Saturday, March 28, 2009
சித்த மருத்துவம் பற்றிய அருமையானதொரு பதிவு
சித்த மருத்துவம் பற்றிய அருமையானதொரு பதிவு...இங்கே க்ளிக்
Friday, March 27, 2009
கயவாளிகள் கவனத்துக்கு > காட்டிக்கொடுக்கும் கூகிள், ஸ்கைப். ஜாக்கிரதை

சில கயவாளிகள் அநாகரீக கமெண்டுகளை போடுவது போல் தெரிகிறது. அண்ணன் உண்மைத்தமிழனில் இருந்து பரிசல்காரன் வரை இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
என்னுடைய எண்ணம், பழைய நபர்கள் இந்த செயலை செய்ய துணியமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். தமிழக போலீசாரின் திறமை பற்றி...
நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால்...பழைய தமிழ் இணைய வரலாறு தெரியாமல் தேன் கூடுகளில் கை வைக்கிறீர்கள். தமிழக சைபர் க்ரைம் சிறப்பாக செயல்படுகிறது.
கூகிளில் நிறுவனத்தில் இருந்து ஸ்கைப் நிறுவனம் வரை தமிழக போலீஸ் கேட்கும் தகவல்களை உடனே தர தயாராக உள்ளது.
போலீசார் கேட்கும் தகவல்கள் உடனுக்குடன் மின்னஞ்சலில் ஓடிவருகிறது. இந்த நிறுவனங்களில் இதற்கென தனி குழு பணியாற்றுகிறது.
நீங்கள் ப்ராக்ஸி உபயோகப்படுத்தினாலும் சரி, ப்ரவுசிங் செண்டர் கணிப்பொறியில் இருந்து திருட்டுத்தனம் செய்தாலும் சரி, கண்டிப்பாக மாட்டிக்கொள்வீர்கள்.
ஆர்க்குட்டில் ஏற்கனவே இதுபோன்ற பல விஷயங்கள் நடந்தாலும், தமிழ் இணைய உலகில் இருப்பவர்கள் இந்த விஷயங்களை ஏற்கனவே வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்.
சிறைத்துறை ஐ.ஜியில் இருந்து ஐ.ஏ.எஸ் ஆபீஸர் வரை தமிழ் இணைய தளங்களை பார்வையிடுகிறார்கள். அரசியல்வாதிகளில் இருந்து பெரிய மனிதர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் குழுமும் இடமாக இணைய உலகு மாறிவிட்டது.
அதனால் உங்கள் சில்லுண்டித்தனங்களை விட்டுவிட்டு மாறிக்கொள்ளுங்கள். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். மீண்டும் சொல்கிறேன், எந்த இணையம் 100 சதவீதம் பாதுகாப்பில்லை என்று நினைத்து இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகிறீர்களோ, அதே இணையம் உங்களுக்கும் 100 சதவீதம் பாதுகாப்பில்லை.
இது இருபுறமும் கூரான கத்தி என்பதை உணருங்கள். ஒரே நாளில் உங்கள் வீடு தேடி போலீஸ் வரும். தயவுசெய்து திருந்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்...
Wednesday, March 25, 2009
போலிகள் ஜாக்கிரதை

அண்ணன் உண்மைத்தமிழன் இடுகையில் என்னுடைய பின்னூட்டம்...
அனானி முன்னேற்றக்கழக கடையை நானும் பார்த்தேன்...
என்னுடைய ஒரு பதிவில் உட்டாலக்கடிதமிழன் என்ற பெயரில் ஒரு நாலு கமெண்டு வந்தது.
அனானி முன்னேன்ற்றக்கழகத்தில் உங்கள் நன்பன் சரவணன் ஐடியும் இணைந்துள்ளது.
அவரிடம் முதலில் எச்சரிக்கை செய்யவேண்டும்...
அமீரகத்தில் ஒரு சொறிநாய் இன்னும் உயிருடன் உள்ளது....
ஒன்று அதன் வேலையாக இருக்கும்....
அல்லது மீண்டும் பெரியவர் ஆட்டத்துக்கு கிளம்பிவிட்டிருந்திருக்கலாம்...
ஆறு மாதம் ஆகிவிட்டிருக்கும் இல்லையா ? அதான் கைகள் பரபரக்கின்றன...
ஆனால் புதியவர்கள் யாருக்கும் எந்த மோட்டிவும் இல்லை என்பது தான் உண்மை. இது போன்ற வித்தைகளும் அறிந்தவர் நமது அண்ணாச்சி மட்டும்தானே ?
மறுபடி ஆப்பை கூர் தீட்டவேண்டியது தான் என்று நினைக்கிறேன்...
பழைய சம்பவங்கள், சைபர் கிரைமின் திறமை போன்றவற்றை எழுதினால் ஒரு வேளை மீண்டும் பழைய சம்பவங்கள் நியாபகத்துக்கு வரலாம்...
எவ்வளவோ பண்ணிட்டோம்...இதப்பண்ணமாட்டோமா....
ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் பிராமண குரல் தேடல்

ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கா பதிவோட தலைப்புல ? சாரி கோச்சுக்காதேள்...
நல்ல குரல் வளம் உள்ளவர்கள் ரிஜக்ட் ஆவதும், அவாள் மட்டும் செலக்ட் ஆவதும்...அதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கனும் ஓய்...!!!!
ஜட்ஜஸ். நீங்க நன்னா ஜட்ஜ் பண்றேள். கொஞ்சம் சூத்திரவாளையும் இந்த காம்பட்டீஷன்ல சேர்த்து பாடவைச்சி ப்ரைஸ் கொடுங்களேன்னா...? கொறைஞ்சா போயிருவேள் ?
டிஸ்கி : பதிவு எந்த தனிநபரையும் புண்படுத்த அல்ல.
Sunday, March 22, 2009
Saturday, March 21, 2009
ஏன் இந்த பதிவுக்கு மட்டும் இப்படி ?

பதிவு போட்டேன். சேர்க்கமுடியல.
மீள்பதிவாக்கினேன். அப்பவும் ஆட்டத்துல சேத்துக்க முடியாது என்று சொல்லுது.
நான் என்னதான் பண்றது ? அதான் ஒரு புது பதிவு போட்டு அந்த பதிவோல சுட்டியை இதுல குடுக்கறேன்.
பார்ப்போம் இதுவாவது வருதா என்று ? போப்பாண்டவர் உளரல் பற்றிய பதிவு
இருண்ட க(கா)ண்டமும் உளறிய போப்பாண்டவரும்

கிறிஸ்தவ மதத்தில் உயர்ந்த பதவி போப் ஆண்டவர் பதவியாகும்...பங்கு தந்தைகள், ஆயர்கள், கார்டினல்கள் என்று விரியும் கத்தோலிக்க கிறிஸ்தவ மத அடிப்படை பதவிகளில் இதுவே உயர்ந்தது.
