Monday, January 29, 2007

பாலபாரதிக்கு வாழ்த்து, ஹரிஹரனுக்கு நன்றி!

சிலபேர் சொல்லுவாங்க....கொஞ்சநாள் செய்யவும் செய்வாங்க...ஆனால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது....சிலபேர் விட்டுட்டேன் அப்படீம்பாங்க...எத்தனையாவது முறைன்னு கேட்டா 28 ஆவது முறைன்னுவாங்க....சீனப்பிரதமருக்கு மூட்டுவலி, ஆயாவோட ஏழாவது டெத் டே, துக்கம் தொண்டையை அடக்குது அப்படீன்னு மறுபடியும் ஆரம்பிச்சுருவாங்க...

சிலபேர் யார் சொல்லியும் கேட்கமாட்டாங்க...அப்துல்கலாமே மின்னஞ்சல் அனுப்பினாலும் போய்யா வேலையை பாத்துக்கிட்டுன்னு சொல்லிருவாங்க...வீட்ல இருக்கிறவங்க, வீட்டுக்கு வரப்போறவங்க தேஞ்சுபோன ரிக்கார்ட் ப்ளேயர் தட்டுமாதிரி திரும்ப திரும்ப ஒலிபரப்பினாலும் ஒரு பயனும் இருக்காது..

அட புகைப்பழக்கத்தை தான் சொல்லுகிறேன்...ஆனால் பாருங்க, நம்ம நண்பர் ஹரிஹரன் சொல்லி நம்ம கவிஞர் பாலபாரதி புகைப்பழக்கத்தை விட்டு இன்னையோட அஞ்சாவது நாள் ஆகுது...விஷயம் தெரிய இங்கே கொலைவெறியோடு அமுக்குங்க..

புகைப்பழக்கத்தை விடுறதுக்கு முதல் படியே, அதை எல்லாருக்கும் சொல்லுறது தான்...பாலா அதை செஞ்சுட்டார்...தீவிர பா.க.ச உறுப்பினர்களான நம்மளோட கடமை என்ன தெரியுமா ? அவர் புகைப்பழக்கத்தை விட்டுட்டார் என்பதை அப்பப்போ நினைவுபடுத்திக்கிட்டே இருப்பது தான்...கொஞ்சநாளைக்கு...பிறகு அதுபற்றி நினைப்பே வராது...

அதே சமயம் அப்பபோ ஒரு ட்ரீட் மாதிரி வெச்சு, புகைப்பழக்கத்தை விட்டதுக்காக குஷிப்படுத்தரது நல்ல பலன் தரும்...(யாருப்பா அது...நீங்களும் புகைப்பழக்கத்தை விடுங்க, உங்களுக்கும் ட்ரீட்..)

ஆக இந்த பதிவின் மூலமா, என்னோட பிப்ரவரி முதல் வார சென்னை விசிட் அப்போ, பனகல்பார்க் அஞ்சப்பரில் நெஞ்செலும்பு சூப்பும், திருவல்லிக்கேனி மசூதி தெரு ரத்னா கபேயில் நன்னா ஒரு பில்டர் காபியும் வாங்கித்தருவேன் என்று உறுதி அளிக்கிறேன்..!!!

பா.க.ச எல்லாரும் ஓடிவாங்கப்பா...!!! இங்க ஒருத்தன் வகையா சிக்கிட்டான்...பிஸியா இருந்தீங்கன்னா பரவாயில்லை...ஒரு மீன்பாடி வண்டியில போட்டு அங்கேயே அனுப்பிடுறேன்...நான் ஜூட்...இனிமே நீங்க கவனிச்சுக்கோங்க...

66 comments:

நாமக்கல் சிபி said...

வந்துட்டம்ல!

5 நாள் ஆச்சா!

வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

ஒரு சந்தேகம்... சிகரெட்டை விட்டுட்டார்னு நினைவுப்படுத்தினால், அதனாலயே சிகரெட் நினைவு வந்து திரும்பிப் பிடிக்கத் தொடங்கிட்டால்.... ? [உட்லேண்ட்ஸில் நடந்தது மாதிரி? ;) ]

நாமக்கல் சிபி said...

அப்படியே மீன்பாடி வண்டில போட்டு கோயமுத்தூருக்கு அனுப்புங்க!

