Thursday, July 20, 2006

வந்துருச்சிய்யா....வந்திருச்சுய்யாயா...

சில நாட்களாக தெரியாமல் இருந்த வலைப்பதிவுகள் - இன்றுமுதல் தெரிய ஆரம்பித்துவிட்டன..இந்த கொஞ்ச காலத்துக்கு - தலை சுற்றல் - வாந்தி - மயக்கத்துக்கு உள்ளானவர்கள் - இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு தயாராகுங்கள்...

அன்னியன் ரமணிக்கு நன்றி - இந்த இடைவெளியை அவர் மென்பொருளை கொண்டு நிரப்பிவிட்டார்...புதிய பி.கே லிங்க் என் அலுவலகத்தில் வேலை செய்யவில்லை...என்ன கொடுமை என்று எண்ணிக்கொண்டே பதிவின்மீது எலிக்குட்டியை வைத்து கடித்தால்....

அட்ரா சக்கை...வேலை செய்யுதே அப்பு...

நன்றிகள் பல...(யாருக்கு ?? )

அன்புடன்,
செந்தழல் ரவி

26 comments:

கோவி.கண்ணன் said...

//கொஞ்ச காலத்துக்கு - தலை சுற்றல் - வாந்தி - மயக்கத்துக்கு உள்ளானவர்கள்//

கேர்ள் பிரண்டு கதைன்னு... வேறு எதோன்னு தப்பா நெனச்சிட்டேன்.... வந்துடுச்சின்னு வேற சொல்லி மகிழுறிங்க :)))

Anonymous said...

yee, now i also noticed,thanks.

Anonymous said...

ஹாய் ரவி,
எப்படி, தமிழ்,
உன் பதிவு எல்லாம் படித்திக்கிட்டிருக்கேன், அருமை, நேர்ல பாக்கிறமாதிரியே ( அல்லது பண்னுரமாதிரியே - எச்ழ்தறியே எப்படி)

ரவி said...

டேய் மக்கா - எழுத்துப்பிழை இல்லாம எழுத முயற்ச்சி செய்..இந்த பதிவில் ஆரம்பித்தம் நமது தலை எழுத்துப்பிழை - தமிழ்மணமெங்கும் பிழை திருந்துறார்..

அது நீதான் என்று நினைத்திருந்தேன்...நீயே இப்படி எழுத்துப்பிழையா எழுதி கேவலப்படுத்தறியே...

Anonymous said...

யாரென்று அறியவேண்டுமா என்ன ? - ஏன் நீங்களே கண்டறியுங்களேன்.

ரவி said...

உங்களை கண்டறிந்து நான் என்ன செய்யப்போறேன்...எப்படியுன் என் நன்பர் குழுவில் ஒரு அங்கம் என்று மட்டும் தெரியும்...

உங்கள் சேவையை தொடருங்கள்...

Anonymous said...

என்ன ரவி, மறுபடியும் ஆரம்பித்துவிட்டாய் போலிருக்கே ?
கொஞ்சநாளா உன் அளும்பு இல்லாம இருந்தது.
சரி கண்டின்னூ கண்டினூ ( continue )

ரவி said...

இளமை - ஓவராத்தெரியல்லியா உனக்கு > < ?

விழிப்பு said...

//சில நாட்களாக தெரியாமல் இருந்த வலைப்பதிவுகள் - இன்றுமுதல் தெரிய ஆரம்பித்துவிட்டன//

அப்பாடி, கை,கால் உதறல்,காய்ச்சல் எல்லாம் நின்னுடும்-ன்னு நினைக்கிறேன்.

2 நாளா தத்தளிச்சு போய்ட்டம்ல்ல.....

ரவி said...

பின்னூட்ட கயமை கண்காணிப்பு குழுவுக்கு பயந்து எல்லாம் - பதில் சொல்லாம இல்லைங்க...

ஏதோ நம்ம பதிவை தவறாம படிக்கிறீங்க என்றாலும் - சத்தியராஜ் கவுண்டமணியை தாக்குறமாதிரி போட்டு தாக்கி ஒரு கேள்வியை கேட்டுப்புட்டீங்க...அதுக்கு மறுமொழி என்ன எழுதலாமுன்னு யோசனையில இருக்கேன்..

ரவி said...

காலங்கள் என்று வந்தவுடன் புரிந்துகொண்டேன்...

இராம்/Raam said...

ரவி இதை பிரிகேட் ரோடு பப்'ல கொண்டாடிடுவோமா....
ம்..கிளம்புங்க ... :-)))))

ரவி said...

ட்ரீட் நீங்க குடுக்கறதா இருந்தா சரி :)

இராம்/Raam said...

நீங்கதானே இதயேல்லாம் அறிவிப்பாக பதிவேற்றியவர்.ஆதானால் நீங்கதான் கொடுக்கணும்.... :-)))

ரவி said...

கொஞ்சநாளா கண்ணு கொஞ்சம் சரியா தெரியறதில்லை...ஒரே மசமசங்குது...

யாரோ ராம் என்று பின்னூட்டம் போட்டிருக்காங்க...

ஆனா என்னான்னு தான் படிக்க முடியலை...

உங்களுக்கு தெரிஞ்சா தனிமடல் அனுப்புங்க...

ராம் - நன்பர்களுடன் ஆலோசித்து விரைவில் விடையுடன் வருகிறேன்...முடிஞ்சா வெனு உடன் வருவோம்....