இயேசுபெருமானால் முதல் போப் ஆண்டவராக - மதத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் புனித.இராயப்பர்.
இயேசுபெருமானின் வாயினால்..
"நீ பாறை, உன் மீது எனது திருச்சபையை கட்டுவேன்" என்றும் "சொர்க்கத்தின் திறவுகோல் உன்னிடமேயிருக்கும்" என்றும் புகழப்பட்டவர்..
இயேசுபெருமானை யூதர்கள் மற்றும் பரிசேயர்கள் கைதுசெய்யவந்தபோது (Final Assualt) தன்னிடமிருந்த குறுவாளை கொண்டு ஒருவரது காதை வெட்டினார் புனித இராயப்பர்.
வழிவழியாக இராயப்பருக்கு பிறகு இந்த உயர் பதவிக்கு கார்டினல்களில் ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
அதற்கான தேர்தல் நடைபெற்று அதன் பின் போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
தற்போதைய போப். இரண்டாம் பெனடிக்ட், ஜெர்மனியை சேர்ந்தவர்.
கடந்தவாரத்தில் இருந்து போப் பெனடிக்ட் அவர்களின் காண்டம் பற்றிய கருத்தை ஆங்கில ஊடகங்கள் குத்திக்குதறி கூறுபோட்டுக்கொண்டிருந்தாலும், இது தொடர்பாக தமிழ் ஊடகங்களில் ஒரு பதிவும் வரக்காணோம்.
அதனால்தான் நானே களமிறங்கினேன்...
இந்த பதிவின் மூலம் யாரையும் புண்படுத்த முயலவில்லை. ஒரு செய்திப்பதிவு மட்டுமே இது.
போப்.பெனடிக்ட் அவர்கள் தற்போது ஆப்ரிக்க கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார்.கேமரூன் நாட்டுக்கு கிளம்பும் முன் அவர் எய்ட்ஸ் பற்றியும் காண்டம் பற்றியும் கூறிய தவறான சில கருத்துக்கள் தான் இப்போதைய விவாதப்பொருள்.
போப் சொன்னது என்னவென்றால்...
காண்டம் உபயோகப்படுத்துவதால் ஒரு புரயோசனமும் இல்லை..காண்டம் வினியோகிப்பது பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் செயல்தான் என்று உளறித்தள்ளிவிட்டார்.
அதுவும் ஒரு ஆப்ரிக்க நாட்டில், 22 மில்லியன் எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டதொரு கண்டத்தில், இப்படி காண்டத்தைப்பற்றிய அவரது உளரல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது...
உலகளாவிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, போப் ஆண்டவரின் இந்த கருத்து "outrageous and insulting" என்று கூறியுள்ளது. மேலும் மேலும் பல நோயாளர்களைத்தான் இது உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது...
வாடிகன் பேச்சாளர் பெடரிக்கோ லம்பார்டி ஏதோ மழுப்பியுள்ளார். போப் ஆண்டவர் சொன்னது பர்சனல் ரெஸ்பான்ஸிபிலிட்டியை அதிகப்படுத்த மட்டுமே, போப் ஆண்டவர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகவே அப்படிச்சொன்னார் என்று...
முன்பெல்லாம் போப் ஆண்டவர் பதவி வானளாவிய அதிகாரங்கள் படைத்ததாகவும், அரசுகளை கட்டுப்படுத்துவதாகவும் இருந்தது...
"இப்போ எல்லாம் யாரு நம்மளை மதிக்கறா" என்று பழைய ரயில்வே ரிட்டையர்டு பார்ப்பண பெரிசுகள் மாதிரி "போப்பாண்டவரும்" சொல்லிக்கொண்டு போகவேண்டியது தான் போல இருக்கிறதே ?
*******
******
*****
பாஸிடிவ்வோ நெகட்டிவ்வோ, ஓட்டை போடுங்கப்பா..
*****
****
***
Friday, March 20, 2009
தமிழ்ஷ் பட்டாம்பூச்சியின் செவ்வி (பேட்டி)

வணக்கம் சகோதரி...முதல் முறையாக ஒரு வாசகி, தமிழ் வலைப்பதிவு உலகத்துக்கு அளிக்கும் செவ்வி இது..(பேட்டி / சரியான தமிழ் வார்த்தை செவ்விதான்)...
உங்களை பற்றி சொல்லுங்க, எப்படி தமிழ் வலைப்பதிவுகள் படிக்க ஆரம்பிச்சீங்க ?
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுகிறேன்...அலுவலகம் முடிந்து வீட்டு சென்றபின் கணவர் வரும் வரையில் தினமலர் போன்ற தளங்களை மேய்வது வழக்கம்...அதன் மூலமாக தமிழ்ஷ் பழக்கமானது...கடந்த மூன்று மாதங்களாக தமிழ்ஷ் மூலம் வலைப்பதிவுகளை படித்து வருகிறேன்...
எப்படிப்பட்ட பதிவுகள் படிக்கிறீங்க ? பிடித்த பதிவு எது ? எந்த எந்த பதிவுகளை எப்படி படிக்கிறீங்க ?
பொதுவாக சீரியசாக எழுதும் வலைப்பதிவுகளை கண்டால் தூர விலகி ஓடுவேன்...உங்களுடைய வீராசாமீ பதிவு பி.டி.எப் கோப்பாக வந்தபோது அட தமிழில் இப்படி கூட எழுதறாங்களா என்று ரசித்தேன்...அப்போது அது ஒரு வலைப்பதிவு என்று தெரியாது...ப்ராக்லி ஸ்பீக்கிங், நான் ரெகுலராக படிப்பது குசும்பன் வலைப்பதிவு தான்..ஆம்லேட் மூலமாக வயதை கண்டுபிடிப்பது எப்படி என்று அவர் ஒரு குசும்பு பதிவு போட்டிருந்தார்...அதில் இருந்து ரெகுலராக அந்த பதிவுகளை வாசிப்பேன்...
நான் தமிழ்ஷ் மூலமாக, தலைப்புகள் ஈர்க்கும்படி இருந்தால் கண்டிப்பாக போய் படிப்பேன்...சில சமயம் தலைப்புகள் ஈர்க்கும்படி வைத்துவிட்டு உள்ளே மொக்கையாக இருக்கும்...தமிழ்ஷ் இல் அதிக ஓட்டுகள் வாங்கிய பதிவுகள் படிப்பேன்...
