Wednesday, March 03, 2010

நித்யானந்த ரஞ்சிதோற்சவம் : மனித உரிமை மீறல்


நித்யானந்தர் எனக்கு அறிமுகம் குமுதம் இதழின் வழியேதான். ஒல்லியாக காவியுடுத்தி, ஏதோ ஒன்றிரண்டு பக்கங்களை நிரப்பியிருப்பார்கள். ஆன்மீகம் என்ற தலைப்பில்..

என்னுடைய ஏரியா நடுப்பக்கத்தில் தொடங்கி நடுப்பக்கத்திலேயே முடிந்த காலம் அது, அதிகமாக கண்டுகொண்டதில்லை.

சாரு நிவேதிதாவின் பக்கத்த்தில் நித்யானந்தர் குறித்து கேள்விப்பட்ட உடான்ஸ் செய்தியொன்றின் அடிப்படையில் (நித்யானந்தர் பாடி விட்டு பாடி பாய்ந்து அரைமணி நேரத்தில் கேன்ஸரை சரிப்படுத்தினாராம், சாரு நிவேதிதா மூளையை கழட்டி டாய்லெட்டில் போட்டுவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன்) இணையத்தில் தேட கிடைத்த சுட்டி படு காமெடி. 

ஜனவரி 1 1978 இல் திருவண்ணாமலையில் ஜோதிட பித்து பிடித்த பெற்றோருக்கு பிறந்த ராஜசேகரன், பத்து வயதில் துறவறம் பூண்டவர். அவர் இஞ்சினீயரிங் படித்த்தாக நித்யானந்தரின் தயானந்த பீடம் கூறிவரும் பொய்மூட்டையை நிரூபிக்க, நித்யானந்தர் படித்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்த உடான்ஸை, அந்த வருடத்தில் பன்னிரண்டு வயது நித்யானந்தர் எப்படி பாலிடெக்னிக் படித்தார் என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள் அந்த தளத்தில்..

இதனை என்னுடைய ட்விட்டர் முகவரியான senthazalravi மூலம் பகிர, அதனை பார்த்த அமெரிக்க மின்னொபோலிஸில் வசிக்கும் நடராஜ், அங்கே நித்யானந்தர் கூட்டத்துக்கு தலைக்கு 300 டாலர் சார்ஜ் செய்வதாக தகவல் தெரிவித்தார். அவரிடம் மேற்சொன்ன சுட்டியையும்  பகிர்ந்தேன்.

நித்யானந்தர் பற்றிய என்னுடைய இம்சை தளத்தில் வெளியான பதிவு, இந்த அஜால் குஜால் வீடியோ காட்சியை கூகிள், யாகூ என்று தேடி அலையும் தாகம் கொண்ட தமிழினத்தின் வாயில் பாலை வார்க்கவே. பர்ப்பஸ் ஸால்வுடு. 

உண்மையில் இந்த செய்தி தொடர்பாக எழுந்த எண்ணங்களை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்து பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தபோது, பட்டர்ப்ளை சூர்யா அனுப்பிய வால்பையன் பதிவில் சுட்டியில், கல்வெட்டு எழுதியிருந்த பின்னூட்டம், என்னுடைய எண்ணங்களுக்கு அப்படியே மேட்ச் ஆகிறது. 

முதலில் சன் டிவி என்ற ஊடகம் செய்துள்ளது அப்பட்டமான மனித 
உரிமை மீறலாகும்...

ஒருவரின் படுக்கை அறையில் அவரது அனுமதியின்றி உள்நுழைந்து படக்கருவியை பொருத்தி, அதை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

வழக்குரைஞர் பிரபு ராஜதுரையின் பதிவில் (பதிவர் கல்வெட்டு கொடுத்துள்ள சுட்டி இது) எது விபச்சாரம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார். 

ஒரு ஆணும் பெண்ணும் இசைவுடன் உறவு கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமல்ல. 

