Sunday, October 07, 2007

ஆபாச கும்மிகள் குறித்து !!!

கும்மிப்பதிவர்கள் கவனத்துக்கு என்று தான் தலைப்பிடலாம் என்று நினைத்தேன்...விரைவான அட்டென்ஷனை உடனடியாக பெறவேண்டிய பதிவென்பதால் இப்படி தலைப்பிடவேண்டியதாயிற்று...

கும்மி என்றால் என்ற என்று அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுக்கும் காலத்தை தமிழ் வலையுலகம் தாண்டிவிட்டதாகவே நினைக்கிறேன்....மீடியாக்கள் நோக்கும் பதிவர் பட்டறைகளில் கூட - லக்கி போன்றவர்கள் - கும்மிப்பதிவரென அறிமுகம் செய்துகொள்ளுமளவுக்கு 'கும்மி' புழக்கமான வார்த்தைதான்...!!!

மற்றபடி சுருக்கமாக சொல்லவேண்டுமானால் - அதர் ஆப்சன் / அனானி ஆப்சன் உபயோகப்படுத்தி பதிவில் சொல்லமுடியாத விடயங்களை பின்னூட்டங்களில் கொடுத்து, படிப்பவரை சில வினாடிகள் வயிறு குலுங்க, அலுவலகத்தில் தனித்து சிரிக்கவைத்து 'லூசு' பட்டம் பெற்றுத்தரவோ - நல்ல தரமான கும்மிப்பதிவரால் முடியும்...

சிலர் பதிவே கும்மிக்கென நடத்திச்செல்வதும் உண்டு...நன்பர் ஓசை செல்லா ஒரு உதாரணம்...அதை விடுங்க...நான் விஷயத்துக்கு வரேன்....

சமீபகாலமாக வலையுலகம் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக படுகிறது...ஏன் அவருக்கு பின்னூட்டம் போட்டே ? - சாதியை எதிர்க்கும் எங்கள் இயக்கம் ( ஆமாம் பெரிய 'சே' 'குவாரா' இயக்கம்) என்று அர்ச்சிக்கும் புண்ணூட்டங்கள் நின்றுபோன நிலையில் புதியதொரு பிரச்சினையை வலையுலகம் இப்போது சந்திக்கிறது...

அதற்கு யார் காரணம் என்று ஆதியையும் அந்தத்தையும் தேடிச்செல்லுமுன் அது 'இன்னா' அப்படீன்னு உங்களுக்கு சொல்றேன்..

வசதியான பதிவுகளில் ( அதர் / அனானி ஆப்சன் திறக்கப்பட்ட நிலையில் உள்ள பதிவுகளில்), எந்த பின்னிஊட்டம் போட்டாலும் பப்ளிஷ் செய்து தொலைக்கும் கொலைவெறி வலைஞர்கள் பதிவுகளில், முகம் சுளிக்கும்படியான ஆபாச அர்ச்சனை பின்னூட்டங்களும், தனிமனித தாக்குதல் பின்னூட்டங்களும் சற்று 'தாராளமாக' நாற்பதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், இணையத்தில் எப்போதும் 'உக்காந்தான்' களால் போடப்படுகிறது...

கும்மிப்பதிவர்களும், பின்னூட்டம் வருகிறதே என்ற காரணத்தால் - அதன் உள் மூலம் / வெளி மூலம் அறியாமல், பத்தோடு பதினொன்றாக அதையும் ரிலீஸ் செய்து தொலைத்துவிடுகிறார்கள்...

வரவணையான் 'பிடல் காஸ்ட்ரோ' பற்றி பதிவிட்டபோது, அதில் " இமெல்டா மார்க்கோஸ்" என்ற பின்னூட்டத்தை படித்து சுவற்றில் முட்டி சிரித்தேன்...ஆனால் அதில் மேலும் சில பின்னூட்டங்கள் பதிவை அசிங்கப்படுத்தும் நோக்கோடும், பதிவரின் கண்ணியத்தை குலைக்கும் வகையிலும் போடப்பட்டு அவை வெளியிடப்பட்டுமுள்ளன...

