிறதுங்க. கிழக்கு பதிப்பகத்தின் நியூஸ்லெட்டர் மூலம் தெரியவந்தது. இது வரை போகாதவங்க கண்டிப்பா போங்க. 2007 ல வடை பஜ்ஜி சூப்பர். 2008 ல சாண்டில்யன் புக்ஸ் ஒரு பண்டல் அள்ளினேன். அங்கே திருமாலை, ஜிராவை மீட் பண்ணியிருக்கேன். பத்ரி கூட வந்தார் என்று நினைக்கிறேன். விகடன் பதிப்பகம் வரும். உயிர்மை வரும். சுஜாதாவின் புக்ஸ் கிடைக்கும். கேள்பிரண்ட் இல்லாமல் காலையில் போனீங்க என்றால் மாலை வரை சுற்றலாம்.

இடம்:
PALACE GROUNDS
MEKHRI CIRCLE
RAMANAMAHARISHI ROAD
BANGALORE

நவம்பர் 6 முதல் 15 வரை.
அரங்கு எண்: 165, 166

பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்கிறது கிழக்கு பதிப்பகம். கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை நீங்கள் அந்த அரங்குகளில் வாங்கலாம். தன்னம்பிக்கை, அரசியல், வரலாறு, அறிவியல், உடல்நலம், வாழ்க்கை வரலாறு, நாவல், சிறுகதை, நிதி, வணிகம், ஆன்மிகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பார்க்கவும் படிக்கவும் வாங்கவும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது கிழக்கு பதிப்பகம்.

பல்வேறு சிறந்த புத்தகங்களுடன் பெங்களூரு புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ளும் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை 10% கழிவுடன் நீங்கள் அங்கே வாங்கலாம்.

மேலதிக விவரங்களுக்குத் தொடர்புகொள்ள:

095000-45641 (மணிகண்டன்) மற்றும் 095000-45608 (காளி பாண்டியன்)

இபே (ebay.in) மூலம் போலி பொருட்கள், உஷார் உஷார்

இந்தியாவில் ஒரு மாதத்துக்கு 8 லட்சம் சீன அலைபேசிகள் நுழைகின்றன. ஐஎம்இஐ எண்கள் இல்லாத, எந்த சர்வதேச காப்பிரைட் சட்டங்களுக்கும் மென்பொருள் சட்டங்களுக்கும் பேடட்ண் விதிகளுக்கும் கட்டுப்படாத போன்கள் இவை. நோக்கியா போலவே இருக்கும். ஐபோன் போலவே இருக்கும். அதனால் அந்த நிறுவனத்தில் வியாபாரம் பாதிகப்படும்.

சீன மொபைல் போன்கள் இந்திய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டாலும், அந்த அரசு விதியை வழக்கம்போல ஓட்டை போட்டு இந்திய பொருளாதாரத்தை ரத்தம் போல உறிஞ்ச இந்திய எதிரிகள் தயாராகவே இருக்கிறார்கள்.(ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் அமெரிக்காவுக்குத்தானே போகிறது என்பார்கள் சிலர், அது வேறு கதை)

இந்த இபே (ebay.in) தளத்தின் மூலம் வழக்கம்போல போலி பொருட்கள் உள்ளே நுழைகின்றன. இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இந்த பதிவை பார்க்கும் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பத்திரிக்கை மூலம் இதனை அம்பலப்படுத்தவேண்டும்.

இந்த சுட்டியில் பார்த்தீர்கள் என்றால் முப்பதாயிரம் மதிப்புள்ள ஐபோனை மூவாயிரத்து சொச்சத்துக்கு தருகிறார்கள். அதுவும் தில்லாக சீனா ஐபோன் என்று எழுதி விற்கிறார்கள்.



கொரியன் போன் என்று கடைகளில் விற்கப்படும் இந்த போன்கள் உண்மையில் தாய்வானிலும் சீனாவிலும் தயாராகின்றன.

IMEI என்னும் International Mobile Equipment Identity இல்லாத போன்கள், நெட்வொர்க் மூலம் (ஏர்டெல், வொடாபோன் மற்றும் இந்தியாவில் இயங்கும் அனைத்து நெட்வோர்க்கும் இதில் வரும்) மட்டுறுத்தப்படும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ESN எண் என்பதும் ஐஎம்இஐ போன்றதொரு குறியீடே. இந்த இரு வகையான எண்கள் இல்லாத அலைபேசிகளை தடை செய்யும்படி சொல்லுகின்றது தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய்.





அலைபேசி நெட்வொர்க்கில் உள்ள இஐஆர் ஐஎம்இஐ எண்களைப்பற்றிய தகவல்களை வைத்துள்ளது. ஐஎம்இஐ எண் இல்லாத அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தால் அந்த அழைப்பை தடை செய்யும் வகையில் அதனை செயல்படுத்த முடியும்.

அதனையும் இப்போது சீன மொபைல்கள் கடந்துவிடுகின்றன. போலியான IMEI எண்ணை அந்த மொபைலில் போட்டே அனுப்புகிறார்கள். இங்கேயும் 50 ரூபாய் செலவில் போடுகிறார்கள் என்று கேள்வி.

அலைபேசிக்கான எந்த ஸ்பெசிப்பிக்கேஷனையும் பாலோ செய்யாத இந்த மொபைல்களால் உடல் நலனுக்கும் கேடு. உதாரணமாக மொபைலில் உள்ள ரேடியோ இவ்வளவு அளவுக்கு மேல் SAR (Specific absorption rate) வெளியிடக்கூடாது என்கிறோம். அல்லது 900 ப்ரீக்வன்ஸிக்கு (450 μW/cm2 at 900 MHz, and 950 μW/cm2 at 1900 MHz.) இவ்வளவுதான் வெளியிடவேண்டும் என்கிறோம். கன்னாபின்னாவென வெளியேறும் ரேடியோ கதிர்வீச்சினால் கேன்ஸர் கூட வரலாம் என்று சொல்கிறார்கள். ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் கடுமையான விதிகளை அலைபேசி நிறுவனங்களுக்கு விதித்துள்ளது. ஆனால் இந்த வகை திருட்டு அலைபேசிகள் இவ்வாறு எந்த விதிகளையும் பின்பற்றுவதில்லை.

இந்த மொபைல்களை வைத்துத்தான் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பேசுவார்கள் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. பாக்கிஸ்தான் தீவிரவாதிக்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. ஆனால் கள்ளத்தனமாக உள்ளே வரும் பொருட்கள் இந்திய சந்தைப்பொருளாதாரத்தை அழிக்கும் விஷம். அதனை மட்டும் நாம் கவனிக்கவேண்டும்.

Tuesday, November 03, 2009

கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள், தம்பி ! !

சுய முன்னேற்றம் - எம்.எஸ்.உதயமூர்த்தி


மலரும் ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுத்துக் கொள்கிறோம். சில தீர்மானங்கள் செய்து கொள்கிறோம்.

“இந்த ஆண்டு சொந்தத் தொழிலைத் தொடங்கப் போகிறேன்.”
“இந்த ஆண்டு மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லப் போகிறேன்.”
“இந்த ஆண்டு எனது கனவு வீட்டைக் கட்டப்போகிறேன்.”
“இந்த ஆண்டு உலகம் புகழும் மகத்தான கதை ஒன்றை எழுதப் போகிறேன்.”
“இந்த ஆண்டு அளவோடு சாப்பிட்டு கொடி போல உடலை வைத்துக் கொள்ளப் போகிறேன்.”

இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒரு தீர்மானம் செய்கிறோம். நல்ல தீர்மானங்கள்! நல்ல நோக்கம்.

அடுத்த ஆண்டு தொடங்கும்போது பார்த்தோமானால் இதே தீர்மானங்களை மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்! அதாவது இந்த ஆண்டு முழுவதும் நாம் எடுத்துக்கொண்ட குறிக்கோளில் நாம் முன்னேறவில்லை. அதை அடைய நாம் எதையும் சாதிக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்வார்கள். “மீண்டும் முதல் படியில்!” என்று. முதல் படிக்கே திரும்பத் திரும்ப வந்தோமானால் நாம் எப்படி முன்னேறுவது?

ஒரு அமைச்சர் மரம் நட வந்தார். மரம் நட்டார். தண்ணீர் ஊற்றினார். ஒரு சந்தேகம் வந்தது. "நான் நடும் மரத்தை பத்திரமாக பாதுகாத்து வளர்ப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார்.

"அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் எந்த அமைச்சர் வந்தாலும் இங்கேதான் நடுகிறார். நாங்கள் தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறோம்!" என்று சொன்னார்கள்.

எப்படிக் கதை!

செடி நடும்போது மாத்திரம் தண்ணீர் ஊற்றினால் எப்படி வளரும், செடி? எப்படி வளர்ந்து மரமாகும்?
இதுதான் பலருடைய கதை!

வேகம் இல்லை!

வெகு தீவிரமாக ஆர்வத்துடன் தீர்மானம் செய்கிறோம். வைராக்கியத்துடன் சொல்லிக் கொள்கிறோம். "நாளையிலிருந்து நான் புது மனிதன்!" என்று. ஓரிரு நாள் அந்த நினைப்பு நம்முடன் இருக்கிறது. ஆனால், நாம் தொடர்ந்து புது மனிதனாக ஆக, கவனத்துடன் இருப்பதில்லை. முதலில் இருந்த வேகம் இப்போது நம்மிடம் இருப்பதில்லை. ஆரம்ப சூரத்தனத்துடன் சரி. பிறகு முயற்சிகளை விட்டு விடுகிறோம்.

"இந்த ஆண்டு எம்.பி.ஏ. நிர்வாகப் படிப்பு படிக்கப் போகிறேன். அதுவும் தபால் மூலம் சொல்லித் தருகிறார்கள். நிர்வாகம் பற்றி படித்தால் தான் நாளை சொந்தத் தொழிலில் இறங்கலாம்" என்று நல்ல தீர்மானம் எடுப்போம். அல்லது -

"தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். பதினாறு பெரிய மாநிலங்களில் ஒரு மாநிலம். பணம் புரள்வதெல்லாம் பம்பாயில், பஞ்சாபில், குஜராத்தில். எனவே நான் அங்கே போய் பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன். அவர்களுக்கு வேண்டியதை தயார் செய்யப் போகிறேன்."

இப்படி ஒரு வியாபாரி தீர்மானம் செய்கிறார். ஆனால் அதில் அவர் முனைகிறாரா தொடர்ந்து அதை முடிக்கிறாரா என்றால், அதுதான் இல்லை. திறந்த சோடா பாட்டில் போல பல ஆசைகளையும் தீர்மானங்களையும் புஸ்வாணமாக்கி விடுகிறோம்!

நாம் எங்கே தோற்றுப் போகிறோம்? எதனால் தோற்றுப் போகிறோம்?

நம்மிடம் சுய கட்டுப்பாடு இல்லை. தொடர்ந்த ஈடுபாடு இல்லை. குறிக்கோள் கடைசிவரை நிற்பதில்லை. கண்காணிப்பு இல்லை. கவனம் வேறு எதில் எல்லாமோ சென்று நமது குறிக்கோளை திசை திருப்பி விடுகின்றன. நம் கவனமெல்லாம் முயற்சி இன்றி, ஆர்வமின்றி, ஆற்றலின்றி, உழைப்பின்றி, மங்கி மடிந்துவிடுகிறது. இதுதான் குறிக்கோளை எட்டமுடியாததற்கு காரணம்.

சுயக்கட்டுப்பாடு

ஒரு பெரிய விருந்து, ஒரு நல்ல அறிஞரை அழைத்திருந்தார்கள். சாப்பிடும்முன் அவரைப் பேசச் சொன்னார்கள். அவர் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டார். "நீங்கள் எல்லாரும் மனிதர்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது மிருகங்கள் போல சாப்பிட விரும்புகிறீர்களா?"

"மனிதர்கள்! மனிதர்கள்!" என்றார்கள், அமர்ந்திருந்தவர்கள்.

அவர் சொன்னார்: "மிருகங்கள் தங்களுக்குப் போதுமென்று எண்ணியதும் சாப்பிடுவதில்லை! நிறுத்திக் கொள்கின்றன."

அறிஞர் என்ன சொல்கிறார்?

மனிதன் தேவையினால் உந்தப்படுவதில்லை. ஆசையினால் உந்தப்படுகிறான்! தேவையினால் உந்தப்படுபவன் கட்டுப்பாடுடையவன். ஆசை என்பது மேலும் மேலும் வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது. ஆசைக்கு எங்கே முடிவு?

எனவேதான் சொல்லுகிறேன் - வாழ்வின் மிக முக்கியமான பாடம் நாம் சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொண்டோமா என்பதுதான்.

உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமா? "காலையில் 5 மணிக்கு எழுவேன்" என்று சொல்வதிலிருந்து "வயிற்றை லேசாக வைத்துக் கொள்வேன், போட்டு அடைக்க மாட்டேன்" என்று சொல்வது வரை உங்களிடம் சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா? இதெல்லாம் நம் சொந்த விஷயங்கள். நாம் விரும்பினால் நடத்திக்காட்ட முடியும். நாம் மனது வைத்தால் செய்து காட்ட முடியும். நாம் பாடுபட்டால் இதையெல்லாம் நமது நல்ல பழக்கங்களாக ஆக்கிக் கொள்ள முடியும்.

சுயக்கட்டுப்பாடு இல்லாத மனிதன் தறிகெட்டு ஓடும் குதிரைக்குச் சமானம். அதேபோல சுயக்கட்டுப்பாடற்ற - சட்டங்களை மதிக்காத சமுதாயம், வாழத் தகுதியற்றது. முன்னால் முதல்வர்களான பங்காரப்பா, கல்யாண்சிங் போன்றவர்கள் - சட்டத்தைக் காப்பாற்ற வேண்டியவர்கள் - உச்சநீதி மன்றத் தீர்ப்பை மதித்தார்களா என்று யோசித்துப் பாருங்கள்.

மவுன விரதம்

மனதை மட்டுமல்ல, பேசுகின்ற வார்த்தையையும் வாயையும் கட்டுப்படுத்த வேண்டுமென்று நமது ஞானிகள் எண்ணினார்கள். மகாத்மா காந்தி வாரத்தில் ஒருநாள் திங்கட்கிழமை மவுன விரதம் இருந்தார். அன்று யாருடனும் பேசமாட்டார். யோகி வேதாத்ரி அடிகள் ஆளியாறுக்கு அருகிலுள்ள அவரது ஆசிரமத்தில் ஆண்டொன்றுக்கு ஒரு மாத காலம் மவுன விரதம் இருப்பார். எதற்கு?

