Tuesday, October 27, 2009

அவசர கல்வி உதவி கோரல்

இலங்கையில் நடைபெற்ற கோரமான உள்நாட்டு யுத்தம் காரணமாக மிக கடுமையாக பாதிக்கப்பட்டு தம் உறவுகளையும் , உடமைகளையும் இழந்து வாழ்வதற்கு எதுவுமற்ற நிலையில் இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி நிலையங்களில் இருந்துவந்த வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டடங்களை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது .

எனினும் தற்போதைய நிலையில் மேற்படி மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான எந்த ஒரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ளனர் . மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் நீண்ட காலமாக நலன்புரி நிலையங்களிலேயே தொடர்ந்தும் இருந்து வருவதினால் இம்மாணவர்கள் தமது அன்றாட வாழ்வுக்கே ஏனையோரிடம் கையேந்தி வாழ்கின்றனர் . மாணவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கான ஊக்கம் இருந்தும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் மன அழுத்ததிற்கு உள்ளான நிலையில் உள்ளனர் .

மேலும் மேற்படி மாவட்டங்களில் இருந்து தென்பகுதிகளில் உள்ள பல்கலை கழகங்களுக்கு
தெரிவான மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது . இந்த மாணவர்கள் தமது கல்வியை தொடர மாதாந்தம் குறைந்த பட்சம் 10,000 ரூபா செலவாகிறது . எனினும் அவர்களின் பெற்றோர்கள் நலன்புரி நிலையங்களில் இருக்கும் நிலையில் , வேறு எவரும் உதவி செய்யாத நிலையில் எமது மாணவர்களுக்கு பல்கலைகழக பட்டப் படிப்பினை தொடர முடியாத நிலையில் உள்ளனர் .

எனவேதான் இந்த மாணவர்கள் தம்மிடமுள்ள ஒரே உடமையான கல்வியை தொடர்ந்து கட்டி எழுப்பவும் சிதைந்துபோன எமது சமுகத்தை புதுவாழ்வு பெறச்செய்யவும் தமக்கான அவசர நிதி உதவியினை தம் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிடம் இருந்து மிகவும் வேதனையுடன் கோரி நிற்கின்றனர் .

இவ் மாணவர்களுக்கான நிதி உதவியானது அவர்களின் பல்கலைகழக கல்வியினை பூர்த்தி செய்யும் காலம் வரை வழங்கப்படுதல் வேண்டும் .

இந்த நிலையில் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பானது முதல் கட்டமாக 217 பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு தலா 3000 ரூபா வீதம் அவசர நிதி உதவியினை கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

மேலும் கிழக்குப் பல்கலைகழகம் , பேராதனை , மொரட்டுவ , ஜெயவர்த்தனபுர , கொழும்பு
பல்கலைகழகங்களில் தமது பட்டப் படிப்பை ஆரம்பித்திருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் தலா 5000 ரூபா வீதம் 76 மாணவர்களுக்கு கடந்த வாரம் வழங்கி உள்ளனர் .

ஆனந்தராசா இளங்கோவின் இருதய சத்திர சிகிச்சைக்கான முழு உதவிகளையும் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பே மேற்கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது பல்கலைகழக கல்வியினை தொடர முடியாமல் தவிக்கும் 900 க்கும் மேற்பட்ட மாணவர்களின் விபரங்களை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் சேகரித்து உள்ளனர் .

இவர்களுக்கான படிப்புச் செலவுக்கான நிதி உதவியினை சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பினர் வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றனர் .

ஒவ்வொரு குடும்பங்களும் ஒரு மாணவனை பொறுப்பேற்பதன் மூலமாகவும் ஒவ்வொரு பொது அமைப்புக்கள் , கம்பனிகள் , கடைகள் போன்றன சில மாணவர்களை பொறுப்பேற்பதன் மூலமும் இந்த மாணவர்களின் தொடர்ச்சியான
பல்கலைகழக கல்விக்கு வழி வகுக்கலாம்.

பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிசெய்யும் வழிமுறைகள் .

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 5000 - 6000 ரூபா . அண்ணளவாக 50 டாலர்ஸ் / 30 பவுண்ட்ஸ் / 35 யுரோ உதவித்தொகை.

ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பலாம் அல்லது 3 மாதம் , 6 மாதம் , ஒரு வருடத்திற்கான பணத்தினை சேர்த்து அனுப்பலாம் .

உதவி செய்ய விரும்புபவர்கள் குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் உதவி செய்ய வேண்டும் .

வங்கி விபரம்

Name : ITSO ( International Tamil Students Organization )
Bank : HSBC
Branch : Stanmore
Branch Sort Code : 40 - 43 - 46
Account Number : 31434225

SWIFT Code : MIDLGB22

IBAN : GBO3MIDL40434631434225


கணக்கறிக்கை

ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வெளியிடப்படும்.


பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்தின் மூலமாக எம்மை தொடர்பு கொள்ளலாம் .

சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு
பிரித்தானியா
தொடர்பு எண் : +447551449606
மின்னஞ்சல் முகவரி : itsonet@hotmail.co.uk

http://www.facebook.com/itsoonline

2 comments:

Indian said...

How to send money from India?

ரவி said...

அவர்களிடம் கேட்டு ஒரு இந்திய அக்கவுண்டு எண்ணை பெற்று வெளியிடுகிறேன்.

அதில் உள்ள மின்னஞ்சலுக்கு நீங்களே கேட்கலாம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....