Wednesday, October 29, 2008

காண்டு கஜேந்திரன் பதில்கள் பாலஸ்தீனம் சம்பந்தமாக

இஸ்ரேலில் நடக்கும் அரசியல் நாடகங்களுக்கேற்ப பாலஸ்தீனம் பற்றிய கேள்விகள் அதிகமாக வந்ததால் நண்பர் வருண் அவர்களது ஆலோசனைக்கேற்ப அவற்றுக்கு இப்பதிவில் பதில் அளிக்க முயற்சி செய்கிறேன்.

குறைசிம்மா:

1. பாலஸ்தீனியர்கள் அழிவது யூதர்களுக்கு நல்லதா?


ஆம். ஏனெனில் அவர்கள் கணினி மொழியில் கூறுவதென்றால் கரப்ட் ஆன கோப்புகளாகி விட்டனர். பல வைரஸ்கள் அவர்களிடம் குடி கொண்டு விட்டன. கர்ணபிரபுவே நாணும் வண்ணம் மற்றவருக்கு அவற்றை தானமாக அளிக்கின்றனர். கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தால் கொல்லப்பட்டவர்களே அதிகம். நேரடியாக கொல்வதோடு மட்டுமின்றி அப்பாவி மக்களையும் கேடயமாக்கி தாம் தப்பிக்க முயலுகின்றனர், இப்போது செய்வது போல.

மலையகபாலஸ்தீனியன்

1) தன்னையே கொல்ல திட்டமிட்ட யாசர் அராபத்தை மன்னித்து, பாலஸ்தீனத்தில் அவனால் கஷ்டப்படும் மக்கள் மீது கூட இஸ்ரேல் ராணுவம் கொலைகளை செய்துவிடக்கூடாது என்று இவ்வளவு முயற்சி எடுக்கும் கோல்டா மேயர் பாராட்டுக்குரியவர்தானே?


தன்னை கொல்லத் திட்டமிட்ட யாசர் அராபத்தை கோல்டா மேயர் மன்னித்தாரா என்பது பற்றி கூற என்னிடம் கருத்து இல்லை. ஏன் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மேயர் மேல் இந்த கொலை வெறி உங்களுக்கு?


2) காசா தெற்கு முனையில் இஸ்ரேலிய ராணுவம் வெற்றிகொண்டபோது இவ்வளவு கூப்பாடு போடாத வெளிநாட்டு வாழ் பாலஸ்தீனியர்களும், இந்தியாவில் இவ்வளவு பிரச்னைகளை தூண்டிவிடும் ஆயிரம் விளக்கு பகுதி வாழ் பாலஸ்தீனியர்களும், காசா முனைக்கு வடக்கில் ராணுவம் யாசர் அராபத்தின் கல்லறையை நெருங்குவதாலேயே இவ்வளவு கூப்பாடு போடுகிறார்கள். ஆகையால், அடிப்படையில் காசா முனை மேலாதிக்கத்துக்காகத்தான் கூப்பாடு போடுகிறார்கள் என்று கூறலாமா?

பதில்: கண்டிப்பாக சொல்லலாம்.

3) யூத கோல்டா மேயர் கொடுத்த பணத்துக்காக மற்ற இயக்கங்களில் இருந்த பாலஸ்தீனியர்களை கொன்றொழித்த யாசர் அராபத் துரோகியாகாமல் மற்ற இயக்கங்களில் இருந்தவர்கள் துரோகியானது எப்படி?

பதில்: கோல்டா மேயர் இதற்காக பணம் கொடுத்தார் என எங்கும் படித்ததில்லை. இருப்பினும் தன் சுயமுனைப்புடனேயே கொலைகளை செய்வித்து வரும் யாசர் அராபத்தின் சீடர் முகமது அப்பாஸின் பங்கை உங்கள் கேள்வி குறைத்து மதிப்பிடுகிறது என நினைக்கிறேன்.

4.நேற்றுவரை பாலஸ்தீனியர்களை கடுமையாக விமர்சனம் செய்துவந்த தா பாண்டியன் இன்று ஆதரவாக பேசுவதன் மர்மம் என்ன?

பதில்: அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

ஆனந்த குமார்:

1. பாலஸ்தீனியர்கள் ஐ.நா அமைதி படையை எதிர்த்து சண்டை போட இஸ்ரேல் ராணுவத்திடம் ஆயுதங்கள் பெற்றாற்களா? உண்மையாகவே நடந்த ஒன்றா?


பதில்: அவ்வாறு ஆயுதம் பெற்றது பற்றி தெரியாது. ஆனால் இருவருக்குமே ஐ.நா அமைதிப்படை ஆகாது என்பதில் சந்தேகம் இல்லை.

2. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர்கள் நம்ப கூடியவர்களா?

பதில்: இல்லை

3. இட ஒதுக்கீடு தான் இந்த பிரச்சனைக்கு காரணமாமே உண்மையா?

பதில்: இதென்ன புதுக்கதை? இக்கேள்வி இங்கு எப்படி வந்தது?

4. காசா முனை பாலஸ்தீனியர்களால் வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியர்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்களா?

பதில்: பாலஸ்தீன சிக்கல் ஒரு இடியாப்பச் சிக்கல். காசா முனை பாலஸ்தீனியருக்கும்
வெஸ்ட் பேங்க் பகுதி பாலஸ்தீனியருக்கும் ஆகாது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், பாலஸ்தீன யூதருக்கும் ஆகாது. இன்னும் யாருக்கும் யாருக்கும் ஆகாது என்பது தெளிவாக இல்லை.

5. இஸ்ரேலில் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் இருக்கிறார்களாமே, தனி பாலஸ்தீனம் கிடைத்தால் அவர்கள் கதி என்ன?

பதில்: யாருக்கு தீமையோ தெரியாது. ஆனால் இப்போதைய சூழ்நிலையில் தனி பாலஸ்தீனம் கிடைப்பது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் நலனுக்கு மட்டுமே உரியது என நினைக்கிறேன்.

6.யாசர் அராபத் மட்டும் ஏன் தன் பிள்ளைகளை தற்கொலை படையாக மாற்றவில்லை?

பதில்: ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே.

7. இதிலும் யூத துவேஷம் காட்டுவோர் பற்றி?

பதில்: அப்படி காட்டாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

..

..

..

வணக்கம் எல்லாருக்கும்...டோண்டு சாரின் பதிவை மிமிக்ரை செய்ய முயற்சி செய்துள்ளேன்...கலகலப்பை உருவாக்கும் என்று நம்புகிறேன்...(பல விஷயங்கள் எடிட் செய்யாமல் அப்படியே பொருந்துகின்றன...நேரமின்மை காரணமாக இத்துடன் முடிக்கிறேன்..)

..

..

..

தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணம் கருவி பட்டையில் ஓட்டு குத்தவும்...

Thursday, October 23, 2008

கள் இறக்க அனுமதி மற்றும் திவ்யாவுக்கு ஏழாயிரம் ஹிட்ஸ் by ரமேஷ்



நானும் மணிவண்ணனும் சேர்ந்து பி.எஸ்.ஸி ப்ராஜக்ட் செய்தோம்..."இண்ட்ரப்ட் For பிகினர்ஸ்" என்று "C" மொழியில்...

ஒரு எம்.சி.ஏ சீனியர் (பெயர் கண்ணன், புத்தனாம்பட்டி, திருச்சி மாவட்டம்), கொடுத்த ஐடியா, சி எடிட்டரில் மெனு, சப் மெனு, ஹெல்ப் பைல்ஸ் எல்லாம் போட்டோம்...

சின்ன ஐடியாவை ஊதி ஊதி பெரிதாக்கியது மணிவண்ணன் தான்...நான் அவ்வளவாக காண்ட்ரிப்யூட் செய்யவில்லை என்றாலும் ஒரு அல்லக்கை நொள்ளக்கையாக கூடவே இருந்தேன்...

திருச்சி துறையூரில் ப்ராஜக்ட் டாக்குமெண்டேஷனுக்காக ஒரு இரவு ஒரு ப்ரவுஸிங் செண்டரை வாடகைக்கு எடுத்து டைப்போ டைப்பு என்று டைப்பினான்...

நான் கண்கள் சொருக தூங்கினேன்...அப்பப்போ "தம்" போட மணிக்கு கம்பேனி கொடுத்ததோடு சரி...

வைவாவின் போது நான் அதிகமாக சைட் அடித்த மேடம் மற்றும் ஹெச் ஓ டி எதிரில், என்னவோ மணி அதிகம் பேசவில்லை...நான் ஏதோ உளறிக்கொட்டி படபடவென்று பேசி எப்படியோ ஒப்பேத்தினேன்...

ரிசல்ட் வந்தபோது, என்னுடைய மார்க் 99. மணிவண்ணன் 98...

எப்போதும் 75 சதவீத மதிப்பெண் வைத்திருக்கும் மணி என்னை விட ஒரு மார்க் கம்மி...

நாற்பது மதிப்பெண்ணை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று போராடும் நான் அவனை விட ஒன்று அதிகம்...

ஓ என்று ஒரே அழுகாச்சி...

சரி என்று நான், இளமாறன் அப்புறம் செல்வமணி தம்பி ஸ்டீபன் (மலை மாடு மாதிரி இருப்பான்), நாலு பேரும் கள்ளு குடிக்க பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு போனோம்...ஓமாந்தூர் என்று நியாபகம்...

நான் கொஞ்சம் விவரம் தெரிஞ்சு கள்ளு குடிப்பது அது தான் முதல் முறை, ஏற்கனவே பதனி தண்ணீர் கொஞ்சம் சாப்பிட்டிருக்கேன், அது தான் கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...

ஸ்டீபன் தான் எல்லாருக்கும் கள் வாங்கினான்...இளமாறன் காசு கொடுத்தானா என்று தெரியவில்லை..(அவன் ஒரு முடிச்சு அவிழ்க்காத முடிச்சவுக்கி...அதான் காசு எப்பவும் தரமாட்டான் ஹி ஹி சாரிடா இளம..எல்லாம் ஒரு பில்டப்பு தாண்டா)

படபடவென குடித்தேன்..கொஞ்சம் புளிப்பாக...கொஞ்சம் துவர்ப்பாக...மாங்காய் ஊறுகாயோடு கொஞ்சம் அஜால் குஜாலாகத்தான் இருந்தது...

மணிவண்ணனின் அழுகாச்சி அடங்கியதா என்று நினைவில்லை...!!

போதை சுமாராக ஏறியது...டி.வி.எஸ் பிப்டியிலோ, நடந்தோ, பஸ்ஸிலோ ரூமுக்கு வந்தோம்..சரியாக நினைவில்லை...

நிற்க !!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் நான் பார்த்தவரை சாராயத்துக்கு வாரம் 1000 ரூபாய், கள்ளுக்கு வாரம் 500 ரூபாய் மாமூல்...

ரைட்டரிடம் மாமூல் கட்டியவர்கள் தாராளமாக தொழில் செய்யலாம்...

என்னோட சித்தப்பா ஏட்டைய்யாவாக இருந்த காவல் நிலையத்தில் இதனை கவனித்திருக்கிறேன்...

வாழ்க வளமுடன்...

நிற்க !!!!!!!!!!!!!!!!!

தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது...அரசு ஆணை...

பனைப்பொருள் வாரியத்தலைவர் பெயர் குமரி அனந்தன் என்று நினைக்கிறேன்...

காந்தியவாதி...

காந்தி கள் குடிக்காதே என்று சொன்னாராம்..

அதனால் யாரும் கள் இறக்காதீர்கள் என்கிறார்...

இதனால் மரபு சாரா தொழிலாளர்கள் உண்மையில் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்...பனை பொருள் சங்கத்தலைவர் நல்லசாமி என்பவர், தடையை மீறி கள் இறக்கும் போராட்டம் ஜனவரி 21 முதல் அறிவித்துள்ளார்...

பனைமரத்தில் இருந்து கள் மட்டுமல்ல, பதனீர் போன்ற சாதாரண பொருட்களை கூட தயாரிக்க குடுவை கட்ட முடியாது..

அப்படி குடுவை கட்டவேண்டும் என்றால் மாமூல் கட்டவேண்டும்...வாரம் 500 ரூபாய் மாமூல் கட்டவேண்டும் என்றால் பெரும் வியாபாரியாக இருந்தால் தான் முடியும்...

ஆறு மாதம் ஒரு முறை, கேஸ் கிடைக்கவில்லை என்றாலோ, அதிகாரிகளில் ப்ரஷர் தாங்கமுடியவில்லை என்றாலோ, உங்கள் மீது பெட்டி கேஸ் விழும், நீங்கள் உள்ளே இருக்கவேண்டியிருக்கும்...

யார் கண்டா...குண்டர் சட்டம் கூட பாயலாம்..

டாஸ்மாக் கடைகள் மூலம் அரசாங்கமே மது சப்ளை செய்துகொண்டிருக்கும் நிலையில், உயிருக்கு தீங்கு விளைவிக்காத கள்ளை இறக்கவும், விற்பனை செய்யவும் தடுப்பது ஏன் ?

தமிழகத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதில்லை என்று யாராவது சொன்னால் அவர்களிடம் பந்தயம் கட்டத்தயார்...இன்றைய நிலைமைக்கு ஒவ்வொரு கிராமத்திலும் சாராயம் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது...

சட்டரீதியாக அட்லீஸ்ட் கள் இறக்க அனுமதித்தால் எத்தனை குடும்பங்கள் வாழும் ?

60 ரூபாய் கொடுத்து க்வாட்டர் ஓல்ட் மங் அடிப்பதற்கு 10 ரூபாய் கொடுத்து கள்ளை குடித்துவிட்டு போகட்டுமே ?

வலைப்பதிவு செய்யும் பத்திரிக்கை நன்பர்கள் இதனை வெகுஜன ஊடகங்களுக்கு கொண்டு சென்று ஒரு நல்ல தீர்வை கொண்டுவரவேண்டும்...

