Monday, May 31, 2010

புனைவாக எழுதுதல் !


ஒரு செமி.சீரியஸ் பதிவு ஒன்றுக்கு எழுதப்பட்ட படு காமெடி பதிவு, ஆணாதிக்க வெறியும், வன்மமும் அழுக்கும் ஆக நிறைந்த ஒரு கீழ்த்தரமான ஆபாச புனைவு பதிவும், அதில் குழந்தையை கொல்வேன் என்பது போன்ற மிரட்டல் உருட்டல்களாகவும், அந்த ஆபாசத்தை சமப்படுத்தும், நியாயப்படுத்தும் பின்னூட்டங்களாகவும், இதனை வைத்து காமெடி செய்து கல்லா கட்டும் பதிவுகளாகவும்...

இது இரண்டு தனி நபர்களின் பிரச்சினை என்ற அளவில் சுருக்கக்கூடிய ஒன்றா ? அல்லது ஒட்டுமொத்தமாக படிப்பவர்களின் மனதை உலுக்கக்கூடியதா ? ஒருவேளை முல்லை என்ற பெண் என்னைப்போல சஞ்ஜெய் காந்திக்கோ, வடகரையாருக்கோ, அல்லது விக்னேஷ்வரிகோ, சின்ன அம்மணிக்கோ சகோதரி இல்லை என்றால், நீங்களும் சொம்பை தூக்கிகொண்டு போய் பின்னூட்டத்தில் பஞ்சாயத்து செய்யலாம்..!!

எனக்கு கோபம் மட்டுமே வருகிறது...!

அவள் என் மீது கல் எறிந்தாள். நான் அவள் நெஞ்சைப்பிளந்து இதயத்தை எடுத்தேன் என்பது போல, என் மீது எதிர்பதிவும் பின்னூட்டமும் போட்டமைக்காய், நாள் அவளை அவுசாரி என்றேன். எவனோடோ படுப்பவள் என்றேன். குழந்தையையும் அதில் கொண்டுவந்தேன். என்று சொன்னால். உங்களால் ஒருவேளை, ஓ கொஞ்சம் ஓவராய்த்தான் டென்ஷன் ஆகி புனைந்துட்டார் என்று நினைக்கமுடிகிறதென்றால், நீங்கள் என்னைப்போல அவளுக்கு சகோதரன் இல்லை என்று நினைக்கிறேன்...

நாம் என்ன வகையான சமூகத்தில் வாழ்கிறோம் ? பகுத்தறிவும், சக மனிதனை மதிக்கும் பாங்கும் வளரவேண்டிய தருணம். அதை வளர்க்கவேண்டிய ஆட்களே அதனை குழி தோண்டி சமாதி செய்தால் எங்கே சென்று முறையிடுவது ?

பிள்ளை கண்ணாடி டம்ளரை உடைத்தமைக்கு கத்தியால் குத்தியது போல இருக்கிறது இந்த செய்கை. பலர் பின்னூட்டங்களில் சொம்பை தூக்கிகொண்டு நிற்பதும் இதை வைத்து கும்மி அடிப்பதும் கொடூரத்தின் உச்சம்..

அந்த 'புனைவில்' தெறிக்கும் வன்மத்தை வைத்து சொல்கிறேன். இதை போன்றதொரு வார்த்தை பிரயோகத்தையும், ஏதுமறியா குழந்தையை கூட ஆபாச வார்த்தைகளை சொல்லி எழுதுவதற்கும், ஒன்று மனப்பிறழ்வு இருக்கவேண்டும், அல்லது அந்த அளவு காயப்பட்டிருக்கவேண்டும்...

நன்பருக்கு உதவுகிறேன் என்று சகா அங்கே பின்னூட்டத்தில் பேசும் வார்த்தைகள் உச்சகட்ட ஆபாசம். இந்த ஆபாசங்களையும், பெண் இனத்தையே இழிவு செய்யும் வார்த்தைகளையும் 'தோழி' படித்துப்பார்ப்பாரா ? உருகி உருகி காதல் செய்யும் கார்க்கியின் மனதில் இருந்து வழியும் அந்த அமிலம். நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு குழந்தையை கொல்கிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் மனநோயாளி. அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்..

முதல் பதிவை எழுதிய ஆதி, எதிர்பதிவு விஜி, அதில் பின்னூட்டிய முல்லை, அப்புறம் நர்சிம், அதன் பிறகு கார்க்கி என்று எல்லாரும் ஒன்று என்மீது மதிப்பாய் இருப்பவர்கள். அல்லது உறவினர். அல்லது நன்பர். என் கண்களும் கைகளும் ஒன்றோடொன்று காயப்படுத்திக்கொள்வதை போலத்தான் கடந்த இரண்டு நாட்களுக்குமான பதிவுகள் வந்துள்ளன..என்ன ஒரு கை இன்னொரு கையை லேசாக தட்ட, அது கண்களை பிய்த்து எறிந்துவிட்டது. என்னால் தான் சரியாக பார்க்க இயலவில்லை. 

நான் பெரிதும் நட்பை வைத்துள்ளவர்கள் இப்படி கீழ்த்தரமாக இறங்குவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நர்சிம் அந்த ஆபாச பதிவை நீக்கினாலும், அது அனைவரின் ரீடரிலும் உள்ளது. அவர் தனது தவறை உணர்ந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விட்டால் பாதி கிணறு. அதனை பாதிக்கப்பட்ட எனது சகோதரி ஏற்றுக்கொண்டால் மீதி. 

75 comments:

ராம்ஜி_யாஹூ said...

In Yahoo chat rooms, we have an option called Ignore.

I think in Blog too we should have this option so that we could ignore these kind of blogs(bloggers).

Is there any possibility to enable that option .i.e if I want to remove one blogger's address, can I do it (can i block).

பழமைபேசி said...

வணக்கம்!

பாலா said...

சம்பந்தப்பட்ட யாரோட பதிவையும் நான் படிக்கிறதில்லை. மணம்/ழிஷ் போய் மாசக்கணக்காச்சி.

இன்னைக்கு குசும்பன் பதிவு மூலமா தெரிஞ்சி.. என்ன ஏதுன்னு கண்டுபிடிச்சி தெரிஞ்சிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சி போங்க.

அ.முத்து பிரகாஷ் said...

காலை வணக்கங்கள் தழல் !
"அவர் தனது தவறை உணர்ந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விட்டால் பாதி கிணறு. அதனை பாதிக்கப்பட்ட எனது சகோதரி ஏற்றுக்கொண்டால் மீதி. .. "
நான் பதிவுலகத்திற்கு இணையத்திற்கு புதியவன் ...
அன்பினால் ஆளப்படட்டும் இவ்வுலகு !
வருகிறேன் தோழர் !

அபி அப்பா said...

ரவி! நீ சொன்னது எல்லாம் வாச்தவம்ப்பா!

ஆனா அந்த பதிவு எடுத்தாகி விட்டது. ஆனால் அந்த பதிவு??? அந்த பின்னுட்டம்???

