Tuesday, January 22, 2008

பாமரன் விவகாரம் : லீனாமணிமேகலைக்கொரு கேள்வி...



லீனாமணிமேகலைக்கொரு கேள்வி...

ஐய்யய்யோ எனக்கு ரெண்டு விஷயங்கள் புரியலீங்கோ.

முதலில், கல்லூரிக்குக் கவுன் போட்டுக் கொண்டு போனது யாருங்கோ?
ரெண்டாவது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இப்பவே வித்தியாசம் தெரியலீங்கோ, உடம்பிலேயும் சரி, உடையிலேயும் சரி, இன்னும் பெரியார் சொன்ன மாதிரி செய்தால், குழந்தைகள் குழம்பிப் போய்விடும் சாமிகளா.

அடுத்த சந்தேகம், லீனா மணிமேகலை, பாமரனைக் குற்றம் சொல்லுகிறார் என்பது சரி. ஆனால், அவரி பெரியார் உள்ளே செல்லாததையும் தவறு என்று சொல்கிறாரா? அல்லது பெரியார் உடைகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னதை எதிர்க்கிறாரா? ஏன் கேட்கிறேனென்றால், பெரியாரின் "புதிய உடை"க் கொள்கையை ஆதரித்தால், இவரும் ஆண் மாதிரி அல்லவா இருக்க வேண்டும்? அம்மணி, இந்த உலகத்தில், எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம் தான் இயற்கையிலேயே அழகு. ஆண் மயில், சிங்கம், சேவல் என்று எல்லாமும் ஆணினத்தில் தான் அழகு. பெண்கள் நீங்கள் பெரியாரைப் பின்பற்றுகிறேன் என்று இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். மேலும், பெரியாரை இவ்வளவு தலைகீழாகக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள், அவரின் கொள்கைப்படி முடியைக் கத்தரித்துக் கொள்ளாதது ஏன்? ஒரு வேளை, பெரியாரின் கொள்கைகளை நீங்கள் "வெளியிலுருந்து" ஆதரிக்கிறீர்களோ?

ஒரிஜினல் மேட்டர்

அங்கே கலக்கல் பின்னூட்டத்தினை போட்டவர்: சாணக்யன்

ஈயம் பித்தாளைகள் உடனே கிளம்பவேண்டாம்...இது சாணக்கியனது கருத்து மட்டுமே...

குறுக்கு விசாரணை:

மேடம் அந்த கல்லூரிக்கு அணிந்து சென்றது ஸ்லீவ்லெஸ் சுரிதாராமே ?

- like the post ?? Let me know by clicking down.

4 comments:

dondu(#11168674346665545885) said...

ஒரு சிறு டைவர்ஷன்.

பேச்சாளர் (கூட்டத்தில் பேசும்போது):

”ஆணுக்கும் பெண்ணுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு”.

கூட்டத்தில் ஒரு ஆண்குரல்: ”அந்த வித்தியாசங்கள் வாழ்க”.

இன்னும் ஒரு ஜோக் இருக்கிறது. பிறகு கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

பசித்திரு

தனித்திரு

விழித்திரு

முதலெழுத்துக்களைச் சேர்த்துப் பாருங்கள் ரவி.

சாணக்யன்

Anonymous said...

இன்னுமொரு சந்தேகம், நான் உண்மையாகவே பாமரன், யார் இந்த லீனா மணிமேகலை? லேனா தமிழ்வாணன் மற்றும் அவரது மணிமேகலைப் பிரசுரத்துக்கும் சொந்தக்காராரா? யாராவது தயவு செய்து விளக்குவார்களா? இப்போது யார் யாரோ இலக்கிய வியாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர். இது மாதிரிதான், ஒரு படத்தில் கதாநாயகியின் பெயர் குட்டி ரேவதி என்று வைத்ததற்கு ஒரு பெண் கவிஞர் நான்தான் அந்த குட்டி ரேவதி, என்னை இழிவுபடுத்துவதற்காகத்தான் அந்தப் பெயரை வைத்தார்கள் (கதாநாயகிக்குப் பெயர் வைப்பது எந்த வகையில் இழிவோ தெரியவில்லை) என்று கோர்ட்டில் கேஸ் போட்டார்கள்.

பிறகுதான் சாணக்யனுக்குப் புரிந்தது பாவம் அந்தப் பெண் கவிஞரின் புத்தகங்கள் ஒன்றும் போணியாகவில்லை, இப்போது அந்தக் கவிஞியின் புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பாம்.

Chanakyan said...

MrRavi

முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்.

http://chanakyansays.blogspot.com/2008/01/blog-post_25.html

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....