Showing posts with label தொடர்கதை. Show all posts
Showing posts with label தொடர்கதை. Show all posts

Sunday, September 28, 2008

ஆதலினால் காதல் செய்தேன்.. பாகம் இரண்டு

பாகம் 1

முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு தொடங்கியது....விடுதியில் இருந்த மாணவர்கள், விடுதியின் சட்ட திட்டங்கள் பிடிக்காமல் வெளியேறி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கும் முயற்ச்சியில்...

நான், கோவிந்து, கார்த்திக், மணி, மற்றும் இளமாறன் ஆகிய ஐந்து பேரும் ஒன்றாக தங்கிக்கொள்ளலாம் என்று பிரியப்பட்டோம்...

வீடு தேடும் பொறுப்பு என்னுடையது....

தெரிந்த டீக்கடைக்கு சென்றேன்...இளங்கோ அண்ணா தான் இதற்க்கு ஓனர்..எங்க க்ரூப் கிட்ட ரொம்ப பாசமா இருப்பார்..நாங்களும் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் விளையாடுவோம்...

நான்: என்ன இளங்கோ அண்னே...ஒரு ஸ்ட்ராங் டீயப்போடுறது...

இளங்கோ: என்ன குமாரு...கொஞ்சம் பழைய பாக்கிய வைக்கிறது..

நான்: என்னன்னே...இப்படி கேட்டா எப்படி...

இளங்கோ : வேற எப்படி ராசா கேக்குறது..

நான்: அட இருங்கன்னே...இந்த மாசத்தில இருந்து தனியா வீடு பாத்து தங்க போறோம்...செலவு கம்மியா ஆகும்..பழைய பாக்கி எல்லாம் கொடுத்துடுறோம்...

அண்ணன் ஒரு முறைப்பு லுக்கு கொடுக்கிறார்...

மீண்டும் நான்..அண்னே...தம்முக்கு ஒரு ரெண்டு ரூபா தாங்கன்னே...

இளங்கோ அண்ணன்:ரொம்பத்தான் ஏத்தமாகிப்போச்சி டா உங்களுக்கு...(சட்டை பையிலிருந்து காசை கொடுக்கிறார்..)

நான்: அண்ணே...பசங்க வீடு பாக்கிற வேலையை என்கிட்ட கொடுத்திட்டாங்க...ஏதாவது வீடு ஊருக்குள்ள இருக்கா சொல்லுங்க..

இளங்கோ அண்ணன்: அந்த உரக்கடைக்கு பக்கத்துவீடு காலியாத்தாண்டா இருக்கு...சீக்கிரம் போ...இளங்கோ சொல்லிவிட்டேன் அப்படின்னு சொல்லு...

வேகமாக தலையாட்டிவிட்டு உரக்கடை நோக்கி சென்றேன்...

உரக்கடை பூட்டி இருந்தது....மதிய உணவுக்காக சென்று இருப்பர் போலும்..

பக்கத்துவீடு திறந்து இருந்தது...மெல்ல தட்டினேன்....

டக் டக்...யாருங்க வீட்டுல...

யாரோ நடந்துவரும் சரசர ஒலி....

க்ரீச்....

கதவு திறந்தது....

மின்னல் வெட்டியது போல வந்து நின்றாள் என் தேவதை...

அவள் : என்ன வேனும்....

அவளை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இல்லை...

தலையை குனிந்தேன்...வீடு பாக்கலாமேன்னு...

அவள் : எந்த வீடு...

குனிந்த தலை நிமிராமல்...உரக்கடைக்கு பக்கத்துவீடு...இளங்கோ அண்ணா சொல்லிவிட்டார்...

அவள் : ஹல்லோ....வீடு பாக்கத்தானே வந்தீங்க...பொண்ணு பார்க்க இல்லையே...எதுக்கு இவ்ளோ வெக்கப்படுறீங்க...

அவமான உணர்ச்சி தலைதூக்க...சட்டென நிமிர்ந்து அவளை பார்த்தேன்...

அப்பா...அந்த கண்களில்தான் என்ன மின்னல்....என்ன தீட்சண்யம்...

என் தேவதை பேசும் என்பதே எனக்கு கனவு போல் இருந்தது....அதுவும் பட் பட் என பட்டாசாய் வெடிப்பாள் என்பது ஆச்சர்யமான ஆச்சர்யம் எனக்கு...

