Thursday, July 12, 2012

இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறா ?




கலைஞர் கேள்வி பதிலில் இருந்து

கேள்வி: "தீண்டாமை'' அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிலே "தலித்''களையே அனுமதிக்காத போக்கு இன்னமும் உள்ளதாக சொல்லப்படுகிறதே?.

பதில்: அண்மையில் ஒரு செய்தி படித்தேன். ஸ்ரீவில்லிப்புத்தூர், கம்மாபட்டி ஊராட்சி ஒன்றியப்பள்ளி ஒன்றில் தலித் பெண்கள் சத்துணவு சமைத்த காரணத்தால், வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டு மாணவர்களை பள்ளிக்கே அனுப்ப மாட்டோம் என்று தடுத்து விட்டார்களாம். அதைவிட கொடுமை, வேற்று சாதியினரின் எதிர்ப்புக்கு அரசு பணிந்து, சத்துணவு கூடத்தில் பணிபுரிந்து வந்த தலித் ஊழியர்களான மரகதவல்லி, வீரலட்சுமி ஆகியோரை அங்கிருந்து பணி மாற்றம் செய்ய ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம். தீண்டாமைக்கு ஆதரவான அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இந்த அலுவலர்களை மாற்றம் செய்திருக்கின்ற இடத்திலும் இது போலவே வேறு சாதியினர் தங்கள் பிள்ளைகளை சாப்பிட விட மறுத்தால் அப்போது அரசு என்ன செய்யும்?.

இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு என்ன தண்டனை தரலாம் ? ரேஷன் கார்டுகளை பிடுங்கலாம். அரசு வேலை இனிமேல் இல்லை என்று சொல்லலாம். அதே ஊர்ல இருந்துக்கிட்டு அங்க படிக்காத பசங்களுக்கு எஞ்சினீயரிங், மெடிக்கல், அரசு கல்லூரியில் இடம் தராமல் தடுக்கலாம், அரசு கொடுத்த டிவி லேப்டாப் மிக்ஸி கிரைண்டர் எதாவது இருந்தா அதை பிடிங்கிடலாம்.

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சுருக்கமா சொன்னா...
உள்நாட்டிலேயே நாடு கடத்த வேண்டியது தான்...
பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

சீனு said...

அவங்க சொன்னது அவங்க சாதியில அடுத்தவர் சமைப்பதை உண்ணும் பழக்கம் இல்லை என்று. ஆனா, இது சரியா தவறா தெரியல...

SNR.தேவதாஸ் said...

எல்லோரும் ஏதேனும் ஒரு வகையில் இந்த கேடுகெட்ட ஜாதி பிரச்னையால் அறிந்தோ அறியாமலோ பாதிக்கப்பட்டுதான் இருப்போம்.இருக்கின்றோம்.
ஊரையும் சமுகத்தையும் மாற்ற முயற்சிக்கும் முன் முதலில் நாம் நமது மனதில் எண்ணங்களில் இருந்து அகற்ற முடியுமா என பாருங்கள்.
நிச்சியமாக முடியாது.ஏனெனில் நமது மனதின் ஏதேனும் ஒரு மூலையில் அந்த சாத்தான் இருக் கும்.சிரிக்கும்.
ஆனால் இந்த பதிவிற்கு மேற்கோளாக எடுத்து இருக்கும் கருணாநிதி எவ்வளவு பெரிய ஜாதி பித்தர் தெரியுமா?அவருடைய அரசியல் அரங்கத்தில் யாரையாவது ஜாதியை குறிக்காமல் விமா்சனம் செய்து இருக்கிறாரா?
அவருடைய முதல் தாக்குதலே அடுத்தவா்களுடைய ஜாதியை குறிப்பிட்டு விமா்சனம் செய்வதுதானே அவரது இயல்பு
தேவதாஸ்

jscjohny said...

nanna sonne bro!

UNMAIKAL said...

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?


உலக (காம)விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற்று வருகின்றது.

இதனை உலக விளையாட்டு திருவிழாவாக ஆக்கி ஒவ்வொரு நாட்டையும், தான் இந்த போட்டியை நடத்துவது தன் நாட்டிற்க்கு கௌரவம் என்றும் அதில் பங்கேற்பது ஒவ்வொரு தனிநபருக்கும் மிகப்பெரிய லட்சியமாகவும் விளம்பரம் மூலம் அந்த விளையாட்டை நடத்தும் நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கத்திய (அ)நாகரீக மோகத்தால் பாரம்பரியமிக்க சில நாடுகள் கூட இந்த போட்டியை நடத்த கோடிகளில் செலவு செய்து பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றது என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

ஆனால் இதனை நடத்துவதில் பெருமையவிட காமகளியாட்டங்களாலும், போதை பொருட்களில் விற்பனைமுலம் வரும் வருமானக்களிலும்தான் அந்த விளையாட்டு நிறுவனங்களும், நடத்த துடிக்கும் நாடுகளும் துடியாய் துடிக்கிறது என்று சமீபத்தின் வெளியாகி இருக்கும் இரு புத்தங்கள் மூலம் நமக்கு தெரியவருகின்றது.