வெற்றி said...

+

நாமக்கல் சிபி said...

//[உட்லேண்ட்ஸில் நடந்தது மாதிரி? ;) ]
//

இந்த 5 நாளில் இது வேற நடந்துதா?

ஒரு படத்தில் வடிவேலு சரக்கை மறந்திடும்னு டாக்டர் சொல்ல, ரோட்டில வரும்போது

ஒருத்தான் "ஏன்னே விசுக்கி விசுக்கி நடக்குறீங்க?" ன்னு கேப்பான்.

இன்னொருத்தன் "என்னன்னே நெத்தில பட்டை போட்டிருக்கீங்க?" ன்னு கேப்பான்.

இன்னொருத்தான் "பொன்னா ரம், பூவா ரம்" னு ரம் என்னும் வார்த்தைக்கு மட்டும் கும் கும் னு எஃபெக்ட் குடுத்து பாடுவான்.

அதுதான் நினைவுக்கு வருது!

:))

ரவி said...

///[உட்லேண்ட்ஸில் நடந்தது மாதிரி? ;) ]///

உட்லேண்ட்ஸ்ல என்ன நடந்ததுன்னு தெரியாம பேய் முழி முழிக்கிறேன் நான்...:)) சொல்லுங்க... ( அது எப்படி ப்ளாஷ்பேக் + கொசுவத்தி ரொட்டேஷனுக்கு சரியா ஒரு ஹைப்பர்லிங்க்கை போட்டுட்டீங்க...ஏதாவது பா.க.ச சதியா ?

ரவி said...

///அப்படியே மீன்பாடி வண்டில போட்டு கோயமுத்தூருக்கு அனுப்புங்க! ///

சிபி அவர்களே, இன்னும் இங்கே குமுறி முடியல...முடிஞ்சது செல்லுக்கு கூப்பிட்டு கண்பர்ம் செஞ்சுக்கிட்டு பிறகு அனுப்பறோம்...!!!

ரவி said...

வாங்க வெற்றி...!!!! வெற்றி வந்தாச்சுன்னு இனிமே நான் சொல்லிக்கலாம்..!!!

நாமக்கல் சிபி said...

//இன்னும் இங்கே குமுறி முடியல...முடிஞ்சது செல்லுக்கு கூப்பிட்டு கண்பர்ம் செஞ்சுக்கிட்டு பிறகு அனுப்பறோம்//

அனுப்புங்க! இங்கன ஒரு 11 பேர் காத்துகிட்டிருக்கோம்!

பொன்ஸ்~~Poorna said...

ரவி,
நீங்கள் கொடுத்த ஹைபர்லிங்கில் கடைசி சில பின்னூட்டங்களைப் பார்த்துத் தான் நானே தெரிந்து கொண்டேன்..

விஷயம் தெரிய கொலைவெறியோடு அங்கேயே போங்க ;)

நாமக்கல் சிபி said...

:))

நன்றாக இருக்கிறது இக்கட்டுரை!

Anonymous said...

கொலசாமிகள் படையல் போடலாமா ?

நாமக்கல் சிபி said...

//கொலசாமிகள் படையல் போடலாமா ?
//

பதிவே அதுக்குத்தான போட்டிருக்காரு!

என்னங்க ரவி! சரிதானே?

லக்கிலுக் said...

இந்த பதிவின் வாயிலாக அண்ணன் பாலபாரதி அவர்களை திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் இருக்கும் தம் கடைக்கு தம் அடிக்க வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவன்
லக்கிலுக்
பா.க.சவின் தம் அடிக்கும் பிரிவு

ரவி said...

போடுங்க...யாருக்கும் தொந்தரவில்லாம போட்டுக்கோங்க...

Anonymous said...

5 வது நாளாக தொடர்ந்து தம் அடிப்பதை புறக்கணித்த எங்கள் தங்கம், காட்டு யானைத் தந்தம்
தமிழ்நாட்டின் சொந்தம்

அண்ணன் பாலபாரதி அவர்கள் வாழ்க!

- யெஸ்.பாலபாரதி said...

ப்பூ... அஞ்சு நாள் தான் ஆச்சா...

