பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.
பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.
பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் "மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது" என்று தவறாகக் கூறுகிறார்கள்.
பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.
பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.
பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.
மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.
பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.
நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்
#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
48 comments:
யாரைப் பாம்பென்கிறீர்கள் ரவி?
ஒரு எண்ணை, ஒன்பதால் வகுத்தால் ஒன்றும், எட்டால் வகுத்தால் ஒன்றும், ஏழால் வகுத்தால் ஒன்றும், ஆறால் வகுத்தால் ஒன்றும், ஐந்தால் வகுத்தால் ஒன்றும், நான்கால் வகுத்தால் ஒன்றும், மூன்றால் வகுத்தால் ஒன்றும், இரண்டால் வகுத்தால் ஒன்றும் தரும்.
அந்த எண் 2521
இங்கேயும் கும்மியை தொடரலாமா?
அமுகவினர் இந்த பதிவையும் ஆக்கிரமித்து கொள்கிறோம்
அப்போ பாம்பை கடவுள்னு சொல்லி ஊரை ஏமாத்துறானுங்களே? அவனுங்களை என்ன செய்யலாம்? பாம்பை உட்டு கொத்த உடலாமா?
paammpu kadavulaa ? dont make fun
நான் போலி செந்தழல் ரவி
நான் உள்ள வரலாமா ?
நான் மட்டும் என்ன? ஐ எஸ் ஐ முத்திரை குத்தப்பட்ட செந்தழல் ரவியா? நானும் போலிதாண்டா வெண்ணை
Excuse me, may also come in?
வீடியோவுக்கு இங்கே போய் பார்க்கவும்
///
ஷேக் ஹசீனா said...
நான் உள்ள வரலாமா ?
///
உன்னைய பங்களாதேஷ் உள்ளாரயே உடல. நீ என்னா இந்த பதிவு பக்கம் வர ?
நம்ம பொழைப்புலே மண்ணை போட்டுடுவானுங்களோ?
ஒரு சேஞ்சுக்கு வெளக்கெண்ணைன்னு ஒருதரமாவது சொல்லக்கூடாதா ரவி?
போங்கடா நீங்களும் உங்க பதிவுகளும்
வெட்டுவேண்டா!
தம்பி சாப்டீங்களா ? எனக்கு கொஞ்சம் சரக்கு இருக்கா ?
குத்துவேண்டா
வேணாம் அழுதுறுவேன்
ஆமாம் மகுடிக்கு மயங்காத பாம்பு என்பது தவறா?....
அமுக பாசறை பெங்களூர்.
சட்டித்தலையா ?
அண்ணா. காப்பி சாப்பிட்டேளாண்ணா
சல்மாக்கண்ணூ அழுவாத, ஜெயரா....வருவான்...எல்லாம் கிடைக்கும்.
அண்ணா. டிபன் சாப்பிட்டேளாண்ணா.
அடே கருப்பட்டி வாயா
சாப்பிட்டேண்டா அம்பி. நல்ல பில்டர் காபி. திவ்யமா இருந்தது.
டிபனும் சாப்பிட்டேண்டா. அம்சமா இருந்தது. இட்லி வடைகறி.
இங்கே எத்தனை அமுக மெம்பர்கள் ஆபரேஷனில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?
நானும் அமுக தான். அதிமுக இல்லே.
என்ன வோய், வாய்ல வெத்தலைச்சார் ஒழூகறது தெரியாம படிக்கறீர்...
அடலேறே!
திமுக என்னும் பெயரை அழகுத்தமிழில் அமுக என்று மாற்றிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேனடா.
ஹாஹாஹா....
லக்கியே, என்னையா லுக்கு விடரீர்....
அமுக இனிமேல் யாராலேயும் அசைக்க முடியாத சக்தி!
அதென்ன்ய்யா அடலேறு?, கொடலேற்றம் மட்டும்தான் கேள்விப்பட்டிருக்கேன்?