ஒரு பெண் பணத்துக்காக அல்லது பொருளுக்காக உடலுறவுக்கு இசைந்துபோவது குற்றமல்ல.

ஒரு விபச்சார விடுதியை நடத்துவது மட்டுமே குற்றமாகும். 

பெரும் தனவந்தரான நித்யானந்த சாமியார், ஒரு விபச்சார விடுதிக்கு செல்வார் என்பது பொருந்தாத வாதமாகும்..

மேலும் வழக்குரைஞரின் முந்தைய பதிவு ஒன்றில், எது கற்பழிப்பு என்று கூட தெளிவாக சொல்லியுள்ளார். அது இந்த பதிவுக்கு தேவையற்றது. இருந்தாலும் இங்கே குறிப்பிடவேண்டியது, சாமியார் நடிகையை அணைத்து லைட்டை அணைக்கும் அழகை பார்த்தால் கற்பழிப்பது போல தெரியவில்லை.

மிகப்பெரிய செய்தி காட்சி ஊடகமான சன் டிவியின் மீது, சம்பந்தப்பட்ட சாமியாரும் நடிகையும், தன்னுடைய மாடஸ்டியை குலைத்தமைக்காக அவதூறு வழக்கு தொடரலாம்.

மேலும் சாமியார் இருக்கும் நிலையை பார்த்தால் அவருக்கும் நடிகைக்கும் நீண்டகால தொடர்பு இருக்கும் போலிருக்கிறது என்று ஊகத்தின் அடிப்படையிலான ஒரு செய்தியையும் சன் டிவி போகிறபோக்கில் தெளிக்கிறது. 

சாமியார் லைட்டை அணைத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏன், கட்டிப்பிடிப்பது போல கட்டிப்பிடித்து, பின் லைட்டை அணைத்துவிட்டு யோகா செய்வார். முழுமையான தகவல்கள் தெரியாமல் இப்படி சாமியாரின் மாடஸ்டியை குலைப்பது எவ்வாறு நியாயம் ? 

அமெரிக்க அய்க்கிய நாட்டில் சுவாமிஜியின் ஒரு நாள் வகுப்பை அட்டெண்டு செய்ய 300 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் 15000 ரூபாய் வசூலிக்கிறார்கள். இவ்வளவு காஸ்ட்லி சாமியார், ஒரு நடிகைக்கு அமவுண்டு செட்டில் செய்து ஜில்பான்ஸாக இருக்கமாட்டாரா ? என்ன வண்புணர்ச்சியா செய்யப்போகிறார் ?

மேலும் இந்த தகவல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பின், நித்யானந்தரின் பல சொத்த்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நோக்கில் வன்முறையாளர்களையும் ஏவி விட்டுள்ளது ஆட்சியில் இருக்கும் பகுத்தறிவு கட்சி. பொது சொத்துக்கு மட்டுமல்ல, தனியார் சொத்துக்கும் சேதம் விளைவிப்பது குற்றமாகும். காவல் துறை இதனை வேடிக்கை பார்ப்பது முறையல்ல.

மேலும் பிட்டு படங்களில் வருவதைப்போன்றதொரு பேக்ரவுண்டு மியூசிக் ஒன்றை வேறு போட்டுத்தொலைகிறது சன். போகிற போக்கை பார்த்தால், என்.டி.திவாரி வித் ஆந்திரா மீல்ஸ் + காஞ்சிபுரம் தேவநாதன் வித் காஞ்சிபுரம் பேமிலி இட்லி + சாமியார் நித்தியானந்தன் வித் மார்க்கெட்டு இழந்த நடிகைகள் என்று தனி பிட்டு படமே வெளிவந்து, சிறந்த வெளிநாட்டு படம் பிரிவில் ஆஸ்கர் வெல்லும் போலிருக்கிறது..