தன்னைத்தானே அடக்க, நாவை அடக்க, பேச்சை அடக்க, சுயமாகத் தன்னைப் பற்றி தானே சிந்தித்துப் பார்க்க.

நம் வீடுகளில் பெண்கள் பலர் திங்கட்கிழமை, சனிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று விரதம் இருப்பார்கள். அன்று முழு நாளும் சாப்பிட மாட்டார்கள். அல்லது ஒரு வேளை உணவு உண்பார்கள். கேட்டால் சோம வார விரதம், கந்த சஷ்டி விரதம் என்பார்கள். அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி என்று விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். என் தாய் திருவாதிரையன்று முதல் நாள் எதுவும் சாப்பிட மாட்டார்கள். மறுநாள் நடராசர் வீதியில் உலா வரும்போது (ஆருத்திரா தரிசனம்) தரிசித்துவிட்டு திருவாதிரைக் களி என்ற உணவை சாப்பிடுவார்கள்.

மகாத்மா காந்தியின் தாய் தினமும் சூரியனைப் பார்த்து தரிசித்து விட்டுதான் உணவு உட்கொள்வார் என்றும் "அன்று சூரியன் தெரியாவிட்டால் அவர் பட்டினிதான்" என்றும் தன் தாயின் விரதத்தையும் மன உறுதியையும் பற்றி காந்தி தன் சுயசரிதையில் எழுதுகிறார்.

விரதம் ஏன்?

ஏன் இந்த விரதங்கள்?

நம் உடலுக்கு ஓய்வு கொடுக்க, மேலே மேலே போட்டு வயிற்றை அடைத்து நாம் நம் உடலைத் துன்புறுத்துகிறோம். தேவையில்லாமல் உடலில் சதை போடுகிறது. கீழே குனிய முடியாமல் தொப்பை பெருக்கிறது. சரியான அளவு சாப்பிடும்போது உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது. அதிக உணவு கொண்டால் அதிகம் சிந்திக்க முடிவதில்லை. தூக்கம்தான் நம்மை ஆட்கொள்கிறது.

விரதம் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? முகத்திலே ஒரு ஒளி இருக்கும். ஒரு அமைதி இருக்கும். ஒரு இனிமை இருக்கும். நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள உண்ணா நோன்பு போன்ற நல்ல பயிற்சி வேறில்லை.

இங்கேதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; முதலில் புரிந்து கொள்ள வேணடும். என்ன அந்த முக்கியமான விஷயம்?

சுயக்கட்டுப்பாட்டை சாப்பிடுவதில் கற்றுக் கொண்டோமானால், நாவை அடக்கக் கற்றுக் கொண்டோமானால், நம் வாழ்வின் முக்கியமான எல்லா விஷயங்களில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும். நம் வாழ்வை மிகப் பிரமாதமாக வாழ முடியும்.

விரதங்கள் வழியே முதலில் நம் மனதைக் கட்டுப்படுத்துகிறோம்; பிறகு வாழ்வை ஒரு ஒழுங்கில் கொண்டு வருகிறோம். விரதம் இருப்பது "எல்லாவற்றிலும் என்னால் கட்டுப்பாடுடன் இருக்க முடியும்" என்கிற நம்பிக்கையை நம்முள் ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக நம் வாழ்வு நம் கைக்குள் - நாம் விரும்புகிறபடி அமைகிறது.

சுயக்கட்டுப்பாடு என்பது வாழ்வின் தேவையான அடிப்படைப் பழக்கம். முதலாவதாக கற்றுக் கொள்ள வேண்டிய பழக்கம். தியானம் நம் சிந்தனைகளை ஒரு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறது. விரதம் நமது செயல்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது.

சுயக்கட்டுப்பாடு இருந்தால், ஒரு ஒழுங்கின் மூலம், வைராக்கியத்தின் மூலம் இந்தப் புத்தாண்டில் ஆசைப்படும் இலட்சியங்களை நிச்சயம் சாதனைகளாக மாற்றுவீர்கள்.

Monday, November 02, 2009

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்



வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.

சரி அந்த கதை எதுக்கு இப்போ ? ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ? வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே ? அது போரடித்துவிட்டதா ? அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே ? அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.

ஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே ? இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே ? யார் கண்டா ? நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.

தயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது ?

நீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா ? நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் ? உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே ? உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் ?

உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'

இப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.

நன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)

Thursday, October 29, 2009

அன்னா மரியா குமாரசாமி.....



காலையில் அலுவலகம் வந்து மின்னஞ்சலை திறந்தவுடன், 'உடனே என்னுடய இடத்துக்கு வரமுடியுமா' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தான் க்ரிஷ்.

என்னடா அவசரம். அப்புறமா வரேன். மீட்டிங் இருக்கு. என்று பதில் அனுப்பினேன்.

ம்ஹும். அர்ஜெண்ட். உடனே வா.

அப்படி என்னடா அர்ஜெண்ட், என்றேன் அவன் இருக்கைக்கு அருகில் நின்றுகொண்டு.

அவன் கையில் இன்றைய செய்தித்தாள். அதில் தோராயமாக நடுப்பக்கம். பார். படி. என்றான்.

புதிய வரிவிதிப்பு முறைகள் பொதுமக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது போல ஒரு த்ராபையான தலைப்பு, ரெண்டு முழு பக்கங்களை விழுங்கியிருந்தார் எழுத்தாளர். அதில் நாலைந்து பொதுமக்களை பேட்டி கண்டு அவர்கள் கருத்தை பதிந்திருந்தார். அவர்களது படங்களும் வெளியாகியிருந்தன.

குழந்தையோடு நிற்கும் ஒரு பெண், பள்ளி செல்லும் ஒரு மாணவி, ரெண்டு முதியவர்கள் என்று வேறுபட்ட ஏஜ் க்ரூப்பில் அவர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

அதில அந்த பொண்ணு சொல்றத படி.

படத்தில் இருந்த இளம்பெண் அழகு. ஒல்லியான தேகம், நல்ல உயரம். வெண்ணிற ஆடை, தோளில் ஸ்டைலிஷான ஒரு கரிய நிற பேக். ஒற்றை வார்த்தையில் அழகு என்று சொல்லிவிட முடியாதபடிக்கு.

சூப்பரா இருக்கா இல்லையா ?

நான் அவள் சொல்றத படிக்கச்சொன்னேன்.

புதிய வரிவிதிப்பு முறைகளை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில் அரசுக்கு இருக்கும் நிர்ப்பந்தகளின் அடிப்படையில் வரி விதிப்புகளை செய்கிறார்கள். அந்த வரி விதிப்புகள் நடுத்தர மற்றும் அதிக வருவாய் அற்ற பிரிவினரை பாதிக்காமல் இருந்தால் நன்று. அதே சமயம், இந்த வரிவிதிப்புகள் தொழில் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமைந்திடாமல் காத்திடவேண்டும். அப்படி செய்தால் தான், தொழில்கள் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் செல்லும். பொருளாதாரமும் மீளும். இது கடினமான பணி என்றாலும், இதனை சிறப்பாக கடந்துசெல்வதம் மூலம் மக்கள் அனைவரின் ஆதரவையும் அரசு பெறும்.

காம்ப்ளிகேட்டடா பேசியிருக்கா. இல்லையா ?