என் பேருலயா போலி பின்னூட்டங்களா?
அமுக சக்தின்னா, சிவன் யாருங்கண்ணா?
//என் பேருலயா போலி பின்னூட்டங்களா? //
இதை சொன்னவன் தான் போலி. நான் தான் ஒரிஜினல் செந்தழல் ரவி. தயவுசெய்து நம்புங்கைய்யா. லக்கி ஒனக்கு என்னை அடையாளம் தெரியும் இல்லே. ப்ளீஸ் சொல்லேன்.
இன்னும் நாலு கமெண்டு பாக்கி. அதை முடிச்சிட்டு வேற பதிவுக்கு போலாம் வாங்கய்யா. சுகுணா திவாகர் இன்னைக்கு நம்பளுக்கு செம வேட்டை வெச்சிருக்கார். கும்மிடுவோமா?
இன்னும் 3 கமெண்டு
கொஞ்ச நேரம் நிக்கட்டும் உடுங்க. நேராவே போயிடலாம்.
இன்னும் ரெண்டு கமெண்டு
இல்லை, இல்லை நாந்தான் உண்மையான செந்தழல்ரவி
ஆட்டம் குளோஸ்
இந்தா பிடிச்சுக்க கடைசி....
போலாமே சுகுணாகிட்ட
இந்தா பிடிச்சுக்க கடைசி....
போலாமே சுகுணாகிட்ட
ஆமா, சுகுணாவோட எந்த பதிவில் தொடங்கலாம் ? இன்னைக்கு நிறைய்ய வந்திருக்கு
சுகுணா கிட்ட ஒரு தொல்லை. உடனுக்குடன் பின்னூட்டங்களை ரிலீஸ் பண்ண மாட்டாரு. இருந்தாலும் கும்மி அடிச்சிட்டு வந்துடலாம்.
ஆமா லக்கி நானும் அதெதான் நினைத்தேன்....எதுக்கும் இருக்கட்டும்ன்னு 2-3 கமெண்ட் குடுத்திருக்கேன் பார்க்கலாம்
//பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன//
விலங்குகள் போல்,குட்டி போடும் பாம்புகளும் உண்டு.சிலவகை மலைப்பாம்பு;அனக்கொண்டா..
//பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.//
தவறு, முட்டைகளில் இருந்து ஓரளவு நீரைப் பெற்றபோதும்; பாம்புகளில் பல வகையானவை சொற்ப அளவு நீர் பருகுகின்றன. பிளவு பட்ட நாக்கால் எந்தப் பாதிப்புமின்றிப் பருகுகின்றன.
பாம்புகளுக்கு மூக்கு வாய்க்கு மேல்தான் உள்ளது. அதனால் தேவையான அளவு அதனால் நீரில் மூழ்காமல் வாயைத் தண்ணீரில் அமிழ்த்தி அருந்த முடியும்.
இந்த என் பதிவில் பாம்பு நீரருந்தும் காட்சி போட்டுள்ளேன்.
http://johan-paris.blogspot.com/2007/10/blog-post_12.html
அத்துடன் பாம்பு மிகத் திறமையாக நீந்தும்.
இயற்கையாகப் பாம்புக்குப் பால் குடிக்கக் வாய்ப்பேயில்லை.ஆனால்
பழக்கிய பாம்புகள் பாலையும் அருந்தும்; அது தாகத்தினால் ஏற்பட்ட பழக்கம்.
பாலென்றல்ல ;தாகமாக இருக்கும் போது எதையும் அது குடிக்க வாய்ப்புள்ளது.
பாம்பு முட்டை சாப்பிடுவதைப் பார்க்க இந்த யுருயூப் பைப் பார்க்கவும்.எந்தப் பாம்பும் முட்டையை உடைத்துக் குடிப்பதில்லை.
http://fr.youtube.com/watch?v=uVG5D10yiSA
Post a Comment