என்னமோ மாமாங்கம் ஆன மாதிரி ஒரு பீல் இருக்கு!

எனிவே.. வுட்டது வுட்டது தான்.. யாரோ போட்டு கொடுக்குறதை நம்ப வேண்டாம்.

பதிவுக்கும்(கொடுக்கப்போகும் பார்ட்டிக்கும் சேர்த்து) நன்றி.

ரவி said...

ஏ வந்துட்டாருப்பா...ஆரம்பிங்க..

நாமக்கல் சிபி said...

அண்ணன் பாலபாரதி அவர்களை,

கோவை வடவள்ளி பஸ்ஸ்டாப் பங்க் கடைக்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொல்கிறேன்.

இவண்,
பா.க.சவின் தம் அடிக்கும் பிரிவு,
கோவை மாவட்டம்.

நாமக்கல் சிபி said...

ரவி! குமுறி முடிந்ததா! சீக்கிரம் கோவைக்கு அனுப்புங்க!

ரவி said...

இன்னைக்கு அவரை குமுறாமல் விடமாட்டீங்க போலிருக்கே...!!!

Anonymous said...

12:30 இல் இருந்து மதியம் மூன்று மணிவரை கோவை கிளை கவனிக்கட்டும்.

Anonymous said...

பாபாஜி,

இங்கே வில்ஸ் ஃபில்டர் 3.25 ரூபாய்னு சொல்றான். சரியா தலை?

நீங்க அன்னிக்கு 2.75 ன்னு சொன்னீங்களே?

Anonymous said...

யோவ் பாலா,
என்னய்யா இப்படிப் பொய் சொல்லுற? நேத்து, முந்தின நாளு எல்லாம், என் நன்பர்களை ஒவ்வொருத்தனையா கண்ணு முன்னால கொளுத்திப் போட்டுட்ட.. என்னிக்குக் கொளுத்தப் போறியோன்னு பதறிகிட்டில்ல இருக்கேன்!

Anonymous said...

கோவை கிளைக்கு ஷெட்யூல் ஓ.கே!

மீதிக் கிளைகளெலாம் அவங்கவங்க டெண்டேட்டிவ் ஷெட்யூலைச் சொல்லுங்க!

நாமக்கல் சிபி said...

//யோவ் பாலா,
என்னய்யா இப்படிப் பொய் சொல்லுற? நேத்து, முந்தின நாளு எல்லாம், என் நன்பர்களை ஒவ்வொருத்தனையா கண்ணு முன்னால கொளுத்திப் போட்டுட்ட.. என்னிக்குக் கொளுத்தப் போறியோன்னு பதறிகிட்டில்ல இருக்கேன்!
//

சிகரெட்டுக் கூட பா.க.ச மெம்பரா?
:)))))))))))))))))))))))))))))))

Anonymous said...

எண்ட கடையில் ஈ ஆள் டெய்லி தம்மு கட்டும்..கொறச்சு சாயா சூடாயிட்டு இல்லைன்னா பொ.பி வந்தமாதிரி கெத்தும். டெக்டரிடம் போய்வாய்யா என்று ஞான் சிபாரிசு செய்து.

Anonymous said...

நானும் இங்கே பின்னூட்டினேன்

ரவி said...

///எண்ட கடையில் ஈ ஆள் டெய்லி தம்மு கட்டும்..///

பாலா, நாயர் கடையில் ஏதாவது பாக்கியா ? ஏன் அந்தாளு எல்லாம் பின்னூட்டம் போட வர்றார் ?

Anonymous said...

ஆமாம் தோழர் வில்ஸ் சொல்வது முற்றிலும் உண்மை..

ட்ரீட் கொடுக்கும் முன்பு அவரது இடது பாக்கெட்டில் உள்ள என்னை எடுத்து, என் எரிபொருள் அளவு எத்தனை குறைவாய் இருக்கிறதென்று பாருங்கள் அப்போது உங்களுக்கே உண்மை புரியும்.

Anonymous said...

இந்த லைட்டர் கூறுவது சிறிதளவும் உண்மை இல்லை. பாலா என்னைத்தான் உபயோகிக்கிறார்.

Anonymous said...

இந்த ஆள் ஓசி பீடி வாங்கி வலிச்சே என் ஃபேக்டரிய திவாலாக்கிட்டான்!