பிட்டு படங்களை ஒளிபரப்ப ஆயிரத்தெட்டு கண்டிஷன், தியேட்டர் தடை, பிட்டு பட தியேட்டரில் பீடி விற்க, சமோசா விற்க தடை, சென்ஸார், காவல்துறைக்கு லஞ்சம் என்று எவ்வளவு தொல்லைகள் ? இந்த நடிகைக்கு பதில் ஷகீலா அவ்வளவு தானே வித்யாசம் ? ஏன் தொலைக்காட்சிக்கில்லை சென்ஸார் ?

ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றால் ? வேண்டாம் அதை விடுங்கள். இந்து தருமத்தில் எங்கும் சாமியார்கள் இல்வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படவில்லையே ? அப்படி இருக்க சாமியார் நித்யானந்தர் என்ன குற்றம் செய்தார் ?? பொறுப்பற்ற ஊடகமான சன் டிவி தான் குற்றம் செய்துள்ளது...
.
.

50 comments:

VISA said...

நீங்கள் சொல்லும் மனித உரிமை மீறல் என்பது முழுக்கமுழுக்க உண்மை. யு.கே. வில் இது பற்றி விவாதம் நடக்கிறது. ஐரோப்பாவின் மனித உரிமை விதிகளை அங்கே நிலைநாட்ட கோருகிறார்கள். அதன் படி ஒருவரை பற்றி செய்தி வெளியிட வேண்டுமானால் 48 மணிநேரத்திற்கு முன்பாக அவரிடம் அனுமதி வாங்க வேண்டும். அந்த நபர் அந்த செய்தி வெளிவர விரும்பவில்லையென்றால் நீதிமன்றம் மூலம் ஸ்டே வாங்க முடியும். இந்த சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வரலாம். மனித உரிமை மீறல் என்ற கண்ணோட்டத்தில். ஆனால் அதே நேரம் குற்றங்களை கண்டு பிடிக்கவும்...குற்றம் செய்தால் மாட்டிக்கொள்வோம் மாட்டிக்கொண்டால் தப்பிக்க முடியாது என்கிற சட்ட நடைமுறை அதாவது இந்தியாவிலும் இருக்குமானால் இதை கொண்டு வரலாம். மற்றபடி சன் டி.வி. செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

VISA said...

சாமியார் என்ன குற்றம் செய்தார்? அவர் எதுவும் செய்யவில்லை. மக்கள் தான் செய்தார்கள். மக்கள் வீட்டில் திருட வந்தவனை பெட்ரூமில் அமர்த்திவிட்டு பிறகு குய்யோ மிய்யோ என்றால் சாமியார் பொறுப்பல்ல.

ரவி said...

விசா. உங்களை எதிர்பார்த்தேன். ரொம்ப க்விக்கா வந்துட்டீங்க. ஓட்டுக்களை போடுங்க. பொறுமையா முழுமையா பதில் சொல்றேன்.

கார்க்கிபவா said...

சன் டிவி செய்தது தப்பு இல்லைன்னு சொல்ல வரல.. ஆனா அதுக்குன்னு உங்க கேள்வியெல்லாம் ஓவருண்ணே..

இந்த வீடியோ பார்த்தா ரெண்டு பேரும் ரொம்ப நாளா பஜனை செய்றாங்கன்னு தெரியலையா???????????

இதுல மாடஸ்டி குலைந்து விட்டதா?

நடிகையின் செயல் தவறென சொல்ல முடியாது. ஆனா சாமியார்???????

அதனால் நடிகையின் முகத்தை மறைத்து காட்டியது ஓக்கே. ஆனா டிவில இவ்ளோ ஆபாசமான வீடியோவான்னு கேட்கலாம்..அது என்னை பொறுத்தவ்ரை சரி..

இதை விட ஆபாசமாக சிலம்பாட்டம் எல்லாம் டிவிலதானே போடறாங்க?இவங்க ஸ்ளைடு போட்டு இத்தனை மணிக்கு (போட்டத) போடறோம்ன்னு சொல்லிட்டுதானே போடாங்க..

சாமியார் மீதான மக்கள் ஆர்வம் குறைய இது தேவைன்னு நான் நினைக்கிறேன்

கதவைத் திற.. கன்னிகள் வரட்டும்.. ஜெய் நித்யானந்தா

Anonymous said...

