என் பெயரை தாங்கி வரும் ஆபாச பின்னூட்டங்கள் குறித்து

இன்று காலையில் துவங்கி பல பதிவுகளிலும் அனானிமஸ் பின்னூட்டமாக ஒரு ஆபாத தளத்தின் சுட்டியுடன் ஒரு பின்னூட்டம் பேஸ்ட் செய்யப்படுகிறது.
மஜா மல்லிகாத்தனமான சுட்டி ஒன்றுடன், என்னுடைய பெயரை எழுதி..
நான் பல ஆண்டுகளால இணையத்தில் செந்தழல் ரவி என்ற பெயரில் மொக்கை போட்டுவருவதை தவிர நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.
ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.
எனக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு தகறாறு என்று எதுவும் இருந்துவிடப்போவதில்லை. என்னுடைய கருத்துக்கள் தான் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அது எது எது என்று பின்னூட்டத்தில் சுட்டினால் அதனை உடனே திருத்திக்கொள்ள முடியாவிட்டாலும் முயற்சியாவது செய்கிறேன்.
ஸ்மார்ட் என்பவரும் இதனை தன் பெயரிலேயே செய்துவருகிறார். திருவாளர் நோ என்பவருக்கும் என்னுடைய பெயரினை எழுதவில்லை என்றால் உறக்கம் வராத நிலை.
அப்படி இல்லை என்றால். !!!
முதலில் கீழே உள்ள சுட்டியை படிக்கவும்.
http://dondu.blogspot.com/2009/12/20122009.html
போலி டோண்டு என்பவர் இணையத்தில் இது போல ஆபாசமாக பின்னூட்டம் ஆரம்பித்து, பதிவு ஆரம்பித்து, பிறகு காவல் நிலையத்துக்கு செல்லவேண்டியதாக ஆயிற்று. தொழில் நுட்பத்தில் கில்லாடியான அவர் டவுசரே கிழிந்தபிறகு, முந்தா நாள் பதிவுலகை பார்க்க ஆரம்பித்த நீங்கள் எம்மாத்திரம் ?
ஸ்கைப், கூகிள், வேர்ட் ப்ரஸ், யாஹூ என்று அனைத்து இணைய தளங்களும் சென்னை சைபர் க்ரைம் பிரிவினர் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு 48 மணி நேரத்தில் பதில் அனுப்பிவிடுகிறார்கள். ஏர்டெல், வோடாபோன், மற்றும் இணைய இணைப்பை தரும் லோக்கல் நிறுவனங்களை சொல்லவே வேண்டாம்.
அதில் உங்கள் ஜாதகமே கிடைத்துவிடுகிறது காவல்துறையினருக்கு.
உங்கள் கெட்டநேரம் அதிகமாக இருந்தால், நான் புகார் கொடுக்கும் நேரத்தில் வரும் தாம்பரத்தில் தாலியறுத்த கேஸும் உங்கள் தலையில் விடிய வாய்ப்பு உண்டு. ஆகவே ஜாக்கிரதை. நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
Comments
இப்போதும் சில நண்பர்களில் பெயரில் பின்னூட்டம் போடப்படுவதாக அறிகிறேன்! குறிப்பாக வோர்ட் பிரஸில்...
யார் என்று கண்டுபிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
மேலும் அந்த தளத்தில் பல பதிவர்களுடைய பின்னூட்டங்களும் காணக்கிடக்கின்றன, அதுவும் போலியாகயிருக்குமோ என சந்தேகம் எழுகிறது. எனவே இது குறித்து பதிவர்கள்-வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தோழமையுடன்
வினவு
/
:::::::))))))
அன்பாய் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளீர்கள். இனியாவது அவர் திருந்தட்டும்.
வினவுக்கு சொல்லி ஒரு அதிரடி பதிவுக்கு ஏற்பாடு செய்யுங்க.
ஒரு பயலும் நமக்கு எதிரா கருத்து சொல்லக்கூடாது.
இதற்கு கடுமையான கண்டனங்கள் .
This sentence is openly prove that your disability. As I am the blogger from past three months, I do commented on your posts as the way which you criticize other.
Frankly speaking there is nothing to write illegal against you. Here by I request you to provide me the suspected sentences against you.
And I put forth my strong condemnation on this post.
Thanks
L.Smart
ஸ்மார்ட்டாக முடிவை மட்டுமாவதுயெடுங்கள்
ஒரு கருத்து சொல்வேன். ஆறுமாதத்தில் அது தவறு என்று உணர்ந்தால் மாற்றிக்கொள்வேன். அவ்வளவு ப்ளக்ஸிபிள் ஆன ஆள் நான்.
//
இது சூப்பர் சார்.. எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை..
கலக்குங்க..
( நாம குஷ்பு பிரச்சனைய பேசி 2 மாசம் ஆச்சு...நான் இன்னும் நான்கு மாதம் பொறுத்து இருக்கேறேன்.. பை..பை.. சார்..)
எங்கே எல்லோரும் சொல்லுங்க.... நவீன நாட்டமை ரவி அண்ணன் வாழ்க!
பன்னாடைகள் ஸ்மார்ட் மற்றும் நோ ஒழிக!
காட்டுவீங்கனு நினைக்கிறேன் -வாழ்த்துக்கள்
/////
நோ நோ என்கிறேன். ஸ்மார்ட்டாக முடிவெடுத்துக்கொள்ளுங்கள்.
//////////////
ஹா ஹா உள்குத்து? வெளிகுத்து?
அவங்கதான் போலிரவின்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?>
என்னடி மீனாட்சி.நீ சொன்னது என்னாச்சு. நேத்தோடு நீ சொன்ன வார்த்தை காத்தோட போயாச்சு
//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//
6 மாசத்துல மாறுவதெல்லாம் இருக்கட்டும்.. 6 செண்டி மீட்டர்ல இருக்கும் மாற்றத்தை கொஞ்சம் கவனிங்க ராசா.. :)
எந்த நடிகை படத்தையும் காட்டக்கூடாது என்று டிவியில் சினிமாவில் சென்று கண்டனம் செய்வீர்களா ?
ஏன் பதிவு உலகில் இருப்பவர்கள் நடிகைகள் படம் போடக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது ?
அப்போ அடுத்த நாள் தெரிங்சா மாத்த மாட்டீங்களா?
பக்கத்துல போய்டீங்க போல இருக்கு
இது, கண்டிப்பா கண்டிக்கதக்கது.
பிரபலமாயிட்டாலே இதெல்லாம் சகிச்சுதானே ஆகனுமோ :P
சைபர் கிரைம் அழைக்கும்போது நீங்கள் விளக்கம் கொடுத்தால் போதும் இங்கே நடுங்கவேண்டாம்.
சில புதிய ஆபாச தாக்குதல் நபர்களுக்கு இது தெரியாமல் போவதால் அவர்களுக்கு தான் நட்டம்.