சென்ஷி said...

டெல்லிக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்கப்பு. காத்திட்டிருக்கோம்

சென்ஷி

சென்ஷி said...

[உட்லேண்ட்ஸில் நடந்தது மாதிரி? ;) ] //

தணிக்கை செய்த பின்னூட்டங்கள் கயமையில் சேரும் என்பதால் உடனே அதைப் பற்றி பதிவிடுமாறு டெல்லி பாகச கிளையின் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன். :)))

சென்ஷி

Anonymous said...

டெல்லி ஸ்லாட் இன்று மாலை ஒதுக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

3.00 - 5.30 டெல்லி கிளை ஓகேவா?

Anonymous said...

தீப்பெட்டி, லைட்டர், சிகரெட் பெட்டி, பாக்குப் பொட்டலம் எல்லாத்துக்கும் நடுவுல எனக்கு எடமே இல்ல ரவி.. ஏதாச்சும் செய்யி

Anonymous said...

வியாழன், ஜனவரி 25, 2007 ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே உன் தலைமைபீடத்தில்நான் வைகோவா செஞ்சியா?நீ பொதுகுழுவென்றால்நான் சேலமா சென்னையா?என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மதிமுகவைப் பார்த்து கபிலனின் லிஸ்டை உல்டாப் பாடலாய் குசும்பன் எழுத கிலியடித்துப் பொகின்றார்கள் வைகோவும் மற்றும் செய்தித் தொடர்பாளர் கேஎஸ்ஆர். "என்னோட நிலைமையைப் பார்த்தாயா ராதா? நேத்து மொளைச்ச வலைப்பூக்கள் கூட என்னையக் கிண்டல் பண்ற மாதிரிப் போச்சே?" என்று அவர் அழுது கொண்டே கறுப்புத் துண்டில் மூக்கு சிந்துகின்றார். அப்போது சடேரென்று ஒரு ஆட்டோவில் முகம் மறைத்த உருவம் இறங்குகின்றது. "அண்ணா மீட்டருக்கு மேல ஒண்ணுமே வேண்டாம். மேட்டர மட்டும் சுகுற்றா தாரேன்", என்றது. ஓசியென்றால் பினாயிலையும் குடிக்கும் வீரத்தமிழனன்றோ நாம்! கிடைத்தவரையில் லாபமென்று நினைத்தபடி ஊம் கொட்டுகின்றார் வைகோ. "அண்ணாத்த மதிமுக லவ்ஸ் மீ; மதிமுக லவ்ஸ் மீ நாட்" அப்பிடின்னு செந்தமிழ்ல்ல அறிக்கை ஒண்ணு வுடுங்க. அதுல நீங்க மதிமுகவையும் திட்டணும். வெட்டிப் போட்ட திமுகவையும் திட்டி அழும்பு பண்ணணும். ஆனா நீங்க குறிப்பிட்டு யாரையும் திட்டுன மாதிரி தெரியப்படாது" என்கிறது மீட்டர். "என்னது என்னோட மதிமுகவையே திட்டுறதா?" வைகோ வாயைப் பிளக்கின்றார். "அட மாம்ஸே அங்கதான் உங்க கைங்கர்யம் இருக்கு. LG'யும், செஞ்சியும் இருக்கிற மதிமுகவைத் திட்டினேன் அப்பிடின்னு பிட்டைப் போட வேண்டியதுதான? வேணும்னா சொல்லுங்க நானே அறிக்கையை டிராப்ட் செஞ்சுத் தாரேன்" என்கின்றார் முருகேசன். "அடப்பாவிங்களா அரசியல் அஸ்தமனத்திற்கு நானே கால்கோளிடுவதா" என்று பதறியபடி பறக்கின்றார் வைகோ."அய்யய்யோ LG பெருங்காயத்திற்கு என்ன ஆச்சு?" என்று பதறியபடி கோபாலைத் தள்ளிவிட்டுக் கொண்டு மூச்சிறைத்தபடி ஓடி வருகின்றார் துளசி. "என்னது LG பெருங்காயமா? நாசமாப் போச்சி. நாங்க சொன்னது L.Ganesan" திருத்துகின்றார் கேஎஸ்ஆர். "இல்லை துளசி சொன்னது சரிதான். LG உருவாக்கியது பெருங்காயம்தாம்" என்றார் வைகோ கவித்துவமாய். "அய்யய்யோ என் கணேசனுக்கு என்ன ஆச்சு?" என்றார் பிள்ளையார் பக்தையான துளசி. "நேக்கு பைத்தியமே பிடிக்கும் போலருக்கே. மத்த குழப்பத்தை விட இந்தம்மா கொழப்பறதை தாங்க முடியலியே. அட ராமச்சந்திரா", என்று கதறுகின்றார் கேஎஸ்ஆர். "இப்போது செஞ்சியையும் ஏன் இழுக்கின்றாய்? நீயும் அவர் கட்சியா?" என்று வைகோ எகிற, "அடடே ராமச்சந்திரனுக்கு என்ன ஆச்சு?" என்று துளசி வினவி விவகாரத்தை பெரிதாக்குமுன் கூட்டாக எஸ்கேப்பாகின்றார் கேஎஸ்ஆர்."