எதுவுமே நடக்கலையே?


தனக்கு தனக்குன்னா தான்ன்னு ஒரு பழமொழி இருக்குன்னு நியாபகபடுத்துறேன்.

அபி அப்பா said...

சிகப்பு தோழர் மதவராஜ்க்கு பின்னூட்டம் போட்டேன். காலை எழுந்து வெளியிடுவார்ன்னு நினைக்கிறேன். பார்ப்பேன்!

Dr.Rudhran said...

missed reading the currently hidden blog by narsim.
from reactions and your blog it appears that there has been an ugly expression which too had found some takers.
i appreciate your concern in this.

காமராஜ் said...

அன்பின் ரவி.
உங்களின் கண்டனப்பதிவு.
மிக மிகச் சரியானது.இதைவிடவும் நிதானமாகச்சொல்லிவிட முடியாதெனவே கருதுகிறேன்.

இதுபோல ஒரு பத்துப்பேர் சொல்லியிருந்தால் இல்லை பத்துப்பேர் நம்மை இடித்துச்சொல்ல இருக்கிறார்கள் என்கிற தாக்கம் இருந்திருந்தாலும் கூட அந்தப்புனைவு வந்திருக்காது.

இப்பவும்,சொம்பு நாட்டாமை என்கிற ரீதியான பின்னூட்டங்கள் இதை திசை திருப்புவதாக அல்லது ஜாய்சில் விடுவதாகவே தோனுகிறது.

ரவி ...நீதி சாகவில்லை இன்னும் இருக்கு.

காமராஜ் said...

அபி அப்பா..
வணக்கம்.
பதிவை நீக்கிவிட்டதாக சொன்ன தொனிக்கு அர்த்தம் விளங்குகிறது.

சிகப்புத் தோழர் என்கிற சொல்லை ஜாலியாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் முல்லையை எழுதிய வார்த்தைகள்.

நாமெல்லாம் உண்மையில் அவளுக்கு அண்ணன்கள் இல்லை என்கிற குழு னப்பாண்மையும்.கருப்பு சிவப்பு எனப்பிரிக்கிற பகுத்தறிவும் தான் காரணம்.

ஒருவருக்கொருவர் முகம்தெரியாது,
ஒருவருக்கொருவர்,
ஜாதி தெரியாது,
ஒருவருக்கொருவர்
மதம் தெரியாத ஒ
ற்றுமை இங்கு சாத்தியம் என நினைத்தேன்.நம்புகிறேன் அதை வளர்ப்போம் அபி அப்பா.
ஒரு கை கொடுங்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திட்டறது காயப்படுத்தரது எல்லாம் வலையுலகத்துக்கு புதுசே இல்ல... ஆனா இது :(
யாரையுமே இனி நம்பறதுக்கு பயம்மா இருக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிட்டே போகு்து

\\பிள்ளை கண்ணாடி டம்ளரை உடைத்தமைக்கு கத்தியால் குத்தியது போல இருக்கிறது இந்த செய்கை.// உண்மை.

சென்ஷி said...

@ ரவி...

என்ன சொல்லன்னு தெரியலை.. சில அல்லக்கைங்க தொல்ல எல்லா இடத்துலயும் இருந்துக்கிட்டுத்தான் இருக்குது.

பதிவை அழித்துவிட்டாலும் அதில் குறிப்பிடப்பட்ட பின்னூட்டங்களில் குதறப்பட்ட வார்த்தைகள்..

நண்டு கொழுத்தா வளையில தங்காதுன்னு சொல்ற கதைதான்..

ம்ஹ்ம்.. என்னத்தப் படிச்சு... என்னத்தைப் படிக்க வச்சு..

குழலி / Kuzhali said...

ரவி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய பதிவு... கிண்டல்களை எதிர்கொள்ளும் முறை என்பது நிச்சயம் நர்சிம் எதிர்கொண்டது போல அல்ல... நர்சிம்மின் அந்த புனைவு மிக கோழைத்தனமானது,

அந்த பேட்டி கிண்டல் பதிவை பார்த்தேன் , இந்த கிண்டல்களையும் விட அதிகமாகவும் மூர்க்கமாகவும் இதற்க்கு முன் இணையத்தில் முகமூடி, (இணைய)குசும்பன் (இப்போது எழுதும் குசும்பன் அல்ல) எழுதுவார்கள், மற்றவர்கள் சிரித்தாலும் அதில் தொடர்புடையவர்கள் படிக்கும் போது ரத்தத்தை கொதிக்க வைக்கும், ஆனால் அப்போதும் கூட தொடர்புடையவர்கள் முகமூடியையும் இனைய குசும்பனையும் திரும்ப கிண்டலடித்துவிட்டோ அல்லது கண்டித்து கடுமையாக எழுதிவிட்டோ போவார்களே தவிர யாரும் நர்சிமை போல கேவலமாக நடந்து கொண்டதில்லை...

அந்த பேட்டியை கிண்டலடித்து எழுதியதில் அடிநாதமாக பிரியாணி வாங்கி கொடுத்து பேட்டி எடுக்க வைத்துள்ளார்கள் என்ற கிண்டலே... அய்யா நர்சிம் இதற்க்கே இப்படி கொத்தித்தெழுந்தால் நீங்கள் ஒரு இலட்ச ரூபாய் செலவு செய்து தண்ணி பார்ட்டி வைத்ததாலும் பலருக்கும் பணத்தை தண்ணீராக செலவு செய்வதாலுமே உங்களின் மொக்கையை கூட சூப்பர் என்று ஜால்ரா தட்டுகிறார்கள் என்று பலரும் பேசுகிறார்களே அதுவாவது தெரியுமா? இதை வெளியில் சொன்னதற்காக "பூக்காரன்" என்ற புனைவு வந்தாலும் கவலைப்படப்போவதில்லை.

எனக்கு இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது எந்த அளவு வக்கிரம் மனதில் இருந்தால் அது இப்படி வெளிப்படுமென்று. நல்லவனாக நடிப்பது என்பது நல்லவனாக இருப்பதை விட கடினமானது, ஏதேனும் ஒரு நொடியில் அது வெளியாகிவிடும்.

இந்த பிரபல பதிவர் என்பது எனக்கு செக்க காமெடியாக தோன்றுகின்றது, வலையுலகம் என்பது வெறும் 4000-5000 பேர் புழங்குகின்ற இடம், இதில் பிரபலம் என்பது மாலன் ஒரு முறை சொன்னது போல பனிப்பெய்து குடம் நிரம்பாது என்பதுவே அப்போது என்ன இப்படி சொல்கிறார் என வருத்தப்பட்டேன் ஆனால் நான் பிரபல பதிவர் பிரபல பதிவர் என்று சட்டையை கிழித்துகொள்ளும் அளவிற்க்கு முத்திப்போய் இருப்பதை பார்த்தால் தமிழ்நாடே எம் பின்னால என்கிற ரேஞ்ச் வசனங்கள் பேசும் சிம்பு, தனுஷ், பரத் போன்றவர்களே தேவலாம் போல...