லாட்டரியை அழித்தீர்கள்...அதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன என்று தெரியுமா ?

இலங்கை தமிழர்களுக்காக உணர்வோடு எழும்பும் குரலை மனமார பாராட்டுகிறேன்...அதே நேரம் தமிழர்களின் வாழ்வாதாரம் சிறக்க அவ்வப்போது நடவடிக்கை எடுக்க தயங்காதீர்கள் முதல்வர் அவர்களே !!!!

நிற்க !!!!!!!!!!!!!!!!

ப்ளீச்சிங் பவுடர் என்று ஒரு கொண்டை எழுதிய பதிவை படித்தேன்...அது கொண்டை என்று தெரிந்துவிட்ட பிறகு எதிர்வினை ஆற்ற விரும்பவில்லை...கொண்டையை தலைகீழாக பார்த்தாலும் அது கொண்டை தான்...

ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றிய ஜோசப் பால்ராஜ் காஷ்மீர் பிரச்சினை பற்றி சரியான தெளிவின்றி இருக்கிறார் என்பது என்னுடைய எண்ணம்..ஜோசப் பால்ராஜ்..தமிழ் சசி காஷ்மீர் பிரச்சினை பற்றி எழுதிய நான்கு இடுகைகளையும் நீங்கள் படிக்கவேண்டும் என்று ஹோம் ஒர்க் மற்றும் இம்போசிஷன் தருகிறேன்...

நிற்க !!!!!!!!!!!!!!!!!

Wednesday, October 22, 2008

குசும்பா !!! ஐ யாம் ஸாரி...ஜெ,சூ.சுவாமி,சோ,இந்து ராம்





குசும்பா...
சுப்ரமணியம் சுவாமி படம் மற்றும் அதில் ஒரு கமெண்டு போட்டு தரமுடியுமா ?

Tuesday, October 21, 2008

கிளுகிளு நமீதா சொல்கிறார் : வேண்டாம் பாலித்தீன்....

டேய் தம்பிகளா...வேண்டாம்டா...வேண்டாம்...அது நல்லதில்லைடா...நான் உங்களோட தாத்தா மாதிரிடா...என்று சேலத்தை சேர்ந்த சித்த வைத்தியர் தொலைக்காட்சியில் இப்போது புலம்பிக்கொண்டுள்ளார்...

ஆனால் அதைவிட ஒரு பெரிய பிரச்சினை..இந்த பாலித்தீன் பைகள்...சுற்றுச்சூழலை குத்திக்கிளறி புண்ணாக்கும் இந்த வீணாய்ப்போன பிரச்சினை, வரும் சமுதாயத்துக்கும் மாபெரும் கேடு...

நல்ல பதிவுகளை எழுதாமல் மொக்கை போட்டாலும் பரவாயில்லை...பாலித்தீன் பைகளை குப்பையாக போடுவதை முடிந்தவரை தவிருங்கள் மக்கா...



இந்த பாலித்தீன் சம்பந்தமான பொருட்கள் - உலகம் முழுவதும் 60 மில்லியன் டன்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகின்றன..

நீ புடுங்குற எல்லா ஆணியுமே தேவை இல்லாத ஆணி தான் என்பது போல எல்லாமே மக்காத குப்பைகள் தான்...

ஒரு ஜெர்மன்காரன் 1898ல ஆக்ஸிடெண்டலா கண்டுபிடிச்சது இந்த பாலித்தீன் என்னும் பொருள்...டயாஸோமித்தேனை சூடாக்கிக்கிட்டிருந்தானாம்...அப்போ வழவழன்னு வந்த இந்த சனியனை ஆராய்ஞ்சிருக்கான்...வந்திருச்சு பாலித்தீன்...

இந்த பாலித்தீன்ல ஒரு சில வெரைட்டீஸை ரீசைக்கிள் பண்ணமுடியும் தான்...ஹும்...இருந்தாலும் முக்காவாசி பாலித்தீன் ரீசைக்கிள் ஆகமுடியாத வகையிலேயே உருவாக்கப்படுதாம்...

டேனியல் பர்டுன்னு ஒரு பதினாறு வயசு கனடா பையன்...ஸ்ப்ஹின்கோஹோமஸ் அப்படீன்ற பாக்டீரியா பாலித்தீனை சாப்பிடுது, 40 சதவீதம் வரைக்கும் பாலித்தீன் பொருட்களோட வீரியம் குறைச்சு அழிக்கிது அப்படீன்னு இந்த வருஷம் (2008) மே மாசம் கண்டுபிடிச்சிருக்கானாம்...

எந்த அளவுக்கு பயன்பாட்டுக்கு வரும்னு தெரியல...

நான் உங்களை கேட்டுக்கறது என்ன தெரியுமா ? முடிஞ்ச வரைக்கும் பாலித்தீனை அவாய்ட் பண்ணுங்களேன்....

கடைக்கு போகும்போது சணல் பைகளையோ, அல்லது கூடையையோ எடுத்துக்கிட்டு போங்களேன்...

அதுல என்ன பெரிய கவுரவ குறைச்சல் ?

பாலித்தீன் கவர்ல குப்பை எல்லாம் போட்டு வெளிய போடலாம் தெரியுமா ? அப்படீங்கறீங்களா ?

சார் / மேடம் ? அதுதானே வேண்டாம்னு இவ்ளோ கரடியா கத்திக்கிட்டு இருக்கேன்...

குப்பைக்கு ஏதாவது பர்மனெண்ட் குப்பைத்தொட்டி மாதிரி வீட்ல வெச்சுக்கோங்களேன்...

நமீதாவுக்கு இந்த விசயம் பற்றி மெயில் அனுப்பினேன்...

அவங்க மச்சீ...நான் சொன்னதா சொல்லு மச்சீன்னு திரும்ப மெயில் அனுப்பியிருக்காங்க...சந்தேகம் இருந்தா WWW.நமீதா.com க்கு மெயில் அனுப்பி நீங்களே கேட்டுக்கோங்க...ஜொள்ளர்களை ஏமாற்றவேண்டாம் என்றும், தன்னுடைய படம் ஒன்றை வெளியிட்டுக்கொள்ளுமாறும் தெரிவித்தார் நமீதா...



நன்றி நமீதா சிஸ்டர் !!!! என்னைய மச்சான்னு கூப்பிடுறவங்க எல்லாம் வரிசையா வந்து பின்னூட்டம் வைங்க, ஆங்...மறந்துடாதீங்க...கடைக்கு போவும்போது வயர் கூடையோ, சணல் பையோ எடுத்துக்கிட்டு போங்க...ப்ளீஸ்...

Monday, October 20, 2008

கஞ்சா குடிக்கி...



நமது கல்லூரிக்காலம் நமக்கு பல அனுபவங்களை கொடுக்குது இல்லையா....களவும் கற்று மறன்னு வேற சொல்லிட்டாரு நம்ம திருவள்ளுவர் தாத்தா...(எனக்கு அப்படி நியாபகம் இல்லையே: மனசாட்சி)...அட எவன் சொன்னா என்ன ? நாம இப்போ மேட்டருக்கு வருவோம்...

தம் அடிக்கிறவனை பார்த்திருப்பீங்க, தண்ணியடிக்கறவனையும் பார்த்திருப்பீங்க...கஞ்சா குடிக்கிகளை பார்த்திருக்கீங்களா ? தம் எல்லா ஊர் கடையிலயும் கிடைக்குது...டாஸ்மார்க் இல்லாத தெருவே இல்லை நம்மூருல இப்போ...ஆனா இந்த கஞ்சா எங்கே கிடைக்கிது உங்க ஊருல சொல்ல முடியுமா ? இந்த மேட்டர் நடந்து ஒரு எட்டு வருசம் இருக்கும்...

கஞ்சா விக்காத ஊரு எதுவும் கிடையாதுமோய்...கஞ்சா குடிக்கிக்கு தெரியும்...எந்த ஊருல எந்த தெருவுல கஞ்சா விக்குறானுங்கன்னு...நம்ம பெரிமா பையன் கோபுன்னு...இவன் ப்ளஸ் 2 முடிச்சிட்டு காலேஜில முதல் வருஷம்...நானும் முதல் வருஷம்...நான் படிச்சது திருச்சியில...இவன் ஊருலேயே புதுசா ஆரம்பிச்ச காலேஜில கம்பியூட்டர் சேர்ந்துட்டான்...

நமக்கு முதல் செமஸ்டருக்கு ஒரு பத்து நாள் லீவு..அதான் அப்படியே ஊருபக்கம் டச்சு பன்னிக்கிட்டு போயிரலாமுன்னு வந்திருந்தேன்...எப்போவும் இந்த கோபு நாயோட தான் சுத்துவேன்...சுத்துறதுக்கு பெரிய பெரிய இடமெல்லாம் கிடையாது எங்க ஏரியாவில...மொத்தமே நாலுதெரு...அதுல நடுவுல பஸ்ஸ்டாண்டு...அப்புறம் கடைத்தெரு...கபிலர் குன்று கோயிலு...தென்பெண்ணை ஆத்துல முருகம்பாற...உலகளந்த பெருமாள் கோயிலு..கேள்ஸ் ஐஸ்கூல்...பஸ்டாண்டை ஒட்டி பாய்ஸ் ஐஸ்கூல்...தெப்பக்குளம்...தபோவனத்து நீச்சல் கொளம் ( கிணறுதான்) அவ்ளோதான்...

வெள்ளிக்கிழமை ராத்திரி வந்திட்டேன்...நைட்டு வீட்ல சாப்ட்டு படுத்திட்டேன்..காலையில் ஏந்திரிச்சவுடனே ( ஒம்போது மணிக்கு) பெரிமா வீட்டுக்கு போனை போட்டேன்...பெரிமா, எங்கே அது...(வீட்ல தலைவருக்கு பயங்கர மரியாதைன்னு வெச்சிக்கங்களேன்)...அதுவா...காலையில ஏந்திரிச்சி முடிவெட்றேன்னு ஒரு இருவது ரூபாய வாங்கிக்கினு போச்சு...என்னா விஷயம் ? ......அப்படீன்னாங்க... ஒன்னுமில்ல பெரிமா சும்மாத்தான்...சரி பெரிமா நான் போனை வெச்சிடறேன்...

இவனுக்கு வீட்ல காச வாங்கறதுக்கு இத விட வேற ஐடியாவே கிடைக்காதே...என்று மனசுல நினைச்சிக்கிட்டே...எங்கே இருப்பான் இவன்....கழுதை கெட்டா குட்டிச்செவுரு...கோபு காலையில கிளம்பிட்டா அங்கவை சங்கவை பெண்கள் பள்ளி காம்பவுண்டு...அத்தை வீட்டு டீவிஎஸ் பிப்டியை எடுத்துக்கிட்டு ஒரு அழுத்து...வழக்கம்போல நாய் அங்கேதான் இருந்தது...என்னை பார்த்ததும் வாயெல்லாம் பல்லு...ஹி ஹி என்று இளித்தது...காரணம் இது "பச்சை பாவாடையில் வரவும்" என்று ஒரு ஸ்கூல் பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்த காலம் அது...

நலம் எல்லாம் விசாரித்து முடிந்த பிறகு, என்னடா...என்ன செய்யலாம்...என்று கேட்டபோது, கஞ்சா அடிக்கும் தன் முற்போக்கு திட்டத்தை முன்வைத்தது பன்றி கோபு...(குண்டாயிருக்கறதால பன்றி என்று பாசமுடன் அழைப்பது வழக்கம்)..அறகண்ட நல்லூர் (சங்க காலத்தில் அறம் கண்ட நல்லூர் - ஒரு ராஜா சாமியார் வேசம் போட்டுக்கிட்டு அவனை கொல்ல வந்தவனை மன்னிச்சி ஊருக்கு வெளிய உட்டுட்டு வரச்சொன்ன எடமாம்..தத்தன், முத்தநாதன் அப்படீன்னு பேரெல்லாம் ஸ்கூல் புக்ல வருமே...ராஜா பேரு மறந்திருச்சி...) ரயில்வே ஸ்டேஷன் போகலாம் என்பது தான் பிளான்...அதுக்கு முன்னாடி சைலோம் அருகில் பத்து ரூபாய்க்கு கஞ்சா பொட்லம் வாங்குவது...பிறகு சாதா சிகரட் ஒரு அரை பாக்கெட் வாங்கி அதில் போட்டு இழுப்பது...

குறு குறு என்று இருந்தது...தான் கஞ்சா குடிப்பதில் கின்னஸ் சாதனை செய்தது போல ஒரு கம்பீர பார்வை பார்த்தான் கோபு....டிவிஎஸ் பிப்டி மின்னல் வேகத்தில் பறக்க, சைலோம் அருகே வண்டியை நிறுத்தி ஒரு தம் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக பத்து ரூபா கொடுத்து வாங்கிய பொட்டலத்தை கைலிக்குள் போட்டுக்கொண்டு, எடு எடு எடு வண்டியை என்று நாட்டாமை சரத்குமார் ஸ்டைலில் துள்ளினான் கோபு...

விரைவாக ரயில்வே ஸ்டேஷன்...சாதா கோல்டு பிளாக் முன்பே வாங்கியாச்சு...ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மட்டுமே ரயில் வரும் மாநிலத்திலேயே சிறந்த ஸ்டேஷன்..."பயனிகளின் உடன் வருபவர்கள் ப்ளாட்பார்ம் டிக்கெட் வாங்கி செல்லவும்" என்று ஒக்கே ஒக்க போர்டு...இங்கிட்டு ஒரே ஒரு ப்ளாட்பார்மை வெச்சிக்கினு இந்த நாயிங்களோட அளும்ப பாருடா என்று திருச்சி பாசையில் ஒரு தெறிப்பு...

