சமீபகாலமா முகமூடி அவர்கள் இந்த சின்னப்பையனை பிடிச்சு கும்முறதை நீங்க பார்த்திருக்கலாம்...இணையத்துல ரெண்டு மூனு பேரு நான் என்ன சொன்னாலும் அதை சரியான கோணத்துல பார்க்கிறதில்லை....ஒன்னு போலி டோண்டு மூர்த்தி...இன்னோருத்தர் முகமூடி அய்யா...
ஒரு முறை முகமூடி அவர்களை பற்றி ஒரு மூத்த வலைப்பதிவர் சொன்னார்...முகமூடி கிள்ளுவாரு...ஆனா ரத்தம் வராது...வலிக்கும்...ஆனா அழுவ முடியாது...என்று....ஆனா முகமூடி உண்மையிலேயே கையில ஊசிய வெச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்திருக்காரு...மூல வியாதி போல...உள் மூலமா வெளி மூலமா, ஆதி மூலமா தெரியல...பயங்கர டென்ஷன் ஆகுறாரு...லாஸ் ஏஞ்ஜெல்ஸில் நல்ல மருத்துவர் இருந்தால் பார்க்கவும்...
இன்னோரு விஷயம் இங்கே சொல்லனும்...முகமூடி அவர்கள் எல்லே ராம் என்று நான் நம்பவில்லை....மிச்சமிருக்கும் ஆசிட் வீச்சுக்கும் ஆட்டோக்களுக்கும் பயந்து முகத்தை மூடி எழுதும் லாஸ் ஏஞ்சல்ஸ்காரர் என்பது தான் என்னைப்பொறுத்தவரை....டோண்டு ராகவனுக்கு தெரியும், ஆனால் நான் கேட்கப்போவதில்லை...
முகமூடி பற்றி சொல்லனும்னா, டோண்டு ராகவனுடன் இணைந்து முதல் முதலில் போலி டோண்டு மூர்த்தியை உருவாக்கி, அவன் கையால் ஆபாச பின்னூட்டங்கள் வாங்கிய முதல் பதிவர்...இன்றைக்கும் வந்துகொண்டிருக்கலாம்....அதை குப்பைத்தொட்டிக்கும் அவர் அனுப்பிக்கொண்டிருக்கலாம்....(கிருஸ்துவனாகிய செந்தழல் ரவி, திராவிடனாம்...என்று இன்றும் அவர் பதிவில் ஆபாசம் கலக்காமல் மூர்த்தி பின்னூட்டம் போட்டுக்கொண்டுதானிருக்கிறான்..அதை வெளியிட்டுக்கொண்டுதானிருக்கிறார்...)
இன்றைக்கு பல பதிவுகளில் சென்று நான் கிறிஸ்டியன் என்றும் தலித் என்றும் நான் எப்படி திராவிடன் ஆகமுடியும் என்றும் வாந்தி எடுத்துவரும் போலி டோண்டு மலேசியா மூர்த்தி, முகமூடி பதிவுக்கும் சென்று எழுதுவது எனக்கு ஒன்றும் ஆச்சர்யம் இல்லை...
சொல்லப்போனால் முதன் முதலில் இதனை வலையில் "அம்பலப்படுத்திய" பெருமை திரு.முகமூடி அவர்களையே சாரும்...என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் இருந்து என்னுடைய முழுப்பெயரை எடுத்து (அங்கே மட்டுமே இருந்தது அது) , அவரது "இந்த வார விவகாரம்" பகுதியில் "ரவீந்திரன் அந்தோனிசாமி" என்று எழுதிய மதவெறி பாஸிஸ்ட் திரு.முகமூடி அவர்கள்...இன்றைக்கு அவர் போட்டிருக்கும் பதிவின் முதல் பின்னூட்டத்தில் கூட "சுகமளிக்கும் கூட்டங்கள்" என்ற வார்த்தை கசட்டு எண்ணத்தோடு சேர்த்திருப்பதன் மூலம் அதை மீண்டும் நிரூபிக்கிறார்...இவர் எப்படி சாதி சொல்லி திட்டுவதை கேள்விகேட்க முடியும் ?