குழலி / Kuzhali said...

போன பின்னூட்டத்தின் தொடர்ச்சியாக பதிவு எழுதுவது என்பது மட்டுமே நமது தொழில் அல்ல, தினசரி வேலை அழுத்தங்கள், பிரச்சினைகள், குடும்பம், பக்கத்துவீட்டுகாரன் பிரச்சினைகள் என்று எத்தனையோ அழுத்தங்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவோ அல்லது எழுத்தார்வத்தை தீர்த்துக்கொள்ளவோ, சமூக கோபத்தை காண்பிக்கவோ அல்லது ஏதோ ஒன்று தான் பதிவுலகில் எழுதவோ வாசிக்கவோ வைக்கின்றது, இங்கேயும் இப்படியான குரூரமான கிழிப்புகள் நீங்க ரணத்தை ஏற்படுத்தும், தினசரி வாழ்க்கையில் பதிவுலகம் தாக்கங்களை ஏற்படுத்தும்... நிச்சயம் அவர் இரண்டுநாளாவது தூங்கியிருக்கமாட்டார்...

உண்மைத்தமிழன் said...

சமயத்துல நீயும் நல்லாத்தான் எழுதுற தம்பி..!

குட் போஸ்ட்..!

குழலியண்ணே பின்னூட்டமே மிச்சம், மீதியையும் சொல்லிருச்சு..

பொட்டியை மூடிரலாம் போலிருக்கு..!

ஆயில்யன் said...

//பதிவு எழுதுவது என்பது மட்டுமே நமது தொழில் அல்ல, தினசரி வேலை அழுத்தங்கள், பிரச்சினைகள், குடும்பம், பக்கத்துவீட்டுகாரன் பிரச்சினைகள் என்று எத்தனையோ அழுத்தங்களிலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவோ அல்லது எழுத்தார்வத்தை தீர்த்துக்கொள்ளவோ, சமூக கோபத்தை காண்பிக்கவோ அல்லது ஏதோ ஒன்று தான் பதிவுலகில் எழுதவோ வாசிக்கவோ வைக்கின்றது, இங்கேயும் இப்படியான குரூரமான கிழிப்புகள் நீங்க ரணத்தை ஏற்படுத்தும், தினசரி வாழ்க்கையில் பதிவுலகம் தாக்கங்களை ஏற்படுத்தும்.//


வழிமொழிகிறேன் !

நன்றி குழலி அண்ணா!

காமராஜ் said...

குழலியின்
இரண்டு பின்னூட்டங்களும்.
மனதைத்தொடும் அதிர்வுகள்.

நன்றி குழலி.

அம்பிகா said...

\\அவர் தனது தவறை உணர்ந்துகொண்டதாக சம்பந்தப்பட்டவருக்கு தெரிவித்து விட்டால் பாதி கிணறு. அதனை பாதிக்கப்பட்ட எனது சகோதரி ஏற்றுக்கொண்டால் மீதி.\\

:-)))

Sanjai Gandhi said...

நர்சிம் பதிவில் கமெண்ட் போடுவதில் எனக்கு சில சங்கடங்கள் உண்டு. எனவே அவர் பதிவில் என் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மிக மோசமானவை . லக்கி, சொன்னது போல் பார்த்தாலும் , விஜியின் பதிவுக்கு எதிர்ப்பு சொன்னவன் என்ற முறையிலும் கூட நர்சிம் வார்த்தைகளை நான் எதிர்க்கலாம். :).

முல்லையின் குழந்தை பற்றிய பதிவுக்கு பாராட்டி பின்னூட்டமிட்டவர்களை “ வழிஞ்சான்கள்” என்றதற்கும், இவள் பொறப்பு அப்படி என அவர் தாயாரை இழிவு படுத்தியதற்கும் தனிப் பதிவே போட்டு கண்டிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன். ஆனால் , இவர்கள் இப்படித்தான் போல என்று தெரிந்தவுடன் அதற்கு அவசியமில்லை என்று விட்டுவிட்டேன். ஒருவர் மீது வன்மம் இருந்தால் அவரை மட்டும் எதிர்க்கனும். குடும்பத்தையே கேவலப் படுத்துவது என்பதெல்லாம் மிக மிக அநாகரிகம். குழலியை நான் ஆமோதிக்கிறேன்..

ஈரோடு கதிர் said...

குழலி பின்னூட்டமே என் கருத்தும்

கார்க்கிபவா said...

பகடியை பகடியாக பார்க்க முடிந்தவர்களுக்கு புனைவை புனைவாக பார்க்க முடியவில்லை..

நன்றி ரவி.

குசும்பன் said...

ரவி அண்ணே இவ்வளோ சூப்பரா எழுதியிருக்க! அப்ப எங்கூட்டு இல்லையா?:((

விருமாண்டி டயலாக்கையும் கடைசியில் சேர்த்திருக்கலாம் அண்ணே:))

அன்பரசு said...

சரியாகத்தான் சொல்லியிருக்கீங்க. ஆரம்பத்தில் ஒன்னும் புரியவில்லை (பூக்காரி பதிவையோ, அதன் எதிர் பதிவையோ முதலில் படிக்கவில்லை), அப்புறம், மாதவராஜ், காமரஜ் ம்ற்றூம் இந்தப் பதிவையும் படித்துதான் விளங்கியது. நர்சிம், கார்க்கியும் ஓவர் ரியாக்ட் பண்ணிவிட்டார்கள், ஆனால் பதிவிடுவது, பேசுவதைப் போல கண நேரத்தில் நிகழ்வதல்ல. நிதானமாகத் திட்டமிட்டே தான் எழுதியிருக்கவேண்டும். எனவே எனது கண்டணத்தையும் பதிவு செய்கிறேன் (சகோதரிகளின் எதிர் வினையிலும் கண்டணத்தைப் பதிவு செய்திருக்கிறேன்). எழுதுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்க இப்படியெல்லாம் நடப்பது வியப்பாக உள்ளது.
நன்றி செந்தழல் ரவி, பதிவுலகில் அதிகப் பரிச்சயம் இல்லாத நாங்கள் (எங்களுக்கென்று குழுக்களும் கிடையாது) இன்னும் ஒருவித தயக்கத்தோடுதான் எழுதுகிறோம். உங்கள் இப்பதிவு (மாதவராஜ், காமராஜின் பதிவுகளும்) எங்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.

ரவி said...

//புனைவு. மனசாட்சி என்னை அழுத்துகிறது.என் வாசகர்களிடம், என்னை நம்ப்ப்பி வாசிப்பவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என்னிடம் இருந்து அப்படி வார்த்தைகள், பெண்ணைப் பற்றிய கருத்துகள் இதுவரை வந்ததில்லை என்பது என்னைப் படித்தவர்களுக்கு தெரியும். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
//

frm narsim post

கார்க்கிபவா said...

