Tuesday, April 03, 2007

கிருமி லேயரும், சோத்துக்கி சிங்கி அடிக்கும் அய்யரும்

எங்க ஊருல எனக்கு ஒரு அய்யர் பையன் பிரண்டு. அவன் பேமிலி பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது 100 சதவீதம் உண்மை...கஷ்ட ஜீவனம்...பையனை +2 படிக்கவைக்கவே கஷ்டப்பட்டார் அவங்க அப்பா...நாங்க தான் உதவி செஞ்சோம் அதுக்கு...என்ன கொடுமைன்னா என் பிரண்டோட தம்பிக்கு பி.இ சீட் கிடைக்கல..காரணம் அவன் அதிக மார்க் வாங்கி இருந்தாலும் அவன் OC கேட்டகிரியில் வர்ரது தான்...

எங்க ஊரு தாசில்தார் மகனும் எங்களோடவே சுத்துறவன்..அவனுக்கும் ஒரு தம்பி...சுமாரா படிப்பான்...ஆனா அவனுக்கு அரசு கோட்டாவிலேயே சீட் கிடைச்சிருச்சி..காரணம் அவன் தாழ்ந்த சாதியை சேர்ந்தவன் என்பது தான்....அவங்க அப்பாவிடம் இரண்டு காரு இருக்கு...அதுக்கும் மேல நாலு காரு வாடைகைக்கு ஓடுது..ஊருக்குள்ள நாலு வீடு...ஒரு கல்யாண மண்டபம் கூட போன வருஷம் கட்டினார்...அலுவலகத்தில முன்புறம் பின்புறம் டேபிளுக்கு மேலே டேபுளுக்கு அடியிலே என்று நன்றாக வாங்கி பிழைக்கிறார்...ஆக பொருளாத்தில் நல்ல உயர்ந்த நிலை...என்ன வேற வார்த்தையில் கிருமி லேயர்னு சொல்லலாம்...

இப்போ சொல்லுங்க...இட ஒதுக்கீட்டுக்கான கணக்கெடுப்பு மீண்டும் நடக்கனும், பொருளாதாரத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கனும் என்பது எந்த விதத்தில் தப்பு ? மாவட்ட செயலாளர் வன்னியர் என்பதால் அவர் மகனுக்கு பி.இ சீட்டு ஓஜியில கிடைக்கும்...ஆனா கோயில்ல மணியாட்டுறவர் என்ன கோடீஸ்வரனாவா இருக்க போறார் ? ஒரு சனிக்கிழமையோ, ஞாயித்துக்கிழமையோ பந்து நடத்தினா சரியா போச்சா ? மத்திய அரசை மிரட்டி மந்திரி பதவி வாங்குன மாதிரி இதையும் (விரைவான பொருளாதார ரீதியான கணக்கெடுப்பு) செஞ்சு முடிக்கலாமே முதலமைச்சர் ? குழலி / ஓசை செல்லாவுக்கான பதில் இது...அதே சமயம் திராவிட தமிழர்களின் கருத்து என்ன ? ( ஹிஹி மாட்னீங்களா !!!!)

தாழ்ந்த சாதி எல்லாருமே வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்கன்னா அவங்க எல்லாருக்கும் பெனிபிட் கிடைக்கப்போகுது...ஏன் நாம டெங்ஷன் ஆகனும் ? இதனால் பாதிக்கப்படப்போறது யாரு ? லஞ்சத்தில் வயிறு வளர்த்துள்ள கிருமி லேயர் தானே ? அவனுங்களை இந்த சமயத்தில் ஐடெண்டிபை செய்யாமே வேற எப்போ செய்ய முடியும் ? பொருளாதாரத்தில் உயர்ந்துள்ள மக்களை பில்டர் செய்து, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களை ( அவங்க எந்த சாதியா இருந்தாலும்) - தூக்கி விடுவது தானே முறையான அரசு ? அதற்குத்தானே இந்த தீர்ப்பு ? ஏன் இதனை நாம் எதிர்க்கிறோம் ? யாராவது என் சிற்றறிவுக்கு எட்டும்படி விளக்குவார்களா ?

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

44 comments:

Anonymous said...

ரவி,

நீ சொல்றது ரொம்ப சரி. நானும் கூட சாதிரீதியான இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறேன். பொருளாதார ரீதியா இட ஒதுக்கீடு வந்தா நல்லா இருக்கும்.

ஆனா ஒன்னு சொல்லிக்க விரும்புறேன். இப்போ சாதி ரீதியா இட ஒதுக்கீட்டை வெறுப்பவன் எல்லாம் யாரு? சோத்துக்கு சிங்கி அடிக்கும் அய்யனா? இல்லவே இல்லை.

எல்லா பயலும் மணியாட்டி, திருடி, சம்பாதிச்ச காசுல படிச்சு முன்னுக்கு வந்து இன்னைக்கு அமெரிக்காவுல உக்காந்து மாதம் 4 லட்சம் 5 லட்சம்னு சம்பாதிக்கிற பாப்பாத்தி மகனுங்க.

கரு.மூர்த்தி said...

அடடா , நிஜமாவே இது ரவியின் பதிவா ? பதில் வாராது ஓசி செல்லா , திரு , குழலியிடமிருந்து , ஏன்னா கேள்வியில நியாயமிருக்கே ?

Voice on Wings said...

இட ஒதுக்கீடுங்கறது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது.

பல சமீகங்களுக்கு அதிகாரம் பெறக்கூடிய வாய்ப்பைத் தரும் தொழில்சார் உயர் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருப்பதால், அத்தகைய ஏற்றத் தாழ்வுகளைச் சீர் செய்யும் முயற்சிதான் இட ஒதுக்கீடு. பல்வேறு பிரிவினருக்கிடையே கல்விச் சமன்பாட்டை அடைய முயற்சிப்பதே அதன் குறிக்கோள். (ஒருத்தருக்கு நிலபுலன்கள் இருந்தாலும் எவ்வளவு நாளைக்கித்தான் அவர் விவசாயம் செஞ்சிக்கிட்டே இருக்க முடியும், இல்லிங்களா?)

பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை வேறு திட்டங்கள் கொண்டுதான் (உதவித்தொகை, கடன் வசதி, இத்யாதி) உயர்த்தி விட வேண்டும். அதற்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை.

குழலி / Kuzhali said...

ரவி, கடுமையான நேரக்குறைவு என்பதால் இடஒதுக்கீடு தொடர்பான பதிவுகள் தொடர்ந்து எழுத முடியவில்லை, க்ரீமிலேயர் பற்றியதொரு மிகத்தவறான பிம்பம் உருவாக்கப்பட்டிருப்பதால் சில பின்னூட்டங்களில் இதை புரியவைக்கவும் இயலாது....

http://reservationfaqs.blogspot.com
இதில் க்ரீமிலேயர்பற்றி செல்லா எழுதியிருக்கின்றார், க்ரீமிலேயரின் வரையறை என்ன? அது தான் இப்போதும் பிரச்சினை.... க்ரீமிலேயரை பொருளாதார அடிப்படையில் வைக்கக்கூடாது என்பதுவே என்னுடைய மிக முக்கியமான கோரிக்கை.

எப்போதுமே நாம் விதிவிலக்குகளை உதாரணம் காண்பித்து அதையே விதிகளாக காண்பிக்கிறோம் அந்த இரண்டு உதாரணங்கள் அப்படிப்பட்டது, முதலில் இடஒதுக்கீடு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டது அல்ல, சமூக முன்னேற்றத்திற்காக வலியுறுத்தப்படுவது இது, நூறு பன்றி வைத்துக்கொண்டு மாதம் நிறைய சம்பாதிப்பவர்கள் க்ரீமிலேயரில் வந்துவிடுவார்கள் அவர்கள் தலைமுறையிலேயே யாரும் படிக்கவில்லையென்றாலும், நீங்கள் சொன்ன தாசில்தார் மட்டுமல்ல, 40-50 வயசில் அரசாங்க வேலை பார்க்கும் 'டி' குரூப் கிளார்க்கும் கூட இந்த க்ரீமிலேயரில் வந்துவிடுவார்கள் இப்போதைய அளவீட்டின்படி....

முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது. மேலும் பணம், வருமானம் சொத்து இவைகள் நிலையானதில்லை, எந்த நேரத்தில் பணம் சொத்துகளை இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடிக்கலாம், அப்போது க்ரீமிலேயராக இருந்தவன் இப்போது பாவர்ட்டி லைனுக்கு கீழ் வரலாம்.

கல்விக்கு எத்தனையோ கடன் திட்டங்கள் உள்ளன.

ஞானி க்ரீமிலேயர் பற்றி எழுதியதை இங்கே தருகிறேன்.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.


அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.

படிப்பறிவே இல்லாத ஒரு குடும்ப சூழலிருந்து சட்டென்று ஐஐடிக்கு ஒரே ஹைஜம்ப் அடித்து செல்வது இயலாதது, கீழுள்ளதை சற்று படித்து பாருங்கள்


இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.

இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.

எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.

என்னுடைய அடுத்த தொகுப்பில் க்ரீமிலேயர் பற்றிய கட்டுரைகளும் இடம்பெறும்

Voice on Wings said...

இடுகையில் ஓரிரு இடங்களில் 'தாழ்ந்த சாதி' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருக்கீங்க. சாதிகளில் உயர்ந்த / தாழ்ந்த சாதிகள் கிடையாது என்ற தற்கால சிந்தனைப்படி, அதனை 'தாழ்த்தப்பட்ட' சாதின்னு மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

குழலி ஐயாவின் பின்னூட்டம் நிறைவளிக்காத ஒரு திசை திருப்பும் முயற்சி. இந்த வாதங்கள் ஏற்கக்கூடியவை அல்ல. மேலும், இந்த வாதங்கள் நேர்மையற்றவை.

மேற்படிப்பில் இட ஒதுக்கீடு என்பது படித்து எல்லா சமுதாயமும் பட்டம் பெறவேண்டும் என்பதற்காக இல்லை. படிப்பு என்பது சமுதாயத்தில் எல்லா சமுதாயத்தினரின் சீரான பொருளாதார மற்றும் சமுதாய அங்கீகாரத்துக்கு ஒரு வடிகால். சமுதாய ஏற்பு என்பது பொருளாதாரத்தாலும் எளிதாக அடையத்தக்கது.

இட ஒதுக்கீடு என்பது சமுதாயத்தின் அரிதான பல பொருட்களை (resources) எல்லா அங்கத்தினர்களுக்கும் நியாயமாக பங்கீட்டு அளிக்கும் ஒரு தற்காலிக மாற்று.

எந்த வகுப்பினரும் ஐ.ஐ.டி முதலிய கல்விச்சாலைகளில் பயிலுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்வதில்லை. இன்று ஐ.ஐ.டி முதலானவை மிகுந்த முனைப்போடு அண்டப்படுகிறது என்றால் அதற்கு அவை ஒரு பொருளாதார மேம்பாட்டு காரணிகளாக இருப்பதே காரணம். அதனால், எல்லா சமுதாயத்தினரும் எல்லா படிப்பும் படிக்க வேண்டும் என்பது, மன்னிக்கவேண்டும், அபத்தமான வாதம்.

அப்படிப்பார்த்தால், மேல் சாதி பார்ப்பனர்கள் வியாபார வர்க்கத்தில் மிகவும் குறைவு. அதில் அவர்கள் முனைவதில்லை. முனைந்தாலும் சமூக கட்டுக்கோப்புள்ள இதர சாதி-இந்துக்கள் பிழைக்க விடுவதில்லை (என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது). இது சரியாக இருக்குமானால், வியாபாரங்களில் பார்ப்பனருக்கு இட ஒதுக்கீடு அல்லா குழலியின் வாதத்தின்படி செய்யப்பட வேண்டும். ஏனென்றால், அவர்தான் எல்லா சமுதாய அங்கங்களும் எல்லாவற்றிலும் பங்கேற்ற விரும்புகின்றாரே.