அப்போதுதான் பெயர் மற்றும் வயதை பார்த்தேன். அன்னா மரியா குமாரசாமி. வயது பதினாறு. வி ஜி எஸ் பள்ளி.

என்னடா, பதினாறு வயசுன்னு போட்டிருக்கு ? பேர் என்னடா வித்யாசமா ? அன்னா மரியா குமாரசாமி ? தமிழ் பொண்ணா இருக்குமோ ?

போர்ச்சுகீஸ் மாதிரி இருக்காடா. அன்னா அப்படீங்கறதுல ரெண்டு n இல்லை. அதனால கண்டிப்பா போர்ச்சுகீஸ்.

குமாரசாமி ?

அதான் தெரியலை. ரொம்ப குழப்பமா இருக்கு. அதனால உன்னை கூப்பிட்டேன்.

நெட்ல தேடியிருப்பியே ?

இவ ரொம்ப இண்டலிஜெண்ட். தன்னை பற்றிய எந்த விவரமும் நெட்ல வராம பார்த்துக்க்கிட்டிருக்கா.

ஊப்ஸ்.

அட்ரியன் குமாரசாமின்னு ஒரு மொட்டைத்தலை வர்ரார். அவர் ஒருவேளை இவளோட அம்மாவை கல்யாணம் செஞ்சிருக்கலாம். இவளோட அம்மா டைவர்ஸ் ஆகியிருக்கலாம். ட்ரொல்லி ட்ரோன்ஸ்னு ஒருத்தவங்க இருக்காங்க நெட்ல. அவங்களோட லாஸ்ட் நேம் குமாரசாமி. எந்த தமிழ் பெண்ணோட பேரு ட்ரோல்லி ட்ரோன்ஸ் ? கண்டிப்பா அவங்க குமாரசாமியோட வொய்ப். ஒருவேளை அவங்க இவளோட அம்மாவா இருக்கலாம். அவங்களோட எக்ஸ் ஹஸ்பெண்ட் போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம். அல்லது அவங்களே போர்ச்சுகீஸ் ஆக இருக்கலாம்.

என்னடா பாலச்சந்தர் படம் மாதிரி குழப்பற ? இதை எல்லாம் வச்சி உனக்கு என்ன வேனும் ?

இந்த பொண்ணோட இமெயில் ஐடி கண்டுபிடிக்கனும். அதுக்கு நீ எனக்கு ஹெல்ப் பண்ணனும்.

டேய், ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறது இதுக்கா ?

அதெல்லாம் முடியாது. நீ ஓவ்ர்டைம் பார்த்து எனக்கு இவளோட இமெயில் ஐடி கண்டுபிடிச்சு தா. குழந்தையை போல அடம்பிடிக்கிறான் க்ரிஷ். விட்டால் அழுதுவிடுவான் போல.

சரி உனக்காக இன்னைக்கு ஸ்பெண்ட் பண்ணி கண்டுபிடிக்கிறேன். வீட்ல இருந்து என்னோட வொய்ப் போன் பண்ணா மீட்டிங் இருக்குன்னு நீ பொய் மட்டும் சொல்லு..

ஓக்கே டன் டன். இது க்ரிஷ்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பயபுள்ளைக்கு காதல் கத்தரிக்காய் என்று எதுவும் கிடையாது. எந்த பார்ட்னருடனும் ஒரு டேட் கூட இது வரை கிடையாது. அட யாருடனும் ஒரு காப்பிஷாப் கூட போனதில்லை. தனிக்கட்டை. இவனை கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி அம்மா கட்டாயப்படுத்தவில்லை. சொல்லப்போனால், இவன் அம்மா அடிக்கடி சொல்வது, தயவு செய்து நி யாரையும் கல்யாணம் பண்ணி தொல்லை கொடுக்காதேடா. உனக்கு அதுக்கான மெச்சூரிட்டி கிடையாது. ஷார்ட் டெம்பர் லூசு டா நீ. அவன் அம்மா அவனுக்கு ஒரு தோழியைப்போன்றவள். அவள் சொல்வதிலும் உண்மை இருந்தது.

நான் கேட்டிருக்கிறேன்.

ஏண்டா. லவ் அது இதுன்னு எதாவது ஏன் உனக்கு வரவே இல்லை.

ரவி. When it Happens. it Happens. அது நடக்கும்போது நடக்கட்டுமே. எதையும் போர்ஸ் செய்யவேண்டாமே ?

அலுவலகத்தில் என்னுடைய கணினியில் கூகிளை திறந்து அன்னா மரியா குமாரசாமி, அன் மரி குமாரா, அன்னா மரியே குமாரசுவாமி என்றெல்லாம் டைப் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.

ம்ஹும். அவன் சொன்னதுபோல உண்மையில் இவள் இண்டலிஜெண்ட்.

யார் யாரோ வருகிறார்கள். கூகிள் படத்தேடல், புதிய தேடு இயந்திரம் பிங், பழைய தேடு இயந்திரம் யாஹூ என்று என்னால் ஆனமட்டும். இல்லை. கணிப்பொறியை சல்லடையாக்குகிறேன். அன்னா மரியாக்களை ஜலிக்கிறேன். சிக்கவில்லை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ரவி. ரிப்போர்ட் எங்கே ? மேனேஜர்.

சார். ஐயாம் நாட் பீலிங் வெல் டுடே. நாளைக்கு தந்திடறேனே ?

ஓகே. வீட்டுக்கு போகவேண்டியது தானே ?

ஆக்சுவலி ஐ ஹாவ் சம் பர்சனல் ஒர்க் சார்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

ஒருமாதிரி முறைத்தபடி அவர் என் அறையில் இருந்து வெளியேற. மறுபடியும் கூகிள். வெறும் ஆன் மரி என்று தேடினால் கிடைப்பாளா ? குமாரசாமிக்கு எப்படி அன்னா மரியான்னு ஒரு மகள் இருக்கமுடியும் ?

'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா' அலைபேசி துடித்தது.

என்னங்க, எவ்ளோ நேரம் ஆகும் வர ? எதுவும் பெரிசா வேலை இல்லைன்னு தானே சொன்னீங்க ?

இல்லம்மா, க்ளையண்ட் மீட்டிங்ல என்னை இழுத்துவிட்டுட்டாங்க.

சரி எப்ப ?

ஹாபனவர் ஆகும். பை.

அரைமணி நேரத்தில் எதுவும் முடியாமல், சரி நாளைக்கு பார்த்துக்கொள்ளலாம் என்று க்ரிஷிடம் சேட்டில் சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காலையில் வீட்டில் காபியுடன் கணிப்பொறியை திறந்தவுடன், ஏங்க ஷேர்ட் அயர்ண் பண்ணலாம் இல்லையா ? காலையில கம்யூட்டர் திறக்கலைன்னா இந்த மனுசனுக்கு ஆவாதே ? என்ற வசவுகளுடன் கூகிள்.

முதல் பெயர் இரண்டு பெயராக இருந்தால், அதாவது அன்-மரியா என்று இருந்தால் நடுவில் ஒரு சிறிய கோடு விட்டு எழுதுவார்கள். ஒரு போரம்மில் பார்த்திருக்கிறேன். அது தூங்கும்போது நியாபகம் வந்து தொலைந்தது. பொதுவாக தூங்கும்போது எதாவது சிந்தனைகள் ஓடிக்கொண்டேயிருக்கும்..

