Thursday, June 03, 2010

முகில் எழுதுகிறார்...


நேற்று காலைவரை எனக்கு எதுவும் தெரியாது! நான் வலையுலகிற்கு வாடிக்கையாளனுமில்லை! எப்பொழுதாவது வந்துபோவேன்!! எதேச்சையாய் நேற்று நுழைந்ததில்,எல்லாம் படிக்க நேர்ந்தது....

நர்சிம் அவர்களின் பூக்காரி தவிர. என்னிடம் சொல்லி என்னை கோபப்படுத்தவேண்டாம் என்றோ, காயப்படுத்த வேண்டாம் என்றோ, முல்லையும் என்னிடம் அதுவரை பகிர்ந்துகொள்ளவில்லை.ரவியும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

விஷயத்தை முழுவதும் படித்தபின் என் மனைவியிடம் பேச ஆரம்பித்து பிணக்கில் முடித்துக்கொண்டோம்....

ஆனாலும் நர்சிம் என்ன எழுதினாரென்று அப்பவும் எனக்குத் தெரியாது. என்னுடன் படித்து, தங்கி வளர்ந்த 10 வருட நன்பனிடம், இமெயில் மூலம் ஏதும் பெறமுடியுமாவென்று தகவலனுப்பிவிட்டு மீண்டும் வலைப்பதிவில் துழாவினேன். நான் பூக்காரியை கண்டெடுத்த நேரத்தில் நண்பனிடமிருந்து பதில், இதோ.

please ignore it da _ its fixable and he feels sorry about that

do not read all those

பூக்காரியை படிக்கும்போதே என் அர்த்த நாளங்களும் ஆடிப்போயிருந்தன! எத்தனை வசைமொழிகள்? எந்த கணவனுக்கும் என் நிலைமை வரக்கூடாது!! நர்சிம் மணமானவரா எனக்கு தெரியாது,இருந்தாலும் அவரது குடும்பப் பெண்ணை யாரேனும் இப்படி எழுதி அவர் படிக்கும் நிலைமை வேண்டாமென்பதே என் பிராத்தனை.

காரணகாரியங்களை மீறியும் நர்சிம் எழுதிய வார்த்தைகள் என்னை இன்னமும் சுற்றியே வருகின்றன. அவரால் எப்படி ஒரு பெண்ணைப்பற்றி இப்படி எழுதமுடிந்தது? எழுதி இத்தனை பின்னூட்டம் வரும்வரை எப்படி அவரால் ரசிக்கமுடிந்தது? அவரை ஆதரித்து பின்னூட்டமிட்டவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவ்வளவு நேரம் அவரால் ஏன் அந்தப் பெண்ணுக்கும் ஓர் குடும்பமிருக்குமே என யோசிக்கமுடியவில்லை? நாம் மட்டும்தானா ஆம்பிளை என ஏன் யோசிக்க தவறினார்? இப்படி எத்தனையோ கேள்விகள் என்னிடம்.

சரி என்ன செய்யலாம்? அப்போது எனக்கு தோன்றியது இரண்டேவழிகள்.........

1) நேரடியாய் அவரை சென்று வீட்டிலோ / அலுவலிலோ சந்திப்பது
2) சட்டப்படி நடவடிக்கை எடுப்பது
3) என் மனதின் நியாயப்படி நடவடிக்கை எடுப்பது

இதைச்சொல்ல,என் மனைவியோ அவரை வலையுலகிலிருந்து வெளியேறுகிறாராம்... நீங்கள் யாருக்கும் மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்று சொல்லி ஆற்றாமையில் பொங்கிக்கிடந்த என்னை ஆற்றுப்படுத்திவிட்டு அலுவல் கிளம்பியாயிற்று....

நானும் பொறுத்திருந்தேன்....அதுவரை வினவில் வந்ததை நான் படிக்கவேயில்லை!

ஆனாலும் விட்டபாடில்லை, மேன்மேலும் இதுபற்றி பதிவுகள், விமர்சனங்கள், போதாக்குறைக்கு வினவு இவ்விசயத்தில் RAPE என்று கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது, நிறவேற்றுமை, சாதிய உள்ளிழுப்புகள், அவர் பணக்காரர்-இவர் ஏழை, இன்னும் பல.

நர்சிம் ஏனோதானோ என்று எழுதிய மன்னிப்பு பதிவையும் பார்த்தேன், பாய்ந்துவிட்டு பதுங்குகிறாரோ எனவும் யோசித்தேன். அதற்குள் என் நண்பர்கள் சிலரிடமிருந்தும் இதைப்பற்றி விசாரிப்புகள். முல்லையிடமிருந்தும் பல போன் கால்கள், மறுமொழியிடவோ, பதில் பதிவு போடவோ வேண்டாமென்றும், தன்னிடம் சொல்லாமல் எதுவும் செயலில் இறங்கிவிடவேண்டாம் என்ற வேண்டுகோளுடன்.

எனக்கு தெரிந்த சட்டநிபுனர்களிடம் விசாரித்துவிட்டு நேற்று மாலையே அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தேன். முல்லையோ, வலையுலகில் எனக்கு தெரிந்த மற்றும் என்னை தெரிந்த நல்லவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என பார்த்துவிட்டு பிறகு செல்லலாம் என மறுத்துவிட்டாள்.

எல்லாரையும்விட முல்லையும், நானும் என் குடும்பத்தாரும்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக ஒன்றுமறியா நாலரை வயது குழந்தையை கொலைசெய்ய அறிவுறுத்தும் அவர் நண்பர்களை என்ன சொல்ல!

இப்பிரச்சனையை சாதியாக்கியவர்களுக்கு:

என் மனைவியின் கொள்ளுப்பாட்டி சுதந்திரப் போராட்ட தியாகி! நர்சிம் வழியில்?
பதிவிட்ட நாலாம் நாளிரவு மன்னிப்பு கோரியுள்ளார், இதுவரை நாங்கள்?
சொல்லுங்கள் யார் உயர்சாதியென்று?
எத்தனையோ பேர் சொல்லியும் நம்மால் சாதியை ஒழிக்கத்தான் முடியவில்லை, அதன் வரையறைகளையும் கோட்பாடுகளையுமாவது மாற்றிக்கொள்வோமே? உயர் சாதி பற்றுடன் இதில் போராட்டம் நடத்துபவர்களுக்கு சொல்கிறேன், இப்போது நாங்கள்தான் உயர்சாதி, எங்களுக்காக போராடுங்களேன் !!!

அடுத்து பணத்தைப் பற்றியும், நிறத்தைப் பற்றியும் கூட சிலர் எழுதியும் பின்னூட்டமிருந்தும் படித்தேன். குறிப்பாய் குழந்தையை கொல்லவேண்டாமென்ற கார்க்கி (அதாவது கொல்லவேண்டும்), தங்கம் கருப்பு நிறமாவென்று கேட்டிருந்தார். ஆமாம் கார்க்கி சார், என் மனைவி கருப்புந்தான், தங்கமும்தான், அதற்குமேலுந்தான்!

என் மனைவியைப் பற்றி எனக்குத்தெரியும், நர்சிம் பதிவிலும் அவர் நண்பர்கள் பின்னூட்டத்திலும் ஒரு ஆணாய் ஆத்திரப்பட்டேன், கணவனாய் கொதித்தேன், தந்தையாய் அழுதேன்.....

போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!!

என் மனைவி இன்னும் எழுதுவாள், பின்னூட்டமிடுவாள். இனி சற்று எச்சரிக்கையாய், மனிதர்களைப் பற்றி மட்டும்.

ஏனென்றால் நான் அவளைமட்டும் காதலிக்கவில்லை, அவள் எழுத்தையும்தான்.

-முகில்

143 comments:

ரவி said...

பாதிக்கப்பட்ட குழந்தையின் தகப்பனாக, மனைவியின் கணவனாக, எனது தோழனாக முகில் எழுதுகிறார். முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.

குழலி / Kuzhali said...

முகில் உங்கள் உணர்வுகள் புரிகின்றது... கிட்டத்தட்ட இதே மாதிரியான கட்டங்களை ரவியும் தாண்டி வந்திருக்கிறான், நானும் தாண்டி வந்திருக்கிறேன்... அடிபடுபவர்களுக்கு தான் அந்த வலி தெரியும்... கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருங்கள்...

Anonymous said...

என்ன சொல்றதுன்னே தெரியலை முகில்.
Hats off to you

முல்லையின் தோழியாக உங்கள் உணர்வுகள் புரிகிறது.

ஈரோடு கதிர் said...

திரு. முகில் அவர்களின் வலி புரிகிறது...

அவருடைய நிதானத்திற்கு மிகப் பெரியதொரு சல்யூட்!!!!

கவிதா | Kavitha said...

என்னை நீங்கள் காயப்படுத்திய போது என் கணவரும் இப்படி தான் கஷ்டப்பட்டார் ரவி. இதுவரையில் உங்களிடம் சொல்லாத தகவல்.

ரவி said...

அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நர்சிம் said...

முகில்,

உங்களை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இரண்டு நாட்களாக துடித்துக்கொண்டிருக்கிறேன்..

என்னை மன்னியுங்கள் என்று கேட்டாலும் மேம்போக்காகக் கேட்கிறேன் என்று ஆளாளுக்கு அடி அடி என்று அடிக்கிறார்கள்.

முகில், எல்லாவற்றையும் விடமேலாக என் எழுத்தை நேசித்தேன்.

நான் செய்த குற்றத்திற்கு தண்டனையாக இனி எழுதப்போவதே இல்லை.

உங்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். நீங்கள் தண்டித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

பெரிதும் வருந்துகிறேன் முகில்..!

எந்த நடவடிக்கை எடுத்தால் சரி என்று உங்கள் மனதுக்குப் படுகிறதோ அதனைச் செய்யுங்கள்..!

உங்களுடைய பொறுமையான, நிதானமான எழுத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்..!

கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
கார்க்கிபவா said...
This comment has been removed by the author.
நர்சிம் said...

இதுவரை ஒரு இடத்தில் கூட கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை.

ஒரு நொடியில் கோவத்தில் எழுதிவிட்டேன்..நீங்கள் அனைவரும் மறந்தாலும் என்னால் மறக்கவே முடியாது நான் செய்ததை.

பழமைபேசி said...
This comment has been removed by the author.
Bruno said...

/முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.//

ஒரு பெண்ணின் மேல் அவள் கணவருக்கு இருக்கும் அக்கறையை விட வேறு யாருக்கும் இருக்க முடியாது (பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர) என்பதால் இந்த விஷயத்தை இனி திரு.முகில் மட்டுமே பேசுவது தான் சரி என்று நினைக்கிறேன்.

ங்கொய்யா..!! said...

நியாயமான கேள்விகள்


கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

திரு.முகில்,

தங்கள் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது பதிவுலகத்தின் கடமை.

உங்கள் கடிதம் நெகிழ வைக்கிறது!

நடந்த நிகழ்வுகளால்,

மிகுந்த வருத்தத்துடன் இருக்கிறோம்!

- யெஸ்.பாலபாரதி said...

:((((((

வெண்பூ said...

நீங்க‌ள் பெரிய‌ எழுத்தாள‌ரா என்று தெரியாது முகில், ஆனால் எழுத்தில் உங்க‌ளின் வ‌லியும் வேத‌னையும் அப்ப‌ட்ட‌மாக‌ தெரிகிற‌து... ந‌ர்சிம், கார்க்கி ம‌ட்டும‌ல்ல‌ எப்போதோ ந‌ட‌ந்த‌ விச‌ய‌த்திற்கு ர‌வியும் ம‌ன்னிப்பு கேட்ப‌தே அத‌ற்கு சாட்சி...

உங்க‌ளின் நிதான‌த்திற்கு பாராட்டுக‌ள்..

பழமைபேசி said...

இறுக்கமான தருணம் இது.... அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்து செயல்படும்போது வெளிப்படும் உன்னதத்தை உணர்கிறேன்....

முகில் மற்றும் நர்சிம் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இருவருமே தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்பதுவே எம் கோரிக்கை!!

பழமைபேசி said...

இறுக்கமான தருணம் இது.... அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்து செயல்படும்போது வெளிப்படும் உன்னதத்தை உணர்கிறேன்....

முகில் மற்றும் நர்சிம் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இருவருமே தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்பதுவே எம் கோரிக்கை!!

கண்ணா.. said...

---
புருனோ Bruno said...
/முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.//

ஒரு பெண்ணின் மேல் அவள் கணவருக்கு இருக்கும் அக்கறையை விட வேறு யாருக்கும் இருக்க முடியாது (பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர) என்பதால் இந்த விஷயத்தை இனி திரு.முகில் மட்டுமே பேசுவது தான் சரி என்று நினைக்கிறேன்.
----


i too think the same..

well said mugil.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

nandri mugil.. ( tamil font illai.)

nan 2 1/2 natkalaga payanam seythu tamilnadu varuvatharkul mika koduramaga pathivukal velivandhirukkinrana.. :(

thani madalil avarukku en aaruthalaiyum.. raviyin mundhaya pathivil en varuthatthaiyum therivithirundhen..

aanal jathiyahavum innum piravaha vinavu pondra thalathilum nanbarkal endra murayil ezuthiya matra pathivukal mika mika varutham thara thakkathakave irundhathu.. :(



thodarndhu pathivukalai sirappaha thara avarkalukku en vazthukkal..

vasu balaji said...

உங்கள் பொறுமைக்கும் நிதானமாக பிரச்சனையைக் கையாண்டமைக்கும் என் வணக்கங்கள் முகில். இந்த இடுகைக்காக உங்களைப் பாராட்டுவதோடு என் நன்றியும் ரவி சார்.

எல் கே said...

உங்களுக்கு என் பாராட்டுக்கள் முகில். இந்த விசயத்தில் மிக அருமையாக நடந்து இருகிறீர்கள். இனி intha விசயத்தில் வேறு யாரும் தலையிட வேண்டாம்

Iyappan Krishnan said...

வணங்குகிறேன் முகில். வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

நசரேயன் said...

வணங்குகிறேன் முகில்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பாதிக்கப்பட்ட குழந்தையின் தகப்பனாக, மனைவியின் கணவனாக, எனது தோழனாக முகில் எழுதுகிறார். முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.

//

எத்தனை பேரால் இவ்வளவு நிதானமாக கையாளமுடியும் என்று தெரியவில்லை.

இந்த விசயத்தைப் பற்றி இனி திரு.முகில் மட்டுமே பேசுவது அவரது குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்லது.

திரு.முகில் அவர்களுக்கு என் வணக்கங்கள்.

சென்ஷி said...

நன்றி முகில்...

Santhappanசாந்தப்பன் said...

உங்கள் நிதானமான இந்த கடிதம், உணர்ச்சி பூர்வமானது. ‍வணக்கங்கள்!!


பதிவுலகத்தில் அமைதியும், பழையபடி எல்லாம் திரும்ப, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.


*** பிறர் தவறை மன்னித்தால் அது மனித குணம்!! அத்தவறை மறந்து நட்பு கொண்டால் அது தெய்வ குணமாகும்!!! *** - எங்கோ படித்தது!

குசும்பன் said...

//உங்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். நீங்கள் தண்டித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.//

இதுதான் முகில் தாங்கள் எழுதியதுக்கு பலன்,தயவு செய்து இனி மற்றவர்கள் பேசாமல் இருப்பதே முகிலுக்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா said...

நண்பர் திரு.முகில்,

உங்களை என்ன வார்த்தை சொல்லி பாராட்டினாலும் அது வெறும் சம்பிரதாயமாகப் போய்விடும்.ஒன்றும் சொல்லாமல் போவதுதான் உங்கள் உணர்வுக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதை.

Sundararajan P said...

//புருனோ Bruno said...

/முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.//

ஒரு பெண்ணின் மேல் அவள் கணவருக்கு இருக்கும் அக்கறையை விட வேறு யாருக்கும் இருக்க முடியாது (பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர) என்பதால் இந்த விஷயத்தை இனி திரு.முகில் மட்டுமே பேசுவது தான் சரி என்று நினைக்கிறேன்//

வழிமொழிகிறேன்.

ராமலக்ஷ்மி said...

நன்றிகள்.

Jackiesekar said...

ஒரு பெண்ணின் மேல் அவள் கணவருக்கு இருக்கும் அக்கறையை விட வேறு யாருக்கும் இருக்க முடியாது (பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர) என்பதால் இந்த விஷயத்தை இனி திரு.முகில் மட்டுமே பேசுவது தான் சரி என்று நினைக்கிறேன்.//

வரிக்கு விரி வழி மொழிகின்றேன்..

Joseph said...

உங்கள் மன அடைந்துள்ள வேதனையை உணர முடிகிறது. ஆனால் அந்த வேதனையிலும் மிக கண்ணியமான வார்த்தைகளில் உங்கள் உணர்வுகளை புரியும்படி சொல்லிய உங்கள் பெருந்தன்மைக்கு என் சல்யூட்.

தாக்கியவர்கள் ஏற்படுத்திய காயத்தை விட வினவு போன்றவர்கள் ஆதரவு என்ற பெயரில் சாதி, பொருளாதாரம், கேவலமான வார்த்தைகள் என பிரச்சனையை தீர்க்கவோ அல்லது குறைக்கவோ முயலாது அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றதையும் உணர்ந்துள்ள உங்கள் தெளிவுக்கு இன்னுமொரு சல்யூட்.
இதுவும் கடந்து போகட்டும், இனிவருபவை நல்லவையாக இருக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

மின்னுது மின்னல் said...

உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட் முகில்

Anonymous said...

வேதனையில் துடிக்கும் இந்த நிலையிலும் நிதானம் தவறாமல் எழுதி இருக்கும் உங்கள் பண்புக்கு நான் தலை வணங்குகிறேன் முகில்.

உங்களிடமிருந்து இன்று கற்றுக் கொண்ட பாடம் இது.

இந்தச் சூழ்னிலையில் பாதிக்கப்பட்ட நீங்களே முடிவு செய்யுங்கள் நர்சிம்மை என்ன செய்வது என்று. அதுதான் சரியாக இருக்கும்.

சு.சிவக்குமார். said...

வலைத்தளத்திற்கு நான் மிக மிக புதிது.சனிக்கிழமைகளிருந்து எல்லாத் தளங்களிலும் இது பற்றிய விவாதங்கள் மற்றும் பின்னூட்டங்களை பார்த்து ஒரு மிகப் பெரிய அயர்ச்சி மட்டுமே அடைந்திருந்தேன்.ஆனால் உங்களுடைய இந்த பதிவை படித்தப் போதுதான் ஒரு ஆணாக, தந்தையாக, கணவனாக உங்களுடைய உணர்வை நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய நிதனமான அணுகுமுறை என்னை மலைக்கவைக்கிறது. அதற்கு நான் தலைவணங்குகிறேன். ஆனால் மன்னிப்பைபோல் சிறந்த தண்டனை வேறெதுவுமில்லை என்பது என் மிக மிகத் தாழ்மையான அபிப்ராயம். ”மன்னிக்கிறவர்களே மன்னிக்கவும் படுகிறார்கள்” .இது உங்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் எழுதும் மடலாகவே என்னுகிறேன்(உங்களுடைய மின்னஞ்சல் தெரியாததால்).எனவே இது பற்றி எதிர் கருத்துக் கூற உங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. பிழையிருப்பீன் பொருத்தருள்வீர்.

பரிசல்காரன் said...

முகில்..

நர்சிம், கார்க்கி இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். அந்த வகையில் அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.


நண்பர் என்றாலும் அவர்களது தவறை நாங்கள் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
எழுதியபின் இன்றுவரை தாங்கமுடியாம மன அழுத்தத்தில்தான் நர்சிம் இருக்கிறார் என்பதை அறிவேன். அதுவே அவருக்கு தண்டனைதான்.

எழுத்தை அவர் குழந்தைக்கு சமமாக பாவித்தவர் அவர். இன்று அதையே விட்டு விடுகிறேன் என்கிறார். இதைவிட அவரது வருத்தத்தை பதிவு செய்ய வேறு மொழிகள் இல்லை.

இந்தப் பிரச்சினை குறித்து எதிலுமே நான் பின்னூட்டமிடவில்லை. உங்கள் எழுத்து என் மனதையும் தைக்கிறது. ஆகவே எழுதுகிறேன்.

நீங்களும் தோழி முல்லையும் கொண்டுள்ள புரிந்துணர்விற்கு என் அன்பு. எந்தச் சூழலிலும் வலையுலகம் பொருட்டு நீங்கள் பிணக்கு கொள்ள வேண்டாம்.