முன்னாள் இங்கிலாந்து ஒலிம்பிக் வீரர் தன் பெயரில் அல்லாமல் புனை பெயரில் எழுதி உள்ள தி சீக்ரெட் ஒலிம்பிக் என்ற புத்தகத்திலும், அமெரிக்க பெண் உடற்பயிற்ச்சியாளர் எழுதி வெளியிட்டுள்ள ”பட் ஆஃப்” என்ற புத்தகத்திலும் அங்கு நடக்கும் காமகூத்துக்கள் பற்றி புட்டுபுட்டு வைத்துள்ளது.

அதனை உறுதி செய்யும் வகையில் ஒலிம்பிக் நடத்தும் லண்டன் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் தலா 15 ஆணுறை(காண்டம்) என 150000 காண்டங்கள் விநியோகிக்க இருப்பதாகவும்,

மேலும் தேவைப்பட்டால் ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள மருந்து கடைகளில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever?

Athletes will receive 15 condoms each for the 17-day festival

'I've seen athletes having sex out in the open, getting down and dirty on grass between buildings,' says U.S. women's goalie
Victoria Pendleton among the glamorous female stars offered condoms

Read more: CLICK >>>>> The oh, oh, Ohhh-lympics! As record 150,000 condoms are handed out to a host of super-attractive athletes, could London 2012 be the raunchiest games ever? <<<<

LINK:
இது இந்த முறைதான் புதிது என்று நினைக்கவேண்டாம்,

அனுமதிக்கப்பட்ட இன்னும் சொல்லப்போனால் வலியுறுத்தப்பட்ட விபச்சாரம் 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியின் போதே தொடங்கிவிட்டதாம்.

அப்பொழுது 8500 காண்டமும், 1992 பார்சிலோனோ ஒலிம்பிக்கின் போது 50000 காண்டமும்,

2000 சிட்னி ஒலிம்பிக்கின்போது 70000மும்,

கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது 1 லட்சம் காண்டம்

விநியோகித்து அது ஒரே வாரத்தில் தீர்ந்துவிட்டது என்று பெருமையோடு சொல்லிக்கொண்டு

இப்பொழுது 150000 காண்டம் விநியோகித்துள்ளோம்

தேவைப்பட்டால் மேலும் இலவசமாக தர தயாராக உள்ளோம் என்று பெருமையோடு கூறி ஆர்வப்படுத்தி உள்ளனர். (என்ன ஒரு அதீத நாகரீக மற்றும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி).

இதில் பன்னாட்டு விபச்சாரிகளின் படையெடுப்பு லண்டனை நோக்கி என்று துணை செய்தி வேறு.

இத்தனை பெரிய நோய், மற்றும் சாபம் தங்களை தாக்க வருவதை பெருமையாக கூறும் இவர்கள் தீவிரவாத இயக்க தாக்குதலை பற்றி தினம் தினம் செய்திகளை பரப்பி தங்களை இன்னும் விளம்பரபடுத்தி கொண்டுள்ளனர்.

வருடத்திற்க்கொருமுறை மக்காவில் உலக மக்களை அழைத்து சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் வலியுறுத்துகிறது இஸ்லாம்,

ஆனால் இவர்கள் சமூக, கலாச்சார சீரழிவுகளையும், ஒழுக்க சீர்கேடுகளையும் அதன்மூலம் நோய்களையும் பரப்பி மருத்துவ கம்பெனிகளின் மாஃபியாக்களுக்கு உதவுபவர்களாகவும் இருக்கின்றார்கள். என்ன செய்வார்கள் பாவம் அவர்களின் வேதமே அதனைத்தானே கற்றுத்தருகின்றது.

UNMAIKAL said...

விளையாட்டு அரங்கமா ? (காம) விளையாட்டுக் கூடமா ?
PART 2


சரி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டவர்களின் இதுபோன்ற அனுபவங்களை பார்ப்போம்.

அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியின் கோல் கீப்பர் ஹோப் சோலோ கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே அதிகளவில் செக்ஸ் உறவு கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.