//ம் 'தோழி' படித்துப்பார்ப்பாரா ? உருகி உருகி காதல் செய்யும் கார்க்கியின் மனதில் இருந்து வழியும் அந்த அமிலம். நினைத்து பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. ஒரு குழந்தையை கொல்கிறேன் என்று எவன் சொல்கிறானோ அவன் மனநோயாளி. அந்த தோழிக்கு எனது அனுதாபங்கள்//

ஹலோ பாஸ், என் தோழி நாகரீகமானவள். எங்க எப்படி நடக்கனும்னு தெரிஞ்சவ. அவள பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். தெரியாத ஆட்கள் பற்றி நீங்க கவலைப்படுங்க. என்னை பத்தி எழுதுங்க. அவள பத்தி எழுதினா விபரீதமாயிடும் பாஸ்.. :)))))

ரவி said...

கார்க்கி. அதேதான்...

என் சகோதரி என் தோழி என்று வந்தபிறகு ஒரு உணர்வு வருகிறதல்லவா ?

அது இயல்பிலேயே இருக்கும் ஒன்று.

எனக்கிருக்கும் எழுத்து சுகந்திரத்தை வைத்து, தோழியை வைத்து கூட புனைய முடியும். செய்யமாட்டேன்..

எனக்கு அடிப்படை மனிதப்பண்பு இருக்கிறது.

இந்த பொம்பளங்களே இப்படித்தான். அவுசாரி. படுப்பவள். குழந்தையை கொல்லலாம் என்கிற வார்த்தைகளை ஆமோதித்து உற்சாகப்படுத்தும் கொடூரம் ஏன் வந்தது ?

இன்னும் கூட நர்சிம்மோ அல்லது நீங்களோ இந்த செயல்களுக்கு வருந்தியதாகவோ, சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவோ தெரியவில்லை.

நாளை நமக்குள் ஒரு முட்டல் மோதல் வந்தால் நர்சிம் என் வீட்டு பெண்களை அவுசாரி என்று புனைவில் சொல்வார், நீங்களும் அவர்கள் அப்படித்தான், அந்த குழந்தையை கூட கொல்லலாம் என்பீர்கள் அப்படித்தானே ?

நான் மிகவும் மதிப்பு வைத்திருப்பவர்கள் இப்படி செய்வது எனது இதயத்தை உடைத்து நொறுக்கிவிடுகிறது..

கார்க்கிபவா said...

//இன்னும் கூட நர்சிம்மோ அல்லது நீங்களோ இந்த செயல்களுக்கு வருந்தியதாகவோ, சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவோ தெரியவில்/

நர்சிம் மன்னிப்பு கேட்டதை நீஙக்ளே எடுத்து போட்டு இருக்கிங்க..

சம்பனதப்படட்வங்க கிட்ட மன்னிப்பா? அது புனைவு பாஸ்... பகடின்னா இது புனைவு... ஆரம்பிச்ச்ச்வங்க கேட்கட்டும் முதல்ல

//என் சகோதரி என் தோழி என்று வந்தபிறகு ஒரு உணர்வு வருகிறதல்லவா//

உஙக்ளுக்கும் எங்கள் நிலையை புரியவைக்க உஙக்ள் நண்பரோ, உறவினரோ வைத்து நான் உதாரணம் சொன்னால், நர்சிம்மை விட கேவலமா பதிவு எழதிடுவிங்க சகா. மனிதன் என்பவன் உணர்ச்சியால் ஆனவன்

//எனக்கிருக்கும் எழுத்து சுகந்திரத்தை வைத்து, தோழியை வைத்து கூட புனைய முடியும். செய்யமாட்டேன்//

சவாலாகவே சொல்கிறேன். செஞ்சு பாருங்க.

/நாளை நமக்குள் ஒரு முட்டல் மோதல் வந்தால் நர்சிம் என் வீட்டு பெண்களை அவுசாரி என்று புனைவில் சொல்வார்//

இருவருக்கும் ஏற்கனவே ஒரு முட்டல் வந்துச்சு. அப்போ நர்சிம் இப்படி சொன்னாரா? அப்போ நீஙக்ளாம் எங்க போனிங்க? தேவையே இல்லாம அந்த பதிவுல நர்சிம்மை சீனடீங்க? கண்டிச்சிங்களா? அப்பலாம் எங்க பொன்னிங்க? இப்ப மட்டும் கேள்வி கேட்க ஏன் வந்தீங்க?

//நான் மிகவும் மதிப்பு வைத்திருப்பவர்கள் இப்படி செய்வது எனது இதயத்தை உடைத்து நொறுக்கிவிடுகிற/

எனக்கும் இதையெல்லாம் உங்கக்கிட்ட கேட்கிற நிலைமை வந்துடுசேன்னு கஷ்டமா இருக்கு சகா. ஆனா என்ன செய்ய? அதுக்கும் உங்க பதிவுதான் காரணம்.

கார்க்கியையும், நர்சிம்மையும் உஙக்ளுக்குட் தெரியாதா? இது மாதிர்யெல்லாம் செய்ற ஆளா? செய்றாங்கன்னா அதுக்கு என்ன காரணம் ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் யோசிக்க மாட்டிஙக்ளா?


நம் தெஇர்ந்த பெண்களை ஒரு மானபங்க செய்ய முயன்றால் கையில் கிடைப்பதை வைத்து அடிப்போமா? பொறுமையாக சட்டாப்டி கூண்டில் ஏற்றுவோமா? அவரை தொடர்ந்து அசிங்கபடுதினதுக்கு ஒருவராவது கண்டனம் சொன்னிங்களா?

மங்களூர் சிவா said...

அல்லக்கை அல்லக்கைங்கிறாங்களே அவங்க யார் பாஸ் பின்னூட்டம் போடுறவங்களா? பதிவு போடுறவங்களா???

ராம்ஜி_யாஹூ said...

I liked Kuzali's comments very much, awesome writing Kuzali.

மணிகண்டன் said...

***
அவரை தொடர்ந்து அசிங்கபடுதினதுக்கு ஒருவராவது கண்டனம் சொன்னிங்களா
***

கார்க்கி, நீங்களும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. என்ன அசிங்கபடுத்தினாங்க ? ஒரு வருஷம் முன்னாடி இவங்க தோழி ஒரு பதிவு போட்டாங்க. இப்ப ஒரு பதிவுல கமெண்ட். இதுக்கு என்னங்க இவ்வளவு வன்மம் ? அதுவும் நாலு வயசு குழந்தையை வச்சி எழுதற அளவுக்கு ?

காமராஜ் - எனக்கு தெரிந்து இங்கு நடந்த அசிங்கமான சண்டையை ஜாதிரீதியாக கொண்டு செல்ல முயன்ற உங்கள் முயற்சிக்கு எனது கண்டனங்கள்.

கார்க்கிபவா said...