பப்புவிற்கு என் அன்பு முத்தங்கள்.

Rangan Kandaswamy said...

முகில் உங்கள் வருத்தம் தெரிகிறது.

வினவு போன்றவர்கள் ஏன் சாதி சாயம் பூச வேண்டும்? ( இரட்டை வேடம் என்கிறார் ஜ்யோவ்ராம் சுந்தர் )

சந்தனமுல்லை எழுத்துக்கள் - நிஜமாக அருமை....

மயில் மற்றும் சந்தன முல்லை - என்ன விசயத்தில் நர்சிம்மை நோக வைத்தார்கள் என்று யாரும் சிந்தித்து பார்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. அதற்கும் சட்டப்படி ஏதாவது தீர்வு இருக்கும். ( புனைவு என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் லாயர் தம்பி - உள்குத்து என்பது வேறு... )

நர்சிம் வருத்தம் மிக ஆழமானது. தமிழ் தெரிந்தவர்களுக்கு புரியும்.

இதுவும் கடந்து போகும்.

சுரேகா.. said...

//நண்பர் திரு.முகில்,

உங்களை என்ன வார்த்தை சொல்லி பாராட்டினாலும் அது வெறும் சம்பிரதாயமாகப் போய்விடும்.ஒன்றும் சொல்லாமல் போவதுதான் உங்கள் உணர்வுக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதை.//

அப்துல்லாவை வழி மொழிகிறேன்.

Sabarinathan Arthanari said...

//எத்தனையோ பேர் சொல்லியும் நம்மால் சாதியை ஒழிக்கத்தான் முடியவில்லை, அதன் வரையறைகளையும் கோட்பாடுகளையுமாவது மாற்றிக்கொள்வோமே?//
இது அரசியல் நாடகமாடிய சில பேருக்காவது உறுத்த வேண்டும்.

//மேன்மேலும் இதுபற்றி பதிவுகள், விமர்சனங்கள், போதாக்குறைக்கு வினவு இவ்விசயத்தில் RAPE என்று கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது, நிறவேற்றுமை, சாதிய உள்ளிழுப்புகள், அவர் பணக்காரர்-இவர் ஏழை, இன்னும் பல.//
//போதும் பதிவர்களே, உங்கள் இருதரப்பு நியாங்களுக்கும் மேலாய் இறைவன் இருக்கிறான், இருப்பான். இனியாரும் இதைப்பற்றி எழுதாதீர்கள். எங்களுக்கு நியாயம் வாங்கித்தாருங்கள் ப்ளீஸ். அதுபோதும்!!!//
சட்ட/நியாய ரீதியான நடவடிக்கை எடுக்க மற்ற எல்லோரையும் விலகி இருக்க வழியுருத்தினோம். அது அரசியல் செய்பவர்களின் காதில் எடுபடாமல் போய் விட்டது.

//ஏனென்றால் நான் அவளைமட்டும் காதலிக்கவில்லை, அவள் எழுத்தையும்தான்.//
நன்மையே விளைய பிரார்திக்கிறேன்.

Sabarinathan Arthanari said...

தொடர

Sabarinathan Arthanari said...

//ஒரு பெண்ணின் மேல் அவள் கணவருக்கு இருக்கும் அக்கறையை விட வேறு யாருக்கும் இருக்க முடியாது (பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர) என்பதால் இந்த விஷயத்தை இனி திரு.முகில் மட்டுமே பேசுவது தான் சரி என்று நினைக்கிறேன்//

வழிமொழிகிறேன்.

அக்னி பார்வை said...

முகில் இந்த நேரத்திலும் நிதானம் தவாறாமல் இருப்பதை பார்த்து வணங்குகிறேன்.. இதை பற்றி இன்னும் பேசிக் கொண்டிருப்பதைவிட அனைத்தும் அமைதியாக மாற வேண்டும்...மற்றபடி

புருனோவை வழிமொழிகிறேன்

மங்களூர் சிவா said...

உங்கள் பொறுமைக்கும் நிதானமாக பிரச்சனையைக் கையாண்டமைக்கும் என் வணக்கங்கள் முகில்.

thiagu1973 said...

முகில் அவர்களுக்கு ,

நீங்கள் கேட்ட கேள்விகள் சரியானவை ஒரு தகப்பனாய் , ஒரு கணவனாய் அந்த வலியை உணர்கிறேன்

எண்ணங்கள் 13189034291840215795 said...

முகில் ஒரு அற்புதமான கணவர் மட்டுமின்றி கண்ணியமான மனிதர் என்றும் தெரிகிறது.ஒரு ரோல் மாடலாய் காண்பித்துள்ளீர்கள்..

மன்னிப்பு கேட்டுவிட்ட கார்க்கி நர்சிம் மன்னிக்கப்படணும்..

தவறை மனப்பூர்வமாக ஒருவர் உணரும் பட்சத்தில் தண்டனை எதற்கு.. அது அனைவருக்கும் வலியே..

அபி அப்பா said...

முகில் உங்கள் ஒரு ஒரு வரிக்கும் அழுது கொண்டே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்! உங்கள் வலி எனக்கு நன்றாக புரிகின்றது. :-((

நாடோடி இலக்கியன் said...

உங்க‌ளின் குடும்ப‌த்தாருக்கு ஏற்ப‌ட்ட‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு எந்த‌ ம‌ன்னிப்பும் ஈடாகாது.

//நான் செய்த குற்றத்திற்கு தண்டனையாக இனி எழுதப்போவதே இல்லை.
உங்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். நீங்கள் தண்டித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.//

ந‌ர்சிம்மின் ப‌திலில் இருந்து அவ‌ரும் மிகுந்த‌ ம‌ன‌ உளைச்ச‌லுக்கு ஆளாகியிருப்ப‌து தெரிகிற‌து.அதுவே அவ‌ருக்கு மிக‌ப் பெரிய‌ த‌ண்ட‌னை.மேலும் என்ன‌ செய்ய‌லாமென்ப‌தை நீங்க‌ளே முடிவு செய்வ‌துதான் ச‌ரி.

இனி இந்த‌ விஷ‌ய‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அமையாய் இருப்ப‌தே திரு.முகில் அவ‌ர்க‌ளின் குடுபம்ப‌த்திற்கு நாம் செய்யும் ம‌ரியாதையாக‌ இருக்கும்.

உங்க‌ளின் நிதான‌த்திற்கு த‌லை வ‌ண‌ங்குகிறேன் முகில்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் முகில்,
ஒரு சகோதரனாக இருந்து உங்களின் உணர்வுகளை புரிந்து கொள்கின்றேன். சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை. உங்களைப் போன்ற புரிந்துனர்வுடைய கணவனின் ஆதரவு தான் சகோதரி சந்தன முல்லையின் மனக்காயத்திற்கு தற்போது மருந்தாக இருக்க முடியும். தவறு செய்த நர்சிம்மை என்ன செய்ய வேண்டுமென்பதை முடிவு எடுக்க கூடிய முழு அதிகாரமும் உங்களுக்கும் சகோதரி சந்தனமுல்லை அவர்களுக்கும் உண்டு. நீங்கள் விரும்பி யாரிடமாவது நடவடிக்கை எடுக்க பொறுப்பை ஒப்படைத்தாலும் அதுவும் சரியே. என்னைப் பொறுத்தவரை நர்சிம் தண்டனைப் பெற வேண்டிய ஒரு நபர். அவரைப் போன்றவர்கள் இனிமேலும் எழுத்துலகில் இருக்க கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. உங்கள் இருவரின் மனம் அமைதி பெற ஏக இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

vinthaimanithan said...

மனசு என்னமோ பிசையுற மாதிரி இருக்கு...

காயங்கள் ஆறினாலும் தழும்புகள் மறையாது

நிதானம் தவறாத முகிலுக்கு வந்தனங்கள்... பெயருக்கேற்றாற்போல உயர்ந்து நிற்கிறீர்கள்...

நர்சிம்,கார்க்கியின் மன்னிப்பையும் வருத்தத்தையும் தயைகூர்ந்து யாரும் கொச்சைப்படுத்திவிடவேண்டாம்...

எவ்வளவு பெரிய மனிதனும் சில சந்தர்ப்பங்களில் படுகுழிக்குள் விழுந்துவிடுகிறான்... கைதூக்கிவிடலாமே?

நேசமித்ரன் said...

நன்றி முகில்

ஜெயந்தி said...

//முகில் ஒரு அற்புதமான கணவர் மட்டுமின்றி கண்ணியமான மனிதர் என்றும் தெரிகிறது.ஒரு ரோல் மாடலாய் காண்பித்துள்ளீர்கள்..

மன்னிப்பு கேட்டுவிட்ட கார்க்கி நர்சிம் மன்னிக்கப்படணும்..

தவறை மனப்பூர்வமாக ஒருவர் உணரும் பட்சத்தில் தண்டனை எதற்கு.. அது அனைவருக்கும் வலியே..//
நானும் அப்படியே நினைக்கிறேன்.

Bibiliobibuli said...

முகில்,

கடந்த சில நாட்களாக பெரும்பாலோனோர் வாத்தைகளையே அமிலமாக்கி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், பாதிக்கப்பட்டரான உங்கள் நிதானமும், வார்த்தை கண்ணியமும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

இனிமேல் இப்பிரச்சனையை சம்பந்தப்பட்ட நர்சிம், முகில், சந்தனமுல்லை ஆகியோர் பேசுவதே சாலச்சிறந்தது என்பது என் கருத்து.

smart said...

இருதரப்பும் பொதுயிடத்தில் களங்கம் விளைவித்ததால் இருதரப்பும் பரஸ்பரம் சமாதானத்துடன் மன்னிப்பு கேட்டு கொள்ள வேண்டும். என்பதே சிறப்பு.

மாதவராஜ் said...

முகில்!

ஒவ்வொரு எழுத்திலும் உங்கள் வலியும், வேதனையும் இருக்கிறது. இதுபோன்ற தவறுகள் எவ்வளவு ஆழமான காயங்களை ஏற்படுத்திவிடுகின்றன? கண்கள் கலங்குகின்றன.

ரவி said...

ஸ்மார்ட் பெயருக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டம் ஒன்றை நீக்கியுள்ளேன்.

சந்தனமுல்லை said...

உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!

மங்களூர் சிவா said...

@முல்லை

இந்த திடீர் யோக்கியன் ரவியை நம்பாதீர்கள்.