இட ஒதுக்கீடு என்பது ஒரு தற்காலிக மருந்து. இதில் பல பக்கவிளைவுகள் உண்டு. அந்த மருந்து இன்று அதிகமாகி இந்தியாவின் இறையாண்மை புரையோடிக்கொண்டிருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன. ஐம்பது வருடங்களாகியும் இதற்கு அரசியல்வாதிகளால் யாதொரு நிவாரணமும் பேசப்படவில்லை.. இந்த ஒரு இழிநிலையை தெரிந்துகொண்டே குழலி முதலிய மெத்த படித்தவர்கள் தங்கள் குறுகிய சுயலாபத்திற்காக இவ்வாறு எழுதுவதும் வாதம் செய்வதும் வருந்தத்தக்கது..

Anonymous said...

///பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களை வேறு திட்டங்கள் கொண்டுதான் (உதவித்தொகை, கடன் வசதி, இத்யாதி) உயர்த்தி விட வேண்டும். அதற்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை. ///

இது கூட அருமையான பாயிண்ட் மாதிரி தான் தெரியுது..இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்துமா வாய்ஸ் ஆப் விங்ஸ் அவர்களே ?

தாழ்ந்த சாதி என்பதை பயன்படுத்தியதற்கு எந்த குறிப்பிட்ட காரணமும் கிடையாது, நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்...ஆனால் எனக்கு Blogger ஆக்ஸஸ் கிடையாது...அதனால் நான் நினைத்தாலும் மாற்ற முடியாத கட்டாயத்தில் இருக்கிறேன்...மன்னிக்கவும்..

Anonymous said...

ரவி,

தங்கள் உண்மையான முகம் வெளிவந்ததாகவே கொள்கிறேன்.

குழலி இப்படித்தான் எப்போதும் திசை திருப்புகிறார், இந்த மேட்டரை.

கட்சிகளும் பிராமண எதிர்ப்பும் தான் இவர் போன்றவர்களை இவ்வாறு எழுத, பேச வைக்கிறதே தவிர, உண்மையான சமுக சிந்தனை என்பது எள்ளின் முனையளவும் கிடையாது.

இன்றைய தினமலர் டீக்கடை பகுதியினை பாருங்கள்...போலீஸ் DY.கமிஷனர் லெவலில் இருப்பவர் (மாணிக்கவேல்/மாணிக்கவாசகம்) தன்னை கூலித்தொழிலாளி என்று கூறி தனது மகளுக்கு மெடிக்கல் சீட் வாங்கியுள்ளார். இது போல கீரிமி லேயரில் உள்ளவர்கள் பண்ணமாட்டார்கள் என்பதென்ன நிச்சயம். எல்லா சாதிகளிலும் உள்ள கீரிமி லேயரை எடுப்பதில் இவர்களூக்கென்ன குறை?, ஏனென்றால் இவர்கள் இப்போது போல சாதி சான்றிதழ் மட்டும் வைத்து சீட் வாங்க முடியாதென்பது தானே?

dondu(#11168674346665545885) said...

அவ்வளவு பெரிய கௌரவர் சபையில் நியாயமாக பேசியது கௌரவர்களில் ஒருவனான விகர்ணன் மட்டுமே.

அவன் பேசி முடித்ததும் துரோணர், பீஷ்மர் போன்றவர்களே தர்மம் பிழைத்தது என களிப்படைந்தனர்

அது போல இருக்கிறது உங்கள் பதிவு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////

இது என்னவோ உண்மைதான் அனானியாரே...

Anonymous said...

அனானியாரே...அது என்னமோ இவ்ளோ நாள் நான் பொய் முகம் காட்டினமாதிரி சொல்றீங்களே...

பின்னூட்டத்துக்கு நன்றி டோண்டு.வாய்ஸ் ஆப் விங்ஸ்...பெரிய்ய்ய்ய்ய்ய பின்னூட்டத்துக்கு (ரெண்டு பதிவு போடலாம் போலிருக்கு) நன்றி குழலி..

எல்லா சாதிகளிலும் கிருமி லேயர் எவ்வளவு % இருக்கும் ? ஒரு 3 முதல் 5 %. அவ்வளவு தானே ? சாதாரன டி பிரிவு க்ளார்க் லெவலில் இல்லாமல் IAS / IPS / தாசில்தார் / 100 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்கள் போன்றவர்களை மட்டும் எடுத்தால் அவர்கள் 1 - 2 % மட்டுமே வருவார்கள்...அவர்களை மட்டும் முதலில் நீக்கலாமே ? காரணம் அவர்களின் பிள்ளைகளை மட்டும் எடுத்துக்கொண்டால் 4000 - 5000 தகுதியான மாணவர்கள் / மாணவிகள் வருவார்கள்...அவர்கள் எங்கேயாவது அமவுண்டு கட்டி ( Pay & Learn Colleges) படிக்கட்டும்...மீதிப்பேர் தகுதியுள்ளவர்களாக ஆகட்டும்...

இது என்னோட கருத்து மட்டும் தான்...

தொலைபேசியில் அழைத்த அனானி சொல்லியது மிக நீண்ட விஷயம்...சுற்றி வளைத்து பார்த்தால் - அது என்னவென்றால்...குழலி சொல்லிய அதே "படிக்கும் சூழல் இல்லாமை"...

///படிப்பறிவே இல்லாத ஒரு குடும்ப சூழலிருந்து சட்டென்று ஐஐடிக்கு ஒரே ஹைஜம்ப் அடித்து செல்வது இயலாதது, கீழுள்ளதை சற்று படித்து பாருங்கள்///

//முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது///

இதைதான் அந்த அனானியும் வலியுறுத்தினார்...