தலைவா நம்ம ராங் ரூட்டுல வந்துட்டோம் போலருக்கு; போர்க்களத்துள அடிக்கிற பொணவாடையைப் பாத்தா இது இன்பர்மேஷன் ஹைவே போலருக்கு; சொந்த செலவுல சூனியம் வைக்கிற ஆளுங்க இங்கன ஜாஸ்தின்னு கேள்விப்பட்டேன். வாங்க வேற வழியா ஓடிப்போயிடலாம்" என்ற கேஎஸ்ஆரை மடக்கிய வைகோ "இன்பர்மேஷன் ஈஸ் பவர் என்றான் ஈஸ்ட் இந்தியத் தமிழன்; வந்ததுதான் வந்தோம் முழுதும் பார்த்து விடுவோம்" என்றார்."ஒன் டூ திரீ போர் பைவ் ஒன்ஸ் ஐ காட் எ பிஷ் அலைவ்; சிக்ஸ் செவன் எயிட் நயன் டென் தென் த்ரூ இட் பேக் எகெய்ன்" என்று பாடியபடி வந்தவர் வைகோவைப் பார்த்து ஸ்டைலாய் "பாபாவின் கவுண்ட் டவுன் ஸ்டார்டர்ட்" என்று கர்ஜிக்கின்றார். "என்ன இழவுடா இது இங்கேயும் ஏற்கெனவே கட்சி பிரிஞ்சு கவுந்தடிச்சுக் கெடக்கும் நேரத்துல இந்தாளு வேற கவுண்ட் டவுன் போடுறானே; ஒருவேளை விஷயம் தெரிஞ்சவனோ?" என்று முனகியபடி வைகோ "எனக்கு பாபான்னா ரொம்ப உசிரு. அதுனாலதான் தெலுகு-கங்கைத் திட்டம் விட்டு கிருஷ்ணா நதிநீரைக் கொண்டு வர அவரோட திட்டம் போட்டேன். அத மாறன் மூலம் மோப்பம் புடிச்சி முந்திக்கிட்டார் அண்ணன் கருணாநிதி" என்றார். கேஎஸ்ஆரோ "அண்ணே நீங்க சொல்றது புட்டபர்த்தி பாபா. இது வேற பாபா" என்று காதைக் கடிக்கின்றார். "விஷயதானம் செய்யிறேன் வாருங்க. கட்சியில ஒன் டூ டென் யாருன்னு அடிக்கடி லிஸ்டை வெளியிட்டு ஜல்லியடிக்கணும். சென்னை காண்டாக்டைப் புடிச்சி முடிஞ்சா கில்லியிலயும் வரவழைக்கணும். வருஷத்துக்கு ஒரு முறை இல்லாம வாரத்துக்கு ஒரு முறை போட்டு அவனவனையும் வகுத்தால போக வைக்கணும். முடிஞ்சா தொண்டர்படை, பாதுகாப்புப்படை, அம்மாதுதி, சின்னம்மா அந்தாதி, மாறன் கலம்பகம்ன்னு கேட்டகிரி வாரியா மாத்தி மாத்தி லிஸ்டைப் போட்டு போற வர்றவனுக்கெல்லாம் பாலூத்தணும்" "அப்பிடி ஊத்தினா?" குழப்பாமானார் வைகோ. "அடப்போய்யா அரசியல் புரியாமப் பேசுற; பத்து பேரை நம்பர் ஒண்ணு நீதான்ன்னு கையைக் காட்டினா அத்தனைப் பேரும் உன் பாக்கெட்டுக்குள்ளே; தமிழனுக்கு நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்க தலீவான்னு கால்ல உழாட்டியும், கப்சிப்'ன்னாவது கெடப்பான்; நெட்டுல இந்த பிட்டு சூப்பரா வொர்க் அவுட் ஆவுது தல" என்று கேட்டதும் வைகோவிற்கு "நம்பர் ஒண்ணே" வந்துவிட அவசர அவசரமாய் அகல்கின்றார்.