கஞ்சா இலை பொட்டலமாக வரும்...பத்து ரூபாய்க்கு ஒரு 50 கிராம் இலை இருந்தால் அதிகம்..அதை கையில் எடுத்து கொஞ்சம் கசக்கி, சாதா கோல்டு பிளாக் சிகரெட்டில் ( பஞ்சு வைக்காத சிகரெட்) இருக்கும் புகையிலையை கொஞ்சம் எடுத்துவிட்டு அதில் உள்ளே அடைத்து, மீண்டும் புகையிலையை வைத்து மூடி பத்தவெச்சு இழுக்க வேண்டியதுதான்...

ஆளுக்கு ஒரு சிகிரெட்டு தயாரித்தான் கோபு...ஏதோ பி.ஹெச்.டி வாங்கியவன் போல கையில் வைத்து உருட்டி நெளித்து இலையை அருமையான துகள்களாக மாற்றி சிகரெட்டில் அடைத்தான்...

காலை பதினோரு மணி இருக்கும் அப்போது...ப்ளாட்பார்ம் அருகில் வேப்ப மரத்து நிழலில் இருந்த மர பெஞ்சில் கஞ்சா பயணத்தை ஆரம்பித்து, கஞ்சா குடிக்கி என்ற பட்டத்தை பெறும் வேளை...

ஒரு நாலு இழுப்பு...லைட்டா தலை சுத்துது...கோபுவுக்கும் தான்.....அவன் அதிக கஞ்சாவை சுயநலத்தோடு அடைச்சிக்கிட்டான் போலிருக்கு...பய அப்படியே பெஞ்சில சாயறான்...நான் இன்னோரு இழுப்பு இழுத்துக்கிட்டே நாங்க நிறுத்தின டி.வி.எஸ் பிப்டி பக்கம் கழுத்தை சாச்சு வண்டி இருக்கான்னு பாக்கறேன்...கண்ணுல பட்டாம் பூச்சி பறக்குது...


டேய் வாடா, தண்டவாளத்தில தலைகானி இருக்கு...அங்கே படுக்கலாம் என்கிறான்...ழேய் வேழாண்டா என்று வாழ் குழற ழொல்லுறேன்...

தண்டவாளத்துல பழுக்க வேழாண்டா, டிழெயிழ் வழும் என்று சொல்லுவது அவன் காதில் விழுவதாக தெரியலை....

எங்க ஊருக்கு வரும் ஒரே ட்ரெயின் காலை மணி 12 க்கு வரும் என்பது தெரியும்...தொலைவில் ட்ரெயின் வரும் குக்கூ சத்தம் கேக்குது...அது ஏதோ மண்டைக்குள்ளே ஒலிக்கிற மாதிரி இருக்கு...

தண்டவாளத்துக்கு போக முயற்ச்சி செய்யறவனை இழுத்து ப்ளாட்பார்ம் பெஞ்சுல போழ முயழ்ச்சி செய்யழேன்...

பழ்ழி, என்னா கழம் கழக்குது என்று சொல்லிக்கொண்டே பெஞ்சுக்கு இழுத்துவந்துவிட்டேன்...

விஷயம் என்னன்னா ட்ரெயின் மிக அருகில் வந்துவிட்டது...நான் கோபுவை இழுக்கும்போது ட்ரெயின் கிட்டத்தட்ட நூறு மீட்டர் தூரத்தில் இருக்கு...அதுதான் ரயில் ஓசை மண்டைக்குள் ஒலித்தமாதிரி ஒரு ப்ரமையை ஏற்ப்படுத்த காரணம்...ஸ்டேஷன் இன்சார்ஜ் யாரும் இல்லை, காரணம் தெரியவில்லை...

ஒரு வழியாக அவனை இழுத்துவந்து பெஞ்சில் படுக்க வைத்து, நானும் படுத்து தூங்கி, எழுந்தோம்...டிவி.எஸ் வண்டி அப்படியே இருந்தது...அடி பம்பில் தண்ணி அடித்து முகம் கழுவி, அவன் மூஞ்சியில் கொஞ்சம் ஊத்தி எழுப்பி இழுத்துவந்து வண்டியில் ஏறு டா என்றேன்...

அவன் கொஞ்சம் தெளிவாகியிருந்தான்...

என்னை பார்த்து சொன்னான்....

பிரதர்...பாத்து வண்டி ஓட்டுங்க...கஞ்சா எல்லாம் போட்ருக்கீங்க...எங்கியாவது சொருவிடப்போறிங்க.....முடியலன்னா சொல்லுங்க...நான் ஓட்றேன்...

நான் வண்டியை நிறுத்தி, திரும்பி, எரித்துவிடுவது மாதிரி பார்த்தேன்...

நான் ரசிக்கும் சூப்பர் கன்னட பாடல் !!!



ஏதோ ஒரு அதிர்வு உள்ள பாடல் இது...முழுமையாக பார்த்தால் உங்களுக்கே புரியும்...படத்தில் ஆடுபவர் ராஜ்குமார் மகன்...!!! படம் மிலனா !!! கூட ஆடுற அழகி யார் என்று தெரியவில்லை...அழகிய சிரித்த முகம்...!!!

கத்து கத்து நோடுன்னா கன்னடத்துல மொறைச்சு மொறைச்சு பாக்குறதுன்னு அர்த்தம்...உங்களுக்கு உண்மையிலேயே முழு பாடலோட அர்த்தம் வேனும்னா பின்னூட்டத்துல கேட்கவும்...!!!

இந்த சீரீஸ்ல இன்னும் ரெண்டு கன்னட பாடல்களையும் போடலான் என்றுள்ளேன்...!!! இதுல நீங்க அடிக்கிற கும்மிய பொறுத்து !!!!

அப்புறம் கேப்பங்கஞ்சி வித் கவிதாவுடன் செந்தழல் ரவி படிச்சுட்டீங்களா ? படிக்கலைன்னா இங்கே க்ளிக் !!!!

Sunday, October 19, 2008

தமிழக கிறிஸ்தவர்களிடையே சா'தீ'யம்...பாதிரியார்களையும் விட்டுவைக்கவில்லையே...

தமிழகத்தில் சாதீயத்துக்கெதிராக முழு அளவில் போராட்டம் நடத்தியவர் என்றால் அது பெரியாரை மட்டும் தான் சொல்லமுடியும்...அதன் பிறகு பல பெரிய தலைவர்கள் உருவானாலும் (திரைத்துறையில் இருந்து அதிகபட்சமாக), உருப்படியாக சாதியை எதிர்த்து அறிக்கை கூட விட முடியாத நிலையில் இருக்கிறார்கள் இந்த ஓட்டுப்பொறுக்கிகள்...

சாதியை எதிர்த்து - இரட்டைக்குவளை ஒழிப்பு என்று பெரியார் தி.க / கொளத்தூர் மணி தலைமையில் போராட்டம் நடத்தியது எனக்கு தெரிந்தவரை சாதீய எதிர்ப்புவாத போராட்டம்...

தமிழக இசுலாமியர்களிடையே சாதீயம் இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியாது...ஆனால் தமிழக கிறிஸ்தவர்களிடையே இருக்கும் சாதீயம் - படு கேவலமானது...

பாதிரியார்கள் பாப்பாக்களை கர்ப்பமாக்கும் மேட்டர் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவது...ஆனால் இந்த சாதீயம், தமிழகத்தில் வாழும் அத்துனை கிறிஸ்தவர்களிடமும் ஒட்டிக்கொண்டுள்ளது...(பெரும்பான்மையாக)...



பொதுவாக கிறிஸ்தவ மதத்தினர் என்றால் அனைவரும் நினைப்பது அவர்கள் அனைவரும் தலித் / தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது மீனவர்கள் என்றுதான்...ஆனால் அப்படி இல்லாமல், நாடார், செட்டியார், தேவர், முதலியார், உடையார், வேளாளர், பிள்ளைமார் என்று எல்லா சாதியிலும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்...

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தலித் கிறிதவர்கள், கடலோர மாவட்டங்களான நாகை, கன்னியாக்குமரியில் மீனவர்கள், திருநெல்வேலி பகுதியில் நாடர்கள்,தஞ்சை பகுதியில் முதலியார்கள், திருச்சி பகுதியில் பிள்ளைமார்கள்,புதுக்கோட்டை பகுதியில் தேவர்கள்,விழுப்புரம்,திண்டிவனம்,கடலூர் பகுதியில் வன்னியர்கள், பாளையங்கோட்டை பகுதியில் வேளாளர்கள் என்று எல்லா சாதியிலும் எல்லா பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறார்கள்...

இதில் எங்கே வந்தது சாதீயம் என்கிறீர்களா ? கிறிஸ்தவராக இருந்தாலும் அவரவர் சாதியில் தான் பெண் கொடுப்பதும் எடுப்பதும் செய்கிறார்கள்...அதிலும் உட்பிரிவெல்லாம் சரியாக இருக்கவேண்டும்...

கிறிஸ்தவ மதத்தில் திருமணத்துக்கு முன்பாக பங்கு கோயிலில் ( Local Church) பதிவு செய்யவேண்டும்...மூன்று வாரங்களுக்கு அதனை ஞாயிறு பூசைகளில் (Mass) பங்கு தந்தை (Parish Priest) படிப்பார்...திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பார்கள்...

இந்த முறையில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெறுவதையும், மணப்பெண், மணமகன் இருவரையும் பங்கு தந்தை நேரில் சந்தித்து அளவளாவுவதையும் ஒரு சடங்காக வைத்துள்ளார்கள்...

நான் இந்த பதிவில் பேச வந்த விடயம் அது அல்ல...உடையார்கள் அதிகமாக உள்ள கிராமத்தில் ஒரு தலித் பாதிரியார் பணி செய்ய இயலாது...அப்படி பணி செய்தாலும், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் உடையார் சாதியை சேர்ந்த பாதிரியாரை அழைத்து வந்தே செய்வார்கள்...



மேலும் அதிக வருமானம் வரும் பங்கு கோயில்களில் (உதாரணம் : வேளாங்கண்ணி மாதா கோயில்), குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பங்கு தந்தையாக அமர்வார்கள்...அப்படி வேறு சாதியினர் அந்த கோயிலில் நியமிக்கப்பட்டால், பிஷப் வரை சென்று அவரை மாற்றும் வரை ஓயமாட்டார்கள் அந்த சாதியினர்...

மேலும் பங்கு கோயில்களில் வரும் வருவாயில் நன்றாக குடிப்பது, பெண் சகவாசம் வைத்துக்கொள்வது என பாதிரியார்கள் கூத்தடிக்கிறார்கள்...குடிக்காத, புகைக்காத சாமியார்களை தமிழகத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம்...

பிஷப் ஹவுஸ் என்பது வெளிநாட்டு நிதியம் குவியும் இடம்...பொதுவாக மாவட்ட தலைநகரங்களில் இருக்கும்...அங்கே இந்த செயலாளர், அந்த செயலாளர் என்று நியமன உத்தரவை பிஷப் இடம் இருந்து வாங்கிவிட்டால் நல்ல துட்டு பார்க்கலாம் என்பதே நிலை...

அதனால் பாதிரிமார்கள் பெரிய தொகையை லஞ்சமாக கொடுத்து, இது போன்ற பதவிகளை பிடிக்கிறார்கள்...இதிலும் பாதிரியார் குறிப்பிட்ட சாதியினராக இருந்தால்தான் பதவி கிடைக்கும்...

மேலும் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர்கள் பதிவு செய்யும் மாவட்ட தலைநகரில் - பிஷப் ஹவுஸில் லஞ்சம், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிக்கும் இடத்துக்கு லஞ்சம், நல்ல வருமானம் உள்ள ஊரில் பாதிரியாராக பணிபுரிய லஞ்சம் என எங்கெங்கு காணினும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது...

ஹும்...இவர்கள் தான் மக்களை இயேசுவின் வழியில் இறைவனிடம் கொண்டுசெல்லப்போகிறார்களாம்...ஒரு லோன் போட்டு பணத்தை கொடுத்து நேராக சொர்க்கத்துக்கு ரெண்டு டிக்கெட் சொல்லப்போகிறேன்...வாரீயளா...

Thursday, October 16, 2008

டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எதிர் அழகியல் 'கவிஜ'ர்கள்

20/07/2007 8:03 AM க்கு பதிந்தது !!! சீனியர்களோட மேட்டர்களை வெச்சு நாங்க எப்படியெல்லாம் மொக்கை போட்டோம் என்று இள மண்ணுங்களான வால்,பரிச,கார்க்,அதிஷ,நர்சி,குசும் தெரிஞ்சுக்கங்க !!!!

நேராவிஷயத்துக்கு வந்திருவம்...சென்னையில் ஒரு பிரபல(?!) டாஸ்மாக்கில் பின்னவீனத்துவ எழுத்தாளர்களும் கவிஞர்களும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியை பதிவாக்கி உங்கள் பார்வைக்கு வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

பங்கேற்பாளர்கள்: வரவணையான், மிதக்கும்வெளி, பொட்டீக்கடை, லக்கிலூக், குழலி, ஓசை செல்லா, எஸ்.பாலபாரதி, மகேந்திரன் பெ, முத்து தமிழினி பின்னே ஞானும்..

பாலபாரதி (தமிழ் வலைப்பதிவு அமைப்பாளர்) : வாங்க எல்லோருக்கும் வணக்கம்...!!! இந்த கவிதை அரங்கத்துக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்...

மிதக்கும்வெளி:(சூடாக) யோவ் அப்ப தண்ணியடிக்க வரலையா...நான் போறேன்...

வரவணையான்: அட இருங்க தோழரே...ச்சும்மா மாம்ஸ் இப்படித்தான் வழக்கம்போல ஏதாவது உளறுவாரு...ஒரு க்வாட்டர் ஓல்டு மங்க ஓப்பன் பண்ணா மோந்து பார்த்து மயக்கமாகிருவாரு...

எஸ்.பா: ஏஏஏஏப்பா...வம்பிளுக்கறதுக்குன்னே வருவீங்களா...

வரவணை: சரி, விடுங்க மாம்ஸ்...தோழர் செந்தழல் ஒரு ஆப் ஓல்டு மங்கு, மூனு பீரு, ரெண்டு எம்ஸி க்வாட்டர் சொல்லுங்க...அப்படியே ரெண்டு பாக்கெட் வில்ஸ்...