மேலும் சிலரது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

Anonymous said...

தலைவரே!
இதுவரை நீங்கள் எழுதியதில் உருப்படியான - அருமையான பதிவு இதுதான்!

நியாய - அநியாயங்களை உணர்ந்து
நெற்றியடியாகக் கேள்வி கேட்டு எழுதியிருக்கிறீர்கள்!

எங்கே உங்கள் கால்களைக் காட்டுங்கள் தொட்டுக் கும்பிட வேண்டும்!

அருண்மொழி said...

பந்த் நடத்தப்பட்டது உயர்கல்வி நிறுவனங்களில் 27% சதவீத இடஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதித்ததற்காக. நீங்கள் இங்கே குறிப்பிட்டது பி.ஈ சீட்டு கிடைப்பது பற்றி. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

சோத்திக்கி சிங்கி அடிக்கும் அய்யரு பையனுக்கு பி.ஈ சீட்டு கிடைக்கவில்லை என்பதற்கு யார் காரணம். கருணாநிதியா, ராமதாஸா, மண்டலா, திராவிட அரசியல்வாதிகளா?

மேலே குறிப்பிட்ட யாரும் காரணம் இல்லை. எல்லாம் ஈசன் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவரவர்க்கு விதிக்கப்பட்டதுதான் நடக்கும். எனவே இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அவருக்கு சேவை செய்ய வேண்டியதுதான்.

bala said...

//இட ஒதுக்கீடுங்கறது ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது. //

குழலி அய்யா,
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க.இது வறுமை ஒழிப்பு திட்டம் கிடையாது.உங்களைப்போன்ற 5000 ஆண்டு காலம் ஒடுக்கப்பட்ட ஆதிக்க சக்திகள் கொள்ளை அடிக்க அரசே வழி செய்த சட்டம்.

பாலா

Anonymous said...

பலர் மனதில் இருக்கும் கேள்விகளை எழுப்பியதற்காக மிகப் பெரிய நன்றி.

அப்படியே, குழலியின் பின்னூட்டத்தை, (இன்னும் முழுதாக படிக்கவில்லை, நீங்கள் எடுத்துக் காட்டி இருக்கும் பகுதியை வைத்துச் சொல்கிறேன்), தனிப் பதிவாகவே இடலாமே ரவி?!

பங்காளி... said...

இப்ப நான் இங்க ஒரு கருத்த சொல்றேன்னு வைங்க அதை நிச்சயமா எல்லாரும் ஒத்துக்கப்போறதுல்ல....அதுனால கருத்து சொல்ல போறதுல்ல.....ஆனா பொதுவா ஒன்னு சொல்லீட்டு போறேன்...

"ஒரு பானை சோத்துக்கு வேனுன்னா ஒரு சோறு பதமாக இருக்கலாம்.....ஆனால் இட ஒதுக்கீட்டை பொறுத்தவரை ஒரு சோறை வைத்துக்கொண்டு ஒரு பானை வெந்துவிட்டதாக சொல்லுவது அறியாமை அல்லது சொசெசூ வைத்துக்கொள்வதை போன்றதே"

Hariharan # 03985177737685368452 said...

//இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.//

இந்த தனியார் கல்லூரிகள் எல்லாம் சமூகநீதிக்காவல் கொள்கை பகுத்தறிவு திரா"விட"க் கட்சி அரசியல்வாதிகளால் தானே ஐயா நேரடியாகவும், சிறுபான்மை நிறுவனங்கள் என்று மைனாரிட்டி சமூகத்தினரோடு சிண்டிகேட் அமைத்து நடத்தப்படுகிறது!

கொள்ளையடிப்பு நடத்துவது அரசியல்வாதிகள். ஆதரவு தருவது கொள்ளையடிப்பைக் கொள்கையாகக் கொண்ட தலைமையிலான அரசுகள்!

கல்விக் கொள்ளை அடிப்பை கொள்கையாக்க்கி ஆட்சி நடத்தும் கழகங்களைன் அராஜக அரசை எதிர்த்துக் கருத்துப் போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது!

இடஒதுக்கீடு மோசடி அரசியல் குறித்து கருத்துப்போராட்டம் நடத்தினால் பொய்ப்பிரச்சாரம் நடக்கிறது என்கிறீர்கள்!

மோசடி இடஒதுக்கீட்டு அரசியல் குறித்து எனது கருத்து

இந்தப்பதிவில்

மோசடி அரசியல் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டால் :

எல்லாம் ஈசன் செயல். அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவரவர்க்கு விதிக்கப்பட்டதுதான் நடக்கும். எனவே இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு அவருக்கு சேவை செய்ய வேண்டியதுதான்.

எனும் அருண்மொழியின் கருத்தை ஏற்கிறேன். திக்கற்றவருக்கு ஈசனே துணை!

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசு, அரசியல்வாதிகள் எனும் மனித முயற்சியால் சீர்படுத்தப்படாவிட்டால் இறைசக்தி கண்டிப்பாக இந்தச் சமூக சீர்கேட்டை சீர்படுத்தும்!

What goes up MUST come down!
Its all just a matter of time!

Hari said...

/*மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்*/

Kuzhali, Thanks for informing me that Gnani is the sole authority to talk with people of other caste regarding reservation.

I dunno y these people r trying to fool others by making such statements. To be practical, government won;t take any such steps & even majority of other caste people won;t agree with this.

Reservation was bought in for a good cause. No doubt on that. But even with time somethings has to be changed with the system. It is a pity fact that, hereafter, people of any caste won;t agree to deny this offer of reservation. The only way to mitigate the damages is to give some sort of reservation for OC's who are economically backward.

No other option remains.

Anonymous said...