ஏற்க்கனவே உங்க பிரண்டு கோயிந்தன் என்னை ஸ்கூல் கிட்ட பார்த்து கேட்டார்...எங்க அப்பா கிட்ட சொல்லி உரக்கடைக்காரர் கிட்ட ஏற்க்கனவே சொல்லியாச்சி...

இனிமே குட்டிசுவர் மேல உட்காராமல் மாடியில் இருந்தே நீங்க என்னை சைட் அடிக்கலாம்....

ஹய்யோ...என் இதயம் வாய்வழியாக துள்ளி வெளியே வரும்போல இருந்தது...நாம சைட் அடிக்கற விஷயம் இவளுக்கு தெரிந்திருக்கு....அதுக்குமேல...இந்த கோயிந்தன்....இவளோட பேசின விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம விட்டுட்டானே...பனியன் போட்ட சனியன்..அவன....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

அவள் :ரொம்ப வழியாதீங்க....உங்க அறையில நீங்க கவிதை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்க விஷயம் எல்லாம் கோவிந்தன் சொன்னார்...எனக்கு எப்போவே தெரியும்...நீங்க பண்ணிக்கிட்டு இருக்கறது எல்லாம்....பொண்னுங்க என்ன எதுவும் தெரியாதவங்கன்னு நினைச்சிட்டீங்களா...

வெட்கம் பிடுங்கி தின்றது எனக்கு....

ஹி ஹி...அப்படி எல்லாம் இல்லை....ஹி ஹி...

போதும்...எங்க அப்பா வர நேரம் ஆச்சு....நாளைக்கி மெஸ் பக்கத்தில வாங்க உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்....

வந்திடுரேன் திவ்யா...

முதல் முதலில் அவள் பெயரை அவளிடமே உச்சரிக்கையில்....நான் இந்த உலகத்திலேயே இல்லை...

அங்கிருந்து எப்போது வந்தேன்...எப்படி வந்தேன்...என்பதே தெரியவில்லை....அறையில் படுத்திருந்தேன்.......

மெஸ் என்பது கொஞ்சம் ஒதுக்கு புறமாக உள்ள இடம்...ஒரு ஓட்டல்காரர் கல்லூரி மாணவர்கள் சாப்பிடுவதற்க்காக அமைத்து இருந்தார்...

நிமிடங்கள் யுகங்களாக கழிந்தன....

*******************************************

காதல் பயணம் தொடரும்.....

Thursday, September 18, 2008

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஆறு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் ஒன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் இரண்டு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் மூன்று
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் நான்கு
ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை - பாகம் அய்ந்து

இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் ஒரு தொலைபேசி அழைப்பு...லைனில் பழைய மேனேஜர்...என்னடா இந்தாள் விஷம் குடிச்சான் செத்து போனான் என்று கேள்விப்பட்டால் இன்றைக்கு தொலைபேசியில் அழைக்கிறானே என்று ஆச்சர்யம்...

யாரை இனிமேல் பார்க்கவே கூடாது என்று நினைத்தேனோ அவரிடம் இருந்தே போன், ஒரு எம்.என்.ஸி பெயரை சொல்லி அதில் உயர்ந்த பதவியில் இருப்பதாகவும், தனியாக வாழ்வதாகவும் சொன்னார்...என்னிடம் பேசும்போது புல் மப்பு, என்னுடைய டீட்டெயில்ஸ் வேறு ஒரு பழைய எம்ப்ளாயி மூலம் கிடைத்ததாகவும், இந்த ஊரில் அவருக்கு தெரிந்தது நான் மட்டும் தான் என்றும் சொன்னார்...

நானே வந்து பார்க்கிறேன் சார் என்றேன், ஹாலிவுட் ஹீரோக்கள் பேய் இருக்கிறது என்று தெரிந்தும் கதவை போய் திறந்து பார்ப்பது மாதிரி என்றும் சொல்லலாம், இவரால் வேறு யாராவது டேமேஜ் ஆகாமல் காக்கும் எண்ணமும் ஒரு பக்கம், அவருடைய குடும்பத்தினர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவல் இன்னொரு பக்கம், உண்மையிலேயே இவர் என்னதான் பண்ணுகிறார் என்று தெரிந்துகொள்ளும் விருப்பம் இன்னொரு பக்கம் என்று கலவையான சிந்தனைகளோடே நானும் என்னுடைய நன்பனும் அவருடைய அப்பார்ட்மெண்டுக்கு போனோம்...

