Monday, December 11, 2006

மூடுவிழா அறிவிப்பு !!!!

தனித்திரு விழித்திரு பசித்திரு வலைப்பூ விரைவில் மூடுவிழா காண இருக்கிறது !!! இன்று மதியம் அறிவிப்பை வெளியிடுகிறேன்...!!! அதனால ஒன்னும் பெரிசா பாதகமில்லை என்றுதான் நினைக்கிறேன்.. !!!

அன்புடன்,
செந்தழல் ரவி

52 comments:

Sivabalan said...

Ravi,

Is there any special reason?

Anyway all the best!!

கோவி.கண்ணன் [GK] said...

//தனித்திரு விழித்திரு பசித்திரு வலைப்பூ //

தலைப்பு இந்த வலைப்பூவுக்கே ஆகிவிட்டதா !

சோகம் !

மற்ற வலைப்பு எதில் தொடர இருக்கிறீர்கள் ?

ரவி said...

வேலைவாய்ப்பு மலர் தொடர்ந்து இயங்கும் என்பதை தெரிவிக்க மறந்துட்டேன் !!

மங்கை said...

என்ன ரவி??...

ஏன்???

சந்தனமுல்லை said...

எதாவது வெக்கேஷன் ப்ளானா? 2007 லேர்ந்து வேற ப்ளாக்க் போறீங்களா?

நாமக்கல் சிபி said...

!????

லக்கிலுக் said...

நன்கு நண்பர்களை ஆலோசித்து முடிவெடுக்கவும். ஆரம்பத்திலிருந்தே உங்கள் வலைப்பூவை வாசிக்கும் வாசகன் என்ற முறையில் இந்தப் பதிவை கண்டிக்கிறேன்.

அன்புடன்
(பரிசு பெற்ற)
லக்கிலுக்

Anonymous said...

நல்ல முடிவு!வலைப்பூவில் எழுதுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை.இந்து வலிப்பு வந்து சிலர் உளருவதை படிக்காமல் இருப்பது இன்னும் நலம்.

SP.VR. SUBBIAH said...

இல்லை, இல்லை, இல்லை!

மறுபரிசீலனை பண்ணுங்கள்

நீங்கள் ஒரு நிறுவனதை விட்டு போவதென்றால் அது சாதாரண விஷ்யம்

ஒரு அமைப்பை விட்டு விலகுவது என்றால் அது சாதாரணமான் விஷ்யமல்ல!
ஒரு குடும்பததி வீட்டுப் போவதென்றால் அது கொடுமையான விஷயம்!

நீங்கள் எதைவிட்டுப் போகின்றீர்கள் என்று உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்தீர்களா - சொல்லுங்கள் ரவி!

வேலைவாய்ப்புப் பதிவு தொடரும் என்று சொல்லி நழுவாதீர்கள்

இந்த மூடு விழா - நியாமானதுதானா?

அன்புடன்
SP.VR.சுப்பையா

Anonymous said...

வருத்தமான முடிவு.

விடாது கருப்பு தற்கொலைப்படை
சிங்கப்பூர்.

Anonymous said...

மிக நல்ல முடிவு. வாழ்த்துக்கள். நிறைய நாட்கள் முன்பே எடுத்திருக்கவேண்டியது. இப்போதும் முழுதும் கெட்டுவிடவில்லை. தமிழ்மணத்தில் \"மணம்\" அதிகமாகிவிட்டது. தமிழ்பதிவுகள் வேலையற்ற அல்லது விகார மனங்கொண்டவர்களின் கூடாரமாகிப்போனது . வேலைவாய்ப்பு பதிவு தொடரட்டும். ஆபிஸ் வேலையை நன்றாய் பார்த்துக்கொண்டு லைபில் செட்டில் ஆகிற வழியைப்பாருங்கள். இங்கிருக்கும் சில திரா\"விட\" ஈனர்கள் தங்களை ஒரு கருவியாக உபயோகிப்பதை பார்த்து நான் வருத்தப்பட்டிருக்கிறேன். அதை தீர்த்த கர்த்தருக்கு நன்றி

கானா பிரபா said...