________________________________________
From: Prem Kumar
Sent: Tuesday, April 03, 2007 4:38 PM
To: Ravindran A
Subject: RE: http://tvpravi.blogspot.com/2007/04/blog-post_03.html

Ravi,

The words written here are true, but we must analyse why everyone is behind reservations ?

a) The reservation roll is to target the OBC and the lower caste votes in the forthcoming elections.
b) Here, even the opposition party can’t oppose as the lower caste will turn hostile against them.
c) If the government really wants to do some favour, it must be start from the Primary school education and not in colleges.
d) In Bihar, it is easy to get the OBC certificate if you spend as less as Rs.1500 . So do you think really the lower caste people are benefited?

I too strongly agree with you that the reservation must be based on their financial background. But do you think that there won’t be any corruption in that also. Surely, there will be some problem in that also. They will give some bribe and get certificate that there are in BPL[ Below poverty Line].

As Arjun [ Mudhalavan ] tell “ Each and Everybody” is not good in this country.

In developing nation list India is @ 124 position, even Namibia is top of us  .

Where all the money goes? Eventhough we say that India is going in the developing path, the corruption in each and every department is the biggest obstacle. The corruption doesn’t leave the cricket also… 


Moral of the Story :
We can’t do anything with this type of politics ..
There are 2 things in the world (a) Onething which we can control (b) Which we can’t control.
We can do the 2nd thing, we can help others as you did for the poor student studies… 
Long live India !!!

Best Regards’
Premkumar

Anonymous said...

பிரேம்

நீ சொல்வது சரி, நான் வாங்கிய ஓ.பி.ஸி சர்டிபிக்கேட்டின் விலை 5000 ரூபாய்...நல்லவேளை அதை நான் உபயோகப்படுத்தவில்லை...

லிவிங் ஸ்மைல் said...

/// தொலைபேசியில் அழைத்த அனானி சொல்லியது மிக நீண்ட விஷயம்...சுற்றி வளைத்து பார்த்தால் - அது என்னவென்றால்...குழலி சொல்லிய அதே "படிக்கும் சூழல் இல்லாமை"...

///படிப்பறிவே இல்லாத ஒரு குடும்ப சூழலிருந்து சட்டென்று ஐஐடிக்கு ஒரே ஹைஜம்ப் அடித்து செல்வது இயலாதது, கீழுள்ளதை சற்று படித்து பாருங்கள்///

//முற்படுத்தப்பட்ட சாதி மாணவர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எங்கே தெரியுமா இடைவெளி? அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, கண்கூடாக நீயே கூட பார்த்திருக்கலாம், கொஞ்சம் பணம் உள்ள தொழில் செய்யும் குடும்பங்களிலே படிக்கறதை விட்டுட்டு கடையில் உக்கார் என்று சொல்வதை, இதற்கு காரணம் படிப்பை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சி இல்லாமை, அல்ட்டிமேட்டாக இதற்கு பின்னுள்ள காரணத்தை நோண்டினால் அது நிறுத்துமிடம் சாதியாகவே இருக்கின்றது///

இதைதான் அந்த அனானியும் வலியுறுத்தினார்... ///

நீங்கள் என் பெயரையே சொல்லியிருக்கலாம். அதோடு நான் சொன்ன வேறு சில விசயங்களையும் (பரம்பரை பணக்காரனா இருந்து ஏழையானவன், பொருளாதாரத்தால் மேலும் வளர்ந்து சாதியத்தை தூக்குவது )சேர்த்திருக்கலாம்...

இரா.செந்தில் said...

அன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை,
1) சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால் இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை
2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு அதற்கு ஆதரவு தருகிறேன்
3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா? >>
தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது, பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை இன்று

இன்று உயர்தட்டு பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற சில கல்விக்கூடங்கள் மற்ற தரப்பினருக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் இந்த இட ஒதுக்கீட்டின் நோக்கமேயன்றி வசதியானவர்களுக்கா ஏழைகளுக்கா என்பது அல்ல

4) //
///இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயத்தில் சாதிக்கூறுகள் இன்னும் வலிமை பெற்று விட்டன..////

இது என்னவோ உண்மைதான் அனானியாரே...//

சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல

நேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல

Anonymous said...

அன்பு ரவி, உங்களிடமிருந்து இதை எதிபார்க்கவில்லை, (உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்த கருத்துக்களை கொண்டிராமைக்கு வருந்துகிறேன் செந்தில்....என்ன செய்ய நான் நினைத்ததை சொல்லிவிட்டேன்...)

///சாதி வழி இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு அல்ல, சாதியின் பெயரால் இத்தனை ஆண்டுகள் கல்வி மறுக்கப் பட்டு வந்த குமுதாயத்திற்கு நாம் திருப்பி செய்ய வேண்டிய கடமை///

சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது செந்தில்....அமவுண்டு இருக்கிறவனை நீங்கள் எந்த சாதியை சொல்லியும் தடுக்க முடியாது...கவர்மண்ட் காலேஜில் சீட்டு கொடுக்கலன்னா வசதியாக தனியார் கல்லூரியில் சென்று சேருவான்...அதைத்தான் நான் சொல்கிறேன் Empower them by $$$$..கையில காசு இருந்தாக்கா எந்த கல்வியையும் விலைக்கு வாங்கலாம் தமிழ்நாட்டில்...உண்மை கசக்கும்தான்...But இதுதான் உண்மை...

2) >>ஏழை பார்பனர்களுக்கு கல்வி>> இன்று படித்துவிட்டு அமெரிக்கவில் உட்கார்ந்து கொன்டு வெட்டி நியாயம் பேசும் பார்பனர்கள் ஏழை பார்பனர்களுக்கு பொருளாதார இட ஒதுக்கீடு கேட்கட்டும், நானும் அதற்கு அதற்கு ஆதரவு தருகிறேன்

ஏழைக்கு அமெரிக்காவில் இருக்கும் பாப்ஸ் ஆதரவு தந்தால்தான் நீங்கள் தருவீர்களா செந்தில்...பசியோடு இருக்கும் ஏழை எந்த சாதியாக இருந்தாலும் ஏழைதானே ? ஒத்துக்கொள்கிறீர்களா ?