செந்தழல்: சரி சொல்லிடுறேன்...ஏதாவது ஒரு கவிதை சொல்லுங்களேன்...

பொட்டீக்கடை: (உள்ளே புகுந்து)...நாந்தான் சொல்லுவேன் நாந்தான் சொல்லுவேன்...

செந்தழல்: சரி சொல்லித்தொலை...

பொட்டீக்கடை: தொண்டையை செருமிக்கொண்டு...

ஆய் போவது குழந்தை...
மூத்தாவிடுவது அந்த குழந்தையின் தம்பி...
முளையில் கிள்ளுவது முறையாகுமா...
இல்லை கிளையில் அள்ளுவது குறையாகுமா...

மிதக்கும்வெளி: ( டென்ஷனாகிறார்...) டேய்...எவண்டா உன்னை இந்தமாதிரி எல்லாம் கவிதை சொல்லச்சொன்னது...

செந்தழல் : ஏன் மிதக்கும் வெளி டென்ஷனாகிறீங்க...ஆய் கீய் முளை னு அசிங்கமா இருக்கா ?

மிதக்கும்வெளி: இல்ல...அசிங்கம் குறைவா இருக்கு...இதை எல்லாம் என்னால கவிதையா ஏத்துக்க முடியாது...

செந்தழல்: சரி அப்ப நீங்க சொல்லுங்க கவிதை...

மிதக்கும்வெளி: குவாட்டர் வந்திருச்சா ?

செந்தழல்: இதுவா கவிதை...

ஓசை செல்லா: ச்ச்சும்மா நச்சுன்னு இருக்கு மிதக்கும்வெளி..

மிதக்கும்வெளி: யோவ் நான் இன்னும் கவிதையே சொல்ல ஆரம்பிக்கல...குவாட்டர் வந்திருச்சான்னு கேட்டேன்...

செந்தழல்: இவரு இப்படித்தான்...நச்சின்னு இருக்கு பச்சையா இருக்குன்னு..நீங்க கவிதைய சொல்லுங்க மிதக்கும்வெளி...

மிதக்கும்வெளி: போஸ்ட் மார்டனிசத்துல பொடிப்பயலுகளா...இப்ப கேட்டுக்கோங்க...

யோனி இல்லாதது ஆகாது போனி
கொலை இல்லாதது போகாது விலை
குறி இல்லாமல் குவியாது கூட்டம்
முளை இல்லாத கவிதையில் ஏதடா கலை !!! ( மூனு ஆச்சர்யக்குறி)

வரவணையான் : கலக்கிட்டீங்க தோழர்...அருமை...இந்தாங்க சரக்கு...அடிங்க...இப்படித்தான் என்னுடைய பாலியல் தோழி ஒருத்தர் கவிதை சொல்லியிந்தார்..

செந்தழல்: (இடைமறித்து) பால்ய வயது தோழி எப்படி கவிதை எல்லாம் சொல்ல முடியும் ? அது என்ன அதிசய குழந்தையா ?

வரவணை: (கடுப்பாக), யேய் அது பாலியல் தொழில் செய்யும் பெண்...இப்ப சொல்றேம் பாரு அவங்க எழுதின கவிதையை...

படுக்கையில் படுத்தேன்..
பக்கத்தில் அவன்...
காலையில் எந்திருச்சேன்...
அந்த நாயை காணோம்...
அம்பது ரூபாய்க்கு ஒரு குட்டி..
அவன் எடுத்துட்டு போனதோ என்னோட நூறு ரூபா ஜட்டி...

இதெப்பிடி இருக்கு...என்று ரஜினி மாதிரி கில்லியடிக்கிறார் வரவணை...சிலிர்க்கிறார்கள் பொட்டீக்கடையும் மிதக்கும் வெளியும்...

இந்தப்பக்கம் செந்தழல் கடுமையாக கைத்தட்டிக்கொண்டிருக்கிறார்...பாலா முறைப்பாக பார்த்துக்கொண்டிருக்கிறார்...

முத்து தமிழினியும், குழலியும் உள்ளே நுழைகிறார்கள்..

முத்து தமிழினி: என்ன இங்க பிரச்சினை...என்ன இங்க பிரச்சினை...எதுவார்ந்தாலும் சொல்லுங்க பேசித்தீத்துக்கலாம்...

செந்தழல் : நீங்க தான் பிரச்சினை..இங்க எந்த பிரச்சினையும் இல்ல...எல்லாரும் கவிதை சொல்றாங்க...நாங்க ரசிக்கிறோம்..பாலா தான் உம்முனு இருக்கார்..என்னன்னு கேளுங்க..

குழலி : நீங்க இருங்க முத்து...நான் கேட்கிறேன்...என்ன பாலா சொல்லுங்க பாலா...

எஸ்.பா: ச்ச்சும்மா போறவரவன் எல்லாம் நான் வேலைபாக்குற கிழக்கு பதிப்பகத்தை குத்தம் சொல்லிக்கிட்டே இருக்கானுங்க பா...அந்த டென்ஷன்ல நான் இருந்தா, கவிதை சொல்றேன்னு இவனுங்க தொல்லை தாங்க முடியல..

குழலி : அப்ப ரெண்டு பிரச்சினைன்னு சொல்லுங்க..

லக்கிலூக்: எனக்கு மூனு பிரச்சினை...

முத்து.தமிழினி: லக்கி, உங்க பிரச்சினைய அப்பால பார்க்கலாம்...இப்ப பாலா பிரச்சினையை கவனிப்போம்...

செந்தழல்: ஆரம்பிச்சிட்டாருப்பா...இனி ஓஞ்ச வாழப்பழம் வாங்கிக்கொடுத்தாலும் முடிக்கமாட்டாரு...

முத்து.தமிழினி: தம்பி தழல்...என்னையா சொல்றீங்க...

செந்தழல்: அட உங்களை இல்லீங்க...மகேந்திரன..இங்க எவ்ளோ பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு...இந்த ஆளு பாட்டுக்கு மிச்சர் தின்னுக்கிட்டிருக்காரு பாருங்க...

முத்து.தமிழினி: அவர் பிரச்சினையை அப்புறம் கவனிக்கறேன்..நீங்க சொல்லுங்க பாலா...

பாலபாரதி: நேத்து புக்ஷாப்புக்கு ஒருத்தன் போனடிக்கறான்...என்னான்னு கேட்டேன்...நாதாரி...வீட்டு பாத்ரூம்ல தண்ணி வரலையாம்...அதுக்கு கிழக்கு பதிப்பகம் தான் காரணம்ங்கறான்...பக்கத்து பொட்டிக்கடையில சிகரெட் விக்கலைன்னு அதுக்கும் எங்க ஆபீஸ் தான் காரணமுன்னு பீடாக்காரன் சொல்றான்...ஒரு மனுசன் எவ்ளோதான் தாங்குறது...

பொட்டீக்கடை: ( வாயில் வைத்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொண்டே..) அம்பி கூப்டேளா ?

லக்கிலூக் : பொட்டீக்கடை...நீங்க பார்ப்பணரா ? சொல்லவே இல்ல...இனிமே நமக்கு ஒட்டோ உறவோ கிடையாது...தள்ளி உக்காருங்க...

பொட்டீக்கடை: அது இவ்ளோ நேரம் தெரியலையா...அப்ப என் தட்ல இருந்து தின்ன மிச்சர வாந்தி எடு...

( இரண்டு பேரும் சட்டையை பிடித்துக்கொண்டு கைகலப்பில் இறங்க பார்க்கிறார்கள்..)

ஓசை.செல்லா: (குறுக்கே விழுந்து தடுக்கிறார்)...ஏய் விடுங்கப்பா...ஆர்க்குட்ல கூட இப்படித்தான் அடிச்சுக்கறாங்க...

செந்தழல்: யாருய்யா இவரு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பேசிக்கிட்டு...

குழலி: ஏய், இட ஒதுக்கீடு பற்றி ஓசை செல்லாவுக்கு தெரிஞ்சதுல ஒரு சதவீதம் தெரியுமா உனக்கு ? ஆதிக்க சாதியின் அழிச்சாட்டியங்களும் ஆண்ட சாதிகளின் ஆணவங்களும் தெரியுமா உனக்கு ? மருத்துவர் அய்யாவின் பார்வைகள் பற்றி அவர் கண்ணால் பார்த்ததை விட அதிகம் பார்த்தவன் இந்த குழலி...

செந்தழல்: அண்ணா என்னை மன்னிச்சிருங்க, ஏதோ தெரியாம பேசிட்டேன்...கொஞ்சம் இந்த பக்கம் பாருங்க மகேந்திரன் பெ உர்ர்ர்ருனு உக்காந்திருக்கார்...என்னன்னு கேளுங்க...

குழலி: அப்படி சரண்டர் ஆகு தம்பி...சரி கேட்கிறேன்...மகேந்திரன் பெ வை நோக்கி..தம்பி உன்னை எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்ல...நீங்க இட்லிவடைன்னு ஒரு பதிவு எழுதறீங்க சரியா...

மகி: யோவ் அது நானில்லை...

குழலி: அப்போ நீங்க சட்னிவடையா ?

மகி: யோவ் அதுவும் நானில்லையா...

குழலி: அப்போ நீங்க போலியா ?

மகி: அய்யோ அது நானில்லைய்யா...

குழலி: அப்போ நீங்க விடாது.கருப்பா ?

மகி: அய்ய்யய்ய்ய நான் அந்தப்பக்கம் போறதில்லையா...

குழலி: அப்ப யாருதாண்டா நீ...சொல்லித்தொலையண்டா...

மகி: ஏன்யா இவ்ளோ பேரச்சொல்லி நானா நானான்னு கேட்டியே...நீ மகேந்திரன் பெ யான்னு ஒருதடவையாவது கேட்டியா ?

செந்தழல்: ஆமா, மிச்சர வாயில புல்லா கொமுக்கிக்கிட்டிருந்தா எப்படி பதில் சொல்லமுடியும்...

முத்து.தமிழினி: இங்க என்ன பிரச்சினை...

செந்தழல்: ம்ம்...நீங்க தான் பிரச்சினை...

முத்து.தமிழினி: என்ன ???

செந்தழல்: ஆமாம், சரக்கு எதுவும் குடிக்காம மொக்கை போட்டுக்கிட்டே இருந்தா எப்ப வீட்டுக்கு போறது

ஓசை.செல்லா: எல்லாரும் அப்படியே குரூப்பா நில்லுங்க, ஆப்டிக்கல் ஜூம் போட்டு கிழக்கில இருந்து வடக்கா எடுத்தா திருடி எப்பக்ட் வரும்...

வரவணை: என்ன திருடியா ?

ஓசை.செல்லா: யோவ், அது 3D. காமிரா பற்றித்தெரியாத ஞான சூனியங்களிடம் எப்படி சொல்றது ?

லக்கிலூக்: செல்லா...ஞான சூனியம் அப்படீங்கற வார்த்தை வெஸ்ட் மாம்பலத்துல தான் அதிகம் உபயோகிப்பாங்க..அப்ப நீங்க அவாளா ? அப்படி இருந்தா நான் போட்டோவுல நிக்க மாட்டேன்...

செந்தழல்: இல்ல சேலத்து மாம்பழத்துல தான் வண்டு அதிகமா இருக்கும்...

மிதக்கும்வெளி: இல்லை...திருச்சி மாம்பழ சாலை மாம்பழத்துல அதிகம் வண்டு இருக்கும்...அங்கே இருந்து பக்கம் லால்குடி போனா கவிஞர் சல்மா இருப்பாங்க...பெண் கவிஞர்...நிறைய கெட்டவார்த்தை போட்டு கவிதை எழுதுவாங்க...

வரவணை மற்றும் பொட்டீக்கடை கோரஸாக: அப்ப வாங்க தோழர்...உடனே கோயம்பேட்டுல பஸ் புடிச்சு போய் பார்த்து பேசிட்டு வருவேம்...(க்வாட்டர் பாட்டில்களை கையில் எடுத்துக்கொண்டு அப்பீட் ஆகிறார்கள் மூவரும்) (குவாட்டரோடு அப்பீட்)

முத்து.தமிழினி: அங்க எதுவும் பிரச்சினை வராம பார்க்கனும்...நானும் கெளம்புளேன்...(அப்பீட்)

குழலி: நான் தோட்டம் வரைக்கும் போய் அய்யாவை பார்த்துட்டு வந்துடுறேன்..அன்புமணிக்கிட்ட இருந்து இப்போதான் தொலைபேசி அழைப்பு வந்தது...(அப்பீட்)

எஸ்.பா: நானும் அப்படியே போறேன்...கும்மிடிப்பூண்டி வலைப்பதிவர்கள் மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளரா கூப்டிருக்காங்க...(அப்பீட்)

மகேந்திரன் பெ: நான் யார் நான் யார் நீ யார்...யார் யார் என்பதே தெரியார்..அவர் தான் அவர் தான் பெரியார்...என்று பாடிக்கொண்டே கையில் வந்த சரக்கை (பீர் பாட்டில்னு நெனைக்கிறேன்) எடுத்துக்கொண்டு சொல்லிக்கொள்ளாமல் நைசாக நழுவுகிறார் ( அப்பீட்)

ஓசை.செல்லா: கோவையில ஒரு இடத்துல கும்மியடிக்கிற வேலை இருக்கு...நான் கிளம்புறேன்..(அப்பீட்)

செந்தழல்: யோவ் எல்லாரும் போனா பில்லு யாருய்யா குடுக்கறது ? யோவ் யோவ்...

" யாழாவழு குழுங்கப்பா..ழனியனுங்கழா...அந்துமழி நமேழ் ழொம்ப ழல்லவர்." என்று ஈனஸ்வரத்தில் ஒரு குரல்...

யாருடா அது மப்புல கவுந்தது...அலறி அடித்து பார்த்தால்...