மணிகண்டன்,

அந்த பதிவு பின்னூட்டெமெல்லாம் படிச்சிஙக்ளா? அது சாதாரண பதிவாக தெரிகிறதா? அபப்டின்னா சாரி பாஸ்.. தலைவலி உஙக்ளுக்கு வந்ததில்ல போல

ஒரே ஒரு கேள்வி.போன தடவை ச்ந்தனமுல்லைக்கும் நர்சிம்முக்கும் சண்டை வந்தது தெரியுமில்ல. அப்புறம் ஏன் அவரது பேட்டியை கேலி செய்து முதலில் ஒரு டுபாக்கூர் பதிவுல போட்டு, அதுக்கு ட்விட்டர்ல லின்க் தந்து, அப்புறமா விஜியை விட்டு நர்சிமுக்கு ஃபோன் செஞ்சு கேட்டு அத அவர் படிக்காம்லே நட்பினடிப்படையில் ஓக்கே சொல்லி போடனும்? இது சாதரண பதிவா? வேலையா?

கீழ இருப்பதெல்லாம் சாதரண பதிவா?

//அதிலும் பழைய பேப்பர் கடையில் இருக்கும் பிரபல எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்தும் பிடிக்கும், ஏனெனில் அதிலிருந்து அப்படியே காப்பி அடிக்கலாம், ஒருத்தனும் அறியப்போவதில்லை.//
//அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்./

//மூத்த பதிவர் இப்படி எல்லாருடைய ப்ரொபைல் முதல் கொண்டு தேடி படித்து அவர்களுக்கு என்ன பிராண்டு பிடிக்கும், எப்படி ஜிங் ஜக் அடிப்பது போன்றவைகளை கற்றுணர்ந்து, அதே பிராண்டு, ஜால்ராவை இன்று வரை தொடர்வதால் தான் முடிகிறது.//

மணிகண்டன் said...

கார்க்கி, நீங்க இதுவரை எழுதி வந்ததை படித்துவிட்டு பதிவில் வெளியிடப்படாத ஏதோ பெரிய தவறை சந்தனமுல்லை நர்சிம்க்கு செய்துள்ளார் போன்ற தோற்றம் வந்ததால் கேட்டேன். மற்றபடி இப்பதிவுகள் மட்டும் தான் காரணம் என்றால் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

கார்க்கிபவா said...

மணிகண்டன், ஆஃப்லைனிலும் பல விஷயம் நடந்திருக்கு.ஆனால் அதற்கெல்லாம் ஆதாரம் கேட்டால் கொடுக்க முடியாது. தேவையெனில் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

யுவகிருஷ்ணா said...

ரவி!

//எனக்கிருக்கும் எழுத்து சுகந்திரத்தை வைத்து, தோழியை வைத்து கூட புனைய முடியும். செய்யமாட்டேன்..

எனக்கு அடிப்படை மனிதப்பண்பு இருக்கிறது.//

செய்யமாட்டேன் எனும் சொல்லில் தெரியும் மனிதப்பண்பு, அதற்கு முன்பு எழுதப்பட்ட புனைய முடியும் என்ற சவாலில் சுத்தமாக இல்லை! :-(

தமிழ் அமுதன் said...

///முல்லையின் குழந்தை பற்றிய பதிவுக்கு பாராட்டி பின்னூட்டமிட்டவர்களை “ வழிஞ்சான்கள்” என்றதற்கும், இவள் பொறப்பு அப்படி என அவர் தாயாரை இழிவு படுத்தியதற்கும் தனிப் பதிவே போட்டு கண்டிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன். ஆனால் , இவர்கள் இப்படித்தான் போல என்று தெரிந்தவுடன் அதற்கு அவசியமில்லை என்று விட்டுவிட்டேன். ஒருவர் மீது வன்மம் இருந்தால் அவரை மட்டும் எதிர்க்கனும். குடும்பத்தையே கேவலப் படுத்துவது என்பதெல்லாம் மிக மிக அநாகரிகம்.//


வழிமொழிகிறேன் !

ரவி said...

///செய்யமாட்டேன் எனும் சொல்லில் தெரியும் மனிதப்பண்பு, அதற்கு முன்பு எழுதப்பட்ட புனைய முடியும் என்ற சவாலில் சுத்தமாக இல்லை! :-(

Monday, May 31, 2010///

யுவகிருஷ்ணா...இந்த சம்பவக்கோர்வைகளில் நீங்களும் அதிஷாவும் நடந்துகொண்டிருக்கும் முறைகளில் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கிறதா ?

ஆபாசத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்கிறீர்கள்...!!! ஆதரவும் தருகிறீர்கள்...!! ஏன் இந்த பாரபட்சம் என்று தெரிந்துகொள்ளலாமா ?

ரவி said...

///நர்சிம் மன்னிப்பு கேட்டதை நீஙக்ளே எடுத்து போட்டு இருக்கிங்க..///

அவர், அவரது வாசகர்களாகிய எங்களிடம் தான் மன்னிப்பு கேட்டிருக்கிறார்..

///சம்பனதப்படட்வங்க கிட்ட மன்னிப்பா? அது புனைவு பாஸ்... பகடின்னா இது புனைவு... ஆரம்பிச்ச்ச்வங்க கேட்கட்டும் முதல்ல ///


கார்க்கி. உங்க வார்த்தைகள் தவறுது. (நான் எழுத்துப்பிழைகளை சொன்னேன்).

சரி. அவர் மன்னிப்பு கேட்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு பதிலாக நர்சிம் செய்துள்ள டேமேஜ், கேரக்டர் அஸாஸினேஷன், வன்மம், வலி ஆகியவை மன்னிப்பு கேட்டால் போய்விடக்கூடிய ஒன்றா ?

///
உஙக்ளுக்கும் எங்கள் நிலையை புரியவைக்க உஙக்ள் நண்பரோ, உறவினரோ வைத்து நான் உதாரணம் சொன்னால், நர்சிம்மை விட கேவலமா பதிவு எழதிடுவிங்க சகா. மனிதன் என்பவன் உணர்ச்சியால் ஆனவன்

//எனக்கிருக்கும் எழுத்து சுகந்திரத்தை வைத்து, தோழியை வைத்து கூட புனைய முடியும். செய்யமாட்டேன்//

சவாலாகவே சொல்கிறேன். செஞ்சு பாருங்க.

உங்கள் சவாலில் நான் தோற்றுப்போனதாகவே வைத்துக்கொள்ளுங்கள். என்னால் அப்படி எழுதமுடியாது..அதன் வலியை போலி டோண்டு மேட்டரிலேயே அனுபவித்தவன் நான்..