மேலும் என்னுடைய சிறுமூளையில் உதிக்கும் இன்னொரு நினைவுத்துணுக்கு, மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றபோது, ஓகை சார், நிலா போன்றவர்களுடன் சேர்ந்து முகமூடி அவர்களும் அதனை எதிர்த்தார்....அதை பற்றியதான பதிவு நான் எழுதி இருந்தபோதும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த என்னுடைய பதிவில் தன்னுடைய பின்னூட்டம் வைப்பது இழுக்கு என்பது போல பொன்ஸ் பதிவில் தன்னுடைய கருத்தை "மொழிந்தார்"...இவனுக்கெல்லாம் என்ன நான் பின்னூட்டம் போடுறது என்பது போன்றதொரு அலட்சிய மனபாங்கு என்றும் கொள்ளலாம்...
சுகுணா பற்றி அவர் சர்வேசன் பதிவில் இட்ட பின்னூட்டம் தான் விவகாரத்தின் ஆரம்பம்...துடிக்கும் மீனை ஷூக்காலில் இட்டு நசுக்கினால் அது நிரந்தரமாக துடிப்பதை நிறுத்திக்கொள்ளும் இல்லையா...அதே போலத்தான் அந்த பின்னூட்டமும் இருந்தது...ஆஹா விழுந்துருச்சுடா, போடுறா ஒரேப்போடு...சுத்தமா ஒழிஞ்சுபோகும்...என்பது போல....
இன்னோரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால், ஊர் நாட்டில், மஸுல் லோடிங் கன் எடுத்துக்கொண்டு அதிகாலை முயல் வேட்டைக்கு போகும்போது, சுட்டால் முதலில் விழுந்துவிடும்...ஆனால் சில, தவ்வி தவ்வி தன்னுடைய இறுதி தப்பிக்கும் முயற்சியை தொடரும்...அப்போது லைட்டாக மருந்து போட்டு, கொஞ்சமாக பால்ரஸ் ( ரவைன்னு நாங்க சொல்லுவோ) போட்டு டப்புனு ஒரு முறை சுட்டால் டோட்டல் டேமேஜாகிப்போயிரும்..அது தான் முகமூடி அவர்கள் செய்ய முயற்சித்தது...
இன்றைக்கு இரண்டு டென்ஷன் பதிவுகள் வெளியாகி ஓஹோவென்று ஓடுகிறது...இதேபோல் தான் அரவிந்தன் நீலகண்டன் அவர்களும் என்னை பக்கம் பக்கமாக திட்டி பதிவிட்டார்...ஏழு பக்க பதிவில் அறுபத்தேழு முறை செந்தழல் ரவி என்று விளித்து எல்லா முறையும் திட்டினார்...பிற்பாடு நன்பராகி, சகோதரரே என்று விளித்து மடல் கூட அனுப்பினார்...அதை விடுங்க...இது எங்க போயி முடியுமோ ?
வலையில் அடுத்த பிரச்சினை, இன்றைக்கு சாதியை சொல்லி திட்டினார் என்பதற்காக வெளியேறுகிறேன் என்று சொல்பவர்களே, நேற்று எங்களை பார்ப்பான் என்று சொல்லி திட்டியபோது எங்கே போயிருந்தீர்கள் என்று கேட்கிறார்கள்...முகமூடி அவர்கள் கேட்கிறார்...நன்பர் என்றென்றும் அன்புடன் பாலா கேட்கிறார்...
மலேசிய போலிடோண்டு மூர்த்தி, காசியை / செல்லாவை, தலித்து என்று திட்டியபோது நீங்கள் கேட்டீர்களா ? முகமூடி அவர்கள் கும்பகர்ண உறக்கத்தில் இருந்து எழுந்து பதிவிட்டாரா ? கி.கூ.கே.கே அனானி என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு மடல் அனுப்பினாரா ? அதை நன்பர் பாலா பதிவிட்டாரா ?
என்னைப்பொறுத்தவரை நன்பர்களாக இருப்பதாலேயே அவர்களது எல்லா கருத்துக்களையும் ஆதரவளிக்கவேண்டும் என்று கிடையாது.....பார்ப்பணர்கள் / பார்ப்பணரல்லாதோர் / ஹிந்து / முஸ்லிம் / கிருத்துவர் / ஈழம் என்ற எந்த பதிவரையும் சாதி, மதம்,மொழி போன்றவற்றை கொண்ட துவேஷ மொழி மொழிந்தது கிடையாது...
குறிப்பிட்ட சில பதிவர்களை நெருங்கிய நன்பர்கள் சிலரே அவர்களது சாதியை சொல்லி கிண்டல் செய்வதை கண்டு மனவேதனை அடைந்திருக்கிறேன்...என்னுடைய இந்த பதிவில் கிண்டலும் செய்திருக்கிறேன்..