ழக்கிழூக்...ச்ச்சே...லக்கிலூக்....

வரவணை சரக்கடித்த க்ளாஸை, ச்சும்மா சரக்கு வாசனை எப்படி இருக்கும் என்று முகர்ந்து பார்த்த லக்கிலூக்......

சரி லக்கிலூக்கை வீட்ல கொண்டுபோய் விடனுமே என்று கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு எழுப்பினேன்...

சார் ஒரு கிங்ஸ் கிடைக்குமா...என்றபடி பக்கத்து டேபிள் பெரியவர் கையை நீட்டுகிறார்...

செந்தழல்: யோவ் இது என்ன பொட்டிக்கடையா...

இல்லைங்க...சிக்கனும் ஒரு பியரும் ஆர்டர் செஞ்சேன்...சிகரெட் வாங்க மறந்துட்டேன்...நானே வருஷத்துக்கு ஒருமுறை தான் குடிக்கறது...சிகெரெட் கொடுங்க சார் ப்ளீஸ்...உங்களை மகரநெடுங்குழைகாதன் காப்பாத்துவான் என்றபடி...

டோண்டு...!!!!!!!

Wednesday, October 15, 2008

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...



Real Face !!!



Reeeeeel Face !!!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!



தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் ( Rajeev Menon) ஒரு க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...

பாரதியார் ? பாரதி - யார் ? : மறைக்கப்படும் உண்மைகள்...



நிஜ முகம்



பொய் முகம்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!!!


என்று கவிதை பாடிய பாரதியாரின் உண்மையான முகம் என்ன ? இன்றைக்கு பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்திருந்தால் "தமிழ்ப பற்று" உள்ளவராக பார்க்கிறார்கள்...

இப்படி புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்ட பாரதியாரின் உண்மை முகம் என்ன ? அவர் உண்மையில் நாட்டுக்காகவும், சுகந்திரத்துக்காகவும் போராடினாரா இல்லை, வெள்ளைக்கார துரைகளுக்கு பயந்து தமிழகம் புதுச்சேரி என்று டவுசர் கிழிய ஓடி மன்னிப்பு கடிதம் எழுதி மானம் கெட்டு வாழ்ந்தாரா ?

கீழே நான் கொடுத்திருக்கும் தகவல்களை எல்லாம் பாருங்கள்...சமகாலத்தில் நடந்த அநீதி அக்கிரமம் அனைத்தையும் பார்த்துக்கொண்டு பிழைப்புக்காக கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பனிடம் கவிதை புனைந்துகொண்டு குந்தியிருந்தவர் தான் இந்த பாரதி...

1. ஜாலியன் வாலாபாக் சம்பவம் நடந்தபோது, ஒரு வார்த்தைக்கு கூட அதனை கண்டித்து எழுதவோ, பேசவோ செய்யவில்லை...

2. ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒரு ஜாலி படுகொலையாக, ஒரு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையாக கட்டமைத்து, எழுதியும் பேசியும் வந்த அன்னிபெசண்ட் அம்மையாரை தன்னுடைய தேவியாக புகழ்ந்தவர் பாரதி..

3. மாட்சிமை தங்கிய கவர்னர் அவர்களே என்று விளித்து எழுதப்பட்ட கடிதங்களில், தான் ஒரு பார்ப்பணராக இருப்பதால் தன்னுடைய உடலுக்கு சிறை வாழ்வு ஒத்துவராது என்று கூறி தன்னுடைய சாதியை வெளிப்படுத்தியும், அந்த சாதியால் ஏதாவது பிஸ்கெட் துண்டு கிடைக்கும் என்று எதிர்பார்த்தும் வாழ்ந்த "குடுமி" பாரதி...ஒரு முறை இருமுறை அல்ல, பல்வேறு மன்னிப்பு கடிதங்களை நாளாந்தம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பி கேவலமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதி..

4. 1916 ஆம் ஆண்டு சுதேசமித்திரனில், ஆங்கிலேயர்களே, இந்தியாவை விட்டு போய்விடாதீர்கள் என்று அற்புதமான கட்டுரையை எழுதியவர் இந்த பாரதி..

5. தன்னுடைய தந்தையார் வறுமையில் வாடியதை எழுத்தில் எப்படி வடித்தார் தெரியுமா பாரதி ? மனு தர்மப்படி வியர்வை சிந்தி பார்ப்பணர் உழைப்பது அநீதி, அப்படிப்பட்ட அநீதி தன்னுடைய தந்தையாருக்கு நேர்ந்துவிட்டது என்று எழுதினார். இவரா தேசியக்கவிஞர் ? இவரா சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடினார் ?

6. 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' என்று வருணபேதத்துக்கு ஆதரவாக எழுதிய இவரை எந்த குடுமி குரூப்பில் சேர்த்தாலும் பிட் ஆகிவிடுவார் என்று நான் நினைக்கிறேன்...நீங்க ?

7. "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று எழுதி தன்னுடைய கொண்டையை வெளிப்படையாக காட்டியவர்தானே இந்த பாரதி ?

8. "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" என்று சொன்னவர் பாரதி. இவரை ஆர்.எஸ்.எஸ்ஸிலோ, பஜ்ரங் தள் இயக்கத்திலோ கொண்டாடுவதன் அர்த்தம் இப்போதாவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்...

9. 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' என்று தலித் மக்களை பார்த்து சொன்ன பாரதியின் முண்டாசுக்குள் இருந்தது சாதீயப்பற்றல்ல...சாதீயப்புற்று !!!

10. பாரதி எப்போது எக்குத்தப்பாக மாட்டினாலும் அவரை சிறை மீட்பது, வேலை கொடுப்பது, வைத்து பராமரிப்பது கீழ்க்கண்டவர்களே..நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர், மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார்....இவர்கள் அனைவரும் பார்ப்பனீயத்திலும் சாதி வெறியிலும் ஊறியவர்கள்...வேறொன்று சொல்ல விரும்பவில்லை, வாசிக்கும் நீங்களே பாரதியின் டவுசரை உருவிக்கொள்ளுங்கள்...

11. இஸ்லாமியர்களை பற்றிய பாரதீயின் டெபனிஷன் : "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" அவ்ளோதான்...ஏன் பாரதீய ஜனதா பார்ட்டி பாரதீயை கொண்டாடாது ? "தீ" என்று ஒரு எழுத்தை அழுத்தியது, தீமையை குறிக்க. வேறொன்று நினைக்காதீர்...

12. திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோம்!" என்று டென்ஷனாகிய பாரதிக்கு வெள்ளை நிறத்திலொரு பூனை என்று மதநல்லினக்கத்தை பொய்யாக வலியுறுத்துவதற்கு பதில் ஒரு மண்ணாங்கட்டியும் எழுதாமல் இருந்திருக்கலாம்...

13. "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத்தக்கது....ஒரிஸ்ஸாவில் பெண்ணை வண்புணர்ச்சி செய்யும் கலவரக்காரர்களுக்கு ஆதார விதை இதுபோன்றவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள் தானே...நினைவிருக்கட்டும், இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உண்டு.

14. கடலூர் சிறையில் இருந்து பாரதி எழுதிய "புரச்சி" கடிதம்.

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.
To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.
The Humble petition of C.Subramania Bharathi,
May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.
Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.
I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.
I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.
************************************

நன்றி போர்முரசு வலைப்பூ : http://poarmurasu.blogspot.com/2007/12/blog-post_11.html

சான்றாதார நூல்கள்:

1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====
நன்றி, கற்பக விநாயகம்!



தமிழ் ஆர்வம் என்றால் இங்கே பெரும்பாலானோருக்கு..."எனக்கு பாரதியார் கவிதை பிடிக்கும் தெரியுமா" என்பார்கள்...அவர்கள் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாக இருக்க காண்கிறேன்...

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இயக்கிய மணிரத்தினம் இல்லை இல்லை ராஜீவ் மேனன் ஒரு மலையாள க்ராஸ்பெல்ட். அவர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பாரதியார் கவிதைகள் சொன்னது நல்லாத்தான் இருந்தது...ஐ மீன் ஒன்லீ ஐஸ்வர்யா ராய்.

பாரதி-யாரின் உண்மை முகத்தை பார்க்க உதவிய போர்முரசு வலைப்பூவுக்கு நன்றி...நன்றி ஸ்பார்டகஸ்.......இணையத்தில் தரவுகளை தேடியபோது ஒரே பதிவு...ஒன் ஷாட் ஆக போர்முரசு வலைப்பூ கிடைத்தது...நன்றி...!!!

Monday, October 13, 2008

தமிழச்சியின் பல்வேறு போஸ் !!!!

இந்த வாங்கிக்க க்ளிக்கவும்



இந்தா புட்சுக்க க்ளிக்கவும்



இது எப்பிடி இருக்கு



அப்புறம் சுகம் தானே ?



நல்லா கீறியான்னு கேட்டேன்...




தமிழச்சி பெயரை சொல்லிக்கொண்டு எந்த பதிவும் போடக்கூடாது என்றில்லையே ? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரை இந்தியாவில் சொன்னால் போலீஸ் புடிக்கும் என்பது போல தடை செய்யப்பட்ட (???) தமிழச்சியின் பெயரை சொல்லி பதிவு போட்டால் தூக்கிற மாட்டாங்களே ? பதிவை !!!

கட்டங்கடைசியா...

இத்தையும் பாத்துக்கோ !!!



டவுசரை கழட்ட ஏதும் ஸ்பெஷல் ட்ரெயினிங் குடுக்கறாங்களா உங்க மாஸ்டர்ஸ் ? எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் ரொம்ப நாளா டவுசரோட அலையறார். அவருக்கு கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்...

வாய்யா வாய்யா வாய்யா...அட வாங்கக...பாஸ்ஸ்ஸ்...

ஆதலினால் காதல் செய்தேன் - இதுவரை எழுதிய 7 பாகங்கள் !!!!



மொத்தமாக ஏழு பாகங்களுக்கான தொடுப்பு இங்கே இருக்கிறது...மற்ற பாகங்கள் ஒவ்வொன்றாக தொடரும்...(யார் தலையெழுத்தோ)...

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் ஒன்று

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் இரண்டு

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் மூன்று

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் நான்கு

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் ஐந்து

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் ஆறு

ஆதலினால் காதல் செய்தேன் பாகம் ஏழு

Sunday, October 12, 2008

என்னை அடி அடியென்று அடித்தவன்...



ஞாயிறு மதியம் வழக்கம்போல லேட்டாக ரெண்டு மணி வாக்கில் கொஞ்சம் ஹெவி சாப்பாடு...ரெண்டு மணி நேர தூக்கம்...!!!

அப்படியே எழுந்து ம்மா ஹேர் கட் பண்ணனும் நூறு ரூபாய் கொடு என்றேன்...

ஓக்கே ப்ரூ காபித்தூள் அப்படியே ஒரு சின்ன பாக்கெட் வாங்கிவந்திருங்க என்றாள் தங்கமணி...

<<< கிரி வடிவேல் பாணியில் படிக்கவும் >>>

நானும் மெதுவாத்தாம்மா போய் உக்காந்தேன்...மொதல்ல ஒருத்தன் தலையில கைய வெச்சு கட்டிங்கா ஷேவிங்கா மஸாஜிங்கும் பண்ணவா அப்படீன்னான்...

நானும் சரி மொத்தமா மூனையும் பண்ணுடா...தலை காலியாத்தானிருக்குன்னேன்...

கட்டிங் ஷேவிங்க முடிச்சுட்டு நவரத்தின தைலமா தேங்கா எண்ணையான்னான்...

நவரத்தின தைலமே போடுப்பா அப்படீன்னேன்...

ஹூம்...<<<வடிவேல் பாணியில் ஒரு பெருமூச்சு>>>

மொதல்ல லைட்டாத்தாம்மா ஆரம்பிச்சான்...லெப்ட்ல ஒருத்தன் ரைட்ல ஒருத்தன் நின்னுக்கிட்டு...

அடி அடின்னு அடிச்சானுங்கம்ம்மா...

நானும் எவ்ளோ நேரந்தான் தூங்குறாமாதிரியே நடிக்கறது...

******************

தாய்லாந்து போன்ற நாடுகளில் மசாஜுக்காகவே உலகமெங்கிலிருந்தும் டூரிஸ்ட் வருகிறார்கள்...

வருபவர்கள் பல பேருக்கு "அது" அஜெண்டா என்றாலும் நல்ல மசாஜை எஞ்சாய் பண்ணாமல் போகமாட்டார்கள்...

பல ரக மசாஜ்கள் உண்டு...சாண்ட்விச் மசாஜ் என்று ஒரு ரகத்தில் நாற்பது அமெரிக்க டாலரை வாங்கிக்கொண்டு, இரண்டு பெண்கள் நடுவில் உம்மை வைத்து...!!!!

ஹூம்...

திண்ணையில் இரண்டு வருடங்களுக்கு முன் யாரோ குமரகமோ அல்லது கேரளாவோ சென்று அற்புதமான மசாஜ் அனுபவத்தை எழுதியிருந்தார்கள்...அவரது ரீடிப் மெயில் முகவரிக்கு நானும் ஒரு மடல் அனுப்பினேன், பதில் இல்லை...

இந்தியச்சூழலில் இப்போதெல்லாம் நாளிதழ்களில் மசாஜ், தாய் மசாஜ், கேரளா மசாஜ் என்றெல்லாம் வரும் விளம்பரங்களை பார்த்து தொலைபேசியில் அழைத்தீர்கள் என்றால் ஒரு நைட்டுக்கு மூன்றாயிரம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்...

*******************************

பெங்களூரில் சலூன் கடைகளில் தலையில் எண்ணை வைத்து செய்யும் மசாஜுக்கு இருபது ரூபாயோ முப்பது ரூபாயோ வாங்குகிறார்கள்...

ச்ச்சும்மா படபடவென அடிக்கும் அடியிலும்...ஷோல்டரை பிடித்து நசுக்கி, முடியை பிடித்து உலுக்கி...அற்புதம்...