மங்களூர் சிவா said...

@முல்லை
பைத்தியக்காரன் பதிவில் கவிதாவின் பின்னூட்டம் பார்க்கவும். உங்கள்மீதும் எனக்கு வருத்தம் இருக்கிறது.

superlinks said...

///// தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!///

முல்லை,
சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

உண்மைத்தமிழன் said...

முல்லை மேடம்..!

உங்களுடைய ஒப்புதலுடன்தான் முகில் இதனை எழுதியுள்ளார் என்று நினைத்துத்தான் எங்களது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டோம்..!

முகிலிடம் மன்னிப்பு கேட்பதும், வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்வதும் உங்களிடம் கேட்பது போலவே என்று நினைத்தோம்.

நீங்கள் இப்படிப் பேசுவது இப்போது எங்களுக்கே அதிர்ச்சிதான்..!

இனி இந்த விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் வெளிப்படையாகச் சொன்னால்தான் ஏதாவது செய்ய முடியும்..!

நீங்கள் பதிவு இடாமல், வினவு பதிவில் வெறும் பின்னூட்டம் மட்டுமே போட்டு அமைதியானதால் எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

உங்களுடைய கருத்துக்களை நீங்கள் எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டால் இந்தப் பிரச்சினையை சீக்கிரம் தீர்த்துக் கொள்ளலாம்..!

நன்றி..!

Deepa said...

முல்லை & முகில்!

உங்கள் இருவர் மீதும் மதிப்பு பன்மடங்கு கூடிக் கொண்டே போகிறது. முல்லை இந்தப் பிரச்னையை எதிர் கொண்ட
விதம் பிரமிக்கத் தக்கது. உங்கள் உணர்வுகளுடன் முழுக்க முழுக்க உடன்படுகிறேன். நீங்கள் என்ன் முடிவு எடுத்தாலும் துணையாக நானும் நிற்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

K.MURALI said...

for followup

சீனு said...

/////
உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?
/////

நீங்க சொல்றது கரெக்ட் மேடம். ஆனா பாருங்க, இத கொஞ்ச முன்னாடியே வந்து சொலியிருக்கலாம். பரவாயில்லை.

நல்ல வேளை நான் இப்படி ஏதும் சொல்லலை.

மற்றபடி, 'நீங்கள்' எடுக்கும் முடிவு எதுவானாலும் அதுக்கு என்னாலான சப்போர்ட் உண்டு :)

iniya said...

சென்சிடிவான இடுகையான இதில் மட்டுமாவது கமெண்ட் மாடரேசன் செய்யுங்கள் ரவி.

யாராவது எதையாச்சும் சொல்லி மொத்தத்தையும் கெடுத்து வைப்பதற்குள்...

Bibiliobibuli said...

///தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!//

இந்தப் பதிவு பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்ற முடிவில் தான் கருத்தைப் பதிந்தேன். இப்போது உங்கள் குடும்ப விவகாரத்தில் தலையை நுழைத்ததைப் போல் உணர்கிறேன். மன்னிக்கவும்.

Bibiliobibuli said...

///தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!//

இந்தப் பதிவு பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்ற முடிவில் தான் கருத்தைப் பதிந்தேன். இப்போது உங்கள் குடும்ப விவகாரத்தில் தலையை நுழைத்ததைப் போல் உணர்கிறேன். மன்னிக்கவும்.

Nanditha said...

I'm a regular reader of Thamizmanam for the past 4 years and know all the politics very well. Also I've been watching all the drama since last weekend and it's becoming a non-stop nonsense. I might have read some of their posts but not a regular reader of these 2 people. I visit Thamizmanam almost everyday as I find this as a source to take everyday stress out and also feel like I'm connected to my country and fellow people.

I'm very very hurt and disagree with that so called post as a woman and mother. But I also feel that as a mother, I would think very hard about the kind of example that I'm setting up for my 5 year old daughter as she is watching each & every action of mine. There is a social/moral obligation & responsibility as being a mother as we are the ones that shape them up. Fathers do have some percentage but it is tied with mothers mostly. The first & basic thing that I taught my children was to respect every being for what it is for and not hurt their feelings. Be it a human or animal.

I'm yet to see a man who treats a woman how he would like to be treated (including my husband) and I work with men from all over the world as I work for a multi-national/multi-billionaire company and I live outside India for more than a decade now and live in a country where they claim that there are no gender inequalities. so all of you who call yourself as neutralist, please back off.

I was about to sign up for mombloggers group when it was initiated but I was not able to for some reason. I'm very glad now that I didn't.

In short, it seems to be very biased that everybody is opposing the man who posted it rather than blaming the root cause eventhough I'm very hurt as a woman. In any crime, root cause is considered too and not just the evidences.

In total, we all need to grow up as adults to be good role models for our future generation rather than talking about religion/caste/creed etc. Future world will have only genders and there will not be any sign of religion/caste/creed etc. So prepare your kids to face the global world as I see it now for myself instead of teaching them all this religion/caste/creed.

I have very rarely posted comments anywhere and felt like posting this just because I'm a proud woman & mother of 2 children and want to let the world know that there are women who feel & think differently than my fellow men.

Thanks
Nandita

கண்ணகி said...

முல்லை இதுபோன்ற நிலை இனி யாருக்கும் வராதிருக்கட்டும்......வராதிருக்கட்டும்..

Baskar said...

http://rudhrantamil.blogspot.com/2010/06/blog-post.html

அவள் கத்தியை எடுத்தாள்- அவன் தன் கத்தியை எடுத்தான்- அவளை ஆழமாகக் குத்தினான்- அவளது குடல் வெளிவந்தது- அதை உள்ளே வைத்துத் தைத்துவிட்டால் அவள் சாக மாட்டாள்- அதனாலேயே அவர்கள் இருவரையும் கைக்குலுக்கச் சொல்வோம்! இதுதான் இன்றைய வலையுலகில் நான் பார்க்கும் நடுநிலைவாதம்!

Well said words..!

ஷர்புதீன் said...

இனி நன்மையே நடக்கட்டும்

ங்கொய்யா..!! said...

தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்
//


இது முகில்-காக சொல்லபட்ட வாசகமா??
இல்லை
பின்னுட்ட மிட்ட வர்களுக்கா???

கல்வெட்டு said...

.
பதிவையும் பின்னூட்டங்களையும் பார்த்த பிறகு வருத்தங்களைச் சொல்லக்கூட யோசிக்க வேண்டியுள்ளது :-((

யார் யாருக்காக எழுதுகிறார்கள் அல்லது யார் யாரின் அனுமதியுடன் எந்த கடிதங்களை வெளியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை .

சம்பந்தமில்லாமல் எதையும் சொல்ல பயமாய் இருக்கிறது. இருந்தாலும்...

//செந்தழல் ரவி said...பாதிக்கப்பட்ட குழந்தையின் தகப்பனாக, மனைவியின் கணவனாக, எனது தோழனாக முகில் எழுதுகிறார். முடிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால் மவுனமாயிருங்கள்.//



1.இது இரவிக்கு மட்டுமே.

இரவி நீங்கள் எழுதும் கடிதம் /பதிவுகள் எல்லாவற்றிற்கும் சம்பந்தப்பட்டவரின் அனுமதி உண்டா? கேட்டுச் செய்யுங்கள்.

2.இது நர்சிமிற்கு மட்டுமே.
உங்களுக்கான தண்டனையை யாரும் வழங்கத் தயாரில்லை என்றே தெரிகிறது. நீங்கள் செய்ததை உங்கள் மனைவியிடம் சொல்லி இருவருமாக பாதிக்கப்பட்டவரிடம் நேரில் மன்னிப்பு கேட்க முயற்சிக்கலாம்.


**

3.பாதிக்கப்பட்ட பதிவர் சந்தன‌முல்லைக்கு மட்டும்.
.


இதனால் உங்களுக்கு மற்றும் கணவர், குழந்தை,குடும்பத்தில் உண்டான மன உளைச்சல்கள் புரிந்துகொள்ளக்கூடியவை.

நடந்த இந்த வன்முறைக்கு ஒரு பதிவராக என்னுடைய கண்டனங்களும் வருத்தங்களும்.


.

Ashok D said...

என்ன நினைச்சுட்டு இருக்கீங்க.. எல்லாரும் இங்க..

உங்களுக்கு மட்டுமா.. எல்லாருக்கும் தான் இங்க மன உளச்சல்...

சந்தனமுல்லை, நர்சிம்... உங்கள் மன உளச்சலை தூக்கி Bay of Bengalla போட்டுங்க.. அப்ப தான் எல்லாருக்கும் relief...

mugil நீங்க யாருன்னு தெரியாது.. இருந்தாலும் நீங்க உயர்வானவர்தான்

செந்தழலுக்கு நன்றிங்கண்ணா...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Dear Mukil:

I don't know you personally but I know who you are how you are affected. Time and time alone can heal the wounds.

But let us take this as a lesson and move forward. No ones' life can be derailed by anyone including that fellow Narsim. I also suspect hand in glove operations with the other two: Sivaraman and Suguna Diwakar.

This is joint operation executed by Narsim, Sivaraman, and Suguna...And, Vinavu was taken for a big ride---free of charge...

Please read on...

இதற்க்கு காரணம். இன வெறி. ஜாதி வெறி. நிற வெறி.

வெள்ளையாய் இருப்பவநெல்லாம் யோக்கியனும் இல்லை. கருப்பகா இருப்பவன் எல்லாம் அயோக்கியனும் இல்லை. தோலை பிச்சா எல்லாம் ஒரே கலர் தான். இதற்க்கு இந்த மாதிரி சிந்திப்பதற்கு முதல் காரணம் நிறம். என்ன வெங்காய நிறம். விளக்கை அணைத்தால் எல்லாம் ஒன்று தான். இது இரு பாலுக்கும் பொருந்தும்.

இங்க பாப்பனுங்க கூவு கூவுன்னு கூவுரானுங்க நாங்க எல்லாம் Brown - நிறம் என்று. அதனால் எங்களை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்று. போடா வெண்ணை என்று கூறி இங்க உள்ள வெள்ளைக்காரன்கள் எந்த இந்தியனும் Brown-உம கிடையாது. வெங்காயமும் கிடையாது அப்படின்னு ஆப்பு வச்சுட்டான். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்று -- என்னையும் சேர்த்து தான்.