/நாளை நமக்குள் ஒரு முட்டல் மோதல் வந்தால் நர்சிம் என் வீட்டு பெண்களை அவுசாரி என்று புனைவில் சொல்வார்//

இருவருக்கும் ஏற்கனவே ஒரு முட்டல் வந்துச்சு. அப்போ நர்சிம் இப்படி சொன்னாரா? அப்போ நீஙக்ளாம் எங்க போனிங்க? தேவையே இல்லாம அந்த பதிவுல நர்சிம்மை சீனடீங்க? கண்டிச்சிங்களா? அப்பலாம் எங்க பொன்னிங்க? இப்ப மட்டும் கேள்வி கேட்க ஏன் வந்தீங்க? ////

கார்க்கி மறுபடி வார்த்தைகள் தவறுது. உங்களிடம் நிதானம் இல்லை சகா. கொஞ்சம் யோசிச்சுட்டு வரலாமே ?

பதிவுக்கு எதிர்பதிவு போடுவது காமன். எல்லா இடத்திலும் நடப்புதான் என்ற அளவில் அதனை ஒரு விளையாட்டாகவே நான் எடுத்துக்கொண்டேன். ரசித்து சிரித்து பின்னூட்டமும் போட்டேன். அதனால் நர்சிம் காயப்பட்டிருந்தால் அதனை நாகரீகமான வார்த்தைகளில் பதிவிட்டிருந்தாலே புரிந்திருக்குமே ?


//நான் மிகவும் மதிப்பு வைத்திருப்பவர்கள் இப்படி செய்வது எனது இதயத்தை உடைத்து நொறுக்கிவிடுகிற/

எனக்கும் இதையெல்லாம் உங்கக்கிட்ட கேட்கிற நிலைமை வந்துடுசேன்னு கஷ்டமா இருக்கு சகா. ஆனா என்ன செய்ய? அதுக்கும் உங்க பதிவுதான் காரணம்.

கார்க்கியையும், நர்சிம்மையும் உஙக்ளுக்குட் தெரியாதா? இது மாதிர்யெல்லாம் செய்ற ஆளா? செய்றாங்கன்னா அதுக்கு என்ன காரணம் ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் யோசிக்க மாட்டிஙக்ளா?

////

நீங்கள் இருவரும் எனக்கு தெரிந்தவர்கள் என்பதாலேயே உங்களிடம் உடையாட முயல்கிறேன்...ஏற்கனவே இணைய வெளியில் உலாத்திய சைக்கோ என்றால் சைபர் க்ரைம் அல்லவா போயிருப்பேன் ?


///நம் தெஇர்ந்த பெண்களை ஒரு மானபங்க செய்ய முயன்றால் கையில் கிடைப்பதை வைத்து அடிப்போமா? ///

பொறுமையாக சட்டாப்டி கூண்டில் ஏற்றுவோமா? அவரை தொடர்ந்து அசிங்கபடுதினதுக்கு ///

சப்போர்ட் செய்வதாக நர்சிம்மை கேவலப்படுத்தாதீர்கள். இங்கே ஆபாச வார்த்தைகளால் வன்மத்தோடும் ஆணாதிக்க சிந்தையோடும் அர்ச்சிக்கப்பட்டவர் ஒரு பெண்தான். ஆகவே இது உங்களுக்குத்தான் பொருந்தும்..

ரவி said...

நர்சிம்மிடம் சில கேள்விகள். இதனை அவருக்கு மடலாகவும் அனுப்ப விருப்பம். வெளிப்படையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.

1. குட் டச் பேட் டச் நிகழ்வை மருத்துவர்கள் ருத்ரன் ஷாலினி ஆகியவர்களை வைத்து அற்புதமாக ஆர்கனைஸ் செய்தீர்கள். அவ்வமயம் உங்களுக்கு தோளோடு தோள்கொடுத்த சகோதரி தீபாவுடன் அதன் பிறகான மோதல் ஏன், என்ன காரணம் ?

2. பதிவர் லதானந்த் பதிவில் மருத்துவர் ஷாலினியை பற்றிய பின்னூட்டம் இட்டது யார் ? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன ?

3. முல்லை - தீபா ஆகியவர்களுடன் அதன் பின்னர் என்னவிதமான மனத்தாங்கல் ஏற்பட்டது ?

4. விஜி பதிவில் வெளியான பகடி பதிவை எழுதியது யார் ? விஜியுடன் நீங்கள் தொலைபேசியில் பேசிய நிகழ்வு பற்றி சொல்லுங்கள். நீங்கள் அந்த பதிவை நீக்கும்படி விஜியிடம் கோரினீர்களா ?

5. குறிப்பிட்ட பதிவை எழுத உங்களை தூண்டிய very moment என்ன ? யார் உங்களுக்கு அப்படியா பதிவை பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சொன்னது ? அதனால் அவர்கள் அடையும் ஆதாயம் என்ன ?

6. இது போன்ற பதிவுகள் சம்பந்தபட்ட பெண்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று அறிந்திருக்கிறீர்களா ? கோபத்தில் நடந்துவிட்ட நிகழ்வு கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்யப்பட்டது என்று அறிந்திருக்கிறீர்களா ? அதனால் மனம் வருந்துகிறீர்களா ? அவர்களிடம் வரும் காலத்தில் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நெகிழ்வான மனநிலை உங்களுக்கு உள்ளதா ?

7. இது குறித்து அவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதில் நீங்கள் குற்றவாளி என்று உணர்வீர்களா ? உங்கள் பதில் என்ன ? உங்களுக்கு உதவி செய்யும் நன்பர்கள் உண்மையில் அதனை செய்யவில்லை, மாறாக உங்களை தூண்டிவிடும் பணியை தான் செய்கிறார்கள் என்று உணர்கிறீர்களா ?

ரவி said...

///I liked Kuzali's comments very much, awesome writing Kuzali.///

எனக்கென்னமோ குழலி கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்கிறாரோ என்று தோன்றுகிறது.

யுவகிருஷ்ணா said...

//யுவகிருஷ்ணா...இந்த சம்பவக்கோர்வைகளில் நீங்களும் அதிஷாவும் நடந்துகொண்டிருக்கும் முறைகளில் கொஞ்சமாவது மனிதாபிமானம் இருக்கிறதா ?

ஆபாசத்தை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் செய்கிறீர்கள்...!!! ஆதரவும் தருகிறீர்கள்...!! ஏன் இந்த பாரபட்சம் என்று தெரிந்துகொள்ளலாமா ?//

ரவி!

நர்சிம்மின் பதிவை ஏற்றுக்கொண்டு நான் பாராட்டவில்லை. அதில் இட்ட பின்னூட்டங்கள் மூலமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம். நான் ஆதரிப்பது நர்சிம்மைதான். அந்த குறிப்பிட்ட புனைவை அல்ல.

அப்புனைவு தோழர் சந்தனமுல்லை குறித்தது என்று நான் நினைக்கவில்லை. பொத்தாம்பொதுவாக தனக்கு யார் எதிரி என்பதை குறிப்பாக அறியமுடியாமல் கல்லெறிந்திருக்கிறார் நர்சிம். தொடர்ச்சியாக சீண்டப்பட்டு வருவதால் ஏற்படும் அதீதகோபம் இந்த நிலைக்கு அழைத்துச் செல்வது இயல்பானதுதான்.