சுவாமி நித்யானந்தா, பா.ரா. கிழக்கு வெளியீடு. வாங்கி பயன் பெறு.

ரவி said...

கார்க்கி, கிராமங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடலும் பாடலும் என்ற குத்தாட்ட நிகழ்வில் இல்லாத ஆபாசமா டிவியில் வரப்போவுது ?

சாமியார் பஜனைக்கு ரெக்ரூட் ஏன் செய்திருக்கக்கூடாது ? எப்படி நீண்ட நாள் என்று உறுதியாக சொல்கிறீர் ?

☀நான் ஆதவன்☀ said...

ஓட்டு போட்டாச்சு

//கட்டிப்பிடிப்பது போல கட்டிப்பிடித்து, பின் லைட்டை அணைத்துவிட்டு யோகா செய்வார்//

:))))அவ்வ்வ்வ்வ் அப்ப எல்லாருக்கும் அந்த யோகாவை சொல்லிகொடுக்கலாம்ல. நாமும் பயன் பெறுவோம்ல

Anonymous said...

சாமியாரை விடக் கேவலமாக ஊடகங்கள் நடந்துகொள்கின்றது. நக்கீரன் தணிக்கையின்றி ஒளிக் காட்சிகளை வெளியிட்டிருக்கின்றது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை?

சாமியாருக்கு செக்ஸ் உணர்ச்சி வரக்கூடாதா? அவர் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாதா? இருவரும் விருப்பப் பட்டு உடலுறவில் ஈடுபடுவது எப்படி தவறாகின்றது?


இன்னும் நாட்டின் பல இடங்களில் தேவதாசி முறை இருக்கின்றது. செக்ஸ் செய்யாத கடவுள்கள் யார் இருக்கின்றனர்?

ஒருவன் செக்ஸ் செய்தால் அவனுடைய இதர விசயங்கள் எல்லாவற்றையும் நிராகரிக்க வேண்டுமா?

சன் டிவி கலாச்சாரத்தை காப்பாற்ற முனைகின்றதா? என்ன ஒரு கோமாளித்தனம்

கலைஞருக்கு எதுக்கு ரெண்டு பொண்டாட்டி?

எதுக்கு செக்ஸ் என்றவுடன் பதறியடித்து காய்ஞ்சமாடு கம்பில விழுந்தமாதிரி ரியாக் பண்றாங்கன்னு புரியல.

அரசியல் வாதிகள்ள இருந்து ஆன்மீக வாதிவரை அனைவரும் அடிப்படையில் மனிதர்கள் தாம் அவர்களுக்கும் ஆண்குறி இருக்கும்.

அவங்க விரும்பி தங்கட தேவயை பூர்த்தி செய்றாங்க உங்களுக்கு எங்க குத்தி குடையுது?

போயிட்டாங்க விளக்குப் பிடிக்க. எங்கடான்னு கமராவ தூக்கீடு அலைறாங்க. பண்ணிபயலுகள்.

இந்த காட்சிகளை பார்த்து இன்னிக்கு எத்தின ஆயிரம் பேருக்கு மூடு டாப்பா இருக்கும்? வெளிய கள்ளச்சாமின்னு பேசிக்கிட்டு இருப்பாங்க உள்ளார சுர்ன்னு இருக்கும்.

காட்டுமிராண்டித்தனமான தரங்கெட்ட ஊடகங்கள். நித்தி எவ்வளவோ மேல். எனக்கு அவர தெரியாது ஆனா ஐ லைக் கிம்.

Rajesh V Ravanappan said...

உங்கள் கருத்து மிக்க சரி. . . பிட்டு படம் தோற்க்கும் ..
ஆனால் உங்கள் தலைப்பும் மற்ற சல்லாப தலைப்பைப் போலே உள்ளது.. "மனித உரிமை மீறல்" இந்த வார்த்தை தான் உள்ளே இழுத்தது..
"நித்யானந்த ரஞ்சிதோற்சவம் " - பிட்டு படப் பெயர் போல் உள்ளது

Prabhu said...