இந்தாங்க ஷர்ட். அயண்ர் பண்றீங்களா ? இல்லைன்னா நான் அயர்ன் பண்றேன், நீங்க உப்புமா பண்ணுங்க.

இல்லை நான் அயர்ன் பண்றேன்.

ஈவ்னிங் மீட்டிங் இருக்கு, ஷாப்பிங் போகனும்னு சொன்னியே ?

இல்லை நான் நடந்து போய்ட்டு வந்திடறேன்.

ஓக்கே தேங்ஸ் மா. மதியம் மெக்டொனால்ட்ஸ்ல க்ரிஷ் ஆபீஸ் ஐடி கார்டை தொலைச்சுட்டான். உனக்கு தான் தெரியுமே ? ஐடி கார்ட் இன்ஸர்ட் பண்ணலைன்னா வெளியில வர முடியாது. அதனால அவன் வேலை முடிஞ்சு வரவரைக்கும் வெயிட் பண்ணனும். ஸாரிடா...

ஓக்கே பரவால்லைங்க. கேரி ஆன்...

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அலுவலகம், மீட்டிங், க்ரிஷ்ஷுடன் லஞ்ச், அதன் பிறகு லேப்பில் கொஞ்சம் வேலை, அப்புறம் ஒரு டாக்குமெண்ட் சப்மிஷன். மாலையில் வீட்டில்..

ஏங்க ? ஏன் என்னிடம் சொல்லலை ?

என்ன சொல்லலை ?

மதியம் மெக்டொனால்ஸ்ட் போயிருந்தீங்களா அந்த லூசு க்ரிஷ்ஷோட ?

ஹி ஹி. உன் கிட்ட சொல்லாம போனதுக்கு சாரி. அங்க இருக்க யாரையும் நான் சத்தியமா சைட் அடிக்கலை.

உளறாதீங்க. நான் அதை கேட்கலை. அந்த லூசு ஆபீஸ் ஐடியை அங்கேயே விட்டுட்டு வந்திருச்சு. அங்க பார்ட் டைமா வொர்க் பண்ற ஒரு ஸ்கூல் பொண்ணு வந்து கொடுத்திட்டு போனா.

ஓ. வெரிகுட். ஆனா நீங்க திரும்ப போனா, அந்த கார்டை கொண்டுவந்து கொடுத்ததுக்கு அவளுக்கு ட்ரீட் தரனுமாம்.

சரி, தந்திட்டா போச்சு. அவ பேரு என்ன ?

அன்னா மரியா குமாரசாமி.....

என்னாது ???

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, October 27, 2009

அவசர கல்வி உதவி கோரல்

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு
தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களில் இருக்கும் நிலையில் , வேறு எவரும் உதவி செய்யாத நிலையில் எமது மாணவர்களுக்கு பல்கலைகழக பட்டப் படிப்பினை தொடர முடியாத நிலையில் உள்ளனர் .

எனவேதான் இந்த மாணவர்கள் தம்மிடமுள்ள ஒரே உடமையான கல்வியை தொடர்ந்து கட்டி எழுப்பவும் சிதைந்துபோன எமது சமுகத்தை புதுவாழ்வு பெறச்செய்யவும் தமக்கான அவசர நிதி உதவியினை தம் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் இருந்து மிகவும் வேதனையுடன் கோரி நிற்கின்றனர் .

இவ் மாணவர்களுக்கான நிதி உதவியானது அவர்களின் பல்கலைகழக கல்வியினை பூர்த்தி செய்யும் காலம் வரை வழங்கப்படுதல் வேண்டும் .

இந்த நிலையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது முதல் கட்டமாக 217 பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அவசர நிதி உதவியினை கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

மேலும் கிழக்குப் பல்கலைகழகம் , பேராதனை , மொரட்டுவ , ஜெயவர்த்தனபுர , கொழும்பு
பல்கலைகழகங்களில் தமது பட்டப் படிப்பை ஆரம்பித்திருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் தலா 5000 ரூபா வீதம் 76 மாணவர்களுக்கு கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

ஆனந்தராசா இளங்கோவின் இருதய சத்திர சிகிச்சைக்கான முழு உதவிகளையும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பே மேற்கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பல்கலைகழக கல்வியினை தொடர முடியாமல் தவிக்கும் 900 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விபரங்களை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் சேகரித்து உள்ளனர் .

இவர்களுக்கான படிப்புச் செலவுக்கான நிதி உதவியினை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர் .

ஒவ்வொரு குடும்பங்களும் ஒரு மாணவனை பொறுப்பேற்பதன் மூலமாகவும் ஒவ்வொரு பொது அமைப்புக்கள் , கம்பனிகள் , கடைகள் போன்றன சில மாணவர்களை பொறுப்பேற்பதன் மூலமும் இந்த மாணவர்களின் தொடர்ச்சியான
பல்கலைகழக கல்விக்கு வழி வகுக்கலாம்.

பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிசெய்யும் வழிமுறைகள் .

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5000 - 6000 ரூபா . அண்ணளவாக 50 டாலர்ஸ் / 30 பவுண்ட்ஸ் / 35 யுரோ உதவித்தொகை.

ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பலாம் அல்லது 3 மாதம் , 6 மாதம் , ஒரு வருடத்திற்கான பணத்தினை சேர்த்து அனுப்பலாம் .

உதவி செய்ய விரும்புபவர்கள் குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் உதவி செய்ய வேண்டும் .

வங்கி விபரம்

Name : ITSO ( International Tamil Students Organization )
Bank : HSBC
Branch : Stanmore
Branch Sort Code : 40 - 43 - 46
Account Number : 31434225

SWIFT Code : MIDLGB22

IBAN : GBO3MIDL40434631434225


கணக்கறிக்கை

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்தின் மூலமாக எம்மை தொடர்பு கொள்ளலாம் .

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு
பிரித்தானியா
தொடர்பு எண் : +447551449606
மின்னஞ்சல் முகவரி : itsonet@hotmail.co.uk

http://www.facebook.com/itsoonline

Monday, October 26, 2009

செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல்

கவுஜை

எதிரித்தோழர் ஒருவர் ஒரு வரிக்கு ஒரு வார்த்தை என இயற்றிய கவிதை.

ஆஹா..
ஒரு
பன்றிக்கே
பன்றிக்காய்ச்சல். !!!!
ஆச்சர்யக்குறிஈஈ..

டயலாக்

இம்சை அரசன் படத்தில் புலிகேசி :

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மீது ஏறி நின்றால்
வென்றுவிடலாம் குலசேகரனை..!!

தற்காப்பு



நக்கல்



H1N1 வைரஸ்



மற்றபடி பதிவுக்கு வருவோம். தலைப்பில் கடைசி வார்த்தை விடுபட்டுள்ளது. "செந்தழல் ரவிக்கு பன்றிக்காய்ச்சல் வாக்ஸீன்". என்று இருக்கவேண்டும். வியாழக்கிழமை பண்ணிரண்டு மணியில் இருந்து இரண்டு மணிக்குள் மருத்துவமனைக்கு வந்து வாக்ஸினேஷன் பெற்றுக்கொள்ளும்படி என்னுடைய அரசு மருத்துவர் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

மொக்கையான நன்பர்கள், ஏமாந்த எதிரிகள் (ஒரு 30 செகண்டாவது ஜாலியா இருந்ததா இல்லையா), எல்லாரும் ஆதரவோ எதிர்ப்போ, ஒரு வாக்கை செலுத்தவும். ஜெயபாரதன் அவர்களின் பதிவுக்கான சுட்டி இடப்புறம் உண்டு. வாசிக்கவும். நன்றி.