<இடைமறித்து> எப்படி பதிவுகளுக்கு போறீங்க ?
தமிழ்ஷ் மூலமாக பொதுவாக போவேன், ஆனால் குசும்பன், ஜ்யோராம் சுந்தர், பரிசல்காரன் போன்றவர்கள் பதிவுக்கு நேரடியாக URL டைப் செய்து இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மூலமாக போவேன்...
தமிழ்மணம் பற்றி தெரியுமா ?
ஆங், அங்கங்கே லிங்க் பார்த்திருக்கேன் ஆனால் இன்னும் சென்றதில்லை, தினமும் தமிழ்ஷ் மூலமாக பதிவுகள் படிக்கிறேன்...
உங்களுக்கு பிடித்த பதிவர்கள் யார்?
குசும்பன், ஜ்யோராம் சுந்தர், வெண்பூ, பரிசல்காரன், அதிஷா போன்றவர்களின் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்...உங்கள் பதிவும் படிக்கிறேன்...
எப்போதில் இருந்து படிக்கும் பழக்கம் ? பிடித்த எழுத்தாளர்கள் ?
சின்ன வயதில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறேன்...வீட்டில் அம்மா மளிகை கடை பொட்டலம் வாங்கி வந்தாலும் அதை கொட்டிவிட்டு அசுரத்தனமாக அதில் என்ன இருக்கிறது, அது எந்த புத்தகத்தின் பகுதி என்று கொலைவெறியோடு படித்திருக்கிறேன்...
சுஜாதா பிடிக்கும்...தேவிபாலா படுவேகமாக எழுதுவார்...படு விறு விறுப்போடு படிப்பேன்...
சாரு நிவேதிதா பற்றி ஏதோ சொல்லவேண்டும் என்றீர்களே ?
தனிமனித ஒழுக்கத்தோடு எழுதுங்கள் என்கிறார். இவர் ரொம்ப ஒழுங்கு. அவ்ளோதான்...
வலைபதிவுகள் படிப்பதால் என்ன நன்மை தீமை ?
பொதுவாக வலைப்பதிவுகள் ஒரு ஸ்ரெஸ் ரிலீப் என்று சொல்லவேண்டும்...வலைப்பதிவுகள் படிக்கும்போது மன அழுத்தங்கள் குறைந்து மனது லேசாகிறது...
பல்வேறு தகவல்களின் களஞ்சியம் என்றும் சொல்லலாம்...பொதுவாக செய்தி ஊடகங்களில் வெளிவராத தகவல்கள் கூட உடனுக்குடன் வெளியாகிது மிகவும் சிறப்பு...
எப்படிப்பட்ட பதிவுகள் வரவேண்டும் ?
நகைச்சுவை பதிவுகள் அதிகம் வரவேண்டும்...நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடுவது குறைய வேண்டும்...
தலைப்பு கவர்ச்சியாக வைப்பார்கள்...இங்கே க்ளிக் என்பார்கள்...உள்ளே சென்று க்ளிக் செய்தால் ஒரு மண்ணும் இருக்காது...இதுக்கு ஒரு பதிவு எதுக்கு ? டைம் வேஸ்ட் !!! போடும் மொக்கையை நல்ல மாதிரி, நகைச்சுவையா போடவேண்டும்...
வலையுலகின் எதிர்காலம் என்ன ?
இது ஒரு தொடர்பு ஊடகமாக, சோஷியல் நெர்வொர்க் ஆக, பிஸினஸ் நெர்வொர்க் ஆக உருவாக வாய்ப்பு உண்டு...மற்றபடி, பணிச்சுமை அழுத்தும்போது, மன அழுத்தம் குறைய வலைப்பூக்களை, நல்ல நகைச்சுவை வலைப்பூக்களை உபயோகிக்கலாம்...
உங்கள் குடும்பத்தினர் பற்றி / நீங்கள் வலைப்பூக்களை வாசிப்பதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் ?
தகவல் தொழிநுட்ப துறையில் பணிபுரிகிறார் என்னுடைய கணவர், "அப்படி என்னதான் படிக்கிற அதுல" என்று ஆச்சர்யப்படுகிறார்..."அதெல்லாம் உங்களுக்கு தெரியாது" என்பேன்....
மொக்கை, கும்மி, பின்னூட்டம் என்பதெல்லாம் அவருக்கு புரியாத தமிழ் வார்த்தைகளாக உள்ளன...
வலைப்பூ ஆரம்பிக்கும் எண்ணம் உண்டா ?
கண்டிப்பாக...ஒரு அம்பது பதிவை எழுதி வைத்துவிட்டு, அதற்கு அப்புறமாக வலைப்பூவை ஆரம்பித்து ஒவ்வொன்றாக பதிவிடவேண்டும் என்பது என்னுடைய ஆசை...இன்னும் ரெண்டு மாசம் போகட்டும், இன்னும் ஒரு அதிரடி பதிவரை சந்திக்கபோகிறது இந்த வலையுலகம்...
************************************************************************
சகோதரியை தமிழிஷிலும் தமிழ்மணத்திலும் வாக்களித்து வாழ்த்துக்கள்...கண்மணி அக்கா சகோதரி ராப் போல காமெடியில் கலக்க வாழ்த்துக்கள்...!!!!
*******
******
*****
Thursday, March 19, 2009
செஞ்சியாருடன் அல்ப்போன்ஸு - EPISODE 3
செஞ்சி ராமச்சந்திரன் அப்போது எந்த கட்சீயில் இருந்தார் என்று தெரியவில்லை...ஆனால் ஒரு எலக்ஷன் வந்து அவர் எங்கள் ஏரியாவில் பிரசாரம் செய்வதாக கேள்விப்பட்டிருந்தேன்...
நாடார் கடைப்பக்கம் புகைக்கப்போன இடத்தில்...
"ரவி கொஞ்சம் கடைய பாத்துக்கோ, வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்" என்று நாடார் கடையை என்னிடம் விட்டுவிட்டு போய்விட்டார்..
சைலன்ஸ்ர் இல்லாத டிவிஎஸ் பிப்டி ஒன்று வரும் சத்தம் கேட்டது...
வேறு யார்...
அல்ப்போன்ஸுதான்...
அப்போதெல்லாம் டீச்சர் டிரெயினிங் டிப்ளமோ படித்துவிட்டு, அரசாங்க ஊ.ஒ.து. பள்ளிகளில் வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தான் அல்ப்போன்ஸு...
"டேய், ஒரு தம்மு எடுடா" என்று அதிகாரக்குரல் எழுப்பினான்...