வணக்கம் ரவி

நட்சத்திர வாரத்தின் இறுதி இடுகை என்றமட்டில் மூடுவிழாவை வைத்துக்கொள்ளுங்கள், தயவு செய்து இப்பதிவை நிறுத்தாதீர்கள்.

Anonymous said...

தோன்றின் புக்ழோடு தோன்றுக அஃதலின்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இப்பிடி கலாய்ச்சவரு நம்ம மயிலபூர் மாமு வள்ளுவரு.

மறைதலின் மறைக நட்சத்திரமாய் அஃதலின்
நட்சத்திரமாய் மின்னாதலே நன்று.

இப்பிடி கலாய்க்கறது நம்ம கோலாலம்பூர் கோபாலு.

அனானிகளை சுனாமியாய் அடித்து சென்ற பொன்மன செம்மலே...
எரிகல்லாய் வீழாமல் நட்சத்திரமாய் திவ்யாவை டாவடித்த டாபரே...

உன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யவும்

G.Ragavan said...

இது வலைப்பூவை விட்டு வெளியேறும் காலம் போல இருக்கிறது. ரெண்டு வாரமா அதுதான் நடக்குது.

எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களுக்கு நல்ல முடிவாக எடுத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. எதோ பெரிய திட்டம் இருக்கும் போலத் தெரிகிறது. உங்கள் எண்ணம் போல வண்ணம் அமையட்டும். என்னுடைய வாழ்த்துகள்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

யாருக்கேனும் விற்றுவிடுகின்ற எண்ணம் இருக்கின்றதா ரவி..? :)

வெற்றி said...

ரவி,
????
சும்மா தானே சொன்னீர்கள்?

Hari said...

ரவி,
என்ன ஆச்சு??? முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டுகிறேன்

Meenapriya said...

don't do that... you have a good writing style... you can share your thoughts with all...

Anonymous said...

என்னமோ நடக்குது. மர்மமா இருக்குது.

ஆனா, நடக்கறது நல்லா நடக்கட்டும். வேலைவாய்ப்பு செய்திகள் என்று ஒருத்தர் உபயோகமா போட்டுக்கிட்டிருக்கார். ஒருவேளே அதை நீங்க படிச்சு நல்ல வேலை கிடைச்சு இந்த உபயோகமத்த குப்பய தூக்கி கடாசிட்டீங்களோ, ரவி.

Anonymous said...

நல்ல முடிவு....போய் வாருங்கள்...ஒரு பிரச்னையும் இல்லை..குழு மனப்பான்மை உடையோர் விலகுவதனால் தமிழ்மணத்திற்கு நன்மையே..."மணம்" குறையும்....

make sure that you dont come back in any other form except job postings...that's really good..ask ur 'kola saamis' also to leave....:)

Anonymous said...

யோவ் நண்பன்,

நீ நிசமாலுமே நண்பன்தாங்யா,

ஆமா, அதுயார்ரு கோலாசாமிங்க. கொஞ்சம் சொல்லிபோடுங்க...

Anonymous said...

"நல்ல முடிவு....போய் வாருங்கள்...ஒரு பிரச்னையும் இல்லை..குழு மனப்பான்மை உடையோர் விலகுவதனால் தமிழ்மணத்திற்கு நன்மையே..."மணம்" குறையும்....

make sure that you dont come back in any other form except job postings...that's really good..ask ur 'kola saamis' also to leave....:)"

Ravi,atleast for this u should comeback to thamizmanam.


ARUN

விழிப்பு said...

ரவி,

எதனால் இந்த முடிவெடுத்தீர்கள் என தெரியவில்லை.
கண்டிப்பாக உங்களை அன்றாடம் வாசிக்கும் என்போன்றவர்களுக்கு இது இழப்புதான்.

வரும் காலங்களில் எடுத்த காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

-விழிப்பு

Anonymous said...

