Monday, January 29, 2007

ஜப்பானில் தமிழும் பரதமும் !!!!

இவ்வளவு அழகாக படங்களுடன் கட்டுரை வடிக்க முடியுமா என்று என்னை ஆச்சர்யப்படவைத்த ச.கமலக்கண்ணனின் கட்டுரை...சாம்பிள் கொஞ்சம் கீழே...

"அணுகுண்டின் பாதிப்பு வெகுநாட்களுக்குத் தொடர்ந்தது. சடாக்கோவும் பள்ளிக் குழந்தைகளும் மனதை விட்டு அகல மறுத்தனர். ஒருவழியாக, ஜூலை கடைசி வாரத்தில் ஓஸகாவில் நடைபெற்ற தென்ஜிம் திருவிழா மனதுக்கு ஆறுதலளித்து, வேறு திசையில் கவனம் செலுத்த உதவியது. ஜப்பானில் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லையென்றாலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வருடத்துக்கு இரண்டோ மூன்றோதான். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு திருவிழா. ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு புராணம். பள்ளியில் படிக்கும் காலத்தில், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் என்ற ஊரில் கோலாகலமாக நடக்கும். சுற்றியிருக்கும் பதினெட்டு பட்டிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். பிறகு கல்லூரி, வேலை என்று வெளியூர் வாசத்தினால் பாரியூர் செல்வது குறைந்து விட்டது. இந்தத் தென்ஜிம் திருவிழா அதை நினைவூட்டியது.

டோக்கியோவில் காண்டா (Kanda), கியோட்டோவில் கியோன் (Gion) மற்றும் ஓஸகாவில் தென்ஜிம் ஆகிய மூன்று திருவிழாக்களும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்றும், லட்சக்கணக்கானோர் பார்த்தும் மகிழக்கூடிய ஒரு பிரம்மாண்டமான திருவிழா. இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. கி.பி 845 முதல் 903 வரை திரு. சுகாவரானொமிச்சிஸானே என்று ஒரு அறிஞர் ஓஸகாவில் வாழ்ந்து வந்தார். அவர் இறந்த பிறகு தோஜிமா (Dojima) ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டார். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து, ஓஸகாவில் பெரும் இயற்கைச் சீற்றம் ஏற்பட்டது. இடி, மின்னல், மழை, புயல், சூறாவளி, சுனாமி என அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலின்றி இயற்கையால் துன்புறுத்தப்பட்டனர். இவையனைத்தும் சுகாவரானொமிச்சிஸானேவின் மரணத்தையொட்டியே நடந்ததால், அவர்தான் காற்றுக் கடவுளாக மாறியிருக்கிறார் என நம்பத் தொடங்கி விட்டனர்."

மேலும் படிக்க

3 comments:

வடுவூர் குமார் said...

தொண்டை அடைக்கிறது.
கண்ணில் நீர் கோர்க்கிறது.
வெகு அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது.
பார்வைக்கு வைத்தற்கு நன்றி.

Anonymous said...

vanakkam Ravi..

ungkal pathivukalai padikkum silent reader naan..

Neenggal thiramaiyaana pathivarkaLin ezhuththukkLai avvappOthu sample-aaga pOddukaaddi avarkaLin kaivanNnNangkalai maRravarkaLum arimukappaduththuvathu, ungkalidam enakku pidiththa oru vishayam..

ungkalin pathivukaLum arumai. innum Niraiya ezhutha en vaazhththukkaL.

Anonymous said...

பாராட்டுக்களுக்கும் சுட்டி கொடுத்ததற்கும் நன்றி ரவி.

நன்றி
கமல்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....