"நாடார் கடன்ல எதுவும் குடுக்கவேணாம்னு சொல்லியிருக்கார்...காசு இருக்கா"
"டேய், நீயும் நானும் அப்படியா பழகினோம் ? எங்கிட்ட ஏதுடா காசு ?.."
"பிலீஸ் கிவ் மி கோல்ட் பில்டர்"...
"நாயே, கடன் கேட்டாலும் பட்லர் இங்கிலீஷுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..."
திட்டிக்கொண்டே ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து கொடுத்தேன்...
"டேய் என்னடா சத்தம் ?"
ஒன்னுமில்லடா அல்போன்ஸு...செஞ்சியார் வராரு...
என்னது, எம்ஜியாரா ? அவரு இன்னும் சாகலையா ?
நாயே...அது எம்ஜியார். இது செஞ்சியார்...சிட்டிங் எம்பிடா...
சிட்டிங்ல ஏன் எம்புறாரு, ஸ்டேண்டிங்ல எம்பச்சொல்லு, நல்லா உயரம் உயரமா குதிக்கலாம்...ஹி ஹி என்று உண்மையிலேயே சீரியசாக சிரிக்கிறான் அல்ப்போன்ஸு...
அப்போது சில பல ஜீப்புகளின் சர சர சத்தமும், பிரச்சார மைக் செட் அலறும் சத்தமும் கேட்டது...
பொதுவாக எந்த அரசியல் தலைவரும் ஐநூறு ஓட்டு உள்ள எங்கள் தெரு வழியாக வருவது குறைவு...
வழி தவறி யாராவது வருவது உண்டு...
அப்படி ஏதும் நடந்திட்டதோ என்று ஆச்சர்யமாக கடையின் அரைக்கா மரத்தடுப்பை தூக்கி வெளியே வர எத்தனித்தேன்...
அப்போது அல்ப்போன்ஸும் சிகரெட்டை பத்தவைத்திருந்தான்...அவனும் இந்த இரைச்சலை கேட்டு சாலையை நோக்கியிருந்தான்..
அதற்குள் எங்கள் கடையை செஞ்சியாரின் பிரச்சார வேன் வந்தடைந்திருந்தது...
உள்ளே இருந்து செஞ்சியார் எழுந்து, நின்றுகொண்டிருந்த அல்ப்போன்ஸை நோக்கி கும்பிட்டார்..
இவன் அவரை பார்க்காமல்...என்னை நோக்கி திரும்பி...
இந்த காஞ்ச கருவாடா செஞ்சியாருன்னு சொன்ன ? என்றான்...
வண்டியை எடுப்பா...என்று..செஞ்சியார் போய்விட்டார்...காதில் விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
ஏண்டா டாபரு, ஒரு பெரிய மனுசன் கும்பிட்டா திரும்பி கும்பிடலாமேடா...
என் கையில தான் சிகரெட் இருக்கில்ல...சிகரெட்டோட எப்படிடா கும்பிடறது ? அது மரியாதை குறைவில்லையா ?
செஞ்சியார் தேர்தலில் ஜெயித்து எம்பியானார்...
அதன் பிறகு தொகுதிப்பக்கம் வந்ததாகவோ, பார்லிமெண்டில் பேசியதாகவோ..அட்லீஸ்ட் ஒரு நிழற்குடை கட்டித்தந்ததாகவோ..சத்தியமாக நினைவில்லை...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...
நானும் அல்ப்போன்ஸும் ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்தோம்...
அவனுடைய டீச்சர் டிரெயினிங் கால்பார் ஆகியிருந்தது...யாரோ ஒருவரிடம் சிபாரிசுக்காக போகவேண்டும் என்று அவனுடைய தந்தையார் சொல்லியிருந்தார்...
அவனும் பேண்ட் சட்டையிலேயே என்னுடன் அமர்ந்திருந்தான்...
அவனுடைய அப்பா வண்டியில் வந்தார்...
டேய் அல்ப்போன்ஸு...போலாமா ? என்றார்...
என்னுடன் பேசிக்கொண்டிருந்தவன்...சரிடா அப்ப நான் கிளம்பறேன்...
என்னடா ரவி, அரியர்ஸ் பாஸ் ஆகிட்டயா என்று என்னை சங்கடப்படுத்தும் ஒரு கேள்வியை கேட்டு...ஹிஹி என்று என்னுடைய சிரிப்பை பதிலாக பெற்றார் அல்ப்போன்ஸ் அப்பா...
அதற்குள் அவர் பின்னால் வண்டியில் ஏறி உட்கார்ந்துவிட்டிருந்தான் அல்ப்போன்ஸு...
மாமா...யாரை பாக்கப்போறீங்க ? வேலை கிடைச்சிருமா" என்றேன்...
செஞ்சியார்...
என்றார் அல்ப்போன்ஸ் அப்பா...
இஞ்சி தின்ற குரங்கு மூஞ்சியை அருகில் பார்த்தால் பயமில்லையே எனக்கு..அல்ப்போன்ஸ் முகம் அப்படித்தானிருந்தது...
நாடார் கடைப்பக்கம் புகைக்கப்போன இடத்தில்...
"ரவி கொஞ்சம் கடைய பாத்துக்கோ, வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்" என்று நாடார் கடையை என்னிடம் விட்டுவிட்டு போய்விட்டார்..
சைலன்ஸ்ர் இல்லாத டிவிஎஸ் பிப்டி ஒன்று வரும் சத்தம் கேட்டது...
வேறு யார்...
அல்ப்போன்ஸுதான்...
அப்போதெல்லாம் டீச்சர் டிரெயினிங் டிப்ளமோ படித்துவிட்டு, அரசாங்க ஊ.ஒ.து. பள்ளிகளில் வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தான் அல்ப்போன்ஸு...
"டேய், ஒரு தம்மு எடுடா" என்று அதிகாரக்குரல் எழுப்பினான்...
"நாடார் கடன்ல எதுவும் குடுக்கவேணாம்னு சொல்லியிருக்கார்...காசு இருக்கா"
"டேய், நீயும் நானும் அப்படியா பழகினோம் ? எங்கிட்ட ஏதுடா காசு ?.."
"பிலீஸ் கிவ் மி கோல்ட் பில்டர்"...
"நாயே, கடன் கேட்டாலும் பட்லர் இங்கிலீஷுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..."
திட்டிக்கொண்டே ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து கொடுத்தேன்...
"டேய் என்னடா சத்தம் ?"
ஒன்னுமில்லடா அல்போன்ஸு...செஞ்சியார் வராரு...
என்னது, எம்ஜியாரா ? அவரு இன்னும் சாகலையா ?