மறைவிடத்தில் சடாரென்று மொடர்ன் மோகினி ஒன்று தோன்ற சடர்ன் பிரேக் போடுகின்றார் வைகோ. "இவ்விடம் கட்சியடி கடிகளுக்கு நீதி வழங்கப்படும்" என்று மொடர்னாய் கொஞ்சினாள் கேர்ள். "ஆஹா நீதித் தேவையை தீர்க்க வந்த தேவதையே வா! சோனியா மட்டும் சட்டம் போடாவிட்டால் கட்சிக்கடி ஆழமாயிருந்திருக்கும். மன்மோகன் மட்டும் மட்டுறுத்தா விட்டால் பின்னூட்டம் இன்னும் மோசமாக இருந்திருக்கும்" என்று வைகோ உளறிக் கொட்ட காண்டாகின்றார் கேஎஸ். "பேஷனில்லா தமிழன் பெருமையாய்க் கேட்டது கண்டு, எண்ட நிகண்டான உங்கள் Tooth Paste பீய்ச்சல் Teething முன்னர் என்றும் சொல்லிக் கொல்லலாம். பிரச்சினை உங்களுடைய பாரபட்சமா? பாராபட்சமா?ன்னு ஒரு கால்லதான் தொங்குது மெல்லின வல்லினமாய். இதைபத்தி ஆறுமுகமாய் வந்து நாவலராய்ப் போனவரோ, ஆழமாய் உழுதுபோட்ட அ.முத்துலிங்கமோ தெளிவின்றி இருந்ததாலும் பிரச்சினை பெரிதாகியிருக்கலாமெண்டு இவ யோசிக்கிறா" என்று மொடர்ன் முடித்ததும் 'இதுக்கு வைகோ உளறலே சூப்பர்மா' என்று தலையாட்டித் தெறிக்கின்றார் கேஎஸ். "இஞ்ச பாருங்கோ" என்று இளம்பெண்ணை ஒத்த முகமூடி உருவம் திடீரெனக் குதிக்க "நான் அப்பவே சொன்னேனே நமக்கு நேரம் சரியில்லன்னு" என்று புலம்ப ஆரம்பிக்கின்றார் கேஸ். "மதிமுக மீது பரிச்சயமுண்டு எண்ட கேள்வியை பரீட்சிக்கவே சேலம் பொதுக்குழுவிற்கு சென்றேன். ஆனால் அங்கே மசால்வடை என்ற பஷணம் பரிமாறப்படாததால் வேறு பாரமேதுமின்றி நான் உலா வந்தது வேறு விதயம். அங்கு போனபோது வைகோ, எல்.கணேசன், செஞ்சி இராமச்சந்திரன், வையாபுரி, சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நாஞ்சில் சம்பத் போன்றோரின் கைவண்ணங்கள் காணவே. ஆனால் பெருந்தலைகள் உருட்டும் ஆட்டம் இவை என்று என்பதை மீண்டும் நினைவுறுத்திக்கொள்கின்றேன்." என்று முடித்தவுடன் அய்யய்யோ பேஷனில்லாத தமிழனைக் கூட நம்பலாம் ஆனா Passion இல்லாத DJ தமிழன நம்பாதடோய்", என்று கதறுகின்றார் கேஎஸ்.யாமிருக்க பயமேனென்று அட்டெண்டெண்ஸ் போடுகின்றார் உஷா. "வைகோ நீங்க அருமையா அடிச்சு ஆடுறீங்க இருந்தாலும்..." என்று உஷா இழுத்ததும் அய்யய்யோ என்று அப்பாவியாய் விழிக்கின்றார் வைகோ. "மத்தியில மன்மோகனோட கூட்டணி. மாநிலத்தில் அம்மாவிடம் அடைக்கலம்... இப்பிடி மட்டும் அரசியல் பண்ணா பத்தாது. விழுப்புரத்தில் வி.சி. யோட கைகுலுக்கல்; கல்பாக்கத்தில் கம்யூனிஸ்ட்களோடு நடைப்பயணம்; மூணாறில் மூவேந்தர் கட்சியோடு மாநாடு; தேக்கடியில் தேமுதிகவோடு தேநீர் விருந்து; முட்டத்தில் முஸ்லீம் லீக்கோடு முகாம்; இப்பிடின்னு எல்லா இடத்துலேயும் அட்டெண்டெண்ஸ் போடோணும்; இவ்வளவு ஏன் இப்ப எந்த கட்சியில நீங்க இருக்கீங்கன்னு அவனவன் மண்டையைப் பிச்சிக்கணும். அப்பிடி செஞ்சீங்கன்னு வைங்க உங்கள விட்டு பிரிய நினைக்கிற ஆளுங்க எந்த கட்சியில போயி ஐக்கியமாகிறதுன்னு தெரியாம உங்களோடயே இருந்துடுவான்", என்றதும் "ஆஹா விட்டா நம்மள லாரல்-ஹார்டி ஆக்கி இண்டெர்நேஷனல் லெவல்ல சந்தி சிரிக்க வைச்சிடுவாங்க" என்றபடி இருக்குமிடம் தெரியாமல் மறைகின்றார்கள் வைகோவும், கே எஸ்ஸும். இன்னமும் அட்வைஸ் கொடுக்க நான், நீயென்று பலர் இணையத்தில் போட்டி போடுவதாகத் தகவல்....பிகு: சும்மா இருக்க வுட மாட்டேங்றாங்ணா... அதான் மேட்டருங்ணா...