///பொட்டீக்கடை: ( வாயில் வைத்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொண்டே..) அம்பி கூப்டேளா ?
லக்கிலூக் : பொட்டீக்கடை...நீங்க பார்ப்பணரா ? சொல்லவே இல்ல...இனிமே நமக்கு ஒட்டோ உறவோ கிடையாது...தள்ளி உக்காருங்க...
பொட்டீக்கடை: அது இவ்ளோ நேரம் தெரியலையா...அப்ப என் தட்ல இருந்து தின்ன மிச்சர வாந்தி எடு...////
பள்ளிக்காலத்தில் கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்டில் போடப்பட்ட சாதி தகவல், பிறகு கல்லூரி காலத்தில் சுத்தமாக மறந்தே போனது...பிறகு அலைச்சல், வேலை, உள்நாடு, வெளிநாடு என்று சுற்றியதில் சாதி என்ற ஒரு கருமம் இருப்பதே மறந்துபோனது....வலைப்பூக்களை பார்வையிட வந்தபோது அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதீயம் பற்றியதான பதிவுகள், பார்ப்பான், பார்ப்பணீயம், வெங்காயம், பெருங்காயம் போன்ற பதிவுகளை சந்திக்கநேர்ந்தது...ஆரம்பத்தில் எரிச்சலோடு மூடிவிடுவது வழக்கம் என்றாலும், சில பதிவுகளை படிக்க ஆரம்பித்தேன்....எப்படி இரட்டை குவளை முறை நூற்றுக்கணக்கான டீக்கடைகளில் இன்றும் இருக்கிறதாக பெரியார் திராவிடர் கழக சுற்றறிக்கை சொல்கிறதோ அதே போல் சாதி என்ற கசட்டு மனோபாவம் ஒவ்வொருத்தரின் உள்ளத்திலும் இருப்பதாகவே எனக்கு தெரிகிறது...
பைபிள் 'கதை'யில் ஆதாம் பாவம் செய்யாதபோது இறைவனை நிர்வாணமாக சந்திப்பதாகவும், பிறகு ஆப்பிளை தின்று பாவம் செய்துவிட்டபிறகு, நிர்வாணம் உறுத்தலாக, மரத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்டு பேசுவது போலவும், வலைப்பதிவுகளுக்கு வந்துவிட்டால் சாதி மனோபாவம், சாதிப்பற்று, சாதியை சொல்லி திட்டி புண்படுத்துதல் என்ற 'விட'யங்கள் தன்னாலே வந்துவிடும் போல...
பெரியார் பற்றிய திராவிட தமிழர்கள் தளத்தில் இருக்கும் இந்த கவிதையின் ஸ்னிப்பட் பாருங்கள்...
//பார்ப்பன எதிர்ப்பே
பார்ப்பனீய தத்துவ எதிர்ப்பே
தவிர்த்த ஆளெதிர்ப்பில்லையே!
ஆளடிக்க சொல்லவில்லையே
ஆள் பேசும் பார்ப்பனீய
தத்துவமடிக்க தலைப்பட்டாரே!
///
இது தான் என்னுடைய நிலை...
என்னைப்பொறுத்தவரை சாதி, மத அடையாளங்களில் இருந்து வெளிவரவே விரும்புகிறேன்...கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டுகளாக எந்த கடவுளையும் கும்பிடவில்லை...மற்றவர்களை அழைத்துப்போய் கோவில் காட்டுவது தனி...எங்களூர் (திருக்கோவிலூர்) உலகளந்த பெருமாள் கோயிலுக்கு மூன்று மாதம் முன்பு என்னவளை கூட்டிக்கொண்டுபோய் காட்டி பூ வாங்கியதோடு சரி...(பத்துரூபாய்க்கு மூல கிருகம் வரை செல்லலாம்)...
போலி டோண்டு மூர்த்தி கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு நன்பர் அருண் நிறுவனத்துக்கு சென்று அவரை பணியில் இருந்து நீக்கியது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம், போலி டோண்டு மூர்த்தியுடன் தாயா புள்ளையா பழகியது...மேலும் நான் ஆபாசமாக அனைவருக்கும் எழுதியதாக போலி டோண்டு மூர்த்தி தன்னுடைய பதிவில் எழுதி இருப்பதும் சுத்த ஹம்பக்..கீழ்கண்ட ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...டோண்டு மனைவி மகள் புகைப்படத்தை துளசிம்மா இவனுக்கு அனுப்பினாங்களாம்...என்ன ஒரு லூசுத்தனம்...