:))))அவ்வ்வ்வ்வ் அப்ப எல்லாருக்கும் அந்த யோகாவை சொல்லிகொடுக்கலாம்ல. நாமும் பயன் பெறுவோம்ல///

ஹி.. ஹி..

ரவி, உங்க மேட்டர் சரி, அவர் சன்யாசின்னு சொன்னாரா? அவர் செக்ஸ் வைத்துக் கொள்ள கூடாதுன்னு யாரு சொல்ல முடியும்.. பட், இது பிஸினஸ் பாஸ்! சன் நியூஸை என்னய மாதிரி ஆட்களை பார்க்க வைத்துவிட்டார்களே, அதற்குதான்!

Anonymous said...

anonymous உனக்கு தான்

நீ என்ன சாமியாருக்கு வக்காலத்து நீயும் எங்காவது செட்டப் செஞ்சி வஞ்சு இருந்தால் சொல்லு!
நான் காமிராவை தூக்கிட்டு வருகிறேன்.

நித்தியாவை விட நல்லா இருக்கா பார்போம், அதையும் சன்,கலைஞர்,இன்னும் மற்ற பிற டிவிக்களில் போட சொல்லலாம்
மக்கள் பார்த்து ரசிக்கட்டும்..

சென்ஷி said...

:))

நடத்துங்க நடத்துங்க..

VISA said...

vote poatachu

VISA said...

//சாமியாருக்கு செக்ஸ் உணர்ச்சி வரக்கூடாதா? அவர் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாதா? இருவரும் விருப்பப் பட்டு உடலுறவில் ஈடுபடுவது எப்படி தவறாகின்றது?//

அதனால் தான் நான் விபசாரத்தை சட்டபூர்வமாக்குங்கள் என்று எழுதினேன்.

வால்பையன் said...

என் கோவமெல்லாம் அந்த ஆள் மாத்திரை சாப்பிடவும் தான்! கூடு விட்டு கூடு பாய்ந்து கேன்சரை குணமாக்கும் கபோதிபய மாத்திரை சாப்பிட்டு ஊரை ஏமாத்துறானேன்னு தான் அந்த பதிவு எழுதினேன்!

அந்த நடிகை யார் என்று தெரியும் முன்னரே எழுதிய பதிவு, அதை சிலாகித்தே எழுதியிருப்பேன்!

ராம்ஜி_யாஹூ said...

I am not criticising you. Yesterday you have written an aggressive post and today you made total u turn.

Even to me it looks like some personal enemity between sun media and Nithyanadha ashram, thats why this episode is broadcasted only in Sun news channel alone.

Not in kalaignar tv, makkal tv or jaya tv.

If really sun media is concerned with society they should mention the actres name and also request public not indulge in violence.


by the way where is your post about kalki ashram and Bangaru adikalar's birthday.

Chile earthquake and Nithyanadha scene, is that called as KEYAS theory

ரவி said...

என் கோவமெல்லாம் அந்த ஆள் மாத்திரை சாப்பிடவும் தான்! கூடு விட்டு கூடு பாய்ந்து கேன்சரை குணமாக்கும் கபோதிபய மாத்திரை சாப்பிட்டு ஊரை ஏமாத்துறானேன்னு தான் அந்த பதிவு எழுதினேன்!....

well said..

ஐந்திணை said...
This comment has been removed by the author.
சங்கே முழங்கு said...

இந்த வீடியோ வெளியிட்ட கலைஞர் குடும்ப படுக்கையறையை யார் படம்பிடிப்பார்?

ரவி said...