Friday, October 23, 2009

வீக் எண்ட் ஆங்கில பாடல்கள்

ரசிக்கும் & ரசிக்கவைக்கும் சில பாடல்கள்..

லம்பாடா கவோமா



மிஸ்டர் ப்ரெசிடெண்ட்



சாட்டர்டே நைட்



மெக்கரீனா



லெஸ் கேச்சப் அசரஜே



ஹிப்ஸ் டோண்ட் லை (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

http://www.youtube.com/watch?v=FLQgjEhH400

பாப் மார்லி

http://www.youtube.com/watch?v=tbPEFyAbwqE (வீடியோவை எம்பிட் செய்ய முடியவில்லை)

ஹேப்பி பீட் டேன்ஸ் மட்டும்




இன்னைய கணக்கு முடிஞ்சது. முடிஞ்சா ஓட்டு போடுங்க. இல்லைன்னா வேற எதாவது நல்ல பதிவுக்கு போடுங்க. ஜெயபாரதன் பதிவுக்கு லிங்க் இருக்கு பக்கத்தில, அதில் போய் நல்ல கண்டண்ட் படிச்சுக்கோங்க.)

Wednesday, October 21, 2009

கார்த்திக் அம்மா....

2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இறுதி பகுதி என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. மறக்க முயன்று தோற்ற நிகழ்வு. சரியாக நினைவில்லை என்றால் சந்தோஷமே.

அப்போது ஒரு நாளைக்கு அரைபாக்கெட் கிங்ஸ் வாங்குவேன். ஆங். இப்போது விட்டாச்சு சிகரெட். ஒருவருடமாகிறது புகைத்து. மீண்டும் புகைக்க விருப்பமில்லை. மனைவிக்கு கொடுத்த உறுதிமொழி மூலம் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே புகைப்பதை விட்டுவிட பல முறை எடுத்த முயற்சிகள் தோல்விகளில் முடிந்ததை தனியாக எழுதவேண்டும்.

எங்கே விட்டேன் ? புகை. ஆம். அலுவலகம் வந்து பார்த்தால் சிகரெட் தீர்ந்துவிட்டிருந்தது. நான் தங்கியிருந்த பேச்சுலர் வீட்டில் ஒரே புகைவண்டிகள். காலையில் காபிக்கு பிறகு ஒரு சிகரெட் தேடினால் பாக்கெட் காலி.

டெவலப்மெண்டில் இருக்கும் விஜய ஷங்கர் சிங் வில்ஸ். இருந்தாலும் பரவாயில்லையே என்று அவனை தேடினால் அவன் ஒரு மீட்டிங்கில். மஹிபால் புகைக்கமாட்டான். இருந்தாலும் எப்போது கூப்பிட்டாலும் கம்பெனி தருவான். அவன் சீட்டில் அவனை ஆளை காணவில்லை.

இந்த பதிவு கொஞ்சம் குழப்பமாயிருக்கலாம் உங்களுக்கு. அப்படியிருந்தால் நேரத்தை வீணடிக்காமல் வேறு உபயோகமானதை தேடி படிக்கவும். பெங்களூர் இன்னர் ரிங் ரோடு என்று உண்டு. டெல் பில்டிங், அதன் பிறகு ஏஎன்ஸட் அப்புறம் எல்ஜி, மைக்ரோசாப்ட், ஐபிஎம், டார்கெட். எதிர்புறம் சாஸ்கென். அப்போது டெல் பில்டிங் முன்புறம் பீப்புள் சாப்ட் அல்லது ஹனிவெல் இருந்தது என்று நினைக்கிறேன்.

சாலை அருகே, ஏதோ கன்ஸ்ட்ரக்ஷனும் நடந்துகொண்டிருந்தது. இப்போது புதிதாக வலது புறம், இல்லை இடது புறம். ம்ஹும். கோரமங்களாவில் இருந்து வரும்போது இடதுபுறம், டொம்ளூர் பாலம் வழியாக வந்தால் வலதுபுறம். அதன் முன் ஹுண்டாய் ஷோரும். அங்கே மூன்று புறமும் தட்டி, அப்புறம் நடுவில் ஒரு டேபிளுடன் சிகரெட் விற்பார்கள்.

சாஸ்கெனில் இருந்து நடந்துவந்தேன். இதற்கெல்லாமா பைக் எடுப்பார்கள் ? வெய்யில் கொஞ்சம் அதிகம். பதினோரு மணி வெய்யிலில் புகை பிடிக்க எரிச்சலாகத்தான் இருக்கும். சிகரெட் வாங்கிக்கொண்டு ஹுண்டாய் ஊழியர்கள் வழக்கமாக பைக் நிறுத்தும் இடத்தில் இருக்கும் பெஞ்ச் போவதாக ப்ளான். நின்று கொண்டோ அல்லது வெய்யிலிலோ புகைப்பது பிடிக்காது. எங்காவது உட்கார்ந்துகொள்ளவேண்டும்..

______________ XXXX _______________


2008 ஆம் ஆண்டு. கார்த்திக் அம்மா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவரது இளையமகன் செந்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக. தொலைபேசி எண் கேட்டிருந்தார்கள் கொடுத்தேன்..

கார்த்திக் அம்மாவின் கணவர் 2000 ஆம் ஆண்டு லுகேமியா அல்லது இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் பெருகி பெருகி உயிரை உருக்கிவிடும் நோய்க்கு ஆளாகி மரணமடைந்துவிட்டார். ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு வந்ததே, அதே நோய்.

குணப்படுத்தவே முடியாதாமே ? அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்திருந்தார்களாம். மேட்டூரில் வேலை பார்த்தவர் என்றும் சொன்னார்கள். கார்த்திக் அம்மாவின் தம்பி சேலத்தில் வழக்கறிஞர்.


______________ XXXX _______________


பொதுவாக இண்டர்மீடியட் ரிங் ரோட்டில் காலை மற்றும் மாலையில் மட்டுமே நல்ல ட்ராபிக் இருக்கும். அதன் பிறகு பதினோறு மணியில் இருந்து மதியம் மூன்று வரை ட்ராபிக் பெரிதாக இராது. அவ்வப்போது வரும் ஆட்டோக்கள் பைக்குகள். கால்செண்டர் ட்ராபிக் துவங்கி விட்டால் பம்பர் டு பம்பர் ட்ராபிக் இருக்கும்.

அங்கே சிகரெட் கடையை தேடிப்போன எனக்கு அதிர்ச்சி. கடையை காணோம். சாலையின் இருமருங்கிலும் பார்த்தால், கடை கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் அளவுக்கு இண்டர்மீடியட் ரிங் ரோட்டின் பக்கம் நகர்ந்துவிட்டிருந்தது.

பெங்களூர் அளவுக்கு குழப்பமான ட்ராபிக் போலீஸை எங்கும் காணமுடியாது. ஏன் ஒன் வே வைக்கிறார்கள், ஏன் எடுக்கிறார்கள் என்று தெரியாது. அங்கே இண்டர்மீடியட் ரோட்டின் முதல் யூ டர்ண் எதிர்புறம் ஒரு விளம்பர போர்டு வைப்பதற்கான பணிகள் ஆரம்பித்திருந்தது. அதன் அருகே கடை. ஒன்று கடை புதிதாக இருக்கவேண்டும் அல்லது கடையை நகர்த்தியிருக்கவேண்டும்..