Anonymous said...

அப்போ பூனா கிளை என்ன செய்Yயுறது மனிதா? ஒழுங்கு மருவாதையாக எங்களுக்கு மதியம் லஞ்சுக்கு பிறகு ஸ்லாட் ஒதுக்கவும்.

- யெஸ்.பாலபாரதி said...

அடப்பாவிகளா... அரை மணி நேரத்துக்குள்ள நாற்பதா?

Anonymous said...

அவுஸ்திரேலியா, கிளைக்கு நேரம் எங்கே!!!!!!!!

நாமக்கல் சிபி said...

கோவைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பூனா கிளை வேண்டுமானால் பயன்படுத்திக் கொல்லட்டும்.

நாங்கள் வேறொரு நேரத்தை எடுத்துக் கொல்கிறோம்.

ஷெட்யூல் மேனேஜர் கேட்டுச் சொல்லுங்க!

பா.க.ச தொண்டன் said...

எங்களுக்கு அதிகார பூர்வ அழைப்பு விடாமைக்கு எங்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும் கலாய்ப்பது எங்கள் கடமை. அது எங்கள் உரிமை.

Anonymous said...

அவுஸ்திரேலியாவில் இப்போது மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று வருத்ததுடன் நீங்கள் இட்ட மடல் கிடைத்தது. நீங்கள் இப்போதே ஆரம்பிக்கலாம். காரணம் கிரீன்விச் நேரப்படி இந்தியாவில் கோவை மதியான நேரத்தை கொள்கிறது, அதே நேரம் பூனா (அங்கே கழகத்தில் இருப்பதே இருவர்) பகிர்ந்துகொள்கிறது. நீங்கள் இன்னும் இரண்டுமணிநேரத்தில் ஆட்டையில் இறங்கினால் இந்திய நேரம் GST+5 இல் நூறடிக்க ஏதுவாக இருக்கும்.

Anonymous said...

டி. கல்லுப்பட்டியில் இருக்கும் பொட்டிக் கடைக்கு மதியம் அனுப்பவும்

பாகச
தம் (பிடித்து) அடிக்கும் கிளை
டி. கல்லுப்பட்டி

Anonymous said...