:))

ரவி said...

நானும் வருவேன் , ஆட்டத்தை கலைப்பேன். செந்தழல் ரவி, என்னையும் கூப்பிடுங்க பிரிகேட் ரோட்டுக்கு(பார்ட்டி).

ரவி said...

எங்கடா ஆளைக்கானோமேன்னு பார்த்தேன்...உங்களை எல்லாம் சேத்துக்க முடியாது..ஹுக்கும்...

சரி சரி - நல்லதா ரெண்டு அழகான பொன்னுங்களை கூட்டிக்கிட்டு வர்ரதா இருந்தா ( உங்களை சொல்லலை) - சேர்த்துக்குறோம்...

உங்க பங்கா ஒரு அமவுண்டு வெட்டிடனும்...(விட்டிடுவோம்...)

விரைவில் மெயில் அனுப்புறோம்...

இராம்/Raam said...

//நானும் வருவேன் , ஆட்டத்தை கலைப்பேன். செந்தழல் ரவி, என்னையும் கூப்பிடுங்க பிரிகேட் ரோட்டுக்கு(பார்ட்டி). //

வாங்கம்மா வாங்க ஆனா பில்லை கொடுந்திருங்க.உங்களை பார்த்தா ரொம்ப நல்லவங்க மாதிரி வேற இருக்கு.எப்படியும் நீங்கதான் கொடுப்பிங்களுனு தெரியும்.

நாகை சிவா said...

//வந்துருச்சிய்யா....வந்துருச்சிய்யா//
தலைப்பை பாத்தவுடன், வந்தா போக வேண்டியது தானே அத விட்டுட்டு ரவி ஏன் இப்படி ஒவரா சவுண்டு உடுறானு வந்தேன். வந்து பாத்தா சப்ப மேட்டரு. நம்ம தொல்லையில் இருந்து நம்ம தமிழ் பதிவுலகம் தப்ப முடியாது. அம்புட்டு தான்....

நம்ம அண்ணன் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்ல போல?

இராம்/Raam said...

//கொஞ்சநாளா கண்ணு கொஞ்சம் சரியா தெரியறதில்லை...ஒரே மசமசங்குது...//

இது எத்தனை நாளா இருக்கு.சரி இருக்கட்டும் பரவயில்லை.போகும்போது எதுக்கும் டாக்டரை பார்த்துட்டு போயிருவோம்.

இராம்/Raam said...

//ராம் - நன்பர்களுடன் ஆலோசித்து விரைவில் விடையுடன் வருகிறேன்...முடிஞ்சா வெனு உடன் வருவோம்....//

ஏன் ஒரு லாரியை பிடிச்சுகிட்டு வர்றது.ஊர்க்கெல்லாம் தெரியரமாதிரி பேனர் கட்டிக்கிட்டு போவோம்....
:-)))

ரவி said...

///இது எத்தனை நாளா இருக்கு.///

யாராவது - பார்ட்டி கொடுன்னு கேட்டா மட்டும்...

பிரிகேடு ரோட்டுல லாரிக்கெல்லாம் அனுமதி இல்லைன்னு தெரியும் இல்லையா...

சுமா பிரண்ஸ்க்கு வேணா ஒரு நாய் வண்டி அனுப்பலாம்..

ரவி said...

ravi, உங்களுக்கு நக்கல் செய்ய ஆள் கிடைக்கலினா நான் தான் மாட்டினேனா?

இராம்/Raam said...

//ravi, உங்களுக்கு நக்கல் செய்ய ஆள் கிடைக்கலினா நான் தான் மாட்டினேனா? //

சுமா நல்ல கேளுங்க...அதை எப்படி நாய்வண்டி அனுப்பலாமினு சொல்லாலாம்....?

நாரயணா...நாரயணா...

(பி.கு:- நாகை சிவா வேற இங்கே இல்லை அந்த வேலையை நாம பார்க்கவேண்டியதா இருக்கு...?)

நாகை சிவா said...

//நாகை சிவா வேற இங்கே இல்லை அந்த வேலையை நாம பார்க்கவேண்டியதா இருக்கு...?) //
எம்ப்பா ராம், ஏன் இப்படி நம்ம பெயர அநியாயத்துக்கு விளம்பர படுத்துற. சரி விடு. என்ன பண்ணனும் சொல்லு, நாய் வண்டினு சொன்னது தப்பு சொல்லுறியா, ஆமாம்ப்பா நாய் கோவிச்சிகிட்டா என்ன பண்ணுறது, ரவி வேற எதாவது வண்டி சொல்லுப்பா

இராம்/Raam said...

//எம்ப்பா ராம், ஏன் இப்படி நம்ம பெயர அநியாயத்துக்கு விளம்பர படுத்துற.//

இல்லைன்னா யாருக்கும் தெரியாதா...

//சரி விடு. என்ன பண்ணனும் சொல்லு, நாய் வண்டினு சொன்னது தப்பு சொல்லுறியா, ஆமாம்ப்பா நாய் கோவிச்சிகிட்டா என்ன பண்ணுறது, ரவி வேற எதாவது வண்டி சொல்லுப்பா//

அட கனகச்சிதமா கப்புளா அடிச்சாச்சு சிவா...இதுதான் வேணும் சுமா'வாதான் காணோம்.வரட்டும்...அப்புறம் கன்டினியூ பண்ணுவோம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....