கேரக்டர் அசாசினேஷன் பற்றி அதிகமாகப் பேசுகிறீர்கள். நர்சிம்மின் கேரக்டர் அசாசினைஸ் ஆனது பற்றி மட்டும் உங்களால் எப்படி மவுனம் சாதிக்க முடிகிறது?

தொடர்ச்சியாக நர்சிம் மீது ஆங்காங்கே பின்னூட்டங்களில் ஆரம்பத்தில் நையாண்டியாகவும், பின்னர் வன்மமாகவும் கக்கப்பட்ட அசாசினேஷன் குப்பைகளை சுத்தப்படுத்த வேண்டியது யார்?

பின்னூட்டத்தில் உங்களுக்கு எதிராக ஒரு வார்த்தை சொல்லிவிட்டதாலேயே கார்க்கியை நோக்கி என்னாலும் உன் தோழியைப் பற்றி அப்படி புனைவு எழுதமுடியும் என்று மிரட்டுகிறீர்கள். இதே பண்புதானே நம்மைப் போன்ற நர்சிம்முக்கு இருக்கும்?

- யெஸ்.பாலபாரதி said...

ரவி, உமது பதிவும், குழலியின் பின்னூட்டமும் தான் என் கருத்தும். பார்க்கலாம். பழைய நிலமை போல அல்ல இப்போது. (முன்பு போலி என்று தெரிந்து எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. இப்போது எவரையுமே நம்புவது கடினம் போலும்..) :((

Athisha said...

செந்தழலாரே!

உங்கள் வாத பிரதிவாதங்களெல்லாவற்றிக்கும் முன்னால் மயில் எழுதியாதக சொல்லப்படும் அந்த நர்சிம் மீதான வன்மமும் வெறியும் கொண்ட கேடுகெட்ட கிண்டல் பேட்டி! ஏன் போலியாக உருவாக்கப்பட்ட ஒரு இணையதளத்தில் முதலில் வெளியானது?

பின் ஏன் அந்த போலிப்பக்கத்திலிருந்து அந்த பதிவு நீக்கப்பட்டு , விஜி தன் பதிவில் போட்டு, இது தன்னுடைய பதிவு என்று பறைசாற்றிக்கொண்டார்?

நர்சிம் என்னும் ஒரு ஆணை குறிவைத்து பத்து பெண்கள் சேர்ந்து திட்டலாம் (அவருடைய எழுத்துக்களை உழைப்பை காப்பியடித்தது என்று திட்டலாம்) அதைப்பார்த்துக்கொண்டு நாம் வா..சூ..வை பொத்திக்கொண்டு பெண்ணினம் வாழ்க என்று கோஷம் போட வேண்டுமா?

வெங்காயம்!

நர்சிம்மை எனக்கு நன்றாகத்தெரியும்.. இதுவரை அவருடைய வலைத்தளத்தில் அவரை விமர்சிப்பவர்களிடம் கூட மரியாதையாக பேசும் பழக்கமுள்ளவர். அவரே கோபத்தோடு தகாத வார்த்தைகளில் திட்டுகிறார் என்றால்.. அதற்கு தூண்டியவரிடம் போய் உங்களுடைய கேள்விகளை முன் வையுங்கள்!

கார்க்கிபவா said...

//7. இது குறித்து அவர்கள் சட்ட நடவடிக்கை எடுத்தால் அதில் நீங்கள் குற்றவாளி என்று உணர்வீர்களா ?//

சதயமா புரியல.. எப்படி அவர் குற்றவாளின்னு சொல்ல முடியும்? அதுல யார் பேர் இருந்துச்சு???????

சட்ட மட்டும் இல்ல, பேண்ட் நடவடிக்க கூட எடுக்க முடியாதுண்ணே

vasan said...

'கொடுமை, கொடுமைன்னு,
கோயிலுக்குப் போன‌,
அங்க‌வொரு கொடுமை,
அம்ம‌ண‌மா ஆடுக்கிட்டிருந்திச்சாம்'னு

கிராம‌த்துல‌ வ‌ள‌மை சொல்ல‌ருது
இப்ப‌ ப‌திவுக்கார‌வுகளுக்கு பொருந்திப் போச்சு.
எல்லாத்துக்கும், எல்லாருக்கும் புத்தி இல‌வ‌ச‌ங்கிற‌
இவுக‌ இங்க‌யே விவ‌ரிச்சு காமிச்சிட்டாங்க‌ள்ல‌,
அவுக‌ அவுக‌ பிறப்பு, வ‌ள‌ப்பு
எழுத்து, ந‌டை, வ‌கை, தொகை எல்லாத்தையும்.

முத‌லில் ம‌னித‌ர்களாய் இருங்க‌, அப்புற‌ம் ஆக‌லாம்
ப‌திவாள‌ர்களாய்.
'எங்கே செல்லும் இந்த‌ பாதை'க்குப் போட்ட‌
அதே பின்னோட்ட‌ம். மேட்ட‌ர் ஒன்னுதானே!

கார்க்கிபவா said...

//குறிப்பிட்ட பதிவை எழுத உங்களை தூண்டிய very moment என்ன ? யார் உங்களுக்கு அப்படியா பதிவை பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சொன்னது ? அதனால் அவர்கள் அடையும் ஆதாயம் என்ன//

குற்றம் நடந்தது என்ன? இடைவேளைக்கு பிறகு....

மங்களூர் சிவா said...

புனைவுக்கெல்லாம் கேஸ் போடுவாங்களா பாஸ்??

மங்களூர் சிவா said...

8000 கோடி இன்வெஸ்டர் அமொண்ட் தின்ன சத்யம் ராஜுவையே ஒன்னும் களட்ட முடியலை

மங்களூர் சிவா said...

கசாப்பை 2- 3 வருசமா வெச்சி பிரியாணி வாங்கி குடுத்து கொஞ்சிகிட்டிருக்கோம் ஒன்னும் களட்ட முடியலை

மங்களூர் சிவா said...

கேஸ்போட்டா வக்கீல் வெச்சி எதிர்கொள்ள வேண்டியதுதான், வாய்தா வாங்கவேண்டியதுதான்.

மங்களூர் சிவா said...

49

மங்களூர் சிவா said...

50

ரவி said...

//ரவி, உமது பதிவும், குழலியின் பின்னூட்டமும் தான் என் கருத்தும். பார்க்கலாம். பழைய நிலமை போல அல்ல இப்போது. (முன்பு போலி என்று தெரிந்து எச்சரிக்கையாக இருக்க முடிந்தது. இப்போது எவரையுமே நம்புவது கடினம் போலும்///

புரிந்துணர்வுக்கு நன்றி பாலா. That Ends All.

லக்கி அதிஷா கார்க்கி. உங்களுக்கு அந்த வன்மமும் ஆபாசமும் வலி தருவதாக தெரியவில்லை. ஏன் என்றால் உங்களுக்கு புரியவில்லை. அது உங்கள் ஜீனோம்களில் பொதிந்துள்ள ஆணாதிக்க வெறி. இது குறித்து உங்களிடம் உரையாடினால் உங்களுக்கு புரியவைக்க முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. இனி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க இயலாது. மன்னிக்கவும்.