______________ XXXX _______________


கார்த்திக் அம்மாவிடம் பேசியபோது ஒரு விஷயம் தெரிந்தது. அவரது மகன் கார்த்திகேயன், பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைபதிந்துவந்ததும், அவர் விஜய நகரம் என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருந்தது. அதன் பிறகு கார்த்திக் பற்றிய ஒரு அதிர்ச்சியான உண்மையை சொன்னார். கார்த்திக், பெங்களூரில் நடந்த ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்பது தான் அது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளவில்லை, மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தது.

அதன் பிறகு அலுவலகத்தில் இருந்த தமிழ் பையன் பாலுவையும் அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். காரணம் பாலு ஒரு நல்ல லிஸனர். உங்களது பிரச்சினை எதுவாக இருந்தாலும் பாலுவிடம் சொல்லி ஆறுதல் தேடலாம். நாம் அழுதால் அவனும் அழும் மனது அவனுக்கு.

கொஞ்ச நாளில் அய்யோ முடியலை என்று F1 அழுத்தினான் பாலு. அவர்கள் ரொம்பவும் மனம் உடைந்துள்ளார்கள்டா. நீ சென்று பார்த்துவா என்றான். சென்னைக்கு டிக்கெட் புக் செய்தேன். வடபழனி தாண்டி, ஆலமரம் ஸ்டாப்பிங் தாண்டி ஆற்காட்டு ரோட்டில் நேராக போய் அவர்கள் வீட்டை கண்டுபிடித்தேன்.

சாப்பிடாமலேயே உயிர்வாழ்கிறார்கள் போல கண்ணில் உயிரை வைத்துக்கொண்டு, வீடெங்கும் கார்த்திக் படம், எப்போதும் கார்த்திக் புரணம். உங்கள் இளைய மகன் செந்திலையும் கவனியுங்க என்றால் அவர்களுக்கு புரியவில்லை. எப்போதும் கார்த்திக் கார்த்திக் என்று இழந்துவிட்டவரை நினைத்து அழவேண்டாம், இளைய மகனை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு உண்டு என்று என்னால் ஆனவரை சொன்னேன்.

ரசம் சாதமும் ஏதோ ஒரு பொரியல், நினைவில்லை. சாப்பிட்டேன். கணிபொறியை திறந்து கார்த்திக் வலைப்பதிவு, கார்த்திக் பைக், என்றெல்லாம் காட்டிக்கொண்டுவந்தபோது கார்த்திக்கின் ஒரு குறிப்பிட்ட படத்தை பார்த்தவுடன் நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். அவன் இவனா ? அப்போது தான் கார்த்திக் இறந்த தேதியை கேட்டேன். ஆகஸ்ட் 26. என்னுடைய கைகள் லேசாக உதற ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் மேலோட்டமாக வழமைபோல பேசிக்கொண்டிருந்துவிட்டு உடல் நலனை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு, கிளம்பினேன்.

______________ XXXX _______________


சிகரெட் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ரோட்டில் ஆங்காங்கே க்ரீஸ். அல்லது கருப்பு திரவம். ஒழுங்காக வண்டியை பராமரிக்கமாட்டானுங்க இந்த கால்செண்டர் டிரைவருங்க. எங்கயாவது போய் இடிப்பானுங்க. ஒருமுறை நானும் என்னுடைய அப்பாவும் மஹிப்பால் ஆஸ்பிட்டல் எதிரே பைக்கில் விழுந்தோம். அல்லது எனக்கு முன்னால் போனவர் விழுந்ததால் ப்ரேக் போடமுயன்று நானும் அப்பாவும் விழுந்தோம். எனக்கு காலில் நல்ல அடி. அப்பாவுக்கு எதுவுமில்லை. அது நியாபகம் வந்து எரிச்சல்.

ஏற்கனவே கடையில் ரெண்டு பேர் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தார்கள், டெல் எதிரே ஒரு பெண் சாலையை கடந்துகொண்டிருந்தாள். சிவப்பு சுரிதார். துப்பட்டா இல்லை. வெண்ணிற கார் ஒன்றும், அதை தொடர்ந்து இரண்டு மூன்று வாகனங்கள் கடந்துசென்றுகொண்டிருந்தது.கடையை சமீபித்து சில்லறையை கொடுத்து சிகரெட் வாங்கினேன். தீப்பெட்டி பாக்கெட்டிலேயே இருந்தது. பற்றவைத்து இரண்டு இழுப்பு இழுத்தேன். சுமாரான ட்ராபிக் இருந்தது. திரும்ப போக எத்தனித்தேன்.

டமார் என்று ஒரு சத்தம். "அம்மா" என்று சத்தம் கேட்டது. சாலையின் சென்றுகொண்டிருந்த ஒருவர் எகிறிவிட்டார். க்ரீஸ் ஆக இருக்கவேண்டும். எவ்வளவு சிறப்பாக ஓட்டினாலும் க்ரீஸ் தன்னுடைய வேலையை காட்டிவிடுகிறது. நானும் இரண்டு மூன்று பேரும் ஓடினோம். சில வாகனங்கள் ஜாக்கிரதையாக கடந்து சென்றன, கொஞ்சம் தள்ளி ரெண்டு மூன்று பேர் நிறுத்தினார்கள், சமீபித்து பார்த்தேன், சின்ன பையன். பள்ளிக்கூடத்து பையன் போல இருந்தான். தமிழன் போலிருக்கிறது. வலிக்கும்போது அம்மா என்று கத்துபவன் வேறு யாராயிருக்கமுடியும். உதறிக்கொண்டிருந்தான். அவன் விழுந்திருந்த இடத்தில் கற்கள். எங்கேயும் ரத்தத்தை பார்க்கமுடியவில்லை.

சிகரெட்டை அனிச்சை செயலாக எறிந்துவிட்டு ஓடிவந்திருக்கிறேன். கற்களின் மேல் கிடக்கிறானே என்று பேண்ட் அழுக்காகிவிடுமோ என்று நினைத்துக்கொண்டே தரையில் அமர்த்து மடியில் எடுத்து போட்டேன். நீலு நீலு என்று யாரோ கத்தினார்கள். தெலுங்கா கன்னடமா ? சாலையை கடந்துகொண்டிருந்த பெண்ணும் வந்துவிட்டார். அவர் தன்னுடைய பையில் இருந்து தன்னுடைய பாட்டிலை எடுத்தார். ஏழெட்டு வாகனங்கள் நின்றுவிட்டன. நிமிடத்தில் நிறையபேர் வந்துவிட்டார்கள்.

பையன் மடியில் இருந்தான், அவனுக்குத்தான் ஆக்ஸிடெண்டா என்பது போல கண்கள் மிக சாந்தமாக இருந்தது. ஏதோ பேச முயன்றான். அம்மா என்று சொல்ல முயல்கிறான் போல தெரிந்தது. தண்ணீர் கொடுக்க முயன்றபோது தண்ணீர் வழிந்து என்னுடைய பேண்டில் ஊற்றியது. ஹனிவெல் டேக் போட்ட ஒருவர், அவரது ஐடி பாக்கெட்டில் இருந்தது, ஹாஸ்பிட்டல் கொண்டுபோகலாம் என்றார்.

கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலா, மஹிப்பாலா என்று யாரோ சத்தமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள், ஹீ ஈஸ் எ டெல் எம்ப்ளாயீ என்று யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். மாநிறத்துக்கு கொஞ்சம் கம்மியான பையன். என்னுடைய கைகளை இறுகப்பிடித்தான், பிறகு திடீரென தளர்துவிட்டது. முப்பது வினாடிகளில் ஒருமுறை அதிர்ந்து அடங்கினான். பையனை யாரோ தூக்கினார்கள், ஆட்டோவில் கொண்டுபோனார்களா அல்லது காரிலா என்று தெரியவில்லை. எனக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. பையன் என்னுடைய மடியில் கிடக்கும்போது இரண்டு வினாடிகள் ஒரு திடீர் சிலிர்ப்பு என்னுடைய உடலில் வந்து ஆட்கொண்டது. அதன் பின் பையன் கண்கள் மூடின. உயிர் பிரிந்துவிட்டதோ என்ற சந்தேகம். எங்கேயும் ரத்தம் வரவில்லையே ? கூட்டம் கலைய ஆரம்பித்தது, ட்ராபிக் போலீஸ் வந்தார்கள், பைக் ஓரமாக கிடத்தப்பட்டது.

ஹீ வாஸ் ஹோல்டிங் தட் பர்ஸன், என்று ஒரு ஹிந்திக்காரன்

டூ யூ நோ ஹிம் ?

நோ. ஹூ டேக்கன் ஹிம் ? ஆக்சுவல்லி ஐ காட் கிட்டினெஸ்.

ஐ திங்க் ஹீ வில் பி ஆல்ரைட். தேர் ஈஸ் நோ ப்ளட். ஹீ மே வேக் அப் இன் த ஹாஸ்பிட்டல். கேர் பார் எ ஸ்மோக் ? என்னுடன் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்தவர்.

நோ ஐ ஹாவ்.

ஹுண்டாய் ஷோரூம் நோக்கி நடந்தேன், ஏன் என்று தெரியவில்லை, உடல் சூடாகிவிட்டிருந்தது. ரெண்டு சிகரெட் தொடர்ந்து புகைத்தேன். வழக்கமாக விஜய் ஷங்கர் சிங் அப்படி புகைக்கும்போது கன்னாபின்னாவென திட்டுவேன்.

விஜய் மொபைலில் கூப்பிட்டான், ஹேய் டேமிட், வேர் ஆர் யூ ?

ஐயாம் இன் ஹுண்டாய் ஷோரும் மேன். ஐயம் நாட் பீலிங் வெல். கேன் யூ இன்பார்ம் என்.கே.ஜி ?

அடுத்தநாள் அலுவலகம் வந்தபோது, சற்றே கசங்கிய, டெல் நிறுவனத்தில் இருந்து வந்திருந்த ஒரு பொக்கே ஒன்று இருந்தது. ரிசப்ஷனில் விசாரித்தேன். ஆக்சுவலி வீ ஹாட் ரிசீவ்ட் ப்ரம் ஹனிவெல் என்றார்கள். அந்த தம்பியை தூக்கிய ஹனிவெல் நன்பர் என்னுடைய ஐடி கார்டை பார்த்து எனக்கு பார்வெர்ட் செய்திருக்கக்கூடும்

அதன் பின் எனக்கு கிட்டத்தட்ட தினமும் ஒற்றைத்தலைவலி இருந்தது. உயிர் போவது போல விண் விண் என்று வலிக்கும். பகல் நேரத்தில். வேலை எதுவும் செய்யாமல் நாட் பீலிங் வெல் என்று ஆபீசில் உள்ள பெட் ரூம் போன்ற அமைப்பில் போய் படுத்துக்கொள்வேன். அப்ரைசல் கட். கம்பெனி மாற்றினேன். ஏதாவது ஆன்சைட் கிடைக்குமா என்று கேட்டு சிட்னி, ஆஸ்திரேலியாவில் போய் ஆறுமாதம் இருந்தேன். ஆஸ்திரேலியாவிலும் ஒற்றைத்தலைவலி தொடர்ந்தது. திரும்ப இந்தியா வந்து எல்.ஜியில் இண்டர்வியூ. ஹெச் ஆரிடம் கேட்டேன். வேர் ஈஸ் த ஆபீஸ் லொக்கேஷன் மேடம் ?

இட்ஸ் இன் இண்டர்மீடியட் ரிங் ரோட். டூ யூ நோ டெல் ?

______________ XXXX _______________


கார்த்திக் அம்மா, கார்த்திக்கின் வலைப்பதிவை தொடர்கிறார்கள். பொன்னியின் செல்வன் குழுமம் கூட இருக்கிறது என்று கேள்வி. விஜயநகரம் என்ற பெயரில் உள்ளது வலைப்பதிவு.

இந்த சம்பவத்துக்கு பிறகு உறவினர்கள் நன்பர்கள் என்று யார் சொல்வதையும் கேட்பதில்லை, தான் நினைப்பதை தான் செய்வேன் என்று பிடிவாதம். சேலத்தில் உள்ள தம்பியையும் அதிகம் தொடர்புகொள்வதில்லை என்று சொன்னார்கள். இரண்டாவது மகன் கேட்கும் பணத்தை கொடுத்துவிடுகிறேன், அவன் தன்னுடைய நன்பர்களுடன் இருந்துகொள்கிறான் என்றார்கள்.

கார்த்திக் கார்த்திக் என்று இறந்துவிட்டவரை நினைத்து பைத்தியம் போல் இருந்தால் எப்படி இரண்டாவது மகன் ஒட்டுவான் ?

______________ XXXX _______________



கார்த்திக்கின் வலைப்பதிவு மற்றும் சிந்தனையோட்டங்களை பின்னாளின் படித்தேன். பெரிய சிந்தனையாளன். தமிழ்ச்சூழல் இவனை இழந்துவிட்டது. மல்ட்டிப்புள் டேலண்டட். இவன் இங்கே இருக்கவேண்டியவனே இல்லை. எங்கோ இருக்கவேண்டியவன்.

அதனால் தான் போய்விட்டானோ ? இறப்புக்கு பின் உயிர் இங்கேயே இருக்குமா ? உடல் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிட்டபின் உயிர் அமைதியடைகிறது. கணிப்பொறியை ஷட்டவுன் செய்தவுடன் அதன் இயக்கத்தை அது நிறுத்திக்கொள்வது போல. ஆனால் கணிப்பொறி அங்கேயேதான் இருக்கிறது. ம்ஹும். புரியவில்லை. பொதுவாக நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் அந்த உயிர் துடித்து வெளியேறியபோது என்னுடைய கைகள் சில்லிட்டு உடல் சிலிர்ப்படைந்ததே ? அதை விளக்கமுடியுமா ? உங்களில் யார் மடியிலாவது ஒரு உயிர் பிரிந்ததுண்டா ? அவன் அந்தம்மா மடியிலேயே போயிருக்கலாம். இருந்தாலும் கார்த்திக் அம்மாவின் மன உறுதி ? இரும்பு போல இருக்கிறது. கார்த்திக் கற்றுக்கொடுத்திருப்பான். அவன் செய்வான். அவன் இன்னும் இருப்பதாகவே அவர் நம்புகிறார். இருக்கலாம். அப்படி இருந்தால் அவனுக்கு பிறந்தநாள் கொண்டாடும்போது சொல்லிவிடவும். நான் வாழ்த்து அனுப்புகிறேன்...!!!

______________ XXXX _______________

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....