மட்டமான கருத்துக்களை வலையெங்கும் தெளித்துக்கொண்டிருந்த 'பாலா' என்பவரை, போலி பாலா, ISO 9002 பாலா என்று ஓட்டித்தள்ளி, இப்போது தன்னுடைய அரைவேக்காட்டுத்தனங்களை சில பதிவுகளில் வைப்பதை சுத்தமாக நிறுத்திக்கொண்டார் அவர்...

இந்த வகையில், லக்கிலூக்கின் " கலைஞர் கட்டையில போகட்டும்" பதிவிலும் அநாகரீக பின்னூட்டம் பத்தோடு பதினொன்றாக வெளிக்கிட்டு நிற்கிறது...

தமிழச்சி பதிவு, இந்த அனானி அசிங்கங்களுக்கு சரியான களம்.."பெங்களூர் அருண் ஒரு பேமானி" என்று புண்ணூட்டமிட்டுவிட்டு சென்றால், தமிழச்சி அதை வெளியிட்டு, "பெங்களூர் அருண் யாருன்னு தெரியாதுங்க அனானி" என்று வெள்ளந்தியாக பதிலிறுப்பார்...

அதே போல் லக்கிலூக் பதிவொன்றில் (தானே கேள்வி / தானே பதில்), "உண்மைத்தமிழன் ஒரு மொள்ள மாறி" என்ற பின்னூட்டம் உண்மைத்தமிழனை காயப்படுத்தியிருக்கிறது...அதை விசாரித்து தெரிந்துகொண்டேன்...லக்கியும் அதனை நீக்க மறுத்து விட்டார்...அதனால் அதே அனானியை, "அப்போ நீ ஒரு தெள்ளவாறி" என்று நான் ஒரு லெக்ஸைட் ஸிக்ஸ் அடித்துவிட்டு வரவேண்டியதாயிற்று...

இதே போல் தமிழ்பித்தன் பதிவு கொச்சையாக்கப்பட்டு, அதில் என்னுடைய குடும்பம் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருந்தது...ஆனாலும் முழு/முக்கா/அரைகிறுக்கன் தமிழ்பித்தன், அதனை வெளியிட்டதோடல்லாமல், அதற்கான எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இன்றும் தமிழ் கம்பூட்டர் துறையை ஆன்லைனில் மி(மு)ன்னேன்ற நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கிறார்...ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவனாயிருந்தால் சம்பந்தப்பட்ட என்னிடம் மன்னிப்போ, உடனடி பின்னூட்ட நீக்கமோ செய்திருப்பான்...இவன் எழுதி தமிழ் கணினி உலகம் தலைகீழ மாறப்போகுதா என்ன ?

வளர்மதி பதிவொன்றில் (ஜாதிப்புத்தி) அதை நான் தட்டிக்கேட்கப்போக, அடுத்ததாக என்னுடைய குடும்பத்தை இழிவாக்கி ஒரு புண்ணூட்டம்...அதையும் வெளியிட்டு தன் சிறு / குறு / மினிமல் / இலக்கிய அறிவை பட்டைதீட்டி சொறிந்துகொண்டார் வளர்மதி...

பெயரிலி அவர்களை பற்றியும் சில புண்ணூட்டங்களை ஆங்காங்கே பார்க்க நேரிட்டது...

டோண்டு இரண்டு வருடம் முன்னால் சொல்லிய கருத்துக்கள் தவறு என்று முந்தாநாள் பதிவுலகில் சேர்ந்த "பதிவன்" என்ற பதிவர் சொல்கிறார்..இவர் ரொம்ம்ம்ப புதிய பதிவர் தான் போலிருக்கு...

சுற்றி வளைத்துச்சொன்னால் இந்த புண்ணூட்டங்கள் டார்கெட் செய்வது ஒரு சிலரைத்தான்...

ஓசை செல்லா
குழலி
செந்தழல் ரவி
உண்மைத்தமிழன்
டோண்டு ராகவன்
பெயரிலி
லக்கி லூக்
பெங்களூர் அருண்
தமிழச்சி
சில அமெரிக்க வாழ் பதிவர்கள்

இப்போ புரிஞ்சு போயிருக்குமே ? ஆனாலும் இது மட்டும் இந்த பதிவுக்கு காரணம் அல்ல...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டம் உங்கள் அனுமதியோடு வெளிக்கிடுகிறது...உங்கள் பதிவென்பது உங்கள் வீடு...அதில் மாற்றான் வந்து 'பிஸ்' அடிக்கவோ, 'பான்பராக்' எச்சில் துப்பவோ அனுமதிக்காதீர்...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி...