மேலும் இது குறித்து இங்கிலாந்து சைக்கிள் வீராங்கனை விக்டோரியா பென்டில்டன் கூறியதாவது, ஒலிம்பிக் போட்டியின் போது, அங்குள்ள மக்கள் பொது இடத்திலேயே செக்ஸ் உறவு வைத்து கொண்ட சம்பவங்கள் நான் நேரில் பார்த்துள்ளேன்.

கட்டிடங்களுக்கு இடையே உள்ள புல் பகுதிகளில், அசுத்தமான இடங்களில் கூட செக்ஸ் உறவு கொள்கின்றனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போது எனது அறைக்கு செல்லும் போது, யாராவது உள்ளே இருக்கின்றனரா என்பதை அறிய ரகசியமாக உள்ளே நுழைந்தேன். ஆனால் அறையின் உள்ளே யாராவது இருந்தார்களா என்றால், அது ஒலிம்பிக் ரகசியம் என்று கூறி இப்பொழுது புதிதாக கலந்து கொள்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுகிறார்.

சரி பட் ஆஃப் புத்தகத்தில் என்ன உள்ளது என்று கொஞ்சம் பார்ப்போம்,.

ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் பல போட்டியாளர்களும் ஒழக்கமற்ற முறையில் ஜோடி சேருகின்றனர். மதுபானங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் போதைப் பொருள் மற்றும் மதுபானங்கள் தாராளமாக விநியோகிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் கிராமத்திற்குள் நடைபெறும் சம்பவங்களை பார்த்தால் எதை குறிப்பிடுவது என்ற குழப்பம் கூட ஏற்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட பிறகு, போட்டியாளர்களுக்கு தங்களின் ஆசையை தீர்த்து கொள்ள வேறு வழியில்லால் தவிக்கின்றனர்.

இதனால் செக்ஸ் உறவு கொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கின்றனர். வெளி உலகத்தின் கண்களுக்கு மறைவாக கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டியாளர்கள் இருப்பதாக நம்பப்படுவதால்(காட்டப்படுவதால்) ஒலிம்பிக் கிராமத்தினுள் நடைபெறும் அனைத்து சம்பவங்களும் அப்படியே புதைக்கப்படுகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டியாளர்கள் செய்யும் பல மோசமான நடவடிக்கைகள் வெளியே தெரிவதில்லை.

தி சீக்ரெட் ஒலிம்பிக் புத்தகத்தில் உள்ளவற்றை கூறாவிட்டால் அவர்கள் கோபித்து கொள்ள போகிறார்கள் எனவே அதனையும் கொஞ்சம் பார்ப்போம். ஒலிம்பிக் கேம்ஸ் வில்லேஜ்களில் மதுவுக்கு தடை இருப்பது வழக்கம். அதேபோல போதை மாத்திரைகளுக்கும் அனுமதி கிடையாது.

இருந்தாலும் வீரர்கள் விடுவார்களா என்ன... வாட்டர் பாட்டில்களில் நைசாக மதுவை நிரப்பிக் கொண்டு உற்சாகமாக இருப்பார்களாம். அதேபோல போதை மாத்திரைகளும் கூட ரகசியமாக புழங்குவது சகஜமாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லையாம். அதேபோல கண்டிப்பதும் இல்லையாம்.

கேம்ஸ் வில்லேஜ்களில் நடக்கும் அத்தனை விஷயங்களும் அங்கேயே கமுக்கமாக மறைந்து போய் விடுமாம். அங்கு நடந்தது குறித்து யாரும் வெளியில் சொல்லிக் கொள்வதில்லையாம் என்று போகிறது அந்த நூல்.

இந்த நிலையை பார்த்தால் பல நாடுகளில் இருந்தும் விளையாட்டு? போட்டிகளில் பங்கேற்க்கவும், பார்க்கவும் பலரும் செல்கிறார்கள்.

வெறும் கையோடு வந்தால் கூட பரவாயில்லை, மாறாக............... விளையாட்டு வினையாகும் என்பார்கள் அது இதுதானோ?.

எனோ 2000ம் வருடம் ப்ரேசில் நடத்திய கால்பந்து விளையாட்டை விளம்பர படுத்த விபச்சாரிகளை இறக்குமதி செய்ததும்,

பெண்களுக்கு உடை அணியாமல் மார்பு, இடுப்பின் முன், பின் பகுதிகளிள் கால்பந்து படத்தை வரைந்து கடற்கரையில் நிர்வாணமாக கால்பந்து போட்டி நடத்தியதும் இந்த நேரத்தில் நினைவிற்க்கு வந்து தொலைக்கின்றது.