3) >> பொருளாதாரத்தில் முன்னேறிய தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடா? >>
தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப் பட்ட மக்கள் இன்றோ அல்லது அன்றோ பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் விரும்பிய கல்வி அவர்களுக்கு கிடைக்காது,

// என்ன செந்தில் சொல்றீங்க...இருபது லட்சத்தில் பெங்களூர் மெடிக்கல் காலேஜில் படிக்கும் எங்கள் ஊர் தலித் இனத்தை சேர்ந்தவரின் மகனுக்கு கல்வி கிடைக்கவில்லையா என்ன ? கிடைத்திருக்கிறதே...தொலைபேசி எண் தரட்டுமா ? //.

// பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை ///

முந்தைய பதில்தான் இதுக்கும்...
//////
சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை எதைக்கொண்டு போராட சொல்லுகிறீர்கள், நம்முடைய ஆயு்தத்தை எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் நண்பரே நாம் அல்ல

நேற்று சாதியால் ஒடுக்கப் பட்ட மக்கள் நாளை வேற்று சாதியை ஒடுக்க நினைத்தால் அதைத்தான் நாம் எதிர்க்க வேண்டுமே ஒழிய அவர்களுடைய கேடையத்தை அல்ல //////

அருமையானதொரு பாயிண்ட்...ஆனால் இந்த பதிவு கிருமிகளை பற்றியது...ஒடுக்கப்பட்ட கீரிப்பட்டியான்களை பற்றியதல்ல...

bala said...

தமிழ் நாட்டில் 80% பேர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவோ,பிற்படித்தப்பட்டவர்களாகவோ,ஒடுக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறதா சொல்றாங்க.பேசாம 100% பிறப்டுத்தப்பட்டவர்கள் தான் அறிவிச்சுட்டா பிரச்சனை தீர்ந்து விடும்.ஒட்டு மொத்தமா இந்த தமிழ் கும்பலே பாக்வேர்ட் கும்பல் தான்னு பெருமையா சொல்லிக்கொண்டு திரியலாம்.

Anonymous said...

////ஒட்டு மொத்தமா இந்த தமிழ் கும்பலே பாக்வேர்ட் கும்பல் தான்னு பெருமையா சொல்லிக்கொண்டு திரியலாம். ///

அட பாக்டீரியாவே ? தமிழில் பின்னூட்டம் போட்டு, தமிழனை திட்டுகிறாயே...உன்னை எண்ணை கொப்பரையில் போட இட ஒதுக்கீடு தருகிறேன் நரகத்தில்...நீ என்ன கும்பலை சேர்ந்தவன் ?

Anonymous said...

I quote Kuzali from senthazil Ravi ‘s blog.

அவர்களுக்கு கிடைக்கும் சூழல், அப்பா, அம்மா, அக்கா, அத்திம்பேர் என அத்தனை படித்தவர்களின் வழிநடத்துதல் இருக்கும், ஆனால் எத்தனை பணமிருந்தாலும் இவைகள் மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை

கிட்ட திட்ட same thing I wanted to say,

Despite the money, they can not set an example because of obvious reasons. Now let us take the same argument, that is they have money, ..what about they have money and no characters, and what about neither they have money nor they have characters, all this things will ultimately show in marks, merit and later on life. Only few exceptions can be there, where a pokkari (from any caste) could score good marks, but because of the character, he/ she would still end up as a failure. Just do a simple survey of Jails in tamil nadu and arrive your own conclusions about crime, conviction, and characters.

So we all come back to basic, which is parents and the people around the kid set an example to emulate. Those who spend lots of time with the kid in up bringing the child, ultimately see the fruits. Reservation can bring votes but not material change

Sundar

சென்ஷி said...

இதைப்பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு ஒரு பதிவா போட்டுடறேன்.

சென்ஷி

Anonymous said...

வருகைக்கு நன்றி சென்ஷி, எழுதுங்க எழுதுங்க...!!!!

Anonymous said...

ravi,

நீயும் உருப்புடியான பதிவெல்லாம் போட ஆரம்பிச்சுட்டா "இம்சை" க்கு நான் எங்கே போவது ? ? ?

Anonymous said...

//இதைப்பத்தி எனக்கு தெரிஞ்ச வரைக்கும் எழுதிக்கிட்டு இருக்கேன். நாளைக்கு ஒரு பதிவா போட்டுடறேன்.//

ஐய்யோ , கடவுளே , சென்ஷிக்கு கொஞ்சமாவது தெரிய குடு .

இரா.செந்தில் said...

நான் எதிர் பார்ப்பதை மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும் என்று கூற எனக்கு உரிமை கிடையாது ரவி, இப்படிப்பட்ட கருத்து உஙளிடமிருந்து வராது என்றுதான் எதிர்பார்த்தேன்

//சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது செந்தில்....அமவுண்டு இருக்கிறவனை நீங்கள் எந்த சாதியை சொல்லியும் தடுக்க முடியாது...கவர்மண்ட் காலேஜில் சீட்டு கொடுக்கலன்னா வசதியாக தனியார் கல்லூரியில் சென்று சேருவான்...அதைத்தான் நான் சொல்கிறேன் ஏம்பொநெர் தெம் ப்ய் $$$$..கையில காசு இருந்தாக்கா எந்த கல்வியையும் விலைக்கு வாங்கலாம் தமிழ்நாட்டில்...உண்மை கசக்கும்தான்...But இதுதான் உண்மை...
//
எனக்கு மகாபாரதத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் வாதத்திற்கு சொல்லுகிறேன், கர்ணனுக்கு கல்வி மறுக்கப் பட்டது எதனால்?, 19ம் நூற்றாண்டில் நீங்கள் மருத்துவர் ஆக வேண்டும் என்றால் சங்கதம் தெரிந்திருக்க வேண்டும் என்று எங்கோ படித்த ஞாபகம்,நாடார் இன மக்களின் மாராப்புப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினக்கிறேன், இன்று எல்லாப் பெண்களும் மாராப்பு அணியா முடிவதால் கடந்த காலத்தில் அவ்வாறு இல்லை என்று பொருள் இல்லை