இணையம் கட்டற்றது என்பது ஓசை செல்லா அடிக்கடி சொல்வது...ஏற்றுக்கொள்ளக்கூடியதே...ஆனால் மாலன் சொல்லிய ஒரு கருத்து இன்றும் மனதில் நிற்கிறது..."உங்கள் மொழியையே நல்ல வார்த்தை / கெட்ட வார்த்தை என்று ஒரு வரையறைக்குள் நின்று புழங்கும்போது, இணையத்தில் எழுதினாலும், டைரியில் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுதான் எழுதவேண்டும்" என்றார்...முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது...

இன்றைக்கு குட்டிப்பாப்பாக்களும் வலைப்பதியவும், தமிழ் இணையத்தை எட்டிப்பார்க்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் இந்த கசடுகளை அவர்களுக்காக நீங்கள் உங்கள் 'வீட்டில்' விட்டுவைத்திருக்கவேண்டுமா ?

வீட்டை சுத்தமாக வைத்திருங்கள் என்று அடுத்தவர் சொல்லியா தெரியவேண்டும் ?

கும்மிகள் ரசிக்கப்படக்கூடியவை...அவை தனிமனித தாக்குதலாகவும் ( முத்துலெட்சுமி அவர்களுக்கு அப்துல்கலாம் என்று பின்னூட்டம் போட்டு, மொகல் கார்டர் வந்து பார்வையிடவும் என்று அழைத்திருக்கிறேன்...அப்துல்கலாம் எங்க வந்து வலையுலகை பார்க்கப்போறார் என்ற போதிலும், அதில் ஆபாசம் இல்லாமல் காமெடிக்காக செய்தேன்...)

அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...

45 comments:

குசும்பன் said...

உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி..."

ரிப்பீட்டேய்!!!!

குசும்பன் said...

" இணையத்தில் எழுதினாலும், டைரியில் எழுதினாலும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் நின்றுதான் எழுதவேண்டும்" என்றார்...முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடியது..."

என்னால நின்னுக்கிட்டு எல்லாம் எழுத முடியாதுப்பா!!! உட்கார்ந்து கிட்டுதான் எழுதமுடியும்!!! நான் தொடந்து எழுதலாமா? கூடாதா?

மஞ்சூர் ராசா said...

//அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...//

ரிப்பீட்டே

மஞ்சூர் ராசா said...

//அன்பு நன்பர்களே...ஆபாச கும்மியை அனுமதியோம்...தார்மீக நெறிப்படி வலைப்பதிவோம்...தமிழ் இணையத்தை நாகரீகத்தை நோக்கியே முன்னெடுத்துச்செல்வோம்..பண்பும் கண்ணியம் காக்கும் தமிழ் பண்பாட்டினை பிறழோம்...வாருங்கள் உறுதியேற்போம்...//

எல்லோருடைய கருத்தும் இதுவாகவே இருக்கவேண்டுகிறேன்.

✪சிந்தாநதி said...

அவரவருக்கான நெறிமுறையை அவரவர் தான் வகுத்துக்கொள்ள வேண்டும்... அவரவர் பதிவுகளுக்கும் இதுவே நெறி..என்ன செய்ய பலருக்கும் இது புரிவதில்லை

ரவி said...

குசும்பன்...வாங்க..

நீங்க எப்பிடி வேனா எழுதுங்க...எப்படியோ ஒரு பாயிண்ட புடிச்சு ஒரு ஸிக்ஸ் அடிச்சிட்டீங்களே...

ரவி said...

வாங்க மஞ்சூர் அவர்களே...

நீங்கள் சொல்லியபடி எல்லோர் கருத்தும் இதுவாக இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்...

ரவி said...

வாங்க சிந்தாநதி...

கருத்துக்கு நன்றி...!!!!

G.Ragavan said...

ரவி, இதுக்கு ரெண்டே ரெண்டு விஷயத்தக் கடைப்பிடிச்சா போதும்.