அங்கே போகும்போதே இரண்டு பெண்கள் ஹாலில் அமர்ந்திருந்தார்கள், அவர்களிடம் ஹிந்தியில் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார், கொஞ்சம் தயங்கினோம், நாங்க அப்புறமா வரோம் சார் என்றேன்..நோ நோ இரு அனுப்பிட்டு வரேன் என்று கத்தையாக பணம் கொடுத்து அனுப்பினார், காசுக்கு வரவளுங்க, என்னோடது சரியில்லைங்கறாளுங்க என்று பேசினார்...

இன்னும் திருந்தலையா நீ என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே விசாரித்தேன், அவருக்கு இன்னோரு கல்யாண ஏற்பாடு நடந்திருக்கிறது, தூத்துக்குடி பக்கம் பெண் பார்த்து, இன்னும் டைவர்ஸ் கூட ஆகவில்லை, இருந்தாலும் இந்த விஷயம் சொல்லாமலேயே அவருடைய குடும்பத்தினர் லம்ப்பான வரதட்சணைக்காக இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்...

மேலும் இவர் வாங்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் அவரது மச்சான் போட்ட பத்து லட்ச ரூபாய்க்கு நாற்பதாயிரம் மற்றும் அவரது அக்கா வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனுக்கு இருபதாயிரம் மற்றும் அவரது அம்மா அப்பா செலவுக்கு பதினைந்தாயிரம், மற்றும் இவர் தினமும் குடிக்க ஆயிரம் என முழுதும் செலவாகிவிடுகிறது என்றும் சொன்னார்...

அது மட்டும் இல்லாமல் மேட்ரிமோனியலில் பணம் கட்டி ப்ரொபைல் போட்டு அதன் மூலம் பெண்களிடம் பேசி டேட்டிங் செய்வதாகவும், முப்பது வயசு பெண்களை தனியாக சந்திப்பதாகவும், செட் ஆவதாகவும், இப்பல்லாம் பெண்கள் மேட்ரிமோனியலிலேயே சிக்குவதாகவும் பெருமையாக சொன்னார்...

பொதுவாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றேன், குடி குடி என்று பெரும் தொந்தரவு செய்தார், வயிற்றில் அல்சர் என்று தப்பித்தேன்...

மெதுவாக அந்த பெண் யார் என்ன என்று விசாரித்தேன், தகவல் சொன்னார், இரவு வீட்டுக்கு வந்து அந்த பெண் வீட்டாரிடம் தகவல் சொன்னேன்...அவர்களும் திருமணத்தை நிறுத்தியதாக கேள்விப்பட்டேன்...

அட்லீஸ்ட் ஒரு பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்ற முடிந்ததே என்ற திருப்தியோடு அந்த நாளை நிறைவு செய்தேன்...

வெகு விரைவில் இவருடைய ஆட்டங்களுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று தெரிந்திருதால் அன்றே இன்னும் சந்தோஷம்பட்டிருப்பேன்...

நினைவுகள் தொடரும்....!!!!

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை / நான்கு பாகங்கள்

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

Wednesday, September 17, 2008

18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு மட்டும்...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை !!!!

இது தான் கதையோட தலைப்பு...ஆனா பதிவின் தலைப்பாக இதை தர விரும்பவில்லை...ஏன் என்றால் இதில் எழுதப்போகும் சில விடயங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்ப்படுத்தலாம்...கலாச்சார அதிர்ச்சியாகவும் இருக்கலாம்...

அப்படிப்பட்ட வாசகர்கள் நீங்கள் என்றால் - நீங்கள் கம்ளெயிண்ட் பண்ணும்படி இருக்கவேண்டாமே என்பதால் இதனை சொல்லிவிடுதல் நலம்...

இந்த ப்ராஜக்ட் மேனேஜர் கதை உங்கள் வாழ்க்கையையோ, நீங்கள் பார்த்த நபர்களையோ ரிசம்பிள் செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...!!!

ஆரம்ப டிஸ்கிக்காக மட்டும் இந்த பதிவு...

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (1)பாகம் ஒன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் இரண்டு

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் மூன்று

ஒரு ப்ராஜக்ட் மேனேஜரின் கதை (2)பாகம் நான்கு

இதுவரை படிக்காதவர்களுக்காக : இந்த மீள்பதிவு

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....