இந்தியாவில் உள்ள வெள்ளைக் காரனுங்களுக்கு -அதாவது தாங்கள் எல்லாம் வெள்ளைக்காரனுங்க என்ற நினப்புள்ள பாப்பனுங்களுக்கு இது சமர்ப்பணம்:

ஏண்டா கபாலின்னு பேரு வெச்சா ரவுடியா? பொறுக்கியா? கொலைகாரனா?

ஏன் சம்பத், ஸ்ரீனிவாசன், ஜெயேந்திரன், ஆராவமுதன் இவனுங்கல்லாம் ரவுடியா? பொறுக்கியா? கொலைகாரனா? இருக்க கூடாதா? இருக்கிரானுன்களே!

அப்புறம் குப்பன் சுப்பன் என்றால் முட்டாள் தானா? ஏன் ஒரு கொண்டுயும் நோன்டுவும் அம்பியும் முட்டாளா இருக்க்கக்கூடாதா?
அப்புறம் அட்டையாம்பாடியில் இருப்பவன் எல்லாம் முட்டாளா? இல்லை மாம்பலத்திலும் மயிராப்பூரில் இருப்பவன் எல்லாம் அறிவாளியா?

நமது அடிவருடிகள் சொம்பு தூக்கிகள் திருந்தாத வரை அவாளுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

இப்பவாது திருந்துங்க என்று நமது சொம்பு துக்கிகளுக்கு ஒரு வேண்டுகோள். எதிலயும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் கும்பல் தான்.

ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. அதற்க்குக்ம் இதற்கும் ஒரு சம்பந்தம் இல்லை..


அந்த பழமொழி: துஷ்டனைக் கண்டால் தூர விலகு!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Cool Chennai said...

///In short, it seems to be very biased that everybody is opposing the man who posted it rather than blaming the root cause eventhough I'm very hurt as a woman. In any crime, root cause is considered too and not just the evidences.///

====>I am unable to understand what you want to say by the above statement. If explained further as who and what - it would enable us to understand your real intent; and comment further.

ஆட்டையாம்பட்டி அம்பி!?

தமிழ் அமுதன் said...

அன்புள்ள... முகில்& முல்லை


இதுவரை கோபமும் ,வெறுப்பும் மட்டுமே இருந்தது...!

இப்போதுதான் மனம் கசிகிறது..!

உங்கள் நிதானத்திற்க்கு தலை வணங்குகிரேன்...!

ப்ரியன் said...

எந்த தகப்பனுக்கும்/கணவனுக்கும் வரக்கூடதா நிலை.இந்த நிலையிலும் நீங்கள் துணைவியருக்கு துணையாக மனதுக்கு இருப்பதற்கு என் வணக்கங்கள்.

வலை உலக சகாக்களுக்கு சொல்ல நினைப்பது ஒன்றே ஒன்றுதான் , இது முடிவாக இருக்கட்டும்.

அகல்விளக்கு said...

முகில் அவர்களுக்கு

உங்களின் உணர்வுகள் புரிகின்றது அண்ணா... இதுபோன்ற நேரத்தில் உங்களிடமிருக்கும் நிதானம் வியக்க வைத்து, உங்களின் மதிப்பை உயர்த்திவிட்டது. Hats off to you...

இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடவாமிலிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்..

ராம்ஜி_யாஹூ said...

பரிசல் சொன்னது போலவே, நரிசம், கார்கி சார்பில் நானும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

வரும் காலங்களில் இந்த மாதிரி மன வருத்தங்கள் ஏற்படா வண்ணம் இருக்க நாம் எல்லாரும் முயற்சி செய்வோம். uruthi eduppom.

ராம்ஜி_யாஹூ said...

இப்பொழுது நடந்த விஷயம், போலி டோண்டு மூர்த்தி விஷயம் போன்றவற்றை , பதிவர்களின் பெயர்கள் குறிக்காமல் ஒரு நிகழ்வாக, எச்சரிக்கை பாடமாக தமிழ்மண, தமிளிஷ் மற்ற திரட்டிகளில் வைத்தால் (in the home page itself), என்னை போன்ற புதிய வாசகர்கள், பதிவர்களுக்கு உதவியாக இருக்கும்.

விளையாட்டாய் நேரப் போக்கிற்கு எழுதி நிஜ வாழ்வை தொலைக்காமல் இருப்பார்கள்.

வவ்வால் said...

Ravi,
nallenna muyarchi nanmaiyil mudiyattum,amaithi,santham nilavattum to muhil and his family!

ILA (a) இளா said...
This comment has been removed by the author.
முகுந்த்; Amma said...

எத்தனை பேரால் இவ்வளவு நிதானமாக கையாளமுடியும் என்று தெரியவில்லை.

Hats off to you.

Sridhar Narayanan said...

ரவி! இந்த பின்னூட்டம் தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால் நிராகரித்து விடுங்கள். உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு.

இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்களை பார்க்கையில் ஒன்றுதான் தோன்றுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சார்பாக அவர் கணவரோ, வேறு உடன்பிறப்போ வக்காலத்து வாங்கினால் உடனே காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட நாங்கள் ரெடி.

வக்காலத்துக்கு ஆள் வராதவரையில்... ‘என்னாத்த பெருசா... பாத்திருவோம் ஒரு கை’ என்ற மனோபாவம்தான் தெரிந்தது. வருந்ததக்கது. :((

இதையும் தாண்டி சிலர் ட்விட்டரில் அரசியல் செய்ததும், பின்னர் தடயங்களை அழித்ததும் தனி சோகம் :((

மிகத் தெளிவான இடுகை. காலம் எனும் அருமருந்து இந்தக் காயங்களை குணப்படுத்தட்டும்.

வருண் said...

***smart said...
இருதரப்பும் பொதுயிடத்தில் களங்கம் விளைவித்ததால் இருதரப்பும் பரஸ்பரம் சமாதானத்துடன் மன்னிப்பு கேட்டு கொள்ள வேண்டும். என்பதே சிறப்பு.

Thursday, June 03, 2010***

This guy (smart) really gets on in my nerve!!!



***செந்தழல் ரவி said...
ஸ்மார்ட் பெயருக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டம் ஒன்றை நீக்கியுள்ளேன்.

Thursday, June 03, 2010 ***

I really get puzzled by the attitude of this guy called "smart" Such an ANNOYING character! I dont know where ihe is coming from! And he says his name itself "smart" or some nonsense!

பா.ராஜாராம் said...

வணக்கம் முகிலன்!

எனக்கு என் அப்பாவை பார்த்தது/வாசித்தது போல் இருந்தது. வேறு ஒன்னும் சொல்ல தெரியல.

hats off mugilan! i love u.

முல்லை,

//இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!//

நேசிப்பு தன்னில் இருந்து தொடங்குகிறது. பிறகு குடும்பம், பிறகே பக்கத்து வீடு, எதிர் வீடு, மூன்றாவது வீடு.

நீங்கள் மூன்றாவது வீட்டை முன் வைக்கிறீர்கள்.

உங்களை, குடும்பத்தை, பக்கத்து வீட்டை, எதிர் வீட்டை, தாண்டிய மூன்றாவது வீட்டை.

முதன் முறையாக உங்கள் மேல் உள்ள மதிப்பு சரிகிறது முல்லை.

மன்னியுங்கள் முகிலன்,

என் மகளுக்கு சொல்ல வேண்டியதை சொன்னதாக திருப்தியுருகிறேன்.

பா.ராஜாராம் said...

ரவி,

உங்கள் முயற்சிக்கு ஸ்பெசல் நன்றி!

வருண் said...

***சந்தனமுல்லை said...
உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!

Thursday, June 03, 2010***

I am completely lost here! I better keep quiet! from this affair as it seems so delicate and sensitive to touch. Hope everything goes welland the issue gets resolved soon :)

வருண் said...

***In short, it seems to be very biased that everybody is opposing the man who posted it rather than blaming the root cause eventhough I'm very hurt as a woman. In any crime, root cause is considered too and not just the evidences.***

Really? You are giving us a long lecture and the bottomlim=ne is what?

There is reason for murderere to do a murder and thre is reason for rapist to do rape and the murderer and rapist and terrorost are INNOCENT??

Thanks for educating us some bullshit!

வருண் said...

cool chennai: your post irritates instead of causing any "cooling". Get rid of that prefix, it hardly fits you!

வருண் said...

In total, we all need to grow up as adults to be good role models for our future generation rather than talking about religion/caste/creed etc. Future world will have only genders and there will not be any sign of religion/caste/creed etc. ***

Well, you certainly need to grow up. Because we are talking about PAST just passed and the PRESENT. NOt the FUTURE of your dream :)

We will certainly consider your advice in the FUTURE. We dont have to worry about that now! :)

***So prepare your kids to face the global world as I see it now for myself instead of teaching them all this religion/caste/creed.***

Nice lecture! Seems like Godess herself speaks! But completely irrelevant to the PRESENT or the situation and bitterness caused lately in the webworld of ours!

ராஜவம்சம் said...

இதுவரை இது சம்மந்தமாக வந்த எந்தப்பதிவுக்க்ம் நான் பின்னூட்டம் இடவே இல்லை எல்லாவற்றையும் வாசித்தேன்

உங்கள் வரிகளில் வலியும் அதே நேரத்தில் கண்னியமும்.

நான் செய்தது தப்புத்தான் என்னைமன்னியுங்கள் அல்லது தண்டியுங்கள் என்று நரசிம்மன் கேட்கிறார்

மண்னிப்பதும் தண்டிப்பதும் பாதிக்கப்பட்ட முல்லைதான் முடிவெடுக்கவேண்டும்.

நரசிம்மனின் அனாகரிக எழுத்துக்கு என்ன தண்டனய் கொடுத்தாலும் சரியே
மரணதண்டனைத்தவிர்த்து

தண்டிப்பது என்பது அதிகாரவர்கத்தின் செயல் மண்னிப்பது என்பது உயர்குழத்தவரின் செயல்

முல்லை அவரை மண்னிப்பாள் என்பது என் நம்பிக்கை

முல்லை ஒழுக்கத்தால் உயர்குழத்தவள்
முல்லை அன்பாள் உயர்குழத்தவள்
முல்லை பன்பாள் உயர்குழத்தவள்
முல்லை பசத்தால் உயர்குழத்தவள்
என்பதை எல்லாம் மண்னித்தேன் என்ற
ஒறு சொல்லில்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

Mukil, I personally feel that you all should meet and put a full stop to all this! That will solve the problem, and will stop other's unnecessary comments/posts.