1. எதிர்க்கருத்து சொல்றவன் எதிரி இல்லைன்னு நெனைக்கனும்

2. கருத்தைக் கருத்தால எதிர்க்கனும்

இது ரெண்டும் முடியாம...கருத்துக்கு என்ன கருத்துச் சொல்லி தன்னை நிலைநிறுத்திக்க முடியலையோ...அப்பத்தான் ஆபாசக்கும்மிகளும் பின்னூட்டங்களும் வர்ரது. இது கண்டிப்பா மறையனும்.

kiddy ppl said...

///.."பெங்களூர் அருண் ஒரு பேமானி" என்று புண்ணூட்டமிட்டுவிட்டு சென்றால், தமிழச்சி அதை வெளியிட்டு, "பெங்களூர் அருண் யாருன்னு தெரியாதுங்க அனானி" என்று வெள்ளந்தியாக பதிலிறுப்பார்...///

யாருங்க பெங்களூர் அருண்!!!!

வவ்வால் said...

ரவி,

சொல்லவந்த கருத்தை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிங்க!

ஒருவன் திறந்த மனதுடன் இருப்பதால் அவன் முதுகில் சிலர் சவாரி செய்கிறார்கள், அதற்கு அவனை பலி கடா ஆக்கலாமா?

இப்படி பின்னூட்டங்களில் வந்து நஞ்சைக்கொட்டுபவர்கள் ஒரு பக்கம் இருக்க பதிவிலேயே நஞ்சுடன் இருப்பவர்கள் நான் இப்போ என்ன இல்லாததை சொல்லிட்டேன் பெருசா எடுத்துக்காத என சொல்கிறார்களே அவர்களுக்கும் உங்கள் சித்தாந்தம் பொருந்துமா?

ரவி said...

ஜீ.ரா...

சரியா சொல்லியிருக்கீங்க...ஆனா அந்த மெச்சூரிட்டி வர நாளாகும்னு தோனுது...ஹும் பார்ப்போம்...

அ.தி.மு.கவுக்கு ஆதரவாக யாராவது எழுதினால் அவரை கொலைஞரின் பூத் ஏஜெண்டு லக்கிலூக் போட்டு கும்முவது இந்த வகை. இதை எண்பது கோடி இந்துக்களும் இலைக்காரனும் மட்டும் தட்டிக்கேட்கவேண்டும் :)))

ரவி said...

தோழர் தமிழச்சி...

பெங்களூரில் இருக்கும் அருண் என்பவர்தான் "பெங்களூர் அருண்".

ரவி said...

//இப்படி பின்னூட்டங்களில் வந்து நஞ்சைக்கொட்டுபவர்கள் ஒரு பக்கம் இருக்க பதிவிலேயே நஞ்சுடன் இருப்பவர்கள் நான் இப்போ என்ன இல்லாததை சொல்லிட்டேன் பெருசா எடுத்துக்காத என சொல்கிறார்களே அவர்களுக்கும் உங்கள் சித்தாந்தம் பொருந்துமா?///

பொருந்தாது...தனிப்பதிவு போடவேண்டும் இதுக்கு....

//ஒருவன் திறந்த மனதுடன் இருப்பதால் அவன் முதுகில் சிலர் சவாரி செய்கிறார்கள், அதற்கு அவனை பலி கடா ஆக்கலாமா? //

அதர் அனானி ஆப்ஷன்களை சொல்கிறீர்களா வவ்வால் அவர்களே ? :))

நாம் திறந்த மனதோடு எப்போதும் இருக்கமுடியாதென்று தோன்றுகிறது...நீங்கள் இதை ஆழமாக சிந்தித்துப்பாருங்களேன்...

kiddy ppl said...

//செந்தழல் ரவி a dit...
தோழர் தமிழச்சி...

பெங்களூரில் இருக்கும் அருண் என்பவர்தான் "பெங்களூர் அருண்".//

ஓ! பெங்களுரில் இருக்கும்
பெங்களுர் அருண் தான்
பெங்களுர் அருணா?
அப்படியென்றால் பெங்களுர் அருண் யாருங்க?

ரவி said...

தோழர்.தமிழச்சி...

