Thursday, November 04, 2010

தீபாவளியன்று பாத்ரூம் போக சிறந்த நேரம் எது ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கிய இடம் பெற்றுள்ளது. வீடு முழுவதும் தீப ஒளி ஏற்றி, பட்டாசுடனும், தித்திக்கும் இனிப்பு வகைகளுடனும் உற்றார், உறவினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், இந்தியா முழுவதும் இந்த விழாவை சாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கொண்டாடுவதை காணலாம். எனவே, இதை தேசிய திருவிழா என்றும் கருதலாம்.

இத்துனை சிறப்புப் பெற்ற தீபாவளி பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளியை கொண்டாடுவதற்கான நேரம் எது என்பது குறித்து, சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வேதவாத்தியார் பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியதாவது:-
"நரகாசுரனுடன் கிருஷ்ணர் வதம் செய்தபோது, சோர்வுற்ற நிலையில், நரகாசுரனுடன் ராதை போரிட்டார் என்றும், பெண்ணால் நரகாசுரன் அழிந்தான் என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நிலையில், "நான் முக்தி அடைந்த தினத்தில், அனைவரும் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்றும், புண்ணிய நதிகளில் முதன்மையான கங்கையில் நீராடிட வேண்டும் என்றும் நரகாசுரன் வேண்டுகோள் விடுத்தான்'' என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஐப்பசி மாதம் அதாவது துலா மாதம் சூரியன்-சந்திரன் ஒன்று கூடும்(அமாவாசை) தினத்தில், நள்ளிரவு முடிந்து, அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்துக்கு முன்பு(அதுதான் நரகாசுரனை வதம் செய்த நேரம்) சூரியன், சுவாதி நட்சத்திரத்தில் இருக்கையில், சந்திரன் கூடுகிற சதுர்த்தசி திதியில், நல்லெண்ணெய் தேய்த்து, வென்னீரில் குளிக்க வேண்டும். வென்னீரில் கங்கை வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

சுடு தண்ணீரைக்கூட எப்படி தயாரிக்க வேண்டும் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு முன் தினம் இரவில், வென்னீர் வைக்கும் பாத்திரத்தில், சூரியன்-சந்திரன் படம் வரைந்து, தண்ணீர் ஊற்றி, பாத்திரத்தில், ஆல், அரசு, அத்தி, பூவரசு ஆகிய 4 மரங்களின் பட்டைகளைப்போட்டு மூடி வைத்து விடவேண்டும். 

குறைந்தது 2-1/2 மணி நேரத்துக்குப் பின், தண்ணீரை சூடு செய்து, எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, துவாதசி, அஷ்டமி, சப்தமி, சஷ்டி, சங்கரமனம் இவைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது என்று சொல்வார்கள். திதி வார நட்சத்திர முதலிய எவ்விதமான தோஷம் இருப்பினும் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது எந்த தோஷமும் எவரையும் பாதிக்காது.

நாளை அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குள் சதுர்த்தசி திதி, எண்ணெய் குளியலுக்கு உகந்த நேரம் ஆகும்.

தீபாவளி தினத்தில், வென்னீரில்தான் குளிக்க வேண்டும். வென்னீரில் குளிப்பது கங்கையில் குளிப்பதற்கு சமம் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிவரையில் குரு ஹோரை நேரம் ஆகும்.

குளித்து முடித்தபின், வீடு முழுவதும் தீபம் ஏற்றி, சுவாமி, அம்பாள் முன்பாக இனிப்பு வகைகளுடன் புத்தாடையை வைத்து பூஜை செய்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடவேண்டும்.

சிவபெருமான் தன்னிடம் எப்போதும் அன்பாக இருக்கவேண்டும் என்பதற்காக, தவம் இருந்த நிகழ்வே கேதார கவுரி விரதமாக கருதப்படுகிறது. கணவன்-மனைவி இடையே எப்போதும் ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பெண்கள் தீபாவளி தினத்தில், இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

தீபாவளி அன்று காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை, 10 மணியில் இருந்து 10.30 மணி வரை, மாலை 6 மணியில் இருந்து இரவு 9 மணி வரையில் கேதார கவுரி அனுஷ்டிப்பதற்கு உகந்த நேரம் ஆகும்.