உங்கள் கருத்து மிக்க சரி. . . பிட்டு படம் தோற்க்கும் ..
ஆனால் உங்கள் தலைப்பும் மற்ற சல்லாப தலைப்பைப் போலே உள்ளது.. "மனித உரிமை மீறல்" இந்த வார்த்தை தான் உள்ளே இழுத்தது..
"நித்யானந்த ரஞ்சிதோற்சவம் " - பிட்டு படப் பெயர் போல் உள்ள................................\\

இதனை எனக்கு கிடைத்த காம்ளிமெண்டாகவே எடுத்துக்கறேன் ஹி ஹி

ரவி said...

//////////////இந்த வீடியோ வெளியிட்ட கலைஞர் குடும்ப படுக்கையறையை யார் படம்பிடிப்பார்////

ஏன் படம் பிடிக்கவேண்டும், அதை முதல்ல சொல்லுங்க.

ரவி said...

அதனால் தான் நான் விபசாரத்தை சட்டபூர்வமாக்குங்கள் என்று எழுதினேன்.

Wednesday, March 03, 2010............................


நிரம்ப சரியான கூற்று..........

Anonymous said...

சாமியார் லைட்டை அணைத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏன், கட்டிப்பிடிப்பது போல கட்டிப்பிடித்து, பின் லைட்டை அணைத்துவிட்டு யோகா செய்வார்.?????

hihihi...

ரவி said...

நன்றி அனானி ...

ரவி said...

சாமியாருக்கு செக்ஸ் உணர்ச்சி வரக்கூடாதா? அவர் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாதா? இருவரும் விருப்பப் பட்டு உடலுறவில் ஈடுபடுவது எப்படி தவறாகின்றது?
-------------

அதைத்தானே அனானி சார் நான் சொல்கிறேன்...

இந்து மதத்தின் மாடஸ்டியை குலைக்க மிஷினரி கூட்டம் நாயாய் குரைக்கிறது. இதற்கு அமெரிக்க பணம். இஸ்ரேல் பணம்.

ராம்ஜி_யாஹூ said...

For the bloggers(us) every month is celebrations & festivals.

January book exhibition, Feb Vinnai taandi varuvaya & 100il oruvan.

Now this month Nithyanandha sri

அன்புடன் நான் said...

மனித உரிமை மீறல் பேசவேண்டிய... நிகழ்வு இது அல்ல.

சட போட்டவனெல்லாம்... சாமியார் என்கிற நிலை மாறனும். அத மக்கள் புரிஞ்சுக்கணும்.

Anonymous said...

Kalaignar and family is aligned with Puttaparthi baba. Probably that could be the reason sun telecast this.

Business-la ellam sagajam.

ரவி said...

யாஹூ ராம்ஜி

அடுத்த மாதம் ஜக்கியோ ஜட்டியோ. லூஸ்ல விடுங்க.

ரவி said...

Kalaignar and family is aligned with Puttaparthi baba. Probably that could be the reason sun telecast this.

Business-la ellam sagajam.

இது பயங்கரமா இருக்கு அனானி சார்.

மங்கை said...

மனித உரிமை மீறலா இல்லையா என்பதை ஒரு ரெகுலேடரி போர்ட் இருந்து தான் தீர்ப்பு சொல்லனும்..

பிரச்சனை Hippocraticஆ இருக்குறது.. அவர் தான் இப்படி ன்னு ஒரு பிம்பத்தை உண்டு பண்ணாரோ இல்லையோ.. நம்ம மக்கள் இது மாதிரி ஆளுகளை முற்றும் துறந்தவர்னு தானே நினச்சுட்டு போய் மணிகணக்குல புள்ள குட்டிகளை கவனிக்காம உட்கார்ந்துக்கறாங்க...அவங்க இனிமேலாவது யோசிக்கனும்... வாழ்க்கைக்ககு வேண்டியது வேற எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை...அடுத்தவனுக்கு தொல்லை தராம தன் வேலையை ஒழுங்கா செய்தா போதும்னு...

Anonymous said...

// இது பயங்கரமா இருக்கு அனானி சார்.//

En sir?? :D

Puttaparthi baba came to kalaignar's house and gifted a chain "from heaven" to durai murugan in kalaignar's presence.