நீச்சல்காரன் said...

விரைவில் பிரச்சனைகள் தீர வேண்டிக்கொள்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்க‌ளின் நிதான‌த்திற்கு பாராட்டுக‌ள் முகில்..
உயர் பண்புக்கு பாராட்டுகள்
ஜாதியை தீர்மானிப்பது எது..என சம்பந்தப்பட்டவர்கள் உணரட்டும்

Santhosh said...

முகிலின் பொறுமைக்கு ஒரு சல்யூட்.. உங்க கஷ்டம் புரியுது முகில்..

Cool Chennai சொன்ன ஒவ்வொரு வரியையும் ஆமோதிக்கிறேன்..

எண்ணங்கள் 13189034291840215795 said...

But I also feel that as a mother, I would think very hard about the kind of example that I'm setting up for my 5 year old daughter as she is watching each & every action of mine. There is a social/moral obligation & responsibility as being a mother as we are the ones that shape them up. Fathers do have some percentage but it is tied with mothers mostly. The first & basic thing that I taught my children was to respect every being for what it is for and not hurt their feelings. Be it a human or animal.]]

Well said.. I have same thoughts as urs..

In short, it seems to be very biased that everybody is opposing the man who posted it rather than blaming the root cause eventhough I'm very hurt as a woman. In any crime, root cause is considered too and not just the evidences.]]

very true..

நீங்கள் மூன்றாவது வீட்டை முன் வைக்கிறீர்கள்.

உங்களை, குடும்பத்தை, பக்கத்து வீட்டை, எதிர் வீட்டை, தாண்டிய மூன்றாவது வீட்டை.

முதன் முறையாக உங்கள் மேல் உள்ள மதிப்பு சரிகிறது முல்லை.
]]

------- மிக சரி.. ஒரு இடத்தில் கூட சந்தனமுல்லையோ விஜியோ தாங்கள் செய்த தவறை உணர்ந்ததாக தெரியவில்லை..

நர்சிம் செய்தது மிகப்பெரிய குற்றமென்றாலும் ( ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ), ஆத்திரத்தை தூண்டி விட்டவர்கள்.?

இது அனைவருக்கும் ஒரு பாடம்..கிண்டல் நக்கல் நையாண்டியை உரிமை உள்ளவர்களிடம் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்...

கொலை செய்ய கூட தூண்டும் வகையில் எழுத்துக்கள்... பின் குத்துதே குடையுதே னு ...

தன் சுயத்தை உணரணும் எல்லாருமே...:((((

அப்பப்பா பெண் ரெளடிகளையும் பெண்ணின் காமக்களியாட்டங்களையும் இங்கு வலையில்தான் காண முடியுது...:(((

மற்றவர்களை கிண்டல் அடிக்குமுன் நம் பிள்ளைகளை நினைக்கணும் கூல் சென்னை சொன்னது போல..

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருண் said...

cool chennai: your post irritates instead of causing any "cooling". Get rid of that prefix, it hardly fits you!]]


அன்பின் வருண், கூல் சென்னையின் கருத்துகள் 100% சரி..

அதை புரிந்து கொள்ள அனுபவம் தேவைன்னு நினைக்கிறேன்...


நானும் வெளிநாட்டில் இருப்பதாலும் , வேலைக்கு செல்வதாலும் , இரு குழந்தைக்கு தாய் என்பதாலும் என்னால் புரிய முடியுது...

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்? ]]]


-----

முதலில் வீட்டுக்குள் பேசி முடித்துவிட்டு வாங்கம்மா..

இடுகையிட்ட ரவி , முகில் பாவமோன்னு நினைக்க தோணுது..

மன்னிப்பு கேட்டாலும் தப்பா?..

உங்களிடமும் மனப்பூர்வமா பொதுவிலேயே மன்னிப்பு கேட்டாரே..

வாதம் குணப்படுத்தலாம்.. பிடிவாதத்தை எங்ஙனம்.?

எண்ணங்கள் 13189034291840215795 said...

இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்? ]]]


-----

முதலில் வீட்டுக்குள் பேசி முடித்துவிட்டு வாங்கம்மா..

இடுகையிட்ட ரவி , முகில் பாவமோன்னு நினைக்க தோணுது..

மன்னிப்பு கேட்டாலும் தப்பா?..

உங்களிடமும் மனப்பூர்வமா பொதுவிலேயே மன்னிப்பு கேட்டாரே..

வாதம் குணப்படுத்தலாம்.. பிடிவாதத்தை எங்ஙனம்.?

எண்ணங்கள் 13189034291840215795 said...

2.இது நர்சிமிற்கு மட்டுமே.
நீங்கள் செய்ததை உங்கள் மனைவியிடம் சொல்லி இருவருமாக பாதிக்கப்பட்டவரிடம் நேரில் மன்னிப்பு கேட்க முயற்சிக்கலாம்.]]

அட அவர் மனைவி ஏனுங்க மன்னிப்பு கேட்கணும்.. புதுசா பிரச்னை கிளப்ப வேண்டாமே...

பெண் என்பவள் இங்கு இழிவுபடுத்தப்படுவது போல தோணிற்றி நண்பரே..

Rajan said...

//என்னை மன்னியுங்கள் என்று கேட்டாலும் மேம்போக்காகக் கேட்கிறேன் என்று ஆளாளுக்கு அடி அடி என்று அடிக்கிறார்கள்.
//


ஆயிரம் பேரை காட்டி காரணியாக்குவதில் பிரயோஜனமில்லை நர்சிம். தவறென்று நிஜமாகவே நீங்கள் உணர்ந்திருந்தால் சரி

Rajan said...

//முகில், எல்லாவற்றையும் விடமேலாக என் எழுத்தை நேசித்தேன்.//


எல்லாவற்றையும் என்பதில் மனிதம் என்பதும் மழுங்கி அமிழ்ந்து விட்டதே நர்சிம்

Rajan said...

//நான் செய்த குற்றத்திற்கு தண்டனையாக இனி எழுதப்போவதே இல்லை.//


இது நகைப்புக்குரியதாக உள்ளது. அதுவல்ல நிஜமாகவே இவ்விடயத்தில் கோபப்பட்டவர்கள் கேட்பது, இந்த அறிவிப்பு உங்கள் உடனிருந்து குழி நோண்டியவர்களுக்கும் நெடுனாள் வஞ்சம் கொண்டவர்களுக்கும் வேண்டுமாயின் உள்ளூர குளிர்ச்சியைத் தரலாம் நர்சிம்

Rajan said...

//உங்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். நீங்கள் தண்டித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.//

:-)

Rajan said...

//இதுவரை ஒரு இடத்தில் கூட கண்ணியக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதில்லை. //

அதுவல்ல இங்கு பிரச்சனை.

Rajan said...

//எழுத்தை அவர் குழந்தைக்கு சமமாக பாவித்தவர் அவர். இன்று அதையே விட்டு விடுகிறேன் என்கிறார். இதைவிட அவரது வருத்தத்தை பதிவு செய்ய வேறு மொழிகள் இல்லை.//

அன்பின் பரிசல்,

இது ஏற்புடையது தானா?

Rajan said...

//உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.//


அன்பின் முல்லை,

இவ்விடத்தில் இப்படி கவுண்ட்டர் தேவைதானா? இதை மட்டும் தவிர்த்திருக்கலாம்

எண்ணங்கள் 13189034291840215795 said...

//உங்களை சந்தித்து மன்னிப்புக் கேட்கவேண்டும். நீங்கள் தண்டித்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்.//


இதுக்கும் மேல் ஒரு மனிதர் என்ன சொல்ல முடியும்?..

நர்சிம் ன் கட்டுரை அருவருப்பின் உச்சம் . மறுப்பில்லை.

ஆனால் தப்பு செய்தவர்களும் மன்னிக்கப்பட வாய்ப்பு தர வேண்டும் . அதுவே சிறந்த பண்பாடு..மனிதநேயம்..

Rajan said...

//ஆனால் தப்பு செய்தவர்களும் மன்னிக்கப்பட வாய்ப்பு தர வேண்டும் . அதுவே சிறந்த பண்பாடு..மனிதநேயம்.. //


:-)

வருண் said...

p.d: cc is talking like buddha or Jesus. I like them too. But show me one true christian or buddist who follows their preachings 100%

I do have good philosophy but I am practical rather than philosophical when comes to survival!

சென்ஷி said...

//நேசிப்பு தன்னில் இருந்து தொடங்குகிறது. பிறகு குடும்பம், பிறகே பக்கத்து வீடு, எதிர் வீடு, மூன்றாவது வீடு.

நீங்கள் மூன்றாவது வீட்டை முன் வைக்கிறீர்கள்.

உங்களை, குடும்பத்தை, பக்கத்து வீட்டை, எதிர் வீட்டை, தாண்டிய மூன்றாவது வீட்டை.

முதன் முறையாக உங்கள் மேல் உள்ள மதிப்பு சரிகிறது முல்லை.//

அன்பின் பா.ரா.,

உங்கள் கருத்து உங்களுக்கே முரணாகத் தோன்றவில்லையா தனக்கு வந்த மன உளைச்சல் இனி வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது என்று சந்தனமுல்லை கருதியதில் என்ன சுயநலம் கண்டீர்கள்..?

ஒன்றும் சொல்லத் தோணவில்லை பாரா. தனிமடலிடுகின்றேன் :(

@ முல்லை...

உங்களின் இந்த கருத்தால் உங்கள் மேலிருந்த மதிப்பு கூடுகிறது. நன்றிகளும் வாழ்த்துகளும்...

எண்ணங்கள் 13189034291840215795 said...

p.d: cc is talking like buddha or Jesus.]]

- I dont think so Varun..She is very practical..& she has judged rightly about the problem..on both sides..

I like them too. But show me one true christian or buddist who follows their preachings 100%

Nobody is perfect.. including you & me..Isn't it?..

எல் கே said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

பின்னூட்டங்களை பெற

dheepan said...

அவங்களே எதுக்குடா மன்னிப்பு கேட்கிறீங்க எண்டு கேட்கிறாங்க..இதெல்லாம் உங்களுக்கு தேவையா ...இனிமே இந்த problem சம்மந்தமா எதாவது பதிவு வந்தா..அத ignore பண்றது நல்லது எல்லாருக்கும்..யாருக்கு problem இருக்கோ அவங்க அதுக்கு வழி பண்ணட்டும்....தேவை இல்லாம நிறைய பேரோட டைம் waste ஆகுறது தான் மிச்சம்..have fun..