இவ்வாறு பிரம்மஸ்ரீ ஏ.ஜி.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் கூறியுள்ளார்.

நன்றி : தினத்தந்தி 04-11-2010

Read more: http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_04.html#ixzz14KfNNAyo









இந்த பதிவில் நான் எதையும் மாற்றவில்லை. எல்லாரும் பாத்ரூம் போய் குளிக்கவும். வந்தால் போகவும். வரவில்லையென்றாலும் பாதகமில்லை. முயற்சி திருவினையாக்கும். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் என்பதை மனதில் வைத்து முக்கி(ய).முனகி.(யா)வது காரியத்தில் குறியாக இருக்கவும். எங்கள் கல்லூரி சாலையில் பாடும் ஒரு பாடலை நீங்களும் ஹம் செய்யலாம்.ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ ஆ ஊ ஆ.


23 comments:

ILA (a) இளா said...

”அட்றா அவனை...”
அப்படின்னு வெளியே ஒரு சத்தம்..

ILA (a) இளா said...

கருவிப்பட்டைகளை, கீழே வெக்கவும், ஒரே வரியில பதிவு தெரியுது

உண்மைத்தமிழன் said...

பாவி.. பாவி.. பாவி..!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

happy diwali மக்கா :)

THOPPITHOPPI said...

தீபாவளி வாழ்த்துக்கள்

ராம்ஜி_யாஹூ said...

நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்

ராம்ஜி_யாஹூ said...

நாள் என்ன செய்யும் , பொழுது என்ன செய்யும் - தேவார வரிகள்

எஸ்.கே said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

ரவி,

எல்லாம் சரி ஒன்னே ஒன்னைத் தவிர.

நரகாசுரனை கொன்னது ராதை இல்லைப்பா. சத்திய பாமா.


இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

நாங்கெல்லாம் சிறந்த நேரத்தில் முடிச்சுட்டோம்:-)))

THE UFO said...

அடடா...!

இந்த பதிவு... இன்று பயபக்தியுடன் சாமிகும்பிட்டு தலை தீபாவளி கொண்டாடும் உங்கள் பங்காளி ராஜன் தம்பதிக்கு சமர்ப்பணமா?

பலே..பலே...

நீங்க அசத்துங்க ரவி.

THE UFO said...

////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

பாவி.. பாவி.. பாவி..!

Thursday, November 04, 2010////

----அட..!
உ.த. அண்ணாச்சி...
இப்படியும் தீபாவளி வாழ்த்து சொல்லலாமா?

உமர் | Umar said...

ஜலபுல ஜலபுல கும்தலக்கா ஊ ஆ ஊ ஆ.


இது நான் சொல்லலப்பா. மறந்துட்டவுங்களுக்கு ரிமைன்ட் பண்றேன்.

ரவி said...

நன்றி இளா !

ரவி said...

பட்டைய மாத்தி போட்டுடறேன்.

ரவி said...

நன்றி ஜ்யோவ்

ரவி said...

வணக்கம் அண்ணே. பதிவு எழுதி கொடுத்தமைக்கு நன்றி

ரவி said...

நன்றி தொப்பிதொப்பி

ரவி said...

நன்றி ராம்ஜி யாகூ

ரவி said...

துளசியக்கா சத்தியமா பாமாவா ? நான் ட்ராபிக் மாமான்னு நெனைக்கலைன்னு சொல்லவந்தேன். தீபாவளி வாழ்த்துக்கள்

ரவி said...

யூ எப் ஓ, உங்க சார்பா தலைக்கு ஒரு தலை தீபாவளி வாழ்த்துக்கள் பார்சல்!

ரவி said...

நன்றி கும்மி.

ஜோதிஜி said...

திடீர்ன்னு உங்க ஞாபகம் வர உள்ளே வந்தேன். நார்வேயில் தீபாவளி எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டே.

படித்து முடிக்கும் போது என்னடா இது ரவி எழுத்து இல்லையேங்ற வார்த்தைகள் தோன்ற அப்புறம் தினந்தந்தி படித்தவுடன் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

கடைசி விசயத்தை படித்தவுடன் அதிர சிரித்துக் கொண்டுருக்கின்றேன்.

ராம்ஜி சொன்னது சரிதான்.

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....