நாயே...அது எம்ஜியார். இது செஞ்சியார்...சிட்டிங் எம்பிடா...
சிட்டிங்ல ஏன் எம்புறாரு, ஸ்டேண்டிங்ல எம்பச்சொல்லு, நல்லா உயரம் உயரமா குதிக்கலாம்...ஹி ஹி என்று உண்மையிலேயே சீரியசாக சிரிக்கிறான் அல்ப்போன்ஸு...
அப்போது சில பல ஜீப்புகளின் சர சர சத்தமும், பிரச்சார மைக் செட் அலறும் சத்தமும் கேட்டது...
பொதுவாக எந்த அரசியல் தலைவரும் ஐநூறு ஓட்டு உள்ள எங்கள் தெரு வழியாக வருவது குறைவு...
வழி தவறி யாராவது வருவது உண்டு...
அப்படி ஏதும் நடந்திட்டதோ என்று ஆச்சர்யமாக கடையின் அரைக்கா மரத்தடுப்பை தூக்கி வெளியே வர எத்தனித்தேன்...
அப்போது அல்ப்போன்ஸும் சிகரெட்டை பத்தவைத்திருந்தான்...அவனும் இந்த இரைச்சலை கேட்டு சாலையை நோக்கியிருந்தான்..
அதற்குள் எங்கள் கடையை செஞ்சியாரின் பிரச்சார வேன் வந்தடைந்திருந்தது...
உள்ளே இருந்து செஞ்சியார் எழுந்து, நின்றுகொண்டிருந்த அல்ப்போன்ஸை நோக்கி கும்பிட்டார்..
இவன் அவரை பார்க்காமல்...என்னை நோக்கி திரும்பி...
இந்த காஞ்ச கருவாடா செஞ்சியாருன்னு சொன்ன ? என்றான்...
வண்டியை எடுப்பா...என்று..செஞ்சியார் போய்விட்டார்...காதில் விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
ஏண்டா டாபரு, ஒரு பெரிய மனுசன் கும்பிட்டா திரும்பி கும்பிடலாமேடா...
என் கையில தான் சிகரெட் இருக்கில்ல...சிகரெட்டோட எப்படிடா கும்பிடறது ? அது மரியாதை குறைவில்லையா ?
செஞ்சியார் தேர்தலில் ஜெயித்து எம்பியானார்...
அதன் பிறகு தொகுதிப்பக்கம் வந்ததாகவோ, பார்லிமெண்டில் பேசியதாகவோ..அட்லீஸ்ட் ஒரு நிழற்குடை கட்டித்தந்ததாகவோ..சத்தியமாக நினைவில்லை...
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...
நானும் அல்ப்போன்ஸும் ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்தோம்...
அவனுடைய டீச்சர் டிரெயினிங் கால்பார் ஆகியிருந்தது...யாரோ ஒருவரிடம் சிபாரிசுக்காக போகவேண்டும் என்று அவனுடைய தந்தையார் சொல்லியிருந்தார்...
அவனும் பேண்ட் சட்டையிலேயே என்னுடன் அமர்ந்திருந்தான்...
அவனுடைய அப்பா வண்டியில் வந்தார்...
டேய் அல்ப்போன்ஸு...போலாமா ? என்றார்...
என்னுடன் பேசிக்கொண்டிருந்தவன்...சரிடா அப்ப நான் கிளம்பறேன்...
என்னடா ரவி, அரியர்ஸ் பாஸ் ஆகிட்டயா என்று என்னை சங்கடப்படுத்தும் ஒரு கேள்வியை கேட்டு...ஹிஹி என்று என்னுடைய சிரிப்பை பதிலாக பெற்றார் அல்ப்போன்ஸ் அப்பா...
அதற்குள் அவர் பின்னால் வண்டியில் ஏறி உட்கார்ந்துவிட்டிருந்தான் அல்ப்போன்ஸு...
மாமா...யாரை பாக்கப்போறீங்க ? வேலை கிடைச்சிருமா" என்றேன்...
செஞ்சியார்...
என்றார் அல்ப்போன்ஸ் அப்பா...
இஞ்சி தின்ற குரங்கு மூஞ்சியை அருகில் பார்த்தால் பயமில்லையே எனக்கு..அல்ப்போன்ஸ் முகம் அப்படித்தானிருந்தது...
Wednesday, March 18, 2009
நிலவுப்பாட்டு அல்லது அழுகாச்சி பாட்டு

யோவ் நிலவுப்பாட்டு...
தினமும் எதாவது ஒரு பொலம்பல் பதிவு போடலைன்னா தூக்கம் வராதா ? அய்ய்ய்யா...நிறுத்துய்யா...
திரட்டியால தான் வாசகர்கள் வருகிறார்கள் என்பது ஒரு விதத்தில் உண்மைதான்...
ஆனால் திரட்டியில் இணையாத பல பதிவர்களின் ஹிட் திரட்டியில் இணைந்திருக்கும் பதிவர்களை விட அதிகம் இருக்கும் உதாரணம் இருக்கிறது அய்யா...
நல்ல பதிவுகளை தொடர்ந்து தந்துவரும் pkp.in பற்றி தெரியுமா ? போய் பாரும் அய்யா..இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மின்னஞ்சல் மூலம் படிக்கிறார்கள்...
தமிழ்நாட்டில் ஆர்க்குட் பாவிக்கும் இளையோரின் எண்ணிக்கை பத்து லட்சத்துக்கும் மேல் என்று ஒரு சர்வே சொல்கிறது..
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு....
தினமும் காத்தால அழுகாச்சி பதிவு போடுவதை நிறுத்தி தொலையும்...மைக் மற்றும் எல்லாளன் போடும் பதிவுகளை புதினத்தில் சென்று நேரடியாக படிக்கும் அளவுக்கு நிறைய பேருக்கு அறிவு இருக்கிறது...
எதுவும் கோச்சுக்காதீங்க, மனசுல பட்டதை சொன்னேன்...
டிவி சீரியல் அசிங்கங்கள்

பொதுவாக பாலிவுட் திரைப்படங்களில் உறவுச்சிக்கல்கள் ஆபாசமாக அமைந்திருக்கும். அடுத்தவன் மனைவியை லவ் பண்ணுவது (??), ஆனால் அவளோ புருசனை விடுத்து இன்னோருத்தனை லவ்வுவது, அவள் புருசனோ அவளை விட்டுவிட்டு இன்னொருத்தி பின்னால் போவது என, சமுதாயத்தில் மிக குறைவாக இருக்கும் செய்திகளை மிக மலிந்திருப்பது போல் காட்டி பணம் செய்வார்கள் பாலிவுட்டார்...