Athisha said...

செந்தழலாரே என் கேள்விகளுக்கு பதில்சொல்லாமல் இப்படி எஸ்கேப் ஆவது முறையா?

யுவகிருஷ்ணா said...

//லக்கி அதிஷா கார்க்கி. உங்களுக்கு அந்த வன்மமும் ஆபாசமும் வலி தருவதாக தெரியவில்லை. ஏன் என்றால் உங்களுக்கு புரியவில்லை. அது உங்கள் ஜீனோம்களில் பொதிந்துள்ள ஆணாதிக்க வெறி. இது குறித்து உங்களிடம் உரையாடினால் உங்களுக்கு புரியவைக்க முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. இனி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க இயலாது. மன்னிக்கவும்.
//

ரவி! நிச்சயமாக நான் ஆணாதிக்கவாதிதான். அதை எப்பவுமே மறைக்க வேண்டிய அவசியமில்லை. பெண்ணியவாதியாக போலியாக நடிக்காதவன் என்ற முறையில் அதுகுறித்து என் மீதே எனக்கு கொஞ்சம் மதிப்பும் உண்டு.

ஒருவர் பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டுமே அவர் செய்வதெல்லாம் சரியாக இருக்குமென்று நம்புமளவுக்கு நீங்கள் அப்பாவியாக இருப்பீர்களேயானால் உங்களுக்கு எனது அனுதாபங்கள்!

Athisha said...

மற்றபடி நர்சிம் எழுதியது தவறுதான் என்பதை அவரே உணர்ந்து அந்தப்பதிவையும் தூக்கிவிட்டார். இதற்கு மேல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.

கார்க்கிபவா said...

சரிண்ணே.. ஆணாதிக்க மேட்டர் விட்டுவோம்..

ஏதோ கேஸ் போடலாம்ன்னு சொன்னிங்களே.. அதுக்கு வாங்க..

என்ன கேஸுண்ணே.. 302வா 307ஆ?

மறத்தமிழன் said...

ரவி,

நர்சிம்மை பற்றி...லக்கி சொன்னது போல் அவரது ப‌திவிலேயே போய்
திட்டுபவர்களிடம் கூட பண்பாக பேசக்கூடியவர்..

எளிமையான நர்சிம்மே, அந்த அளவுக்கு கோபப்பட்டு பதிவு போட்டிருக்கார்னா
அவர் எவ்வளவு தூரம் காயப்பட்டிருப்பார்...

சாதாரண மனுஷன் கோபப்படுவது இயல்புதான்...கோபப்ப்ட்டார்...பதிவு போட்டார்..இப்ப நீக்கிட்டாரில்ல..

ஆனா அதுக்கு எத்தனை பேர் பிரச்சனை என்னன்னே தெறியாமலே..ஆளாலுக்கு
பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க..
பதிவு போடுவதற்கு முன்பே கேட்க வேண்டிய கேள்விகளை
பதிவிலேயே கேட்டிருக்கீஙக :))
ஆணா ? பென்னா? என்று பார்க்காமல் வெறும் பதிவர்னு மட்டும் பாருங்கனு எல்லாரும் சொல்லிட்டிருக்கும் போது ஒரு முற்போக்குவாதி(!) ஜாதியை இழுத்துக்கொண்டு வருகிறார்...இன்னும் சிலர் அவன், இவன்,சாக்கடை, கொசு, புழுன்னு மனம் போனபடி எழுதுகிறார்கள்...

அனைவருக்கும் எனது கண்டனங்கள் !

வெற்றி said...

www.veeranadai.blogspot.com

வவ்வால் said...

Ravi,
miga kanniyamaga ethipai velipaduthiyullirkal.nanum aamothikiren.

Narsim pakam ethenum niyayam irunthirunthal kanniyamaga therivithiruka vendum,thavari vitar.kandika thakka seyal.

Meendum thamizmanam amaithi poongavaga mara vendum,athu pathivarkal kaiyil than ullathu,seyvarkala?

Lucky,athisha ungal ariyamai viyapalikirathu, mediala velai eppadi kidaithatho?

வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...
This comment has been removed by the author.
வவ்வால் said...
This comment has been removed by the author.
பனித்துளி சங்கர் said...

வார்த்தைகளால் ஏற்படுத்திய காயங்களுக்கு அதே வார்த்தைகளிலே இன்று மருந்து தேடுகிறோம் . மிகவும் வருத்தம் தருகிறது .

K.MURALI said...

for mail

smart said...

இந்த பிரச்சனையில் தலையிட நீங்கள் தகுதிபடைத்தவறாகத் தெரியவில்லை. காரணம் நீங்களும் அத்தகைய பதிவுகளை எழுதியுள்ளீர்கள்.
by the by
முடிந்தால் எனக்கும் இந்த உதவியை செய்யுங்கள். பார்ப்போம்!

Anonymous said...

இந்த கொசுத்தொல்லை எப்போது போகுமோ தெரியலை. நன்றி ஸ்மார்ட்.

smart said...

ஆம் சாக்கடைகள் இருக்கும் வரை கொசுவும் இருக்கும் இது இயற்கை[Punch]

குறும்பன் said...

நல்லவனாட்டம் எவ்வளவு நாள் தான் நடிக்கமுடியும்? அது எவ்வளவு கொடுமையானது என்பது நடிச்சு பார்த்தா தான் புரியும். என்னால எழுத்தில் கூட நடிக்கமுடியல. ;(

காசு போட்டு சரக்கு வாங்கி ஊத்துனதுக்கு சில பேராவது நன்றியுடையவர்களா இருக்காங்கன்னு மகிழ்ச்சியா இருக்கு.

தமிழின் சிறப்பு என்ன?

smart said...

அண்ணா! இந்த கொசு உங்க சுயருபத்தை கண்டுபிடுச்சுருச்சு

http://smarttamil.wordpress.com/2010/06/02/error/

Anonymous said...
This comment has been removed by the author.
Radhakrishnan said...

இந்த விசயத்தில மிகவும் அக்கறை இருப்பவர் என காட்டி கொள்ளும் நீங்கள், 'காசு கொடுத்ததுக்கு மேல எல்லா இடத்திலும் கூவிட்டு வரீங்கனு' உங்களை சொன்னா கோவம் வருமா?

நீங்க திருந்திட்டீங்களாமே. :) தனது அழுக்கை மறைக்க ஊரெல்லாம் அழுக்கு என சொல்லுமாம் பட்சி. என்னை மன்னிச்சி விட்டுருங்க.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

அனாமிகா துவாரகன் அவர்களே.

நீங்கள் எந்த உண்மையும் தெரியாமல் பேசுகிறீர்கள்.

இதற்கு மேல் உங்களிடம் உரையாட எதுவுமில்லை.

Anonymous said...
This comment has been removed by the author.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....