நீங்கள் போவதால் வலையுலகுக்கு பெரிய இழப்பேதுமிலை.

மஞ்சூர் ராசா said...

நோ கமெண்ட்ஸ்

Anonymous said...

இந்தப்பதிவு மூடுவது உங்கள் தனிப்பட்ட கருத்து.

ஆனால், வேலை வாய்ப்பு வலைத்தளத்தை நிறுத்தாது தொடரவும். நல்ல செயல் அது.

✪சிந்தாநதி said...

நம்ம வழிக்கு வரப்போறீங்க அப்படித் தானே?

வினையூக்கி said...

மறுபரீசிலனை செய்யவும்.
நட்புக்காக
வினையூக்கி

சென்ஷி said...

what hapn. ravi

Anonymous said...

இன்னாபா....

திரு. ரவி முடிவு - தமிழ்மண வாசகர்களுக்கு இழப்பு!

இது மாதிரி பதிவை இன்னும் கானோம்..

சொன்னா கேட்டுக்க தல..
வேணாம் போவாத..
சொல்லிட்டேன்

மணியன் said...

இது 'குறும்பு' எதுவும் இல்லையே :)

வலைப்பதிவை இயக்குவதும் இல்லாததும் உங்கள் நேரத்தையும் விருப்பத்தையும் சார்ந்தது. இருப்பினும் தொடர்ந்தால் மகிழ்வோம்.

தகடூர் கோபி(Gopi) said...

செந்தழல் ரவி,

எழுத ஆரம்பித்தது எப்படி உங்கள் விருப்பமோ அவ்வாறே தொடர்வதும் அல்லது நிறுத்துவதும் உங்கள் விருப்பம்.

ஏன் எழுத ஆரம்பித்தீர் என நான் கேட்டதில்லை அதைப்போலவே நீங்கள் ஏன் எழுதுவதை நிறுத்துகிறீர்கள் என கேட்கப் போவதில்லை.

என்னைப் பொறுத்தவரை

"வந்துடேன்யா !!! வந்துடேன்யா !!!"
"மூடுவிழா அறிவிப்பு !!!!"

இப்படி ஏதும் இல்லாமல், விரும்பும் போது பதியலாம் விரும்பாத போது வேறு வேலையை பார்க்கலாம்.

பொன்ஸ்~~Poorna said...

என்னாச்சு ரவி? திடீர்னு?

VSK said...

விலகல் இழப்பே எனினும், உங்கள் தனிப்பட்ட முடிவு உங்களுடையது மட்டுமே என்ற அளவில், வாழ்த்துகிறேன்.

வெங்கட்ராமன் said...

என்ன கொடும சரவணன் இது, . . . ?
சாரி,
என்ன கொடும செந்தழல் ரவி இது, . . . ?

Unknown said...

உங்கள் முடிவு...
உங்களுக்கு நலன் பயக்கும் என்பதில் :)
என(ங்களு)க்கு இழப்பு என்பதில் :(((

Sundar Padmanaban said...

என்னய்யா இது திடீர்னு! எதாச்சும் எதிர்பாராத அதிர்ச்சி கொடுக்கறதா வேண்டுதலா?

பிரச்சினைன்னா கொஞ்ச காலம் விட்டுட்டு திரும்ப வாங்க. பதிவுக்கு மூடுவிழா நடத்துவது அநியாயம். ஒப்த்துக்கவே முடியாது.

எழுத்து என்பது வரம். அனைவருக்கும் வந்துவிடுவதில்லை. அப்படிக் கிடைத்த வரத்தைத் தூக்கி எறிவது அழகல்ல.

தமிழ்மணத்தில் இருக்க இயலவில்லை என்றால் குமரன் செய்தது போல திரட்டப்படுவதிலிருந்து விலகி இருக்கலாம். பதிவையே நிறுத்துவது சரியான முடிவாக எனக்குப் படவில்லை.

வேலைவாய்ப்பு மலர் போன்ற அருமையான பணியைச் செய்து வருகிறீர்கள். அதோடு உங்களது இந்தப் பதிவையும் தொடருங்கள்.