ரவி இன்றைய காலகட்டதில் வேண்டுமானால் பணம் இருந்தால் எல்லாம் கிடைக்கும், ஆனால் பணம் இருந்தாலும் இட ஒதுக்கீடு வரும் வரை எங்களூரில் எந்த தலித்தும் தலைவரானது கிடையாது, இன்றைய காலகட்டத்திலேயே கீரிப்பட்டிகள் இருக்கதன் செய்கின்றன. இங்கு பணம்தான் பிரச்சினையென்றால் கல்வியை இலவசமாக மாற்றிவிடலாமே, அல்லது எல்லாத் தகுதியும் படைத்த மாணவர்களுக்கு அரசே கடன் வழங்கலாமே.

//ஏழைக்கு அமெரிக்காவில் இருக்கும் பாப்ஸ் ஆதரவு தந்தால்தான் நீங்கள் தருவீர்களா செந்தில்...பசியோடு இருக்கும் ஏழை எந்த சாதியாக இருந்தாலும் ஏழைதானே ? ஒத்துக்கொள்கிறீர்களா ?
ஒத்துக்கொள்கிறேன், என்னைப் பொறுத்தவரை ஏழை எந்த சாதியாய் இருந்தாலும் ஏழைதான், என்னுடைய அளவு கோல் 9ம் எண் நூல் கன்டை வைத்து மாறாது ரவி,
எழைக்கு கல்வி என்பது பணத்தால் மட்டுமே சாதிக்க முடியும் ஆனால் சாதியால் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு பணமும் பிரச்சினை, சாதியும் பிரச்சினை

// என்ன செந்தில் சொல்றீங்க...இருபது லட்சத்தில் பெங்களூர் மெடிக்கல் காலேஜில் படிக்கும் எங்கள் ஊர் தலித் இனத்தை சேர்ந்தவரின் மகனுக்கு கல்வி கிடைக்கவில்லையா என்ன ? கிடைத்திருக்கிறதே...தொலைபேசி எண் தரட்டுமா ? //.
// பணம் இருப்பவர்களுக்கு எல்லா படிப்பும் கிடைத்துவிடும் என்றால் குசராத் மார்வடிகள்தான் IIM, IIT ல் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறா இருக்கிறது நிலமை ///

உஙளுக்கு 10 லட்சம் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு IIMல் ஒரே ஒரு இடம் வாங்கித்தாருங்கள் ரவி

Anonymous said...

http://realitycheck.wordpress.com/
http://ravisrinivas.blogspot.com

Anonymous said...

உஙளுக்கு 10 லட்சம் கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு IIMல் ஒரே ஒரு இடம் வாங்கித்தாருங்கள் ரவி
There is quota for SC/ST in IIMs.
நாடார் இன மக்களின் மாராப்புப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினக்கிறேன், இன்று எல்லாப் பெண்களும் மாராப்பு அணியா முடிவதால் கடந்த காலத்தில் அவ்வாறு இல்லை என்று பொருள் இல்லை
What is your argument.Where are
Nadars today - educationally,
socially and economically.
Are they really backward now.
Do you want reservation for children of Saravana Stores Selvarathanms,SaravanaBhavan
Rajagopals,SharathKumars,
Agsar Paint Co owners.Yes
there are poor Nadars but the
rich gain the most.

enRenRum-anbudan.BALA said...

ரவி,
சமூக அக்கறை உள்ள நீங்கள் இம்மாதிரி கருத்துகளை முன் வைப்பது நல்ல விஷயம், ஆச்சரியம் எதுவும் இல்லை!

My post at http://balaji_ammu.blogspot.com/2007/03/5.html

இணையத்தில் நாம் இடஒதுக்கீடு குறித்து தீவிரமாக விவாதிக்கும் நேரத்தில், மிக நலிந்த வகுப்பிலிருந்து, இடஒதுக்கீட்டின் பலனால் (அதை விட உழைப்பால்!) முன்னேறிய சரத்பாபு என்ற ஆதர்ச இளைஞர் கூறுவதை எடுத்துக் காட்டுவது முக்கியமானதாகப் படுகிறது.
*****************
Reservation should be a mix of all criteria. If you take a caste that comes under reservation, 80 per cent of the people will be poor and 20 per cent rich, the creamy layer. For the general category, it will be the other way around.

I feel equal weightage should be given for the economic background. A study has to be done on what is the purpose of reservation and what it has done to the needy. It should be more effective and efficient. In my case, I would not have demanded for reservation. I accepted it because the society felt I belonged to the deprived class and needed a helping hand.

Today, the opportunities are grabbed by a few. They should be ashamed of their ability if they avail reservation even after becoming an IAS officer or something like that. They are putting a burden on the society and denying a chance to the really needy.

I feel reservation is enough for one generation. For example, if the child's father is educated, he will be able to guide the child properly.

Take my case, I didn't have any system that would make me aware of the IITs and the IIMs. But I will be able to guide my children properly because I am well educated. I got the benefits of reservation but I will never avail of it for my children. I cannot even think of demanding reservation for the next generation.
****************
சரத் கூறுவதும் க்ரீமி லேயர் வரையறுப்பும் தொடர்புடையவையே!

அதே சமயத்தில், க்ரீமி லேயர் நீக்கப்படுவதை எதிர்ப்பவர்கள் முன் வைக்கும், (உயர்சாதிகளும் போட்டியிடும்) ஓப்பன் காம்படிஷனிலும் ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அதாவது, OC-க்கு என்று இருக்கும் 31% ஒரு 8 அல்லது 10%-ஐ பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கி, க்ரீமி லேயர் பிரச்சினையை (அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கி) முடிவுக்குக் கொண்டு வரலாம்.