எண்ணங்கள் 13189034291840215795 said...

[[please let us leave the issue to them. let them decide what they want to do]]

Then , shldn't hv posted in public..

If it comes to public , have to face the comments/thoughts/ideas from public too..


Better both parties had discussed this privately..

[[its my humble request]]

Done..:)

Comments can be moderated too..

எண்ணங்கள் 13189034291840215795 said...

வால்பையன் said...

பின்னூட்டங்களை பெற
]]


:)

You are right..

வால்பையன் said...

//புன்னகை தேசம். said...

வால்பையன் said...

பின்னூட்டங்களை பெற
]]


:)

You are right..//


வேலை அதிகமா இருக்கு!
பிறகு விரிவா பேசலாம்!

Rangan Kandaswamy said...

//உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்! //

சந்தனமுல்லை தான் போட்ட காமன்ட்டால் பாதிக்கபடிருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறார். அது தான உண்மை. தூண்டியவர்கள் பட்டிருக்கிறார்கள். சமரசம் வேண்டும்! இருவரும் ( சந்தனமுல்லை, நர்சிம்) மன்னிப்பு பொதுவில் கேட்டுக்கொள்ளுங்கள்.

மயிலுக்கு மன்னிப்பு இல்லை.

vasan said...

சில‌ பின்னோட்ட‌ங்க‌ள், `எலி,பூனை,அப்ப‌க்க‌தை'ஐ
நினைவூட்டுகின்றன. கூடக் கொறையா அவுங்க‌ளே
ச‌ரி செய்து கொள்ள‌லாம். அரைகுறையாய் ந‌டுவில்
நுழைப‌வ‌ர்க‌ள், ந‌ல்ல‌து செய்வாதாக‌ நினைத்து,
அறியாம‌லே சூட்டை த‌ணிய‌விட‌ மாட்டார்க‌ள்.
ம‌ன்னிப்ப‌வ‌ன் ம‌னித‌ன்,
ம‌ன்னிப்பு கேட்ப‌வ‌ன் மாம‌னித‌ன்.
இதில் ம‌ட்டும் அது த‌லை கீழாய்.
'ம‌ற‌ப்போம்' ம‌றுப‌டியும் கிள‌றாம‌ல்.

ஆல் இன் ஆல் அழகு ராஜா said...

“உங்களில் ஒரு பாவம் செய்யாதவன் இந்தப் பெண்மேல் முதல் கல்லை எறியட்டும்…”

இவர்கள் கல் மட்டும் எறிவர்.

உங்களுடைய பொறுமையான, நிதானமான எழுத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள்..!

Haiti said...

http://pitchaipathiram.blogspot.com/2010/06/1.html
//சாருவை அதிகமாக வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரை பிடித்து தொலைக்கிறது.
என்ன செய்ய ?

ஏங்க ரவி,
ஒங்க நண்பி பேர் போடாம ஒருத்தர் 'புனைவு'ங்கற பேர்ல எழுதின வக்கிரத்துக்கு எல்லாரும் பதறுறீங்க..ஆனா இந்த ஆளு சாரு பேரப் போட்டே அதுக்கு கொஞ்சமும் கொறைவில்லாத வக்கிரத்தோட எழுதி இருக்காரு (அல்லது எழுதினவர உற்சாகமா 'நல்லா எழுதுடா'ங்கறாரு..)பதற வேணாம்யா ..சும்மாவாவது வாய மூடிக்கிட்டு போலாம்ல..இங்க வந்து 'எழுத்து புடிக்கிது' ந்னு சொல்றீங்க..

நீங்களும் ஒங்க நியாய,நேர்ம மசிருகளும்...

JM Fan.

மதார் said...

//வக்காலத்துக்கு ஆள் வராதவரையில்... ‘என்னாத்த பெருசா... பாத்திருவோம் ஒரு கை’ என்ற மனோபாவம்தான் தெரிந்தது. வருந்ததக்கது. :((
//

its true , the lines very close to me . once i passed the same .


"வாய்ல தேன் ஒழுகுற மாதிரி இனிக்க இனிக்க பேசாத "
எந்த ஊரு வழக்கு மொழி என்று தெரியல . ஆனால் பதிவுகளிலும் , பின்னூட்டங்களிலும் மட்டும் தெரியும் வார்த்தைகளும் , யோக்கியத்தனங்களும் நம்பி இனி வருபவர்கள் ஏமாந்து விட வேணாம் . முன்னம் ஏமாந்தவங்களை ஒன்னும் பண்ண முடியாது . எழுத்தில் மட்டும் பெரும்பாலும் தெரியும் இவர்களின் நேர்மை நிஜ வாழ்க்கையில் ????????????????? ஆண்டவனுக்கே வெளிச்சம் . பெண்ணாக இருந்து புதுசா எழுத வரீங்களா ? மின்னஞ்சல் அரட்டைகள் வேண்டாம் . அப்புறம் பல கேள்விகள் வரும் . ரூம் போட்டு யோசிப்பாங்க போல .
நானும் எனக்கு தெரிஞ்ச வரை சமந்தப்பட்ட பதிவுகளை நான் படித்திராவிட்டாலும் வரும் சில ஆதரவுகள் , எதிர்ப்புகள் படிக்க முடிஞ்சது . இங்க ஆதரவுக்குரல் குடுக்கும் பலரின் முகங்கள் நிஜமானவையா ? எல்லோருக்கும் ஒரே நியாயம் சொல்வார்களா ? வார்த்தைகளில்தான் எவ்வளவு வலிகள் படிக்குற எல்லாருக்கும் கண்டிப்பா கண்ணீர் வரும் . பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் முதலைக்கண்ணீர் வடித்து மத்தவங்களை ஏமாற்ற வேண்டாம் . சிலரின் பின்னூட்டங்கள் பார்க்கும்போது ............ சத்தம் போட்டு சொல்லணும் போல இருக்கு , இந்த முகங்களும் வார்த்தைகளும் , அதிலிருக்கும் வலிகளும் நிஜங்கள் அல்ல என்று . இந்த நாடகத்தனங்களை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு உருப்படியா ஏதாவது எழுதுங்க . கோழி கிண்டுன குப்பை மாதிரி சிதறிப்போய் ............... கடையை இதோட மூடுங்க . சம்மந்தப்பட்டவங்க பேசி தீர்த்துக்கட்டும் .

மதார் said...

//வக்காலத்துக்கு ஆள் வராதவரையில்... ‘என்னாத்த பெருசா... பாத்திருவோம் ஒரு கை’ என்ற மனோபாவம்தான் தெரிந்தது. வருந்ததக்கது. :((
//

its true , the lines very close to me . once i passed the same .


"வாய்ல தேன் ஒழுகுற மாதிரி இனிக்க இனிக்க பேசாத "
எந்த ஊரு வழக்கு மொழி என்று தெரியல . ஆனால் பதிவுகளிலும் , பின்னூட்டங்களிலும் மட்டும் தெரியும் வார்த்தைகளும் , யோக்கியத்தனங்களும் நம்பி இனி வருபவர்கள் ஏமாந்து விட வேணாம் . முன்னம் ஏமாந்தவங்களை ஒன்னும் பண்ண முடியாது . எழுத்தில் மட்டும் பெரும்பாலும் தெரியும் இவர்களின் நேர்மை நிஜ வாழ்க்கையில் ????????????????? ஆண்டவனுக்கே வெளிச்சம் . பெண்ணாக இருந்து புதுசா எழுத வரீங்களா ? மின்னஞ்சல் அரட்டைகள் வேண்டாம் . அப்புறம் பல கேள்விகள் வரும் . ரூம் போட்டு யோசிப்பாங்க போல .
நானும் எனக்கு தெரிஞ்ச வரை சமந்தப்பட்ட பதிவுகளை நான் படித்திராவிட்டாலும் வரும் சில ஆதரவுகள் , எதிர்ப்புகள் படிக்க முடிஞ்சது . இங்க ஆதரவுக்குரல் குடுக்கும் பலரின் முகங்கள் நிஜமானவையா ? எல்லோருக்கும் ஒரே நியாயம் சொல்வார்களா ? வார்த்தைகளில்தான் எவ்வளவு வலிகள் படிக்குற எல்லாருக்கும் கண்டிப்பா கண்ணீர் வரும் . பின்னூட்டங்களிலும் பதிவுகளிலும் முதலைக்கண்ணீர் வடித்து மத்தவங்களை ஏமாற்ற வேண்டாம் . சிலரின் பின்னூட்டங்கள் பார்க்கும்போது ............ சத்தம் போட்டு சொல்லணும் போல இருக்கு , இந்த முகங்களும் வார்த்தைகளும் , அதிலிருக்கும் வலிகளும் நிஜங்கள் அல்ல என்று . இந்த நாடகத்தனங்களை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு உருப்படியா ஏதாவது எழுதுங்க . கோழி கிண்டுன குப்பை மாதிரி சிதறிப்போய் ............... கடையை இதோட மூடுங்க . சம்மந்தப்பட்டவங்க பேசி தீர்த்துக்கட்டும் .

Unknown said...

நர்சிம்மும்,கார்க்கியும் செய்தது மிகக் கொடுமையான விசயம்,ஏற்றுக்கொள்ளப்படவே முடியாதது.அவர்கள் பண்ணிய குற்றத்திற்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்யும் இந் நேரத்தில் என் மனதில் சில கேள்விகள் உங்களுக்காக மட்டுமல்ல சந்தன முல்லை,மற்ற பதிவர்களுக்காகவும்:





1) நாம ஒருத்தரை ஒருத்தர் அவதூறு செய்வதை பல நாட்களாக பார்த்து வருகிறோம்.எதற்கும் நாம் நம் கண்டனங்களைத் தெரிவிப்பதில்லை. இதற்கு முன்பு சாரு நிவேதிதா,ஜெயமோகன் குடும்பத்தில் சில பேர் தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு காரணம் ஜெயமோகன்தான் என்பது முதற் கொண்டு இப்போது வரை வரும் கடுமையான அவதூறுகளை நாம் கண்டு கொள்வ‌தில்லை. ஏனென்றால் அது இரு இலக்கியவாதிகளுக்குள் இடைப்பட்ட சண்டை.