தென்னிந்திய அல்லது தமிழ் திரைப்படங்களில் இந்த ஆபாச விஷயங்கள் சற்று குறைவு தான் என்று சொல்லலாம். தென்னிந்தியர்கள் பொதுவாக குடும்ப உறவுமுறைக்கு மதிப்பு தருவதுடன், கலாச்சார வேலியில் ஓனான் ஏறிவிடாமல் கல் எறிபவர்கள். அதனால் தான் பாலசந்தர் பாலுமகேந்திராவின் சில முயற்சிகள் கூட தோற்றன..
ஆனால் இப்போது அந்த ஆபாச ரசாபாசங்களை டி.வி சீரியல்கள் அரங்கேற்றிவருவது, குடும்ப உறவுகளை சிதைக்க போதுமானதாக இருக்கிறது. என்னதான் சீரியலின் முடிவில் எல்லாம் சுபமாக காட்டினாலும், கொண்டு செல்லும் விதத்தில் பல அசிங்கங்களை அரங்கேற்றுகிறது டிவி சீரியல்கள்.
அழுகாச்சிகளையே எவ்வளவு நாள் காட்டுவது என்று இந்த ஆபாச அவதாரம் எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது திருக்குமரன்கள். எத்தனை எத்தனை சீரியலடா அதில் எத்தனை எத்தனை ஆபாசமடா என்று நினைக்கையில், மகளிரும் சில சமயம் வலுக்கட்டாயமாக குழந்தைகளும் பார்க்கும் டி.வி சீரியல்களின் கதைக்கும் கருப்பொருளுக்கும் கட்டாய சென்சார் தேவை என்று தோன்றுகிறது...
வசந்தம் என்று ஒரு சீரியல்.
துளசி கல்யாணமான பெண். கணவன் ஆட்டோக்காரன். அதனால் வேலைபார்க்கும் அலுவலகத்தில் தன்னுடைய முதலாளியை காதலிக்கிறாள். முதலாளியோ இவளை எப்போது கொடைக்கானலுக்கு தள்ளிக்கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் திரிகிறான்...
அத்திப்பூக்கள் என்று ஒரு சீரியல்.
மேகலா ஏற்கனவே விஸ்வத்தை காதலிக்கிறாள். ஆனால் மேகலா வேலை பார்க்கும் அலுவலக முதலாளி அவளை காதலிக்கிறான்.
வேறு சில கந்தாயங்கள்
ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள ஒருவன், இன்னோருத்தியை காதலித்து திருட்டு கல்யாணம் செய்ய முயல்கிறான்.
ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்சும் ஆனவனின் ரெண்டாவது பொண்டாட்டியை பர்ஸ்ட் நைட் கொண்டாட விடாமல் தடுக்கிறாள் முதல் மனைவி.
ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஒருவன், ரெண்டாவது பொண்டாட்டியின் குறைகளை கண்டறிந்து அவளுக்கு பாடம் புகட்ட அவள் வீட்டுக்கு சொத்துக்களை உதறி குடியேறுகிறான். அவளுக்கு ஏற்கனவே நான்கு காதலர்கள் மட்டும்.
காதலிப்பவன் ஒருவன், தன்னுடைய காதலியின் தந்தை அவமானப்பட வேண்டும் என்பதற்காக பத்திரிக்கை அடித்து கல்யாண மேடைக்கு மணமகள் போகும் வரை காத்திருந்து, அப்புறமாக தள்ளிக்கொண்டு ஓடுகிறான்.
எங்கே பிராமணன் என்று சாதி பெயரை வைத்து ஒரு சீரியல். அதை தயாரிப்பது மண்டையில் முடி இல்லாத ஒரு தயாரிப்பாளர்.
மகள், மேகலா, அத்திப்பூக்கள், கோலங்கள், வசந்தம், அரசி, செல்வி என ஆபாசம், அசிங்கம் இல்லாத சீரியலை காதில் கூட கேள்விப்பட்டிருக்கமாட்டீர்...
டேய் டேய் டேய் என்று ஒவ்வொரு சீரியலிலும் ஒவ்வொரு ஆபாசங்கள், சமூக தளத்தில் ஒவ்வாத விஷயங்கள்.
பரபரப்பு வேண்டும் என்பதற்காக நியாயம் இல்லாத செயல்கள், அதனை நியாயப்படுத்தும் வசனங்கள்.
இது போன்ற சீரியல்களை வைத்த கண் வாங்காமல், கணவனுக்கு உணவளிக்கக்கூட நேரமில்லாமல், குழந்தைகளை பராமரிக்கக்கூட சரியான நேரத்தை ஒதுக்காமல் பார்க்கும் சமுதாயம், உருப்படுமா ?
தொலைக்காட்சி இன்றைக்கு வீட்டில் நுழைந்து, வரவேற்பறையில் அமர்ந்துவிட்ட ஒரு விஷயம்.
அதில் பொறுப்பான விஷயங்களை காட்டவேண்டும், நல்ல விஷயங்கள் மக்களை சென்று சேரவேண்டும் என்ற பொறுப்பு கொஞ்சமாவது இருக்கவேண்டும்..
<<<<< பி.கு : இந்த சீரியல்களை எல்லாம் நீ ஏன் பார்க்கிறாய் ? என்ற கேள்வியை கேட்காமல் ஓட்டு மட்டும் போட்டுவிட்டு போகவும் அக்காங் >>>>
வாக்களிக்க
Tuesday, March 17, 2009
இளையதளபதி விஜய் மீது காண்டா ? பதிவு போட்டு தீர்த்துக்கொள்ளுங்கள்

விஜய் பிரஸ் மீட்டுல கத்தினார் என்று சஞ்ஜெய் உட்பட பதிவுகளை காண முடிந்தது. ( சஞ்ஜெய் உன்னோட பேரு ஏன் கட்டம் கட்டமா வருது ? அதை ஏன் அடிக்கடி நோண்டிக்கிட்டிருக்க ? )
பிரஸ் மீட் அவன் வைக்கிறான், அதுல எவனோ தொந்தரவு செய்யறான், அதனால் அவன் கத்துறான்...இதுல என்ன பெரிய பிரச்சினை ?
இது அஜித் ரசிகர்களின் வேலை என்று எளிதாக விட்டுவிடமுடியவில்ல.
ஏதோ ஒரு நுண்ணரசியல் இதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது...
தமிழக சாதி சார்ந்த அரசியலை, சினிமா சார்ந்த அரசியலை கூர்மையாக கவனித்துவருபவர்களால் இதை எளிதாக உணரமுடியும்...
இன்னுமா உங்களுக்கு புரியல ?? கூட்டி கழிச்சு பாருங்க உங்களுக்கே புரியும்...