ஆக்குவது கடினம். அழிப்பது எளிது. அழிக்காதீர்கள்.

இது ஒரு வேண்டுகோள்.

Unknown said...

சரி சரி.. ரவி..புத்தம் புது வடிவில் உங்கள் வலைப் பதிவின் ... திறப்பு விழா எப்போன்னு சொல்லுங்கய்யா?

இளவரசன் said...

இத்துணை பேர் கேட்டும் பதில் கூறாத உம்மை செல்லமாக கண்டிக்கிறேன்.

Anonymous said...

ok bye bye

✪சிந்தாநதி said...

மணியன் said //இது 'குறும்பு' எதுவும் இல்லையே :)//

குறும்பு இல்லை 'குசும்பு'

ஆமாங்க அப்படித்தான் தமிழ்மணத்தில் குறிச்சொல் கொடுத்திருக்கிறார்!:-)))

அரை பிளேடு said...

ஏன் ????????!!!!!!!!

அறிஞர். அ said...

வாழ்த்துக்கள் ரவி, உங்கள் வேலைவாய்ப்பு மலர் கொடிகட்டிப் பறக்கட்டும்.

ENNAR said...

என்ன ஆச்சு

குமரன் (Kumaran) said...

Ravi,

Is there any special reason?

Anyway all the best!!

Anonymous said...

பதிவர் வட்டத்துள் குசியானவர்-நீர்
மனக்கசப்பானால் வருத்தமே!!!வேலைப் பழுவானால்; என்ன ? செய்வது!
நல்லாச் சாதியுங்கள்!!
யோகன் பாரிஸ்

மிதக்கும்வெளி said...

ஏன்?

Anonymous said...

ரவி,
சில நாட்களுக்கு பின்னர் உங்கள் பதிவில் புதிதாக என்ன போட்டுள்ளீர்கள் என்று பார்க்க வந்தேன்.அதிர்ச்சியாக உள்ளது!
வருத்தமாகவும் உள்ளது. இந்த முடிவில் உங்களுக்கேனும் பயன் இருந்தால் அதற்காக மகிழ்வேன்.

மு.கார்த்திகேயன் said...

என்னாச்சுங்க ரவி..

//வேலைவாய்ப்பு மலர் தொடர்ந்து இயங்கும் என்பதை தெரிவிக்க மறந்துட்டேன் //

அப்பாடா..

Anonymous said...

1. தனித்திரு = கூட்டத்தில் ... கூட... காட்டுக்குப் போகாதே!
2. விழித்திரு = தூங்கியோ சோர்ந்தோ போய்விடாதே!
3. பசித்திரு = அடுத்தவர் பசியின்/ வலியைப் போக்க மற்றும் புரிந்துகொள்ள!

அற்புதமான தலைப்பு.. தொடரவும்... யாருக்காகவும் ...ஏன் உங்களுக்காகவும் கூட... மூடவேண்டாம். கருத்து மோதல்களைப் பெரிதாகஎடுத்துக்கொள்ள வேண்டாம். நான் கூட பார்ப்பனீயத்தை அசராமல்எதிர்ப்பவன் தான் அனால் அவர்களில் தான்எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். மனிதாபிமானம் தான் தலையாயது. சுயமரியாதை கூட அதைத்தான் சொல்கிறது! மூடுதல் யார்க்கும் (ரவிக்கும்!) எளியவாம் தொடர்தலே அரிது! தொடருங்கள்!! வாழ்த்துக்கள்!

ரவி said...

உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி !!! மிகுந்த கடமைப்பட்டவனாகிறேன்....தொடருவது குறித்து விரைவில் முடிவு செய்கிறேன், மேலும் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் தனித்தனி மடல் அனுப்புவேன்...அதுவரை காத்திருங்களேன் நன்பர்களே !!!!!!

NONO said...

இதுக்கும் ஒரு விழாவா?? சென்று வெற்றியோடு திரும்பிவரவும்!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....