2) கொஞ்ச நாட்களுக்கு முன்பு லீனா மணிமேகலை எழுதிய கவிதைக்கு,வினவு மிகவும் கேவலமாக எதிர்வினை செய்திருந்தது.தங்களுடைய பதிவில் மட்டுமல்லாமல் பொது கூட்டத்திலும்.இப்போது நர்சிம்,சந்தனமுல்லையை அவமதித்ததை விட அல்லது அதே அளவுக்கு அவதூறு புரிந்திருந்தது. அவரும் ஒரு பெண்தான்,அவருக்கும் ஒரு கணவர் இருக்கிறார்.உங்களை போலவே அவரும் மன உளைச்சலை அடைந்திருப்பார். உங்களுக்காவது இத்தனை பேர் ஆதரிக்கவும்/ஆறுதல் சொல்லவும் இருக்கிறார்கள்,அவருக்கு?.அப்போதே இதை நீங்கள் கண்டித்திருந்தால் இப்போது இந்தப் பிரச்சனை உங்களுக்கு வந்திருக்காது.இப்போது உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், மொத்த வலையுலகமே உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள்தான் இப்போது தமிழ் பட கதாநாயகி போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.சிலர் உங்களுக்கு தாமதமாக சப்போர்ட் செய்தார்கள் என்று குற்றம் வேறு சாட்டுகிறீர்கள்.



3) இதைவிட கொடுமையான விசயம்,இதற்கு முன்பு அதே தப்பு பண்ணிய வினவையே,உங்கள் பிரச்சனைக்கு அவர்கள் ஓடி வந்தவுடன் அவர்களைப் பாராட்டவும் செய்கிறீர்கள்.அதுவும், நர்சிம் உங்களை கேவலப்படுத்தியது போன்றே இப்போதும் அவர்கள் பயன்படுத்திய வன்புணர்ச்சி,சாதி எதுவும் உங்களுக்கு தப்பாகத் தெரியவில்லை.நாளை வேறு யாராவது ஒருவர் உங்களைப் பற்றி தவறாகப் பதிவிட்டால்,அப்போதும் “பூக்காரி”யை விட இந்தப் பதிவு ஒன்றும் என்னை பாதித்துவிடவில்லை என்று விட்டு விடுவீர்களா!



4) நர்சிம் பண்ணிய தவறுக்கு வினவு கொடுக்க நினைத்த தண்டனையே,அவரை தமிழ்மணத்திலிருந்து தூக்க வேண்டும் என்பதுதான்.இப்போது அவர் இனிமேல் எழுதவே போவதில்லை என்று தனக்குத்தானே அதை விட பெரிய தண்டனையும் கொடுத்திருக்கிறார்.உங்களிடம் மனப்பூர்வமாக அவருடைய தளத்தில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.



5) உங்கள் கணவரிடம் நர்சிம் ரவியின் தளத்தில் மன்னிப்பு கேட்டதற்கான காரணம்,உங்களைப் போலவே அவரும் மன உளைச்சலை அடைந்திருப்பார் என்பதாகத்தான் இருக்க முடியும்.அதற்கும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை அதற்கு காரணம் ஈகோ என்கிறீர்கள்.



6) இந்த உலகத்தில இருக்கக் கூடிய மிகப் பெரிய தண்டனை 'நாம் மனப்பூர்வமாக ஒருவரிடம் மன்னிப்பு கேட்கும் போது அதை அவர் ஏற்காமல் வெறும் 'நடிப்பு' என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும்'. அதனால் என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்க நர்சிம்மிற்கு ஏற்கெனவே தண்டனையும் கொடுத்து விட்டீர்கள்.



7) இதற்கு மேல் நர்சிம் என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.உங்களிடம் மன்னிப்பு கேட்டாயிற்று,உங்கள் கணவரிடமும் கேட்டாயிற்று. இதற்கு மேல் எழுதவும் போவதில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் இப்போது நீங்கள் அடம் பிடிப்பதுதான் சரியாகத் தோணவில்லை.விருமாண்டியில் கமல் சொல்வதுதான் ஞாபகத்திற்கு வருகிறது 'மன்னிக்கிறவன் மனுஷன்;மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன்'

கிருஷ்ண மூர்த்தி S said...

பின்னூட்டங்களில் என்ன சொல்லப் படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காகத் தான் என்றாலும் பழமைபெசியின் வார்த்தைகளில்

/இறுக்கமான தருணம் இது.... அடுத்தவர் உணர்வுகளை உணர்ந்து செயல்படும்போது வெளிப்படும் உன்னதத்தை உணர்கிறேன்..../

நானும்..!

தவறை உணருகிறவர்கள் பாக்கியவான்கள்! செய்த தவறில் இருந்து நல்ல பாடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கிறது!

அடுத்தவர்கள் உணர்வுகள் காயப்பட்டதை உணர்ந்து மன்னிப்பைக் கோருகிறவர்கள் பாக்கியவான்கள்! அவர்களிடம் மனிதம் இன்னமும் பக்குவப்பட்டு உயிர்க்கும் என்பதற்கு அது அடையாளம்!

Jerry Eshananda said...

வணக்கம் முகில்,
படிக்கும் போதே கதறி அழுது,துடிக்கச்செய்யும் உங்கள் கடிதத்தை இப்பதிவின் வழியாக படிக்க நேரிட்டதை,கடந்த ஒரு வாரமாக நான் கடந்து வந்த வேதனையின் உச்சமாக உணர்கிறேன்.யார் மனசும்,"அறியாமல் " கூட காயம் பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்தால் தான் யாருடைய பதிவிற்கும்,பின்னூட்டமோ,வோட்டளிப்போ செய்யாமல்,கனத்த இதயத்துடன் கடந்து வந்தேன்.இப்போது உங்களை ஆற்றுப்படுத்தவும்,தேறுதல் செய்யவும் வேண்டி,உங்களுக்கும்,தங்கை முல்லைக்கும் தோள் கொடுக்க ஒரு தோழன் "மதுரையில்" இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளவே இந்த பின்னூட்டம்.

Unknown said...

பார்பன ஆணாதிக்கவாதிகளை விஷம் கொடுத்து , கத்தியால் குத்தி , தூக்குல போட்டு, அப்புறம் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு , அப்புறம் பெட்ரோல் ஊத்தி கொளுத்தி ........... மன்னிப்பு கேக்குரங்கலம்.

விடாதிங்க! வினவும், துப்பு எச்பெர்ட் மதவரசும் இருக்கையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் இந்த ஆணாதிக்க வாதிகளை. ஸ்டார்ட் மூஜிக்.....

ஓஹ்ஹ்ஹ்ஹ .... செந்தழல் ரவியையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

ராஜ நடராஜன் said...

மனதை நெருடிய எழுத்துக்கள்.ஒரு குடும்பஸ்தனின் புரிதலுக்கு மரியாதை!

நிலவகன் said...

இனி எதாவ்து அறிக்கை விட வேண்டும் என்றால் முதலில் உங்கள் மனைவியிடம் அனுமதி பெற்று அறிக்கை விட வேண்டும். அநியாயமாக உங்கள் அறிக்ககிக்கு ஆறுதல் சொல்லப்போய் அப்பாவிகள் அடிபடப் போகிறார்கள் உங்கள் மனைவியால்

Kaakam said...

@ dheepan

Well Said !!

அவங்களே எதுக்குடா மன்னிப்பு கேட்கிறீங்க எண்டு கேட்கிறாங்க..இதெல்லாம் உங்களுக்கு தேவையா ...இனிமே இந்த problem சம்மந்தமா எதாவது பதிவு வந்தா..அத ignore பண்றது நல்லது எல்லாருக்கும்..யாருக்கு problem இருக்கோ அவங்க அதுக்கு வழி பண்ணட்டும்....தேவை இல்லாம நிறைய பேரோட டைம் waste ஆகுறது தான் மிச்சம்..have fun..

ரவி said...

//மயிலுக்கு மன்னிப்பு இல்லை//

ஏன்யா ஏன் ?

ஓ ஒருவேளை அவங்க தவறேதும் செய்யலைங்கற அர்த்தத்தில் சொல்றீங்களா

Unknown said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

//சந்தனமுல்லை said...
உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

//

ரைட்டு! இனி எங்கேயும் இது சம்மந்தமாக பின்னூட்டம் போடபோவது இல்லீங்கோ!

அண்ணே பைத்தியக்காரன், பின்னூட்டம் ஏன் டா போட குசும்பான்னு திட்டாதீங்க:)))

Anonymous said...

//மயிலுக்கு மன்னிப்பு இல்லை//

ஏன்யா ஏன் ?

ஓ ஒருவேளை அவங்க தவறேதும் செய்யலைங்கற அர்த்தத்தில் சொல்றீங்களா//

ரவி.... ?

:)

Anonymous said...

மயிலுக்கு மன்னிப்பு இல்லை.

யாருங்க அது எனக்கு மன்னிப்பு தரது?

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

வார்த்தைகளில் நிதானமும் ,ஆபாசமான அருவருக்கதக்க வார்த்தைகளை பதிவுகளில் பயன்படுத்தாமல் இருப்பதே பதிவர்களுக்கு நல்லது. நம் இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிலை போய் தனிமனித தாக்குதல் நடப்பது ஆரோக்கியமானது அல்ல

Rangan Kandaswamy said...

//யாருங்க அது எனக்கு மன்னிப்பு தரது? யாருங்க அது எனக்கு மன்னிப்பு தரது?//

Correct, not needed.

Prathap Kumar S. said...

ஒர சென்சிட்டிவான விசயத்தை இவ்ளோ நாசுக்காக கையாண்டு முகில் சார்...
U r a gentleman....

shrek said...

how childish mullai's comment(here)is.
//கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்//
so you are saying that mukhil did not suffer the pain? read mukhil post once again you will know how disturbed he is because of all this. don't you think he deserves this comforting comments and courteous apologies?

why can't you take this as, soothing words (only for mukhil) for the problems he (mukhil) went through. (hope you won't come arguing that you suffered more than mukhil did)

//முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்? //
hello, madam, that is for mukhil's patience, for his understanding, for keeping his cool and importantly his sensibility.

people said comforting words in your blog too (thats for you)
but this is for mukhil, alright.

if you wanna fight your battle on your own and don't want mukhil to bat for you, thats fine.
//தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!//
same way, you too don't interfere with his mouring and us comforting him.

we didn't expect such a response from you. that is very insulting.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....