//கோவைக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பூனா கிளை வேண்டுமானால் பயன்படுத்திக் கொல்லட்டும்.

நாங்கள் வேறொரு நேரத்தை எடுத்துக் கொல்கிறோம்.

ஷெட்யூல் மேனேஜர் கேட்டுச் சொல்லுங்க! //

பூனா கிளை!
என்ன சொல்றீங்க? ஓகேவா?

ரவி said...

யோவ், ஒரு ஆட்டத்து ரெண்டு அம்பயரா ? என்ன அநியாயம் இது ? அம்பயர், ஏதாவது கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜரா நீர் ? நல்ல ப்ளானிங். பி.எம்.பி முடித்துள்ளீரா என்ன ?

Anonymous said...

//டி. கல்லுப்பட்டியில் இருக்கும் பொட்டிக் கடைக்கு மதியம் அனுப்பவும்//
அதெல்லாம் முடியாது.. எங்கூருக்குத் தான் அனுப்பணும்..

டா.கல்லுப்பட்டி,
பாகச

Anonymous said...

அட, சிபிக்கு என்ன பெருந்தன்மை. ப்ரவால்ல. நாங்கள் இருவர் மற்றும் கோவைக்காரங்க இனைந்து கலாய்க்கலாம் OK?

Anonymous said...

//அம்பயர், ஏதாவது கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜரா நீர் ? நல்ல ப்ளானிங். பி.எம்.பி முடித்துள்ளீரா என்ன ?
//

ஆமாம் ரவி! பி.எம்.பி பிளானிங் முடித்துள்ளேன். உங்கள் தயவுதான் வேண்டும்.

Anonymous said...

கோவை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கலாய்க்கலாம்!

பொன்ஸ்~~Poorna said...

50 ஆயிடுச்சா!!! அது சரி... :)))))

Anonymous said...

இன்னிக்கு முகூர்த்த நாள் என்பதால் எங்களுக்கும் இன்னிக்கே அனுப்பி வைக்கவும்!

Anonymous said...

உதயம் தியேட்டரில உன்
இதயத்தை தொலைச்சே,
உட்லெண்ட்ஸ் ஹோட்டலில
நீ திருட்டுத்தம் அடிச்சே
அது வில்ஸ்பில்டரா, இல்லை கோல்ட்பில்டரா?

Anonymous said...

விடுபடாத பாலா அய்யா

அவர் உண்மைதான் சொல்றாரு. வில்ஸ் அடிக்கிறதைத்தான் விட்டாரு. இப்ப அவர் அடிக்கிறதெல்லாம் டோப்புதான்.

Anonymous said...

எங்களுக்கும் டைம் ஒதுக்கணும்! சொல்லிட்டோம்!

Anonymous said...

நாங்களும் பா.க.ச வில் சேர என்ன பண்ணனும்?

ரவி said...

இது உங்களுக்கே டூ மச்சா தெரியலை...???? கொடுமை....

ஓக்கே லஞ்ச் ப்ரேக்....

Anonymous said...

இங்கே எப்ப அனுப்புவீங்க?

மீன் பாடி ராக்கெட்ல போட்டு அனுப்புங்க!

Anonymous said...

//இது உங்களுக்கே டூ மச்சா தெரியலை...???? கொடுமை//

தெரியலையே!

Anonymous said...

இங்கே பாலபாரதி யாருங்க?

ரெண்டு பண்டுல் வில்ஸ் ஃபில்டர் சிகரெட் வந்திருக்கு!

நாமக்கல் சிபி said...

பாலபாரதிக்கு மொய்!

கோவை கிளை சார்பா 2 பாக்கெட் சிகரெட்டேய்!

Anonymous said...

எங்க கிளை சார்பா ரெண்டு பாக்கெட் மோர். (More)

Anonymous said...

எங்க அண்ணன் வெளி நாட்டு சரக்கெல்லாம் தொட மாட்டார்.

சுந்தர் / Sundar said...

எவ்வளவு ... பின்னூட்டம் போட்டு தாக்குனாலும் ... பாலா ... தாங்குராரு ...
ரொம்ப நல்லவருனு நினைக்கிறேன் ! .....

Anonymous said...

என்னய்யா நிறுத்திட்டீங்க?

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....