Also, stalin went and met him for some water project.

Competition between 2 "sanyasi business" houses would have resulted in this.

Anyway its good for everyone, as these "poli" guys are brought to light.

Ithuve puttaparthi-a iruntha vera oru channel veliyittu irukkum, sun and kalaignar tv would have kept mum. :)

Arasiyal-la ithellam......

ரவி said...

ப்ரேமானந்தா கூட இப்படி ஒரு அரசியல் காரணத்தால தான் முடிஞ்சார் இல்லையா ??

Unknown said...

உங்களின் பதிவில் உள்ள நையாண்டி சில பேருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.. ;))

ரவி said...

-----பிரச்சனை Hippocraticஆ இருக்குறது.. அவர் தான் இப்படி ன்னு ஒரு பிம்பத்தை உண்டு பண்ணாரோ இல்லையோ.. நம்ம மக்கள் இது மாதிரி ஆளுகளை முற்றும் துறந்தவர்னு தானே நினச்சுட்டு போய் மணிகணக்குல புள்ள குட்டிகளை கவனிக்காம உட்கார்ந்துக்கறாங்க...அவங்க இனிமேலாவது யோசிக்கனும்... வாழ்க்கைக்ககு வேண்டியது வேற எங்கேயும் போய் தேட வேண்டியதில்லை...அடுத்தவனுக்கு தொல்லை தராம தன் வேலையை ஒழுங்கா --------------



நல்லது. ஆனால் சாமியாரை பார்த்தால் முற்றும் துறந்தவராகத்தான் இருக்கிறார். ஹி ஹி..

நலமா, ரொம்ப நாளா ஆளையே காணோம் ? நினைச்சிக்கிட்டே இருந்தேன் உங்கள. எல்லாம் நித்யானந்தர் அருள் :))

ரவி said...

உங்களின் பதிவில் உள்ள நையாண்டி சில பேருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன்.. ;))

Wednesday, March 03,........


முழுசா படிக்க யாருக்கும் நேரம் இருக்கறதில்லை. தவ்வி தவ்வி படிக்கவேண்டியது. அப்புறம் நாம என்ன காண்டெக்ஸ்ட்ல சொல்ல வரோம்ங்கறத புரிஞ்சுக்காம பின்னூட்டம் போட்டுட்டு நடையை கட்டவேண்டியது. இப்படித்தான் ஓடுது பதிவு வாழ்க்கை.

வெற்றி said...

ஹா ஹா ஹா :))))

ராம்ஜி_யாஹூ said...

http://www.dhyanapeetam.org/web/default.aspx

this is in response to the defamatory video on Paramahamsa Nithyananda aired by Sun TV and various other news media since the night of March 2, 2010.

At this moment, we feel that a mix of conspiracy, graphics and rumor are at play in these recent events that have unfolded. We are working on a legal course of action and will come up with updates in due course

In these trying times, we wish to reassure the lakhs of devotees and well-wishers whose sentiments have been deeply hurt by this conspiracy. We thank all the devotees and disciples for standing with us during these times

In the past 7 years of his public life, Paramahamsa Nithyananda has been a transformational force in the lives of over 2 million people across numerous countries around the world. The powerful truths he lives and shares and his personal authenticity have made his teachings relevant across religions, cultures and class

புளியங்குடி said...

புவனேஸ்வரி விவகாரத்தில் ஒரு பத்திரிகை மீது பாய்ந்தவர்களெல்லாம் இப்ப என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நிலைமை இப்ப நேரெதிராக இருக்கிறது.

Anonymous said...

Yes I agree with you 100% on the SUN TV 's abuse of public media.... At the sametime I reject the notion of supporting Nithi. All our religious leaders cry out loud - about their shameful past deeds and surrender God's feet. Nithi has done completely opposite. Obviously it is age. He should have renounced his religious mask prior to these deeds instead of disappointing and shaming several of his followers.

சீனு said...

//ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்றால் ? வேண்டாம் அதை விடுங்கள். இந்து தருமத்தில் எங்கும் சாமியார்கள் இல்வாழ்வில் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படவில்லையே ? அப்படி இருக்க சாமியார் நித்யானந்தர் என்ன குற்றம் செய்தார் ?? பொறுப்பற்ற ஊடகமான சன் டிவி தான் குற்றம் செய்துள்ளது...//
//இந்த வீடியோ வெளியிட்ட கலைஞர் குடும்ப படுக்கையறையை யார் படம்பிடிப்பார்?//

ஏங்க. கலைஞர், அவருக்கு 2 குடும்பம் என்று அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கார். ஆனா, இந்த 'ஸ்வாமி', எல்லோரையும் ப்ரம்மச்சரியம் மேற்கொள்ள சொல்லிட்டு அவரு மட்டும் குஜாலா இருந்திருக்கார். அது தப்பு தானே?

//சாமியாரை விடக் கேவலமாக ஊடகங்கள் நடந்துகொள்கின்றது. நக்கீரன் தணிக்கையின்றி ஒளிக் காட்சிகளை வெளியிட்டிருக்கின்றது. இதற்கெல்லாம் என்ன அடிப்படை?//

சப்ஸ்பிரப் செய்யுங்கள். முழு நீள ஹை டெப்பனிஷனில் லீலைகளை கண்டு களிக்கலாம் என்று நக்கீரனில் விளம்பரம்...

சன் டிவிக்கு இதில் ஏதோ உள்குத்து இருக்கு. சாதாரணமா பாடல் காட்சிகளிலேயே தாமாக முன்வந்து தணிக்கை செய்யும் சன் டிவி, ஏன் இந்த விடியோவை முழுக்க சென்சார் செய்யாமல் ஒளிபரப்பியது என்று தெரியவில்லை. இந்த காட்சிகள் அனைவரையும் நெளிய செய்திருக்கிறது.

இளைய கவி said...

ரவி, நான் முழுக்க முழுக்க உங்க சைடுதான் . என்னா நானும் சமியார ஆயிட்டா இப்படி எழுதி தள்ளிருவிங்களோன்னு பயமா இருக்கு

Anonymous said...

sir,
i think he will be sent to cuddalore central jail only..

Hariprasad G

butterfly Surya said...

ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்” - Osho

butterfly Surya said...

ஊடகங்கள் நித்யாவை விட ஆபத்தானவை..

Baranee said...

Hi Ravi,

If you say what Sun tv did was wrong means, what you have done also wrong!!..you have shared the link of that video to all in your another blog. This is equal to what sun tv did.
By saying this i'm not supporting for sun tv.

Anonymous said...

அண்ணே or அக்கா...

இந்த பதிவு ஒரு காமெடிக்காக எழுதப்பட்டது. நீங்க சீரியஸாக எடுத்துக்கவேண்டாம்..

gulf-tamilan said...

ம்!!

Anonymous said...

//சாமியார் லைட்டை அணைத்துவிட்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். ஏன், கட்டிப்பிடிப்பது போல கட்டிப்பிடித்து, பின் லைட்டை அணைத்துவிட்டு யோகா செய்வார். முழுமையான தகவல்கள் தெரியாமல் இப்படி சாமியாரின் மாடஸ்டியை குலைப்பது எவ்வாறு நியாயம் ?

neenka ivvalavu nallavaraaaaaa? mudiyala

Vendhu said...

நித்யானந்தரின் சிக்கல் அவர் காமத்தில் ஈடுபட்டார் என்பதல்ல. அவர் வேடதாரி என்பதே. அவர் பிறரை ஏமாற்றினார் என்பதே. தன்னை யோகி என்றும் ஞானி என்றும் முக்தர் என்றும் பொய் சொல்லி பெரும் பணத்தை ஈட்டினார் என்பதே. அதை மழுப்ப நீங்கள் மனித உரிமை மீறல் பற்றியெல்லாம் பேசவேண்டியதில்லை.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....