புதுகை அப்துல்லா, தாமிரா மற்றும் தமிழ்மணத்துக்கும் பரிசலுக்கும்

ஒருமுறை ஜேகே ரித்திஷ் பதிவு ஒன்றில் பின்னூட்டம் போட்டிருந்த புதுகை அப்துல்லா, "உங்களுக்கு பின்னூட்டம் போடக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன்...போட வெச்சுட்டீங்களே" அப்படீன்னார்...
ஏன் அப்படி சொன்னார் ??
என்னுடை அல்போன்ஸ் எபிசோட் 2 பதிவில் வந்த ஆதிமூலகிருஷ்ணன், பின்னூட்டம் போட்டுட்டு அதை டெலீட் பண்ணிட்டு போயிருக்கார் ?
ஏன் அப்படி செய்தார் ??
தமிழ்மணத்துக்கு ஒரு வேண்டுகோள்...
சூடான இடுகையில சில பதிவர்களுக்கு தனிப்பட்ட செட்டிங்ஸ் செய்திருக்கீங்களே ? அதை நீக்கிருங்களேன்...லக்கி, கோவியார், டோண்டு, மோகன் கந்தசாமி, அதிஷா என்று இந்த லிஸ்ட் ஏன் நீளுது ?
நான் வேண்டுமானா எல்லார் சார்பாவும் தமிழ்மணத்துக்கு பகிரங்க மன்னிப்பு கடிதம் எழுதவா ?
நன்றி..
பரிசல்...
அவியல் உருவான கதையை நீட்டி முழக்கியிருந்தீங்க...ஆக்சுவலா அதன் ஆன்ஸர் சிங்கிள் வேர்ட். லக்கி.
தொடர் பதிவு, எதிர்பதிவு போன்ற பல விஷயங்களுக்கு ட்ரெண்ட் செட்டர் லக்கிலூக் தான். அந்த பதிவில் அதற்கான பல விஷயங்கள் எழுதப்படவில்லை. உங்களுக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். பிரபல பதிவரானாலே இப்படித்தான் பிரச்சினை வரும்னு நினைக்கிறேன். (உங்களை சொன்னேன்.), நீங்க பத்துரூபாய்க்கு பொரி வாங்கி கொடுத்ததால அதை வாய் புல்லா அப்பிக்கிட்டு நான் கம்முனு இருப்பேன்னு நீங்க நெனைச்சா அது தப்பு. அந்த பொரி எல்லாம் என்னக்கோ செரிச்சு சுண்ணாம்பாயிருச்சு.
பை.
அறிவுகெட்ட அல்ப்போன்ஸின் அனுமார் வேலை - EPISODE 2

வாத்தியாரிடன் கேள்வி கேட்ட அல்ப்போன்ஸு
நம்ம அல்ப்போன்ஸுக்கு பள்ளியில் ஒதுக்கப்படுவது எப்போதும் முதல் பெஞ்சுதான். சார் அறிவாளி என்பதால் அல்ல. பயல் வழக்கத்தை விட குள்ளம்.
எங்கள் பள்ளியில் ஆங்கில மற்றும் கணிதம் எடுத்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜ் என்று ஒருவர், அவரது ஆங்கில பீரியட் மிகவும் பிரபலம்..
மெக்கனாஸ் கோல்ட், ட்ரஷர் ஹண்ட் போன்றதொரு ஆங்கில புத்தகத்தை படித்து அதை தமிழாக்கி சுவையாக கதைசொல்வார்.
அவரது ஆங்கிலப்பாட வகுப்பு தேன். அவரே எங்களுக்கு கணித பாடத்தையும் எடுத்துவந்தார். பொதுவாக வகுப்பில் எந்த தண்டனையும் வழங்காதவர், அதனால் அனைவருக்கு பிடித்தமானவர்.
பாடத்தில் எந்த சந்தேகம் வந்தாலும் கேட்டால் அமைதியாக சொல்பவர்..பொறுமையாக விளக்கி புரியவைப்பார்...
அன்றைக்கு அப்படித்தான்...
ஏதோ ஒரு கணக்கை அப்படி இப்படி போர்டில் இழுத்துக்கொண்டிருந்தார். ஏனோ கணக்கு விடை பிடிபடவில்லை...புத்தகத்தில் எளிமையாக விடை கொடுத்திருந்தாலும், அவர் ஆரம்பத்தில் ஏதோ தவறிழைத்துவிட்டதால் இறுதி விடை வராமல் போக்கு காட்டிக்கொண்டிருந்தது.
மொத்தத்தில் சார் கொஞ்சம் டென்ஷனில் இருந்தார்...
நாங்கள் சாரின் மூட் தெரிந்ததால் அமைதியாக அமர்ந்திருந்தோம்...
பை X 7 = 22 என்று ஒரு ஸ்டெப் எழுதினார்.
பை என்பது 22/7 என்று அதற்கு முந்தைய ஸ்டெப்பில் எழுதி விட்டிருந்தார்.
அதனால் 7 க்கு 7 ஐ அடித்துவிட்டு 22 என்று எழுதினார்.
திடீரென அமைதியை குலைத்துக்கொண்டு ஒரு குரல்...
குரலுக்கு சொந்தக்காரன் அல்ப்போன்ஸு...
சார்...அந்த 22 எப்படி வந்துச்சு ?????
சார் அமைதியாக அவனை அழைத்தார்...
இங்க வா சொல்றேன்...
இவனும் வெளந்தியாக கிட்டே நெருங்க...
டமால் டுமீல் என்று முதுகில் அடி போட்டார்...
நொக்கு நொக்கு என்று நொக்கிவிட்டு கேட்டார்...
இப்ப தெரிஞ்சுதா அந்த 22 எப்படி வந்ததுன்னு ?
தெரிஞ்சுது சார்...இது அல்போன்ஸு...
அப்ப போய் இடத்துல உக்கார்...
சந்தமில்லாமல் பய வந்து உட்கார்ந்தான்...
பீரியட் முடிஞ்சதும் வெள்ளந்தியாக என்னிடம் வந்து கேட்டான்...
டேய் சார் என்னை எதுக்குடா அடிச்சார் ? சாருக்கு அந்த இருவத்திரெண்டு எப்படி வந்துதுன்னு தெரியாதா என்ன ?