மேலும் விளக்குகிறேன்...

தினமும் காலையில் பொங்கல் சாப்பிடும் இவர் முன்னாள் அமைச்சர் பொங்களூர் பழனிச்சாமியின் உறவினர் அல்ல...அப்படி இருந்திருந்தால் இவரை பொங்களூர் அருண் என்று அழைத்திருக்கலாம்...அப்படி இல்லாததாலும், இவர் பெங்களூருக்கு போய் இறங்கியதாலும் ( வந்தேறிக்கு ஆப்போஸிட் வேர்ட்) பெங்களூர் அருண் என்று அன்போடு அழைக்கப்பட்டார்...

மேலும் புரியவில்லையென்றால் படீரென கேட்கவும்...திடீரென ஆன்ஸர் செய்கிறேன்...

வித்யா கலைவாணி said...

தரக்குறைவான பின்னுட்டங்களை பதிவர்களே கண்டு நீக்கு விட்டால் வலையுலகில் எந்த கசடும் இராது. மேலும் அவ்வாறு பின்னுட்டங்களை இடுபவர்களும் நிறுத்திக் கொள்வார்கள். தரக்குறைவான பின்னுட்டங்களை அனுமதிப்பது அவர்களை நாமே ஊக்கப் படுத்துவது போல தான்.

ரவி said...

வாங்க வித்யா.கலைவாணி. முதல் விசிட் அடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன்...

இனிமையான வலைப்பதிவு அனுபவத்துக்கு வாழ்த்துக்கள்...

வினையூக்கி said...

கும்மிகள் குதுகலத்திற்கு மட்டும்தான். அதர் ஆப்ஷனில் நல்ல பெயர்களில் கும்மி அடிப்பது தனி சுகமே!! அண்டார்டிகா ஆவி, அமிஞ்சக்கரை ஆவி, வீடு காலி இல்லை, அட்வான்ஸ் அதிகமாக கேக்குறாங்க என்று தலைப்பிட்டு ஒரு 10 நிமிடத்தில் 10 பின்னூட்டம் போடுவதின் கஷ்டம் அதைப்படித்துவிட்டு மற்றவர்கள் சிரிப்பதில் போயே போய்விடும்.
சரி ரவி, இங்கு நல்ல கும்மி உண்டா?

Pot"tea" kadai said...

நான் சென்னை கடற்கரைச்சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் இன்று மாலை இந்திய நேரப்படி 5.00 மணியளவில் கேத்தரினுடன் கதைக்க இருப்பதால் நான் கொஞ்சம் எக்ஸைட்டடாக இருக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கும்முவது கும்மாமைபோல் கும்மியபின்
பம்முவது தமிழ்வலைபதிவனின் இயல்பு

-தெருவள்ளுவன்

ரவி said...

கேத்தரீனோடு கதைக்கும் பொட்டீக்கடையாருடன் நானும் இணைந்துகொள்வேன் என்று தெரியாதா ? என் சார்பாக ஏஞ்சலீனா கோயிந்தசாமி இந்த சந்திப்பில் கலந்துகொண்டு சில ஜைக்கூ கவிதைகளை குக்கூ கூ கூ என்று கூவ..ச்சே வாசிக்க இருக்கிறார்...

ரவி said...

வினையூக்கி செல்லம்...

இந்த பதிவில் அனானி ஆப்சன் இல்லாததாலும், முக்கிய கும்மியர்காள் சில பல சந்திப்புகளை சிலமணி துளிகளில் நடத்துவதாலும், பிறகு வைத்துக்கொ(ல்)வோம்...

கிழிஞ்சிது டவுசரு said...

//சரி ரவி, இங்கு நல்ல கும்மி உண்டா?//

அனானி அதர் ஆப்சன் இல்லைsi

Pot"tea" kadai said...

எனது தோழர் யேனல் அலமேலுவும் கலந்து கொள்ள முயற்சிப்பதாக இப்போது தான் பேஜர் மெஸேஜ் அனுப்பினார்

kiddy ppl said...

//மேலும் புரியவில்லையென்றால் படீரென கேட்கவும்...திடீரென ஆன்ஸர் செய்கிறேன்...//

படீரென்று கேட்கிறேன்

பெங்களூர் அருண் யாரு?