அப்புறம் ஏதோ மோட்டர் வைத்த மெஷின்...அதில் கையை நுழைத்துக்கொள்கிறார், மோட்டர் ஓடுகிறது, அதன் அதிர்வு அவரது கையில் பாய்கிறது, அதை அப்படியே தலைக்கு, கழுத்துக்கு ட்ரான்ஸ்பர் செய்கிறார்...

கூல் !!!

*******************************

கட்டிங், ஷேவிங், மசாஜ் எல்லாம் சேர்த்து 85 ரூ ஆனது...ப்ரூ காப்பித்தூள் வாங்க மறந்து போய் கொட்டு வாங்கியதோடு குளிக்கச்சென்றால்...

ஷாம்பூ நுரையே வரவில்லை...

ஏம்மா, ஏன் இந்த ஷாம்பூ நுரையே வரமாட்டேங்குது ?

குரங்கு...அந்த கூம்பு வடிவத்தில இருக்கிறதை போட்டியா ?

ஆமாம்...

அது கண்டீஷனர்...அறுவத்தஞ்சு ரூபா...அதை வேஸ்ட் பண்ணிட்டயா ? டவ் ஷாம்பு இருக்கும் பார் பாட்டில்ல...அதை போடு...

வாழ்க பன்னாட்டு கண்டீஷர் விற்கும் முதலாளிகள்..வாழ்க 1991 பொருளாதார புரச்சி மேதை மன்மோகன் சிங்..வாழ்க பூர்ஷ்வா உணவு உண்ணும் ப.சிதம்பரம்..

வீழ்க புலி மார்க் சீயக்காய்த்தூள்...!!! வீழ்க உள்நாட்டு முதலாளிகள்...வீழ்க காளிமார்க் சோடா !!!

நன்றி !!!!!!!!!!!!!!!!!


:((((((

Saturday, October 11, 2008

காதலில் விழுந்தேன் தமிழ் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை



எனக்கு தெரிந்து பல பிரச்சினைகளுக்கு இடையே வெளிவந்த பல படங்கள் இமாலய வெற்றி பெற்றுள்ளன...

கோர்ட்டில் வழக்கு, இராமநாதபுரம், மதுரை ஏரியாவில் திரையிட பிரச்சினை என்று பல பிரச்சினைகளை சந்தித்த காதலில் விழுந்தேன் திரைப்படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத மாபெரும் வெற்றி பெற்றுள்ளது...

அதிக வசூல் செய்த படங்களான பாட்ஷா, சிவாஜி, தசாவதாரம் போன்றவற்றை விட அதிக வசூல் பெற்றுள்ளது...மொத்தம் 3000 ப்ரிண்டுகள் இந்தியாவிலும் 2500 ப்ரிண்டுகள் வெளிநாட்டிலும் போடப்பட்டுள்ளது...

இது உலகில் எந்த ஒரு திரைப்படமும் செய்யாத சாதனையாகும்...

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் நகுல் ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். இந்த திரைப்படத்தை நியூயார்க் பாக்ஸ் ஸ்டுடியோவில் பார்த்த நடிகர் ப்ரூஸ் வில்லீஸ் (புகழ்பெற்ற ஆக்சன் நடிகர்), "இந்திய சினிமாவில் இருந்து தனக்கு ஒரு போட்டி கிளம்பிவிட்டதாக" பொறாமையுடன் குறிப்பிட்டார்..

இந்த படத்தில் நடித்த சுனைனாவுக்கோ, பாலிவுட், ஹாலிவுட் போன்ற திரையுலகங்களில் இருந்தும் தென்னிந்திய திரையுலகங்களில் இருந்தும் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது...

பெமினா மிஸ் இந்தியாவின் செலக்சன் கமிட்டியில் உள்ள அனுபம் கெர், அடுத்த ஆண்டு லண்டனில் நடைபெறவிருக்கும் பிரபஞ்ச அழகி போட்டிக்கு நேரடியாக சுனைனாவை அனுப்பும் முயற்சிகள் நடந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்...

இந்த படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அடுத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் படத்தில் இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்....ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஜெப் கோல்ட் ப்ளம் (ஜூராசிக் பார்க் படத்துக்கு இசையமைத்தவர்) என்பவரை தவித்துவிட்டு விஜய் ஆண்டனியை ஒப்பந்தம் செய்துள்ளது, ஹாலிவுட் வட்டாரத்தில் சிறிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

நாக்க முக்க பாடல் இப்போது இளைஞர்களின் தேசிய கீதம்...தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய மொழி இளைஞர்களும் இருபத்து நாலு மணி நேரமும் முனுமுனுப்பது நாக்கமுக்க பாடல்...இந்த ஆண்டுக்கான தேசிய விருது மட்டுமல்ல, எம்மி அவார்ட்ஸ் இந்த பாடலுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது...

சில்வஸ்டர் ஸ்டோலன் தனது ராம்போ 5 (நான்காவது பாகம் சென்ற ஆண்டு வெளிவந்தது), படத்தில் இந்த படத்தின் வில்லன் நடிகர் சம்பத் குமாரை ஒப்பந்தம் செய்துள்ளார்...

இந்த படத்தினை உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவி தயாரித்து, கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்...

இந்த ஆண்டுக்கான பிறமொழிக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை இந்த படத்துக்கு கிடைத்துள்ளது, கண்டிப்பாக ஆஸ்கர் விருதை இந்த திரைப்படம் வெல்லும் என்று தமிழகத்தில் வசிக்கும் ஆறு கோடி மக்கள் அனுதினமும் பிரார்த்தனை செய்துவருகிறார்கள்...

!!!!

சன் டிவி தரப்பு இந்த பதிவை அப்படியே சுட்டு நாளையோ அல்லது அடுத்த மாதமோ 8 மணி செய்தியில் படித்துக்கொள்ளுங்கள்...!!!!!!!!


பின்ன என்னடா !!!! பில்டப் கொடுக்கவேண்டியது தான்...அதுக்காக இப்படியா ? என்னால தாங்க முடியல..இனிமேலும் சன் டிவியில தோழியா என் எதிரீயா என் காதலியா அப்படீன்னு அந்த பரட்டைத்தலையனை காட்டுனீங்க ? மவனே பின்லேடனுக்கு லெட்டர் போட்டுடுவேன்..!!

Friday, October 10, 2008

பார்ப்பனீயம் For Dummies !!!!

பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்...

நிறைய புதிய பதிவர்கள் வந்திருக்கிறார்கள்...சிலர் இந்தி வாழ்க, கருணாநிதி மட்டும் என்னை ஹிந்தி படிக்க விட்டிருந்தால் அம்பானிக்கு அஸிஸ்டெண்ட் வேலையில் மும்பையில் இருந்திருப்பேன் என்கிறார்...இந்தி எதிர்ப்புக்கும் இந்தி திணிப்புக்கும் என்ன வித்தியாசம் என்று தனியாக எழுதவேண்டும்...

ஆனால் இந்த பதிவு, பார்ப்பனீயம் என்றால் என்னவென்று அறியாத புதிய பதிவர்களுக்கு அது குறித்து விளக்கும் ஒரு சிறு முயற்சி...

இரண்டு கேள்விகளுக்கு விடை காண்போம்...

1. யார் பார்ப்பனர் ? மற்றும் 2. எது பார்ப்பனீயம் ? என்ற இரு கேள்விகளுக்கு இங்கே விடை காண்போம்...


யார் பார்ப்பனர் என்ற கேள்விக்கு பொதுவாக வரும் விடை, ப்ராமின் (பார்ப்பண) சாதியில் பிறந்திருந்தால் அவர் பார்ப்பனர் என்பது...

இது தவறு !!!

பார்ப்பன சாதியில் பிறந்த அனைவரும் பார்ப்பனர் இல்லை...!!!

பாரி.அரசு அவர்கள் எழுதிய பதிவில் இருந்து ஒரு ஸ்னிப்பெட் கீழே தருகிறேன்...

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!


தமிழரங்கம் சொல்வதை கொஞ்சம் பாருங்களேன்...!!

பார்ப்பனீயம் என்ற இந்துமதம் சாதியமாக இருக்கின்ற எல்லையில், அது உயர் சாதிய நலனை முன்னிலைப்படுத்தி நிற்கின்றது. அதிலும் பார்ப்பன நலனை குறிப்பாக முன்னிலைப்படுத்துகின்றது. இந்த பார்ப்பனீயம் அனைத்தும் தழுவிய சமூக முரண்பாடுகள் சார்ந்து சுரண்டும் ஒரு வர்க்க கோட்பாடாகவும், அதை நடைமுறைப்படுத்துவதாகவும் இருக்கின்றது.


உறையூர்க்காரன் சொல்வதில் மேட்டர் இருக்கிறது...

அமேரிக்கா என்கிற நாடு, தம்முடைய நாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நாடு. உலகையே அடக்கி ஆளும் ஆண்மை தங்கள் நாட்டிற்கு உண்டு என்று எண்ணுவதுக் கூட பார்ப்பனீயம்தான். இந்த ஒற்றுமையின் காரணமாகவே சிலர் "நான் அமேரிக்க ஆதரவாளன்" என வெளிப்படையாக பீற்றிக் கொள்கிறார்கள்.


பார்ப்பன சாதியில் பிறந்துவிட்டு, தங்கள் மீது பெற்றோராலும் உற்றோராலும் மற்றோராலும் அழுத்தப்பட்ட சாதீயக்கூறுகளை, உயர் சாதி திமிரை, கண்டுணர்ந்து, அதனை வெறுத்து ஒதுக்கி, வெளிப்படையாக அவற்றை சாடியவர்கள் பலர் இருக்கிறார்கள்...அவர்களுக்கு ஹேட்ஸ் ஆப் !!!!

ஆனால் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் பார்ப்பன சாதி பெரியவர்கள், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தங்கள் பிள்ளைகளுக்கு அதே வகையான சாதியக்கூறுகள், தீண்டாமை போற்றவற்றை ட்ரான்ஸ்பர் செய்துவிடுவது உண்மையில் வருத்தப்படக்கூடிய, வெறுக்கக்கூடிய ஒரு விடயம்...

விஜய் டி.வி லாவண்யா ஒரு சிறந்த உதாரணம்...மறந்துபோனவர்களுக்கு மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன், "தன்னுடைய ஜாதியில் தான் திருமணம் செய்துகொள்வேன்" என்று அவர் கூறினார்...ஆனால் அதற்கான காரணம், "ஐயங்கார் ஜாதியில் பிறந்துவிட்டதால் I Feel blessed, அதனால் அதே ஐயங்கார் ஜாதியிலேயே திருமணம் செய்வேன்"...



இளையதலைமுறை பெண், மருத்துவமோ அல்லது பொறியியலோ படித்துக்கொண்டிருக்ககூடும்...இவரிடம் எப்படி வந்தது சாதீயக்கூறு ? கண்டிப்பாக அவரது பெற்றோர்களையே நான் சந்தேகிப்பேன்...

என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்..என்னுடைய நன்பர் ஒருவர் பார்ப்பனர். அவருடைய வீட்டுக்கு சென்றிருந்தேன், உணவு நேரம், என்னையும் உணவுக்கு அழைத்தனர்...

எல்லோருக்கும் சில்வர் ப்ளேட், எனக்கு மட்டும் ப்ளாஸ்டிக் தட்டு, இருப்பினும் நான் அதை வேறுபாடாக நினைக்கவில்லை, ஆனால், உணவு அருந்திவிட்டு வாஸ் பேஸின் சென்றபோது, பதினோரு மணிக்கு காபி அருந்திய சிறிய எவர்சில்வர் டம்ளர் குப்பைக்கூடையில் கிடந்தது...

பார்ப்பனர்கள் அனைவரையும் சமூக உணர்வாளர்கள் சாடுவதன் காரணம், பார்ப்பனர்களில் 95% பேர், பார்ப்பனீயத்தை பின்பற்றுபவர்களாகவே இருப்பது தான்...

தாங்கள் பின்பற்றுவதோடல்லாமல் தன்னுடைய இளைய தளைமுறைக்கு சத்தம் இல்லாமல், அவர்கள் உணரும் முன்பே, அவர்கள் எது நல்லது / எது தீயது என்று பிரித்தறியும் வயதை அடையும் முன்பே ( கடவுள் நம்பிக்கையை புகுத்துவது போல) பார்ப்பனீயத்தையும் புகுத்தி விடுகிறார்கள் அவர்களது பார்ப்பனீயப்பெற்றோர்...

ஒருமுறை ஒரு வலைப்பதிவர் சொன்னார், தன்னுடைய பிள்ளை மந்திரம் சொல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்று...வேறு பதிவர் சொன்னார், அவருடைய நன்பர் சட்டைக்குள் என்ன அணிந்திருக்கிறார் என்பதையே நேர்முக தேர்வுக்கு சென்றபோது தேர்வாளர் கவனித்தார் என்று...

இவை பார்ப்பனீயக்கூறுகளே !!!!

இங்கே ஒரு வலைப்பதிவர் தான் வடகலை அய்யங்கார் என்றார்...ஆனால் அவர் வடகலை அய்யங்கார் சாதி உயர்ந்த சாதி என்று எங்கேயும் வாதிட்டதாக நினைவில்லை...

ஆனால் அவர் குலக்கல்வி முறையை கொண்டுவரவேண்டும் என்பதால் 4000 ஆரம்ப பள்ளிகளை மூடிய மூடன் ராஜாஜியை ஆதரிக்கிறார். இஸ்ரேலை ஆதரிக்கிறார். சோ ராமசாமி சொட்டைத்தலையனை ஆதரிக்கிறார். இவை பார்ப்பனீயக்கூறுகளாம்...

சாதியால் உயர்வு தாழ்வு சொல்லல் பார்ப்பனீயமாகும்...மேலப்பாளையமும் சரி, திண்ணியமும் சரி...பார்ப்பனீயத்தை பின்பற்றுபவரில் தேவர், முதலியார், வன்னியர் என்றெல்லாம் பிரிவினை கிடையாது...அவர் அனைவரும் ஒருவரே...