அவனது பெயரை போலி டோண்டு என்று எழுதாமல் மூர்த்தி என்றே அனைவரும் எழுதவேண்டும்...சுகுணா ஆரம்பித்துவிட்டார்...இப்போது இந்த ஸ்க்ரீன் ஷாட் பாருங்கள்...கொஞ்சம் கொஞ்சமாக மூர்த்தி என்ற மின்னஞ்சலில் இருந்தே தன்னுடைய அசிங்க மடல்களை அனுப்ப ஆரம்பித்த காலம் - இப்பத்தான் - மே 2007...
இவனால் வலையுலகை விட்டு விலகி சென்ற மாயவரத்தான் (இவர் எழுதிய முன்னூத்து சொச்ச இடுகையும் சூடான இடுகைதான்) , லண்டன் ஜெயக்குமார் போன்றவர்கள் இதுபோல பல விஷயங்களை திரட்டி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...அவர்கள் உதவியோடு மேலும் சில பல ஸ்க்ரீன் ஷாட்களை போடத்தான் போகிறேன்...
சொல்லப்போனால் மாயவரத்தான் தான் முதலில் போலி டோண்டு, மூர்த்தி, விடாது கருப்பு அனைத்தும் மூர்த்தியின் வேலைதான் என்று டெக்னிக்கலாக கண்டறிந்து வெளிப்படையாக சொன்னவர்...ஆனால் அவர் எந்த ஆதாரங்களையும் அப்போது வைக்கவில்லை...
போலி டோண்டுவின் நம்பிக்கையை பெறலாம், அவன் எண்ணங்களை அறியலாம், அதன் மூலம் வலையுலகின் நீண்ட கால பிரச்சினைக்கு ஒரு முடிவை எட்டிவிடலாம் என்று அவனுடன் மடல் தொடர்பில் இருந்தது உண்மை...டோண்டுவுக்கும் இந்த விஷயம் தெரியும்...அவ்வப்போது டோண்டுவை தொடர்புகொண்டு பேசுவேன்...மற்ற நன்பர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கச்சொல்லி அட்வைஸ் செய்வேன்....இண்பாக்ட் போலி டோண்டு முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் போட்டேன்...மூர்த்தியை சி.சியில் வைத்து, டூண்டு ஐடிக்கு மின்னஞ்சல் போடுவேன்...இரண்டையும் ஒரே ஐ.பியில் இருந்து திறந்து பார்ப்பான்...பிறகு மூர்த்தி மின்னஞ்சலில் இருந்து - ஏன் இதை எனக்கு அனுப்பி வைத்தீர்கள் என்று காட்டமாக ஒரு கேள்வி வரும்...எல்லாம் சைக்கோத்தனம்...
நான் நடத்திவந்த இரவுக்கழுகு தளத்தை பெயரிலிக்கு விற்று அதன்மூலமாக வேலைவாய்ப்பு தளத்தை முதல் பக்கத்தில் காட்டுமாறு செய்தேனாம்...இதுவும் மூர்த்தியின் சைக்கோ காமெடி தான்...பெயரிலியிடம் தான் கேட்கவேண்டும்...எவ்வளவுக்கு வாங்கினார் என்று...
மீண்டும் முகமூடி அவர்களின் விஷயத்துக்கு வருகிறேன்...அவர் என்னைப்பற்றி பதிவிட்டதும் ஆபாச மூர்த்தி பல பின்னூட்டங்களை என்னுடைய சாதி, மதம், குடும்பம் பற்றி எழுதியபோதும் அதை எல்லாம் வெளியிடாமல் தன்னுடைய பெருந்தன்மையை காட்டினார், அதற்கு அவருக்கு நன்றி...
எப்போதும் என் மீதான நம்பிக்கையை அருணோ, லக்கியோ, டோண்டு ராகவனோ, சுகுணாவோ, மற்ற மூத்த பதிவர்களோ, இளைய பதிவர்களோ, பெண் பதிவர்களோ இழக்கவில்லை என்பதை இந்த பிரச்சினைகளின் போது அவர்கள் அனுப்பிய பல மின்னஞ்சல்கள் தெளிவாக்கின...எல்லோருக்கும் என்னுடைய நன்றி....என் மீதான உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்...
எப்போதும் போல என்னுடைய வழியில் நான் தொடருகிறேன்...நான் நானாகவே...!!!!