ரவி said...

தமிழ்நாடு டாக் போன்ற கருத்துக்களங்களில் எழுதி வருபவர்.

லக்கிலூக்கின் தோழர். லக்கிலூக்கை தமிழ் வலையுலகில் எழுதும்படி தூண்டியவர்.

அனானியாக பல பதிவுகளை படிப்பவர்.

மூர்த்தி போலி டோண்டுவாக செயல்படுவதை பிறருக்கு சொல்லுவதாக மூர்த்தியால் ஆபாசமாக அர்ச்சிக்கப்பட்டவர்.

kiddy ppl said...

///தமிழ்நாடு டாக் போன்ற கருத்துக்களங்களில் எழுதி வருபவர்.

லக்கிலூக்கின் தோழர். லக்கிலூக்கை தமிழ் வலையுலகில் எழுதும்படி தூண்டியவர்.

அனானியாக பல பதிவுகளை படிப்பவர்.

மூர்த்தி போலி டோண்டுவாக செயல்படுவதை பிறருக்கு சொல்லுவதாக மூர்த்தியால் ஆபாசமாக அர்ச்சிக்கப்பட்டவர்.///

no.. no.. என் கேள்விக்கு பதில் இதுவல்ல!

பெங்களுர் அருண் யாருங்க?

உண்மைத்தமிழன் said...

தம்பீபீபீபீபீபீபீபீபீபீபீபீ............

நன்றிறிறிறிறிறிறிறிறி...........

SurveySan said...

நல்லாருக்கே மேட்டரு.

எல்லாரும் க்ளீனா எழுதினா, நம்ம விரும்பர அடுத்த கட்டத்துக்கு ஈஸியா போலாம்.

கலீஜ் தவிர்த்தல் நலம்.

SurveySan said...

Moderation தேவைப்படாத ஒரு ஹெல்த்தி கும்மிலோகத்தை எதிர்பார்த்து,,

..சர்வேசன் :)

dondu(#11168674346665545885) said...

//பெங்களுர் அருண் யாருங்க?//
எனது சிறந்த நண்பர். போலி டோண்டுவாக மூர்த்தி கொட்டம் அடித்து கொண்டிருந்த போது அவனை மிக உறுதியுடன் எதிர்த்த மிகச்சிலரில் ஒருவர்.

அதனால் மிகமோசமாக மூர்த்தியாலும் அவனது அள்ளக்கைகளாலும் தாக்கப்பட்டவர். ஆனாலும் மன உறுதி இழக்காது இருப்பவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தமிழ்பித்தன் said...

ரவி அண்ணா?
நான் எழுதிய பதிவில் நான் பின்னூட்டங்களை திறந்து விட்டது உண்மை அது என் இயலாமையாக கூட இருக்கலாம் ஆனால் எனது பதிவில் எந்த சந்தர்ப்பத்திலும் உங்களை சம்பந்தப்படுத்த வில்லை அப்படி நான் பதிந்து விட்டு பின்னர் நான் வந்து பார்க்கும் போது ஏராளமான பின்னூட்டங்கள் நான் வாசித்து பார்த்தது கிடையாது ஆனால் அப்போது எனக்கு விபரீதம் புரிய வில்லை புரிந்த போது நான் தமிழ் மணத்திலும் இல்லை விமர்சனத்துக்கு உட்பட்ட பதிவுகள் அழிக்கப்பட்ட பின்னரும் இப்படியான என்னைத்தாக்கும் பதிவுகள்....

லக்கிலுக் said...

//உங்கள் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு நீங்களே பொறுப்பு...அவை யாரையாவது புண்படுத்தினால் / அல்லது சம்பந்தப்பட்ட பதிவர் அப்ஜெக்ஷன் தெரிவித்தால் உடனே நீக்குவது தார்மீக நெறி...
//

:-)))))))))))))))))))))

Osai Chella said...

ithu super. aanaa ennai empaa vambukku ilukkire! emperu repair aakanumnu pala ullangkal thudikkuthu. nee vera adikkadi iluththuv idara. aanaakum nalla suvaiyaana patjhivu + pinnuuttangal. thamilachi unnai vidaramaathiri theriyalai!