கீழ்சாதியாக ஆக்கப்பட்டவரின் உரிமைகளை மறுக்கும் இந்த மேல்சாதி திமிர், இரட்டைக்குவளை முறையில், சுவர் எழுப்புவதில், தெரு வழியாக பிணத்தை கூட தூக்கி செல்வதை தடுப்பதில் நிற்கிறது...

கெஞ்சிப்பார்ப்பான், மிரட்டிப்பார்ப்பான் : பார்ப்பான் என்ற பெரியாரின் வாக்கை அறிமுகம் செய்தார் ஒரு வலைப்பதிவர்...

பார்ப்பன சாதியில் பிறந்தவரை எப்போதும் சந்தேக கண் கொண்டே பார்ப்போம்...அவரிடம் இருந்து என்றாவது ஒரு நாள் அவரிடம் உறங்கும் பார்ப்பன கூறு வெளிவரும் என்றார் அவர்...

அது பலவகையில் உணமை...

பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் அடிப்படையில் சுயநலவாதிகளாக இருப்பதை பல்வேறு சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்..

தன்னுடைய சொந்த லாபத்துக்காக எவரையும் / எதையும் அழித்து, ஒழித்து செல்ல இவர் தயங்கமாட்டார் என்பது சரியான கூற்றாகும்...

இவை அனைத்தும் என்னுடைய சொந்த எண்ணத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது, விவாதம் செய்ய விரும்புபவர்கள் "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்ற சொல்லின் அடிப்படையில் நல்ல சொற்களை உபயோகம் செய்து விவாதித்தால் மகிழ்வேன்...

தரவுகள்

உறையூர்க்காரன் http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post.html

பாரி.அரசு http://pktpariarasu.blogspot.com/2008/06/blog-post_25.html

தமிழரங்கம் இணையதளம் (சிறு பகுதி) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3439:2008-08-30-16-17-33&catid=73:2007&Itemid=76

சிந்தனைக்கு ஒரு குறள் !!!

தாளாற்றி தந்த பொருளெல்லாம் தக்காருக்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு


சோ, சூ.சாமி தவிர வேறு யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் போடலாம்...

Thursday, October 09, 2008

14 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : கலைஞர் அறிவிப்பு !!!

வருகின்ற பதினாலாம் தேதி இலங்கை பிரச்சினை பற்றி விவாதிக்கவும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் போதிய ஆதரவுகளை திரட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்...

அ.இ.அதிமுக இதில் கலந்துகொள்ளுமா என்பது தெரியவில்லை..ஆனால் இன்றைக்கு செல்வி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்படுவது குறித்து மத்திய அரசை சாடியுள்ளார், மேலும் அவர்களுக்கு உணவும் மருந்துப்பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு உதவி செய்யவேண்டும் என்று கேட்டுள்ளார்...!!!

ஏதோ நல்லது நடந்தா சரி !!!

ஒரு டாபர் மற்றும் தமிழ் காமிக்ஸ் உலகம்

தமிழர்களுக்குள், ஈழ தமிழர்களை ஆதரிப்பதில் கருத்து வேற்றுமைகள் பல இருக்கின்றன...17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ராஜீவ் படுகொலையை சொல்லி சொல்லி அழுகாச்சி ஆகும் சிலர் இன்னும் இருக்கிறார்கள்..

சீக்கியர் ஒருவரால் கொல்லப்பட்டார் இந்திரா அம்மையார் என்பதால் தலையில் முண்டாசு கட்டிய சீக்கியர்களை அனைவரையும் வெறுத்துவிட்டோமா என்ன ? அதே சீக்கியரை பிரதமர் ஆக்கி அழகு பார்க்கவில்லையா காங்கிரஸ் கட்சியினர் ?

தமிழர்கள் அனைவரையும் வெறுக்கும் இதுபோன்ற இலங்கை தமிழ் / ஈழ எதிர்ப்பாளர்களின் டவுஸர் பற்றி எனக்கு கொஞ்சம் விளங்காமலேயே இருந்துகொண்டிருக்கிறது..



வியட்நாமில் வீசப்பட்ட நேபாம் போன்ற குண்டுகளை / ரசாயன மற்றும் பெட்ரோல் மூலப்பொருட்களை கொண்ட குண்டுகளை (காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி மக்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் குண்டுகள் இவை) இலங்கை ராணுவம் வீசி வருகிறது...இந்த குழந்தைதான் உங்களுக்கு கரும்புலி, பச்சைப்புலியாக தெரிகிறதாடா டாபர்களா ?



இப்படி சிரித்துக்கொண்டிருந்த குழந்தைகள்



இப்படி சிதறுண்டதே !!! இந்த காட்சிகளை கண்டு கல் கூட கரையுமே ? இரக்கமில்லா நெஞ்சில் கூட ரத்தம் கசியுமே ?

இப்படியான சம்பவங்களுக்கு பிறகும் குப்பையை போல எழுதினால் நாம் அதில் உமது கொண்டையை கண்டுபிடிப்பது என்ன கடினமா என்ன ?

இரண்டே விடயங்கள்...!!!

1. நீர் மனநோயாளியாக இருக்கக்கூடும்...அல்லது
2. நீர் ஒரு "சோ" கோஷ்டியாக இருக்கக்கூடும்...

எப்படி உங்களால் மட்டும் இன்னும் அதே பார்ப்பணீயச்சிந்தனையோடு இருக்கமுடிகிறது ? பெங்களூர் என்று வேறு தெரிகிறது, டவுசர் பத்திரம்..அட்ரசை வெளியே சொல்லிவிடாதீரும்...நானும் பெங்களூரில் தான் இருக்கிறேன்....அவ்ளோதான் சொல்லமுடியும்...(கொஞ்ச நாளாகவே யார் காதையாவது கடிக்கவேண்டும் என்று வெறி....நீங்கள் மாட்டிக்கொள்ளாதீர்கள், மீதியை கடைசி லைனில் சொல்கிறேன்..)

**********************

நான் ஒரு காமிக்ஸ் ஆர்வலர் என்று எல்லோருக்கும் தெரியும், இன்னும் ரத்த படலம் அடுத்த பார்ட் வருமா என்று காத்திருக்கும் ஒரு சராசரி வாசகன்...தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற தலைப்பில் நாங்கள் ஆரம்பித்த காமிக்ஸ் குழுப்பதிவில் உள்ள பதிவுகள் கொஞ்சம் தான், இருந்தாலும் அவ்வப்போது சென்று ஆவலோடு வாசிப்பேன்...என்றைக்கு படித்தாலும் புதிய கட்டுரை மாதிரியே இருக்கும்...

இதோ இன்னுமொரு காமிக்ஸ் ரசிகரை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்...!!!

இவர் தமிழ் காமிக்ஸ் உலகம் என்ற பெயரிலேயே ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து உள்ளார் (காப்பிரைட் சட்டத்தை மீறுவதில் காமிக்ஸ் ஆர்வலர்களுக்கு நிகர் அவர்களேதான் :) இருந்தாலும், அட்லீஸ்ட் கொஞ்சம் ஸ்கேன் செய்யப்பட்ட காமிக்ஸ் பக்கங்கள் வலையேற்றப்படும் என்றால், செந்தழல் ரவி என்ற பெயரில் ஆரம்பித்தால் கூட கண்டுக்கப்போறதில்லை )




நிறைய பதிவுகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்...தமிழில் எழுதுமாறு அவருக்கு அன்பு கட்டளை இடுகிறேன்...!!!!

**********************

கொண்டை டாபருக்கு கடைசி லைன் : கவலை வேண்டாம், நான் காதை எல்லாம் கடிப்பதில்லை...ச்ச்சும்மா லுலூவாயிக்கு...!!!

***********************

Tuesday, October 07, 2008

இரண்டு டவுசர் பாண்டிகளின் டிஜிட்டல் படம் !!!

எங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் பதினேழாம் பொருத்தம்...அப்புறம் தான் தெரிந்தது, பல விடயங்களில் நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம் என்பது...!!!!

எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டால்...

1. சாமி கும்பிடுவதில்லை
2. டோமர் மாதிரி பதிவு எழுதுவது
3. காதல் திருமணம்
4. அவுஸ்திரேலியா
5. பாஸ்டர்ஸ் பியர்
6. ஹாலி டேவிஸன் பைக் மீது காதல் ( அவரிடம் உள்ளது, என்னிடம் அதன் படம் மட்டும்)
7. மேட்டருக்கு / மீட்டருக்கு அலைவது
8. பின்னூட்டத்தில் மொள்ளமாறித்தனம் செய்வது
9. டவுஸர்
10. புகை பழக்கத்தை விட்டுவிட்டது

வேற்றுமைகளை சொன்னால் இந்த பதிவு தாங்காது...யாரடா அந்த டாபர்கள் என்று பார்க்கிறீர்களா ?

சமீபத்தில் என்னுடைய புறாக்கூண்டு வீட்டுக்கு (பெங்களூரு) வருகை தந்த பொட்டீக்கடையார் தான் அவர்...அவர் போட்டிருந்த டவுஸரை பார்க்கும்போது இவர் பொட்டீக்கடையா அல்லது ஜட்டீக்கடையா என்று தெரியவில்லை...(லக்கி, தமிழச்சி கவனிக்க)...



படம் ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால் கழுத்தை சாய்த்து பார்க்கவும். கழுத்து சுளுக்கு மற்றும் அய்யோடெக்ஸ் செலவுக்கு நான் பொறுப்பல்ல...!!!

படத்தை பார்த்துவிட்டு, இதை சூடான இடுகையாக தமிழ்மணத்திலும், அதிக ஓட்டுகள் குத்தி தமிழிஷிலும் முதலில் கொண்டுவரவும்...

இது போன்ற டவுசர் பாண்டிகள் உங்கள் நன்பர்கள் இருந்தால் அவர்கள் படத்தையும் போட்டு ஒற்றுமை வேற்றுமைகளை பிரித்தாளுகை செய்க...!!!

வாழ்க பின்னூட்ட மொள்ளமாறித்தனம்..
வாழ்க பின்னூட்ட முடிச்சவுக்கித்தனம்..
வாழ்க பின்னுட்ட டுபுரித்தனம்..(நன்றி அதிஷா / பரிசல்)
வாழ்க தனம்..

உடன்பிறப்பே !! தந்தி அனுப்பவேண்டாம் !!! SMS போதும் !!! கலைஞர்..

ஏழரைப்பக்க நாளேடு !!!!

கலைஞரின் கேள்வி பதில் அறிக்கை !!!!

கேள்வி : தந்திகள் சரியாக சென்று சேரவில்லை என்றும் புதிய உத்தியை முதல்வர் அறிவிப்பார் என்றும் வரும் செய்திகள் குறித்து ?

பதில் : பெருவாரியான தந்தி மெசின்கள் வேலை செய்யாதது, மற்றும் அ.இ.அ.தி.மு.கவை சேர்ந்த தந்தி ஊழியர்கள் அவசர விடுப்பு எடுத்துவிட்டு சென்றுவிட்டது போன்ற காரணங்களால், மாவட்ட வாரியாக பிரதமர் மற்றும் சோனியாஜியின் மொபைல் எண்ணை போஸ்டர் அடித்து ஒட்டும் பணியை என் உடன்பிறப்புகள் செய்து வருகிறான்...நாளையில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பும் பணியில் நூறு கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்...மத்திய அமைச்சர் ஏ.ராசா, நாளை முதல் தேசிய குறுஞ்செய்தி வசதி இலவசம் என்று அறிவித்துள்ளார்...என் உடன்பிறப்புகளாகிய மாவட்ட செயலாளர்கள், தொண்டர்களுக்கு ஏர்டெல் சிம் கார்டுகள் வாங்கி அளித்துள்ளனர்...நாளை முதல் தமிழனின் உண்மையான உணர்வுகள் மத்திய அரசுக்கு தெரியவரும்...PLEASE STOP KILLING TAMIL PEOPLE என்ற குறுஞ்செய்தியை திராவிட முன்னேற்ற கழகத்தினரும், பொதுமக்களும், பிரதமருக்கும், சோனியா காந்தி அவர்களுக்கும், ராகுல் காந்தி அவர்களுக்கும் அனுப்பி வைப்பார்கள்...


செல்போன் எஸ்.எம்.எஸ் பிரச்சினை. மன்மோகன்சிங் அதிர்ச்சி...

காலையில் இருந்து தன்னுடைய மொபைல் போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்களால் பிரதமர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த அபிஷியல் அரசியல் நெம்பரை குறைந்த நபர்களுக்கு தானே கொடுத்தோம், இது எப்படி லீக் அவுட் ஆனது என்று டென்ஷனில் உள்ளார். மேலும் இந்த நம்பரை மாற்றி வேறு நம்பர் போடமுடியாதபடிக்கு, இந்த நம்பரை அமெரிக்க அதிபர் புஷ், ரஷ்ய அதிபர், பிரான்ஸு அதிபர் சார்க்கோஸி, இலங்கை அதிபர் போன்றவர்களுக்கு கொடுத்து தொலைத்துவிட்டோமே என்று பிரதமர் சங்கடத்தில் நெளிகிறார். இரண்டு எஸ்.எம்.எஸ் டெலீட் செய்தால் அடுத்து இரண்டு வந்துவிடுகிறது, SMS மெமரி புல் என்றும் காட்டுகிறது...இதை தடுக்க ஒரு மத்திய அரசு ஊழியரை அமர்த்தி, SMS அனைத்தையும் டெலீட் செய்யலாமா என்று பிரதமரின் பாதுகாப்பு அமைச்சு யோசித்து வருகிறது...

நேரம் குறைவாக உள்ளதால் உங்கள் கற்பனை குதிரையை விரட்டி நீங்களே மீதியை பின்னூட்டத்தில் டைப் செய்துவிடுங்கள்...!!!

காமெடி கீமடி பண்ணலியே ?