- மற்ற எபிசோடுகளை காண தவறாதீர்கள்
செஞ்சியாருடன் அல்ப்போன்ஸு
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே, பின்னால வந்த பாதிரியாரே
சாவியை தொலைச்ச அல்ப்போன்ஸு
பாவ மன்னிப்பு கேட்ட அல்ப்போன்ஸு
எலக்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங் குரூப்பில் அல்போன்ஸு
விக்கிபீடியாவில் வந்த அல்போன்ஸு
அல்ப்போன்ஸு பொங்கலில் புழு
காலையில் சப்பாத்தி சாப்பிட்ட அல்ப்போன்ஸு
சவுத் ஆப்ரிக்கன் மிஷனில் அல்ப்போன்ஸு
Friday, March 06, 2009
கல்லூரி- சங்கமம் போட்டிக்காக
வாழ்க்கை என்னும் இயந்திரத்தில் பின்னோக்கி நகர வழி ஒன்று இருந்தால் அனைவரும் திரும்பப் போக விரும்பும் காலகட்டம் கல்லூரிக்காலம். வாழ்க்கைக்குத் தேவையான ஏட்டுக் கல்வியை மட்டுமில்லாமல், அனுபவக் கல்வியையும் பயிற்றுவிக்கும் இடம் கல்லூரி. அடுத்து வாழப்போகும் வாழ்க்கைக்கு தேவையானப் பாடங்களை நமக்கு சொல்லித் தருமிடம்தான் கல்லூரி.
கல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண்பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.
கல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.
நட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.
இப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
சமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கான இடுகையானது 2-மார்ச்-2009 தேதிக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
வாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
போட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.
சிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
பரிசு: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந்தியன்).
நடுவர்கள்: நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
படைப்பினை அனுப்ப கடைசி நாள்: மார்ச்-20-2009. (இந்திய நேரப்படி11:59 PM)
வாக்கெடுப்பு: 22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை
முடிவுகள்: ஏப்ரல்-2-2009
கல்லூரி என்றதும் பெரும்பாலோனோர்க்கு நினைவுக்கு வருவது நண்பர்களும், காதலும்.. காதலித்தவரை கைப்பிடித்தவர்களுக்கு அதை நிறைவேற்ற உதவிய நண்பர்கள் மேல் கோபம் வரலாம். நண்பர்கள் செய்த தியாகம், துரோகம், அதனால் இன்று இருக்கும் நிலைமை, அவர்கள் மூலம் நாம் கற்ற வாழ்க்கை பாடம் எல்லாம் கண் முன்னே தோன்றலாம்.
கல்லூரியில் நிகழ்ந்த விழாக்கள், கொண்டாட்டங்கள், விடுதி விளையாட்டுக்கள், கும்மாளங்கள், சுவர் ஏறிக் குதித்து கண்டத் திரைப்படங்கள், மூத்தோர் - இளையோர் சண்டை இவையெல்லாம் நினைக்கையில் அதன் இன்பமே தனி. இதைத் தாண்டாமல் வந்தவர்கள் நம்மில் சொற்பமே. நம்மில் பெரும்பாலானோர் கல்லூரித் தினங்களை கடந்தே வந்திருப்போம், ஆனாலும் இன்னும் பலர், கல்லூரியில் படிக்க இயலாமல் போன சோகத்தை ஏதாவது கல்லூரி ஒன்றைக்கடக்கையில் அவர்கள் விடும் பெருமூச்சில் அருகில இருந்து உணர்ந்திருப்போம்.
நட்பு, காதல் என்று வாழ்க்கையையே தொலைத்த பலரையும் நாம் கல்லூரியில் பார்த்திருப்போம். நட்புக்காகவும், காதலுக்காகவும் புகை, மது என அடிமையாவதும் இந்தக் காலத்தில்தான். எதிலும் கலக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி பிறகு வருந்துபவர்களும் உண்டு, மகிழ்பவர்களும் உண்டு. ஒவ்வொருவருடைய கல்லூரி அனுபவங்களை படிக்கும் போது நாமும் அவர்களுடன் கால இயந்திரத்தில் பயணித்து நமது கல்லூரிக்கேச் செல்கின்றோம். கல்லூரியின் அரசியல் குணங்களும் நாமறிந்த ஒன்றுதான்.
இப்படிப் பல நிறங்களையும், கலாச்சாரங்களையும், நிகழ்வுகளையும் கொண்ட 'கல்லூரி'யே இந்தப் போட்டிக்கான தலைப்பு. இந்தத் தலைப்பினை அடித்தளமாக அமையும் கதை, கவிதை, சொந்த அனுபங்கள், கட்டுரைகள், படங்கள், குறும்படங்கள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
சமர்பிக்கப்படும் இடுகையானது உங்கள் படைப்பாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்பலாம்.
போட்டிக்கான இடுகையானது 2-மார்ச்-2009 தேதிக்கு பின்னர் எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
வாக்கெடுப்பின் மூலமும், நடுவர்கள் மூலமும் முடிவுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
போட்டிக்கான இடுகைகள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே வாக்கெடுப்பிற்கு வைக்கப்படும்.
சிறந்த முதல் 3 படைப்புகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
பரிசு: முதல் பரிசு பெறும் படைப்புக்கு Oviam Hosting நிறுவனத்தார் வழங்கும் ஒரு வருடத்துக்கான தனி இணையச் சேவை (Domain Name & Web hosting for a Year) அல்லது ரூ. 1,250/- மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படும். (கிழக்குப் பதிப்பகம் அல்லது எனி இந்தியன்).
நடுவர்கள்: நாம் நன்கறிந்த இரு பதிவர்களே நடுவர்களாக பணியாற்ற சம்மதித்திருக்கிறார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பெயர்கள் வாக்கெடுப்புக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
படைப்பினை அனுப்ப கடைசி நாள்: மார்ச்-20-2009. (இந்திய நேரப்படி11:59 PM)
வாக்கெடுப்பு: 22-மார்ச்-2009 இருந்து 27-மார்ச்-2009 வரை
முடிவுகள்: ஏப்ரல்-2-2009
Wednesday, March 04, 2009
தலைவா - உனக்காக டீயும் குடிப்பான் இந்த செந்தழல் ரவி

தமிழகத்து ஒபாமாவே !!!!
தென்னகத்து அர்னால்டே !!!!
வருங்காக ஆஸ்கர் நாயகனே !!!!
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியே !!!!
நிகழ்கால பாரியே ஓரியே காரியே !!!!
தமிழ் இனம் காக்கும் தங்க சட்டை போட்ட வேங்கையே !!!!
நீ வாழ்க நின் புகழ் ஓங்க !!!!
இவன்
அகிலாண்ட நாயகன் ஜே கே ரித்திஷ் மன்ற அடிப்படை தொண்டன்,
செந்தழல் ரவி, அய்ரோப்பிய கண்டம்.
உலகம்.
Subscribe to:
Posts (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...