ரவி said...

லக்கி, நீங்க என்ன சொல்ல வறீங்க ? இதை நீ சொல்றியாடா அப்படீங்கறீங்களா, அல்லது உனக்கென்ன திடீர் ஞானோதயம் அப்படீங்கறீங்களா ?

வெறும் ஸ்மைலி போட்டா என்ன அர்த்தம் ? பதிவர் சந்திப்பு பத்தி எழுதிக்கிட்டிரூக்கங்களா ?

kiddy ppl said...

அலோ என் கேள்விக்கு இன்னும் பதில் இல்லை!

திரும்பவும் கேட்கின்றேன்
பெங்களுர் அருண் யாரு?

துளசி கோபால் said...

ரெண்டு முக்கியமான சொற்கள் தலைப்பில் வந்தவுடனெ இப்படி மொய்யுது உங்க பின்னூட்டப்பெட்டி:-)))))


அது இருக்கட்டும். உங்க பதிவுக்கு நான் வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்.

ரவி said...

ஹலோ, பெங்களூர் அருண் அவர்களே, எங்கிருந்தாலும் வரவும்...தமிழச்சி என்னை பொரட்டி பொரட்டி எடுத்து வறுக்கிறாங்க...வந்து நீங்களே யார் என்று அவங்களிடம் சொல்லவும்...

டீச்சர்...வருகைக்கு நன்றி...ஹி ஹி ஆமாம்...இப்படித்தான் தலைப்பு வைக்கனும்னு ஒரு அகராதியே போடலாம் போலிருக்கு....!!!

kiddy ppl said...

டீச்சர்...வருகைக்கு நன்றி...ஹி ஹி ஆமாம்...எல்லாம் இருக்கட்டும்

பெங்களுரு அருண் யாரு?

சதுக்க பூதம் said...

http://thatstamil.oneindia.in/news/2007/10/08/why-postings-in-comments-sectrion-banned.html

Arun Kumar said...

தமிழச்சி ,
நான் தான் பெங்களூர் அருண்..
பெங்களூரில் நான் மட்டும் அருண் என்ற பெயரில் இருக்கவில்லை.. 75 லட்ச மக்களில் நானும் ஒரு பிரஜை அவ்வளுவுதான்.

ரவி
ஏன் என்னையே தமிழச்சி கேட்டுகிட்டு இருக்காங்க?? :)

ILA (a) இளா said...

ரவி,
அடப் போங்கய்யா. நீங்களும் லக்கியும்தான் அதர் அனானி வெச்சு விளையாடவே ஆரம்பிச்சது. செய்யுறது எல்லாம் செஞ்சுட்டு அப்புறம் செய்யாதேன்னா என்ன அர்த்தம்.

வவ்வால் said...

//ரவி,
அடப் போங்கய்யா. நீங்களும் லக்கியும்தான் அதர் அனானி வெச்சு விளையாடவே ஆரம்பிச்சது. செய்யுறது எல்லாம் செஞ்சுட்டு அப்புறம் செய்யாதேன்னா என்ன அர்த்தம்.//

இளா ரிப்பீட்ட்டேடேயே...
(இப்போ வேண்டாம் சொல்லக்காரணம்,அதர், அனானி, வித்தையை மத்தவங்களும் கத்துக்கிட்டாங்களே என்ற ஆதங்கமா இருக்குமோ)

ரவி said...

இளா...ஆபாசமில்லாத கும்மிக்கு எப்போதும் எனது ஆதரவு...

kiddy ppl said...

///////////தமிழச்சி ,
நான் தான் பெங்களூர் அருண்..
பெங்களூரில் நான் மட்டும் அருண் என்ற பெயரில் இருக்கவில்லை.. 75 லட்ச மக்களில் நானும் ஒரு பிரஜை அவ்வளுவுதான்.

ரவி
ஏன் என்னையே தமிழச்சி கேட்டுகிட்டு இருக்காங்க?? :)////////////


ரவி பெங்களுர் அருண் கண்டுபிடிச்சிட்டேன். நம்ம இயக்கம் விஷயமாக அவரிடம் பேசலாமா? தற்கொலை படையில் சேர கேட்கலாமா? ..........

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....