நடக்கும் சம்பவங்களை பார்த்தால் !! வடிவேலு பாணியில்...எங்களை வைத்து காமெடி கீமடி பண்ணலியே !!! என்று சொல்லத்தோன்றுகிறது...!!!

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வீடிழந்து அகதிகளாக உயிரைக்காக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள்...!!! மக்கள் வசிக்கும் இடங்களில் இலங்கை அரசு குண்டுகளை வீசுகிறது...



படம் : இந்தியாவில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவம்

இந்திய அரசு கொடுத்த ராடார்கள், இந்திய அரசின் முக்கிய அதிகாரிகள் கொண்ட உதவிக்குழு, இந்திய அரசால் பயிற்சி பெற்ற இராணுவப்படையை கொண்டு தமிழர்களை வேரறுக்க கொலைவெறியோடு கிளம்பியுள்ளது இலங்கை இராணுவம்...

தன்னுடைய சொந்த நாட்டு மக்கள் மீது முப்படைகளை ஏவி விட்டு, கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டுள்ளது இலங்கை அரசு. வரலாற்றில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக சொந்த நாட்டு மக்களை கொள்ள முப்படைகளையும் ஏவியவர் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே மட்டுமே.



படம் : ராஜபக்ஸ, பிரதமர், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர்.

இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் திரு.M.K.நாராயணன், இலங்கை துணை தூதர் பலிதனகோடாவை அழைத்து (தூதர் மெடிக்கல் லீவ்) இலங்கையில் தமிழர்களிடம் டீசண்டாக நடந்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர், இலங்கை பிரதமரை அழைத்து வலியுறுத்தினால் ஏதாவது உண்மையிலேயே உருப்புடியா நடக்குது என்று நம்பலாம்...

துணைதூதரிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் என்ன பேசினார் என்று யாராவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வழக்கு தொடர்ந்தால் நல்லது...ட்ராபிக் ராமசாமி முகவரி கொடுங்களேன்...

அமைச்சரவையில் இடம் தேவை என்பதால் டெல்லிவரை சென்று சோனியாவை சந்திந்த கலைஞர் அவர்கள், டாக்டர் ராமதாஸ் சொல்வது போல இந்த பிரச்சினைக்கும் டெல்லி செல்லவேண்டும், சோனியாவை, பிரதமரை சந்திக்கவேண்டும்.

இன்னும் அண்ணா, காமராஜர் காலத்து தந்தி மெத்தட் படு த்ராபை ஐடியா, ஒரு வேளை தந்தி மெஷின்கள் துருப்பிடித்து வேலை செய்யாமல் போகலாம்...அல்லது தந்தி ஊழியர்கள் கோடிக்கணக்கான (??) தந்திகளை அனுப்பி ஓய்வை இழக்கலாம்..!!! மேலும்

வெறும் தந்தியை அனுப்பினால் தொலை தொடர்புத்துறைக்கு தான் லாபம், பிரதமருடைய தொலைபேசி எண்ணை வெளியிடுங்கள், நாங்கள் நேரடியாக தொலைபேசிக்கே அழைக்கிறோம்..

மயிலை மாங்கொல்லையில் கூட்டம் போட்டால் என்ன டெல்லிக்கா கேட்கப்போகிறது ? முட்டுச்சந்து முருகேசன்கள் வேறு வழியில்லாமல் போடுவது தெருமுனைக்கூட்டம், நீங்கள் ஏன் அதை செய்கிறீர்கள் ?

சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்..
டெல்லிக்கு ஸ்பைஸ் ஜெட் மாதிரி குறைந்த விலை விமானத்திலாவது டிக்கெட் எடுங்கள்...
இலங்கை துணை தூதர், முழு தூதர், முக்கா தூதரை அழைத்து சட்டையை பிடியுங்கள்...

ப்ளீஸ் ஏதாவது செய்யுங்கள்...ஒன்றை மட்டும் விட்டுவிடுங்கள்...அதான் எங்களை வைத்து காமெடி செய்வது ?!!!!!!!!!

Sunday, October 05, 2008

ஈழத்தமிழர்களுக்காக கிளர்ந்தெழும் தமிழக அரசியல் தலைவர்கள் !!!!

உலகத் தமிழர் தலைவர் டாக்டர் கலைஞர் இந்திய பிரதமருக்கு எழுதியுள்ள சூடான கடித்ததில் இந்திய இலங்கை கூட்டு ரோந்து தேவையில்லை என்று சாடியுள்ளார்...



புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா விடுத்துள்ள சூடான அறிக்கையில் இந்திய அரசு அரியானா மாநிலத்தில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்த விவரம், இந்திய அதிகாரிகள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை இலங்கை செல்வது, இந்திய ரேடார்கள் இலங்கை ராணுவத்துக்கு தமிழர்களை கொல்ல உபயோகப்படுவது என்று மத்திய அரசை கிழி கிழி என்று கிழித்துள்ளார். மத்திய அரசை கையில் வைத்திருக்கும் தமிழகத்தை சேர்ந்த பத்து மத்திய அமைச்சர்கள் என்ன ஆணி புடுங்கிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் சாடியுள்ளார்...




டாக்டர் அய்யா திரு ராமதாசு அவர்கள், சமீப காலங்களில் எந்த தமிழக அரசியல் தலைவரும் தெரிவிக்காத சூடான ஆதரவு கருத்துக்களையும் தமிழ் ஈழம் அமையவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கலைஞரையும் சாடியுள்ளார். இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவிகள் வழங்கும் இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் பதினெட்டு நாளில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் அதனை எதிர்த்து தமிழ் ஈழத்துக்காக சட்டமன்றத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று தமிழக அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்...



இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமான திரு.வைகோ அவர்கள் இலங்கையில் நடக்கின்ற இனப் படுகொலைக்கு மத்திய அரசு உதவுகிறது என்று சாடியுள்ளார்..ஐ.நா.வின் மனித உரிமைகள் கமிஷனின் தலைவர் லூயிஸ் ஹார்பர் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை அரசு அனுமதி தர மறுத்துவிட்டது. கொழும்பில் ஐ.நா. அலுவலகத்தை திறக்க கடந்த ஓராண்டாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசு வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகிறது என்பதற்கான சாட்சியங்கள்...

உணவும், மருந்தும் கிடைக்காமல் தமிழர்கள் சாகிறார்கள். இதற்கு இந்திய அரசு துணைபோகிறது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். மத்திய அரசு உணவும், மருந்தும் அனுப்ப மறுப்பதற்கு முதல்வர் கருணாநிதிதான் காரணம்...

என்று மத்திய அரசையும், தமிழக முதல்வரையும் கடுமையாக சாடியுள்ளார்....




சிறிலங்காவில் உள்ள மகிந்த அரசு தமிழர்களைக் கொல்ல, தடை செய்யப்பட்ட இரசாயன குண்டுகளை வீசி வருகிறது. இவை காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சும் சக்தி கொண்டவை. உணவுப் பஞ்சம் என்று கூறி யாழ்ப்பாணத் தமிழர்களை சிறிலங்கா அரசு பட்டினிபோட்டு வருகிறது. உணவை ஆயுதமாக பயன்படுத்தும் இரக்கமற்ற அரசாக மகிந்த அரசு உள்ளது.

தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா ஆயுத உதவி செய்வது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக நாடுதழுவிய போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்....



தேசிய கட்சியான பாரதீய ஜனதா ஈழத்தமிழர்களை ஆதரித்து கருத்து வெளியிடுவது இது முதல் முறையாகும்...பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தால் ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்று புதினத்துக்கு அளித்த செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்...



செந்தழல் ரவி என்ன தெரிவிக்கிறார் என்று பார்க்க கீழே !!!





















தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

தேர்தல் வந்துவிட்டது...

Friday, October 03, 2008

வீணாய்ப்போன ரிலையன்ஸ் பிரஷ்(லெஸ்)

முதலில் ஒரு கவிதை

பேருந்து நிறுத்தம்
குப்பைத்தொட்டி
எச்சில் இலை
நான்
நீ
உன் கூச்சல் உனக்கு
என் கூச்சல் எனக்கு
இருவருடைய பேருந்து எண் என்னவோ 47D


*** தமிழில் மிகப்பெரிய சிந்தனையாளர் - ஏஞ்சலீனா கோவிந்தசாமீ aka (அஞ்சலை) ***


இன்று இரவு ஏழு மணி வாக்கில் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு நானும் தங்கமணியும் ரிலையன்ஸ் ப்ரஷ் கடைக்கு சென்றிருந்தோம்...இப்போதெல்லாம் எல்லாவற்றையும் பாக்கிங் செய்து விற்றுவிடுகிறார்கள்...பூண்டு, வெங்காயம் உட்பட - உரித்து - பாலித்தீன் கவர்களில் கட்டி - இரண்டு மூன்று ரூபாய்கள் அதிகம் தான், விற்றுவிடுகிறார்கள்...

நம்மை மேலும் மேலும் சோம்பேறிகளாக்கும் முயற்சியா அல்லது நமது சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி காசு பார்க்கும் முயற்சியா தெரியவில்லை...

அன்னாசிப்பழத்தை (சின்ன ன் ஆ அல்லது பெரிய ண் ஆ தெரியவில்லை அன்னாசிக்கு) அப்படித்தான் டப்பாவில் அடைத்து பதினைந்து உரூபாய்க்கு விற்றார்கள்...

அது மற்றும் மாதுளையையும் உரித்து பெட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள்...இது முப்பத்து இரண்டு ரூபாய்...

வாங்கினோம், அருகில் உள்ள பூங்காவில் அமர்ந்து லைட்டாக திறந்தபோதே உஷார் ஆகியிருக்கவேண்டும் நான்...

விதி வலியது...

படபடவென நாலைந்து துண்டங்களை உள்ளே தள்ளிவிட்டிருந்தேன்...

தங்கமணியோ, எனக்கு பழம் வேண்டாம் என்று பக்கத்து கடையில் வாங்கிய பப்ஸ் ஒன்றை பதம் பார்க்க ஆரம்பித்தார்...இப்படித்தான்...எனக்கு சோதனையான காலகட்டங்களில் தங்கமணி மட்டும் தப்பிவிடுவார்...

ஐந்தே நிமிடம்...லைட்டாக உமட்டிக்கொண்டுவர ஆரம்பித்தது...

ஏம்மா இதை கொஞ்சம் மோந்து பாரு, லைட்டா ஏதோ வாசனை வர்ராமாதிரி இருக்குல்ல ?

அட ஆமாங்க...கெட்டுப்போச்சு...வாசனை வரலையா ? இதை எப்படீங்க திங்கறீங்க ? உவ்வே...என்று வாந்தி எடுப்பது போல ஒரு ஆக்சன் காட்டுகிறார்...

எனக்கு உண்மையிலேயே எகிறிக்கொண்டு வருகிறது...

வாம்மா போய் ரிட்டன் பண்ணலாம் என்று வேகவேகமாக போய் காரை எடுத்து ஸ்டார்ட் செய்கிறேன்...

ஏற்கனவே லக்கிலூக் / அதிஷா / வரவணையான் இதே ரிலையன்ஸ் ப்ரஷ் எதிரே தங்கியிருந்தபோது சைடிஷ் என்ற பெயரில் வெறும் எக்ஸ்பையர்டு மிக்சர் பொட்டலங்களை கொடுத்த கோபமும் கொஞ்சம் பாக்கியிருந்தது...பண்ணிரண்டு மணிக்கு எங்கேயிருந்து போய் அதனை மாற்ற ? ரிலையன்ஸ் பனியன் போட்ட சனியன்கள்...!!!

அங்கே சென்று குதித்த குதி !!! நான் தமிழில், தங்கமணி கன்னட மொழியில்...அய்யோ அய்யா இதுக்கு ஈடா எதையாவது எடுத்துக்கிட்டு போயிரு ராசா என்று கெஞ்சும் வகையில் வந்துவிட்டார்கள் அம்பானியின் அடிப்பொடிகள்...

இதே அம்பானி என்னை ஏமாற்றி போன் பில் என்ற பெயரில் மூன்றாயிரம் திருடியவன்...அந்த காசில் தான் மும்பையில் கட்டும் பல கோடி அடுக்கு மாடி வீட்டுக்கு செங்கல் வாங்கியிருப்பான் ராஸ்கோல். அது தனி கதை...பின்னால் எழுதுகிறேன்...

ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி முப்பது வினாடிகளுக்குள் !!!

ஏதோ ஒரு அழுக்கு பின்னவீனத்துவ எழுத்தை படித்தவுடன் வரும் உணர்ச்சிங்க !!! அட தெரியலியா ?

உவ்வ்வே !!!!!!!!!!!!!!!

தங்கமணி : ஏங்க வீட்டுக்குள்ள வந்து வாந்தி எடுக்கக்கூடாதா ?

Wednesday, October 01, 2008

எனக்கு மிகவும் பிடித்த கார் !!!





சாம்சங் நிறுவனத்தின் ஈக்குவஸ் (EQUES) கார், எனக்கு மிகவும் பிடித்தது...ச்ச்சும்மா அதிருதில்ல !!!

சாம்சங் எங்கடா கார் தயாரிக்குதுன்னு கேக்காதீங்க..ஜப்பான் நிறுவனத்தின் கொலாபரேஷனோட கில்லி மாதிரியான கார்கள் தயாராகி கொரியாவில் விற்பனை செய்யப்படுகிறது...!!!

ஒரு வாசகியின் பார்வையில் !!!

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...

உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...

எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?

பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...

நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...

<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?

தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...

தமிழ்மணம் பற்றி தெரியுமா ?

ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...

உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?

குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...

எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?

சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...

சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...

சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?

தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...

வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?

பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...

பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...

எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?

நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...

தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...

வலையுலகின் எதிர்காலம் என்ன ?

இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...

உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?

தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....

மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...

வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?

கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...

************************************************************************

வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....