Friday, March 11, 2011

#tnfisherman ஆலோசனைக் கூட்டம்

நாம், கடந்த 30/01/2011 அன்று சென்னை மெரீனாவில் சந்தித்து, மீனவர்
பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அன்றைய சந்திப்பில்
முடிவெடுக்கப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பல்வேறு கட்டங்களிலும் நமது
செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் நம் இணைய நண்பர்கள்
குழுவினர் மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்று கள நிலவரங்களையும் அறிந்து
வந்துள்ளனர். மேலும் சில அமைப்பினரும் நம்முடன் இணைந்து இதனை
முன்னெடுப்பதில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இது வரை மேற்கொண்ட செயல்கள் பற்றிய பரிசீலனைகளை (Review) மேற்கொள்வதோடு,
அடுத்ததாக நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அனைவரும்
கலந்துரையாடி, செயல்படும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இது
சம்பந்தமாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு மீனவர் சங்கப்
பிரதிநிதிகளும் வருகை தருகின்றனர்.

அதன்படி நமது அடுத்த ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 20/03/2011 அன்று
நடைபெற உள்ளது. #tnfisherman இணையக் குழும உறுப்பினர்களும், ஆர்வலர்களும்
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

நாள்: 20/03/2011 ஞாயிறு
நேரம்: மாலை 5 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ், மேற்கு KK நகர். (பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ்
அருகில்)

savetnfishermen.org சார்பாக
கும்மி.

2 comments:

ஜோதிஜி said...

கும்மியாரே

நம் மக்கள் வாய்ச் சொல்லி மட்டும் வீரராக இருந்து கொண்டு கீ போர்டில் தட்டி விட்டு நகர்ந்து போய்க் கொண்டு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கு என் வணக்கம்.

நன்றி ரவி.

'பரிவை' சே.குமார் said...

Vazhththukkal....

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....