ஆனால், சரத்பாபு கூறுவது போல, ஒரு தலைமுறைக்குப் பின், இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்தவர் க்ரீமி லேயரா (அதாவது, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா?) என்ற செக் (check) நிச்சயம் மிக அவசியமாகிறது. இதை எப்படி implement செய்வது என்பது குறித்து சிந்தித்தல் அடுத்த கட்டம்.

எ.அ.பாலா
*****************************

Anonymous said...

///ஊரான் காசை வாங்கி, வசூலித்து தன்னுடைய காசுபோல் பெருமையாக ஜம்பம் அடித்து ஒரு பெண்ணுக்கு கொடுத்ததால் அன்புடன் பாலா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? சிந்திக்குமா அந்த பாப்பார மிருகம்? ///

நான் இந்த வார்த்தைகளை வன்மையாக கண்டிக்கிறேன்...!!! இது உள்நோக்கம் கொண்ட கழிசடை கமெண்டு...நல்ல விஷயங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்...ஜாதி மதம் பாராமல் செய்யப்படும் இந்த நல்ல விஷயத்தையும் கொச்சைப்படுத்த ஆரம்பித்தால் மனிதம் எங்கே போகிறது என்ற கேள்வி எழுகிறது...!!!

நானும் ஊரான் காசை வைத்து மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்விப்பணி செய்தேன் என்று சொல்லிவிடுங்கள், உங்கள் அரிப்பு அடங்கிப்போகும்...

Anonymous said...

மேற்படி பீன்னூட்டம் போட்டவர் எவராயினும், நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்...

உங்களுக்கு அவர்களது கருத்து பிடிக்கவில்லை என்றால் கருத்து தளத்தில் நெஞ்சுரத்தோடு எழுதுங்களேள் ( அசுரன் / ராஜ்வனஜ் மாதிரி)...

முதுகில் குத்தி புண்ணை கிளறுவது அநாகரீகம் நன்பரே.

Bharath said...

நச்'னு ஒரு போஸ்ட் தலை..
சில நாட்களுக்கு முன் நான் இட்ட போஸ்ட்..

http://analyzt.blogspot.com/2006/05/reservation-yesbut-for-whom.html

லக்கிலுக் said...

ரவி!

சரியாக விவகாரத்தைப் புரிந்துகொள்ளாமல் அவசர அவசரமாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்பதையாவது நீங்கள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.

Anonymous said...

//ரவி!

சரியாக விவகாரத்தைப் புரிந்துகொள்ளாமல் அவசர அவசரமாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல என்பதையாவது நீங்கள் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.//

கரெக்டு , அது ஓட்டு பொருக்கி திட்டம் , அதை வறுமை ஒழிப்பு திட்டம்னு நீங்க தவறா புரிஞ்சிகிடீங்க

குழலி / Kuzhali said...

ரவி நீ ஒரு தாசில்தார் பையனையும் ஒரு புரோகிதர் பையனையும் பார்த்துவிட்டு பேசியிருக்கிறாய், கீழே இருக்கும் புள்ளிவிபரத்தை பார், தாசில்தார் பையன்கள் பிசியில் எத்தனைபேர் புரோகிதர் பிள்ளைகள் எஃப்சியில் எத்தனை பேர் என்று தெரியும்

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?

Anonymous said...

It is heartening to see thoughts like this, and in your other post at http://tvpravi.blogspot.com/
2007/04/blog-post_677.html, in tamil.

There are arguments that are made without any frame of reference, that target a particular caste, use data for the wrong inferences etc. It would be pointless to respond to those. Such arguments are made in street corner meetings and repeated in our 'august' assemblies.

For arguments made in the court and ruled upon, those interested could read up the supreme court judgments on judis.nic.in.

After all the ruckus about the stay for BCs in central institutions, came the news about who were the ones really getting affected by that - check out this newslink -
http://timesofindia.indiatimes.com/NEWS/India/IIFT_hopefuls_get_caught_in_quota_net/articleshow/1867886.cms

An employee of a MNC software firm might stand to lose his seat in IIFT if the OBC reservation is not provided this year. Is a MNC software firm employee who is in a position to continue his studies 'backward' in anybody's definition?

மதன் சிந்தாமணி said...

இடஒதுக்கீடு சமூகநீதிக்காகவே மட்டும் கொண்டுவரப்பட்டது.வர்க்கவேறுபாடுகளை நீக்க அல்ல, அதற்கு வெறு வகையான திட்டங்கள் தேவை.க்ரிமி லேயர்-ஐ பற்றி உயர் சாதியினர் ஏன் கவலைபடவேண்டும்.அந்தந்த வகுப்பினரெ அதை முடிவு செய்யட்டும்.இடஒதுக்கீட்டின் மூலம் மட்டும் இந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.

மதன் சிந்தாமணி said...

இடஒதுக்கீடு சமூகநீதிக்காகவே மட்டும் கொண்டுவரப்பட்டது.வர்க்கவேறுபாடுகளை நீக்க அல்ல, அதற்கு வெறு வகையான திட்டங்கள் தேவை.க்ரிமி லேயர்-ஐ பற்றி உயர் சாதியினர் ஏன் கவலைபடவேண்டும்.அந்தந்த வகுப்பினரெ அதை முடிவு செய்யட்டும்.இடஒதுக்கீட்டின் மூலம் மட்டும் இந்த மாபெரும் மக்கள் கூட்டத்தின் வறுமையை ஒழிக்க முடியாது.

புருனோ Bruno said...

உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை எனது இடுகைகளில் உள்ளது

"குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்" -- பத்ரி சாரின் பதிவுக்கு ஒரு கருத்து

"இடஒதுக்கீடு"

"இடப்பங்கீடு"

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....