UNMAIKAL said...

150,000 Olympic Condoms (That’s 15 Per Athlete) To Be Handed Out At London 2012

One of the most titillating stories surrounding every Olympics is the insane amount of sex that takes place in the athletes’ village.

Olympians are charged up with hormones (some natural, some unnatural) and tight with tension. Many are looking to let loose before their big event, or at least as soon as it’s over.

They are surrounded by toned, attractive athletes from around the world and they are all living together in tight quarters. It’s not hard to see why so many of them get it on with each other.

A record 150,000 condoms will be delivered to athletes at the 2012 Summer Olympics, in anticipation of record levels of athlete sex.

That equates to a staggering 15 condoms per athlete–a 50 per cent increase over the number that were handed out in Beijing.

Durex has even said that it is prepared to ship in emergency backups if the initial supply runs out.

At the 2000 Sydney Olympics, organizers famously had to place a rush order for 20,000 extra condoms because the initial supply of 70,000 ran out.

Hope Solo, goalkeeper for the US women’s Olympic soccer team, has spoken in the past about all the sex that happens at the Olympics.

“I’ve seen people having sex out in the open, getting down and dirty on grass between buildings,” she said. “I may have snuck a celebrity into my Beijing room without anybody knowing and snuck him back out. But that’s my Olympic secret.”

Many athletes cheat on their spouses at the games, but it doesn’t seem to be a big deal in that culture. They take sort of a “what happens at the Olympics stays at the Olympics” perspective on things.

SOURCE: http://www.manolith.com/2012/07/20/150000-olympic-condoms-thats-15-per-athlete-to-be-handed-out-at-london-2012/

Anonymous said...

தமிழகத்தின் ஆதிக்கச் சாதியினரின் சாதி வெறியை அடக்க எத்தனை பெரியார் வேண்டுமோ .... !!!

ssk said...

சாதி இருக்கிறது என்பானும் உள்ளானேடா - என்று பாரதி தாசன் இடித்து கூறினார்.
இன்று சாதி கட்சிகள் வளர்க்கபடுகிறது. அவர்கள் படித்தவர்களா, என்ன பயன்?
இதன் கொடுமைகள் வெளியே தெரியாது. இது இருக்கும் வரை நாடு வளராது.
ஒரு மனிதன் கீழ் இன்னொருவன் மேல் என்று சொல்ல யார் அனுமதி தந்தது?
அப்படி கடவுள் சொன்னால் அதை ஏன் இந்தியாவுக்கு மட்டும் அளித்தார்.
அப்படி பட்ட கடவுள் என்ன நியாயத்தை தரும். அப்படி பட்ட கடவுள் எதற்கு? என்ன பயன்?
இந்த கேள்விகள் படித்த மனிதரிடம் இல்லாமல் போவதால் இன்றும் இந்த அவலம் தொடர்கிறது.
மிருகங்களிடம் கூட இந்த கீழான குணம் இல்லை. அடி படுபவன் எதிர்த்து விட்டால் இந்த அவலம் நின்று விடும்.
அதனாலே தான் அவனை எழ விடாமல் கீழே தள்ளி கொண்டே இருக்கீறார்கள்.
உலகம் பெரிது. இங்கு எல்லோருக்கும் எல்லாம் உண்டு, அவனவன் வேண்டுவதை உழைத்து எடுத்து கொள்ளலாம்.
இனொருவரை எயித்து சுரண்ட தேவையில்லை.
நமக்கு முன் இருந்த எல்லோருக்கும் எல்லாம் கொடுத்த உலகம் நமக்கு பின் வரும் மக்களுக்கும் எல்லாம் தரும்.
சாதி வேற்றுமைகளை ஒழித்து அனைவரும் சமம் என்ற உணர்வில் இருக்க , மனிதனாக பிறந்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

suvanappiriyan said...

இன்னும் ஆயிரம் பெரியார் வந்தாலும் நாங்கள் மாற மாட்டோம் என்று அடம் பிடிப்பது தமிழனுக்கு அழகா?

Unknown said...

AIT is a complete myth and a method of divide and rule followed by the British.

References:

1.http://timesofindia.indiatimes.com/india/Aryan-Dravidian-divide-a-myth-Study/articleshow/5053274.cms?

2.http://www.hindunet.org/hindu_history/ancient/aryan/aryan_frawley.html

3.http://uwf.edu/lgoel/documents/amythofaryaninvasionsofindia.pdf

By the way I agree with your punishment. Their ration card should be taken back by the government and shouldn't be given anything from govn

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....